Tuesday, September 24, 2013

ஜெயலலிதாவிற்கு சொற்களால் சாட்டையடி கொடுத்த விஜய்!


ஒரு நடிகை நாடாள்கிறார் - சீற்றத்தில் ஜெயா தரப்பினர்!! 

உலக மொழிகளுள் சிலேடைகளாலும், வார்த்தை ஜாலங்களாலும் ஒருவரை எவ்வளவு தூரம் துர்வார முடியுமோ அவ்வளவு தூரம் துர்வாரவும், அதே போல போற்றிப் புகழ்வதற்கும் உதவுகின்ற ஒரே மொழி நம் தமிழ் மொழி! 

தமிழின் வார்த்தை ஜாலங்களை நாம் பல்வேறு இலக்கியங்கள் ஊடாக அறிந்திருப்போம்! அம்மா என்ன செய்தார்? தலைவா பட பிரச்சினையை மனதில் வைத்து நடிகர் விஜய் அவர்களை தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழாவிற்கு அழையா விருந்தாளி போல இறுதி இருக்கையில் அமர வைத்து அவமானப்படுத்தி, தன் விரோதம் தனைத் தீர்த்து அழகு பார்த்தார். 

நம்ம விஜய் அதே விழாவில் என்ன பண்ணினார் என்பது நம் அனைவருக்கும் நினைவிருக்கும். ஆம் பதிலுக்குப் பதிலாக சொற்களால் சாட்டையடி கொடுத்திருக்கிறார் ஜெயலலிதாவுக்கு! ஆம் “ஒரு நடிகை நாடாள்கிறார்”. ஏற்கனவே பலமுறை கலைஞர் கருணாநிதி அவர்களால் ஜெயலலிதா அதிமுகவிற்குப் பொருத்தமானவர் அல்ல. அவர் நடிக்க மட்டுமே பொருத்தமானவர் எனும் தொனியில் கிண்டலடிக்கப்பட்டவர் அம்மா. 

அதுமட்டுமன்றி போயஸ் காடன் விவகாரம், கெடா நாடு விவகாரம் எனப் பல சோதனைகள் ஜெயாவைச் சூழ்ந்த வேளையில் கூட பத்திரிகைக்காரர்களால் “ஒரு நடிகை நாடாண்டால் இப்படித் தான் நிகழும் என” வர்ணிக்கப்பட்டவர் ஜெயலலிதா. 

நடிகர் விஜய் பேசியிருப்பது கூட, “ஒரு நடிகை நாடாள்கிறார்” . இதனை நாம் நையாண்டிச் சொல்லாகப் பார்த்தால் - அரசியலில் கூட நன்றாக நடிக்கிறார் நடிகை ஜெயலலிதா. அதே போல, சினிமாவில் இருந்து வந்த ஜெயா அவர்கள் ஒரு நாட்டினை ஆள்கிறார் எனவும் பொருள் கொள்ளலாம். 

ஹி...ஹி.. பார்த்தீர்களா? சிலேடை செய்திருக்கும் வேலையை. இப்படிக் கூட தமிழகத்தில் விஜய்க்கும் ஜெயாவிற்கும் இடையில் தீயைப் பற்ற வைக்க முடியும் என்பதற்கு பத்திரிகைக்காரங்களை விட்டால் வேறு யார்? 


இது போன்று பல சுவாரஸ்யமான செய்திகள், சினிமா செய்திகள் அனைத்தும் அறியனுமா? இங்கே கிளிக் செய்யுங்கள்


0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails