Sunday, January 15, 2012

குசு(று)ம்புப் பதிவர்களின் பொங்கல் தின கிளு கிளுப்பு கவியரங்கம்!

தைத் திருநாளை முன்னிட்டு, பொங்கிப் படைத்து சுற்றத்தாரோடு உணவுகள் பரிமாறி உண்ட பின்னர்; பதிவர்கள் அனைவரும் இணைந்து, தமிழகத்தில் கலைகளுக்குப் புகழ் பெற்ற மதுரை மாநகரில் கவியரங்கம் ஒன்றினை இன்றைய தினம் பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஒழுங்கமைத்திருந்தார்கள். கவியரங்கத்தினை திரு.பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களும், திரு.யோகா(Yoga.S.FR) அவர்களும், திருமதி ஏஞ்சலின் அவர்களும் தலமையேற்று நடாத்தியிருந்தார்கள். பல ஆயிரம் பதிவர்கள் போட்டி போட்டு இக் கவியரங்கில் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்த முண்டியடித்த போதும், குறிப்பிட்ட சில பதிவர்களை மாத்திரம் தான் இக் கவியரங்கில் இணைத்துக் கொள்ள முடிந்தது. நேரம் போதாமையே இதற்கான காரணம் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்திருந்தார்கள். வாருங்கள்! கவியரங்கினுள் நுழைவோம்.
அரங்கில் தலைவர்கள் மூவரும், அவர்களிற்கு எதிர் எதிர்த் திசையில் பதிவர்களும் அமர்ந்திருக்கிறார்கள். முதலில் தலமை உரையினை ஏஞ்சலின் அவர்கள் ஆரம்பிக்கிறார்.
ஏஞ்சலின்:
தைத் திருநாளில் கவி படிக்க வந்திருக்கும் தமிழ் பதிவர்களே
மெய் குளிர கவி கேட்டு சிரிக்க வந்திருக்கும் உறவுகளே
இத் தினத்தில் உங்களை அரங்கிற்குள் வருக வருக என வரவேற்கிறேன்
முத்தமிழால் உமை குளிப்பாட்டி முந்நூறு கவி பாட வல்ல
வித்தகர்கள் அரங்கினிலே நிறைந்திருக்கிறார்கள் - அடியேன் நானும்
சத்தியமாய் கவியரங்கில் டெக்கரேசன் பண்ணவில்லை - ஆளை விடுங்கள்
புத்தம் புது கவி படிக்க வந்திருக்கும் பதிவர்களின் பாடல் கேட்போம் வாரீர்!
பன்னிக்குட்டி ராம்சாமி:
ஐயா வணக்கங்களா! அம்மா வணக்கங்களா! மற்றும் அனைவரும் வணக்கங்களா!
கூலிங்கிளாஸினால் அரங்கில் யாராவது கூச்சமற்ற பிகர் உண்டா என
கூர்ந்து பார்க்கும் சிபியே
கோலிங் பெல் போல அடிக்கடி ரிங் ரிங் என அடித்துக் கொண்டிருக்கும்
பதிவுலக Anti வைரஸ் ஐடியா மணியே
பாலும் தேளிதேனும் என ஔவை சொன்ன தெள்ளு தமிழில் - வர்ண
கோலக் கவி உரைக்க வந்திருக்கும் கவி வேந்தர்களே!
அனைவரையும் வரவேற்கிறேன்! கும்தலக்கடி கும்மா! கவியரங்கை ஆரம்பியுங்கடா சும்மா!

Yoga.S.FR.
தெள்ளு தமிழ் கவி கேட்டு மனம் மகிழ்ந்து
உள்ளங்களை மறந்து கவிதையிலே கிறங்கி
கள்ளமில்லா உள்ளத்துடன் கனிவான சர்க்கரை பொங்கலிட்டு - மனதை
அள்ளுகின்ற கவி படிக்க வந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன்.

கவியரங்கினுள் வருபவர்கள் பட்டியில் நீளம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்பதால், அறிமுகம் ஏதுமின்றி அவர்களே அரங்கினில் கவி பாடுவார்கள் என நினைக்கிறேன்.

சிபி.செந்தில்குமார்:
வண்ணமயமான ரகசிய கூடாரம்
கொஞ்சம் காசு கொடுத்தால் கலர் கலராய் படம் காட்டும் சினிமாடம்
என்னிடத்தே வந்து இந்த உலகில் உனக்கு பிடித்த
எளிமையான இடம் எது என்று யாராச்சும் கேட்டால்
சென்னி மலை அருகே உள்ள ஜோதி - அவள்
என்னை தினமும் சொக்க வைக்கும் முல்லை ஜாதி
பரங்கிமலை ஜோதி தியேட்டர் தான் என்னை
பரவசத்தில் ஆழ்த்துவதால் அரங்கினிலே
இந்த இனிய தை திருநாளில் அடியேனும் வேண்டுகிறேன்
கூலிங் கிளாஸில் டீவி பொருத்திய ஓர் டெக்னாலஜி வர வேண்டும்
கூலாய் நானும் வீட்டில் இருந்தே
புதுப் படம் பார்த்து விமர்சனம் தர வேண்டும்! இது நிறை வேறுமா?

ஒன்னும் தெரியாத ஐடியாமணி: POWDER STRAR
சென்னிமலை செந்தில் - என்னை சொக்க வைத்த அன்றில்
கூலிங்கிளாற்குள்ளால் என்னை லவ்சு பண்ணாது
எதிரே இருக்கும் பிகரை பார்க்கும் என் ஏஞ்சல்
இவரை நானும் காதலிக்கிறேன்! I Love you CP

பன்னிக்குட்டி ராம்சாமி: அடோய் நாதாரி! கஸ்மாளம்! பன்னாடை! பரதேசி ஐடியாமணி! நிறுத்து! நிறுத்து! ஒனக்கு வெளங்காதா? இஞ்சே நடப்பது கவியரங்கம்காளா! நீங்க கவிதை பாடனுங்களாம்!உணர்ச்சி வேகத்தில இங்கே தனிமனித உணர்வுகளை காட்டிக்க கூடாதுங்க. கம்முன்னு இருங்க!

ஐடியா Funny: ஓ சாரிங்க! நான் என்னோட பர்சனல் லவ்வை பப்ளிக்கில போட்டு உடைச்சிட்டேன்! அவ்வ்வ்வ்வ்
பொங்கல் நாளில் காலையில் என் மனைவி கனிகாவுடன் பொங்கினேன்
இன்பம் தங்குமா என்றேன்!
செல்லமாய் அவளோ இது தகுமா மணி என்றாள்!
அங்கம் எல்லாம் ஏதோ செய்ய ஐ மீன் ஆண்டியாய் இருந்த என்னை இங்கே
தங்க தமிழில் கவி பாடு என்று சொல்லி மேடை ஏற்றியுள்ளார்கள் -
நீங்களே சொல்லுங்கள் என் மங்கலப் பொங்கலை இடை நடுவில் இவர்கள் குழப்புவதும் சரியா?

பன்னிக்குட்டி ராம்சாமி: மூதேவி! நீ பொங்கல் நாளிலும் லீவு விடமாட்டியா? கறுமம் கறுமம்! ஓடுறா ராஸ்கல்! ஒரு நிமிசம் இங்கே வெயிட் பண்ணிட்டு நின்னாய் உன்னயை ஆப்பிரிக்கா காட்டுக்கு அனுப்பிடுவேன்.

பேபிஅதிரா: 
எல்லோரும் பானையிலே அரிசியிட்டு பொங்கும் நேரம் நானோ
மெல்லிய பூனைகளுடன் என் டைம்மை செலவு செஞ்சிடுவேன்
கவியரங்கில் என்னை கொண்டு வந்து கவி பாடட்டாம்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
புவியரங்கில் குழை போட்டு கொண்டு திரியும் காட்டானை - உடல்
அவிய முன்னர் உடுப்புக்களை போடச் சொல்லுங்கள் - அப்புறமா
நானும் இனிய கவி பாடுகின்றேன்! குழை போடுறாராம்! குழை!
மொதல்ல ஆதி வாசி ஆடைக்கு ஒரு முழுக்கு போடச் சொல்லுங்க;-))

ஹேமா:
வேலியில் ஓடியது வௌவால்
சாலையில் படர்ந்தது கொடி
வீட்டு முற்றத்தில் போட்டிருக்கு கோலம்
ஆனால் தமிழர்கள் வாழ்வோ விதியினை நினைத்து அழுகிறது
காலையில் எழுந்தேன் - சுவிஸில் ஒரே பனிமூட்டம்
பானையை வைத்து பொங்கவா?
இல்லே வேலைக்கு இறங்கவா என யோசனை
இலகுவில் புரிந்திடா என் இறுக்க கவிதை போல
இனிமைக்கு குறைவிலா பொங்கல் செய்யனும் என்றும் ஆசை
சுவிஸினில் எனக்கு வேலை அழைப்பதால்
கனிவுடன் பொங்கி படைக்க நேரம் இல்லை!
கவியரங்கை முடித்து நானும் விடை பெறுகின்றேன்.

பி.அமல்ராஜ்:
மங்கலம் பொங்கும் இத் திரு நாளில் - யாரோ என் கவியில் ஆணாதிக்கம் என
பொங்கியே விட்டார் - பாவம் நானோ குற்றமே செய்யாது
சிங்கத்தின் கர்ச்சனைக்குள் மாட்டி விட்டவனாய்
சிரிப்பினை தொலைத்து நியாயம் கேட்கின்றேன்!
அங்கத்தில் ஒரு வார்த்தையை குறைத்து மதிப்பிட்டாலும்
ஆணாதிக்கமாகுமோ! அடடா! புரட்சிப் பெண்ணிய இலக்கியம் புதிய
சங்கத்து மரபுகளையல்லவா பதிவுலகிலும் கொண்டு வருகிறது!

தமிழ்வாசி பிரகாஷ்:
காலையில் எழுந்தேன்! கனிவாய் புது வீட்டில் பொங்கினேன்
மாலையில் வெளியில் கிளம்பினேன் - மக்கா யாரோ கவியரங்கம் என அழைத்து வந்தான்
இனிய சர்க்கைப் பொங்கல் உண்டு எம் இளைய கவியை ரசிக்க வந்திருக்கும்
கவிஞர் அனைவரையும் மதுரை மண்ணின் சார்பில் வரவேற்கிறேன்! வருக!

வீடு சுரேஸ்குமார்: 
எனக்கு இன்று பொங்கலாம் - நான் என்னை வைத்து பொங்கும் மாட்டு பொங்கலை சொல்லவில்லை
தமிழில் கவி வடிக்க எல்லோரும் கூடியிருக்கும் இவ் வேளையில் நானோ
கிராபிக்ஸ் கவி படைக்க கிளம்பியுள்ளேன் - போட்டோசொப்பை பானையாக்கி
இலியானா இடுப்பில் கோலமிட்டு இனிதாக கிராபிக்ஸ் பொங்கலிட
அனைவரையும் வாழ்த்துகிறேன்! கிராபிக்ஸ் பொங்கலை கண்டு மகிழ வேண்டுகிறேன்!

விக்கி உலகம் வெங்கட்குமார்:
வியட்னாம் தமிழ் வணக்கம் சொல்லி,
விழியில் அரிசி பொங்கல் பார்த்து நீண்ட நாள் ஆச்சே எனும் கவலைவலையுடன் விக்கி நான் இங்கு வந்தேன்!
கவிதை தந்தேன்!
முன்னுக்கு இருக்கும் கூலிங் கிளாஸ் மன்னனையும். அவனை அடிக்கடி திட்டும் மனோவையும் பார்த்தால் எனக்கு கவிதை வரலை!
கவலை தான் வருகிறது! அவ்வ்வ்வ்
எல்லோரும் பொங்கி இனிமையாய் உண்டு மகிழ மாப்பிளைங்களா வாரேன் என்று சொல்லி மெல்லமாய் நானும் விடை பெறுகின்றேன்!

மகேந்திரன்:
நித்தம் நித்தம் வலையுலகில் நீண்ட நேரம் பொங்கலிட்டு
பத்து வலை சுத்தி வந்தேன் கண்னே ரத்தினமே - என்னோட
பாசக்கார பையங்களுக்கு கமெண்டும் போட்டேன் கண்ணே ரத்தினமே
புத்தம் புது கவி படிக்க ஏத்த ராகம் கண்டு கொண்டேன் - இனி
என் கவிதை சொல்லப் போனால் நீங்க எழுந்து நின்று ஆடுவீங்க
பதிவர் சொந்தங்களே! நம்ம பதிவர் சொந்தங்களே!
அழகான கிராம மெட்டு! உங்களை அசத்துகின்ற சந்தக் கட்டு
அச்சுவெல்லம் பச்சரி போட்டு பொங்கும் இந்த நாளில்
தமிழ் கவிதையாலே நாமும் பொங்கி விட்டோம் கண்ணே ரத்தினமே!
என் கண்ணே ரத்தினமே!

பிலாசபி பிரபாகரன்: 
மங்கலம் பொங்கும் இத் திரு நாளில் என்னை சூழ்ந்திருக்கும் அனானிகள்
நீங்கிட வேண்டும் - வலையுலகில் எனக்கு இலியானா மோகம்
தங்கிட வேண்டும் - வடிவான பொண்ணு ஏதாச்சும் அப்படியே எனக்கு
மாட்டிட வேண்டும் - தாலியை கட்டிட துடிக்குது மனசு
வேலியை போட்டு வீட்டினுள் பூட்டிட நினைக்குது என் வயசு!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

காட்டான்: 
காட்டான் குழ போட்டான் - காலமெல்லாம் இந்த தேசிய உடையுடன் தான் வலம் வருவான்
காட்டான் கவி எடுத்தால் கவியரங்கும் அதிரும் - நல்ல
பாட்டால் உமை மயக்கி கிராமிய சந்தத்திலும் பாடிடுவான் - என் வித்துவத்தை
கேட்டால் நீர் எல்லோரும் மயங்கிடுவீர் - சொல்கின்றேன் கேளும்!

Yoga.S.FR: யோவ்.....சும்மா பீலா வுடுறதை விட்டிட்டு போய் குளிச்சு கோமணத்தை துவைச்சிட்டு வாரும்! நாத்தம் தாங்க முடியலை! அதில உம்மடை வித்துவத்தை கேட்டால் எல்லோரும் மயங்கிடுவாரோ!
கொய்யாலே! உம்மட தேசிய உடைக்கு கிட்ட வந்தாலே எல்லோரும் மணம் தாங்காம மயங்கிடுவார்கள்!

உமாஜீ/Umajee:
மேகம் பொழியும் மழை போல் பால் பானையுள் பொழியட்டும்
வானும் மண்ணும் எப்போதுக் காதல் கொள்ளட்டும் என்
தாகம் எல்லாம் எனக்கு ஹாலிவூட் மூவி மேல் பாயட்டும்
வானம் தாண்டிய சிறகுகளில் எனக்கு ஓர் கவிதையாச்சும் பிறக்கட்டும்!
அப்புறமாய் கவியரங்கில் என் கவிதை பறக்கட்டும்!
ஆளை விடுங்கடா சாமி! இலக்கணம் என்றாலே எனக்கு வாந்தி வரும்! அதில கவிதை என்று ஏதோ என்னை பாடச் சொல்லி கொல பண்றாங்களே! ஆள விடுங்கடா;-))

ஹாலிவூட் ரசிகன்: 
ஆங்கிலீஸ் கவி படித்து இந்த பொங்கல் நாளை அசிங்க நாள்
ஆக்கிட விரும்பவில்லை - ஆனாலும்
ஜேம்ஸ்பாண்ட் போல நிறைவான கோலமிட்டு
ஆர்னல்ட் சுபாஸ்நேக்கர் போல் அடுப்பினை பத்த வைத்து
ஜசான் சத்தாம் போல பானையுள் அரிசி போட்டு
பமீலா ஆண்டர்சன் போல பொங்கி வழிய வாழ்த்துகிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி: என்னதூ.........பமீலா அண்டர்சன் போல....கொய்யாலே! வெளங்கிரும்...வெளங்கிரும்!

மதுரன்: 
மங்கலம் தங்கும் இந் நாளில் கம்பியூட்டர் மவுஸ் போல
நீங்க அழுத்தையில் செயற்படாது அசத்தலாய் செயற்பட வாழ்த்தி
என் கவியினை தொடர்கிறேன்!
அடியேன் ஒரு தொழில்நுட்ப பிரியன் - ஆனாலும் எப்போதாச்சும்
தமிழும் எழுதும் குறும்பு பையன்
ப்ளாக்கிலும் பேஸ்புக்கிலும் மங்கலம் பொங்கி
புதிய தொழில்நுட்பங்கள் உலகெங்கும் பரவி
இனிதாய் எல்லோரும் பொங்கலை கொண்டாட வாழ்த்துகிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி: 
எல்லா பதிவர்களையும் அழைத்து இனிய கவி கொடுக்க முடியவில்லை! மன்னியுங்கள்! எங்கள் நேரமும் போகிறது!
உங்களுக்கு பொல்லாப்பு ஒன்றும் இல்லையெனில் மீதமுள்ள பொங்கலையும் உண்டு மகிழுங்கள்! எல்லோரும் கவி பாடுங்கள் என அழைத்து வந்தேன்!
சொந்தக் கதை - சோக கதை என எல்லோரும் பாடி என்னக்கு வெறியை ஐ மீன் தமிழ் கொல வெறியை கூட்டி விட்டார்கள்! இதோ இறுதியாக ஓர் கவி பாடி கவியரங்கை நிறைவு செய்கிறேன்! கேட்பீர்கள்! இது தான் இலகு தமிழ் கவிதை! அண்ணன் கவுண்டமணி சாரிங்க பன்னிக்குட்டி ராம்சாமி ஸ்டைலில் படியுங்கள்!
கும்தலக்கடி கும்மா
வைச்சாங்கட ஒரு கவியரங்கம் சும்மா
பம்மிக்கிட்டிருந்த பன்னிக்குட்டியை நடுவராக்கி
பாசமழை பொழிந்திட்டாங்க நம்ம மதுரக்காரப் பசங்க
நம்மளுக்கு எப்பவுமே நமிதா என்று சொன்னாலும் நம்பிடவா போறீங்க;-))
இலியானா வந்தாச்சு - ஹன்சிகா வந்தாச்சு - கார்த்திகா வந்தாச்சு
இனி என்னனென்னவோ வந்தாலும் வருமுங்க - ஆனால்
நம்ம நமீதா போல எவரும் வருவாங்களா?
எடுங்கடா அந்த அருவாளை!

நன்றி! வணக்கம்!

32 Comments:

K said...
Best Blogger Tips

ஹா ஹா ஹா செம செம செம! சத்த நேரம் பின்னாடி வந்து ஃபுல் கமெண்டு போடுறேன்!

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.

சுதா SJ said...
Best Blogger Tips

எல்லா பதிவர்களையும் நல்லாத்தான் "படிச்சு" வைச்சு இருக்கீங்க.... ஹா ஹா....

சிபி பாஸ், கூர்ந்து பிகர் பார்த்ததையும் இங்கே போட்டு உடைச்சாச்சா??!!!! அவ்வவ். பாவம் நிரு சிபி :)

எங்க போனாலும் இந்த மணித்தொல்லை தானா??? அவ்வ்.... சிபி பற்றிய மணி கவி கலக்கல் :)))

என்னைய்யா.... பன்னிக்குட்டி ராமசாமி சார் கவுண்டமணி போலவே அடிக்கடி திட்டுறார்..... ஆனாலும் நல்லாத்தான் இருக்கே.... :))))

ஹேமா அக்காச்சிக்கு இன்றைக்கும் வோர்க்கா ?? பொங்கலுக்கு சுவிஸில் லீவு தரவில்லையோ!!! எனக்கு பிரான்சில் பொங்கலுக்கு லீவு தந்தாங்க, ஆனா என்ன சம்பளம் மட்டும் வெட்டுவாங்களாம்... அவ்வவ் :(

அமல் கலக்கல்..

நம்ம மகேந்திரன் அண்ணாவுமா??!!!! ஆனால் இந்த கவி அரங்குக்கு முழுக்க முழுக்க பொருத்தமானவர் மகேந்திரன் அண்ணாதான் :)

அப்புறம் காட்டான் மாம்ஸ்.
நம்ம யோகா அப்பா சொல்லுற மாதிரி இன்றைக்காவது புது கோமண துண்டு மாற்றலாம் இல்ல :( முடியல்ல...... அவ்வவ்

அப்புறம் இந்த கவியரங்குக்கு நம்ம பதிவுலக ஹீரோ நிரு ஏன் வரவில்லை... ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்................. ஏன்???????

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

ஹா ஹா ஹா செம செம செம! சத்த நேரம் பின்னாடி வந்து ஃபுல் கமெண்டு போடுறேன்!
//

யோவ்..என்னய்யா சொல்லுறாய்?
சத்து நேரம் பின்னாடி வந்து புல் மப்பில கமெண்ட் போடப் போறியோ;-))

அவ்வ்வ்வ்வ்

நான் கமெண்டு பெட்டியை பூட்டி வைச்சிடுவேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சென்னை பித்தன்
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.//

வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா,
பல பெரிய் பதிவர்கள் முன்னிலையில் சிறு நாற்று என்னையும் அறிமுகஞ் செஞ்சிருக்கிறீங்க. ரொம்ப நன்றி ஐயா. வந்து பார்க்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்
அப்புறம் இந்த கவியரங்குக்கு நம்ம பதிவுலக ஹீரோ நிரு ஏன் வரவில்லை... ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்................. ஏன்??????//

யோவ்...நிறுத்தய்யா..என்னை ஹீரோ என்று சொல்லி ஸீரோ ஆக்கிட வேணாம்! அவ்வ்வ்

நான் ஒரு சாதா ஆள் ஐயா, அப்புறமா பொது வெளியிலை என்னைப் பத்தி இப்படிச் சொன்னதுக்கு ஒரு சின்ன எமவுண்ட் கொடுக்கிறேன். பேங் அக்கவுண்டிற்கு வந்து வாங்கி கொள்ளுங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...
Best Blogger Tips

நாங்க எல்லாம் கவி பாடும் போது நிரூபன் நீங்க எங்க போயிருந்திங்க?
மாடுபுடி விளையாட்டுக்கா? ஏன்னா மாடெல்லாம் அங்க தானே போகும்!ஹஹ....

நிரூபன் said...
Best Blogger Tips

@veedu

நாங்க எல்லாம் கவி பாடும் போது நிரூபன் நீங்க எங்க போயிருந்திங்க?
மாடுபுடி விளையாட்டுக்கா? ஏன்னா மாடெல்லாம் அங்க தானே போகும்!ஹஹ....
//

எப்பூடி நம்ம டைம்மிங்கு;-)))

மாட்டிக்கிட்டீங்களா...
மாட்டிக்கிட்டீங்களா.

என்னது மாட்டுப் பொங்கல் பத்தி நீங்க பேசலையா;-))
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நிரூபன் said...
Best Blogger Tips

பதிவர்கள் எல்லோரும் பிசியாக இருக்காங்க என நினைக்கிறேன். அவ்வ்வ்வ்வ்வ்

பின்னூட்டங்கள் ஏதாச்சும் வந்தால் யோகா ஐயா பதில் கூறி கல கலப்பாக வைத்திருப்பார் என நினைக்கிறேன். யோகா ஐயா பின்னூட்டங்களிற்கான பதில்களை இன்று முதல் நாற்று வலைப் பதிவில் வழங்குவார் என்பதனை அன்போடு தெரிவித்து, எல்லோருக்கும் இனிய இரவு வணக்கம் கூறி விடை பெற்றுக் கொள்கிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

ஆல் பதிவர்ஸ்........ ஆங் வணக்கமுங்...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

சுட்டுப் போட்டாலும் கவிதையே வராது எனக்கு, என்னைய போயி கவியரங்கத்துக்கு தலைமையேற்க வெச்சிருக்கீங்க, வெளங்கிரும் அந்த கவியரங்கம்........

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

/////கூலிங்கிளாஸினால் அரங்கில் யாராவது கூச்சமற்ற பிகர் உண்டா என
கூர்ந்து பார்க்கும் சிபியே/////

கூச்சப்பட்டா மட்டும் பார்க்காம விட்ருவாராக்கும்.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

////Yoga.S.FR.
தெள்ளு தமிழ் கவி கேட்டு மனம் மகிழ்ந்து
உள்ளங்களை மறந்து கவிதையிலே கிறங்கி
கள்ளமில்லா உள்ளத்துடன் கனிவான சர்க்கரை பொங்கலிட்டு - மனதை
அள்ளுகின்ற கவி படிக்க வந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன்.////

அடங்கொன்னியா.... இவரு ஏன் எல்லாரையும் திட்டுறாரு.....?

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி

ஆல் பதிவர்ஸ்........ ஆங் வணக்கமுங்...........
//

அண்ணே வணக்கமுங்க!

கவியரங்கத்தை சூப்பரா நடாத்தியிருக்கிறீங்க.
வாழ்த்துக்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி

சுட்டுப் போட்டாலும் கவிதையே வராது எனக்கு, என்னைய போயி கவியரங்கத்துக்கு தலைமையேற்க வெச்சிருக்கீங்க, வெளங்கிரும் அந்த கவியரங்கம்........
//

அதான் இம்புட்டு சூப்பரா கவியரங்கத்தை நடாத்தியிருக்கீங்களே...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி

கூச்சப்பட்டா மட்டும் பார்க்காம விட்ருவாராக்கும்.....?
//

அண்ணே பொண்ணுங்க கூச்சப்பட்ட தலை கவிழ்ந்திட்டு இருப்பாங்க இல்லே...
அப்போ பார்க்க முடியாதுன்னு எஸ் ஆகியிருப்பார் என்று நினைத்தேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி

அடங்கொன்னியா.... இவரு ஏன் எல்லாரையும் திட்டுறாரு.....?
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்

அதை அவர்கிட்ட தான் கேட்கனும்.

அவ்வ்வ்

சுதா SJ said...
Best Blogger Tips

நிரூபன் said...

@துஷ்யந்தன்
அப்புறம் இந்த கவியரங்குக்கு நம்ம பதிவுலக ஹீரோ நிரு ஏன் வரவில்லை... ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்................. ஏன்??????//

யோவ்...நிறுத்தய்யா..என்னை ஹீரோ என்று சொல்லி ஸீரோ ஆக்கிட வேணாம்! அவ்வ்வ்
நான் ஒரு சாதா ஆள் ஐயா, அப்புறமா பொது வெளியிலை என்னைப் பத்தி இப்படிச் சொன்னதுக்கு ஒரு சின்ன எமவுண்ட் கொடுக்கிறேன். பேங் அக்கவுண்டிற்கு வந்து வாங்கி கொள்ளுங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்/////////

நிரு... ஏக்கனவே நீங்க என் பேங் அக்கவுண்டுக்கு போட்டதில இன்னும் உங்கள பற்றி புகழ் கமெண்ட்ஸ் போட பாக்கி இருக்கு... இன்னும் நாலு கமெண்ட்ஸ் போடலாம். அதன் பின் அனுப்புங்க..

பணம் வரல்ல.... புகழ் கமெண்ட்ஸ் வராது..... ஹீ ஹீ

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

////மங்கலம் பொங்கும் இத் திரு நாளில் என்னை சூழ்ந்திருக்கும் அனானிகள்
நீங்கிட வேண்டும் -///////

ங்ணா.... இனிமே அனானிக வந்தா பொளேர்னு ஒண்ணு விடுங்கண்ணா.... அப்புறம் ஜாலியா சண்ட போட்டுக்கலாமுங்ணா.......

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

// ஹாலிவூட் ரசிகன்:
ஆங்கிலீஸ் கவி படித்து இந்த பொங்கல் நாளை அசிங்க நாள்
ஆக்கிட விரும்பவில்லை - ஆனாலும்
ஜேம்ஸ்பாண்ட் போல நிறைவான கோலமிட்டு
ஆர்னல்ட் சுபாஸ்நேக்கர் போல் அடுப்பினை பத்த வைத்து
ஜசான் சத்தாம் போல பானையுள் அரிசி போட்டு
பமீலா ஆண்டர்சன் போல பொங்கி வழிய வாழ்த்துகிறேன்! //

நான் கவி பாடுறேனா? நான் கவிதை ஒன்னு வாசித்து விளங்கிக் கொள்ளவே 10 முறை வாசிக்கணும். இதுல நான் கவிதை சொல்றேனாம். விளங்கிரும்.

ஏதோ என்னால் முடியாததை என் பெயர் மூலம் செய்திருக்கிறீர்கள். மிகவும் நன்றி.

இனிய பொங்கல் மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்.

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

// சென்னிமலை செந்தில் - என்னை சொக்க வைத்த அன்றில்
கூலிங்கிளாற்குள்ளால் என்னை லவ்சு பண்ணாது
எதிரே இருக்கும் பிகரை பார்க்கும் என் ஏஞ்சல்
இவரை நானும் காதலிக்கிறேன்! I Love you CP //

சூப்பர் மாமு...

// மங்கலம் பொங்கும் இத் திரு நாளில் என்னை சூழ்ந்திருக்கும் அனானிகள்
நீங்கிட வேண்டும் - வலையுலகில் எனக்கு இலியானா மோகம் //

கனவுக்கன்னிய மாத்தீட்டாரா??? இப்போ காஜல் இல்லயா? செல்போன்ல சிம்கார்ட்டு மாத்துற மாதிரி இல்ல இருக்கு. சொல்லிட்டு மாத்துங்கப்பா...

பி.அமல்ராஜ் said...
Best Blogger Tips

யப்பா... பொங்கல் கவியரங்கம் சூப்பர்..

பன்னிக்குட்டி கலக்கிட்டாரு..
சிபி அண்ணோய்.. //கூலிங் கிளாஸில் டீவி பொருத்திய ஓர் டெக்னாலஜி வர வேண்டும்// எப்பிடி.. உங்களால... சப்பா..
கொய்யால.. மங்கலப் பொங்கலில் பிஸியா இருந்த மணிய யாரையா இங்க இழுத்துக்கிட்டு வந்தது..?? கண்டிக்கிறேன் மை லோட்.
காட்டான் மாமா, உங்க டிரஸ் மேல இத்தனை குற்றச்சாட்டா? சரி ஒருக்காத்தான் அந்த கறுமம் புடிச்ச கோவணத்த கழுவிப் போடுங்களேன்??
மதுரன் - //ப்ளாக்கிலும் பேஸ்புக்கிலும் மங்கலம் பொங்கி// எப்பிடி பாஸ் இதில எல்லாம் மங்கலம் பொங்க முடியுமா?? ப்ளீஸ் ஹெல்ப் மீ மணி... நீங்கதானே பொங்குறதில எக்ஸ்பேர்ட்டு... அவ்வ்வ்வ்..
பன்னிக்குட்டி - ஓ.. இவரு நமிதா பார்ட்டியா? சுத்தம்.

அனுஷ்யா said...
Best Blogger Tips

இங்கே கவிபாடியுள்ள பதிவர்களில் ஐவரை மட்டுமே அறிவேன் என்றாலும் முழுக்க முழுக்க இரசித்தேன்...:))
மற்றவர்களின் பதிவுகளை மேலோட்டமாக மட்டும் வாசித்திருந்தால் இப்படி எழுதிவிட முடியாது..அருமை நண்பரே...
நன்றியும் வாழ்த்துக்களும்...

அனுஷ்யா said...
Best Blogger Tips

500 நண்பர்கள் சேர்ந்திருப்பார்கள் போல...அதற்கு ஒரு தனி வாழ்த்து...

காட்டான் said...
Best Blogger Tips

என்ன நிருபன் என்னுடைய தேசிய உடையை இப்படி கேவலப்படுத்துகிறியே..?
அதை நான் குளிக்கும்போது காலில் போட்டு"கசக்கி"தான்யா கட்டுறன். அதுக்கு பிறகுமா கப்படிக்கிறது? சரி சரி புது கோவணத்துக்கு அண்ணனின் வேட்டிய உருவினா போச்சு!!!

ஹேமா said...
Best Blogger Tips

அப்பு ராசா நிரூ...கொஞ்சம் பதிவுகளுக்கு நடுவில் இடைவெளி விட்டாத்தானே கவனிக்கலாம்.ஒரு நாளைக்கு 2-3 பதிவு போட்டா என்னப்பு செய்றது !

பிறகு என்ர கவிதை சூப்பரோ சூப்பர்.ஆனால் வௌவால் வேலியில் ஓடியது எண்டு சொல்லியிருக்கமாட்டேனே.நான் நினைச்சதை அப்பிடியே எழுதியிருக்கிறீங்களப்பு.எப்பிடி என்னை அப்பிடியே விளங்கி வச்சிருக்கிறியள்.சந்தோஷம் !

துஷியர் என்ன செய்றார் இங்க.ஊருலாப் போகேல்லையோ இன்னும்.காட்டான் மானம் கப்பலேறுது.யூனிபோமை மாத்துங்கோ !

மனம் நிறைந்த பொங்கல் திருநாள் வாழ்த்து !

Unknown said...
Best Blogger Tips

அருமை! கவியரங்கத்தில் கலந்து
கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
நேர்முக வருணணை செய்த
நிரூபருக்கும் வாழ்த்துக்கள்!


புலவர் சா இராமாநுசம்

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

//பேபிஅதிரா:
எல்லோரும் பானையிலே அரிசியிட்டு பொங்கும் நேரம் நானோ
மெல்லிய பூனைகளுடன் என் டைம்மை செலவு செஞ்சிடுவேன்
கவியரங்கில் என்னை கொண்டு வந்து கவி பாடட்டாம்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
புவியரங்கில் குழை போட்டு கொண்டு திரியும் காட்டானை - உடல்
அவிய முன்னர் உடுப்புக்களை போடச் சொல்லுங்கள் - அப்புறமா
நானும் இனிய கவி பாடுகின்றேன்! குழை போடுறாராம்! குழை!
மொதல்ல ஆதி வாசி ஆடைக்கு ஒரு முழுக்கு போடச் சொல்லுங்க;-))//

ஹா..ஹா.ஹா... நிரூபன்.. என்னை இப்பூடி மாட்டிவிட்டிட்டீங்களே!!!!... இருப்பினும் இதை விட்டா இதைச் சொல்ல வேற சந்தர்ப்பம் கிடைச்சிருக்காது அவ்வ்வ்வ்வ்:)))..

அனைத்தும் சூப்பர்... ஏன் டக்குப் பக்கென தலைப்பை மாத்திடுறீங்க, அதனால பிடிச்ச தலைப்புக்குக்கூட வரமுடியுதில்லை:(((.

நிரூபன் said...
Best Blogger Tips

@athira
அனைத்தும் சூப்பர்... ஏன் டக்குப் பக்கென தலைப்பை மாத்திடுறீங்க, அதனால பிடிச்ச தலைப்புக்குக்கூட வரமுடியுதில்லை:(((.
//

இன்று நட்சத்திர வார இறுதி நாள். அதால ரெண்டு பதிவினைப் போட்டு முடிச்சிடுவம் என்று ஓர் ஆசை தான்.

அவ்வ்வ்வ்வ்
மன்னிக்கவும்.

மகேந்திரன் said...
Best Blogger Tips

அடடா...
பொங்கலன்று அரு கும்மியாட்ட கவிஞர் குழுமம் நடந்திருக்கு...
நான் ரொம்ப தாமதமா வந்துட்டேன் போல...

என்னையும் இங்கே ஒரு கவிஞனாக மதித்து இணைத்துக் கொண்டமைக்கு நன்றிகள் சகோ....

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Angel said...
Best Blogger Tips

ஹா ஹா ஹா இப்பதான் படிச்சேன் என்னை தேன் தமிழ் பட்டிமன்றத்துக்கு நடுவராக்கியதற்கு நன்றி .

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!இப்போதான் பார்க்கக் கிடைத்தது!உழவடிச்சு, விதைச்சு,கதிர்பாத்து,அரிவும் வெட்டியிருக்கிறியள்!!!!அப்பப்ப நடுவர் போஸ்ட் குடுத்து கௌரவிக்கிறியள்.மிக்க நன்றி!!!!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails