Tuesday, January 17, 2012

பதிவுலகில் ஒரு வருடம் & தமிழ்மண நட்சத்திர வாரம்!

இணைய வலையேறி கணித் திரை வழி புகுந்து உங்கள் இதயங்களை நாடி வரும் நாற்று வலைப் பதிவிற்கு வருகை தந்திருக்கும் அனைத்துச் சொந்தங்களுக்கும் அன்பான வணக்கங்கள்;
சுய புலம்பல்:
நேற்றுப் போல இருக்கிறது. கடந்த வருடம் தை மாதம் 19ம் திகதி (19.01.2011) அன்று ப்ளாக் எழுத வந்து இப்போது ஒரு வருடமும் ஆகி விட்டது. என்னமோ தெரியவில்லை. சின்ன வயதிலிருந்து இலக்கியம், வானொலி, நாடகங்கள் மீது தீராத காதல். ஹை இஸ்கூல் வந்த பின்னர் தமிழுக்கும் எனக்குமான நெருக்கம் கல்லூரிப் பாடத்தின் அடிப்படையில் குறைந்தாலும், தமிழோடு நானும் தவழ வேண்டும் எனும் ஆர்வம் மட்டும் என்னை விட்டுப் போகவேயில்லை.
என் மன உணர்வுகள், எங்கள் தேசத்தின் அவலங்கள், அழு குரல்கள், என்னோடு படித்த கல்லூரி தோழர்களின் நினைவலைகள் இவை யாவற்றையும் கையெழுத்து வடிவில் அப்பியாச கொப்பிகளில் (நோட்டு புக்) எழுதி பத்திரப்படுத்திக் கொள்வேன். சின்ன வயசில் எட்டாம் வகுப்பு படிக்கும் போது வண்ணத்தமிழ் எனும் பெயர் கொண்ட சஞ்சியிகையினை நண்பர்கள் சிலர் இணைந்து கையெழுத்து சஞ்சிகையாக வெளியிட்டு சந்தைப்படுத்தும் செயற்பாடுகளையும் மேற்கொண்டோம்.அப்போது அந்தச் சஞ்சிகைக்கு ஆக்கங்களை எழுதுவதற்கு ஒப்புவித்த நண்பர்களின் பங்களிப்பானது குறைந்து கொண்டு செல்ல நானும் ஐந்து நண்பர்களும் இணைந்து ஆக்கங்களை எழுதி அந்தச் சஞ்சிகையினை வெளியிட்டுக் கொண்டிருந்தோம். இந்தக் கையெழுத்துப் பிரதியில் பல பெயர்களில் நானே என் ஆக்கங்களை எழுதி வெளியிட்டும் இருந்தேன். இந்த மாதிரியான சின்னச் சின்ன செயற்பாடுகள் என்னுள் எழுத வேண்டும் எனும் உணர்வினை ஏற்படுத்தியது எனலாம்.

பிறந்த இடம் ஈழவளநாட்டின் வடபுலத்தின் வன்னியெனச் சிறப்பிக்கப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நட்டாங்கண்டல் எனும் அழகிய கிராமம். சந்தர்ப்ப சூழ் நிலைகளால் யாழ் நோக்கி தந்தையாரின் தொழில் நிமித்தம் குடி புகுந்தோம். கல்லூரி, பல்கலைக்கழகம் என எல்லா இடமும் ஓடி ஓடி இடப் பெயர்வுகளின் நடுவே படித்து; பின்னர் மீண்டும் வன்னிக்குள் வாழும் வரத்தினைப் பெற்றேன். நான் கிளிநொச்சியில் வாழ்ந்த சமயத்தில் என் மச்சாள் ஒருத்திக்கும் (அத்தைப் பொண்ணு) எனக்கும் ஒரு இது இருந்தது. சின்ன வயசில் நான் எழுதிய எழுத்துக்களை வீட்டில் பத்திரப்படுத்தியிருந்தேன். யாரோ ஒரு பிகரைப் பார்த்து ஜொள்ளு விட்டு நான் எழுதிய கவிதையினை அவள் எங்கள் வீட்டிற்குள் நுழைந்து திருட்டுத்தனமாகப் படித்து விட்டாள். அப்புறம் என்ன; எங்கள் வீட்டாரிடம் ஏதும் கூறாது என்னுடைய கவிதைகள் அடங்கிய கொப்பியினை நெருப்பில் எரித்து விட்டாள். 

விடயம், நான் கிளிநொச்சியிலிருந்து விடுமுறையில் வீட்டிற்கு வந்த போது தான் தெரிந்தது. அப்புறம் அழுதேன். ஆனாலும் அழிந்த படைப்புக்களில் மனதில் நினைவில் உள்ள சிலவற்றை மீண்டும் எழுதிச் சேர்த்தேன். பத்திரிகை, வானொலி, மற்றும் ஊடகங்கள் மீதான தீராத காதல் என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டியது. பல ஆக்கங்கள் எழுதியனுப்பி, பத்திரிகைகளில் வெளிவந்த போது அவற்றை கட் பண்ணி பத்திரப்படுத்தியும் வைத்திருந்தேன். ஆனால் அவை எல்லாமே ஈழத்தில் இடம் பெற்ற கொடிய போர் அரக்கனின் நகர்வுகளின் கீழ் அமிழ்ந்து போய் விட்டன. இன்று இவை தான் என்னுடைய படைப்புக்கள் என்று சொல்ல முடியாத சூழ் நிலையில், நானும் ஏதோ கிறுக்குகிறேன் என்று உரிமை கோர முடியாத நிலையில் என்னுடைய பல படைப்புக்களை வன்னி மண்ணில் தொலைத்து விட்டேன். 

வலையுலகிற்குள் வந்த கதை:
இணையம் தந்த இணையற்ற வரப்பிரசாதத்தினால் இன்று உங்கள் முன் ஓர் சிறு நாற்றாக நானும் இருக்கிறேன் எனச் சொல்லிக் கொள்வதனைத் தவிர வேறு என்ன உள்ளது? என்னைப் பற்றி அதிகம் சொல்ல இல்லை என்றே கூறலாம். என்னைப் பற்றி நான் சொல்லுவதற்கோ அல்லது பிறர் என்னைப் புகழ்வதனையோ நான் ஒரு போதும் விரும்புவதில்லை.என்னைப் புகழ்வோரை விட என்னை விமர்சிப்போரைத் தான் நான் அதிகம் நேசிப்பதுண்டு. நாம் வளர்ந்த காலத்தில், எதையும் தீவிரமாக ஆராய்ந்து தேட வேண்டும். தேடி அறிய வேண்டும் எனச் சொல்லி வளர்த்தார்கள். அந்த தேடல், ஊக்கம், அவர்களால் எமக்குள் ஊட்டப்பட்ட எழுத்துக் கருக்கள் தான் இன்று என்னால் உங்கள் முன் இணையத்தில் நானும் ஏதோ கிறுக்குகிறேன் எனச் சொல்லிக் கொள்ள ஓர் உந்து சக்தியாக அமைந்திருக்கிறது. 

வலையுலகில் நான் என்ன சாதித்தேன் என்று நீங்கள் கேட்கலாம். வன்னியில் வாழும் போதும், பின்னர் சிறை, முட்கம்பி வேலி ஆகியவற்றில் இருக்கையில் வலைப் பூக்கள் பற்றி அறிந்து வைத்திருந்தேன். இவை எல்லாம் ஏதோ கற்பனைக்கும் எட்டாத கட்டணம் செலுத்தி எழுதும் வலைப் பூக்கள் அல்லது ஊடகங்கள் என நினைத்து பல தடவை வலைப்பூக்கள் எழுதும் முயற்சியினைக் கைவிட்டதுண்டு.ஆனாலும் விடா முயற்சி, தேடலின் பயனால் நானும் உங்களோடு இணைந்திருக்கிறேன் எனலாம். எம்மை வளர்த்தவர்கள் தமிழக உறவுகள் மீதான பாசத்தினை எமக்குள் ஊட்டி வளர்த்திருக்கிறார்கள். வலைப் பதிவில் நான் எழுத வந்த போது ஈழப் பதிவர்களுக்கும், தமிழக உறவுகளுக்குமான இடைவெளி மிக அதிகமாக இருந்தது எனலாம்.

நண்பர்களின் நல்லாதரவு அல்லது சக பதிவர்களின் உற்சாக டானிக்:
நான் வலைப் பதிவு எழுத வந்த காலத்தில் மதிசுதா, மற்றும் ஓட்டவடை நாராயணன் (ஐடியா Funny இன் ஜெராக்ஸ்) ஆகியோர் தான் தமிழக உறவுகளோடு அதிக நெருக்கங்களைக் கொண்டிருந்தார்கள்.தமிழக உறவுகளுக்கும் எமக்கும் பல விடயங்கள் ஒத்துப் போனாலும், மொழி அடிப்படையில் ஈழத்து ஊடகங்களின் மீதான பரிச்சயம் தமிழகச் சொந்தங்களுக்கு குறைவாகவே காணப்பட்டது. ஆதலால் எம் இயல்புத் தமிழை இலகுத் தமிழாக மாற்றி எழுதினால் தான் நிச்சயமா தமிழகச் சொந்தங்களுடனான உறவினை வலுப்படுத்த முடியும் எனப் புரிந்து கொண்டேன். என் முதற் பதிவிற்கு பின்னூட்டம் எழுதிய டி.சாய், மதிசுதா, எப்பூடி, பிரேம், ஆகிய நண்பர்களைத் தொடர்ந்து சென்னிமலை செந்தில்குமார் என எமக்கு எல்லாம் தமிழக சஞ்சிகைகள் ஊடாகப் பரிச்சயமான சிபி செந்தில்குமார், ஹேமா, ஜனா ஆகியோர் என்னுடைய பதிவுகளிற்கு ஊக்க மருந்தும், உற்சாக டானிக்கும் கொடுத்து என்னை வரவேற்றார்கள்.

மைந்தன் சிவாவின் அறிமுகமும், கவியழகன் / கவிக் கிழவனின் அறிமுகமும் இதன் பின்னர் கிடைத்தது. இவர்கள் இருவரும் தான் என்னை மொக்கை போடாது காத்திரமாக எழுதுமாறு உற்சாகமூட்டினார்கள். அப்புறமா சிபி செந்தில்குமார் சில வலையுலக நுணுக்கங்களையும், நான் எழுதிய பின்னூட்டங்களைப் பற்றிய கருத்துக்களையும் தந்து தொட்ர்ந்தும் எழுத உற்சாகமூட்டினார். பின்னர் ஓட்டவடை நாராயணன் என் பதிவுகளைப் படித்து கமெண்ட் போட்டுக்கிட்டு இருந்ததோடு மாத்திரமின்றி யூஸ்புல்லா பின்னூட்டங்களுக்கு பதில் போட வேண்டும் எனவும், எந்த மாதிரியான பதிவுகளை எழுத வேண்டும் எனவும் சொல்லி கொடுத்தார். எம் இருவருக்கும் நாம் முன்பே அறிமுகமானவர்கள் என்ற விடயம் பல மாதங்களாகத் தெரியாதே வலையுலகில் நட்புடன் பழகி வந்தோம். திடீரென உரையாடும் போது தான் நமக்குள் ஏலவே ஒரு கனெக்சன் இருந்தது எனும் விடயம் தெரிய வந்தது.

அப்புறமா தம்பி கூர்மதியன் எனும் அருமையான நண்பர், மிக நீண்ட விமர்சனங்களை எல்லாம் என் பதிவுகளுக்கு கொடுத்து என்னை மெருகூட்டினார். கில்மா பதிவு போட்டால் ப்ளாக் பக்கம் வரவே மாட்டேன் என மிரட்டியுமிருந்தார். பல பதிவுகள் தொடர்பான கருத்துக்களை பின்னூட்டங்கள் வாயிலாகவும், மெயிலிலும் பகிர்ந்திருக்கிறார். நண்பர் சீனிவாசன் பீமாராவ் எனும் அன்பரும் தன் கருத்துக்களைப் பின்னூட்டங்கள் ஊடாகவும்,தனி மடலிலும் விமர்சனங்களாக வழங்கி என்னை மெருகூட்டியிருக்கிறார். எனக்கு புகழ்வது பிடிக்காது என்ற காரணத்தினால் வலைச் சரத்தில் நான் பதிவெழுத வந்து இரண்டாம் வாரத்தில் என்னை அறிமுகம் செஞ்சு பாரி எனும் அன்பர் பில்டப் கொடுத்து எழுதியதைக் கூற தவறாகப் புரிந்து கொண்டு அப் பதிவிலிருந்து என் பெயரை நீக்குமாறும், நான் ஓர் நாற்று ஐயா! நான் வளர்ந்த பின்னர் எழுதுங்கள் எனவும் சொல்லி சண்டையிட்டிருக்கிறேன்.வலைச் சரத்தில் புதிய பதிவர்களையும் அறிமுகப்படுத்துவாங்க என்று தம்பி கூர்மதியன் சொல்லிய பின்னர் தான் நான் தவறாகப் பாரியுடன் சண்டையிட்ட விடயம் தெரிந்தது. அப்புறமா பேசி சமாதானம் ஆயிட்டேன். 
என் எழுத்துக்களுக்கு அங்கீகாரம் வழங்கிய ஊடகங்கள் & நண்பர்களின் பங்களிப்புக்கள்:
என் பதிவுகளை வலைச் சரத்தில் அறிமுகப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் இந் நேரத்தில் உளமார்ந்த நன்றிகள். என் பதிவினை இலங்கையிலிருந்து உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் வெற்றி எப்.எம் இன் பணிப்பாளர் திரு.ARV.லோசன் அவர்கள் வானொலியிலும் அறிமுகப்படுத்தியிருந்தார். அவருக்கும் இந் நேரத்தில் உளமார்ந்த நன்றிகள். திரட்டிகளில் பல திரட்டிகள் எனக்கு நல்லாதரவு வழங்கியுள்ளன. தமிழ்மணம், இன்ட்லி, தமிழ்வெளி, உலவு, தமிழ்10, தமிழ்வெளி, ஹாரம், ஒன்இன்டியா, வலையகம், மற்றும் பேஸ்புக் குழும உறுப்பினர்கள், டுவிட்டரில் என்னை பின் தொடரும் பாலோவர்கள், பத்திரிகை உலகில் தினமணி, விகடன் ஆகிய தமிழகப் பத்திரிகைகள் எனப் பலர் நல்லாதரவு வழங்கியிருக்கிறாங்க. வழங்கி வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். பதிவுலகில் என் பதிவுகளை திரட்டிகளில் இணைத்து விடுகின்ற பணியினை நான் கேட்கும் வேளையில் மறுக்காது செய்கின்ற நிகழ்வுகள் கந்தசாமி, மனோ அண்ணர், மதுரன், ஐடியா மணி, மற்றும் பலே பிரபு ஆகியோருக்கும்,வீடு சுரேஸ்குமாரிற்கும் உளமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். 
கந்தசாமி பற்றிய நினைவுகளை மீட்டுகையில் நிறைய விடயங்களை எழுதலாம். பல பதிவர்களின் ப்ளாக்கினை நான் ரிப்பேர் செஞ்சு கொடுப்பேன். ஆனால் என் ப்ளாக்கின் முகப்பு அலங்காரங்கள் முதல், பல பதிவுகளிற்கான படங்கள் வரை அனைத்தையும் ரிப்பேர் & டிசைனிங் செஞ்சு கொடுத்த சிறப்பு கந்தசாமி தாத்தாவிற்கே உரியது. இப்படிப் பல பதிவர்களின் பணிகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். திரட்டிகளில் தமிழ்மணம், இன்ட்லி ஆகிய திரட்டிகளுடன் சில பதிவுகளின் அடிப்படையில் முரண்பட்டிருகிறேன். ஆனாலும் என்னை இன்று வரை வளர்த்துக் கொண்டிருப்பவர்கள் அந்தத் திரட்டிகள் தான். இறுதியாக ஒரு கருத்துப் பரிமாற்றத்தின் போது பெயரிலி அண்ணர் (க.இரமணிதரன் - தமிழ்மண நிர்வாகிகளுள் ஒருவர்); "கில்மா பதிவு போட்டா கூட்டமா பன்றிகள் வரும். கிரேட் பதிவு போட்டால் பசுக் கன்றுகள் வரும். பன்னிக் குட்டிகள் போல 15 வேண்டுமா அல்லது பசுக் கன்று போல ஒன்று வேண்டுமா என நகைச்சுவையாகப் பேசி பதிவுலகில் நல்ல பதிவுகளை எழுத வேண்டும்" எனும் உண்மையினை உணர்த்தினார். அவருக்கு இந் நேரத்தில் நன்றிகள்.

விமர்சனங்களால் மெருகூட்டி பின்னூட்டங்களால் ஆதரவு நல்கும் நண்பர்கள்:
இவ் வேளையில் தொடர்ச்சியாக என் பதிவுகளுக்கு ஆதரவு நல்கி வரும் அனைவரையும் நான் நினைவு கூர்வது கடமை. ஆனால் பல நண்பர்களின் பெயர்கள் விடுபட்டுப் போகலாம். எல்லோரையும் தனித்தனியே நினைவு மீட்டல் செய்வதற்கு முன்பதாக என் பதிவுகளுக்கு விமர்சனங்களையும், நல்லாதரவினையும் வழங்கி வரும் அனைத்து வாசகர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.  பதிவர்கள் அல்லாது பின்னூட்டம், மற்றும் ஓட்டுக்கள் வாயிலாக என் பதிவுகளுக்கு ஆரம்ப காலம் முதல் இன்று வரை உற்சாக டானிக் வழங்கும் எழிலன் - இளஞ்செழியன் அண்ணா, Robin அண்ணா, யோகா ஐயா, மகி75, Aavuraan, ஆகிய சொந்தங்களுக்கும், இன்னும் பெயர் குறிப்பிட மறந்த அனைத்து உள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எனக்கு எப்போதும் விமர்சனங்கள் பிடிக்கும் என்பதால் என்னைப் பற்றிய விமர்சனப் பதிவுகளை எழுதித் தள்ளிய ரதி, அனாமிகா துவாரகன், ஜோதிஜி திருப்பூர், மற்றும் முஹமட் ஆஷிக் ஆகிய அன்பு நண்பர்களும், இன்னும் பல நண்பர்களும் தான் விமர்சனங்கள் மூலம் என்னை எளிமைப்படுத்தியுள்ளார்கள். அவர்களுக்கு நன்றி. இவர்களுடன் மயிலன், ஹாலிவூட் ரசிகன், காந்தி பனங்கூர், ஆகுலன், குமரன், திண்டுக்கல் தனபாலன், ராஜபாட்டை ராஜா, வேடந்தாங்கல் கருன், கவிதை வீதி சௌந்தர், ரமேஷ்பாபு, பலே பிரபு, வசந்தா நடேசன், கார்தி (பொட்டலம்) சீனிவாசன் பீமாராவ், தனிமரம் நேசன் அண்ணர், ஆதவா, டி. சாய், சேட்டைக்காரன், இராஜராஜேஸ்வரி, நாய்க்குட்டி மனசு ரூபினா, மகாதேவன், கடம்பவன குயில், நிலாமகள், இரா.எட்வின், ஆப்பிசர் சங்கரலிங்கம், ஸ்பார்க் கார்த்தி, கொக்கரக்கோ, சாதாரணமானவள், இந்திரா, சுவனப் பிரியன், ஆதிரை, வந்தியத்தேவன், கருப்பன், கீதா ஆஷ்சல், அஸ்வின், M.சண்முகன், ஹாஜாமைதீன், சிராஜ், ரஹீம் ஹசாலி, புதிய தென்றல், அன்புடன் மலிக்கா, ஷாசிகா, சஜி, அமுதவன், காலிங்கராஜர், ஆகாயமனிதன், அம்பாளடியாள், இமா டீச்சர், வானதி அக்கா, வெளங்காதவன், ஈரோடு தங்கதுரை, உலக சினிமா ரசிகன், ரமணி ஐயா, எங்கள் ப்ளாக் ஸ்ரீராம், எப்பூடி (ஜீவதர்ஷன்), சந்துரு, விமலன், சிவகுமாரன் கவிதைகள், புலவர் இராமாநுசம் ஐயா, ஜெய்லானி, ஜோஸபின் பாபா, டக்கால்டி, முஹம்மட் ரியாஸ், டெரர் கும்மி குழுவினர், வெளங்காதவன், அன்பு உலகம் M.R, பாயிக் முஹம்மட், ரியாஸ் அஹமட்( நுனிப் புல்லில் ஓர் பனித் துளி), நண்டு நொரண்டு, நல்ல நேரம் சதீஷ்குமார் அண்ணாச்சி, நாய் நக்ஸ், பதிவுலகில் பாபு, பிரபாஷ்கரன், கௌசல்யா, ஆனந்தி அக்கா, மருதமூரான், மன்னார் அமுதன், பிரணவன், ஸ்ரீதர்சன் (பதியவும் பகிரவும்), ARR.ராஜகோபாலன், ஷர்புதின், மாலதி, கீதா, வடலியூரான், ராஜநடராஜன், தோழி பிரஷா,சித்தாரா மகேஷ், பூங்கோதை, கானாவரோ, தங்கராஜா கீர்த்திராஜ், உண்மையா பொய்யா அப்பு, ஜேகே, துரைடானியல்,KRP செந்தில், சிதறல்கள் ரமேஷ், சித்ரா மேடம், ஆகிய அன்பு உள்ளங்களுக்கும், இவர்களில் தவறவிடப்பட்ட நண்பர்களுக்கும் மீண்டும்! மீண்டும் என் நன்றிகள்.

அருகே இருந்து ஊக்கம் கொடுக்கும் அன்புச் சொந்தங்கள்:
என்னை அடிக்கடி செம்மைப்படுத்த உதவுகின்றவர்கள், என் படைப்புக்கள் அடிக்கடி திருத்தம் பெற உதவுகின்றவர்கள், நான் தொடர்ந்தும் எழுத வேண்டும் என சோர்ந்திருக்கும் நேரத்தில் எல்லாம் உற்சாகம் கொடுக்கின்ற உள்ளங்களாக சிபி.செந்தில்குமார், பவுடர் ஸ்டார் - ஒன்னும் தெரியாத ஐடியாமணி / ஓட்டவடை நாராயணன், மதிசுதா, காட்டான் அண்ணர், யோகா ஐயா, ஆமினா அக்கா, வருண் பிரகாஷ், பூனைகளின் தோழியான அதிரா அக்கா (மிக......நீண்ட....கமெண்ட் போட்டு ஊக்கப்படுத்துவா), உமாஜீ, விக்கி உலகம் வெங்கட்குமார், ஏஞ்சலின் அக்கா, தம்பி கூர்மதியன், ஹேமா அக்கா, செங்கோவி, தமிழ்வாசி பிரகாஷ், வீடு சுரேஸ்குமார், கவுன்சிலர் அண்ணர் சண்முகலிங்கம், ஆகுலன், KSS.ராஜ், தனிமரம் நேசன், ஜனா அண்ணா, மதுரன், மைந்தன் சிவா, கவியழகன், ARV.லோசன் அண்ணர், பொன்னர் அம்பலத்தார் ஐயா, யோகா ஐயா, பன்னிக்குட்டி ராம்சாமி அண்ணர், கோகுல் மகாலிங்கம், மாய உலகம் ராஜேஷ், வந்தேமாதரம் சசி, ராஜநடராஜன் அண்ணர், சென்னைப் பித்தன் ஐயா, துஸ்யந்தன், கந்தசாமி தாத்தா, ரேவா, மகேந்திரன் அண்ணாச்சி, ஆப்பிசர் சங்கரலிங்கம்,நாஞ்சில் மனோ அண்ணர்,பிலாசபி பிரபாகரன், ரேவரி, மெட்ராஸ்பவன் சிவகுமார், சீனிவாசன் பீமாராவ், சுவடுகள் கேதரன், யாழினி அக்கா, ஆகுலன்,அழகிய இடைக்காடு சக்திவேல் ஐயா, பி.அமல்ராஜ் அண்ணர், டொக்டர் எம்.கே.முருகானந்தன் ஐயா, சதாலட்சுமி பாஸ்கர் ஆன்ரி, பதிவர் சரியில்ல, மற்றும் இங்கே விடுபட்ட அத்தனை அன்புச் சொந்தங்களுக்கும் என் நன்றிகளை மட்டும் சொல்லி உங்களில் இருந்து என்னைப் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. எல்லோருடைய அன்பிற்கும், உற்சகாத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

நண்பர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் எழுதாமைக்கான காரணங்கள்:
இவ் வேளையில் பலருக்கு என் மீது கடுப்பு இருக்கலாம், கோபம் இருக்கலாம், ஆரம்பத்திலிருந்து இந்த வருட ஆகஸ்ட் மாதம் வரை அதிக பின்னூட்டங்களை எழுதிய நிரூபன் தற்போது பின்னூட்டங்களை எழுதுவதில்லை என்று கோபம் இருக்கலாம். அத்தோடு என் வலையிலும் என் பதிவுகளுக்கு நான் மீண்டும் உங்க ப்ளாக்கிற்கு வந்து பின்னூட்டம் எழுதுவேன் என்ற நோக்கத்தில் எழுத வேண்டாம் என்று சொல்லியிருந்த்தேன். எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் பதிவுகளை மாத்திரம் தான் எழுத முடிகிறது. பின்னூட்டங்களை எழுத ஆரம்பித்தால் எல்லோர் வலைக்கும் பின்னூட்டங்கள் எழுத வேண்டும். ஆனால் டைம்மிற்கு எங்கே போவது. ஆகவே மன்னித்துக் கொள்ளுங்கள். நேரம் உள்ள போது கண்டிப்பாக வாரம் ஒரு தடவை என்றாலும் உங்கள் வலைகளுக்கு வருவேன். 

பதிவுலகில் என் ஓய்வு நேரங்களில் செய்ய நினைப்பவை/ செய்தவை:
எல்லோரும் நன்றாக எழுத வேண்டும் எனும் ஆவலினால் பதிவர் அறிமுகத்தினை ஒவ்வோர் பதிவுகளின் கீழும் வழங்கி வருகின்றேன். நேரம் அதிகமாக இல்லை என்பதால் புதிய பதிவர்களை தொடர்ந்தும் அறிமுகப்படுத்த முடியவில்லை. புதிய பதிவர்கள் இருந்தால் உங்கள் வலைப் பதிவு பற்றிய விபரங்களை தொடர்புகட்கு எனும் பகுதியூடாக அனுப்பி வையுங்கள். இணைத்துக் கொள்கின்றேன்.பதிவுலகில் மதுரன் மற்றும் KSS.ராஜ் தலமையிலான ஈழவயலில் இணைந்து ஈழத்து கலை கலாச்சர விடயங்களை எழுத ஆரம்பித்தது ஓர் சந்தோசம். தமிழகச் சொந்தங்களோடு கைகோர்க்க சந்தர்ப்பம் கிடைத்தது இன்னோர் சந்தோசம். ஈழ வரலாறு பற்றிய தொடரினை எழுத தொடங்கியது இன்னும் இன்னும் சந்தோசம். அதன் பத்து பாகங்களை உள்ளடக்கிய முதலாவது அத்தியாயம் முடிவடைந்து விட்டது. ஏனைய பாகங்கள் வெகு விரைவில் உங்களை நாடி வரும். உங்களைப் போன்ற பல வாசகர்கள் இச் சிறியேனின் படைப்புக்களைப் படிப்பது மென்மேலும் சந்தோசம்! கருத்துக்கள் அடிப்படையில் புரிந்துணர்வுடன் கூடிய ஓர் இளைய தலைமுறை ஊடகவியலாளர்களை நண்பர்கள் சிலருடன் இணைந்து வளர்த்தெடுக்கிறோம் என்பது இன்னுமோர் மகிழ்ச்சியான செய்தி.

வாழ்த்துக்கள் என்று ஒற்றை வரியில் சொல்லாது, என் படைப்புக்களைப் பற்றிய குறைகளை, விமர்சனங்களை, என்னிடம் நீங்க எவ்வாறான படைப்புக்களை எதிர்பார்க்கிறீங்க என்று சொன்னீங்க என்றால் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். வலையுலகில் என்ன சாதனை என்று யாருமே கேட்க வேணாம். அப்புறமா எல்லோரும் பதிவெழுதி ஹிட்ஸ் அடித்து அண்ணா நகரில அப்பார்மெண்ட் வாங்குறாங்களாம், நான் சேலத்தில ரெண்டு மாந்தோப்பு வாங்கியிருக்கேனுங்க. ஹிட்ஸ்சு பத்தி நான் என்ன சொல்லனுமுங்க. நீங்களே சைட் பாரில பார்த்து தெரிஞ்சுக்கலாம். அப்புறம் டுவிட்டர் மற்றும் நண்பர்களால் உருவாக்கபப்ட்ட நாற்று பேஸ்புக் குழுமம், மற்றும் பாலோவர்ஸ் மூலமாயும் நண்பர்கள் என் பதிவுகளைப் படிக்க வாறாங்க. அது பத்தி தெரிஞ்சுக்க ஆர்வமுள்ளவங்க அங்கங்கே கொஞ்சம் நோட்டம் விட்டு பாருங்க. 

கடந்த வாரம் முழுவதும் தமிழ்மணம் திரட்டியில் நட்சத்திர வாரப் பதிவராக இருக்கின்ற அரிய வாய்ப்பினைத் தமிழ்மணம் திரட்டி நிர்வாகத்தினர் வழங்கியிருந்தார்கள். இந்த நட்சத்திர வாரம் இன்றுடன் நிறைவு பெறுகின்றது. பதிவர்களின் படைப்புக்களை பல வாசகர்களிடம் எடுத்துச் சென்று சேர்க்கும் தமிழ்மணச் சொந்தங்களுக்கும் இந் நேரத்தில் நன்றிகள். வாழ்த்துக்கள் என்று ஒற்றை வரியில் சொல்லாது, என் படைப்புக்களைப் பற்றிய குறைகளை, விமர்சனங்களை, என்னிடம் நீங்க எவ்வாறான படைப்புக்களை எதிர்பார்க்கிறீங்க என்று சொன்னீங்க என்றால் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்.

மீண்டும் இங்கே அன்புச் சொந்தங்கள் யாரையாச்சும் தவற விட்டிருந்தா மன்னிச்சுக் கொள்ளுங்கள்! 
நன்றி! நன்றி! நன்றி! 


190 Comments:

Yoga.S. said...
Best Blogger Tips

காலை வணக்கம் நிரூபன்! நீ......................ண்ட,மிக நீண்ட ஒரே பதிவு இதுதான் என நினைக்கிறேன்!படிச்சு முடிக்கிறதுக்குள்ள தாவு தீந்துடிச்சுப்பா!என்பெயரையும் உள்ளடக்கியதற்கு நன்றி!இரண்டாம் ஆண்டில் காத்திரமான பதிவுகள் எழுதி முதலிடம் பிடிக்க வாழ்த்துக்கள்!!!!!!!(சி.பி கோச்சுக்க மாட்டாரு!)

ஆகுலன் said...
Best Blogger Tips

அண்ணா உங்கள் எழுத்து பணி தொடரவேன்டும்.. நானும் உங்களை தொடர்ந்து பின் தொடர்வேன்...

என்னையும் பதிவு எழுத தூடியவர்களில் நீங்களும் ஒருவர்...நன்றி..

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

ஒரு வருடத்தில் உங்கள் வளர்ச்சி பிரமிக்கவைக்கிறது. காரணம் அதற்கு பின்னால் உள்ள கோடிக்கணக்கான எழுத்துக்கள், எழுத்துக்கள் உருவாக்கிய நல்ல வசனங்களும், வசனங்கள் செதுக்கிய அருமையான பதிவுகளுமே. இந்த நிலை இன்னும் பல வருடங்கள் தொடர வாழ்த்துக்கள்.

ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே அறிமுகமானாலும் என் பெயரையும் இணைத்துக் கொண்டமைக்கு மிகவும் நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

காலை வணக்கம் நிரூபன்! நீ......................ண்ட,மிக நீண்ட ஒரே பதிவு இதுதான் என நினைக்கிறேன்!படிச்சு முடிக்கிறதுக்குள்ள தாவு தீந்துடிச்சுப்பா!என்பெயரையும் உள்ளடக்கியதற்கு நன்றி!இரண்டாம் ஆண்டில் காத்திரமான பதிவுகள் எழுதி முதலிடம் பிடிக்க வாழ்த்துக்கள்!!!!!!!(சி.பி கோச்சுக்க மாட்டாரு!)
//

வணக்கம் ஐயா, எனக்கு இந்த ட்ரேங் மீது ஆசை இல்லை என்று ஏலவே செங்கோவி ப்ளாக்கில சொல்லியிருக்கேன். அவ்வ்....
அப்புறமா என் ப்ளாக்கிற்கு தமிழ்மணத்தில் ட்ராங்கே இல்லை

ஷர்புதீன் said...
Best Blogger Tips

நீண்ட ஒரே பதிவு இதுதான் என நினைக்கிறேன்!படிச்சு முடிக்கிறதுக்குள்ள தாவு தீந்துடிச்சுப்பா!

:-)

வாழ்த்துக்கள் நண்பரே

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆகுலன்

அண்ணா உங்கள் எழுத்து பணி தொடரவேன்டும்.. நானும் உங்களை தொடர்ந்து பின் தொடர்வேன்...

என்னையும் பதிவு எழுத தூடியவர்களில் நீங்களும் ஒருவர்...நன்றி..
//

நன்றி நண்பா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

உங்கள் வலைப்பூவில் எனது பங்களிப்பு மிக மிகக்குறைவே, அவ்வப்போது வந்து போவதைத் தவிர! இருப்பினும் என்னையும் சேர்த்துக் கொண்டது உங்கள் பெருந்தன்மையே! வாழ்த்துகள் நிரூபன். மென்மேலும் சிறப்பான பதிவுகள் பல எழுத வாழ்த்துகிறேன்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹாலிவுட்ரசிகன்ஒரு வருடத்தில் உங்கள் வளர்ச்சி பிரமிக்கவைக்கிறது. காரணம் அதற்கு பின்னால் உள்ள கோடிக்கணக்கான எழுத்துக்கள், எழுத்துக்கள் உருவாக்கிய நல்ல வசனங்களும், வசனங்கள் செதுக்கிய அருமையான பதிவுகளுமே. இந்த நிலை இன்னும் பல வருடங்கள் தொடர வாழ்த்துக்கள்.

ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே அறிமுகமானாலும் என் பெயரையும் இணைத்துக் கொண்டமைக்கு மிகவும் நன்றி.
//

அவ்வ்வ்வ்வ்வ்.
யோவ்...படத்தைப் பாரும்! நான் இன்னும் வளரவே இல்லை! அப்படியே தான் இருக்கேன்.
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஷர்புதீன்
நீண்ட ஒரே பதிவு இதுதான் என நினைக்கிறேன்!படிச்சு முடிக்கிறதுக்குள்ள தாவு தீந்துடிச்சுப்பா!

:-)

வாழ்த்துக்கள் நண்பரே//


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
நன்றி நண்பா, யோகா ஐயாவின் கமெண்டிற்கும் நன்றி.

K said...
Best Blogger Tips

மச்சி, நான் உனக்கு வாழ்த்துச் சொன்னால் அது எனக்குச் சொன்ன மாதிரியே!

இருந்தாலும் சம்பிரதாயம் அப்டீங்கற ஒண்ணு இருக்குல்ல! ஸோ அதுனால சொல்றேன்!

உனக்கு என்னோட வாழ்த்துக்கள் மச்சி!

K said...
Best Blogger Tips

மச்சி, நான் உனக்கு ஹெல்ப் பண்ணிய மேட்டரைப் போட்டிருக்கே! ஓகே!

நான் உனக்கு எதிராக நாலைந்து உள்குத்து போட்டு, நோவடிச்சிருக்கேனே! அதையும் அல்லவா போட்டிருக்க வேண்டும்!

நான் ஒண்ணுமே கோபிக்க மாட்டேன்! உண்மை என்பதால்!

K said...
Best Blogger Tips

யோவ், பெயரிலி அண்ணாவுக்கு நன்றி சொல்லியிருக்கே! யாராச்சும் உணர்ச்சிவசப்பட்டு, மைனஸ் குத்தப் போறாய்ங்க!

K said...
Best Blogger Tips

முகமட் ஆஷிக் உள்ளிட்ட சில நண்பர்களுக்கும் நன்றி சொல்லியிருப்பது உனது தெளிந்த மனதைக் காட்டுகிறது! நன்று!

ஆமினா said...
Best Blogger Tips

உங்களுடன் பேசிய நாட்களில் தான் ஈழம் தொடர்பான விஷயங்களை நீங்கள் கொடுப்பது கத்திமுனை வாழ்க்கை என்பதை உணர்ந்தேன். ஆனாலும் மேலும் எழுதியே தீருவேன் என்ற குணம் என்னை மிகவும் கவர்ந்தது. உங்கள் பல படைப்புக்கள் பல தீக்கு இரையானதும், போரில் அழிந்ததும் கேட்டு வேதனைபடும் நேரத்தில் சோர்வடையாமல் மீண்டும் எழுந்தது பார்த்து மிக்க மகிழ்ச்சி.

//வாழ்த்துக்கள் என்று ஒற்றை வரியில் சொல்லாது,//

நான் என்ன பெருசா சொல்லிட போறேன்... தொடர்ந்து முகம் சுழிக்காத பெண்களும் படிக்கும் படியான பதிவுகளை "மட்டும்"(மட்டும் என்பதை அழுத்தி படிக்கவும் :-) போடுங்க :-)

வாழ்த்துகள் தம்பி
மேலும் பல வருடங்கள் இணையத்தில் சாதிக்க வாழ்த்துகிறேன்

K said...
Best Blogger Tips

என்னை எதுக்குலே நாலைஞ்சு இடத்துல குறிப்பிட்டிருக்கே? ஒருவாட்டி சொன்னா போதாதா? அல்லது சொல்லலைன்னாலும் கூட ஒண்ணும் குத்தமில்லையே?

அதான், “ நீயும் நானும் ஓரினச் சேர்க்கையாளர்கள்”னு நாற்று குழுமத்தில் வைச்சுக் கும்மிட்டாங்களே! இதைவிடவா நமது நட்புக்கு ஒரு நல்ல சான்று வேணும்?? ஹி ஹி ஹி ஹி !!!

ஆமினா said...
Best Blogger Tips

என்னையும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி :-)

K said...
Best Blogger Tips

மச்சி நீ சிலரைத் தவற விட்டுட்டே! முக்கியமா ரம்யா பரசுராமனைத் தவறவிட்டது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குப்பா! :-)

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
மச்சி, நான் உனக்கு வாழ்த்துச் சொன்னால் அது எனக்குச் சொன்ன மாதிரியே!

இருந்தாலும் சம்பிரதாயம் அப்டீங்கற ஒண்ணு இருக்குல்ல! ஸோ அதுனால சொல்றேன்!

உனக்கு என்னோட வாழ்த்துக்கள் மச்சி!//

அப்படீன்னா நீ எனக்கு பார்ட்டி கொடு மச்சி! அவ்வ்வ்வ்வ்வ்வ்

நன்றிடா.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

மச்சி, நான் உனக்கு ஹெல்ப் பண்ணிய மேட்டரைப் போட்டிருக்கே! ஓகே!

நான் உனக்கு எதிராக நாலைந்து உள்குத்து போட்டு, நோவடிச்சிருக்கேனே! அதையும் அல்லவா போட்டிருக்க வேண்டும்!

நான் ஒண்ணுமே கோபிக்க மாட்டேன்! உண்மை என்பதால்!
//

ஸப்பா...இவரு பெரிய உள்குத்து உலகநாதன்.
அவ்வ்
போட்டதே ஒன்னே ஒன்னு!
அதில எனக்கு எதிரா நாலு உள்குத்து போட்டதா பீத்தல் வேற.
கொய்யாலே!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

யோவ், பெயரிலி அண்ணாவுக்கு நன்றி சொல்லியிருக்கே! யாராச்சும் உணர்ச்சிவசப்பட்டு, மைனஸ் குத்தப் போறாய்ங்க!
//

ஹே...ஹே..
அவ்வ்வ்வ்வ்
குத்தினா குத்திட்டு போகட்டும் மச்சி.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
முகமட் ஆஷிக் உள்ளிட்ட சில நண்பர்களுக்கும் நன்றி சொல்லியிருப்பது உனது தெளிந்த மனதைக் காட்டுகிறது! நன்று!//

ஏன் மச்சி,
என்னொட மனசு என்ன கல்லெறிஞ்சு கலைஞ்சு போயா இருந்திச்சு
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K said...
Best Blogger Tips

மச்சி, நான் உனக்கு ஹெல்ப் பண்ணினேன்! ஓகே! அப்படி என்னதான் பண்ணிக் கிளிச்சேன்னு எனக்கே தெரியல! பட், என்னால உனக்கு ஒரு தீமை நடந்திருக்கு!

ஒருவாட்டி சாமம் 2 மணிக்கு நாம முழிச்சிருந்து, கொழும்பில் உள்ள ஒரு பத்திரிகையாளருக்கு கொல மிரட்டல் விட்டு, அவங்க டென்சன் ஆகி, அப்புறம் தமிழ்மணத்தில் இருந்து உன்னைத் தூக்கி வெளியே போட்டு, சில பல நாட்கள் மனசு நொந்துபோய் இருந்தே!

என்னால தானே உனக்கு அந்த கஷ்டம் வந்திச்சு?

ஜெய்லானி said...
Best Blogger Tips

என்னதூஊஊஊ விமர்சனப்பதிவா..??????... நானா..???சத்தமில்லாம ரீடர்ல படிச்சிட்டுப்போனா...இப்பிடி கொளுத்திப்போட்டிட்டீங்களே....அவ்வ்வ்வ்வ் :-)))

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆமினா

நான் என்ன பெருசா சொல்லிட போறேன்... தொடர்ந்து முகம் சுழிக்காத பெண்களும் படிக்கும் படியான பதிவுகளை "மட்டும்"(மட்டும் என்பதை அழுத்தி படிக்கவும் :-) போடுங்க :-)
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்

அக்கா இப்போதெல்லாம் அப்படியான பதிவுகளைக் குறைச்சிட்டே வாரேன். ஆனால் நல்ல பதிவுகள் வரும் போது ஆர்வமுடன் நல்ல பதிவுகள் நீங்க எழுதலையே என்று கேட்போர் வராமலிருப்பது கவலையாக இருக்கு!
அவ்வ்வ்வ்

ஜெய்லானி said...
Best Blogger Tips

இதுவும் நல்லாதான் இருக்கு..!!! :-)))

ஒருநாளைக்கு 3 பதிவு போட (சாப)வாழ்த்துகிறேன் :-)))

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

என்னை எதுக்குலே நாலைஞ்சு இடத்துல குறிப்பிட்டிருக்கே? ஒருவாட்டி சொன்னா போதாதா? அல்லது சொல்லலைன்னாலும் கூட ஒண்ணும் குத்தமில்லையே?
//

அவ்வ்வ்வ்வ்வ்

மச்சி, நீ இப்படிச் சொல்லும் போது தான் என்னோட கவர் ஸ்டோரி, தமிழக செய்தியாளர் சரியில்ல எனக்கு ஞாபகம் வந்திருக்காரு!
அவரையும் இப்போ தான் ஆட்டத்தில சேர்த்திருக்கேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆமினா

என்னையும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி :-)
//

இதுக்கெல்லாம் எதுக்குங்க நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

மச்சி நீ சிலரைத் தவற விட்டுட்டே! முக்கியமா ரம்யா பரசுராமனைத் தவறவிட்டது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குப்பா! :-)
//

யாரைய்யா அவா..
உன்னோட காதலி என்று முன்னாடி வந்தாங்களே!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

K said...
Best Blogger Tips

மச்சி உன்னிடம் ஒரு கேள்வி!

“ வளைந்து நெளிந்து ஓடும் காமம்” “ ஆபாச வயலில் அதிக அறுவடை” “ ஆபாசம் என்பது அடிக்கடி வருமா?” இதுமாதிரி தலைப்புகளில் சில நாட்களில் வெளுத்து வாங்கினியே, இனி எப்போது மீண்டும் அப்படி எழுதுவாய்? ஹி ஹி ஹி !!

K said...
Best Blogger Tips

மச்சி, அவசரமா வேலைக்குப் போகிறேன்! எப்படியும் காலை 10 மணி போல, என்னோட முதலாளி டேபிள்ள இருந்து நித்திரை தூங்குவாரு! ஸோ, நான் மறுபடியும் ஆஃபீஸ்ல இருந்து வர்ரேன்! ஓகே!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜெய்லானி

என்னதூஊஊஊ விமர்சனப்பதிவா..??????... நானா..???சத்தமில்லாம ரீடர்ல படிச்சிட்டுப்போனா...இப்பிடி கொளுத்திப்போட்டிட்டீங்களே....அவ்வ்வ்வ்வ் :-)))
//

ஜெய்லானி நீங்க தவறாகப் புரிந்து விட்டீங்க.
கொர்ர்ர்ர்ர்ர்
நீங்க விமர்சனம் எழுதுவதாக குறிப்பிடவில்லை.

//எனக்கு எப்போதும் விமர்சனங்கள் பிடிக்கும் என்பதால் என்னைப் பற்றிய விமர்சனப் பதிவுகளை எழுதித் தள்ளிய ரதி, அனாமிகா துவாரகன், ஜோதிஜி திருப்பூர், மற்றும் முஹமட் ஆஷிக் ஆகிய அன்பு நண்பர்களும், இன்னும் பல நண்பர்களும் தான் விமர்சனங்கள் மூலம் என்னை எளிமைப்படுத்தியுள்ளார்கள்.//

நீங்க என்னோட சில பதிவுகளைப் படித்து கமெண்ட் போட்டிருக்கிறீங்க. ஸோ...அந்த அர்த்தத்தில தான் சொல்லியிருக்கேன்,
ரீடரில் என் பதிவுகளை முழுமையாகப் படிக்க முடியாது.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

ஒருவாட்டி சாமம் 2 மணிக்கு நாம முழிச்சிருந்து, கொழும்பில் உள்ள ஒரு பத்திரிகையாளருக்கு கொல மிரட்டல் விட்டு, அவங்க டென்சன் ஆகி, அப்புறம் தமிழ்மணத்தில் இருந்து உன்னைத் தூக்கி வெளியே போட்டு, சில பல நாட்கள் மனசு நொந்துபோய் இருந்தே!

என்னால தானே உனக்கு அந்த கஷ்டம் வந்திச்சு?
//

ஹே....ஹே...

இதெல்லாம் கஷ்டமா? அவ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜெய்லானி

இதுவும் நல்லாதான் இருக்கு..!!! :-)))

ஒருநாளைக்கு 3 பதிவு போட (சாப)வாழ்த்துகிறேன் :-)))
//

ரொம்ப நக்கலு உங்களுக்கு.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜெய்லானி

இதுவும் நல்லாதான் இருக்கு..!!! :-)))

ஒருநாளைக்கு 3 பதிவு போட (சாப)வாழ்த்துகிறேன் :-)))
//

ரொம்ப நக்கலு உங்களுக்கு.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

மச்சி உன்னிடம் ஒரு கேள்வி!

“ வளைந்து நெளிந்து ஓடும் காமம்” “ ஆபாச வயலில் அதிக அறுவடை” “ ஆபாசம் என்பது அடிக்கடி வருமா?” இதுமாதிரி தலைப்புகளில் சில நாட்களில் வெளுத்து வாங்கினியே, இனி எப்போது மீண்டும் அப்படி எழுதுவாய்? ஹி ஹி ஹி !!
//

கைவசம் அப்படி ஓர் பதிவு இருக்கு! வெகு விரைவில் போடுகிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
மச்சி, அவசரமா வேலைக்குப் போகிறேன்! எப்படியும் காலை 10 மணி போல, என்னோட முதலாளி டேபிள்ள இருந்து நித்திரை தூங்குவாரு! ஸோ, நான் மறுபடியும் ஆஃபீஸ்ல இருந்து வர்ரேன்! ஓகே!//

வேலைக்கு போகும் போதாச்சும் குளிச்சிட்டு போ மச்சி!

நாய் நக்ஸ் said...
Best Blogger Tips

Vazhthukkal...
Niru...thambi...

Nanri...en peraium
serthathukku....

Nan panni-n comment-i
vazhi mozhikiren....

பி.அமல்ராஜ் said...
Best Blogger Tips

ஒருவருடத்தில் பெரும் சாதனைதான். நான் எப்பொழுதும் நிரூபனை ஒரு தேடல் நிறைந்த, ஆளுமை மிக்க, தெளிவான இளைஞனாகவே பார்த்திருக்கிறேன். எனக்கும் தனிப்பட்ட ரீதியில் வலையுலகில் பல உதவிகளை செய்துகொடுத்தவரும் இவர்தான். உங்கள் எழுத்தாணி இன்னும் இன்னும் ஸ்ட்ரோங் ஆக இருக்க எனது வாழ்த்துக்கள். இன்னும் பல ஆண்டுகள் டாப் பதிவராக இருக்க எனது வாழ்த்துக்கள்.

நிரூபணிற்கு ஒரே ஒரு கருத்து இருக்கிறது: சில விடயங்களை சூட்சுமமாக சொல்லும் விதத்தை கொஞ்சம் கையில் எடுங்களேன். எழுத்துச் சுதந்திரம் என்பதை அறியாத அநேகர் உங்கள் எழுத்துக்களை பின் தொடர்கிறார்கள். அதற்காகவே சொன்னேன்.

K said...
Best Blogger Tips

மச்சி நிரூ, எனக்கும் இப்படி ஒரு பதிவு போட்டு, எல்லோருக்கும் நன்றி சொல்லணும்னு அசையா இருக்கு! பட், எனக்கு எந்த ப்ளாக்க, எப்ப ஆரம்பிச்சேன்னு மறந்து போய்ச்சு! ஒரு ப்ளாக் ரெண்டு ப்ளாக்கா இருந்தால் பரவாயில்லை! ஓராயிரம் ப்ளாக் ஆரம்பிச்சிருக்கேன்! ( வடிவேலு ஸ்டைலில் படுக்க....ஸாரி படிக்கவும்! )

இதுல எங்க போயி, அனிவர்சரி கொண்டாடுறது? எங்க நன்றி சொல்லுறது? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன் பதிவுலகின் ஒரு வருட பூர்த்திக்கு வாழ்த்துக்கள்..!!

இந்த கோமணகாரனையும் குறிப்பிட்டதுக்கு நன்றி..!

Unknown said...
Best Blogger Tips

ஒரு வருடத்துக்குள் உங்கள் வளர்ச்சி பாரியது!
மேன்மேலும் எழுத வாழ்த்துக்கள்!
நிறைய புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள், பலரிடம் கொண்டு சேர்த்திருக்கிறீர்கள் -இதுவும் பெரிய விஷயம்!
வாழ்த்துக்கள் பாஸ்!

A.R.ராஜகோபாலன் said...
Best Blogger Tips

""என் மன உணர்வுகள், எங்கள் தேசத்தின் அவலங்கள், அழு குரல்கள், என்னோடு படித்த கல்லூரி தோழர்களின் நினைவலைகள் இவை யாவற்றையும் கையெழுத்து வடிவில் அப்பியாச கொப்பிகளில் (நோட்டு புக்) எழுதி பத்திரப்படுத்திக் கொள்வேன்."""

வரலாறு
வளர்ந்த
விதத்தை
வர்ணித்த
விதம்
வளமை சகோ
வாழ்த்துக்கள்

A.R.ராஜகோபாலன் said...
Best Blogger Tips

"" என்னைப் பற்றி அதிகம் சொல்ல இல்லை என்றே கூறலாம்'''

அதற்குத் தான் உங்களின்
எழில் எழுத்தும்,
எங்களின் கருத்தும் இருக்கே

ஒரு வருடத்தில் இத்தனை சாதனைகளா நம்ப முடியவில்லை சகோ
பிரமித்தேன்.

மகேந்திரன் said...
Best Blogger Tips

அன்புநிறை சகோதரன் நிரூபன்,
வணக்கம்
நலமா?
இன்றைய பதிவுலகின் தவிர்க்கபடாத முத்திரை பாதிக்கும்
பதிவர்களில் ஒருவர் நீங்கள். இன்னும் தங்களின் எழுத்துக்கள் மெருகேற வேண்டும். தொடர்ந்து எழுதுங்கள். இத்தரணியில் உங்களுக்கென்று ஒரு இடம் இருக்கிறது...
எழுத்துக்கள் எல்லோருக்கும் எளிதாக வருவதல்ல..
கச்சிதமாக கொண்டு செல்கிறீர்கள்.
தொடர்ந்து பின்னூட்டம் இட முடியவில்லை என்றாலும்
தாமதமாக வந்தாலும் உங்கள் பதிவுகளை படிக்க மட்டும் நான்
தவறியதில்லை.

தொடருங்கள்
தொடர்கிறேன்.
வாழ்த்துக்களுடன்
வணங்குகிறேன்.

அன்பன்
மகேந்திரன்.

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

வாழ்த்துக்கள் மாப்ளே,

சிறந்த பதிவுகளை எழுதி மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் நிரு.....

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

என்னாது... நிரூபனின் தளத்துக்கு இப்ப்போதான் ஒரு வருட பூர்த்தியோ? அவ்வ்வ்வ்வ்வ்:)) ஏதோ நீண்ட காலம் பதிவெழுதும் ஒரு பதிவர் என்றெல்லோ நினைச்சுக்கொண்டிருந்தேன்.. அப்போ இதிலும் எனக்குத் தம்பிதான்.. ம்ஹூம்.. எங்கிட்டயேவா:))).

சரி சரி 19 தானே ஒரு வருட பூர்த்தி... எதுக்கு குறைமாதக்குழந்தையாக்கிட்டீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))..

சரி உதெல்லாம் போகட்டும்....

வாழ்த்துக்கள் நிரூபன் வாழ்த்துக்கள்.... இன்னும் பல நூறு பதிவுகள் காண வாழ்த்துக்கள்.. மனதார வாழ்த்துகிறேன்..வாழ்த்துக்கள் நிரூபன் வாழ்த்துக்கள்.... இன்னும் பல நூறு பதிவுகள் காண வாழ்த்துக்கள்.. மனதார வாழ்த்துகிறேன்..வாழ்த்துக்கள் நிரூபன் வாழ்த்துக்கள்.... இன்னும் பல நூறு பதிவுகள் காண வாழ்த்துக்கள்.. மனதார வாழ்த்துகிறேன்..வாழ்த்துக்கள் நிரூபன் வாழ்த்துக்கள்.... இன்னும் பல நூறு பதிவுகள் காண வாழ்த்துக்கள்.. மனதார வாழ்த்துகிறேன்..வாழ்த்துக்கள் நிரூபன் வாழ்த்துக்கள்.... இன்னும் பல நூறு பதிவுகள் காண வாழ்த்துக்கள்.. மனதார வாழ்த்துகிறேன்..வாழ்த்துக்கள் நிரூபன் வாழ்த்துக்கள்.... இன்னும் பல நூறு பதிவுகள் காண வாழ்த்துக்கள்.. மனதார வாழ்த்துகிறேன்..வாழ்த்துக்கள் நிரூபன் வாழ்த்துக்கள்.... இன்னும் பல நூறு பதிவுகள் காண வாழ்த்துக்கள்.. மனதார வாழ்த்துகிறேன்..வாழ்த்துக்கள் நிரூபன் வாழ்த்துக்கள்.... இன்னும் பல நூறு பதிவுகள் காண வாழ்த்துக்கள்.. மனதார வாழ்த்துகிறேன்..வாழ்த்துக்கள் நிரூபன் வாழ்த்துக்கள்.... இன்னும் பல நூறு பதிவுகள் காண வாழ்த்துக்கள்.. மனதார வாழ்த்துகிறேன்..வாழ்த்துக்கள் நிரூபன் வாழ்த்துக்கள்.... இன்னும் பல நூறு பதிவுகள் காண வாழ்த்துக்கள்.. மனதார வாழ்த்துகிறேன்..வாழ்த்துக்கள் நிரூபன் வாழ்த்துக்கள்.... இன்னும் பல நூறு பதிவுகள் காண வாழ்த்துக்கள்.. மனதார வாழ்த்துகிறேன்..வாழ்த்துக்கள் நிரூபன் வாழ்த்துக்கள்.... இன்னும் பல நூறு பதிவுகள் காண வாழ்த்துக்கள்.. மனதார வாழ்த்துகிறேன்..வாழ்த்துக்கள் நிரூபன் வாழ்த்துக்கள்.... இன்னும் பல நூறு பதிவுகள் காண வாழ்த்துக்கள்.. மனதார வாழ்த்துகிறேன்..வாழ்த்துக்கள் நிரூபன் வாழ்த்துக்கள்.... இன்னும் பல நூறு பதிவுகள் காண வாழ்த்துக்கள்.. மனதார வாழ்த்துகிறேன்..வாழ்த்துக்கள் நிரூபன் வாழ்த்துக்கள்.... இன்னும் பல நூறு பதிவுகள் காண வாழ்த்துக்கள்.. மனதார வாழ்த்துகிறேன்..வாழ்த்துக்கள் நிரூபன் வாழ்த்துக்கள்.... இன்னும் பல நூறு பதிவுகள் காண வாழ்த்துக்கள்.. மனதார வாழ்த்துகிறேன்..வாழ்த்துக்கள் நிரூபன் வாழ்த்துக்கள்.... இன்னும் பல நூறு பதிவுகள் காண வாழ்த்துக்கள்.. மனதார வாழ்த்துகிறேன்..வாழ்த்துக்கள் நிரூபன் வாழ்த்துக்கள்.... இன்னும் பல நூறு பதிவுகள் காண வாழ்த்துக்கள்.. மனதார வாழ்த்துகிறேன்..வாழ்த்துக்கள் நிரூபன் வாழ்த்துக்கள்.... இன்னும் பல நூறு பதிவுகள் காண வாழ்த்துக்கள்.. மனதார வாழ்த்துகிறேன்..வாழ்த்துக்கள் நிரூபன் வாழ்த்துக்கள்.... இன்னும் பல நூறு பதிவுகள் காண வாழ்த்துக்கள்.. மனதார வாழ்த்துகிறேன்..வாழ்த்துக்கள் நிரூபன் வாழ்த்துக்கள்.... இன்னும் பல நூறு பதிவுகள் காண வாழ்த்துக்கள்.. மனதார வாழ்த்துகிறேன்..வாழ்த்துக்கள் நிரூபன் வாழ்த்துக்கள்.... இன்னும் பல நூறு பதிவுகள் காண வாழ்த்துக்கள்.. மனதார வாழ்த்துகிறேன்..வாழ்த்துக்கள் நிரூபன் வாழ்த்துக்கள்.... இன்னும் பல நூறு பதிவுகள் காண வாழ்த்துக்கள்.. மனதார வாழ்த்துகிறேன்..

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

//ஒன்னும் தெரியாத ஐடியாமணி / ஓட்டவடை நாராயணன்,//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அவரா இவர்:)).. கொஞ்சக்காலமா அவரைக் காணவில்லையே.. நல்லது அப்படியே காணாமல் போயிடட்டும் என்றெல்லோ மனதில நேர்த்தி வச்சிருந்தேன்...:)) ஏனெனில் அவரில எனக்கு நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை:)))))..

ஆனா ///ஒன்னும் தெரியாத ஐடியாமணி// இவரில நிறையவே நல்ல அபிப்பிராயம் இருக்கு:)).. அதெப்படி இருவரும் ஒருவராக முடியும்?:))))....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).

நிரூபன்.. இங்கின நானும் நீங்களும் மட்டும்தானே கதைக்கிறம்:)), இருப்பினும் எப்பவும் சேஃப்டியா இருப்பது நல்லதெல்லோ... அதனால படிச்சதும் கிழிச்சு.. எரிச்சிடுங்க:))))):)))))).. ஹையோ முருங்ஸ்ஸ் வெயார் ஆ யூஊஊஊஉ?:))) வந்திட்டேன் உச்சிக்கொப்புக்கு:)) .. எங்கிட்டயேவா... நம்மள ஆரும் ஒண்ணும் பண்ண முடியாது முருங்ஸ்ஸ் இருக்கும்வரை கவலை இல்லை:)))

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

//வாழ்த்துக்கள் என்று ஒற்றை வரியில் சொல்லாது, என் படைப்புக்களைப் பற்றிய குறைகளை, விமர்சனங்களை, என்னிடம் நீங்க எவ்வாறான படைப்புக்களை எதிர்பார்க்கிறீங்க என்று சொன்னீங்க என்றால் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்.///

உங்கட படைப்புக்கள் அனைத்தும் நன்றாக இருக்கு நிரூபன், முக்கியமாக உங்கள் தமிழை அதிகம் ரசிக்கிறேன்... தெரியாத தமிழ் சொற்களை எல்லாம் தேடித்தேடிப் போடுறீங்க...

இருப்பினும் என்னைமாதிரி:)) சுவீட் 16 இல இருக்கிற, முறைக்கப்பிடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) ரொம்ப ஷையான ஆட்கள் வந்து போகக்கூடியவாறு.. சில சொற்கள், படங்களை தவிர்த்தால் நல்லது என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்:))))... கேட்டபடியால சொன்னேன், இல்லையெனில் சொல்லியிருக்க மாட்டேன்..

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

//மீண்டும் இங்கே அன்புச் சொந்தங்கள் யாரையாச்சும் தவற விட்டிருந்தா மன்னிச்சுக் கொள்ளுங்கள்! //

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்... கோட் சூட் போட்டாக்களை மட்டும் எடுத்துக்காட்டி விட்டு, புராதன உடைக்கு மருவாதை:)) கொடுக்காமல்... உடைக்காக மட்டுமே ”காட்டான் அண்ணனை”த் தவற விட்டு:)))).. பிறகு மன்னிச்சுக் கொள்ளுங்கோ என, மன்னிப்பாம் மன்னிப்பு... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்...

அவரின் பெயரையும் இணைத்திருக்கவெல்லோ வேணும்... உஸ்ஸ்ஸ் கொழுத்திப் போட்டாச்சூஊஊஊஊஊ:)).. இனிக் கட்டிலுக்குக்கீழ பதிங்கிட வேண்டியதுதான்:)).

ஊசிக்குறிப்பு:
இன்று நான் கண்ணாடி இல்லாமல்:)) வந்து நிரூபனின் பதிவு படித்தமையால்.. அங்கின இங்கின தவறுகள் இருக்கலாம் மன்னிச்சிடுங்க:))( நான் சொன்னது “எழுத்துப்பிழைக்கு” மட்டும்தேன்..:))) எங்கிட்டயேவா....:)) பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ்:)).

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

//இவ் வேளையில் பலருக்கு என் மீது கடுப்பு இருக்கலாம், கோபம் இருக்கலாம், ஆரம்பத்திலிருந்து இந்த வருட ஆகஸ்ட் மாதம் வரை அதிக பின்னூட்டங்களை எழுதிய நிரூபன் தற்போது பின்னூட்டங்களை எழுதுவதில்லை என்று கோபம் இருக்கலாம். ///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதென்னது கோபம் “இருக்கலாம்” என சந்தேகத்தோடு எழுதுறீங்க... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

இருக்கலாம் இல்லை, இருக்கு... இருக்கு.. இருக்கு.... ஆனாலும் “இதுவும் கடந்து போகும்” என மனதைத் தேற்றிக்கொண்டிருக்கினம் எல்லோரும்:))))..

உஸ்ஸ்ஸ் புகை வந்தது இப்போ நெருப்பாகிற மாதிரி இருக்கு.. இனியும் இங்கின நிண்டால் ஆபத்து மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

/மீண்டும் இங்கே அன்புச் சொந்தங்கள் யாரையாச்சும் தவற விட்டிருந்தா மன்னிச்சுக் கொள்ளுங்கள்! //

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்... கோட் சூட் போட்டாக்களை மட்டும் எடுத்துக்காட்டி விட்டு, புராதன உடைக்கு மருவாதை:)) கொடுக்காமல்... உடைக்காக மட்டுமே ”காட்டான் அண்ணனை”த் தவற விட்டு:)))).. பிறகு மன்னிச்சுக் கொள்ளுங்கோ என, மன்னிப்பாம் மன்னிப்பு... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்...

அவரின் பெயரையும் இணைத்திருக்கவெல்லோ வேணும்... உஸ்ஸ்ஸ் கொழுத்திப் போட்டாச்சூஊஊஊஊஊ:)).. இனிக் கட்டிலுக்குக்கீழ பதிங்கிட வேண்டியதுதான்:)).
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நல்லாத் தான் கொழுத்திப் போட்டிருக்கிறீங்க.
காட்டான் அண்ணரின் பெயர் ஐடியாமணியின் பெயருக்குப் பக்கத்தில இருக்கே.
அவ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@NAAI-NAKKS
Vazhthukkal...
Niru...thambi...

Nanri...en peraium
serthathukku....

Nan panni-n comment-i
vazhi mozhikiren....//

நன்றி அண்ணா.

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

ஐ... நான் தான் 50 தூஊஊஊஊஊஊஊ:)))). கர்ர்ர்ர்ர்ர்ர் நான் பின்னூட்டத்தைச் சொன்னேன்.. 50 ஆவது பின்னூட்டம் போட்டமைக்காக எனக்கு ஒரு இலவச சினிமா ரிக்கெட் பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))).

நிரூபன் said...
Best Blogger Tips

@பி.அமல்ராஜ்
ஒருவருடத்தில் பெரும் சாதனைதான். நான் எப்பொழுதும் நிரூபனை ஒரு தேடல் நிறைந்த, ஆளுமை மிக்க, தெளிவான இளைஞனாகவே பார்த்திருக்கிறேன். எனக்கும் தனிப்பட்ட ரீதியில் வலையுலகில் பல உதவிகளை செய்துகொடுத்தவரும் இவர்தான். உங்கள் எழுத்தாணி இன்னும் இன்னும் ஸ்ட்ரோங் ஆக இருக்க எனது வாழ்த்துக்கள். இன்னும் பல ஆண்டுகள் டாப் பதிவராக இருக்க எனது வாழ்த்துக்கள்.//

அவ்வ்வ்வ்

சும்மா சாதனை என்று சொல்லி என்னை பப்பாவில ஏத்த வேணாம் பொஸ்.
அப்புறமா இதை எல்லாம் கின்னஸில போடுவாங்களா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அண்ணே நான் சும்ம கிண்டலடிச்சிருக்கேன்.
மன்னிக்கவும்.

அப்புறமா தங்கள் வாழ்த்துக்களிற்கு நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@பி.அமல்ராஜ்

நிரூபணிற்கு ஒரே ஒரு கருத்து இருக்கிறது: சில விடயங்களை சூட்சுமமாக சொல்லும் விதத்தை கொஞ்சம் கையில் எடுங்களேன். எழுத்துச் சுதந்திரம் என்பதை அறியாத அநேகர் உங்கள் எழுத்துக்களை பின் தொடர்கிறார்கள். அதற்காகவே சொன்னேன்.
//

அண்ணே, பூடகமா எழுதினால் எல்லோராலும் இலகுவில் புரிந்து கொள்ள முடியலை என்று விளக்கம் கேட்கிறாங்க. என்ன பண்ணலாம் என்று யோசிக்கிறேன்.
நன்றி.

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

//
நிரூபன் said...
.
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நல்லாத் தான் கொழுத்திப் போட்டிருக்கிறீங்க.
காட்டான் அண்ணரின் பெயர் ஐடியாமணியின் பெயருக்குப் பக்கத்தில இருக்கே.
அவ்வ்வ்வ்வ்வ்வ்//


ஹா...ஹா..ஹா.... எங்கிட்டயேவா.. எப்பூடிக் கல்லெறிஞ்சால் மாங்காய் விழுமென எனக்குத் தெரியுமே... ஒளிச்சிருந்த நிரூபனை பின்னூட்டம் போட வச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் எங்கிட்டயேவா அவ்வ்வ்வ்வ்:))..

இருந்தாலும் உந்தப் பயம் எப்பவும் இருக்கோணும் ஓக்கை:)).. ஹையோ முறைக்காதீங்க நிரூபன்..மீ எஸ்ஸ்ஸ்:))).

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

மச்சி நிரூ, எனக்கும் இப்படி ஒரு பதிவு போட்டு, எல்லோருக்கும் நன்றி சொல்லணும்னு அசையா இருக்கு! பட், எனக்கு எந்த ப்ளாக்க, எப்ப ஆரம்பிச்சேன்னு மறந்து போய்ச்சு! ஒரு ப்ளாக் ரெண்டு ப்ளாக்கா இருந்தால் பரவாயில்லை! ஓராயிரம் ப்ளாக் ஆரம்பிச்சிருக்கேன்! ( வடிவேலு ஸ்டைலில் படுக்க....ஸாரி படிக்கவும்! )

இதுல எங்க போயி, அனிவர்சரி கொண்டாடுறது? எங்க நன்றி சொல்லுறது? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!
//


மச்சி, நீதானே நமக்கெல்லாம் சீனியரு!

பரவாயில்லை எல்லா வலைகளையும் ஒன்றிணைத்து உனக்கு நீயே விருது கொடுத்து, பதிவுலகில் நான் அப்படீன்னு ஒரு பதிவு போடு!
சும்மா பிச்சுக்கிட்டு ஓடும்!

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்

வணக்கம் நிரூபன் பதிவுலகின் ஒரு வருட பூர்த்திக்கு வாழ்த்துக்கள்..!!

இந்த கோமணகாரனையும் குறிப்பிட்டதுக்கு நன்றி..!
//

நன்றி மாமோய்!
நக்கலுக்கு குறைச்சலில்லை!
என்ன கோவணக்காரனோ;-)))

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்

வணக்கம் நிரூபன் பதிவுலகின் ஒரு வருட பூர்த்திக்கு வாழ்த்துக்கள்..!!

இந்த கோமணகாரனையும் குறிப்பிட்டதுக்கு நன்றி..!
//

நன்றி மாமோய்!
நக்கலுக்கு குறைச்சலில்லை!
என்ன கோவணக்காரனோ;-)))

NAN RAAVANAN said...
Best Blogger Tips

sapaaa!!! brother....1 yr endu namba mudiyala....!!!! valthukal bro!!!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜீ...

ஒரு வருடத்துக்குள் உங்கள் வளர்ச்சி பாரியது!
மேன்மேலும் எழுத வாழ்த்துக்கள்!
நிறைய புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள், பலரிடம் கொண்டு சேர்த்திருக்கிறீர்கள் -இதுவும் பெரிய விஷயம்!
வாழ்த்துக்கள் பாஸ்!
//

அப்படீன்னா என் வீட்டு கூரையைத் தொட்டிட்டேனா பாஸ்..
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

உங்கள் அன்பான கருத்துக்களிற்கு நன்றி ஜீ.

நிரூபன் said...
Best Blogger Tips

@A.R.ராஜகோபாலன்
வரலாறு
வளர்ந்த
விதத்தை
வர்ணித்த
விதம்
வளமை சகோ
வாழ்த்துக்கள்//

நன்றி அண்ணா.

நிரூபன் said...
Best Blogger Tips

@A.R.ராஜகோபாலன்
என்னைப் பற்றி அதிகம் சொல்ல இல்லை என்றே கூறலாம்'''

அதற்குத் தான் உங்களின்
எழில் எழுத்தும்,
எங்களின் கருத்தும் இருக்கே

ஒரு வருடத்தில் இத்தனை சாதனைகளா நம்ப முடியவில்லை சகோ
பிரமித்தேன். //

அண்ணே, இப்படி ஆச்சரியப்பட்டுச் சொல்லி, ஏதோ கின்னஸில எழுதி இருக்கிறமாதிரிச் சொல்லி என்னை இரவு முழுக்க தூங்காம பண்ணிடூவீங்க போல இருக்கே-)))

நிரூ! பீ, கேர் புல்ல்ல்ல்ல்

ஓவர் பில்டப்பு உடம்பிற்கு ஆகாதாம்.
அவ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@மகேந்திரன்
தொடர்ந்து பின்னூட்டம் இட முடியவில்லை என்றாலும்
தாமதமாக வந்தாலும் உங்கள் பதிவுகளை படிக்க மட்டும் நான்
தவறியதில்லை.

தொடருங்கள்
தொடர்கிறேன்.
வாழ்த்துக்களுடன்
வணங்குகிறேன்.

அன்பன்
மகேந்திரன்.//

அண்ணே, உங்கள் அன்பு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.
ரொம்ப நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி பிரகாஷ்

வாழ்த்துக்கள் மாப்ளே,

சிறந்த பதிவுகளை எழுதி மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் நிரு.....
//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@athira
என்னாது... நிரூபனின் தளத்துக்கு இப்ப்போதான் ஒரு வருட பூர்த்தியோ? அவ்வ்வ்வ்வ்வ்:)) ஏதோ நீண்ட காலம் பதிவெழுதும் ஒரு பதிவர் என்றெல்லோ நினைச்சுக்கொண்டிருந்தேன்.. அப்போ இதிலும் எனக்குத் தம்பிதான்.. ம்ஹூம்.. எங்கிட்டயேவா:))).

சரி சரி 19 தானே ஒரு வருட பூர்த்தி... எதுக்கு குறைமாதக்குழந்தையாக்கிட்டீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))..

சரி உதெல்லாம் போகட்டும்....//

ஹே...ஹே..
ஆமா அக்கா. 2011 தையில் தானே எழுத வந்தேன்.
அப்புறமா என்னது? குறை மாத கொழந்தையோ! அவ்

இன்னும் மூனு நாள் இருக்காம்.

இம்மாம் பெரிய வாழ்த்து சொல்லியிருக்கிறீங்க.
ரொம்ப நன்றி அக்கா.

Angel said...
Best Blogger Tips

ஒரு வருஷத்தில் எத்தனை பிரமிக்க வைக்கும் /வைத்த பதிவுகள்
தொடர்ந்து கலக்குங்க பட்டைய கிளப்புங்க .
வாழ்த்துக்கள் நிரூபன்

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

//ஒன்னும் தெரியாத ஐடியாமணி / ஓட்டவடை நாராயணன்,//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அவரா இவர்:)).. கொஞ்சக்காலமா அவரைக் காணவில்லையே.. நல்லது அப்படியே காணாமல் போயிடட்டும் என்றெல்லோ மனதில நேர்த்தி வச்சிருந்தேன்...:)) ஏனெனில் அவரில எனக்கு நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை:)))))..
//

இவரிடம் பல வேடங்கள் இருக்கிறது,
ஓட்டவடை நாராயணன்,
பவுடர் ஸ்டார் ஐடியாமணி, அப்புறமா பிரெஞ்சுக்காரன் என்றோர் புகைப்பட ப்ளாக்கும் வைத்து பிரெஞ்சு புகைப்படங்களை போட்டு கலர் காட்டுறார்.

ஓட்டவடை சாதுவான ஆளா இருந்தாரு! ஆனால் ஐடியா மணி பயங்கர டெரரா இருக்காரு!

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

//ஒன்னும் தெரியாத ஐடியாமணி / ஓட்டவடை நாராயணன்,//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அவரா இவர்:)).. கொஞ்சக்காலமா அவரைக் காணவில்லையே.. நல்லது அப்படியே காணாமல் போயிடட்டும் என்றெல்லோ மனதில நேர்த்தி வச்சிருந்தேன்...:)) ஏனெனில் அவரில எனக்கு நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை:)))))..
//

இவரிடம் பல வேடங்கள் இருக்கிறது,
ஓட்டவடை நாராயணன்,
பவுடர் ஸ்டார் ஐடியாமணி, அப்புறமா பிரெஞ்சுக்காரன் என்றோர் புகைப்பட ப்ளாக்கும் வைத்து பிரெஞ்சு புகைப்படங்களை போட்டு கலர் காட்டுறார்.

ஓட்டவடை சாதுவான ஆளா இருந்தாரு! ஆனால் ஐடியா மணி பயங்கர டெரரா இருக்காரு!

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

ஆனா ///ஒன்னும் தெரியாத ஐடியாமணி// இவரில நிறையவே நல்ல அபிப்பிராயம் இருக்கு:)).. அதெப்படி இருவரும் ஒருவராக முடியும்?:))))....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).
//

அவ்வ்...
அவரு தான் இவரு! இவரு தான் அவரு அக்கா.

நிரூபன் said...
Best Blogger Tips

@angelin
ஒரு வருஷத்தில் எத்தனை பிரமிக்க வைக்கும் /வைத்த பதிவுகள்
தொடர்ந்து கலக்குங்க பட்டைய கிளப்புங்க .
வாழ்த்துக்கள் நிரூபன்//

ஐயகோ ஏஞ்சலின் அக்கா,
இங்கே மகா தப்பு நடந்து போச்சு,
நேத்தைக்கு பொங்கல் விழா கவியரங்கினை உங்களை நடுவராக வைத்துத் தான் நடாத்தியிருந்தேன்.
http://www.thamilnattu.com/2012/01/blog-post_15.html

இன்னைக்கு உங்க பெயரை லிஸ்ட்டில போட மறந்திட்டேன்.
இப்போ உங்களைக் கண்டதும் தான் நினைவிற்கு வந்திச்சு.
மன்னிக்கவும்.
இப்போ லிஸ்ட்டில சேர்த்திட்டேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@athira
நிரூபன்.. இங்கின நானும் நீங்களும் மட்டும்தானே கதைக்கிறம்:)), இருப்பினும் எப்பவும் சேஃப்டியா இருப்பது நல்லதெல்லோ... அதனால படிச்சதும் கிழிச்சு.. எரிச்சிடுங்க:))))):)))))).. ஹையோ முருங்ஸ்ஸ் வெயார் ஆ யூஊஊஊஉ?:))) வந்திட்டேன் உச்சிக்கொப்புக்கு:)) .. எங்கிட்டயேவா... நம்மள ஆரும் ஒண்ணும் பண்ண முடியாது முருங்ஸ்ஸ் இருக்கும்வரை கவலை இல்லை:)))//

அக்கா, ஐடியாமணி பிரான்ஸில இருந்து பறந்து வந்திடுவாரு.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Angel said...
Best Blogger Tips

ஆஹா இப்பதான் பார்க்கிறேன் .சண்டேஸ் வலைப்பக்கம் வருவது குறைவு .

Angel said...
Best Blogger Tips

நிரூபன் நல்லவேளை நம்ம பூசார் பார்க்கலை

K said...
Best Blogger Tips

@athira

ஆனா ///ஒன்னும் தெரியாத ஐடியாமணி// இவரில நிறையவே நல்ல அபிப்பிராயம் இருக்கு:)).. அதெப்படி இருவரும் ஒருவராக முடியும்?:))))....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).://////

என்னது ஐடியாமணி மேல நல்ல அபிப்பிராயம் இருக்கா? இப்படிச் சொன்ன மொத ஆளும் நீங்கதான்! கடைசி ஆளும் நீங்கதான்! ஆதிராவுக்கு நம்மளப் பத்தி தெரியல! நிரூ, கொஞ்சம் எடுத்துச் சொல்லு மச்சி!
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

Angel said...
Best Blogger Tips

athira
நிரூபன்.. இங்கின நானும் நீங்களும் மட்டும்தானே கதைக்கிறம்:)),//

meeyaav ....me tooo

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

என்னுடை பெயர் உங்களுக்கு எதிரா விமர்சனம் எழுதுனவங்க பட்டியலில் வரவேண்டும்:)

K said...
Best Blogger Tips

@நிரூபன்

மச்சி, நீதானே நமக்கெல்லாம் சீனியரு!

பரவாயில்லை எல்லா வலைகளையும் ஒன்றிணைத்து உனக்கு நீயே விருது கொடுத்து, பதிவுலகில் நான் அப்படீன்னு ஒரு பதிவு போடு!
சும்மா பிச்சுக்கிட்டு ஓடும்!//////

யோவ், யாருக்கோ கடிக்கிறமாதிரி இருக்கு!

Angel said...
Best Blogger Tips

ஓட்டவடை நாராயணன்,//
இப்பதான் நினைவு வருது ஒருமுறை இவர் ப்ரோபைல என் பொண்ணு பார்த்து ரொம்ப கவலைபட்டா ""ஏன் அம்மா இந்த தாத்தா இவ்ளோ வீக்கா poorly ஆக இருக்கார்னு

K said...
Best Blogger Tips

@நிரூபன்

இவரிடம் பல வேடங்கள் இருக்கிறது,
ஓட்டவடை நாராயணன்,
பவுடர் ஸ்டார் ஐடியாமணி, அப்புறமா பிரெஞ்சுக்காரன் என்றோர் புகைப்பட ப்ளாக்கும் வைத்து பிரெஞ்சு புகைப்படங்களை போட்டு கலர் காட்டுறார்.

ஓட்டவடை சாதுவான ஆளா இருந்தாரு! ஆனால் ஐடியா மணி பயங்கர டெரரா இருக்காரு!///////

யோவ், எனக்கு “ புரட்சிக்காரன்” அப்டீன்னும் ஒரு அவதாரம் இருப்பதாக ஊருல பேசிக்கறாய்ங்க! அத சொல்ல மறந்துட்டியே!

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

உங்கட படைப்புக்கள் அனைத்தும் நன்றாக இருக்கு நிரூபன், முக்கியமாக உங்கள் தமிழை அதிகம் ரசிக்கிறேன்... தெரியாத தமிழ் சொற்களை எல்லாம் தேடித்தேடிப் போடுறீங்க...

இருப்பினும் என்னைமாதிரி:)) சுவீட் 16 இல இருக்கிற, முறைக்கப்பிடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) ரொம்ப ஷையான ஆட்கள் வந்து போகக்கூடியவாறு.. சில சொற்கள், படங்களை தவிர்த்தால் நல்லது என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்:))))... கேட்டபடியால சொன்னேன், இல்லையெனில் சொல்லியிருக்க மாட்டேன்..
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
கண்டிப்பா கவனம் செலுத்துறேன் அக்கா.

K said...
Best Blogger Tips

@angelin

ஓட்டவடை நாராயணன்,//
இப்பதான் நினைவு வருது ஒருமுறை இவர் ப்ரோபைல என் பொண்ணு பார்த்து ரொம்ப கவலைபட்டா ""ஏன் அம்மா இந்த தாத்தா இவ்ளோ வீக்கா poorly ஆக இருக்கார்னு ./////

ஹா ஹா ஹா அதான், இப்போ ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்டு, ரொம்ப யங்கா, வலையுலகுல திரிஞ்சுக்கிட்டு இருக்கேன் ஏஞ்சலின்!

நிரூபன் said...
Best Blogger Tips

@athira
ஊசிக்குறிப்பு:
இன்று நான் கண்ணாடி இல்லாமல்:)) வந்து நிரூபனின் பதிவு படித்தமையால்.. அங்கின இங்கின தவறுகள் இருக்கலாம் மன்னிச்சிடுங்க:))( நான் சொன்னது “எழுத்துப்பிழைக்கு” மட்டும்தேன்..:))) எங்கிட்டயேவா....:)) பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ்:)).
//

அப்போ நீங்க அம்மம்மா ஆகிட்டீங்களா/
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதென்னது கோபம் “இருக்கலாம்” என சந்தேகத்தோடு எழுதுறீங்க... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

இருக்கலாம் இல்லை, இருக்கு... இருக்கு.. இருக்கு.... ஆனாலும் “இதுவும் கடந்து போகும்” என மனதைத் தேற்றிக்கொண்டிருக்கினம் எல்லோரும்:))))..

உஸ்ஸ்ஸ் புகை வந்தது இப்போ நெருப்பாகிற மாதிரி இருக்கு.. இனியும் இங்கின நிண்டால் ஆபத்து மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இது தான் வெளிக் குத்து என்பதோ!
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

ஐ... நான் தான் 50 தூஊஊஊஊஊஊஊ:)))). கர்ர்ர்ர்ர்ர்ர் நான் பின்னூட்டத்தைச் சொன்னேன்.. 50 ஆவது பின்னூட்டம் போட்டமைக்காக எனக்கு ஒரு இலவச சினிமா ரிக்கெட் பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))).
//

அக்கா நண்பன் படம், வேட்டை படம் டிக்கட் எல்லாம் கொடுக்க முடியாது,

மேதை என்கிற பெயரில ராமராஜன் நடித்திருக்கும் படம் சும்மா பிச்சுக்கிட்டு ஓடுதாம்.

ஒன்றல்ல, இரண்டல்லா ஆறு ரிக்கட் இலவசமா கொடுக்கிறேன்.
படம் பார்க்க நீங்க ரெடியோ?
ட்ரெயிலரை இந்த இணைப்பில் பார்த்து முடிவு பண்ணிக் கொள்ளுங்க.

http://www.youtube.com/watch?v=vYVQKWL9B38&feature=related

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

நிரூ!ஊடக சுதந்திர பதிவில் நீங்கள் யாருக்கோ சூடு போட்ட மாதிரி தெரிந்ததே!

என்னைப் போன்றவர்கள் வடகிழக்கில் வாழும் தமிழர்களை மொத்த தமிழ் சகோதரர்களாகத்தான் பார்க்கிறோம்.தூரப்பார்வை இல்லாமல் தாம் செய்வது என்னவென்று அறியாமல் புல்லுருவிகளாய் ஒரு சிலர் இருந்தால் அவர்களைப் பொதுவில் அடையாளம் காட்டுவது அவசியம்.ஒரு வேளை மாற்றுக்கருத்துக்கள் உள்ளவர்களாக இருந்தாலும் அவர்கள் தரப்பு வாதம் சரியா?தவறா என எடை பார்க்கவும் உதவும்.

இணைய கருத்துக்கு தடை போடலாம். உணர்வை எங்கே தடை செய்ய!

நிரூபன் said...
Best Blogger Tips

@athira
ஹா...ஹா..ஹா.... எங்கிட்டயேவா.. எப்பூடிக் கல்லெறிஞ்சால் மாங்காய் விழுமென எனக்குத் தெரியுமே... ஒளிச்சிருந்த நிரூபனை பின்னூட்டம் போட வச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் எங்கிட்டயேவா அவ்வ்வ்வ்வ்:))..

இருந்தாலும் உந்தப் பயம் எப்பவும் இருக்கோணும் ஓக்கை:)).. ஹையோ முறைக்காதீங்க நிரூபன்..மீ எஸ்ஸ்ஸ்:))).
//

ஆகா..இதுக்குப் பின்னாடி இவ்ளோ விசயங்கள் இருக்கா.
நம்மளை வைச்சும் ஒரு காமெடி படம் ஓட்டலாம் என்று யோசிக்கிறீங்க இல்லே;-))))

நிரூபன் said...
Best Blogger Tips

@NAN RAAVANAN

sapaaa!!! brother....1 yr endu namba mudiyala....!!!! valthukal bro!!!
//

நன்றி நண்பா.

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

//angelin said...

ஓட்டவடை நாராயணன்,//
இப்பதான் நினைவு வருது ஒருமுறை இவர் ப்ரோபைல என் பொண்ணு பார்த்து ரொம்ப கவலைபட்டா ""ஏன் அம்மா இந்த தாத்தா இவ்ளோ வீக்கா poorly ஆக இருக்கார்//

ஹா...ஹா...ஹா.. அஞ்சூஊஊஊ அதே அதே....:)))..

இப்போ சேர்ஜரி செய்திட்டாராம்.. ஆனாலும் இன்னும் “திருந்த இடமுண்டு”... ஹையோ.... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:).

K said...
Best Blogger Tips

@athira

ஓட்டவடை நாராயணன்,//
இப்பதான் நினைவு வருது ஒருமுறை இவர் ப்ரோபைல என் பொண்ணு பார்த்து ரொம்ப கவலைபட்டா ""ஏன் அம்மா இந்த தாத்தா இவ்ளோ வீக்கா poorly ஆக இருக்கார்//

ஹா...ஹா...ஹா.. அஞ்சூஊஊஊ அதே அதே....:)))..

இப்போ சேர்ஜரி செய்திட்டாராம்.. ஆனாலும் இன்னும் “திருந்த இடமுண்டு”... ஹையோ.... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:). /////

என்னது இன்னும் திருந்தணுமா? ஓகே! நீ சொல்லுங்க! நான் திருந்திக்கறேன்!

ஆனா,

“ டபுள் மீனிங் எழுதாதே”
“ கொஞ்சம் அப்படி இப்படியான படம் போடாதே”
“ யார்கூடவும் சண்டைக்குப் போகாதே”

இதெல்லாம் சொல்லக் கூடாது! இவற்றைத் தவிர்த்து வேற ஏதாச்சும் சொல்லுங்க! துருந்திடுறேன்!
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :-)

நிரூபன் said...
Best Blogger Tips

@angelin

ஆஹா இப்பதான் பார்க்கிறேன் .சண்டேஸ் வலைப்பக்கம் வருவது குறைவு .
//

நன்றி அக்கா.

நிரூபன் said...
Best Blogger Tips

@angelin

நிரூபன் நல்லவேளை நம்ம பூசார் பார்க்கலை
//

ஆகா..
பூசார் காலையிலே பார்த்திட்டாங்க அக்கா.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
athira

ஆனா ///ஒன்னும் தெரியாத ஐடியாமணி// இவரில நிறையவே நல்ல அபிப்பிராயம் இருக்கு:)).. அதெப்படி இருவரும் ஒருவராக முடியும்?:))))....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).://////

என்னது ஐடியாமணி மேல நல்ல அபிப்பிராயம் இருக்கா? இப்படிச் சொன்ன மொத ஆளும் நீங்கதான்! கடைசி ஆளும் நீங்கதான்! ஆதிராவுக்கு நம்மளப் பத்தி தெரியல! நிரூ, கொஞ்சம் எடுத்துச் சொல்லு மச்சி!
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இவன் ஒரு மாபாவி!
ஒரு கேடு கெட்ட பையன்! இவன் கூட கூட்டு வைச்சுக்க வேணாம் என்று முன்னாடி ஊரில பேசிக்கிட்டாங்க
91ரேப் கேஸ் இவன் மேல இருக்காம்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

பதிவுலகில் சாதனைகள் பல படைக்கப் போகும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் நிரூ.உங்கள் நட்சத்திர வாரமும் என் வலைச்சர வாரமும் ஒன்றாகி விடவே, பல நட்சத்திரப் பதிவுகளைத் தவற விட் வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்பட்டது!
வாழ்த்துக்கள்.

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

//அக்கா நண்பன் படம், வேட்டை படம் டிக்கட் எல்லாம் கொடுக்க முடியாது,// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * 1001:))


///மேதை என்கிற பெயரில ராமராஜன் நடித்திருக்கும் படம் சும்மா பிச்சுக்கிட்டு ஓடுதாம்.

ஒன்றல்ல, இரண்டல்லா ஆறு ரிக்கட் இலவசமா கொடுக்கிறேன்.
படம் பார்க்க நீங்க ரெடியோ?
ட்ரெயிலரை இந்த இணைப்பில் பார்த்து முடிவு பண்ணிக் கொள்ளுங்க.

http://www.youtube.com/watch?v=vYVQKWL9B38&feature=related////

அவ்வ்வ்வ்வ்வ் உண்மையிலயே புதுப்படமோ? எனக்கு ராமரஜனின் பழைய படங்கள்.. குறிப்பா கனகா, ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன்... திரும்ப திரும்ப பார்க்கப் பிடிக்கும்..

இது எப்படியோ? ஆனாலும் வாணாம் ரிக்கெட் வாணாம்...:)))). நான் ஓசில வீட்டில இருந்தே பார்க்கிறேன்.. பூஸ்ஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்:)).

நிரூபன் said...
Best Blogger Tips

@angelin
athira
நிரூபன்.. இங்கின நானும் நீங்களும் மட்டும்தானே கதைக்கிறம்:)),//

meeyaav ....me tooo//

அவ்வ்வ்வ்வ்வ்
எதுக்கும் ஒருவாட்டி உங்க கையை கிள்ளிப் பார்த்துக்குங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்

என்னுடை பெயர் உங்களுக்கு எதிரா விமர்சனம் எழுதுனவங்க பட்டியலில் வரவேண்டும்:)
//

அவ்வ்வ்வ்வ்வ்

அண்ணே அந்த விமர்சனத்தில நீங்க லைட்டா கடிச்சிருந்தீங்க. ஸோ....கவலை இல்லை.

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

// நிரூபன் said...
@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
athira

ஆனா ///ஒன்னும் தெரியாத ஐடியாமணி// இவரில நிறையவே நல்ல அபிப்பிராயம் இருக்கு:)).. அதெப்படி இருவரும் ஒருவராக முடியும்?:))))....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).://////

என்னது ஐடியாமணி மேல நல்ல அபிப்பிராயம் இருக்கா? இப்படிச் சொன்ன மொத ஆளும் நீங்கதான்! கடைசி ஆளும் நீங்கதான்! ஆதிராவுக்கு நம்மளப் பத்தி தெரியல! நிரூ, கொஞ்சம் எடுத்துச் சொல்லு மச்சி!
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இவன் ஒரு மாபாவி!
ஒரு கேடு கெட்ட பையன்! இவன் கூட கூட்டு வைச்சுக்க வேணாம் என்று முன்னாடி ஊரில பேசிக்கிட்டாங்க
91ரேப் கேஸ் இவன் மேல இருக்காம்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//


ஹா..ஹா...ஹா.. அதனாலதான் இந்தச் “சின்ன” வயசிலேயே.. வயதான நாராயணன் தாத்தா... தோற்றம் பெற்றிட்டார் போல:))))

K said...
Best Blogger Tips

@நிரூபன்

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இவன் ஒரு மாபாவி!
ஒரு கேடு கெட்ட பையன்! இவன் கூட கூட்டு வைச்சுக்க வேணாம் என்று முன்னாடி ஊரில பேசிக்கிட்டாங்க
91ரேப் கேஸ் இவன் மேல இருக்காம்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //////

யோவ், மூஞ்சிக்கு முன்னாடி புகழாத! அது எனக்குப் பிடிக்காது! ஹி ஹி ஹி !!

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

haiyoo mee 100th...

Angel said...
Best Blogger Tips

athira said...
haiyoo mee 100th...//

Garrrrrrrrrrrrrrrrrrr

நிரூபன் said...
Best Blogger Tips

@angelin
ஓட்டவடை நாராயணன்,//
இப்பதான் நினைவு வருது ஒருமுறை இவர் ப்ரோபைல என் பொண்ணு பார்த்து ரொம்ப கவலைபட்டா ""ஏன் அம்மா இந்த தாத்தா இவ்ளோ வீக்கா poorly ஆக இருக்கார்னு//

அட்ரா...அட்ரா...அ.ட்ரா..........
என்னா ஒரு டைம்மிங் காமெடி
அவ்வ்வ்
ஓட்டவடைக்கு மாத்தி யோசித்து யோசித்தே மண்டையில இருந்த முடி எல்லாம் உதிர்ந்து விட்டதாம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்

நிரூ!ஊடக சுதந்திர பதிவில் நீங்கள் யாருக்கோ சூடு போட்ட மாதிரி தெரிந்ததே!

என்னைப் போன்றவர்கள் வடகிழக்கில் வாழும் தமிழர்களை மொத்த தமிழ் சகோதரர்களாகத்தான் பார்க்கிறோம்.தூரப்பார்வை இல்லாமல் தாம் செய்வது என்னவென்று அறியாமல் புல்லுருவிகளாய் ஒரு சிலர் இருந்தால் அவர்களைப் பொதுவில் அடையாளம் காட்டுவது அவசியம்.ஒரு வேளை மாற்றுக்கருத்துக்கள் உள்ளவர்களாக இருந்தாலும் அவர்கள் தரப்பு வாதம் சரியா?தவறா என எடை பார்க்கவும் உதவும்.

இணைய கருத்துக்கு தடை போடலாம். உணர்வை எங்கே தடை செய்ய!
//

இணையக் கருத்திற்கு தடை போடலாம் என சில புல்லுருவிகள் சிந்திக்கிறார்கள் அண்ணா.
சிலரைப் பொதுவில் அடையாளம் காட்டுவது கடினமாக இருக்கும் அல்லவா?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
ஆனா,

“ டபுள் மீனிங் எழுதாதே”
“ கொஞ்சம் அப்படி இப்படியான படம் போடாதே”
“ யார்கூடவும் சண்டைக்குப் போகாதே”

இதெல்லாம் சொல்லக் கூடாது! இவற்றைத் தவிர்த்து வேற ஏதாச்சும் சொல்லுங்க! துருந்திடுறேன்!
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :-)//

அதெல்லாம் இந்த ஜென்மத்தில நடந்த மாதிரித் தான்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@சென்னை பித்தன்

பதிவுலகில் சாதனைகள் பல படைக்கப் போகும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் நிரூ.உங்கள் நட்சத்திர வாரமும் என் வலைச்சர வாரமும் ஒன்றாகி விடவே, பல நட்சத்திரப் பதிவுகளைத் தவற விட் வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்பட்டது!
வாழ்த்துக்கள்.
//

என்னய்யா பேசுறீங்க?
என்னது சாதனையா?
எங்கே பண்ணப் போறேன்.
கின்னஸ் புக்கில எனக்கு ஒரு இடம் ஒதுக்குவாங்களா?
எனக்கு இன்னைக்குத் தூக்கமே வராது போல இருக்கே ஐயா.

இன்னோர் நாள் எல்லோரும் இணைந்து கலக்குவோம் ஐயா,

தங்கள் அன்பிற்கு நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@athiraஇது எப்படியோ? ஆனாலும் வாணாம் ரிக்கெட் வாணாம்...:)))). நான் ஓசில வீட்டில இருந்தே பார்க்கிறேன்.. பூஸ்ஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்:)).
//

அவ்வ்வ்வ்வ்வ்
ஓசில பார்த்து உடல் உபாதைகளுக்கு ஆளானால் நான் பொறுப்பல்ல.

Angel said...
Best Blogger Tips

நான் அப்படியும் சொல்லிபாத்தேன் ..இல்லம்மா நான் மீன் ப்ரோபைல் வச்சிருக்கா மாதிரி அந்த அண்ணா (எனக்கில்லை என் மகளுக்கு ) இந்த பிக்சர் போட்டிருக்கார்னு .அவ நம்பவேயில்ல

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

//
angelin said...
நான் அப்படியும் சொல்லிபாத்தேன் ..இல்லம்மா நான் மீன் ப்ரோபைல் வச்சிருக்கா மாதிரி அந்த அண்ணா (எனக்கில்லை என் மகளுக்கு ) இந்த பிக்சர் போட்டிருக்கார்னு .அவ நம்பவேயில்ல//

haa..haa..haa...குழந்தையும் தெய்வமும் ஒன்றெனச் சொல்லுவினமெல்லோ... அதனால அதுதான் உண்மைத்தோற்றம் அஞ்சு, இப்போதையது சேர்ஜரிக்குப் பிந்தியது... சும்மா உல்லுல்லாயி:)))..

ஹையோ நிரூபனின் பதிவால இன்று மேன்மைதங்கிய(எல்லாம் ஒரு மருவாதைதான்:)) ஐ.மணி அவர்களின் நித்திரை போச்சே... நிரூபன் இது உங்களுக்கு தேவையா? அவர் கேட்டாரா, என் பழைய பெயரை எல்லாம் போட்டுக்காட்டென:)) ஹையோ பத்த வச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:))))...

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

ஹா..ஹா...ஹா.. அதனாலதான் இந்தச் “சின்ன” வயசிலேயே.. வயதான நாராயணன் தாத்தா... தோற்றம் பெற்றிட்டார் போல:))))
//

அவ்வ்வ்வ்வ்

எனக்கு இந்த மீனிங் புரியலை.
நான் சின்னப் பையன்.

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

அதுசரி நிரூபன் 100 ஆவதும் நானேதான்... இதுக்கு என்ன பரிசு தரப்போறீங்க? கொஞ்சம் பார்த்து நல்லதாத்தாங்க...

நிறைய இடத்தில இருந்தெல்லாம் புகை வருதே:)).. முக்கியமா ப்ரான்ஸ்சில..:)))

Riyas said...
Best Blogger Tips

நான் ரொம்ப லேட்டா வந்துட்டேன்...

இரண்டாவது வருடத்திலும் உங்கள் எழுத்துப்பனி தொடர வாழ்த்துக்கள் நிரூபன்,,

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
யோவ், மூஞ்சிக்கு முன்னாடி புகழாத! அது எனக்குப் பிடிக்காது! ஹி ஹி ஹி !!
//

இங்க பார்றா....இவரு உலக மகா சாதனை பண்ணிட்டாரு!
இவரைப் புகழ வேணாமாம்!

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

யோவ், மூஞ்சிக்கு முன்னாடி புகழாத! அது எனக்குப் பிடிக்காது! ஹி ஹி ஹி !!
//

மேதை பட டிக்கட் இருக்கு,
வேண்ணா சொல்லுங்க. அனுப்பி வைச்சிடுறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Riyas
நான் ரொம்ப லேட்டா வந்துட்டேன்...

இரண்டாவது வருடத்திலும் உங்கள் எழுத்துப்பனி தொடர வாழ்த்துக்கள் நிரூபன்,,
//

என்னய்யா லேட்டு,
இப்போ தானே கச்சேரி களை கட்டியிருக்கு!
ஆட்டத்தில இறங்க வேண்டியது தானே.
அவ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@angelin

நான் அப்படியும் சொல்லிபாத்தேன் ..இல்லம்மா நான் மீன் ப்ரோபைல் வச்சிருக்கா மாதிரி அந்த அண்ணா (எனக்கில்லை என் மகளுக்கு ) இந்த பிக்சர் போட்டிருக்கார்னு .அவ நம்பவேயில்ல
//

அவரோட நிஜமுகமே அப்படித்தானுங்க இருக்கும்.
நெசமாத் தான் சொல்லுறேனுங்க.
நம்புங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

ஹையோ நிரூபனின் பதிவால இன்று மேன்மைதங்கிய(எல்லாம் ஒரு மருவாதைதான்:)) ஐ.மணி அவர்களின் நித்திரை போச்சே... நிரூபன் இது உங்களுக்கு தேவையா? அவர் கேட்டாரா, என் பழைய பெயரை எல்லாம் போட்டுக்காட்டென:)) ஹையோ பத்த வச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:))))...
//

இரண்டு நண்பர்களுக்குள் சண்டையை மூட்டி விடும் நோக்கிள் களமிறங்கியிருக்கிறீங்களே
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

அதுசரி நிரூபன் 100 ஆவதும் நானேதான்... இதுக்கு என்ன பரிசு தரப்போறீங்க? கொஞ்சம் பார்த்து நல்லதாத்தாங்க...

நிறைய இடத்தில இருந்தெல்லாம் புகை வருதே:)).. முக்கியமா ப்ரான்ஸ்சில..:)))
//

பவுடர் ஸ்டாரின் லத்திகா பட டீவிடீ வாங்கி அனுப்பி வைக்கிறேன்.
பாருங்க.
தமிழகத்தில் 250 நாட்களையும் தாண்டி வெற்றிகரமாக லத்திகா ஓடுகிறதாம்.

Angel said...
Best Blogger Tips

நிரூபன்

அதிராவுக்கு லதிகா பட டிவிடி நானே உங்கசார்பா அனுப்பி வைக்கறேன்

Angel said...
Best Blogger Tips

என்னதிது நிரூபன் ஒரே அலைவரிசை நான் டைப் செய்து புப்ளிஷ் ஆகும்போது பார்த்த நீங்களும் லத்திக்கா படம் எழுதிருக்கீங்க .அதிரா நீங்க கொடுத்து வைச்சவங்க

Angel said...
Best Blogger Tips

இந்த முறை சென்னையில் ஒரு ஸ்டில் ஒரே ஸ்டில்லை பார்த்து அசந்தே போனேன் யாம் பெற்ற இன்பம் பூசாரும் பெற வேண்டும்ம்ம்ம்

K said...
Best Blogger Tips

@athira

haa..haa..haa...குழந்தையும் தெய்வமும் ஒன்றெனச் சொல்லுவினமெல்லோ... அதனால அதுதான் உண்மைத்தோற்றம் அஞ்சு, இப்போதையது சேர்ஜரிக்குப் பிந்தியது... சும்மா உல்லுல்லாயி:)))..

ஹையோ நிரூபனின் பதிவால இன்று மேன்மைதங்கிய(எல்லாம் ஒரு மருவாதைதான்:)) ஐ.மணி அவர்களின் நித்திரை போச்சே... நிரூபன் இது உங்களுக்கு தேவையா? அவர் கேட்டாரா, என் பழைய பெயரை எல்லாம் போட்டுக்காட்டென:)) ஹையோ பத்த வச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:))))...://///

அடப்பாவிகளா, ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணி முகத்தை மாற்றினாலும், பழைய முகத்தைப் பற்றியே பேசிப் பேசி என்னோட ஈமேஜ டாமேஜ் பண்ணுறீங்களே! ஓ! இதுதான் முகத்திரையைக் கிழிக்கிறது என்பதா?

பதிவுலகில் பலபேர் ஐடியாமணியோட முகத்திரையைக் கிழிக்கப் போறதா சொன்னாய்ங்க!

ஆனால் இங்கு இரண்டு பெண்கள், முகத்திரையைக் கிழிச்சு, என்னோட வயசைக் கண்டுபுடிச்சுட்டாங்களே! அவ்வ்வ்வ்வ்வ்வ்!

ஐடியாமணி - இனிமே துள்ளுவே? :-)

Unknown said...
Best Blogger Tips

அன்பு நண்பரே, ஒரு வருடத்திலேயே இவ்வளவு உள்ளங்களைக் கவர்ந்திருக் கிறீர்களே அது எங்களைப்போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

//நிரூபன் said...

@athira

ஹையோ நிரூபனின் பதிவால இன்று மேன்மைதங்கிய(எல்லாம் ஒரு மருவாதைதான்:)) ஐ.மணி அவர்களின் நித்திரை போச்சே... நிரூபன் இது உங்களுக்கு தேவையா? அவர் கேட்டாரா, என் பழைய பெயரை எல்லாம் போட்டுக்காட்டென:)) ஹையோ பத்த வச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:))))...
//

இரண்டு நண்பர்களுக்குள் சண்டையை மூட்டி விடும் நோக்கிள் களமிறங்கியிருக்கிறீங்களே
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

அடடா அவர் , ஐ மீன் ஐ.மணி உங்களுக்கு நண்பரோ? இதை ஏற்கனவே சொல்லியிருக்கப்படாதோ? அவ்வ்வ்வ்வ்வ்:)) நான் ஏதோ நிரூபன் சின்னத்தம்பி எண்டெல்லோ நினைச்சிருந்தேன்...:))))

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

//angelin said...
என்னதிது நிரூபன் ஒரே அலைவரிசை நான் டைப் செய்து புப்ளிஷ் ஆகும்போது பார்த்த நீங்களும் லத்திக்கா படம் எழுதிருக்கீங்க .அதிரா நீங்க கொடுத்து வைச்சவங்//

எங்ஙேஙேஙேஙேஙேஙேஙே?:)).. லத்திகாவோ? அதாரது? கொஞ்சம் அனுப்புங்க பார்ப்போம்...

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

//@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
ஆனா,

“ டபுள் மீனிங் எழுதாதே”
“ கொஞ்சம் அப்படி இப்படியான படம் போடாதே”
“ யார்கூடவும் சண்டைக்குப் போகாதே”

இதெல்லாம் சொல்லக் கூடாது! இவற்றைத் தவிர்த்து வேற ஏதாச்சும் சொல்லுங்க! துருந்திடுறேன்!
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :-)///

சே..சே..சே.. அப்பூடியெல்லாம் சொல்லுவமோ? நாங்க ரொம்ப நல்லவிங்க:)).. மொத்தத்தில பதிவு போடுவதையே நிறுத்திடுங்க என்றெல்லோ சொல்ல வந்தோம்:))))....

ஹையோ... இண்டைக்கு வீடு பூந்து அடிவிழப்போகுதே எனக்கு:))... அஞ்சு... இந்த நேரம் பார்த்து எங்க போயிட்டீங்க.. கையைக் குடுங்க.. நானும் வந்திடுறேன் தேம்ஸ்க்கு:))).. இண்டைக்கு எனக்கென்னமோ ஆகிப்போச்ச்ச்ச்:))).

ஹேமா said...
Best Blogger Tips

சரி நான் 125 ஆவதோ.இனி நான் என்ன சொல்லக் கிடக்கு.இன்னும் இன்னும் எழுத்திலகில் வலம் வரவும் வளரவும் என் அன்பு வாழ்த்துகள் நிரூவுக்கு !

Unknown said...
Best Blogger Tips

வாழ்த்துக்கள்...என்னயும் ஞாபகம் வைத்துக்கொண்டதற்க்கு நன்றிகள்!~

Anonymous said...
Best Blogger Tips

வாழ்த்துக்கள் தலைவரே ;)

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

வாழ்த்துகள், தொடர்ந்து கண்ணீயமான பதிவுகளை தரவும்

Anonymous said...
Best Blogger Tips

குறுகிய காலத்தில் பலர் மனதில் இடம் பிடித்து உள்ளீர்கள். மனமார்ந்த வாழ்த்துகள் நிரூபன்.

ரேவா said...
Best Blogger Tips

மனமார்ந்த வாழ்த்துக்கள் நிரூபன்...இரண்டாவது வருடத்தில் இன்னும் பல நல்ல பயனுள்ள பதிவுகள் கொடுக்க வாழ்த்துக்கள் சகோ ..

சுதா SJ said...
Best Blogger Tips

நிரு வாழ்த்துக்கள் :)
ஹும்.. ஒரு வருடத்துக்குள் இவ்ளோ வளர்ச்சியா??!! இப்படி நீங்கள் மட்டும்தான் என்று நினைக்கிறேன்.
எனக்கு தெரிந்து பதிவெழுத தொடங்கி குறுகிய காலத்துக்குள் தமிழ் மணத்தில் நட்சத்திரம் ஆனவரும் நீங்கள்தான்... அதற்க்கு நீங்கள் தகுதியானவரும் கூட...

நிரு... நான் வலையில் முத்தல் முதல் நட்பு கொண்டது உங்களுடந்தானே..... நான் எழுத வந்த புதிதில் நீங்கள் தந்த அட்வைஸ் இப்பவும் நினைவு இருக்கு.. உங்களுடன் முதல் முதல் கதைத்ததும் நினைவு இருக்கு... (ப்ளாக் நட்பு என்று முதல் முதல் கதைத்ததும் உங்களுடன்தான்). முதல் முதல் நான் உங்களுடன் கதைக்கும் போது சொன்னேன் இல்லையா!!! "என்ன வாய்ஸ் பாஸ் உங்களுக்கு.. சோ ஸ்வீட் வாய்ஸ்" என்று... ஹா ஹா....

அப்புறம் உங்கள் புலம்பெயர் பதிவுகள் மூலம் உங்களுடன் ரெம்ப முரண் பட்டவனும் நான்தான். என்னுடைய காட்டமான விமர்சனத்தை படித்த பின்னும் பொறுமையாக விளக்கம் தருவீங்க..... அதை விட.... மற்றவர்கள் போல் அதை பகையாக மனசில் வைக்காமல் அடுத்த நிமிஷமே மறந்து "துஷி எப்படி இருக்கீங்க??" என்று கேட்டபடி வருவீங்க... ஹும்..... ரியலி நீங்க கிரேட் நிரு.. பதிவர்கள் கற்றுக்கொள்ள உங்களிடம் நிறைய இருக்கு... நானும் உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டு என்னை மாற்றியுள்ளேன்.

பாஸ்.... பதிவே போடாம பதிவெழுத வந்து சில வருடங்கள் ஆனாலே போதும் பல பதிவர்களுக்கு ஒரு இது வந்து விடும்.. புதியவர்களை அரவனைப்பதையோ அவர்கள் பதிவுகளை படிப்பதையோ.. ரெம்ப அவமானமாக நினைப்பார்கள்... அவர்களுக்குள் நீங்கள் மிக பெரிய ஆச்சரியம்தான். எந்த தலைக்கணமும் இன்றி புதியவர்களை பாராட்டுவதும் அவர்களையும் உங்களுக்கு சமமாய் வைத்து நட்பு பாராட்டுவதும்.. இந்த மனசு எல்லோருக்கும் வராது பாஸ்.

பதிவுலகில் நிருபன் ஒரு ஆச்சரியம்தான்.

சுதா SJ said...
Best Blogger Tips

அப்புறம் உங்களை பற்றி ஒரு பிளஸ் மைன்ஸ் சொல்லவா??

ப்ளஸ் - விரோதிகளின் இருந்து நேற்று முளைத்த காளான்கள் (என்னையும் சேர்த்துத்தான் சொல்லுறேன்... அவ்வ) வரை உங்களை பற்றி வைக்கும் விமர்சனத்துக்கும் கேள்விகளுக்கும் பொறுமையாய் பதில் சொல்வது.

மைனஸ்- மேலே சொன்ன பிளஸ் தான் உங்கள் மைனஸும்.

நிரு... பதிவுலகில் நீங்கள் இன்னும் இன்னும் சாதிக்க என்னுடைய வாழ்த்துக்கள் பாஸ்.
ச்சும்மா... கலக்குங்க... எப்பவும் கூட நாங்கள் இருப்போம்.

Unknown said...
Best Blogger Tips

வாழ்த்துக்கள் தல....
இலங்கையின் பதிவுலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் நீங்கள்.
ஏற்ட்படுத்திக்கொண்டிருப்பவர் .
வெகு சீக்கிரம் இலங்கையின் முதல் ஆயிரம் போலோவேர்ஸ் கொண்ட பதிவராக உருவெடுக்க வாழ்த்துக்கள்!!
எந்த பயமுமில்லாமல்,பல செய்திகளை சுட சுட வழங்கி இருந்தீர்கள்.தொடர்ந்தும் ட்ராக் மாறாது உங்கள் எழுத்துகளை தொடர்கிறீர்கள்.
டைரெக்டராக வருபவர் கதாநாயகனாய் உருவெடுப்பது போல நீங்க உங்க ட்ராக்கை மிக சிறப்பாக இன்றுமட்டும் கொண்டு செல்கிறீர்கள்.எங்கள் மக்களை பற்றிய வார்த்தைகள் உங்கள் பதிவுகளில் தான் எப்போதும் பிரதிபலிக்கும்.பலிக்கட்டும்.
எப்போதும் இதே அர்ப்பணிப்பு விடா முயற்சியுடன் தொடர்ந்து எழுதுங்கள்..
உச்சங்கள் பல தொட வாழ்த்துக்கள் சகோ!!

Unknown said...
Best Blogger Tips

அப்புறம் என்னை பற்றி குறிப்பிட்டதற்கு நன்றிகள்..பரவாயில்லை கொஞ்சம் ஆரம்பத்திலேயே தெரிந்துவிட்டேன் :ப
தினசரி பதிவு போட சரக்கு+நேரம் வேண்டும்.நேரம் இல்லியோ இருக்கோ சரக்கு இருக்கு...
எல்லாம் சொந்தப்பதிவுகள் தான்.
பலரை ஊக்கப்படுத்தும் ஒரு ஊக்கியாக செயல்படுறீங்க.அது தான் முக்கியம்.பலருக்கு அந்த பழக்கம் இல்லை.

சசிகுமார் said...
Best Blogger Tips

வாழ்த்துக்கள் மச்சி....

இமா க்றிஸ் said...
Best Blogger Tips

நாற்றின் முதலாம் வருட நிறைவையிட்டு வாழ்த்துக்கள் நிரூபன்.

நாற்று மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்.

Anonymous said...
Best Blogger Tips

சிறந்த பதிவுகளை எழுதி மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் சகோதரம்...

மனமார்ந்த வாழ்த்துகள்...

ம.தி.சுதா said...
Best Blogger Tips

மச்சி ரொம்ப பிந்தீட்டனோ தெரியல..

வெளிப்படையாகவே சொல்கிறேன் உன் மீதும் உன் புளொக் மீதும் நான் அடிக்கடி பொறாமைப்படுவதுண்டு... காரணம் இந்த இலக்கு யாராலும் இலகுவில் எட்ட முடியாதது...

ஏன் எனக் கேட்கிறாயா.. இந்த உச்ச வேகத்தை ஒரு சினிமா பதிவு எழுதுபவரால் மட்டுமே எட்ட முடியும்... இது உன் எழுத்துத் திறமைக்குகிடைத்த பெரும் வெற்றி... அந்த வெற்றி எம் நண்பனுக்குக் கிடைத்தது எனக் கூறுவதில் எமக்கும் பெருமையே..

ம.தி.சுதா said...
Best Blogger Tips

அத்துடன் நீ எனக்குச் செய்த பல உதவிகளை என்றும் என்னால் மறக்க முடியாது... நாம் நேரே சந்திக்கும் போது அது பற்றி பேசலாம்..

ம.தி.சுதா said...
Best Blogger Tips

இந்த வெற்றியில் பங்கெடுப்பதோடு இன்னும் இன்னும் வளரணும்... இது உனக்கான ஆரம்பமே.. என்றும் கடவுளின் ஆசி உனக்கு இருக்கும்..

நன்றியுடன்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தோட்டப்பயிரைக் காக்கும் இலகு கருவி (உள்ளூர் கண்டுபிடிப்பு)

நிரூபன் said...
Best Blogger Tips

@ரெவெரி
சிறந்த பதிவுகளை எழுதி மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் சகோதரம்...

மனமார்ந்த வாழ்த்துகள்..//

அண்ணே, மன்னிக்க வேண்டும்,.
உங்க பெயரைத் தவற விட்டு விட்டேன்.

இப்போதே இணைத்துக் கொள்கிறேன்.

ad said...
Best Blogger Tips

வணக்கம்.
தாமதத்திற்கு மன்னிக்கவும்.-காரணம் உங்களுக்கே தெரியும்.
நட்சத்திர வாரத்தில் சந்திக்கமுடியாமற்போனது வருத்தம்தான்.சரி,போகட்டும்.

உங்கள் பதிவு தொடர்பாக விமர்சனம் முன்வைக்குமளவுக்கு எனக்கு என்ன தெரியும்.எல்லோரையும்போல-எழுதவேண்டுமென்ற ஆசையில் பதிவுத்தளம் ஆரம்பித்தவன் தான்.ஆனாலும் எழுதமுடிவதில்லை.

நம் இனத்தின் காயங்களை,அங்கு நடந்த பல -அனைவரும் அறிந்திராத,அறிந்திருக்கவேண்டிய- விடயங்களை வெளிப்படையாக எழுதுகிறீர்கள்.அதன் காரணமாகவே நான் உங்களின் தளத்திற்கு வர ஆரம்பித்திருந்தேன்.அதுமட்டுமன்றி, இடையிலேயே நான் இழந்துபோன, எங்கள் ஊரின் இளமைக்கால சந்தோசங்களை மீட்டும் வகையில் உங்கள் அனுபவப் பகிர்வுகள் வந்துகொண்டிருந்தன.அதுவும் நான் தொடர்ந்து நாற்று வாசித்ததற்கு காரணம் எனலாம்.
தனிப்பட்ட ரீதியிலும் உங்கள் தொடர்பும் ஊக்கமும் கிடைக்குமென்று எதிர்பார்க்கவில்லை.ஆனாலும் கிடைத்தது.
ஆகவே...
தொடர்ந்தும் உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.
வலைப்பூவோடு நின்றுவிடாது வெளியுலக அங்கீகாரமும் கொண்ட எழுத்தாளனாக முயற்சி செய்யவேண்டும்,அங்கும் முன்னிலைக்கு வரவேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

ஒரு சின்ன விண்ணப்பம்.
நான் ஒரு இலக்கிய பைத்தியம் என்ற வகையில் - வரோ அண்ணா எழுதும் சங்கிலியன் தொடர் போன்ற பதிவுகளையும் எழுதலாமே?அதையும் சிறிய பதிவாக இருக்கவேண்டுமென்று சுருக்கி எழுதாமல் சாண்டில்யன் எழுதுவது போல... நல்ல வைபரிப்புகளுடனும்,நீண்ட இலக்கிய செறிவுமிக்க வர்ணனைகளுடனும் தொடரலாமே?

Mathuran said...
Best Blogger Tips

வணக்கம் நிரூ
ஒருவருடத்தை வெற்றிகரமாக கடந்தமைக்கும் தமிழ்மண நட்சத்திரம் ஆகியமைக்கும் வாழ்த்துக்கள்.
நிரூபன்.. உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? என் பதிவுக்கு முதன்முதலில் கமெண்ட்ஸ் போட்டது நீங்கள்தான். பதிவுலகம் என்றாலே என்னென்று தெரியாம வந்த என்னை தொடர்ந்து எழுததூண்டியது உங்கட கமெண்ட்ஸ்தான். எனக்கு மட்டுமில்ல, பலபேரிடம் இதுபற்றி கேட்ட போது எல்லோரும் சொன்ன பதில் இதுதான்.
நிரூபன் இன்றைக்கு பதிவுலகில எந்தளவுக்கு வளர்ந்திருக்கிறாரோ அந்தளவுக்கு மற்றவங்களயும் வளர்த்துவிட்டிருக்கிறார். இத நான் புகழ்ச்சிக்கு சொல்லவில்லை. இதுதான் உண்மை. ஒவ்வொருவருடைய வளர்ச்சியிலையிம் கட்டாயம் நிரூபனின் பங்கு இருக்கும்.

அடுத்தது சில குறைகளையும் சொல்லுறன்
நிரூ உங்களுக்கு ஹிட்ஸ் முக்கியமில்லை என்று சொன்னீங்க. அப்ப எதுக்கு ஒரு நாளைக்கி இரண்டு பதிவெல்லாம் போடுறீங்க. ஒரு நாளைக்கு 2 பதிவு போட்ட தளத்துக்கான பார்வையாளகள் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால் ஒரு பதிவுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவடையும். இரண்டு பதிவுகளுக்கிடையில் ஆகக்குறைந்தது 2 நாள் இடைவெளியேனும் விடுங்க. அந்த இரண்டு நாளில அந்த பதிவ மேலதிகமா 50 பேர் படிச்சாலும் உங்க கருத்து மேலும் 50 பேரை சென்றடைகிறதல்லவா?
பின்னூட்டமிட நேரமில்லாவிட்டாலும் நான் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். சில நேரங்களில் பழைய பதிவுகளை தட்டிப்பார்க்கும்போது பல பதிவுகள் விட்டுப்போயிருப்பதை தெரிந்துகொள்வேன். காரணம் நீங்கள் தொடர்ந்து பதிவிடுவதால் பல பதிவுகள் விடுபட்டுபோகிண்றன.

Mathuran said...
Best Blogger Tips

இன்னுமொரு விடயம் உங்கள் ஆரம்பகால பதிவுகளில் இருந்த காத்திரத்தன்மை இப்போது கொஞ்சம் குறைவடைந்துள்ளதாக தெரிகிறதே?

நிரூபன் said...
Best Blogger Tips

@angelin

என்னதிது நிரூபன் ஒரே அலைவரிசை நான் டைப் செய்து புப்ளிஷ் ஆகும்போது பார்த்த நீங்களும் லத்திக்கா படம் எழுதிருக்கீங்க .அதிரா நீங்க கொடுத்து வைச்சவங்க
//

ஆகா, பார்த்தீங்களா நம்ம ஒற்றுமையை.
அவ்வ்வ்வ்வ்வ்வ்

அதிரா அக்காவை என்ன படம் பார்க்க வைச்சு கொல மிரட்டல் விடுக்கலாம் என்று நன்றாகவே அறிந்திருக்கிறோம் இல்லே.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@angelin

இந்த முறை சென்னையில் ஒரு ஸ்டில் ஒரே ஸ்டில்லை பார்த்து அசந்தே போனேன் யாம் பெற்ற இன்பம் பூசாரும் பெற வேண்டும்ம்ம்ம்
//

ஹே...ஹே..
என்ன பவுடர் ஸ்டாரின் குத்துப் பாட்டு ஸ்டில்லா பார்த்தீங்க.;-)))

நிரூபன் said...
Best Blogger Tips

@வியபதி

அன்பு நண்பரே, ஒரு வருடத்திலேயே இவ்வளவு உள்ளங்களைக் கவர்ந்திருக் கிறீர்களே அது எங்களைப்போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது
//

நன்றி நண்பா,
தங்களின் நல்வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பா.
நான் ஒருவரையும் கவர்ந்திழுக்க காந்தம் வைத்திருக்கலை பாஸ்.
ஆனால் எல்லோரிடமும் ஒரேயளவான மூளையினைத் தானே இறைவன் கொடுத்திருக்கிறான். ஆகவே முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை.

நிரூபன் said...
Best Blogger Tips

@athira
அடடா அவர் , ஐ மீன் ஐ.மணி உங்களுக்கு நண்பரோ? இதை ஏற்கனவே சொல்லியிருக்கப்படாதோ? அவ்வ்வ்வ்வ்வ்:)) நான் ஏதோ நிரூபன் சின்னத்தம்பி எண்டெல்லோ நினைச்சிருந்தேன்...:))))//

அக்கா பதிவிலையும் சொல்லியிருக்கேனே!
கவனிக்கலையா;-)))
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

சே..சே..சே.. அப்பூடியெல்லாம் சொல்லுவமோ? நாங்க ரொம்ப நல்லவிங்க:)).. மொத்தத்தில பதிவு போடுவதையே நிறுத்திடுங்க என்றெல்லோ சொல்ல வந்தோம்:))))....

ஹையோ... இண்டைக்கு வீடு பூந்து அடிவிழப்போகுதே எனக்கு:))... அஞ்சு... இந்த நேரம் பார்த்து எங்க போயிட்டீங்க.. கையைக் குடுங்க.. நானும் வந்திடுறேன் தேம்ஸ்க்கு:))).. இண்டைக்கு எனக்கென்னமோ ஆகிப்போச்ச்ச்ச்:))).
//


ஹே...ஹே..
இது வேறையா..
மணி உன்னோட பதிவுலக வாழ்க்கைக்கு வைக்கப் போறாங்கடா ஆப்பு!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா

சரி நான் 125 ஆவதோ.இனி நான் என்ன சொல்லக் கிடக்கு.இன்னும் இன்னும் எழுத்திலகில் வலம் வரவும் வளரவும் என் அன்பு வாழ்த்துகள் நிரூவுக்கு !
//

லேட்டா வந்தாலும் என்ன அக்கா,
மனசில உள்ளதைச் சொல்லிட்டுப் போக வேண்டியது தானே..
ஆனால் இப்படிச் சுருக்கமாக அவசரத்தில கமெண்ட் போட்டு விட்டு எஸ் ஆகியிருக்கிறீங்க.
மீ கோபம்(((((((((;

நிரூபன் said...
Best Blogger Tips

@விக்கியுலகம்

வாழ்த்துக்கள்...என்னயும் ஞாபகம் வைத்துக்கொண்டதற்க்கு நன்றிகள்!~
//

நன்றி அண்ணா.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.
அடப் பாவி,
என்னைய்யா அவசரத்தில சொல்லிட்டு ஓடியிருக்கிறாய்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

வாழ்த்துகள், தொடர்ந்து கண்ணீயமான பதிவுகளை தரவும்
//

அண்ணே, இப்போ வாறதெல்லாம் கண்ணியமானதா இல்லையா?
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்

முயற்சிக்கிறேன் அண்ணா
மிக்க நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@! சிவகுமார் !

குறுகிய காலத்தில் பலர் மனதில் இடம் பிடித்து உள்ளீர்கள். மனமார்ந்த வாழ்த்துகள் நிரூபன்.
//

ரொம்ப நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@ரேவா

மனமார்ந்த வாழ்த்துக்கள் நிரூபன்...இரண்டாவது வருடத்தில் இன்னும் பல நல்ல பயனுள்ள பதிவுகள் கொடுக்க வாழ்த்துக்கள் சகோ ..
//

என்னது பயனுள்ள பதிவா;-)))

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நன்றி அக்கா.

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்
நிரு வாழ்த்துக்கள் :)
ஹும்.. ஒரு வருடத்துக்குள் இவ்ளோ வளர்ச்சியா??!! இப்படி நீங்கள் மட்டும்தான் என்று நினைக்கிறேன்.//

எங்கே ஐயா வளர்ந்திருக்கேன்.
இப்போதும் இருந்த மாதிரி அதே அளவில தான் இருக்கேன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்

அன்பின் துஸி,
இவ்வளவு கருத்துக்களும் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.

எனக்கும் மணிக்கும் ஒரேயொரு ஆசை,
நாம் முன்பு வாழ்ந்தது போல, இன்றைய கால கட்டத்தில் இளைய தலைமுறை ஊடகவியலாளர்களை உருவாக்க வேண்டும் என்பது தான் அந்த ஆசை.
அதற்கு அமைவாகவே செயற்படுகிறோம்.இன்னும் நிறையச் செய்ய இருக்கு துஸி. நேரம் காலம் கை கூடி வருமானால் பார்ப்போம்!

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்

ப்ளஸ் - விரோதிகளின் இருந்து நேற்று முளைத்த காளான்கள் (என்னையும் சேர்த்துத்தான் சொல்லுறேன்... அவ்வ) வரை உங்களை பற்றி வைக்கும் விமர்சனத்துக்கும் கேள்விகளுக்கும் பொறுமையாய் பதில் சொல்வது.

மைனஸ்- மேலே சொன்ன பிளஸ் தான் உங்கள் மைனஸும்.

நிரு... பதிவுலகில் நீங்கள் இன்னும் இன்னும் சாதிக்க என்னுடைய வாழ்த்துக்கள் பாஸ்.
ச்சும்மா... கலக்குங்க... எப்பவும் கூட நாங்கள் இருப்போம்.
//

யோவ்.....என்னைப் பற்றி நல்லாத் தான் நீங்க புரிஞ்சு வைச்சிருக்கிறீங்க.

நான் இவற்றையெல்லாம் ப்ளஸ், மைனஸ் என்று பிரித்துப் பார்ப்பதில்லை.

கருத்துக்கள் அடிப்படையில் முரண்பட்டாலும், தனியே பகைமை வளர்க்க கூடாது என்பது தான் என் எண்ணம்.
நன்றி துஸி.

சிராஜ் said...
Best Blogger Tips

சகோ நிரூபன்,

ஒரு வருடத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். எல்லா வளங்களுடனும் , நல்ல உடல் சுகத்துடனும் வாழிய வளமுடன் பல்லாண்டு.

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா
எந்த பயமுமில்லாமல்,பல செய்திகளை சுட சுட வழங்கி இருந்தீர்கள்.தொடர்ந்தும் ட்ராக் மாறாது உங்கள் எழுத்துகளை தொடர்கிறீர்கள்.
டைரெக்டராக வருபவர் கதாநாயகனாய் உருவெடுப்பது போல நீங்க உங்க ட்ராக்கை மிக சிறப்பாக இன்றுமட்டும் கொண்டு செல்கிறீர்கள்.எங்கள் மக்களை பற்றிய வார்த்தைகள் உங்கள் பதிவுகளில் தான் எப்போதும் பிரதிபலிக்கும்.பலிக்கட்டும்.
எப்போதும் இதே அர்ப்பணிப்பு விடா முயற்சியுடன் தொடர்ந்து எழுதுங்கள்..
உச்சங்கள் பல தொட வாழ்த்துக்கள் சகோ!!//

தொடர்ந்தும் நிறைய எழுத வேண்டும் என்பது தான் ஆசை.
ஆகவே நேரம் கிடைக்கையில் எழுதுவேன் நண்பா.
அப்புறமா, உங்களால் தான் எங்கேயோ ஒரு ஓரமா எழுதிக் கொண்டிருந்த நான் பலருக்கு அறிமுகமானேன்.
அதனை இப் பதிவிலும் குறிப்பிட்டிருக்கேன்.
ரொம்ப நன்றி மைந்து.

நிரூபன் said...
Best Blogger Tips

@சசிகுமார்

வாழ்த்துக்கள் மச்சி....
//

நன்றி மச்சி,
என்ன மச்சி, வேற ஒன்னுமே சொல்லாது எஸ் ஆகிட்டாய்.

நிரூபன் said...
Best Blogger Tips

@இமா

நாற்றின் முதலாம் வருட நிறைவையிட்டு வாழ்த்துக்கள் நிரூபன்.

நாற்று மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்.
//

வாங்கோ டீச்சர்,
ரொம்ப நன்றிகள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ரெவெரி
சிறந்த பதிவுகளை எழுதி மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் சகோதரம்...

மனமார்ந்த வாழ்த்துகள்..//

நன்றி அண்ணா.

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔

மச்சி ரொம்ப பிந்தீட்டனோ தெரியல..

வெளிப்படையாகவே சொல்கிறேன் உன் மீதும் உன் புளொக் மீதும் நான் அடிக்கடி பொறாமைப்படுவதுண்டு... காரணம் இந்த இலக்கு யாராலும் இலகுவில் எட்ட முடியாதது...

ஏன் எனக் கேட்கிறாயா.. இந்த உச்ச வேகத்தை ஒரு சினிமா பதிவு எழுதுபவரால் மட்டுமே எட்ட முடியும்... இது உன் எழுத்துத் திறமைக்குகிடைத்த பெரும் வெற்றி... அந்த வெற்றி எம் நண்பனுக்குக் கிடைத்தது எனக் கூறுவதில் எமக்கும் பெருமையே..//

ரொம்பத் தான் புழுகிறாய் மச்சி.
எல்லோரும் முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை.
ரொம்ப நன்றி மச்சி.

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔

அத்துடன் நீ எனக்குச் செய்த பல உதவிகளை என்றும் என்னால் மறக்க முடியாது... நாம் நேரே சந்திக்கும் போது அது பற்றி பேசலாம்..
//

ஒன்று சொல்லவா மச்சி,
நான் எனக்கு பின்னூட்டம் போடாத நண்பர்களுக்குத் தான் அதிக தொழில்நுட்ப உதவிகளைச் சொல்லியிருக்கேன்,

உன்னை விட, என்னிடம் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்ட பதிவர்கள் பலருக்கு உதவிகள் செய்திருக்கேன்,
சொல்லிக்காட்ட விரும்பலை
ஆனால் எனக்கு பிரதியுபகாரம் எதிர்பார்த்து உதவி செய்யலை மச்சி!

ஆகவே என் நண்பனா இருந்திட்டு, நீ இப்படிச் சொல்லுவது பிடிக்கலை!
உதவி செய்தது பற்றி என்னய்யா பேச இருக்கு! விடு மச்சி!

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔
இந்த வெற்றியில் பங்கெடுப்பதோடு இன்னும் இன்னும் வளரணும்... இது உனக்கான ஆரம்பமே.. என்றும் கடவுளின் ஆசி உனக்கு இருக்கும்..

நன்றியுடன்..//

ரொம்ப நன்றி மச்சி.

நிரூபன் said...
Best Blogger Tips

@சுவடுகள்
ஒரு சின்ன விண்ணப்பம்.
நான் ஒரு இலக்கிய பைத்தியம் என்ற வகையில் - வரோ அண்ணா எழுதும் சங்கிலியன் தொடர் போன்ற பதிவுகளையும் எழுதலாமே?அதையும் சிறிய பதிவாக இருக்கவேண்டுமென்று சுருக்கி எழுதாமல் சாண்டில்யன் எழுதுவது போல... நல்ல வைபரிப்புகளுடனும்,நீண்ட இலக்கிய செறிவுமிக்க வர்ணனைகளுடனும் தொடரலாமே?//

நண்பா, உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

ஏலவே ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் என்றோர் தொடர் எழுதத் தொடங்கியிருந்தேன்.
அத் தொடரினை பத்து பாகங்கள் வரை எழுதி விட்டு முதல் அத்தியாயத்துடன் நிறுத்தியிருக்கிறேன்.
http://www.thamilnattu.com/2011/09/blog-post_03.html

தொடர்ந்தும் எழுத வேண்டும். அடுத்த அத்தியாயம் யாழ்ப்பான இராச்சியம் பற்றியும், வன்னி இராச்சியம் பற்றியும் பேசும் என நினைக்கிறேன்.
வெகு விரைவில் ஏனைய அத்தியாங்களை எழுத முயற்சிக்கிறேன் நண்பா,
நேரம் இன்மையால் தேடல்களை மேற்கொண்டு எழுத முடியலை. அதனால் தான் அந்த வரலாற்றுத் தொடர் இடை நடுவே நிற்கிறது.

உங்களின் கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி நண்பா.

இந்த இ

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்
வணக்கம் நிரூ
ஒருவருடத்தை வெற்றிகரமாக கடந்தமைக்கும் தமிழ்மண நட்சத்திரம் ஆகியமைக்கும் வாழ்த்துக்கள்.
நிரூபன்.. உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? என் பதிவுக்கு முதன்முதலில் கமெண்ட்ஸ் போட்டது நீங்கள்தான். பதிவுலகம் என்றாலே என்னென்று தெரியாம வந்த என்னை தொடர்ந்து எழுததூண்டியது உங்கட கமெண்ட்ஸ்தான். எனக்கு மட்டுமில்ல, பலபேரிடம் இதுபற்றி கேட்ட போது எல்லோரும் சொன்ன பதில் இதுதான்.
நிரூபன் இன்றைக்கு பதிவுலகில எந்தளவுக்கு வளர்ந்திருக்கிறாரோ அந்தளவுக்கு மற்றவங்களயும் வளர்த்துவிட்டிருக்கிறார். இத நான் புகழ்ச்சிக்கு சொல்லவில்லை. இதுதான் உண்மை. ஒவ்வொருவருடைய வளர்ச்சியிலையிம் கட்டாயம் நிரூபனின் பங்கு இருக்கும்.//

வணக்கம் மது,
யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என ஆன்றோர் சொல்லியிருக்கிறார்கள். எம்மை வளர்த்தவர்கள். நான் வளர்ந்த சூழல் தனியே எனக்கான ஒன்றாக எதையும் (காதலி அல்லது மனைவியை தவிர) கருதாது பிறருக்கும் பயன்படும் விடயம் என்றால் பிறருக்கும் அவ் விடயம் பற்றிய தகவல்களைச் சொல்ல வேண்டும் என அறிவுரை கூறி வளர்த்தார்கள்.

அதனை நான் இப் பதிவிலும் கூறியிருக்கேன்.
எல்லோரும் முன்னேற வேண்டும், எனும் ஆசையில் தான் எனக்குத் தெரிந்தவற்றையும் பகிர்ந்து கொள்வேன்.

உங்களைப் போன்ற இளைய சமுதாயம், இன்று இணையத்தில் எழுதுவதே மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

நன்றி மது.

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்

அடுத்தது சில குறைகளையும் சொல்லுறன்
நிரூ உங்களுக்கு ஹிட்ஸ் முக்கியமில்லை என்று சொன்னீங்க. அப்ப எதுக்கு ஒரு நாளைக்கி இரண்டு பதிவெல்லாம் போடுறீங்க. ஒரு நாளைக்கு 2 பதிவு போட்ட தளத்துக்கான பார்வையாளகள் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால் ஒரு பதிவுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவடையும். இரண்டு பதிவுகளுக்கிடையில் ஆகக்குறைந்தது 2 நாள் இடைவெளியேனும் விடுங்க. அந்த இரண்டு நாளில அந்த பதிவ மேலதிகமா 50 பேர் படிச்சாலும் உங்க கருத்து மேலும் 50 பேரை சென்றடைகிறதல்லவா?
//

மது, டுவிட்டரில் 671 பேர், பேஸ்புக்கில் நண்பர்களால் உருவாக்கப்பட்ட நாற்று குழுமத்தில் 1200 பேர்,
மற்றும் பலோவர்கள் 501 பேர்,
இதனை விட திரட்டிகள் ஊடாக வருவோர் என வடிகட்டிப் பார்த்தாலும் ஒரு பதிவிற்கு குறிப்பிட்ட இலக்கங்களை உடைய வாசகர்கள் வருகிறார்கள். எனக்கும் பாடசாலை தொடங்க இருக்கிறது மது. ஆகவே இந்த கணக்கின் அடிப்படையில் தொடர்ந்து எல்லோரும் வருவதாக நினைத்து எழுதுகின்றேன்.

உண்மையில் ஒரு நாளைக்கு ரெண்டு பதிவு போடுவது தவறு தான்.
ஒரு கொஞ்ச நாளைக்கு எழுதுவோம் என்று கிளம்பினேன்.
ஆகவே ஸ்கூல் தொடங்கியதும், கண்டிப்பாக ஒரு பதிவு அல்லது மூனு நான்கு நாளைக்கு ஒரு பதிவு தான் வரும் நண்பா.

உங்கள் கருத்துக்களைப் பரிசீலித்துள்ளேன்.

ஹேமா said...
Best Blogger Tips

நிரூ...என்ன கோவம் உங்களோட எனக்கு.என் அன்பான செல்லத் தம்பியல்லோ நீங்க.நிறைவான எழுத்துக்கள்.திறமை.எனக்கு ஒண்டும் தெரியாது.அதுதான் சில பதிவுகளுக்கு அமைதியாக ஓட்டு மட்டும் போட்டிட்டுப் போயிடுவன்.
உங்கள் எழுத்துக்களின் ரசிகையும் கூட !

அதிராவின் கும்மி...கும்மியோ கும்மி.ஏஞ்சலும் சேர்ந்து.
எப்பிடித்தான் இத்தனை நகைச்சுவை உணர்வோ என்று ரசிக்கிறேன்.
அதிரா...கலக்குங்க !

ஹேமா said...
Best Blogger Tips

யோகா அப்பாவுக்கு நிரூவின் பதிவினூடாக அன்பான பொங்கல் வாழ்த்துகள் சொல்லி வைக்கிறேன் !

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்

இன்னுமொரு விடயம் உங்கள் ஆரம்பகால பதிவுகளில் இருந்த காத்திரத்தன்மை இப்போது கொஞ்சம் குறைவடைந்துள்ளதாக தெரிகிறதே?
//

ஆகா...இது வேறையா.
மது கவனம் எடுக்கிறேன் மது.
எல்லாப் பதிவுகளும் நன்றாக வர வேண்டும் என நினைத்துத் தான் எழுதுவேன். ஆனால் சில தவறுகள் எதேச்சையாக இடம் பெற்றுவிடுகின்றன.
நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@சிராஜ்

சகோ நிரூபன்,

ஒரு வருடத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். எல்லா வளங்களுடனும் , நல்ல உடல் சுகத்துடனும் வாழிய வளமுடன் பல்லாண்டு.
//

வாங்கோ, சகோ,
தங்கள் அன்பிற்கும், வருகைக்கும், கருத்துக்களிற்கும் மிக்க நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா
நிரூ...என்ன கோவம் உங்களோட எனக்கு.என் அன்பான செல்லத் தம்பியல்லோ நீங்க.நிறைவான எழுத்துக்கள்.திறமை.எனக்கு ஒண்டும் தெரியாது.அதுதான் சில பதிவுகளுக்கு அமைதியாக ஓட்டு மட்டும் போட்டிட்டுப் போயிடுவன்.
உங்கள் எழுத்துக்களின் ரசிகையும் கூட !

அதிராவின் கும்மி...கும்மியோ கும்மி.ஏஞ்சலும் சேர்ந்து.
எப்பிடித்தான் இத்தனை நகைச்சுவை உணர்வோ என்று ரசிக்கிறேன்.
அதிரா...கலக்குங்க !//

கோபம் ஒன்றுமில்லை அக்கா,
ஏதாவது குறைகளைச் சொல்லுவீங்க என்று நினைத்தேன். நைஸாக எஸ்கேப் ஆகிட்டீங்க போல இருந்திச்சு.
பரவாயில்ல, மறுபடியும் வந்திருக்கிருக்கிறீங்க.
ரொமப நன்றி.

சுதா SJ said...
Best Blogger Tips

நிரூபன் said...

@துஷ்யந்தன்
யோவ்.....என்னைப் பற்றி நல்லாத் தான் நீங்க புரிஞ்சு வைச்சிருக்கிறீங்க.

நான் இவற்றையெல்லாம் ப்ளஸ், மைனஸ் என்று பிரித்துப் பார்ப்பதில்லை.
கருத்துக்கள் அடிப்படையில் முரண்பட்டாலும், தனியே பகைமை வளர்க்க கூடாது என்பது தான் என் எண்ணம்.
நன்றி துஸி./////

ஹா ஹா..... உண்மைதான் நிரு.. உங்களைப்பற்றி நிறைய புரிஞ்சு வைத்துள்ளேன்... இப்போது சமீப காலத்தில் தெளிவாகவே நிலையாகவே புரிந்து கொண்டு உள்ளேன்.... இதனால் முன்பு முரண்பட்டு பல வார்த்தைகளை விட்டதுக்கு கவளை பட்டும் உள்ளேன் ::(( ஆனால் என்ன சண்டையில் தானே நல்ல நட்புக்களை/மனிதர்களை அடையாளம் காண முடியுது :)

Riyas said...
Best Blogger Tips

திரும்பவும் வந்துட்டோமில்ல!

பின்னூட்டம் எல்லாத்தயும் படிச்சாச்சு..

மதுரன் சொன்ன கருத்துக்களையே நானும் சொல்ல நினைத்தேன்.. அப்புறம் ஆல்ரெடி நீங்க பிரபலமாயிட்டிங்க.. இனிமே பரபரப்பு தலைப்பு,கொஞ்சம் ஆபாசம் கலந்த தலைப்பெல்லாம் விட்டு அழகான சிறிய தலைப்புக்களை வைக்கலாமே..

துளசி கோபால் said...
Best Blogger Tips

ஹைய்யோ!!!!! இந்த நன்றி நவிலல் எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு நிரூபன்.

உங்க வலைத்தளத்துக்கு வயசு ஒன்னுதானா?????

இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.

Unknown said...
Best Blogger Tips

பாராட்டுக்களும்.. வாழ்த்துக்களும்...

அம்பலத்தார் said...
Best Blogger Tips

வாழ்த்துக்கள் நிரூ, ஒரு வருடத்திற்குள் எவ்வளவு சாதித்துவிட்டீர்கள். இது உண்மையிலேயே ஒரு இமாலய சாதனைதான். இந்த வளர்ச்சியின் பின்னால் இருக்கும் உங்கள் அயராத உழைப்பிற்கு தலை வணங்குகிறேன். இதுபோல இன்னும் பல உச்சங்களைக் காண அன்புடன் வாழ்த்துகிறேன். எதுக்கையா என் பெயரையெல்லாம் குறிப்பிட்டு நன்றி எல்லாம் சொல்லிக்கொண்டு. ஒரு அப்பன் தன் பிள்ளைகளின் வளர்ச்சியைக் கண்டு எப்படித்தட்டி கொடுத்து உற்சாகப்பட்டு மகிழ்கிறானோ, அப்படித்தான் உங்களைப்போன்ற எம் இளைஞரின் வளர்ச்சியைக் கண்டு ஒரு ஓரமா நின்று ரசித்து சந்தோசப்படுகிறன். அதுக்குப்போய் எதுக்கு பெரிய வார்த்தைகளெல்லாம்.

அம்பலத்தார் said...
Best Blogger Tips

நட்சத்திரங்களைக் காமிக்க டார்ச்லைட் வெளிச்சம் வேண்டியதில்லை. அதுபோல திறமையும் அயராத உழைப்பும் உடையவன் எப்பொழுதும் தானே உச்சங்களை காண்பான் என்பதற்கு நிரூபன் ஒரு உதாரணம்.

MaduraiGovindaraj said...
Best Blogger Tips

தொடர்ந்து எழுதி வெற்றிகள் பல பெற எனது அன்பு வாழ்த்துக்கள் நிருபன்

KANA VARO said...
Best Blogger Tips

பதிவை வாசிச்சு வாக்கை அப்பவே போட்டிட்டேன் பாஸ், வாழ்த்துவதற்கு தான் பிந்திவிட்டது

Unknown said...
Best Blogger Tips

தங்கள் பதிவில் என் பெயரும்
நன்றிக்கி உரியவர் பட்டியலில் இடம்
பெற்றதற்கு மிக்க நன்றி!

சா இராமாநுசம்

கோகுல் said...
Best Blogger Tips

வணக்கம் பாஸ்,நலமா?
பொங்கலுக்கு ஒர்ருக்குப்போய் வந்து இன்னைக்குதான் பார்க்கிறேன்.
பதிவுலகில் நிறைவான முதலாண்டை கடந்திருக்கிறீர்கள்.வாழ்த்துகள் என்று ஒரு வார்த்தையில் கூறாமல் கருத்துகள் கேட்டிருக்கிறீங்க.எனக்கு வாழ்த்துகள் என்று ஒற்றை வார்த்தையில் சொல்வதை தவிர வேறொன்றும் தோன்றவில்லை.


பதிவுலகில் உங்களின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது.மது சொல்லியிருப்பதைப்போல அடிக்கடி பதிவிடுவது உங்கள் பல காத்திரமான பதிவுகளை நேரமின்மை காரணமாக பலர் தவற விட நேரிடுகிறது.உங்கள் சூழல் புரிகிறது இருந்தாலும் பரிசீலிப்பதாக சொல்லியிருக்கீங்க பாராட்டுகள்.தொடர்ந்து கலக்குங்க........தொடர்கிறோம்.

குட்டிப்பையன் said...
Best Blogger Tips

வணக்கம் பாஸ் தாமதத்துக்கு மன்னிக்கவும்.நீங்கள் இந்த பதிவு எழுதிய நாளில் நான் வலையுலகம் பக்கம் வராததால் கவனிக்கவில்லை.

என்ன சொல்வது.உங்கள் பதிவை படித்தேன் மிக குறுகிய காலத்தில் பதிவுலகில் உங்களுக்காக சிறந்த இடம் கிடைத்ததுக்கு உங்கள் உழைப்பு அளப்பெரியது அதற்கு ஒரு சலூட்.

நீங்கள் மட்டும் வளர்ந்தால் போதாது சக பதிவர்களையும் பதிவுலகில் வளர்த்து எடுக்கவேண்டும் என்ற உங்கள் எண்ணம் மிகவும் பாராட்டத்தக்கது.உங்களால் பதிவுலகில் புதிய பதிவர்கள் பலர் அடையாளம் காணப்பட்டவர்கள் .அதில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகின்றேன்.

இன்னும் நீங்கள் எங்களைப் போல இன்னும் பலரை பதிவுலகில் கைதூக்கிவிடவேண்டும்.

எல்லா ஏரியாவிலும் கலந்து கட்டி அடிக்கும் உங்கள் திறமை அளப்பெரியது.தொடருங்கள் தொடர்கின்றோம்.இன்னும் பல பதிவுகள் எழுதி மேலும் சிறப்பாக உங்கள் உழைப்புக்கான பலன் கிடைக்க பாராட்டுக்கள்.

அன்புடன்
குட்டிப்பையன்

குட்டிப்பையன் said...
Best Blogger Tips

நீங்கள் எனக்கு பதிலகில் அறிமுகமாக முதலே நான் உங்கள் பதிவுகளை படித்திருக்கின்றேன்.ஆனால் அப்ப எல்லாம் எனக்கு கமண்ட் போடுவது எப்படி என்று கூட தெரியாது அதனால் கமண்ட் எதுவும் போடவில்லை.

வாழ்த்துக்கள் பாஸ் வேறு என்ன சொலவ்து என்று எனக்கு தெரியவில்லை வாழ்த்துக்கள்

தனிமரம் said...
Best Blogger Tips

வாழ்த்துக்கள் நிரூபன் என்று மட்டும் சொல்லமாட்டன்.செருக்கில்லை ,பொறாமையில்லை . சூரியனுக்கு    எப்படி புகழ்மாலை சூட்டுவது.?
 உங்களிடம் இருந்து அதிகம் ஈழம் பற்றிய விடயங்களைத்தான் நான் எதிர்பார்க்கின்றேன். வலையில் வந்த நண்பர்களில் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்வோரில் என்றும் முன்னுரிமை உங்களுக்குத் தான். அப்படியான நிரூபனிடம்  இடையில் சில கசப்புக்கள் என்றாலும் பாதை மாறிப்போகும்   போது விலகி இருப்பது நன்மையில் முடியும்  என்பதால் தான் வெளியில் இருக்கின்றேன் .என்றாலும் பதிவுகளை தவறாமல் படிக்கின்றேன் (சினிமா தவிர்த்து -ஆங்கிலம் தெரியாது தனிமரத்திற்கு ஹீஹீ) 
தொடர்ந்து நம்மவர் விடயங்களுடன் வாருங்கள் என வாழ்த்துகின்றேன் ஹீட்ச் கடந்தவர் என்பதால் இந்த வரி மற்றும்படி உள்குத்து இல்லை. எது எப்படியோ நாற்றில் நல்ல ஈழத்துவிடயங்களை தாங்கி வரும் போது எந்தத் தடையும் தாண்டி வருவேன் தனிமரம் மொய்க்கு மொய் செய்வது இல்லை. மீண்டும் காத்திரமான பதிவுகள் தந்து என் வாசிப்பு நேரத்தை நாற்றோடு இணைந்து இருக்க வேண்டி வாழ்த்தி விடைபெறுகின்றேன்.

 

தனிமரம் said...
Best Blogger Tips

ஆரம்பத்தில் நேசனோடு  இடைக்கிடை நாற்றிற்கு வந்தோர் தர்சன் (கொழும்பு) விடிவெள்ளி(செண்பகம் பதிவு) அவர்களை இந்த நேரத்தில் நிரூபனின் சார்பில் நான் நன்றி கூறுகின்றேன் .இடையில் போனாலும் எங்களுடன் நீங்களும் இருக்கின்றீர்கள்.

எஸ் சக்திவேல் said...
Best Blogger Tips

All the best. (Sorry I need to type in English as no Tamil typing SW available on 'this' PC)

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails