Saturday, February 11, 2012

ஆபாசம் - நிர்வாணம் - அந்தரங்கம் - வக்கிர குணத் தமிழன்!

அனைவரும் படிக்க வேண்டிய காரசாரமான பதிவு: இங்கே முகம் சுளிக்கும் வார்த்தைகள் எதுவும் இல்லை! 
எல்லோருக்கும் வணக்கமுங்க. பதிவுலகில் உள் குத்து, ஊமக் குத்து, நேர்க் குத்து என எந்தப் பதிவு எழுதுவோராக இருப்பினும், விமர்சனங்கள், மாற்றுக் கருத்துக்கள் முன் வைக்கப்படும் போது பரிசீலிக்கும் மன உறுதி இருப்பவராக இருந்தால் மாத்திரம் எழுதுங்க. அப்படி மன உறுதி இல்லாதோர், பதிவர்களின் பதிவுகளைக் கண்டிக்கிறேன் அப்படீன்னு பதிவு எழுத ஆரம்பித்து, பதிவர்கள் யாராச்சும் எதிர்க் கேள்வி கேட்டா, ஐயோ, உங்களைச் சொல்லவில்லையே, உங்கள் மனசாட்சி ஏன் குறு குறுன்னு குடையுது அப்படீன்னு கேட்டு மழுப்பல் பதிலைச் சொல்லி எஸ் ஆக முயற்சி பண்ணாதீங்க. நீங்க ஒரு விடயத்தை கையிலெடுத்தால், சரியோ, பிழையோ கேள்வி கேட்கும் வாசகர்களுக்கு சரியான பதிலைச் சொல்லும் வண்ணம் உங்கள் பின்னூட்டங்களை எழுதப் பாருங்க. இல்லே என்னோட பதிவிற்கு என் கருத்து தான் சரி என்று சொல்லுவீங்களா இருந்தா, மத்த பதிவர்களின் கருத்துக்களை ஏற்கமாட்டேன் அப்படீன்னு எழுதி வைச்சிடுங்க! யாரையுமே தாக்காம பம்மிட்டு இருந்திடுங்க. இனிப் பதிவிற்குள் போவோமா?
நிர்வாணம்: 
வெளிநாட்டிற்கு வந்த புதிதில் மொத மொதலா ஜிம் செண்டருக்குப் போனேனுங்க. அங்கே நீச்சல் குளத்தில் நீந்துவதற்கு முன்னாடி குளிக்கனும். ஆம்பிளைங்க குளிக்கும் பக்கமா அடியேன் போனால் எல்லோரும் அம்மணமா குளிச்சிட்டிருக்காங்க. பொம்பிளைங்க பக்கமும் அப்படித் தான். எனக்கு வெட்கம் வெட்கமா வந்திச்சு. நான் மாத்திரம் உள்ளாடையுடன் குளிச்சேனுங்க.வெளிநாட்டவர்கள் எல்லோரும் அடுத்தவனைப் பற்றிய கரிசனை இன்றி, மத்தவங்க என்னா பண்றாங்க என்ற யோசனை இன்றி தாமும் தம் குளியலுமாக இருந்தாங்க. இது அவனோட பண்பாடு, கலாச்சாரம். ஆனால் நம்ம ஊர்களில் உள்ள மக்களின் மன நிலையினை இப்படியான விடயங்களில் ஒப்பிட்டுப் பாருங்கள். எமது மூஞ்சியில் நாமே காறித் துப்புகின்ற நிலைக்கு வருவோம்! தமிழனை எடை போடச் சில உதாரணங்களை முன் வைக்கிறேன். எம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்வோம்.

ஒரு பஸ்ஸில் அழகிய பெண்ணொருத்தி கொஞ்சம் இறுக்கமான ஆடை அணிந்து வந்தாலே போதும்.அங்கே உள்ள அனைத்து ஆண்களின் பார்வையும் அவள் பக்கம் திரும்பும். தியேட்டருக்கு எல்லோரும் படம் பார்க்கப் போவோம். படம் பார்க்கப் போகும் இளசுங்களில் அதிகமானோர், நடிகை இந்தப் படத்தில இன்னும் காட்டியிருக்கலாமே என்று பேசுவார்களே அன்றி, ஐயோ, இவள் பாவம் இவளும் ஓர் பெண் தானே என்று யாருமே பேசுவதில்லை! பெண்ணைச் சக மனுசியாக மதிக்கின்ற, கவர்ச்சியான பெண்களைக் கண்டாலும் கண்டு கொள்ளாத ஆண்கள் எம் சமூகத்தில் உண்டு! ஆனால் அவர்களை நாம் விரல் கொண்டு எண்ணி விடலாம். நேற்று ஒரு பதிவு எழுதினேன். ஈழ மக்களின் அவல வாழ்வு பற்றி. ஆனால் அந்தப் பதிவினைப் பத்தி யாருமே பேசலை. ரெண்டு நாளுக்கு முன்னாடி, என்னைக் கெடுத்த பொண்ணுங்கள் அப்படீன்னு ஓர் பதிவு எழுதினேன். அது ஆபாசம் என்று கொடி தூக்கிட்டாங்க. என்ன தவறு அப்படீன்னு வெளக்கம் கேட்டால், பதிவு எழுதினவரு உங்களைச் சொல்லை அப்படீன்னு சரண்டர் ஆகிட்டாரு.

நிற்க: என்னைக் கெடுத்த பெண்கள் எனும் பதிவில் என்னுடைய கல்லூரி வாழ்வில், பாடசாலை வாழ்வில் என் மன ஒருமைப்பாட்டினைக் கெடுத்த பெண்களைப் பத்தி எழுதியிருக்கேன். அங்கே ஒரு ஆபாசமும் எழுதலை. கெடுத்த எனும் சொல் ஆபாசமாம்! ஐந்திணையில் இருந்து இன்றைய காலம் வரை கெடுத்த எனும் சொல் தமிழ் அகராதியில் வருதுங்க. ஈழத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் சில சொற்கள் அடிப்படையில் வேறுபாடுகள் உண்டு. கெடுத்த என்று ஈழத்தில் சொல்லுவது என்னோட சிந்தனையை கெடுத்த, என் வாழ்க்கையை கெடுத்த எனப் பல அர்த்தங்களில் வரும். ஆனால் தமிழகத்தில் கெடுத்த எனும் சொல் ஆபாசம் என்று இன்று தான் அறிந்து கொண்டேன். ஈழத்தில் கற்பழிக்கிறது என்றால் தான் கெடுத்ததற்கு ஒப்பான பொருள் கிடைக்கும்.

மொழி அடிப்படையில் ஈழத்திற்கும், தமிழகத்திற்கும் சில முரண்பாடுகள், வேறுபாடுகள் உண்டு என்பது உண்மையே! ஈழத்தில் சாமான் என்றால் மளிகை கடையில் வாங்கும் உணவுப் பொருட்களைக் குறிக்கும். ஆனால் இதே வார்த்தையினை தமிழகத்தில் சுட்டினால் நிலமை வேறு! இணையத் தளங்களில் நடிகைகளின் அரை குறைப் படங்களினை பார்க்க வெறி கொண்ட ஓர் கூட்டம் அலையும். சினிமா கிசு கிசு எழுதினால் அதனைப் படிக்க இன்னோர் கூட்டம் வரும். எம்மில் பல தரப்பட்ட மக்கள் உள்ளார்கள். ஒவ்வோர் மனிதருக்கும் அவன் மனதைப் பொறுத்து ஒவ்வோர் வகையான ரசனை உண்டு. ஆனால் இந்த மனிதர்களின் ரசனையினை ஓர் மதத்தினை அடையாளமாக வைத்து மாற்ற முடியுமா?யாராவது சரியான பதில் கொடுங்கள்!

இஸ்லாம் மதம் ஓரினச் சேர்க்கையினை எதிர்க்கிறது. குர் ஆனில் ஓரினச் சேர்க்கை தகாத ஒன்று எனக் கூறப்பட்டுள்ளது. இஸ்லாம் ஆபாசத்தை எதிர்க்கிறது என்று கூறி இஸ்லாம் மதம் சாராத ஏனைய மக்களையும் அந்த நடை முறைகளைப் பின்பற்றும் படி ஓர் மதத்தினை முன் வைத்து சொல்லுவது சரியா?இதனைத் தமிழர்களாகிய எல்லோராலும் ஏற்க முடியுமா? எனக்கு குழப்பமாக இருக்கிறது. ஓர் இந்து பசுவதை கொடியது. பசுவினை உணவாக உண்பது தவறு என ஓர் கருத்தினை எல்லோருக்கும் சொல்லி, இதனை நீங்கள் பின்பற்ற வேண்டும். இது எங்கள் மதம் சொல்லும் கருத்து என அறிவித்தல் கொடுத்தால் அத்தனை இஸ்லாமியச் சொந்தங்களும் இதனை ஏற்றுக் கொள்வார்களா?
இஸ்லாம் மதத்தினை மையப்படுத்தி கருத்துக்களை, மதக் கோட்பாடுகளை இணையத்தில் எழுதுவோர் தம் மதம் சொல்லும் அத்தனை விடயங்களையும் சக தமிழ் மக்கள் பின் பற்ற வேண்டும் எனும் வகையில் கருத்துத் திணிப்பு செய்வது சரியா? இப்படி ஒவ்வோர் மதத்தினரும் கிளம்பினால் நிலமை என்னாகும்?இது எம் மறைநூல் கூறும் விடயம் எனத் திணிப்பது ஏனையோருக்கு மனச் சங்கடத்தை கொடுக்கும் விடயம் அல்லவா? அடுத்த உதாரணம், ஓர் இந்து மதத்தைச் சேர்ந்தவன், கிறிஸ்த்துவ மதத்தைச் சேர்ந்தவன் இணைந்து இந்த விடயங்கள் தவறு என்று சொல்லும் போது ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இஸ்லாமியர்களுக்கு இல்லை.ஆனால் இஸ்லாம் மத மறைநூல் சொல்லும் கருத்துக்களின் அடிப்படையில் இஸ்லாமியர்கள் அல்லாதோரையும் இந்தக் கொள்கைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கச் சொல்லுவது நியாயமான செயலா? எமது மதங்களின் மூலம் மக்களை நல்வழிப்படுத்த முயற்சிக்கின்றோமா? இல்லை எமது மதத்தை எல்லோரும் பின்பற்றனும் எனும் பாணியில் இவ் உலகை அடக்கி ஆள நினைக்கின்றோமா? ப்ளீஸ் யாராச்சும் தெளிவுபடுத்துங்கள்.

நாளை நான் திருமணம் செய்கிறேன். எனக்கு ஓர் பிள்ளை பிறக்கிறது. அது பருவ வயதினை அடைந்து பள்ளிக்குச் செல்கிறது.ஆனால் அந்தப் பிள்ளைக்கு பாலியல் பற்றியும், பாதுகாப்பான உறவு பற்றியும் சொல்லுவது தவறென மதங்கள் சொல்கின்றன.பெற்றோர் எவரும் அட்வைஸ் பண்ணலையே என்பதால் பாதுகப்பற்ற உறவின் மூலம் வயித்தில புழு பூச்சியை வாங்கிட்டு வந்து அந்தப் புள்ளை நின்னா; ஒரு பெற்றோர் தமது செயலை எண்ணி வருந்துவது அழகா? அல்லது பிள்ளைக்கு பாலியல் பற்றிய தெளிவினைக் கொடுக்கலையே என உணர்ந்து தமது அடுத்த பிள்ளைக்கு பாலியல் பற்றிய தெளிவினைக் கொடுக்க நினைப்பது சரியா? மதங்கள் பாலியல் பற்றிய விழிப்புணர்வை எழுதுவதை தவறெனச் சொல்கிறது என்பதற்காக எமது அடுத்த தலைமுறையினையும் கொடும் பாலியல் தொற்று நோய்க்குள் அகப்பட வைக்க இலங்கை, இந்திய வாழ் தமிழர்கள் முயற்சிப்பது சரியா?

தமிழனின் ஒரே குணம் அந்தரங்கத்தை திருட்டுத் தனமாக ரசிப்பது. இந்தக் குணத்தால் தமிழரிடையே வக்கிர புத்தி + வக்கிர குணம் தான் வளர்கின்றது. மறைக்கின்ற பொருளுக்கே மதிப்பதிகம் என்பது கவிஞர் வைரமுத்துவின் வரி. இதுவே உலகியல் யதார்த்தமும் கூட. ஆனால் எம் சந்ததியிடம், நீ இவற்றை பற்றிப் பேசவே கூடாது. மதம் சொல்கிறது. இது தப்பு! ஆகவே மதத்தின் வழி நீ நடக்க வேண்டும். நீ பிறப்பால் ஓர் இந்துவாக இருந்தாலும் பிற மதம் சொல்லும் சொற்படி நடக்க வேண்டும் என கூறி, ஓர் வரையறைக்குள் எம் சந்ததியினை வளர்த்து வந்தால் என்றோ ஓர் நாள் அந்தப் பிள்ளை பக்குவப்படும். இம்புட்டு நாளா என்னை இந்த விடயத்தினை மறைத்து வைத்திருந்தார்களே என அறியும் ஆவலில் அந்தப் பிள்ளையும் செயற்படாது என்பதை உறுதியாக யாராலும் கணிக்க முடியுமா? இந்தச் சூழலில் சீரழிவுகள் தான் பெருகுமே அன்றி, அந்தப் பிள்ளைக்கு நல்ல சிந்தனைகள் கிடைக்கப் போவது இல்லை! இத்தகைய இக்கட்டான சூழ் நிலையில் எம் பிள்ளைகளை நல் வழிப்படுத்த நாம் என்ன வழியினைக் கையளலாம்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்! 

யாரிடமாவது நல்ல ஆலோசனைகள் இருந்தால் முன் வையுங்கள். பதிவிற்குத் தொடர்புடைய கருத்துக்களைப் பின்னூட்டமாக எழுதினால் நிச்சயமாகப் பதில் கூறுவேன். பதிவிற்கு தொடர்பில்லாக கருத்துக்களை, பதிவினை முழுமையாகப் படிக்காது யாரும் எழுத வேண்டாம். அவற்றுக்குப் பதில் வழங்கப்பட மாட்டாது. இப்போதிருந்து சரியாக எட்டு மணி நேரம் கழித்து அடுத்த பதிவு வரும். அது வரை உங்கள் கருத்துக்களை முன் வைக்கலாம். அடுத்த பதிவு வெளியான பின்னரும்,கருத்துக்கள் கிடைத்தால் தொடர்ந்து விவாதிப்போம்.

பிற் சேர்க்கை: ஓரினச் சேர்க்கை பற்றி தமிழ்மண கட்டண சேவையில் இணைந்து இக்பால் செல்வன் அவர்கள் எழுதியதன் காரணத்தினால் தான் அவருக்கு இன்று இஸ்லாம் மதம் தண்டனை கொடுத்து அவரைப் பதிவுலகை விட்டு விரட்டியடித்துள்ளதாக சிலர் பிரச்சாரம் செய்றாங்கோ.

தமிழ்மண கட்டண சேவையில் அடியேன் இணைந்ததால் எனக்கு நன்மை ஒன்னுமே இல்லைங்கோ. தமிழ்மண கட்டண சேவை இல்லைன்னாலும் எனக்கு ஒரேயளவு வாசகர்கள் தான் எப்போதும் வருவாங்க. கட்டண சேவை இருந்தாலும் எனக்கு அதேயளவு வாசகர்கள் தான் இப்பொழுதும் வாறாங்க. அப்புறம் எதுக்கடா நீயி கட்டண சேவையில் இணைஞ்சே என்று கேட்போருக்காக சில பதில்கள்.ஏலவே பல பதிவுகளில் பதில் சொல்லிட்டேன்! மறுபடியும் சொல்றேன். தமிழ்மணம் ஓர் திரட்டி. அதன் முகப்பில் போய் குந்தியிருந்து கொண்டு தமிழ்மணத்தை அவதூறு செய்து எழுதுவது தான் நாகரிகம் எனப் பல பதிவர்கள் நினைக்கும் நாளில் நான் கொஞ்சம் வித்தியாசமா யோசித்தேன்,

நான் எழுதும் பதிவுகள் தமிழ்மணத்தில் பல இடங்களிலும் திரட்டப்படுவதால், எம்புட்டு நாளைக்கு ஒரு திரட்டி மூலம் ஓசியில சேவையினைப் பெற முடியும். அதனால என்னால முடிஞ்ச ஒரு தொகையினைச் செலுத்தி தமிழ்மணத்தில் இணைஞ்சிருக்கேன். அப்புறமா, கடந்த வருட இறுதியில் பதிவுலகை விட்டு விலகுவதா சொல்லியிருந்தேன். பின்னர் பல நண்பர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக ஓய்வு நேரம் கிடைக்கும் போது எழுதிட்டு வாரேன். இந்த வருட ஆரம்பத்தில் என்னோட பதிவுகளில் ஆல்ரெடி சொல்லிட்டேன். பெப்ரவரி மாதத்துடன் நான் கொஞ்சம் ஓரமா ஒதுங்கப் போறேன். அதனால பதிவுகள் வராது அப்படீன்னு!
இதனைக் கூடப் புரிஞ்சுக்காம, இப்பவே சிலர் ஆரம்பிச்சிட்டாங்க. கட்டண சேவையில் இணைஞ்சு ஆபாசம் எழுதுவோர் காணாமற் போயிடுவாங்க. மறைநூல் நிச்சயம் இவர்களுக்கு தண்டனை கொடுக்கும் அப்படீன்னு சிலர் புலம்புறாங்க. அப்போ நான் பதிவுலகை விட்டு போன பின்னாடி, எங்கள் மதம் நல்ல தண்டனை குடுத்திருக்கு அப்படீன்னு சொல்லி உங்களையும் சிலர் மூளைச் சலவை செஞ்சிடுவாங்க பதிவர்களே! ஜாக்கிரதை! ஆபாசம் என்றால் என்ன என்று யாராச்சும் சரியான விளக்கம் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். ஏன்னா அப்படி ஒன்றை நான் எழுதுவதில்லை என்று சொல்லி பல மாதங்கள் ஆகிட்டு! அவ்வ்வ்வ்வ்வ்வ்

பதிவினை முழுமையாகப் படிக்காது, பதிவிற்கு தொடர்பில்லாது யாருமே கருத்துரை எழுத வேணாம். இது தாழ்மையான வேண்டுகோள்.
பதிவு தொடர்பாக விவாதிக்க விரும்பும் அன்பர்களின் கருத்துக்களை வரவேற்கிறேன். பின்னூட்ட பெட்டி திறந்த நிலையில் தான் இருக்கு. அப்படி இருக்கும் பட்சத்தில் சும்மா, புதுசு, புதுசா ப்ளாக் தொறந்து அதில இந்தப் பதிவு பத்தி எழுதிட்டு, என்னை காணலையே அப்படீன்னு ஏங்க வேணாம். ஏன்னா நான் ரொம்ப பிசி, நீங்க பதிவு போடுவது எனக்கு தெரியனுமில்லே!


77 Comments:

ஆமினா said...
Best Blogger Tips

முழுசா இன்னும் படிச்சு முடிக்கல.. முதல் பாரா மட்டும் படிச்சேன். மிச்சத்த அப்பறமா வாசிக்கிறேன். இபோதைக்கு

//அப்படி மன உறுதி இல்லாதோர், பதிவர்களின் பதிவுகளைக் கண்டிக்கிறேன் அப்படீன்னு பதிவு எழுத ஆரம்பித்து, //

யோ நிரூ
உங்க உள்குத்துபதிவெல்லாம் நீங்க படிக்கலையா? யாராவது நீங்க என்னைய தானே சொன்னீங்கன்னு கேட்டா மழுப்புவதில்லைன்னு சொல்லுங்க பாக்கலாம்??

மிச்சத்த அப்பறமா வாசிச்சு சொல்றேன்

Anonymous said...
Best Blogger Tips

இஸ்லாம் மதம் கூறும் காலத்துக்கேற்ற நல்ல விசயங்களை நாம் மத வேறுபாடின்றி ஏற்கலாம்.ஆனால் காலத்துக்கு ஒவ்வாத கட்டுப்பாடுகளை எந்த மதம் போதித்தாலும் அதை தூக்கி எறிந்து விட்டு வாழனும் என்பதே என் கருத்து.பாலியல் பேசினால் குற்றம் என எந்த மதம் கூறுவதையும் இக்காலத்தில் நாம் ஏற்காமல் இருப்பதே நல்லது நிரூபன்

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆமினா

யோ நிரூ
உங்க உள்குத்துபதிவெல்லாம் நீங்க படிக்கலையா? யாராவது நீங்க என்னைய தானே சொன்னீங்கன்னு கேட்டா மழுப்புவதில்லைன்னு சொல்லுங்க பாக்கலாம்??

மிச்சத்த அப்பறமா வாசிச்சு சொல்றேன்
//

விக்கி அண்ணர் பத்தி உள்குத்து எழுதிட்டு நாம விவாதிச்சது நீங்க படிச்சீங்க தானே!
அதுக்கு பின்னருமா இப்படி ஓர் கேள்வி கேட்கிறீங்க?

Thava said...
Best Blogger Tips

என்னாது இந்த மாதத்தோடு விலக போறீங்களா ?? ஐயோ ரொம்ப மிஸ் பன்னுவேன்..கொஞ்சம் காலத்தை தள்ளி போடக்கூடாதா ?? சரி உங்க இஷ்டம்...

நிரூபன் said...
Best Blogger Tips

@கூகிள் சிறி

இஸ்லாம் மதம் கூறும் காலத்துக்கேற்ற நல்ல விசயங்களை நாம் மத வேறுபாடின்றி ஏற்கலாம்.ஆனால் காலத்துக்கு ஒவ்வாத கட்டுப்பாடுகளை எந்த மதம் போதித்தாலும் அதை தூக்கி எறிந்து விட்டு வாழனும் என்பதே என் கருத்து.பாலியல் பேசினால் குற்றம் என எந்த மதம் கூறுவதையும் இக்காலத்தில் நாம் ஏற்காமல் இருப்பதே நல்லது நிரூபன்
//

கூகிள்சிறீ,
பாலியல் பற்றி பேசுவதே இறைக்கு ஒவ்வாத செயல் என்று
அந்த மதத்தைப் பின்பற்றுவோருக்கு போதிப்பது ஓக்கே!
ஆனால்
ஏனைய மதத்தவருக்கும் இதே கருத்தினைத் திணிப்பதை ஏற்க முடியுமா?

Thava said...
Best Blogger Tips

இன்னொரு முறை பதிவை வாசிக்கனும்..அர்த்தங்கள் ஏராளம் நிறைந்த பதிவிது..தங்கள் எழுத்துக்கள் என்ன சொல்வது..நெஞ்சை அள்ளுகிறது.என் நன்றிகள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Kumaran

என்னாது இந்த மாதத்தோடு விலக போறீங்களா ?? ஐயோ ரொம்ப மிஸ் பன்னுவேன்..கொஞ்சம் காலத்தை தள்ளி போடக்கூடாதா ?? சரி உங்க இஷ்டம்...
//

நண்பா, கடந்த வருட இறுதியில் எடுக்கப்பட்ட முடிவு.
தங்கள் அன்பிற்கு நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@Kumaran

இன்னொரு முறை பதிவை வாசிக்கனும்..அர்த்தங்கள் ஏராளம் நிறைந்த பதிவிது..தங்கள் எழுத்துக்கள் என்ன சொல்வது..நெஞ்சை அள்ளுகிறது.என் நன்றிகள்.
//

எழுத்துக்கள் பத்தி கருத்து வேணாம் நண்பா,
எனக்கு பதிவு தொடர்பான தங்கள் கருத்துக்கள் தான் வேண்டும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Kumaran
குமரன் உங்கள் கருத்தினை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

Rathna said...
Best Blogger Tips

நல்ல பதிவு, சமயம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுங்கள்.

K said...
Best Blogger Tips

மச்சி, நிரூ இப்பதிவில் நீ இரண்டு விதமான கருத்துக்களை முன் வைத்திருக்கிறாய்! ஒன்று உள்குத்து போடுபவர்கள் பற்றியது! மற்றது முஸ்லிம் பதிவர்கள் பற்றியது!

முதலிம் இப்பதிவினால், மீண்டும் பதிவுலகில் சண்டையோ, சச்சரவுகளோ வந்துவிடக் கூடாது என்பதில், ப்ளாக் ஓனர் என்ற ரீதியில் நீ கவனமாக இருக்க வேண்டும்! இது ஒரு அன்பான வேண்டுகோள்!

இனி உள்குத்துக்காரர்கள் பற்றிப் பார்க்கலாம்! உள்குத்து போடுவோரில் பலர், தமக்கும்திரும்ப உள்குத்து வரும் என்று நினைப்பதில்லை! இன்னொன்று தனியே நின்று எதிர்கொள்ளும் தைரியமும் இல்லை!

என்னைப் பொறுத்தவரையில் இப்போது, இப்போது பதிவுலகில் உள்குத்துக்கள் குறைந்திருப்பதாக கருதுகிறேன்! எல்லாவற்றையும் தூக்கி வீசிவிட்டு, அவனவன் தன் தன் வேலையில் மூழ்கிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்!

ஆகவே உள்குத்து போடுபவர்கள் பற்றி நாம் அதிகம் அலட்டவேண்டியதில்லை !

மச்சி, வன்னியில இயக்கம் சண்டைக்கு தயாராகும் போது ஏராளமான மருத்துவப் பொருட்கள், சவப்பெட்டிகள் ( வித்துடல் பேழை ) இதெல்லாத்தையும் தயார் செய்து வைத்துக்கொண்டுதான் சண்டைக்குப் போவார்கள்!

காரணம் இயக்கம் தாக்கும் போது ஆமிக்காரன் என்ன புளியம்பழமா புடுங்குவான் இல்லைத்தானே? ஆமியும் திருப்பி சுடுவான்! இயக்கம் சாக வேண்டி வரும்! காயம் வரும்!
ஆகவே சண்டைக்குப் போகும் போது, இதையெல்லாம் எதிர்பார்த்துக்கொண்டுதான் போக வேண்டும்!
\இன்னொன்று நாம் ஏ கே 47 ஆல் சுடும் போது, நம் எதிரியும் ஏ.கே 47 ஆல் தான் சுடுவான் என்றில்லை! அவன் பீ கே ஆலும் அடிப்பான்! M.16 ஆலும் அடிப்பான்/!

அவனிடம் போய், நான் ஏ கே யால் தான் சுட்டேன்! ஸோ நீயும் ஏ கே யால் தன் சுட வேண்டும் என்று வேண்டுகோள் வைக்க முடியாது!

உனக்கும் விக்கிக்கும் நடந்த சமரின் போது இதுதான் நடந்திச்சு! விக்கி என்ன செய்தார் ஒரு கிளிப்பைக் கழட்டி எறிஞ்சார்! ( கிரனைட் ) ஏ.கே 47 ஆல் ரெண்டு ரவுன்ஸ் சுட்டார்!

அதுக்கு நீயும் ஒரு கிரனைட்டைக் கழட்டி எறிந்துவிட்டு பேசாம இருந்திருக்கலாம்! ஆனா நீ 152 மில்லி மீட்டர் அட்லறிய கொண்டு போய் குண்டு மழை பொழிஞ்சாய்!

அதைப் பார்த்துக்கொண்டு இருந்த பார்வையாளர்களுக்கு, இது அநியாயம் என்று பட்டது! ஹி ஹி ஹி ஹி ஹி!

அதனால் தான் விக்கிக்கு உதவி செய்ய பலர் வந்தார்கள்! பிரச்சனை வேறுதிசை நோக்கி சென்றது!

எல்லோரும் சொன்னார்கள் விக்கி அவ்வளவு சீரியஸா எழுதலியே, நிரூபன் எதுக்கு இம்புட்டு தாக்குறான்னு?

எனவே, எதிர்காலத்தில் யாராவது யாருக்காவது உள்குத்து போட நினைத்தால், முதலில் உள்குத்து போட்டவர் எத்தனை சதவீதம் போட்டார் என்பதை அளவெடுத்து அதற்குத் தகுந்த உள்குத்து போடவும்!

நான் கூட பாலாவுக்கு போட்ட உள்குத்து கொஞ்சம் அதிகம் தான் என்று பின்னர் ஃபீலிங்கா இருந்திச்சு!

ஹி ஹி ஹி ஹி ஹி எனவே உள்குத்து பதிவர்கள் “ மோதல் சமநிலையைக் “ கடைப்பிடிக்குமாறு அனைத்துலக உள்குத்து பதிவர்கள் சங்கம் சார்பாக வேண்டுகிறேன்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ரத்னாநல்ல பதிவு, சமயம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுங்கள்.
//

நன்றி அம்மா.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

என்னைப் பொறுத்தவரையில் இப்போது, இப்போது பதிவுலகில் உள்குத்துக்கள் குறைந்திருப்பதாக கருதுகிறேன்! எல்லாவற்றையும் தூக்கி வீசிவிட்டு, அவனவன் தன் தன் வேலையில் மூழ்கிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்!
//

மச்சி, நான் பழைய கதைகளை மறந்து பல நாளாச்சு!
இந்தப் பதிவு நேற்றைய சுவனப்பிரியனின் பதிவு தொடர்பாக எழுதப்பட்ட பதிவு!

ஆகவே நாம் நிகழ்காலத்தை பத்தி பேசுவோம்! இறந்த காலம் நமக்கு வேணாம்!

K said...
Best Blogger Tips

மச்சி நான் ஒரு இந்து! நீயும் ஒரு இந்து! நீயும் நானும் இஸ்லாமிய கொள்கைகளையோ, கோட்பாடுகளையோ மதிக்க வேண்டியதில்லை! எனது மனைவியும், உனது மனைவியும் ஹிஜாப் அணிய வேண்டிய அவசியம் இல்லை!

அதே போல சுவனப்பிரியனும், சிராஜும் இஸ்லாமியர்கள்! அவர்கள் இந்துமத கொள்கைகளையோ கோட்பாடுகளையோ பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை! விபூதியோ, பொட்டோ வைக்கவேண்டியதில்லை!

ஆனால் நாங்கள் நாலு பேருமே தமிழர்கள்! எனவே, நானும் நீயும் ஏதேனும் ஒரு தவறுவிடும் போது, சுவாவும், சிராஜும் அதனைத் தவறென்று சுட்டிக்காட்டுவதில் தப்பேதும் இல்லை!

என்னைப் பொறுத்தவரை சுவாவும், சிராஜும் ஒரு தோழமையோடு, அன்பாகவே சுட்டிக் காட்டியதாகத் தெரிந்தது! அதனால் தான் அங்கு நான் கமெண்டு போடப் போனேன்!

மேலும் அவர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக நாம் கேட்டு நடக்கவேண்டிய அவசியம் இல்லை! சக தமிழன் என்ற ரீதியில் அவர்கள் சொன்னார்கள்! அப்படிச் சொல்வதற்கான உரிமையும் அவர்களுக்கு உண்டு! அதனை நாம் இல்லை என்று மறுத்தால், பின்னொரு நாளில் “ இன ஒற்றுமை பற்றியோ, மத ஒற்றுமை பற்றியோ” பேச தகுதி அற்றவர்கள் ஆகிவிடுவோம்!

என்னைப் பொறுத்தவரை அவர்கள் இருவரும் பக்குவமாகச் சொன்னார்கள்! நாமும் அதற்கு மதிப்பளித்தோம்! மேட்டர் முடிஞ்சு போய்ச்சு!

அதற்குப் பின்னர் வந்த இன்னொருவர், கோபம் வரும் வகையில் கருத்து சொன்னார்! காணாமல் போவோம் என்றும், கண்டிக்கிறேன் என்றும் சொன்னார்!

மாச்சி நமது கொள்கை என்ன? கை கொடுக்கிறவனுக்கு கை கொடுப்போம்! காலை வாருபவனுக்கு காலை வாரியே ஆகவேண்டும்!

ஏனென்றால் நாம் எதிலும், குறைந்தவர்களோ, சளைத்தவர்களோ, பயந்தவர்களோ அல்லர்!

“ விபச்சாரமா? அது தப்பு மச்சி! கொஞ்சம் யோசிச்சுப்பாரு” என்று சுவாவும், சிராஜும் சொன்னதில் ஒரு தோழமை தெரிந்தது!

ஆனால், மற்றவரின் கருத்திலே மிரட்டலும், திணிப்பும் இருந்திச்சு! கடுமையாக கோபமும் வந்திச்சு! ஆனால், மறுபடியும் மறுபடியும் நாம் மோதி, எதனைக் காணப் போகிறோம்? என்பதால், சுவனப்பிரியனுக்காகவே பொறுமையாக இருந்தேன்!

கருத்து சொல்லவும், அறிவுரை சொல்லவும் எல்லோருக்கும் உரிமை இருக்கு! ஆனால், யரும் யாருக்கும் எதையும் திணிக்க முடியாது! திணிக்கவும் கூடாது !

சுவனப்பிரியனின் கருத்துக்களில் உனக்கு ஏதேனும் குறைகள் குற்றங்கள் இருந்தால் நீயே பேசித் தீர்த்துக்கொள் மச்சி! நீயும் ஆள் திரட்ட வேண்டாம்! சுவனப்பிரியனும் ஆள் திரட்ட வேண்டாம்!

இரண்டு பேருக்கு நடுவே தோன்றும் பிரச்சனைக்கு, இரண்டு பேருமே ஆள் திரட்டுவதால் தான், பிரச்சனை பெருசாகி, பூதாகரமாகிறது! இதுதான் பதிவுலகில் கடந்த காலத்தில் நடந்ததும்!

இங்கே நிரூபனும் ஆள் திரட்ட வேண்ட்டாம்! சுவனப்பிரியனும் ஆள் திரட்ட வேண்ட்டாம்! இருவருமே தனியே உக்காந்து பேசுங்கப்பா!


இவ்வளவும் தான் எனக்குத் தோணுது மச்சி!

சார்வாகன் said...
Best Blogger Tips

வண்க்கம் சகோ
நல்ல பதிவு.பாலியல் கல்வி என்பது மிக அவசியம் என்பது என் கொள்கை.நம் உடல் குறித்த சில புரிதல்கள் கற்பது மிகவும் நல்லது.ஆனால் இதனை கத்தி மெல் நடப்பது போல் கையாளவேண்டும்.
இதில் சிலருக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்க்லாம்.இகாலகட்டத்தில் ஒருவர் விரும்பும்த்கவலி தேடிப் ப(பி)டிப்பது பெரிய விடயம் அல்ல.மற்றபடி மதங்களின் குறுக்கீடு என்பது இதில் தேவையற்றது.
மத சார்பற்ற ஜனநாயக நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செய்யும் எந்த செயலையும் வேறு எதன் பேரிலும் குற்றம் கூற முடியாது.!!!!!!!!!
நன்றி

அம்பலத்தார் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
//எனவே, எதிர்காலத்தில் யாராவது யாருக்காவது உள்குத்து போட நினைத்தால், முதலில் உள்குத்து போட்டவர் எத்தனை சதவீதம் போட்டார் என்பதை அளவெடுத்து அதற்குத் தகுந்த உள்குத்து போடவும்! //
மணி உள்குத்து போடுறது பற்றி ரொம்ப நல்ல விசயம் சொல்லியிருக்கிறியள். அது சரி அந்த உள்குத்து எத்தனை வீதம் என்றதை அளக்கிறதுக்கு கருவி இருந்தால் எங்கே வாங்கல்லாம் என்று சொன்னால் உதவியாக இருக்குமல்லோ

அம்பலத்தார் said...
Best Blogger Tips

நிரூபன், இஸ்லாமிய கருத்து திணிப்பு பற்றிய உங்க கருத்து பெரும்பாலும் உண்மையாகவே இருக்கிறது. அண்மையில் நான் அனைத்து மதங்களிலும் உள்ள சில தவறுகளை சுட்டிக்காட்டி ஒரு பதிவு எழுதினேன். அந்தப்பதிவிற்கு எதிராக இஸ்லாமிய அன்பர்கள்மட்டுமே கொடி தூக்கினாங்க. இதுதான் யதார்த்தம்.

suvanappiriyan said...
Best Blogger Tips

//ஹி ஹி ஹி ஹி ஹி எனவே உள்குத்து பதிவர்கள் “ மோதல் சமநிலையைக் “ கடைப்பிடிக்குமாறு அனைத்துலக உள்குத்து பதிவர்கள் சங்கம் சார்பாக வேண்டுகிறேன்!//

அதை நான் வழி மொழிகிறேன்!

ப.கந்தசாமி said...
Best Blogger Tips

படித்தேன். கருத்து ஒன்றும் இல்லை.

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

சகோ!நிரூ.பதிவு சார்ந்து இரண்டு விசயங்களை தொட நினைக்கின்றேன்.

இந்த ப்திவு குறித்து பதிவர் சுவனப்பிரியன் பதிவுக்கு நானும் கடைசி நேரத்தில் பின்னூட்டம் போட்டேன்.நீங்களும்,ஐடியாவும் படித்தீர்களா என்று தெரியவில்லை.நீங்கள் இருவரும் தலைப்புக்கள் குறித்தும்,தொடும் பொருள் குறித்துமான விமர்சனங்களும் எனக்குண்டு.ஆக்கபூர்வமான பதிவுகளைக் கொண்டு வரலாமே என்ற ஆதங்கமும் உண்டு.உங்களுக்கான களம் இதுவல்ல என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயம்.

இரண்டாவதாக மதம் குறித்தும் சில வரிகள்.சென்ற வாரம் முகமதுவின் பிறந்த நாளுக்கு சவுதி அரேபியா மண் சார்ந்த ஒருவர் ட்விட் செய்யும் போது ”உன்னைப்பற்றிய விசயங்களை நேசித்தேன்.உன்னைப்பற்றிய விசயங்களை வெறுக்கவும் செய்தேன்.உன்னைப் பற்றிய சில விசயங்கள் புரியவும் இல்லை” என்ற வரிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமென்று 10000 பேர் டிவிட்டர் கூட்டம் கூடி விட்டார்களாம்.ஒரு மதத்தைப் பற்றி மூன்று வரிகளில் இதை விட யாரும் அழகாக சொல்லி விட முடியாது.

எனவே மதம் சார்ந்த சிந்தனைகள் அவரவர் சுயம் சார்ந்த ஒன்றாக இருக்கும் பட்சத்தில் பிரச்சினையில்லை.பொதுவெளிக்கு வரும்போது டிவிட்டுபவனுக்கும் பிரச்சினை.மதம் கடந்து யோசிப்பவனுக்கும் அவஸ்தை.

இப்போதைக்கு மதம் சார்ந்த பதிவுகள் குறைந்த புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதை வரவேற்போம்.நன்றி.

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!
பாலியல் கல்வி கட்டாயம் தேவை என்பதே எனது நிலை.. மற்றது திரட்டிகளை பற்றி எனக்கு தெரியாது என்பதை விட அது என்னை போன்ற வாசகர்களுக்கு தேவை அற்ற விடயம்..!!

காட்டான் said...
Best Blogger Tips

ஆரம்பத்தில் நான் முஸ்லிம் பதிவர்கள் பதிவுகள் படித்ததில்லை.. இப்போது அவர்கள் பதிவுகளையும் அதிகமாக படிக்கின்றேன். சிராஜ்,ஆசிக்,ஹைதர் அலி போன்றோர் பதிவுகளில் நல்லவிடயங்கள் இருந்தால் ஏற்றுக்கொள்வதில் எனக்கு என்றுமே சங்கடம் வந்ததில்லை..!!

தனிமரம் said...
Best Blogger Tips

நண்பா நிரூபனே !
இந்த பதிவு பற்றி நான் ஒன்றும் சொல்ல மாட்டன் ஆனால் நேற்று ஒரு சுவர்னப்பிரியனுடன் தனிமரமாக மோதினேன் என் கேள்விக்கு ஒரு அனானி பன்னாடை பதில் தந்தது  சுவர்னப்பிரியனுட  விவாதிக்க நான் தயார்! நானும் இந்து மதவாதி தினிக்கவில்லை கூட்டம் சேர்க்கவில்லை. அவருடன் மற்றும் படி கூட்டம் சேர்ப்பதை தவிருங்கள் தொப்பி பொறுந்தியவர் போட்டுக்கொள்ளுங்கள்;(இது பழமொழி) தமிழ் தெரிந்தால்??? ஆனால் என்ன எழுதுவது என்பது படைப்பாளியின் சுதந்திரம் இவர்களுக்கு ஈழம் பிடிக்கவில்லை என்றால்/பாலியல் கல்விபற்றி விவாதிக்க வாரலாம் ஆனால் வரமாட்டார்கள் மதம் என்பார்கள் நானும் முஸ்லிம் நண்பருடன் வாழ்ந்தவன் இப்படியானவருடன் பேசுவதே கேவலம்!!!

விச்சு said...
Best Blogger Tips

நீங்க சொன்ன மாதிரி நிறைய விசயங்களை ஒழிச்சு வச்சு பேசித்தான் இன்றைய சமுதாயத்தில் பாலியல் கொடுமையும் வன்முறையும் அதிகாமாயிருக்கு. டேட்டிங் என்ற பெயரில் எல்லாமும் நடகுது. 9ம் வகுப்பு மாணவன் ஆசிரியரை கொலை செய்கிறான்.நிறைய செய்திகளை பெற்றோர்கள் பிள்ளைகளிடம் விவாதிக்க வேண்டும்.நீங்களெழுதுவது எதுவுமே ஆபசம் இல்லை. சிலபேர் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு கருததுக்கள் சொல்லிவிடுவார்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

ஆனால் நாங்கள் நாலு பேருமே தமிழர்கள்! எனவே, நானும் நீயும் ஏதேனும் ஒரு தவறுவிடும் போது, சுவாவும், சிராஜும் அதனைத் தவறென்று சுட்டிக்காட்டுவதில் தப்பேதும் இல்லை!
//

தமிழர்கள் தவறு விடும் போது சக தமிழனாகச் சுட்டிக் காட்டலாம். இங்கே எதற்கு மச்சி சிராஜ் ஐ பத்தி நீ இழுக்கிறாய்.
அவருண்டு, அவர் வேலையுண்டு என இருக்காரு. அவரை மையப்படுத்தி நான் இப் பதிவினை எழுதலை! ஆனால் சுவனப்பிரியன் அவர்களின் பதிவில் தர்க்க ரீதியான கேள்விகளை வைத்தேன்.

பதிவெழுதிய அன்று ஓர் பதிலும், இன்று ஓர் பதிலும் சொல்லுகிறார். இது ஊடகனுக்கு அழகா?

தமிழனாக, சக தோழனாக ஓர் கருத்தைச் சொல்லுவதை எப்போதும் நான் மதிக்கிறேன்!

லாஜிக் அடிப்படையில் நான் இப் பதிவில் கேட்டிருப்பது உனக்குப் புரியவில்லை என நினைக்கிறேன்.

ஒரு நூல் இப்படிக் கூறுகிறது எனக் கூறி,
ஒரு நூலை ஆதாரம் காட்டி, சொல்லுவது போல, இந்துக்கள், கிறித்துவர்கள்
தமது மத நூலை ஆதாரப்படுத்தி இஸ்லாமியச் சொந்தங்களுக்கு கருத்துரைகளைச் சொன்னால் ஏற்க முடியுமா?
இதற்குச் சுவனப்பிரியன் என்ன சொல்லவருகின்றார்?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

மேலும் அவர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக நாம் கேட்டு நடக்கவேண்டிய அவசியம் இல்லை! சக தமிழன் என்ற ரீதியில் அவர்கள் சொன்னார்கள்! அப்படிச் சொல்வதற்கான உரிமையும் அவர்களுக்கு உண்டு! அதனை நாம் இல்லை என்று மறுத்தால், பின்னொரு நாளில் “ இன ஒற்றுமை பற்றியோ, மத ஒற்றுமை பற்றியோ” பேச தகுதி அற்றவர்கள் ஆகிவிடுவோம்!
//

தனிப்பட்ட ரீதியில் நானும் யாரையும் பகையாளிகளாக கருதுவதில்லை.
நமக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் எழுதுகிறோம். அவ்வளவும் தான்.
எழுத்துலகில் இவர் எதிரி, இவர் கெட்டவர் என ஒதுக்கி வைக்கும் மனப்பான்மை வேணாம்! அன்பு நண்பர்களிடம் அடியேனுக்கு உள்ள சில சந்தேகங்களை கேட்டிருக்கிறேன்.

ஸோ....இப்போது சில கருத்துக்களைத் தர்க்க ரீதியாக விவாதிக்க வேண்டும்!
இதற்கு தர்க்க ரீதியான பதில்களை சுவனப்பிரியன் சொல்லுவாரா?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

அதற்குப் பின்னர் வந்த இன்னொருவர், கோபம் வரும் வகையில் கருத்து சொன்னார்! காணாமல் போவோம் என்றும், கண்டிக்கிறேன் என்றும் சொன்னார்!
//

ஹி ஹி ஹி.

மச்சி என்னுடைய கருத்துக்களுக்கு சுவனப்பிரியன் ஓர் தெளிவான பதிலைக் கொடுத்திருந்தால் நான் இப்படி ஓர் பதிவினை எழுதியிருக்கவே மாட்டேன்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
சுவனப்பிரியனின் கருத்துக்களில் உனக்கு ஏதேனும் குறைகள் குற்றங்கள் இருந்தால் நீயே பேசித் தீர்த்துக்கொள் மச்சி! நீயும் ஆள் திரட்ட வேண்டாம்! சுவனப்பிரியனும் ஆள் திரட்ட வேண்டாம்! //

பரதேசி,
எதுக்கு இப்போ நீ ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்கிறாய்?

சுவனப்பிரியனுக்கும், எனக்கும் உள்ள கருத்து முரண்பாடுகளை விவாதத்தில் பொதுக் கருத்தாக்கி
விவாதிக்கும் நோக்கில் வைத்திருக்கிறேனே தவிர,
இது அவரும் நானும் பேசித் தீர்க்க வேண்டிய விட்யம் அல்ல
அனைவரும் பேசித் தீர்க்க வேண்டிய விடயம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சார்வாகன்
வண்க்கம் சகோ
நல்ல பதிவு.பாலியல் கல்வி என்பது மிக அவசியம் என்பது என் கொள்கை.நம் உடல் குறித்த சில புரிதல்கள் கற்பது மிகவும் நல்லது.ஆனால் இதனை கத்தி மெல் நடப்பது போல் கையாளவேண்டும்.///

வாங்கோ சகோ,
சூப்பராச் சொல்லியிருக்கிறீங்க.
இந்தக் கல்வி தவறு என்று ஓர் மதம் சொல்லுகிறது அதனைப் பின்பற்ற வேணாம்,

பாலியல் கல்வி பத்தி எழுதினால் மத ரீதியில் உனக்கு தண்டனை கிடைக்கும் எனச் சொல்லுகிறார்களே! இப்படியானவர்களின் மன நிலை எப்போது மாறும்?

நிரூபன் said...
Best Blogger Tips

@சார்வாகன்

தேடிப் ப(பி)டிப்பது பெரிய விடயம் அல்ல.மற்றபடி மதங்களின் குறுக்கீடு என்பது இதில் தேவையற்றது.
மத சார்பற்ற ஜனநாயக நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செய்யும் எந்த செயலையும் வேறு எதன் பேரிலும் குற்றம் கூற முடியாது.!!!!!!!!!
நன்றி
//

உண்மை தான்,
இணையத்தில் எவர் வேண்டுமானாலும், எவற்றையும் தேடிப்பிடித்துப் படிக்கலாம்,.
ஆனால் இருளில் வாழும் எம் சமூகத்தில் உள்ள சில மக்களுக்கு ஒளியூட்டும் நோக்கில் விடிவினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில்
பள்ளிகளில் இப்படியான கல்விகள் அறிமுகப்படுத்துவது தவறில்லை என்று சொல்லுகிறது உளவியல் அமைப்புக்கள்.

ஆனால் என்றோ ஓர் காலத்தில்
தான் வாழும் காலத்திற்கு ஏற்றதாக உருவாக்கப்பட்ட மதங்களின் அடிப்படையில்
இன்றைய சூழலில் மதங்களைப் பின்பற்ற வேண்டும் எனச் சொல்லுவது கவலையான விடயம் அல்லவா?

நிரூபன் said...
Best Blogger Tips

@அம்பலத்தார்

மணி உள்குத்து போடுறது பற்றி ரொம்ப நல்ல விசயம் சொல்லியிருக்கிறியள். அது சரி அந்த உள்குத்து எத்தனை வீதம் என்றதை அளக்கிறதுக்கு கருவி இருந்தால் எங்கே வாங்கல்லாம் என்று சொன்னால் உதவியாக இருக்குமல்லோ
//

ஹே ஹே ஹே

அதைத் தானே நானும் தேடிக்கிட்டிருக்கேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@அம்பலத்தார்

நிரூபன், இஸ்லாமிய கருத்து திணிப்பு பற்றிய உங்க கருத்து பெரும்பாலும் உண்மையாகவே இருக்கிறது. அண்மையில் நான் அனைத்து மதங்களிலும் உள்ள சில தவறுகளை சுட்டிக்காட்டி ஒரு பதிவு எழுதினேன். அந்தப்பதிவிற்கு எதிராக இஸ்லாமிய அன்பர்கள்மட்டுமே கொடி தூக்கினாங்க. இதுதான் யதார்த்தம்.
//

இது தான் உலகியல் விதியா ஐயா இல்லையே!

வெளிப்படையாக சில விடயங்களைப் பேசினால் தானே தீர்வு கிடைக்கும்.
எனது சந்தேகங்களைப் பற்றி விடை சொல்ல ஏன் மறுக்கிறார்கள்?

நிரூபன் said...
Best Blogger Tips

@சுவனப்பிரியன்

//ஹி ஹி ஹி ஹி ஹி எனவே உள்குத்து பதிவர்கள் “ மோதல் சமநிலையைக் “ கடைப்பிடிக்குமாறு அனைத்துலக உள்குத்து பதிவர்கள் சங்கம் சார்பாக வேண்டுகிறேன்!//

அதை நான் வழி மொழிகிறேன்!
//

அதுக்கு முன்னாடி,
பதிவர்களாகிய நாம்
ஓர் பொது மேடையில் விவாதிக்கும் போது,
விவாதம், மற்றும் பதிவுகள் தொடர்பாக கருத்து கேட்டால் சரியான பதிலை மழுப்பலின்றி கொடுக்கும் வண்ணம் பழகிக் கொள்ள வேண்டுமென நானும் அன்பாக கேட்டுக் கொள்கின்றேன்!

நண்பரே! பதிவு தொடர்பில் ஏதும் சொல்லலையே!

நிரூபன் said...
Best Blogger Tips

@பழனி.கந்தசாமி

படித்தேன். கருத்து ஒன்றும் இல்லை.
//

ஐயா நடு நிலமையாக இருக்கப் பார்க்கிறார்.
பரவாயில்லை.

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்

சகோ!நிரூ.பதிவு சார்ந்து இரண்டு விசயங்களை தொட நினைக்கின்றேன்.

இந்த ப்திவு குறித்து பதிவர் சுவனப்பிரியன் பதிவுக்கு நானும் கடைசி நேரத்தில் பின்னூட்டம் போட்டேன்.நீங்களும்,ஐடியாவும் படித்தீர்களா என்று தெரியவில்லை.நீங்கள் இருவரும் தலைப்புக்கள் குறித்தும்,தொடும் பொருள் குறித்துமான விமர்சனங்களும் எனக்குண்டு.ஆக்கபூர்வமான பதிவுகளைக் கொண்டு வரலாமே என்ற ஆதங்கமும் உண்டு.உங்களுக்கான களம் இதுவல்ல என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயம்.
//

அண்ணர்,
சுவனப்பிரியன் பதிவில் நான் எழுதிய பின்னூட்டங்களையும், அவர் எனக்கு வழங்கிய பதில்களையும் படித்திருப்பீங்க என நினைக்கிறேன்.
உங்கள் பின்னூட்டத்தை படித்தேன்.
எனக்கான களம் இதுவல்ல என்றாலும்,
எங்கோ ஓர் மூலையில்
தன் பிள்ளை பாலியல் பற்றி அறியக் கூடாது என்று பொத்தி வைத்திருக்கும் பெற்றோருக்கு சின்ன விழிப்புணர்வு கிடைக்குமே

சுவனப்பிரியன் சொல்லுவதனை வழிமொழிகிறீர்கள் என்றால்,
ஆக்கப்பூர்வமான பதிவுகளை எல்லோரும் எழுதனும் என நீங்கள் நினைத்தால்
மதம் தொடர்பாக சில கருத்துக்களை தொடர்ச்சியாக எழுதும் பதிவர்களை நாம் கண்டிக்க வேண்டியது நம் கடமையல்லவா?

பதிவுலகில் மதம் பற்றிய பரப்புரைகள் அவசியமானதா?

அண்ணே, சமூகம் சார் பதிவுகளை எழுதும் போது,
ஓர் விழிப்புணர்வு அடிப்படையில் எம்மை நாமே சுத்திகரிப்பது என்ன தப்பு?

எமக்குள் உள்ள வக்கிர குணம்,
எம்மை அறியாமல் இணையத்தில் ஆபாசம் பற்றிய மோகத்தில் இருக்கும் எமது குணம்
இவற்றினை மாற்றிக் கொள்ள சில பதிவுகள் உதவும் அல்லவா?

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்

இப்போதைக்கு மதம் சார்ந்த பதிவுகள் குறைந்த புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதை வரவேற்போம்.நன்றி.
//

நல்ல கருத்து! பொது வெளியில் ஒரு மதத்தைப் பற்றி மாத்திரம் நம்மால் எழுத முடியும் எனும் சிந்தனை மாற வேண்டும்!
அனைத்து மதங்களும் சமம் எனும் நிலை தோன்றுவதே நல்ல சமூகத்திற்கு அழகு.
இதனைச் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டால்
சாந்தி, சமாதானம், சுபீட்சம், சர்வ வாழ்வு எல்லோருக்கும் கிட்டும் என்பதில் ஐயமில்லை!

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்
வணக்கம் நிரூபன்!
பாலியல் கல்வி கட்டாயம் தேவை என்பதே எனது நிலை.. மற்றது திரட்டிகளை பற்றி எனக்கு தெரியாது என்பதை விட அது என்னை போன்ற வாசகர்களுக்கு தேவை அற்ற விடயம்..!!//

வணக்கம் அங்கிள்,
திரட்டிகளைப் பற்றி நான் சொல்லவில்லை. திரட்டிகள் தொடர்பில் சில விளக்கங்களை முன் வைத்திருக்கிறேன்.

மதங்களும், மதம் சார் கொள்கைகளும் இன்றைக்குப் பல வருடங்களுக்கு முன்பதாக, அந்தக் காலச் சமூக நிலைக்கு ஏற்ப எழுதபட்டவை / எழுப்பப்பட்டவை.

இக் காலச் சூழலினைப் புரிந்து கொள்ளாது இக் காலத்திலும் அவற்றின் அடிப்படையில் மக்கள் வாழனும் எனத் திணிப்பது முறையல்ல தானே.

பாலியல் கல்வி இக் காலத்திற்கு அவசியம் இல்லை என மதம் சொல்லுது என
என்றோ ஓர் நாள் உருவாக்கப்பட்ட மதத்தினை வைத்து இன்றும் சொல்லிக் கொண்டிருப்பது வேதனையாக இருக்கிறதே!

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்
நண்பா நிரூபனே !
இந்த பதிவு பற்றி நான் ஒன்றும் சொல்ல மாட்டன் ஆனால் நேற்று ஒரு சுவர்னப்பிரியனுடன் தனிமரமாக மோதினேன் என் கேள்விக்கு ஒரு அனானி பன்னாடை பதில் தந்தது //

இங்கே அனானி எல்லாம் வரமாட்டோங்கோ!

நீங்க தாரளமாக வந்து மோதலாம்,
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அப்புறமா, அவர் பதிவில் அனானி கமெண்ட் பத்தி நான் ஓர் பின்னூட்டம் எழுதினேனே!
தாங்கள் அதனைப் படிக்கலையா?

நிரூபன் said...
Best Blogger Tips

@விச்சு

நீங்க சொன்ன மாதிரி நிறைய விசயங்களை ஒழிச்சு வச்சு பேசித்தான் இன்றைய சமுதாயத்தில் பாலியல் கொடுமையும் வன்முறையும் அதிகாமாயிருக்கு. டேட்டிங் என்ற பெயரில் எல்லாமும் நடகுது. 9ம் வகுப்பு மாணவன் ஆசிரியரை கொலை செய்கிறான்.நிறைய செய்திகளை பெற்றோர்கள் பிள்ளைகளிடம் விவாதிக்க வேண்டும்.நீங்களெழுதுவது எதுவுமே ஆபசம் இல்லை. சிலபேர் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு கருததுக்கள் சொல்லிவிடுவார்கள்.
//

பதிவர்கள் நாம் இரு வேறு மொழி நிலைகளில் பதிவினை எழுதுகின்றோம்!
இந்த மொழிப் புரிதல் பற்றி , மொழி அடிப்படையில் சில கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்வது பற்றி ஓர் பதிவினை வெகு விரைவில் எழுதுகிறேன் நண்பா.

தாய்த் தேசத்தில் ஆபாசம் எனச் சொல்லப்படும் சொற்களுக்கு ஈழத்தில் நல்ல அர்த்தம் உண்டு,
ஈழத்தில் ஆபாசம் எனச் சொல்லும் சொற்களுக்கு தாய்த் தேசத்தில் நல்ல அர்த்தம் உண்டு! ஆகவே இவற்றினை விளக்கினால் தான் பலருக்கு தெளிவு கிடைக்கும்.

இன்றைய சமூகச் சூழலுக்கு ஏற்ப நாமும் எம்மை சரியான வழியில் மாற்றிக்க வேண்டும்! இது தான் என் கருத்து.

நான் எழுதும் பதிவுகளில் ஆபாசம் இருக்கலாம். அதனை சீரிய முறையில் சுட்டிக்காட்டும் உரிமை வாசகர்களுக்கு உண்டு! ஆனால் சும்மா சகட்டு மேனிக்கு சில கருத்துக்களைச் சிலர் எழுதுவதும்,
விளக்கம் கேட்டால்
முதல் நாள் ஓர் பதிலையும்,
மறு நாள் மற்றுமோர் பதிலையும் சொல்வது தான் ரொம்ப காமெடியாக இருக்கிறது.
நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

உங்கள் கருத்துக்களை முன் வைத்த, இப் பதிவினைப் படித்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி.

தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை முன் வைக்கலாம்!
நாகரிகமான முறையில்,
அடுத்தவர் மனங் கோணாத வகையில்
உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்!

தொடர்ந்தும் விவாதிப்போம்.

Riyas said...
Best Blogger Tips

நாமளும் ஏதாவது கருத்துச்சொல்வோம்னு வந்தா அதெல்லாம் ஏற்கனவே சொல்லிட்டாங்களே..

@ஐடியாமணி..
//கருத்து சொல்லவும், அறிவுரை சொல்லவும் எல்லோருக்கும் உரிமை இருக்கு! ஆனால், யரும் யாருக்கும் எதையும் திணிக்க முடியாது! திணிக்கவும் கூடாது !//

உண்மை! இஸ்லாம் கூட தனது நம்பிக்கைகளையும் கொள்கைகளையும் கட்டாயத்தின் பேரில் இன்னொருவருக்கு திணிக்கும்படி சொல்லவில்லை..

அவர்களின் மதம் அவர்களுக்கு உங்களின் மதம் உங்களுக்கு என்றுதானே சொல்கிறது,ஆனால் பகிரங்கமாக ஒரு பாவமோ சமூகத்துக்கு கேடான ஒரு விடயமோ நடக்கும் போது அங்கே சென்று அவை பாவம் என்று புரிய வைக்க வேண்டும்,முடிந்தால் அவற்றை தடுங்கள் எனவும் கூறுகிறது..

ஆனால் இங்கே நிரூபன் அப்பிடி என்ன சமூகத்துக்கு கேடாக செய்துவிட்டார் என்பதுதான் பிரச்சினை..

நிரூபனின் சில பதிவு தலைப்புகளோடு எனக்கும் உடன்பாடில்லை அவற்றை படிக்காமலே நான் கடந்து சென்றிருக்கிறேன்.. நிரூபன் சொல்வது போல் அவற்றின் உள்ளே எந்தவித ஆபாசமும் இல்லாமல் இருக்கலாம் சில படங்களை தவிர்த்து.. சுவனப்பிரியன் அவர்கள் இதை நேராக கேட்டிருக்கலாம்..

நிரூபன் said...
Best Blogger Tips

@Riyas
ஆனால் இங்கே நிரூபன் அப்பிடி என்ன சமூகத்துக்கு கேடாக செய்துவிட்டார் என்பதுதான் பிரச்சினை..

நிரூபனின் சில பதிவு தலைப்புகளோடு எனக்கும் உடன்பாடில்லை அவற்றை படிக்காமலே நான் கடந்து சென்றிருக்கிறேன்.. நிரூபன் சொல்வது போல் அவற்றின் உள்ளே எந்தவித ஆபாசமும் இல்லாமல் இருக்கலாம் சில படங்களை தவிர்த்து.. சுவனப்பிரியன் அவர்கள் இதை நேராக கேட்டிருக்கலாம்.//

சகோ
ரியாஸ்
இது கருத்து!

முதலில் உங்களின் தெளிந்த மனப்பான்மைக்கு ஓர் பாராட்டு!

ஏன் தெரியுமா?
சுவனப்பிரியனின் பதிவில்
என் பதிவுகளையும் தாங்கள் விமர்சித்திருக்கிறீர்கள். நான் எழுதும் பதிவுகள் தொடர்பில் கருத்து கேட்ட போது,
உங்களைப் பத்தி எழுதலையே என்று சொன்னார்!
என்னைச் சுட்டி எழுதுவதால் நான் கவலையுற்றிருக்க மாட்டேன்!
என் மீதான குற்றங்களைச் சரி செய்யவே நான் அப்படிக் கேட்டேன்!

அவரோ, குற்றமுள்ள நெஞ்சு குறு குறுக்கும்,
உங்களைப் பத்தில் எழுதலை! நீங்க ஏன் குமுறுகிறீர்கள் என்று சொல்லி மழுப்பினார்.
இன்றோ உங்களுக்கும் சேர்த்து எழுதியதாக சொல்லுகிறார்! இதனை யாரால் ஜீரணிக்க முடியும் ஐயா?

ஒரு கருத்தினை விவாதிக்கும் போது,
நேரடியாக கூறினால் தானே தெளிவு கிடைக்கும்,
அதற்கு ஏன் சுத்தி வளைச்சு பேச வேண்டும்?
இதனால் தான் சில விளக்கங்களைக் கோரி இப் பதிவினை எழுதியிருக்கிறேன்.


ரியாஸ் எமது மொழி நடையில் இலங்கையில்
நாம் அனைவரும் கெடுத்த எனும் சொல்லை ஆபாசமாக பார்ப்பதில்லை! இது உண்மை தானே!
சகோ சுவனப்பிரியன் ஒரு பதிவர் தன்னுடன் கல்லூரியில் படித்த பெண்களைப் பற்றி
என்னை கெடுத்த பெண்கள் என தலைப்பிட்டு எழுதுகிறார் எனச் சொன்னார்.

அங்கே என்ன ஆபாசம் இருக்கு என்று கேட்டேன்! அதற்கு சுவனப்பிரியன் பல்டி அடிக்கிறார்.

ஆனால் நீங்கள் இங்கே என் பதிவு பற்றிச் சொல்லியிருக்கும் கருத்து வெளிப்படையானது! நேரே சொல்லியிருக்கிறீங்க! உங்கள் கருத்தினையும்,
நீங்கள் சொல்லியிருக்கும் முறையினையும்,
மிகவும் மதிக்கிறேன்!
நீங்கள் முன்பை விட, இப்போது என் மனதில் உயர்வாக தெரிகிறீர்கள்!

இப்படி வெளிப்படையாகச் சொல்லுவதால் யாருக்குமே தவறான புரிதல் வராது அல்ல்வா?

சகோ சுவனப்பிரியன், நீங்கள் ரியாஸிடமிருந்து இந்தப் பழக்கத்தினைக் கற்றுக் கொள்ள வேண்டும்!

நன்றி சகோ ரியாஸ்.

Riyas said...
Best Blogger Tips

@நிரூபன்.

//மச்சி என்னுடைய கருத்துக்களுக்கு சுவனப்பிரியன் ஓர் தெளிவான பதிலைக் கொடுத்திருந்தால் நான் இப்படி ஓர் பதிவினை எழுதியிருக்கவே மாட்டேன்!//

இதை முழுமையாக நான் ஏற்றுக்கொள்கிறேன்.. சுவனப்பிரியன் அவர்களுக்கு விமர்சனம் எழுதுவதில் இருந்த தைரியம், அந்த விமர்சனத்துக்கு எதிராக உங்களால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்வதில் இருக்கவில்லை..

உங்களுக்கு வழங்கப்பட்ட பதிலில் எனக்கும் உடன்பாடில்லை..சுவனப்பிரியன் உங்களைத்தான் நான் சொல்கிறேன் என்று நேராகவே உங்களிடம் கேட்டிருக்கலாம்.. அதன் பிறகு அவற்றை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் கைகளில்..


அதே தவறை நிரூ நீங்களும் இங்கே இந்தப்பதிவில் செய்திருக்கிறீர்கள்..
இங்கே நேராக சுவனப்பிரியனை நோக்கியே கேள்வி கேட்டிருக்கலாம்.. அதை விட்டுபுட்டு மறைமுகமாகவே கேட்கிறீர்கள்..

முகத்துக்கு நேராக பேசுவதிலேயே பல பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு கானலாம் என்பது எனது நம்பிக்கை ...

'பசி'பரமசிவம் said...
Best Blogger Tips

கடவுள் உண்டா இல்லையா என்ற விவாதம் பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறதே தவிர, கடவுளின் ‘இருப்பு’ இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

மதங்கள் மனிதர்களால் உருவாக்கப் பட்டவை.

வெறி பிடித்து, தத்தம் மதக் கருத்துகளைப் பிறர் மீது திணிக்க, மதவாதிகள் செயல்பட்டதன் விளைவாக லட்சக் கணக்கான உயிர்கள் பலியிடப்பட்டதும்,அதைவிடப் பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள் சித்திரவதைக்கு உள்ளானதும் வரலாறு சொல்லும் உண்மை.

இப்படிப்பட்ட அவலத்துக்கு...பெரும் கேட்டுக்கு மனித இனம் இனியும் உள்ளாக்கப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள், தம் மதக் கருத்துத் திணிப்பைத் தொடர்ந்து செய்யலாம்.

நடு நிலையான சிந்தனையைத் துறந்து, ஆள் பலத்தை மட்டுமே துணையாகக் கொண்டு, இச்செயல் புரிவோரை யாரால்...எந்த அரசால் தடுக்க முடியும்?

வேறு என்ன சொல்ல?

நிரூபன்,
இப்போதுகூட, நான் சொல்லியுள்ள இந்தக் கருத்தைப் பரிசீலிக்காமல், “கடவுள் இருக்கிறார். அதை உண் மரமண்டையால் புரிந்து கொள்ள முடியாது....”என்றிப்படி வரிந்து கட்டிக் கொண்டு சில மதவாதிகள் என்னைச் சாட வருவார்கள்!

அதையும் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்!

நிரூபன் said...
Best Blogger Tips

@Riyas

உங்களுக்கு வழங்கப்பட்ட பதிலில் எனக்கும் உடன்பாடில்லை..சுவனப்பிரியன் உங்களைத்தான் நான் சொல்கிறேன் என்று நேராகவே உங்களிடம் கேட்டிருக்கலாம்.. அதன் பிறகு அவற்றை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் கைகளில்..


அதே தவறை நிரூ நீங்களும் இங்கே இந்தப்பதிவில் செய்திருக்கிறீர்கள்..
இங்கே நேராக சுவனப்பிரியனை நோக்கியே கேள்வி கேட்டிருக்கலாம்.. அதை விட்டுபுட்டு மறைமுகமாகவே கேட்கிறீர்கள்..
//

சகோதரம் முகத்திற்கு நேரே பேசுவது பல பிரச்சினைகளைக் களைய வழிவகுக்கும் என்பது உண்மை! ஏற்றுக் கொள்கிறேன்.

இந்தப் பதிவில் சுவனப்பிரியன் என்ற தனி ஓர் மனிதனை மாத்திரம் முன்னிறுத்தி என் கேள்விகளை வைக்கவில்லை. அங்கே மதம் என்ற ஒன்றை முன்னிறுத்தி பேசிய அனைவரிடமும் தான் என் கேள்விகளை வைத்திருக்கிறேன். ஆனால் என் பதிவின் வரிகளூடாக சுவனப்பிரியனிடம் தான் கேள்விகள் என்றால் தனியே ஓர் தலைப்பு போட்டு, அவரது பெயருடன் எழுதியிருப்பேன் நண்பா.

பெயரைக் குறிப்பிட்டு, என் தவறைச் சுட்டியிருக்கலாம்.
ஒரு நாளைக்கு ஆறேழு பதிவு எழுதுவதாகவும்,
ஈழ மக்கள் பத்தி நான் எழுதுவதே இல்லை எனவும், கல்லூரிப் பெண்களைப் பத்தி எழுதுவதாகவும் சாடியிருந்தார்.

அதற்கு தகுந்த ஆதாரங்களுடன் விளக்கம் கேட்டேன்! பதில் இல்லை!

நேற்று அவலச் சாவு பற்றியும், அரசியற் காதல் பத்தியும் ஓர் கவிதை எழுதினேன் சுவனப்பிரியன் படித்தாரா தெரியலை! ஆகவே எந்த விடயங்கள் எவ் வழியில் மனித உணர்வுகளை எட்டுகிறது என்பதனை நாம பரிசீலிக்கனும் சகோ!

நிரூபன் said...
Best Blogger Tips

@பரமசிவம்

கடவுள் உண்டா இல்லையா என்ற விவாதம் பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறதே தவிர, கடவுளின் ‘இருப்பு’ இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

மதங்கள் மனிதர்களால் உருவாக்கப் பட்டவை.
//

உண்மையான கருத்துக்கள், இதனைத் தான் நானும் பதிவினூடாக கேட்க வருகின்றேன்! யாரும் பதிலாகச் சொல்லுகிறார்கள் இல்லையே!

நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீங்க.
மிக்க நன்றி.

சசிகலா said...
Best Blogger Tips

எதையுமே செய்யாதே என்றால் செய்ய தோன்றும் இன்றைய இளைய சமுதாயத்துக்கு ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல்
பாலியல் கல்வி பிள்ளைகளுக்கு தேவை தான் . முன்பு தாய் , தந்தை சொல்வதை கேட்டு , வீட்டில் முதியர்வகள் அரவணைப்பில் இருந்ததால் அவர்கள் வாழக்கை சீரான பாதையில் இருந்தது . இப்போ உள்ள கால சீரழிவில் எந்த விதத்திலாவது வளரும் சமுதாயத்தை நல்ல கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்பதே என் கருத்து. அருமையான பகிர்வு தொடர்ந்து எழுதுங்க .
இதில் ஜாதி , மதம் பற்றி தேவை இல்லை என்பது என் கருத்து .

ஆமினா said...
Best Blogger Tips

//விக்கி அண்ணர் பத்தி உள்குத்து எழுதிட்டு நாம விவாதிச்சது நீங்க படிச்சீங்க தானே!
அதுக்கு பின்னருமா இப்படி ஓர் கேள்வி கேட்கிறீங்க?//

அது தான் என் கேள்வியே... மாப்ள என்ற வார்த்தையை முன்பே சேர்த்துவிட்டு பின் நீக்கியது எதனால்? நான் அவரை சொல்லவில்லை என நீங்க சொன்னீங்க தானே? சரி விடுங்க! இது பத்தி பேசி ஒன்னும் ஆகப்போறதில்ல

ஆமினா said...
Best Blogger Tips

எந்த ஒரு பிரச்சனையையும் தயவு செய்து மத ரீதியாகவும், இன ரீதியாகவும் பிரிக்காதீங்க.

முன்பு நீ ஈழத்தமிழன் டா என உங்களை பிரித்து பேசியதற்காக பலருடனும் கோபப்பட்ட நான் இன்று அந்த பதிவை இஸ்லாமியர் சொல்லி விட்டார் என்பதற்காக மதத்தை முன்னிலைபடுத்தி வேறுபடுத்துவது வருத்தமளிக்கிறது. அன்னைக்கு அவங்க செய்த தப்பை நீங்க செய்யாதீங்க நிரூ..

ஒரு அக்காவாக இதை தான் சொல்வேன். இதையும் நா சப்போர்ட் பண்றதா நெனச்சா மேலே சொல்ல ஒன்னும் இல்ல

ஆமினா said...
Best Blogger Tips

இந்த பதிவில் மதம் என்ற ஒன்றை முன்னிலைபடுத்துவதே தவறான விஷயம் நிரூ. சுவனப்பிரியன் சொன்னதில் கருத்து திணிப்புன்னா எதை சொல்றீங்க?

என் இஸ்லாம் இப்படி தான் சொல்லுது. நீயும் கட்டாயம் செய் என சொன்னாரா????

ஈழத்தில் இத்தகைய பிரச்சனை நடக்கும் போது ஆபாசத்தை தவிருங்கள் என தானே சொன்னார்? இங்கே இஸ்லாம் எங்கே வந்தது?

ஆமினா said...
Best Blogger Tips

//
இது அவரும் நானும் பேசித் தீர்க்க வேண்டிய விட்யம் அல்ல
அனைவரும் பேசித் தீர்க்க வேண்டிய விடயம். //

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஆமினா said...
Best Blogger Tips

//கெடுத்த எனும் சொல் ஆபாசமாம்! //

ஹி...ஹி...ஹி... என்னைய கூட விட்டுவைக்கலைய்யா நீய்யி...

நீங்க வைக்கும் தலைப்பு ஊர் அறிஞ்ச விஷயம். ஆபாசம் என நான் சொல்லவில்லை.கெடுத்த என்பது கற்பழித்த என்ற சொல்லாக வருகிறது என பலரை போல் நானும் தான் நினைத்தேன். நிரூ... பத்து பதிவு நீ நல்லா எழுதியிருந்தாலும் ஒரு முகம் சுளிக்கும் பதிவு அனைத்து நல்ல விஷயங்களையும் மறக்க ச்செய்துவிடும். நிரூபன் என்ன எழுதினாலும் ஆபாசம் இருக்கும்னு பலரின் மனநிலையும் மாறிடுச்சு. சோ ஒரு வார்த்த எக்குதப்பா இருந்தாலும் அப்படிதான் பதிவு இருக்கும்னு நினைப்பது இயல்பு தான்.

Robin said...
Best Blogger Tips

எதையும் மறைத்துவைத்தால்தான் பிரச்சினை, எல்லாவற்றையும் திறந்து வைத்துவிட்டால் சமுதாயம் நன்றாக இருக்கும் என்று நினைப்பது மிகவும் தவறான கருத்து. மறைத்து வைக்கவேண்டியத்தை மறைத்துதான் வைக்கவேண்டும். இல்லை என்றால் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் வித்தியாசம் இல்லாது போய்விடும். எல்லாவற்றையும் திறந்துகாட்டும் மேற்கத்தைய நாடுகளில் அப்பன் பெயர் தெரியாத குழந்தைகள், பெற்றோரின் அன்பு கிடைக்காத குழந்தைகள் அதிகரித்துவருகிறார்கள். கற்பழிப்புகள் அதிகம் நடைபெறும் நாடுகளில் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள்தான் முன்னிலை. இந்த நிலை நம்முடைய சமுதாயத்திற்கும் வரவேண்டுமா?

நிரூபன் said...
Best Blogger Tips

ஆமினா அக்கா,
மாப்பிளை என்ற சொல்லை நீக்கியது
தனி மனித தாக்குதல் இடம்பெறக் கூடாது என்பதற்காக தான்!

ஏனைய விடயங்களுக்கு மாலை பதில் அளிக்கிறேன்.

suvanappiriyan said...
Best Blogger Tips

திரு நிரூபன்!

//ஒரு நூல் இப்படிக் கூறுகிறது எனக் கூறி,
ஒரு நூலை ஆதாரம் காட்டி, சொல்லுவது போல, இந்துக்கள், கிறித்துவர்கள்
தமது மத நூலை ஆதாரப்படுத்தி இஸ்லாமியச் சொந்தங்களுக்கு கருத்துரைகளைச் சொன்னால் ஏற்க முடியுமா?
இதற்குச் சுவனப்பிரியன் என்ன சொல்லவருகின்றார்?//

இந்த கேள்விக்கு சகோ ஆமினா அழகாக பதில் கொடுத்துள்ளார்.

மேலும் ஆபாசம், இரட்டை அர்த்த ஆபாச எழுத்துக்கள் என்பதை இஸ்லாம் மட்டும் கண்டிக்கவில்லை. இந்து கிறித்தவ மார்க்கங்களும் கண்டிக்கின்றன. கள், விபசாரம்,திருட்டு,பொய், கொலை, போன்ற பெரும் பாவங்கள் அனைத்தையும் அனைத்து மதங்களுமே கண்டிக்கின்றன. எனவே தான் அந்த பதிவில் திருக்குறளையும் உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டேன். பைபிள் வசனம் அந்த நேரத்தில் கிடைக்காததால் அதையும் சேர்க்கவில்லை.

ஏக இறைவனை மட்டுமே வணங்குங்கள்: முருகனையோ பிள்ளையாரையோ வணங்காதீர்கள் என்று உங்களை பார்த்து நான் கட்டாயப் படுததினால்தான் மேற்கண்ட குற்றச் சாட்டை என்மேல் நீங்கள் வைக்க முடியும்.

K said...
Best Blogger Tips

இங்கே ராபின் வைத்திருக்கும் கருத்து மிகவும் தவறானது! இங்கு வந்து பாருங்கள் நண்பா! ஊடகங்களில் வருபவற்றை நம்ப வேண்டாம்

நிரூபன் said...
Best Blogger Tips

@sasikala

எதையுமே செய்யாதே என்றால் செய்ய தோன்றும் இன்றைய இளைய சமுதாயத்துக்கு ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல்
பாலியல் கல்வி பிள்ளைகளுக்கு தேவை தான் . முன்பு தாய் , தந்தை சொல்வதை கேட்டு , வீட்டில் முதியர்வகள் அரவணைப்பில் இருந்ததால் அவர்கள் வாழக்கை சீரான பாதையில் இருந்தது . இப்போ உள்ள கால சீரழிவில் எந்த விதத்திலாவது வளரும் சமுதாயத்தை நல்ல கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்பதே என் கருத்து. அருமையான பகிர்வு தொடர்ந்து எழுதுங்க .
இதில் ஜாதி , மதம் பற்றி தேவை இல்லை என்பது என் கருத்து .
//

சூப்பர் கருத்தினைக் கொடுத்திருக்கிறீங்க.

இது தான் யதார்த்தம். இன்றைய காலத்தில் நாம் வாழும் சூழல் வேறு! அன்றைய காலத்தில் எம்மவர்கள் கோட்பாடுகளை, கொள்கைகளை வகுக்கும் போது வாழ்ந்த சூழல் வேறு! ஆகவே காலத்திற்கேற்றவாறு பழையன கழிந்து, புதியன புகுதல் என்ற இயைபினுள் நாமும் மாற வேண்டும்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆமினா//விக்கி அண்ணர் பத்தி உள்குத்து எழுதிட்டு நாம விவாதிச்சது நீங்க படிச்சீங்க தானே!
அதுக்கு பின்னருமா இப்படி ஓர் கேள்வி கேட்கிறீங்க?//

அது தான் என் கேள்வியே... மாப்ள என்ற வார்த்தையை முன்பே சேர்த்துவிட்டு பின் நீக்கியது எதனால்? நான் அவரை சொல்லவில்லை என நீங்க சொன்னீங்க தானே? சரி விடுங்க! இது பத்தி பேசி ஒன்னும் ஆகப்போறதில்ல
//

அக்கா, அந்தப் பதிவில் மேற்படி வரிகளை நீக்கிட்டு விளக்கம் கொடுத்தேன்.
காரணம் என்னை, உங்களைப் போன்ற சகோதரிகளை வைத்து உள்குத்து எழுதியவரும்
எதிர்க் கேள்வி கேட்கும் போது அது உங்களுக்கு எதிராக எழுதபட்ட உள்குத்து அல்ல என்று சொன்னார்.
ஆனால் அந்த இணைப்பில் நான் பின்னர் இட்ட பின்னூட்டத்தில் நேரடியாகவே சுட்டியிருக்கிறேன்.

இன்னும் சந்தேகம் இருந்தால், சற்று விரிவாக அந்த இணைப்பிற்குப் போய் வாருங்கள்!

http://www.thamilnattu.com/2012/01/blog-post_24.html

விரிவாகப் பேசுவோம்!!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆமினா

எந்த ஒரு பிரச்சனையையும் தயவு செய்து மத ரீதியாகவும், இன ரீதியாகவும் பிரிக்காதீங்க.
//

நிற்க இவ் இடத்தில்.
அந்தப் பதிவில் வலையுலகில் ஈழத் தமிழர்கள் தான் தம் நாட்டுப் பிரச்சினை இருக்கு என்று தெரிந்தும்
ஆபாசம் எழுதுகிறார்கள் என்று பதிவர்களை தரம் பிரித்தது யாரு?

அடுத்த கேள்வி! மதரீதியாக நான் பிரிக்கவில்லை! நீங்கள் குறிப்பிடும் பதிவில்
சகோதரன் முஹம்மட் ஆஷிக் எழுதிய பின்னூட்டத்தை கொஞ்சம் படித்துப் பாருங்கள்!

ஏலவே கட்டண சேவையில் இணைந்து தமிழ்மணத்தில் ஓரினச் சேர்க்கை பற்றியும்,இஸ்லாத்திற்கும் எதிராக எழுதிய இக்பால் செல்வன் ஓரங்கட்டப்பட்டு விட்டார், வெகு விரைவில் நானும் ஐடியா மணியும் ஆபாசம் எழுதுவதால் இறை செயலால் ஓரங்கட்டப்படுவோம் என கூறி
யாருங்க மதத்தை கோண்டு வந்து பேசியது?

ப்ளீஸ்...உங்கள் பின்னூட்டங்களுக்கு கீழே அப் பதிவில் வந்திருக்கும் பின்னூட்டங்களைப் படிச்சிட்டு வாங்க! பேசுவோம்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆமினா

முன்பு நீ ஈழத்தமிழன் டா என உங்களை பிரித்து பேசியதற்காக பலருடனும் கோபப்பட்ட நான் இன்று அந்த பதிவை இஸ்லாமியர் சொல்லி விட்டார் என்பதற்காக மதத்தை முன்னிலைபடுத்தி வேறுபடுத்துவது வருத்தமளிக்கிறது. அன்னைக்கு அவங்க செய்த தப்பை நீங்க செய்யாதீங்க நிரூ..

ஒரு அக்காவாக இதை தான் சொல்வேன். இதையும் நா சப்போர்ட் பண்றதா நெனச்சா மேலே சொல்ல ஒன்னும் இல்ல
//

அக்கா, நான் அந்தப் பதிவினை மையமாக கொண்டு எழுதவில்லை
ப்ளீஸ் பதிவில் நான் முன் வைத்திருக்கும் விடயங்கள் ஏதும் புரியலையாயின் மீண்டும் ஒருவாட்டி படிச்சு பாருங்க.

மதங்கள் ஓரினச் சேர்க்கையினை எதிர்க்கிறது என்று சொல்லுகிறார்கள். ஆபாசத்தை எதிர்க்கிறது என்று பல இடங்களில் இந்த தோழர்கள் பின்னூட்டம் எழுதியிருக்கிறார்கள்.
அவர்களிடம் என் தரப்பு கேள்வியினை கேட்கவே இப்படி ஓர் பதிவினை எழுதினேன்!

யாரையும் நான் பிரித்து நோக்கவில்லை! இப்போதும் என் சாட் லிஸ்ட்டில் எல்லோரும் சகோதர்களாக இருக்கிறார்கள்! ப்ளீஸ் புரிந்து கொள்க!
இஸ்லாமை மட்டும் முன்னிறுதி இங்கே கேள்வி கேட்கலை!
இந்துக்களை, கிறித்துவர்களை முன்னிறுத்தி கேள்விகளை முன் வைத்திருக்கிறேன்!

பதில் சொல்ல முடிந்தால் தெளிவாகச் சொல்லுங்கள்! விவாதிப்போம்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆமினா

முன்பு நீ ஈழத்தமிழன் டா என உங்களை பிரித்து பேசியதற்காக பலருடனும் கோபப்பட்ட நான் இன்று அந்த பதிவை இஸ்லாமியர் சொல்லி விட்டார் என்பதற்காக மதத்தை முன்னிலைபடுத்தி வேறுபடுத்துவது வருத்தமளிக்கிறது. அன்னைக்கு அவங்க செய்த தப்பை நீங்க செய்யாதீங்க நிரூ..

ஒரு அக்காவாக இதை தான் சொல்வேன். இதையும் நா சப்போர்ட் பண்றதா நெனச்சா மேலே சொல்ல ஒன்னும் இல்ல
//

அக்கா, நான் அந்தப் பதிவினை மையமாக கொண்டு எழுதவில்லை
ப்ளீஸ் பதிவில் நான் முன் வைத்திருக்கும் விடயங்கள் ஏதும் புரியலையாயின் மீண்டும் ஒருவாட்டி படிச்சு பாருங்க.

மதங்கள் ஓரினச் சேர்க்கையினை எதிர்க்கிறது என்று சொல்லுகிறார்கள். ஆபாசத்தை எதிர்க்கிறது என்று பல இடங்களில் இந்த தோழர்கள் பின்னூட்டம் எழுதியிருக்கிறார்கள்.
அவர்களிடம் என் தரப்பு கேள்வியினை கேட்கவே இப்படி ஓர் பதிவினை எழுதினேன்!

யாரையும் நான் பிரித்து நோக்கவில்லை! இப்போதும் என் சாட் லிஸ்ட்டில் எல்லோரும் சகோதர்களாக இருக்கிறார்கள்! ப்ளீஸ் புரிந்து கொள்க!
இஸ்லாமை மட்டும் முன்னிறுதி இங்கே கேள்வி கேட்கலை!
இந்துக்களை, கிறித்துவர்களை முன்னிறுத்தி கேள்விகளை முன் வைத்திருக்கிறேன்!

பதில் சொல்ல முடிந்தால் தெளிவாகச் சொல்லுங்கள்! விவாதிப்போம்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆமினாஇந்த பதிவில் மதம் என்ற ஒன்றை முன்னிலைபடுத்துவதே தவறான விஷயம் நிரூ. சுவனப்பிரியன் சொன்னதில் கருத்து திணிப்புன்னா எதை சொல்றீங்க?

என் இஸ்லாம் இப்படி தான் சொல்லுது. நீயும் கட்டாயம் செய் என சொன்னாரா????

ஈழத்தில் இத்தகைய பிரச்சனை நடக்கும் போது ஆபாசத்தை தவிருங்கள் என தானே சொன்னார்? இங்கே இஸ்லாம் எங்கே வந்தது?//

அக்கா, நீங்கள் எல்லோரும் வருத்தப்பட்ட பூஜா பதிவிற்குப் பின்னர் நான் ஓர் அறிக்கை விட்டேன். ஆபாசத் தலைப்புக்கள், யார் முகஞ் சுழிக்கும் வண்ணமும் எழுதுவதில்லை என்று,

நான் ஈழம் பற்றி, ஈழப் பிரச்சினை பற்றி தொடர்ந்தும் எழுதுகின்றேன்.

ஏன் நேற்று மாலை கூட ஓர் கவிதை எழுதியிருந்தேன். தமிழர்கள் எப்படி ஏமாற்றப்பட்டார்கள் என்பதனை விளக்கிட அழுந்திச் செல்லும், அவலத்துள் அமிழ்ந்து துடிக்கும் அரசியற் காதல் என ஓர் கவிதை எழுதினேன்! யாருமே எட்டிப் பார்க்கலை!

ஒரு சில பதிவர்கள் தான் படித்தார்கள். மொத்த வருகையளாளர்கள் அப் பதிவிற்கு நானூறு.
ஆனால் இப்படி ஓர் தலைப்பினை எழுதினால் எத்தனை பேர்? மூன்று மடங்கு வருகையாளர்கள் அதிகமாக இப்போது வரை வந்து விட்டார்கள். இங்கே பின்னூட்டமிட்டு பதிவு பற்றி சொல்லும் அளவிற்கு அங்கே யாருமே எதுவும் பேசலை!

நான் அண்மையில் ஆபாசம் எழுதுவதை நிறுத்தி மக்கள் பிரச்சினை பற்றி எழுதுகின்றேன், பதிவர் குறிப்புக்கள் பற்றி எழுதுகின்றேன்! அப்படியான சூழ் நிலையில் என் பதிவுகளை ஆபாசம் என்று சுவனப்பிரியன் சுட்டும் போது,

நான் ஓர் மொழித் தெரிவினை கொடுக்க வேண்டியது என் கடமை அல்லவா?

மொழி அடிப்படையில் அவர் தவறாகப் புரிந்து அப்படிச் சொன்னாரா என்றால் இல்லை!

ஈழ மக்கள் பற்றி எழுதுவதே இல்லை! ஒரு நாளைக்கு ஆறேழு பதிவுகள் எழுதுவதாக சொன்னார். ஆதாரங்களை முன் வைத்தேர்! மழுப்பல் பதில் சொன்னார்! அப்புறமா எனக்கான பதிவு என்று பின்னூட்டமிட்டவர்களிடம் பதிலுரைத்தார்!

உங்கள் பாசையில் ஆபாசம் என்று சொல்லுவது என்ன?
காமக் கதைகளா? இல்லை நிர்வாணப் படங்களா? அல்லது கில்மாப் படங்களா?

அப்படியானவற்றில் ஏதாவது ஒன்றை இந்த வலையில் எங்கே பிரசுரித்திருக்கிறேன்?

தமிழகத்தில் விகடன் பிரசுரிக்காத போட்டோக்களை விட, அவ்வளவு கேவலமாக எதையாச்சும் பிரசுரித்திருக்கிறேனே?

தமிழின் முன்னணி செய்தித்தளம் oneindia.in தளத்திற்குப் போய்ப் பாருங்கள். அங்கே இல்லாத படங்களை விட, கேவலமான படங்கள் ஒன்று இருந்தாலும் சுட்டுங்கள்! பகிரங்கமாக ஓர் பதிவு போட்டு மன்னிப்பு கேட்கின்றேன்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆமினா

//கெடுத்த எனும் சொல் ஆபாசமாம்! //

ஹி...ஹி...ஹி... என்னைய கூட விட்டுவைக்கலைய்யா நீய்யி...
//

யோ..கெடுத்த எனும் சொல் உனக்கான விளக்கமாக நான் இங்கே கொடுக்கலை!
சுவனப்பிரியன் பதிவில் என்னுடைய என்னை கெடுத்த பெண்கள் பதிவின் தலைப்பு ஆபாசம் என்று சொல்லப்பட்ட கூறுக்கு அமைவாக இங்கே விளக்கம் கொடுத்திருக்கிறேன்!

அப்படீன்னா நீயி சுவனப்பிரியன் பதிவினை முழுமையாகப் படிக்காமலா பின்னூட்டம் போட்டாய்? என்னா கொடுமை அக்கா!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆமினா
நீங்க வைக்கும் தலைப்பு ஊர் அறிஞ்ச விஷயம். ஆபாசம் என நான் சொல்லவில்லை.கெடுத்த என்பது கற்பழித்த என்ற சொல்லாக வருகிறது என பலரை போல் நானும் தான் நினைத்தேன். நிரூ... பத்து பதிவு நீ நல்லா எழுதியிருந்தாலும் ஒரு முகம் சுளிக்கும் பதிவு அனைத்து நல்ல விஷயங்களையும் மறக்க ச்செய்துவிடும். நிரூபன் என்ன எழுதினாலும் ஆபாசம் இருக்கும்னு பலரின் மனநிலையும் மாறிடுச்சு. சோ ஒரு வார்த்த எக்குதப்பா இருந்தாலும் அப்படிதான் பதிவு இருக்கும்னு நினைப்பது இயல்பு தான்.//

அதான் உங்களுக்கு மொழி விளக்கம் சொல்லியிருக்கேன்! இந்த மாசத்திலோ, போன மாசத்திலோ அல்லது ஆறேழு மாதமாக வக்கிரமான தலைப்புக்களுடன் நான் ஒரு பதிவும் எழுதலைங்கோ!

இந்த மாதப் பதிவுகளைப் பார்,!
அங்கே சொல்லப்பட்ட கெடுத்த சொல் தொடர்பில் ஓர் விளக்கம் குடுத்தேன்!

ஓர் உதாரணம் சொல்கிறேன்!

நான் சரக்கு அடித்தேன் என்று ஈழத்தில் சொன்னால் அது வேறு அர்த்தம்!
இதனை தமிழகத்தில் சொன்னால் வேறு அர்த்தம்!

ஆகவே மொழிப் புரிதலின்றி பதிவர்கள் மீது சேறு பூசுவோர் ஒரு சிலரே!
அவர்கள் புரியும் வண்ணம் சில மொழி நடைகளைப் பற்றிச் சொல்கிறேன்.

நீ இந்த மாதப் பதிவுகளில் ஆபாசம் என்று எதைச் சொல்கிறாய்?
விளக்கம் ப்ளீஸ்!

அடுத்த விடயம், ஈழ மக்கள் எந் நேரமும் போர், பிரச்சினை, மக்கள் பிரச்சினை என்று தான் எழுதனுமா? வாரத்தில் ஆறு பதிவு எழுதினால் மூன்று ஈழப் பதிவும், மூன்று பல்சுவைப் பதிவும் எழுதுவதில் என்ன தவறு இருக்கிறது? ஈழ மக்களுக்கு வாழ்க்கையில் சந்தோசங்களை அனுவிக்க கூடாதென்று தனி விதிமுறை ஏதாச்சும் இருக்கா?

நிரூபன் said...
Best Blogger Tips

@Robin
நீங்க வைக்கும் தலைப்பு ஊர் அறிஞ்ச விஷயம். ஆபாசம் என நான் சொல்லவில்லை.கெடுத்த என்பது கற்பழித்த என்ற சொல்லாக வருகிறது என பலரை போல் நானும் தான் நினைத்தேன். நிரூ... பத்து பதிவு நீ நல்லா எழுதியிருந்தாலும் ஒரு முகம் சுளிக்கும் பதிவு அனைத்து நல்ல விஷயங்களையும் மறக்க ச்செய்துவிடும். நிரூபன் என்ன எழுதினாலும் ஆபாசம் இருக்கும்னு பலரின் மனநிலையும் மாறிடுச்சு. சோ ஒரு வார்த்த எக்குதப்பா இருந்தாலும் அப்படிதான் பதிவு இருக்கும்னு நினைப்பது இயல்பு தான்.//

நண்பா,

நான் இங்கே மறைப்பை திறந்து வைக்கனும் என்று சொல்லவில்லை! எம்மவர்கள் இந்த விடயங்களை நோக்கும் நிலை பற்றித் தான் சொல்லியிருக்கிறேன்!
மேலும் விளக்கமாக அவன் பண்பாடு வேறு! ஆனால் நாம் மாத்திரம் காணாத ஒன்றை கண்டதும் ஆர்வக் கோளாறு கொள்கிறோம் எனச் சுட்டியிருக்கிறேன்!

எமது சமூகத்திலும் இவை எல்லாம் இல்லாமல் இல்லையே!
பஸ்ஸினுள் உரசுவது, பஸ்ஸில் நெருக்கமாக ஏறி பின்னால் இடிப்பது.

வீதியோரங்களில் கூட்டமாக நின்று ஸ்கூல் முடிந்து போகும் பெண்களை டா அடிப்பது இதெல்லாம் வெளிநாடுகளில் இல்லையே சகோதரம்?

நிரூபன் said...
Best Blogger Tips

@சுவனப்பிரியன்

/ஒரு நூல் இப்படிக் கூறுகிறது எனக் கூறி,
ஒரு நூலை ஆதாரம் காட்டி, சொல்லுவது போல, இந்துக்கள், கிறித்துவர்கள்
தமது மத நூலை ஆதாரப்படுத்தி இஸ்லாமியச் சொந்தங்களுக்கு கருத்துரைகளைச் சொன்னால் ஏற்க முடியுமா?
இதற்குச் சுவனப்பிரியன் என்ன சொல்லவருகின்றார்?//

இந்த கேள்விக்கு சகோ ஆமினா அழகாக பதில் கொடுத்துள்ளார்.
//

சுவனப்பிரியன், நான் உங்களுக்கு எளிதில் விளங்கும் வண்ணம் இன்னோர் பதிவு எழுதுகின்றேன்.

நான் இங்கே சொல்லுவது ஏலவே வெவ்வேறு இடங்களில் நூலை ஆதாரம் காட்டி பேசும் பதிவர்களையும் சேர்த்து.
உங்களை மாத்திரம் தனிமைப்படுத்தி இங்கே சொல்லவில்லை.

ஆமினா அக்காவின் பதிலை வைத்து, நானும் சில கருத்துக்களைச் சொல்லவிருக்கிறேன்!
இன்னோர் பதிவில் நான் ஓர் விடயத்தினை முன் வைக்கிறேன்! அதனை எல்லோரும் ஏற்க முடியுமா?

நிரூபன் said...
Best Blogger Tips

@சுவனப்பிரியன்
மேலும் ஆபாசம், இரட்டை அர்த்த ஆபாச எழுத்துக்கள் என்பதை இஸ்லாம் மட்டும் கண்டிக்கவில்லை. இந்து கிறித்தவ மார்க்கங்களும் கண்டிக்கின்றன. கள், விபசாரம்,திருட்டு,பொய், கொலை, போன்ற பெரும் பாவங்கள் அனைத்தையும் அனைத்து மதங்களுமே கண்டிக்கின்றன. எனவே தான் அந்த பதிவில் திருக்குறளையும் உதாரணத்துக்கு //

சகோ சுவனப்பிரியன்,
அந்தப் பதிவு தொடர்பாக நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் சரியான பதில் கொடுக்கலை! ஆபாசங்களை கண்டிப்பது ஓக்கே!

என்னோட ஊர்ப் பாசையில் கெடுத்தல் என்பது ஆபாசம் இல்லைன்னு இந்தப் பதிவிலும் விளக்கம் சொல்லியிருக்கேன்!

அப்படி இருக்க மொழிப் புரிதலற்று, நீங்கள் கெடுத்தல் எனும் சொல் ஆபாசம் என்று சொல்லுறீங்க!
அது போல பல விடயங்களில் மொழி அடிப்படையில், சில வேறுபாடுகள் உண்டு, அதனை இன்னோர் பதிவில் எழுதுகின்றேன்!

மதங்கள் கண்டிக்கின்றன என்றால், சும்மா தன்பாட்டிற்கு மக்கள் பிரச்சினை எழுதுறவன், தன்னோட மொழி நடையில் சில விடயங்களை எழுதுபவனை ஆதாரம் இல்லாது பதிவ்னுள் உள்வாங்கி எழுதுவதும்.
ஆதாரம் கேட்டதும்
உங்களை எழுதலை என்று
சொல்லும் அளவிற்கு பேச்சு மாற்றச் சொல்லி எந்த மதமாச்சும் சொல்லியிருக்கா?

Robin said...
Best Blogger Tips

//எமது சமூகத்திலும் இவை எல்லாம் இல்லாமல் இல்லையே!
பஸ்ஸினுள் உரசுவது, பஸ்ஸில் நெருக்கமாக ஏறி பின்னால் இடிப்பது.
வீதியோரங்களில் கூட்டமாக நின்று ஸ்கூல் முடிந்து போகும் பெண்களை டா அடிப்பது இதெல்லாம் வெளிநாடுகளில் இல்லையே சகோதரம்?//

இதெல்லாம் சமுதாயம் முற்றிலுமாக கெட்டுச் சீரழிவிற்கு முந்தைய கட்டம். பெரும்பாலான பெண்கள் ஒழுக்கத்துடன் இருப்பதால் இன்னும் அடுத்தக்கட்டத்திற்கு வரவில்லை. ஆனால் இப்போது ஒழுக்கமாக இருக்கும் பெண்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.
பள்ளி மாணவ மாணவிகளிடம் செக்ஸ் என்பது முன்பெல்லாம் மிக மிகக் குறைவுதான். ஆனால் இப்போது இது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கிறது. இதனால் சீரழிவுதான் ஏற்படும். இதற்கு வினையூக்கியாக சினிமாவும் இணையமும் முக்கிய பங்காற்றுகின்றன. சினிமாவில் ஆபாசம் பணம் சம்பாதிப்பதற்காக திணிக்கப்படும்போது, திரட்டிகளில் ஹிட்ஸ் வரவேண்டும் என்பதற்காக ஆபாசத் தலைப்புக்கள் வலியத் திணிக்கப்படுகிறது. ஹிட்ஸ் மேல் பல பதிவர்களுக்கும் ஒரு போதைபோல ஆகிவிட்டது.

நிரூபன் போன்றவர்கள் நல்ல தரமான பதிவுகளை எழுதியவர்கள்தான். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. எந்த பதிவு இடவேண்டும் என்பது உங்கள் தனிப்பட்ட உரிமையாக இருந்தாலும் திரட்டி என்பது பல தரப்பினரும் வந்து செல்லும் பொது இடம் என்பதால் குறைந்த பட்சம் அந்த மாதிரி பதிவுகளை திரட்டியில் இணைக்காமல் இருக்கலாமே.

நிரூபன் said...
Best Blogger Tips

@Robin
இன்னொரு பிரச்சனை இருக்கு நம்மவர் (ஈழத்தவர் இடையே ) பிரதேசவாத்தத்தின் பின் புலத்தில் பெண்பதிவாளர்களை ஒதுக்கும் செயல் இதையும் கவனிக்கனும் இன்னும் பல பேசலாம் சகோ வேலை நேரத்தில் பதில் அதிகம் போடமுடியாது! //

நண்பா,
எதனால் பெண்களின் ஒழுக்கம் குறைகின்றது என்று கண்டறிந்து
நாம் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதில் என்ன தவறு உள்ளது/

பெண்களின் ஒழுக்கம் குறைவதற்கு வானொலி தொலைக்காட்சிகளை இணைய ஊடகங்களை காரணம் சொல்லுவதை விட, அவர்களைச் சார்ந்த சமூகம் போடும் கட்டுப்பாடுகளும் தடைக்கு காரணமாக அமைகின்றது என்பதனை அறிந்து
அந்த தடைகளை அகற்ற போரடலாமே!

நிரூபன் said...
Best Blogger Tips

@Robin

பள்ளி மாணவ மாணவிகளிடம் செக்ஸ் என்பது முன்பெல்லாம் மிக மிகக் குறைவுதான். ஆனால் இப்போது இது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கிறது. இதனால் சீரழிவுதான் ஏற்படும். இதற்கு வினையூக்கியாக சினிமாவும் இணையமும் முக்கிய பங்காற்றுகின்றன. சினிமாவில் ஆபாசம் பணம் சம்பாதிப்பதற்காக திணிக்கப்படும்போது, திரட்டிகளில் ஹிட்ஸ் வரவேண்டும் என்பதற்காக ஆபாசத் தலைப்புக்கள் வலியத் திணிக்கப்படுகிறது. ஹிட்ஸ் மேல் பல பதிவர்களுக்கும் ஒரு போதைபோல ஆகிவிட்டது.
//

ஹிட்ஸ் மேல் பல பதிவர்களுக்கு போதை என்பது நிஜமே! ஆனால் பலரின் வேண்டுகோளுக்கு அமைவாக ஆபாசம் எழுதுவதை தவிர்த்து பல மாதங்களாகி விட்டது.

அண்மையில் என்னை கெடுத்த பெண்கள் பதிவின் தலைப்பில் வரும் கெடுத்த எனும் வார்த்தை ஆபாசம் என்று சொன்னார்கள். ஆனால் மொழி அடிப்படையில் அந்தச் சொல்லினை எம் ஊரில் ஆபாசமாக பார்ப்பதில்லை என விளக்கம் கூறி இப் பதிவிலும் சேர்த்திருக்கிறேன்! அதனை யாருமே படிக்கலையா நண்பா?

நிரூபன் said...
Best Blogger Tips

@Robin

நிரூபன் போன்றவர்கள் நல்ல தரமான பதிவுகளை எழுதியவர்கள்தான். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. எந்த பதிவு இடவேண்டும் என்பது உங்கள் தனிப்பட்ட உரிமையாக இருந்தாலும் திரட்டி என்பது பல தரப்பினரும் வந்து செல்லும் பொது இடம் என்பதால் குறைந்த பட்சம் அந்த மாதிரி பதிவுகளை திரட்டியில் இணைக்காமல் இருக்கலாமே.
//

ஒரு காலத்தில் கில்மா எழுதினேன்! ஆனால் அண்மையில் கில்மாவே எழுதாமல் இருக்கிறேன்! சமீபத்தைய பதிவுகளில் எங்கே கில்மா இருக்கிறது! ப்ளீஸ் சுட்டிக் காட்டுங்கள் தாழ்மையாக கேட்கின்றேன்!

நிரூபன் said...
Best Blogger Tips

@Robin

நிரூபன் போன்றவர்கள் நல்ல தரமான பதிவுகளை எழுதியவர்கள்தான். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. எந்த பதிவு இடவேண்டும் என்பது உங்கள் தனிப்பட்ட உரிமையாக இருந்தாலும் திரட்டி என்பது பல தரப்பினரும் வந்து செல்லும் பொது இடம் என்பதால் குறைந்த பட்சம் அந்த மாதிரி பதிவுகளை திரட்டியில் இணைக்காமல் இருக்கலாமே.
//

ஒரு காலத்தில் கில்மா எழுதினேன்! ஆனால் அண்மையில் கில்மாவே எழுதாமல் இருக்கிறேன்! சமீபத்தைய பதிவுகளில் எங்கே கில்மா இருக்கிறது! ப்ளீஸ் சுட்டிக் காட்டுங்கள் தாழ்மையாக கேட்கின்றேன்!

வலையுகம் said...
Best Blogger Tips

அண்ணன் நீருபன் அவர்களுக்கு
நான் கொஞ்சம் பேசலாமா?

உங்களை யார் என்ன குறை சொன்ன என்ன தூக்கி போட்டுட்டு போயிகிட்டே இருங்க

கில்மா,மற்றும்,அஜால் குஜால் பதிவுகள் நீங்கள் எழுதுவதில்லை என்று உங்கள் மனசாட்சி சொன்னால் அது போதும்

மன உறுத்தல் இல்லையேன்றால் தொடருங்கள்

உங்கள் மனம் உறுத்தும் செயலில் இருந்து விலகிக் கொள்வதும் உங்கள் இஷட்ம தான்

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹைதர் அலி

அண்ணன் நீருபன் அவர்களுக்கு
நான் கொஞ்சம் பேசலாமா?

உங்களை யார் என்ன குறை சொன்ன என்ன தூக்கி போட்டுட்டு போயிகிட்டே இருங்க

கில்மா,மற்றும்,அஜால் குஜால் பதிவுகள் நீங்கள் எழுதுவதில்லை என்று உங்கள் மனசாட்சி சொன்னால் அது போதும்

மன உறுத்தல் இல்லையேன்றால் தொடருங்கள்

உங்கள் மனம் உறுத்தும் செயலில் இருந்து விலகிக் கொள்வதும் உங்கள் இஷட்ம தான்
//

வணக்கம் அண்ணன்,
பேசுங்கள்
உங்கள் கருத்துக்களை அறிய காத்திருக்கிறேன்!

நான் எழுதுவதை நிறுத்தி பல மாதமாச்சு!
அதனை ஏதோ அண்மையில் எழுதுவது போல பில்டப்பு கொடுத்து
மீண்டும் ஞாபகமூட்டுகிறார்களே சில பதிவர்கள்! அது தான் முடியலை!

வலையுகம் said...
Best Blogger Tips

நான் மன்னிப்பு கேட்கிறேன்

மனதளவில் செய்யதா ஒரு செயலை பிறர் அவதூறாக நீங்கள் செய்வதாக கூறினாள் கண்டிப்பாக கோபம் வரும் அந்த மனநிலையில் இப்போது நீங்கள் இருக்கிறீர்கள் புரிந்துக் கொண்டேன்

மனதை இலேசாக்கி விட்டு தொடருங்கள்

ஆமினா said...
Best Blogger Tips

//
ஆனால் நாங்கள் நாலு பேருமே தமிழர்கள்!//

அவ்வளவுதான் நிரூ.. மேட்டர் சுவாஹா.......! தமிழன்/வாசகன்/சகோதரன்/ சக பதிவர் என்ற அடிப்படையில் கேள்வி எழுப்பினார். ஏற்பதும் ஏற்காததும் உங்கள் கைகளீல்... இங்கே திணிப்பு என்பது நம் மனநிலை ஏற்கும் விதத்தில் தான் அமைந்திருக்கிறது. ஆபாசத்தை தவிருங்கன்னு ஒரு இந்து சொன்னா உங்கள் பதிவிலும் அடிக்கடி இஸ்லாம் என்ற வார்த்தையும் வெளிப்பட்டிருக்காது என்பதனை நீங்கள் மறுக்க முடியாது! அப்பறம் இன்னொரு கூட்டம் சுத்திட்டிருக்கு... எப்படா பிரிவினை ஏற்படுத்தலாம்னு. இந்த ஒரு பதிவு போதும் மீண்டும் பிரச்சனையை கொண்டு வர. கவனமா செயல்படுங்கோ

ஹேய் நிரூ...

இன்னும் புரியலையா? இப்ப இளைஞர்களின் ஹீரோப்பா நீ.. உன்னை பின்பற்றி தானே உன் ரசிகர்களும் வருவாங்க. நீ தெளிவா வரைமுறையோட ஒரு விஷயத்தை கையாண்டா மற்றவர்களும் அதே மனபக்குவத்தோட இருப்பாங்களா சொல்லு... அப்பறம் என்னவேணும்னாலும் எழுதலாம் என்ற நிலை மாறிய பின்னால் நாங்களாம் கம்யூட்டரை குப்பை தொட்டிக்குள் அனுப்பிட வேண்டியது தான் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. என் சாபம் உன்னை சும்மா விடாது ஹி...ஹி...ஹி.. நா வரலைன்னா தாமரை தீக்குளிச்சுடுவான் ஜாக்ரத :-)

//
மேலும் அவர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக நாம் கேட்டு நடக்கவேண்டிய அவசியம் இல்லை! //
அப்படிபோடு

//ஆனால் நாங்கள் நாலு பேருமே தமிழர்கள்! எனவே, நானும் நீயும் ஏதேனும் ஒரு தவறுவிடும் போது, சுவாவும், சிராஜும் அதனைத் தவறென்று சுட்டிக்காட்டுவதில் தப்பேதும் இல்லை! //

ஆமா

//இந்துக்கள், கிறித்துவர்கள்
தமது மத நூலை ஆதாரப்படுத்தி இஸ்லாமியச் சொந்தங்களுக்கு கருத்துரைகளைச் சொன்னால் ஏற்க முடியுமா?//
நல்லவிஷயங்களை எவர் சொன்னாலும் நிச்சயம் ஏற்றே ஆகவேண்டும். அந்த நல்லவிஷயத்தை பற்றி தான் நம் அறிவை கொண்டு ஆராயணுமே தவிர யார் சொன்னார் என்பது முக்கியமல்ல...

//சுவனப்பிரியனுக்கும், எனக்கும் உள்ள கருத்து முரண்பாடுகளை விவாதத்தில் பொதுக் கருத்தாக்கி
விவாதிக்கும் நோக்கில் வைத்திருக்கிறேனே தவிர,//
அப்ப சுவனப்பிரியனுக்கு மட்டும் தானே நீங்க இந்த பதிவு எழுதியிருக்கணும் :-)


சுவனப்பிரியன் பதிவில் எனக்கு முழு உடன்பாடு. எவ்வித மாற்றுகருத்துக்களும் இல்லை. அங்கே நல்ல முறையில் விவாதித்த ஐடியாமணிக்கு நன்றி.

@சகோ சுவனப்பிரியன்
இந்த கமென்டை நீங்க படிப்பீங்கன்னு நெனைக்கிறேன். நிச்சயமாக நிரூபனுக்கு நீங்கள் இட்ட கமென்டில் எனக்கு உடன்பாடில்லை. அவரை தான் தாக்கியிருக்கிறீர்கள் என யாருக்குமே தெரியும். ஆனால் நான் உங்களை தாக்கவில்லை என நீங்கள் சொன்னது மகா பொய். நீங்கள் அங்கே அப்படி சொன்னது முதலில் எனக்கு தான் பெருத்த ஏமாற்றம். அப்பறம் தேவையே இல்லாமல் குற்றமுள்ள நெஞ்சம் என கூறியது நீங்கள் தெரிந்தே தான் சொன்னீர்களா? :'-( மிகுந்த வருத்தம் உங்கள் மேல்


இது எல்லாருக்கும் பொதுவானது-அனானி ஆப்சன் குறித்து
நானும் அனானி ஆப்சன் வைத்திருக்கிறேன் தான். ஆனால் சர்ச்சைக்குரிய விஷயங்களை விவாதிக்கும் போது அனானி ஆப்சன் வச்சுருக்குற ப்ளாக்ல கமென்ட் போட மாட்டேன் :-) சில வேலையில்லாத விஷயக்கிருமிகள் வேண்டுமென்றே இடையில் புகுந்து நம் கவனத்தை திசைதிருப்பும் அல்லது பிரச்சனையை பெரிதுபடுத்தும். அதனால் தான் அனானி குறித்து அம்பலத்தார் அண்ணாவின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். தர்க்கரீதியாக பேசி ஆரோக்யமான முறையில் விவாதத்தினை எடுத்துச்செல்ல நினைப்பவர்கள் தயவு செய்து அனானியை உள்ளே அனுமதிக்காதீங்க.

____________________

இது காலைலையே எழுதிட்டேன். பவர் கட்ன்னால போட முடியல... உன் கெமென்ட்லாம் அப்பறமா படிச்சு சொல்றேன்

MaduraiGovindaraj said...
Best Blogger Tips

முழுமையாக படித்தேன் ,அதற்குள் செல்ல விருப்பமில்லை ,ஆனால் எழுதுவதை நிறுத்த போகிறேன் என்பதை ஏற்க முடியவில்லை எழுதுங்கள், எழுதுங்கள்

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails