Wednesday, September 7, 2011

ஆண்களின் பார்வையில் பெண்கள் கவர்ச்சிப் பதுமைகளா இல்லை அழகுப் பொம்மைகளா?

உலகில் தன்னுடைய புற அழகிற்காக அதிகளவான நேரங்களைச் செலவிடுகின்ற பெருமை பெண்களுக்கே உண்டு. பெண்கள் தம்மை அழகுபடுத்துவதற்காக அதிகளவான நேரங்களைச் செலவிடுவதோடு, பிறர் தம் அழகினைப் பற்றிக் கூறும் போது ஆனந்தப்படுகிறார்கள். பெண்களின் மனம் அவர்களின் உடல் அழகினைப் பற்றி ஆண்கள் கமெண்ட் அடிப்பதால் சந்தோசத்தில் மிதக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இலங்கை, இந்திய நாடுகளிலும் சரி, உலகின் ஏனைய நாடுகளிலும் சரி பெண்களின் நடை- உடை- பாவனைகளை அடிப்படையாக வைத்து அவர்களை தம் கண்களின் மூலம் எடை போடுகின்றது ஆண்களின் உள்ளம்.
ஒரு பெண் அழகாக இருந்தால் போதும், அவளைப் பின் தொடர்ந்து ஜொள்ளு வடிப்பதற்கும், அவள் அழகைப் பற்றிக் கமெண்ட் அடிப்பதற்கும் பல ஆடவர்கள் காத்திருப்பார்கள். சில பெண்கள் ஆண்களைத் தம் ஓர விழியால்- கடைக் கண் மூலம் பார்த்து ஆண்கள் தம்மைப் பின் தொடர்ந்து ஜொள்ளு விட வேண்டும் என்பதற்காக ஒரு புன்னகையினை உதிர்த்து விட்டுச் செல்லுவார்கள். ஒரு முறை மட்டும் பெண் ஆணினைப் பார்த்து விட்டு, மறு முறை பார்க்காமல்- அவ் ஆடவனைத் தெரியாதவளாகப் போகும் போது, அவள் முதன் முறை உதிர்த்த புன்னகையினை மனதில் வைத்து மாதக் கணக்கில் அப் பெண்ணினைப் பாதுகாப்பாகப் பின் தொடர்ந்து பாடிகார்ட் போல அழைத்துச் செல்வது முதல், வீட்டு வாசல் வரை கொண்டு வந்து சேர்ப்பதிலும் ஆண்கள் அளப்பரிய சேவை செய்திருக்கிறார்கள்.

பெண் ஆண்களுக்காகவா தன்னை அழகுபடுத்துகிறாள்? இயற்கை தனக்கு வழங்கிய இன்பமான வளைவு நெளிவுகளை தன் அழகிய ஆடைகள் கொண்டு மேலும் அழகாக்கி மகிழ்வடைகிறாள். உலகினில் ஆண்களை விட, பெண்களுக்குத் தான் உடுத்திக் கொள்ள அதிகளவான ஆடைகளே இருக்கின்றன. ஆனால் ஆண்களின் உடைகளோ குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவையாகத் தான் இருக்கின்றன. தமிழ்ப் பெண்கள் திருமணத்திற்கு முன்னர் தம் புற அழகில் காட்டும் அக்கறையினைத் திருமணத்திற்குப் பின்னர் காட்டுவதில்லை. இதனால்த் தான் ஏனைய மொழிப் பெண்கள் திருமணமாகி இரண்டு பிள்ளை பெத்த பின்னரும் இளமைத் தோற்றப் பொலிவுடன் இருக்க, எம் தமிழ் மாதுகள் பலர் திருமணமாகிக் குழந்தை பெற்ற பின்னர் தொள தொளக்கும் உடம்போடு, சள்ளை பெருத்தவர்களாக மாற்றம் பெறுகின்றார்கள்.
ஆண்கள் அழகிய பெண்களைத் தான் விரும்புவார்களா என்று கேட்டால், அதற்கான விடை ஆம் என்று தான் பெரும்பாலான ஆண்களிடமிருந்து கிடைக்கும். காரணம் "திருமணத்திற்கு முன்னரும் சரி, திருமணத்திற்குப் பின்னரும் சரி ஆண்கள் பெண்களின் அழகினை ரசிக்கிறார்கள். தம் மனைவியின் அழகிய உடல் வனப்புக்கள் குறைவடைகின்ற சந்தர்ப்பத்தில், மனைவியுடன் வெளியே போகும் போது கூட மாற்றானின் மனைவிகள் மேல் கண் பார்வையினை மேயவிடுகின்றார்கள்". அதிகளவான ஆண்களின் பார்வையில் பெண் அழகுப் பொம்மையாகத் தெரிவதை விடக் கவர்ச்சிப் பொருளாகத் தான் தெரிகிறாள்.

எங்கள் நாடுகளில் சேலைகளில் பெண் வந்தால் அவள் அழகாக இருப்பாள், குடும்ப லட்சணமாக இருப்பாள் என்று கூறுவோர் யார் என்று பார்த்தால் அவர்கள் நிச்சயமாக ஆண்களாகத் தான் இருப்பார்கள். எப்படிப்பட்ட ஆண்களாக இருப்பார்கள். பெண்ணின் புற அழகினைச் சேலையினூடாக ரசிக்கும் மனங் கொண்டவர்களாக இருப்பார்கள். "சேலையினை அடிக்கடி இடுப்பில் செருகும் போது மேற்சட்டையூடே தெரியும் பிரா கட்டிங்கை ரசிக்கும் ஆண்களாகத் தான் அந்த மன நிலை கொண்டவர்கள் இருப்பார்கள்". அழகும் கவர்ச்சியும் ஒரு பெண்ணிடம் இருக்கும் போது ஆண்கள் கவர்ச்சிக்குத் தான் முதன்மை கொடுத்து, பெண்ணை ரசிக்கின்றார்கள்.

பெண்ணின் உடற் கவர்ச்சி என்பது, ஆண்களின் காம வெறிக்கும், இன்பங்களுக்கும் தீனி போடும் ஒன்றாகத் தான் இருக்கின்றது. அழகிய ஆடைகளை அணிகின்ற பெண்ணை விட, தம் உடலை எடுப்பாகக் காட்டுகின்ற பெண்கள் மீது தான் ஆண்களின் பார்வைகள் அதிகமாகப் படுகின்றது. ஒரு வீதியால் சேலையில் போகின்ற பெண்ணை உற்றுப் பார்க்கும் அதிகளவான ஆடவர்களின் கண்கள் சுடிதாரில் போகும் பெண் மீது அதேயளவான கூர்ந்து பார்க்கும் பார்வைகளோடு உற்று நோக்குவதில்லை. இதற்கான காரணம் உடையமைப்பில் பெண்களின் கவர்ச்சி வேறுபட்டுக் கொள்வதால், பெண்கள் ஆண்களின் பார்வையில் கவர்ச்சிப் பொருளாகத் தோன்றுவதாகும்.
பெரும்பான்மையான ஆண்கள் அழகிய பெண்களை விரும்புகின்றார்கள்.
ஆனால் திருமணம் என்ற ஒன்று வருகின்ற போது, கவர்ச்சிப் பெண்கள் மீதான விருப்பத்தைப் பொத்தி வைத்து அடக்க ஒடுக்கமான- குடும்பப் பாங்கான பெண்கள் மீது தம் பார்வையினைச் செலுத்துகிறார்கள். திருமணத்தின் பின் அடக்க ஒடுக்கமாக தம் மனைவியினை மாற்ற முயற்சிக்கிறார்கள். மனைவிக்குத் தெரியாமல் கவர்ச்சிப் பெண்களைச் சைட் அடித்து ஜொள்ளு வடிக்கிறார்கள்.

அழகு என்பது மன உணர்வினை மாத்திரம் தூண்டக் கூடிய ஒன்றாகும். அதாவது "அட இந்தப் பொண்ணு இவ்வளவு அழகாக இருக்கிறாளே" என்று எண்ணி அவள் மீது மனதளவில் ஆசையினைத் தூண்டுவது அழகு.
கவர்ச்சி என்பது ஒரு பெண்ணின் உடற் கட்டமைப்பின் மூலம் உணர்ச்சியினைத் தூண்டச் செய்து, ஆணின் உடல் உணர்வுகளில் மாற்றங்களை உருவாக்கச் செய்வதாகும்.


இப்போது மேலே தரப்பட்ட கூற்றுக்களின் அடிப்படையில் நான் உங்களிடம் கேட்கும் கேள்வி, ஆண்களின் பார்வையில் பெண்கள் கவர்ச்சிப் பதுமைகளா அல்லது அழகுப் பொம்மைகளா?
ஆண்களும் பெண்களும் சளைக்காது தம் தரப்பு வாதங்களை முன் வைக்கலாம். உங்களுக்கான விவாத மேடை நீண்ட நாட்களின் பின்னர் இன்று திறந்திருக்கிறது. 
எங்கே...........ஆண்களின் பார்வையில் பெண்கள் கவர்ச்சிப் பதுமைகளா அல்லது அழகுப் பொம்மைகளா? எனும் வாதத்திற்கான உங்களது கருத்துகளோடு களமிறங்குங்கள் உறவுகளே! 
*******************************************************************************************************************************
கள்ளக் காதல் ஒரு கொடுமையான விடயமாக இருந்தாலும், இது பற்றிய தவறுகளுக்கு நீங்கள் உணர்வுகள் அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்றால் யாரை நாடுவீங்க முதலில்? ஒரு கவுன்சிலரைத் தானே!
பாலியல் நோய்கள் பற்றிய குழப்பங்கள் இருந்தாலும் வெளியே சொல்லப் பயம் என்றால், உங்கள் மனதினுள் காணப்படும் அகத் தடையினைப் போக்க நீங்கள் யாரை நாடுவீங்க? அதற்கும் கவுன்சிலரைத் தானே!
கள்ளக் காதல், பாலியல் நோய்கள் பற்றிய அறிவுரைகள், மனதில் உள்ள தீராத குழப்பங்கள் எனப் பல விடயங்கள் இன்றைய உலகில் மக்களின் நிம்மதியைப் பறித்துக் கொண்டிருக்கின்றது. 

வலையுலகில் கவுன்சிலிங் தொடர்பான செய்திகள், ஆரோக்கியமான உணவு வகைகள் பற்றிய குறிப்புக்கள், சமூகத்தில் குடும்பங்களுக்கு இடையே நிகழும் அதிரடிப் பிரச்சினைகள் எனப் பல தரப்பட்ட விடயங்களுக்கான ஆராய்ச்சிப் பதிவுகளையும் தன் வலையில் பகிர்ந்து வருகிறார் கவுன்சிலர் சண்முகவேல் அண்ணாச்சி அவர்கள். 
நீங்கள் அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய சண்முகவேல் அண்ணாச்சியின் COUNSEL FOR ANY வலைப் பதிவிற்குச் செல்ல:
http://counselforany.blogspot.com/
*********************************************************************************************************************************
முக்கிய குறிப்பு: இன்ட்லி ஓட்டுப் பட்டையில் ஓட்டுப் போட முடியவில்லையே எனும் உறவுகளின் வேண்டு கோளுக்கமைவாக, இன்ட்லியில் ஓட்டுப் போடுவதற்கான இணைப்பினை இங்கே பகிர்ந்துள்ளேன். 
இன்ட்லியில் ஓட்டளிக்க:

241 Comments:

«Oldest   ‹Older   201 – 241 of 241   Newer›   Newest»
நிரூபன் said...
Best Blogger Tips

@பிரணவன்

தன்னை அழகாக காட்டிக்கொள்வாதும் கவர்ச்சியாய் காட்டிக்கொள்வதும் பெண்களின் கையில் தான் உள்ளது. . .கவர்ச்சியாய் வரும் பெண்களை ஆண்கள் எல்லை மீறி பார்க்கின்றார்கள். அழகு பெண்களை ரசிக்கின்றார்கள் அவ்வளவுதான். . .//

உங்கள் கருத்து ஓக்கே பாஸ்,
ஆனால் எல்லா ஆண்களும் அழகாக உள்ள பெண்களை விடக் கவர்ச்சியான பெண்களைத் தான் திருமணத்திற்கு முன்னாடி ரசிக்கிறாங்க.
திருமணமானதும், மனைவிக்குத் தெரியாமலும் ரசிக்கிறாங்க
ஆக மொத்தத்தில ஆண்கள் அழகை விடக் கவர்ச்சிக்குத் தான் முதன்மையளிக்கிறாங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

வாழ்க்கையில் ஒரு பகுதி செக்ஸ், ஆனா வாழ்க்கையே/ மனுஷன் பிறந்ததே செக்ஸ்சுக்காக எண்டு சொல்லுறது போல இருக்கு உங்க இந்த வரிகள்....உணர்வுகளை தேவையான பொழுதுகளில் கட்டுப்படுத்திகொளுவதற்க்கு தான் விலங்குகளை விட கூட ஒரு அறிவு மனுஷனுக்கு இருக்கு..!//

அவ்...ஐடியா மணியின் கவனத்திற்கு இவ் வரிகளைச் சமர்ப்பிக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@shanmugavel

சில ஆண்களுக்கு பெண்கள் தாயாய் தெரிவதும் உண்டு.இப்போதைக்கு ஆண்கள் பலருக்கும் அழகும்,கவர்ச்சியுமே முக்கியமாகத்தெரிகிறது.நல்ல ஆன்மாக்கள் புறக்கணிக்கப்படுவதும் உண்டு.//

ஆம் நண்பா,
நிச்சயமாக உண்மையான வரிகள் இவை, இது தான் இன்றைய ஆடவர் மனங்கள் பலவற்றின் யதார்த்தமும் கூட.

நிரூபன் said...
Best Blogger Tips

@shanmugavel

சில ஆண்களுக்கு பெண்கள் தாயாய் தெரிவதும் உண்டு.இப்போதைக்கு ஆண்கள் பலருக்கும் அழகும்,கவர்ச்சியுமே முக்கியமாகத்தெரிகிறது.நல்ல ஆன்மாக்கள் புறக்கணிக்கப்படுவதும் உண்டு.//

ஆம் நண்பா,
நிச்சயமாக உண்மையான வரிகள் இவை, இது தான் இன்றைய ஆடவர் மனங்கள் பலவற்றின் யதார்த்தமும் கூட.

நிரூபன் said...
Best Blogger Tips

@koodal bala

ரொம்பவே ஆராய்ச்சி பண்றீங்க !//

ஏதோ நம்மளாலை முடிஞ்சது பாஸ்,
நன்றிங்கண்ணா,

நிரூபன் said...
Best Blogger Tips

@shanmugavel

அழகுக்கும்,கவர்ச்சிக்கும் நிரூபனின் விளக்கம் சரியானது.//

சேம் சேம் ...

நிரூபன் said...
Best Blogger Tips

@koodal bala

என்ன இது ...ஒரு மைல் நீளத்துக்கு நீண்டுட்டு போகுது !//.

இதற்கான விளக்கத்தை நீங்கல் ஐடியாமனியிடம் தான் கேட்கனும்,

நிரூபன் said...
Best Blogger Tips

@koodal bala

என்ன இது ...ஒரு மைல் நீளத்துக்கு நீண்டுட்டு போகுது !//.

இதற்கான விளக்கத்தை நீங்கல் ஐடியாமனியிடம் தான் கேட்கனும்,

நிரூபன் said...
Best Blogger Tips

@koodal bala

என்ன இது ...ஒரு மைல் நீளத்துக்கு நீண்டுட்டு போகுது !//.

இதற்கான விளக்கத்தை நீங்கல் ஐடியாமனியிடம் தான் கேட்கனும்,

நிரூபன் said...
Best Blogger Tips

@koodal bala

என்ன இது ...ஒரு மைல் நீளத்துக்கு நீண்டுட்டு போகுது !//.

இதற்கான விளக்கத்தை நீங்கல் ஐடியாமனியிடம் தான் கேட்கனும்,

நிரூபன் said...
Best Blogger Tips

@koodal bala

என்ன இது ...ஒரு மைல் நீளத்துக்கு நீண்டுட்டு போகுது !//.

இதற்கான விளக்கத்தை நீங்கல் ஐடியாமனியிடம் தான் கேட்கனும்,

நிரூபன் said...
Best Blogger Tips

@koodal bala

என்ன இது ...ஒரு மைல் நீளத்துக்கு நீண்டுட்டு போகுது !//.

இதற்கான விளக்கத்தை நீங்கல் ஐடியாமனியிடம் தான் கேட்கனும்,

நிரூபன் said...
Best Blogger Tips

@shanmugavel

கும்பிடுவது நமது பண்பாடுதானே!அதிலும் மணி நிறைய படித்தவர்.பட்டங்கள் பெற்றவர்.ஏற்றுக்கொள்ளுங்கள்.//

ஹா...ஹா....

ஏற்றுக் கொள்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@! சிவகுமார் !

//விக்கியுலகம் said...
மாப்ள என்னை பொறுத்தவரை அழகை ரசிப்பது தவறு அல்ல(!)...அதே நேரத்தில அதை தனதாக்கிக்க எடுக்கும் முயற்சிகள் தவறு....சைட் அடி கொண்டாடு..ஹிஹி!//

ஆனாலும் உங்களுக்கு ரவுசு ஜாஸ்தி மாம்சு.//

அட ஆமா பாஸ்....

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ

அழகை ரசிக்கலாம் தப்பில்லை, அனுபவிக்க நினைக்கக் கூடாது...//

இது கூட நல்லாத் தானே இருக்கு.

shanmugavel said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said... Best Blogger Tips [Reply To This Comment]

பதிவர், திரு ஷண்முகவேல் அவர்களுக்கு எனது வணக்கங்கள்! கும்புடுறேனுங்க!

சார், இந்தப் பதிவுலகத்துல உங்களுக்கு மேலும் மேலும் வெற்றிகிடைக்கணும் சார்!

வாழ்த்துக்கள் சார்!

thanks sir

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ

அழகை ரசிக்கலாம் தப்பில்லை, அனுபவிக்க நினைக்கக் கூடாது...//

இதுவும் நல்லாத் தானே இருக்கு...

shanmugavel said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips [Reply To This Comment]

சண்முகவேல் அய்யாவின் அறிமுகத்துக்கு நன்றி..

நன்றி அய்யா !

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.s.FR

பொல்லுப் புடிக்கிற வயதில இதுக்கு கருத்துச் சொல்லுறார் எண்டு காட்டான் என்ரை இந்தக் கருத்தைப் பாத்திட்டுச் சொல்லப் போறார்!உண்மையச் சொல்லுறதெண்டால்,நிரூபனோட எழுத்தில இருக்கிற உண்மை சிலருக்கு கசக்கும்!அழகுக்கும்,கவர்ச்சிக்கும் தொடர்பு இருக்கிறதே தவிர இரண்டும் ஒன்றல்ல!அழகிருக்கும் இடத்தில் கவர்ச்சி இருக்காது.கவர்ச்சி இருக்கும் இடத்தில் அழகு இருக்காது!இரண்டும் சேரப் பெற்ற பெண்கள் பாக்கியசாலிகள்.அவ்வாறில்லாத பெண்கள்,கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்று அழகுள்ள பெண்களும்,அழகாக இருக்க வேண்டும் என்று கவர்ச்சியான பெண்களும் பல் வேறு வழிகளை நாடுவார்கள்.நிரூபன் கேள்விக்கு வருவோம்;ஆண்களின் பார்வையில் பெண்கள் கவர்ச்சிப் பதுமைகளா அல்லது அழகுப் பொம்மைகளா?என்னுடைய பதில்;இரண்டுமே!!!!!//

ஐயாவின் நிறைவான விளக்கத்திற்கு நன்றி,
ஆனால் ஆண்களில் பெரும்பாலானோர் அழகிற்கா அல்லது கவர்ச்சிக்கா முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்?

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி

இப்படி அழகழகான பிகர்களின் படத்த போட்டுட்டு அவங்க யாரு என்னன்னு விபரம் போடாம இருட்டடிப்பு செய்த நிரூபனை கண்டிக்கிறேன்........ ஒவ்வொரு பிகரையும் ஃபைல் நேம் வெச்சுத்தான் பேர் கண்டுபுடிக்க வேண்டி இருக்கு!//

அவ்...உங்களுக்குப் பெயர் கேட்குதோ...

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி
ரெண்டு நல்ல படம் போட்டுட்டு மூணாவதா ஒரு அட்டு போட்டிருக்கீங்களே எதுக்கு? அது மட்டும் சிபி ஸ்பெசலா//

ஆமா பாஸ்,
சிபி உங்களுக்காக டெடிகேட் பண்ணச் சொல்லிக் கேட்டாரு,

shanmugavel said...
Best Blogger Tips

@மாய உலகம் said... Best Blogger Tips [Reply To This Comment]

இன்றைய அறிமுக பதிவரான அன்பு நண்பர் சண்முகவேல் அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்....

நன்றி நண்பா!

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி
//////"சேலையினை அடிக்கடி இடுப்பில் செருகும் போது மேற்சட்டையூடே தெரியும் பிரா கட்டிங்கை ரசிக்கும் ஆண்களாகத் தான் அந்த மன நிலை கொண்டவர்கள் இருப்பார்கள்"./////////

ஆராய்ச்சி தாறுமாறா இருக்கே......//

ஆமா பாஸ். இது தானே யதார்த்தமும் கூட.

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி
//////"சேலையினை அடிக்கடி இடுப்பில் செருகும் போது மேற்சட்டையூடே தெரியும் பிரா கட்டிங்கை ரசிக்கும் ஆண்களாகத் தான் அந்த மன நிலை கொண்டவர்கள் இருப்பார்கள்"./////////

ஆராய்ச்சி தாறுமாறா இருக்கே......//

ஆமா பாஸ். இது தானே யதார்த்தமும் கூட.

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி
//////"சேலையினை அடிக்கடி இடுப்பில் செருகும் போது மேற்சட்டையூடே தெரியும் பிரா கட்டிங்கை ரசிக்கும் ஆண்களாகத் தான் அந்த மன நிலை கொண்டவர்கள் இருப்பார்கள்"./////////

ஆராய்ச்சி தாறுமாறா இருக்கே......//

ஆமா பாஸ். இது தானே யதார்த்தமும் கூட.

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்

அவ்வவ்
எங்க பாஸ் தமிழ்மணத்தை காணோம்.//

அவ்...தமிழ் மணம் இப்போ லீவில இருக்கு பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்

அவ்வவ்
எங்க பாஸ் தமிழ்மணத்தை காணோம்.//

அவ்...தமிழ் மணம் இப்போ லீவில இருக்கு பாஸ்.

shanmugavel said...
Best Blogger Tips

@மாய உலகம் said... Best Blogger Tips [Reply To This Comment]

அழகு என்பது மன உணர்வினை மாத்திரம் தூண்டக் கூடிய ஒன்றாகும். அதாவது "அட இந்தப் பொண்ணு இவ்வளவு அழகாக இருக்கிறாளே" என்று எண்ணி அவள் மீது மனதளவில் ஆசையினைத் தூண்டுவது அழகு.//

அது காதல்


கவர்ச்சி என்பது ஒரு பெண்ணின் உடற் கட்டமைப்பின் மூலம் உணர்ச்சியினைத் தூண்டச் செய்து, ஆணின் உடல் உணர்வுகளில் மாற்றங்களை உருவாக்கச் செய்வதாகும்.//


இது காமம்

அட! இது கூட நல்லாருக்கே!

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்
அனுஷ்கா சினேகாவிடம் இருப்பது எல்லாம்
கவர்ச்சி இல்லை பாஸ் அழகுதான்,

அதே நமிதா சோனா விடம் இருப்பது
கவர்ச்சி பாஸ்

நமக்கு
கவர்ச்சியான பெண்களை விட
அழகான பொண்ணுங்க மேலேயே ஒரு "இது" பாஸ்.
ஹீ ஹீ//

ஆமா பாஸ், அழகும் கவர்ச்சியும் மனத்திற்கு மனம் வேறுபடும்,
ஆண்களில் பெரும்பான்மையானோர் உங்களைப் போல இருக்க முடியாதல்லவா.

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்
பாஸ் ரெம்பத்தான் ஆராட்சி பண்ணுறீங்க
நல்லாவே இருக்கு பாஸ்
ஹீ ஹ//

நன்றி பாஸ்...ஆனால் விவாதத்தினைப் பற்றிக் கருத்துச் சொல்லாமல் எஸ் ஆகிட்டீங்களே?

நிரூபன் said...
Best Blogger Tips

@மாய உலகம்

ஹலோ என்ன தொடர்ந்து ஆம்பளைகளை மட்டந்தட்டியே பதிவ போடுறீங்க ஹி ஹி இருங்க பதிவ படிச்சுட்டு வாரேன்....//

அவ்...அப்படியெல்லாம் இல்ல பாஸ்..
ஏதோ நம்மளாலை முடிஞ்ச ஒரு விடயத்தின் உண்மைத் தன்மையினை உறுதி செய்வதற்கான பதிவு தான் இது.

நிரூபன் said...
Best Blogger Tips

@மாய உலகம்
ஹா ஹா என்னங்க காமெடி பண்றீங்க... அழகான பொண்ணுங்கள பாத்து தான் ரசிப்பாங்க ஜொள்ளு வடிப்பாங்க பின்ன அசிங்கமான ஆம்பளைய பாத்தா ஜொள்ளூ வடிப்பாங்க நல்லா சொல்றாய்ங்க டீட்டெயிலு ஹி ஹி ஹி//

இது ஓக்கே பாஸ், ஆனால் ஆண்கள் அழகான பொண்ணை விடக் கவர்ச்சியான பொண்னிற்குத் தான் அதிகளவான முக்கியத்துவம் கொடுக்கிறாங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@மாய உலகம்...

கைய குடுங்க..... இப்ப தான் சரியா வரீங்க//

இந்தங்க பாஸ்.
கம்பியூட்டர் மூலமா பிடிக்கிறீங்களா?

நிரூபன் said...
Best Blogger Tips

@
பெண் ஆண்களுக்காகவா தன்னை அழகுபடுத்துகிறாள்? இயற்கை தனக்கு வழங்கிய இன்பமான வளைவு நெளிவுகளை தன் அழகிய ஆடைகள் கொண்டு மேலும் அழகாக்கி மகிழ்வடைகிறாள். //

ஆஹா தலைவரே! பயங்கர ரசனை உள்ள பார்ட்டியா இருப்பீங்க போலருக்கே//

இல்லை பாஸ்..இது தானே யதார்த்தமும் கூடா...

நிரூபன் said...
Best Blogger Tips

@
இதுல ஒரு உண்மையான விசயம் பாத்தீங்கன்னா பாஸ்... நம் ஆடவருக்கே உள்ள சுயநலம் மிளிரும் என்னன்னா... இவர் அடுத்தவன் பொண்டாட்டிகளை ரசிப்பானா..ஆனா அடுத்தவன் அவன் பொண்டாட்டிய ரசிச்சா பல்ல கடிப்பானா என்னா நியாயம் பாஸ் இந்த ஆடவர்களின் சுயநலம் ஞாயம் .... என்னமோ போங்க//

அப்பிடிப் போடுங்க பாஸ் அருவாளை.
ஹா...ஹா...

நிரூபன் said...
Best Blogger Tips

@
இதுல ஒரு உண்மையான விசயம் பாத்தீங்கன்னா பாஸ்... நம் ஆடவருக்கே உள்ள சுயநலம் மிளிரும் என்னன்னா... இவர் அடுத்தவன் பொண்டாட்டிகளை ரசிப்பானா..ஆனா அடுத்தவன் அவன் பொண்டாட்டிய ரசிச்சா பல்ல கடிப்பானா என்னா நியாயம் பாஸ் இந்த ஆடவர்களின் சுயநலம் ஞாயம் .... என்னமோ போங்க//

அப்பிடிப் போடுங்க பாஸ் அருவாளை.
ஹா...ஹா...

நிரூபன் said...
Best Blogger Tips

பூமியில் படைக்கப்பட்ட விந்தையான மனித இனத்தில் ஆண்களை விட பெண்களிற்குத் தான் இயற்கை எந் நேரமும் தம் மேனியினை அழகுபடுத்திப் பார்க்கின்ற ஒரு சந்தர்ப்பத்தினை வழங்கியிருக்கிறது.

ஆண்கணினைப் பெண்கள் உள்ளூர ரசித்தாலும், ஆண்களின் வெளிப்படையான புற உலகத் தோற்றத்தில் பெண்களை அழகுப் பொருளாகப் பார்ப்பதை விடுத்து, அப் பெண்ணின் ஊடாகத் தெரியும் கவர்ச்சி தோற்றங்களைத் தான் அதிகமாக ரசிக்கிறார்கள்.

பெண்கள் அழகிற்கு அதிக முக்கியம் கொடுத்தாலும், அவளிடத்தே கவர்ச்சி என்ற ஒன்று இல்லை என்றால் ஆண்களின் நிலமை ஐயோ...பரிதாபம் தான்.

இதற்கான காரணம் எமது கலாச்சாரமும் ஆகும், எமது தமிழ் மரபிப் பெண் இப்படித்தான் வாழ வேண்டும் எனும் கட்டுப்பாட்டினை விதித்துள்ள பெரியவர்களது இறந்து விட்ட கொள்கைகளை இன்றும் பின்பற்றும் ஆண்களால் ஒரு பெண்ணானவள் அழகுப் பொருளாகவும் கவர்ச்சிப் பொருளாகவும் பார்க்கபப்ட்டாலும்,

கவர்ச்சிப் பொருளாகப் பெண்ணை ஆடவர்கள் உற்று நோக்குவது தான் அதிகளவான இடங்களில் நிகழ்ந்தேறியுள்ளது,
மேற்படி கருத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் ஐடியா மணி சாரும் அருமையான உதாரண விளக்கங்களை முன் வைத்திருந்தார்கள். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ஆண்கள் பெண்ணை அழகுப் பொருளாக நினைத்தால், பெண்ணின் பின்னே சென்று வழிந்து வழிந்து காதலிக்க மாட்டார்கள்.
பெண்களை வல்லுறவிற்கு உட்படுத்த மாட்டார்கள்.
பெண்களோடு வாழ் நாட் பூராகவும் சகஜமாககப் பழகுவார்கள்.

எம் சமூகம் இன்று வரை பெண்ணின் கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அழகிற்கு இரண்டாம் பட்ச அங்கீகாரம் கொடுப்பதால் தான் திருமணத்தின் பின் பல பெண்கள் மனதளவில் தம் ஆசையினை வெளிக்காட்ட முடியாதவர்களாகப் வெந்து சாகிறார்கள்.

இந்த நிலை மாற வேண்டுமாயின் பெண்ணிடம் கவர்ச்சியினைத் தேடுவதை விடுத்து, அவளையும் ஒரு சராசரி மனித இனமாக மதித்து, அவள் உணர்வுகளை மதிகக்ப் பழகும் சமயத்தில் பெண்களின் வாழ்வு மேலும் சிறப்படையும் என்பதோடு, சமூகத்தில் நிகழும் துஷ்பிரயோகங்களும் இல்லாது போகும்.

நிரூபன் said...
Best Blogger Tips

பூமியில் படைக்கப்பட்ட விந்தையான மனித இனத்தில் ஆண்களை விட பெண்களிற்குத் தான் இயற்கை எந் நேரமும் தம் மேனியினை அழகுபடுத்திப் பார்க்கின்ற ஒரு சந்தர்ப்பத்தினை வழங்கியிருக்கிறது.

ஆண்கணினைப் பெண்கள் உள்ளூர ரசித்தாலும், ஆண்களின் வெளிப்படையான புற உலகத் தோற்றத்தில் பெண்களை அழகுப் பொருளாகப் பார்ப்பதை விடுத்து, அப் பெண்ணின் ஊடாகத் தெரியும் கவர்ச்சி தோற்றங்களைத் தான் அதிகமாக ரசிக்கிறார்கள்.

பெண்கள் அழகிற்கு அதிக முக்கியம் கொடுத்தாலும், அவளிடத்தே கவர்ச்சி என்ற ஒன்று இல்லை என்றால் ஆண்களின் நிலமை ஐயோ...பரிதாபம் தான்.

இதற்கான காரணம் எமது கலாச்சாரமும் ஆகும், எமது தமிழ் மரபிப் பெண் இப்படித்தான் வாழ வேண்டும் எனும் கட்டுப்பாட்டினை விதித்துள்ள பெரியவர்களது இறந்து விட்ட கொள்கைகளை இன்றும் பின்பற்றும் ஆண்களால் ஒரு பெண்ணானவள் அழகுப் பொருளாகவும் கவர்ச்சிப் பொருளாகவும் பார்க்கபப்ட்டாலும்,

கவர்ச்சிப் பொருளாகப் பெண்ணை ஆடவர்கள் உற்று நோக்குவது தான் அதிகளவான இடங்களில் நிகழ்ந்தேறியுள்ளது,
மேற்படி கருத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் ஐடியா மணி சாரும் அருமையான உதாரண விளக்கங்களை முன் வைத்திருந்தார்கள். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ஆண்கள் பெண்ணை அழகுப் பொருளாக நினைத்தால், பெண்ணின் பின்னே சென்று வழிந்து வழிந்து காதலிக்க மாட்டார்கள்.
பெண்களை வல்லுறவிற்கு உட்படுத்த மாட்டார்கள்.
பெண்களோடு வாழ் நாட் பூராகவும் சகஜமாககப் பழகுவார்கள்.

எம் சமூகம் இன்று வரை பெண்ணின் கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அழகிற்கு இரண்டாம் பட்ச அங்கீகாரம் கொடுப்பதால் தான் திருமணத்தின் பின் பல பெண்கள் மனதளவில் தம் ஆசையினை வெளிக்காட்ட முடியாதவர்களாகப் வெந்து சாகிறார்கள்.

இந்த நிலை மாற வேண்டுமாயின் பெண்ணிடம் கவர்ச்சியினைத் தேடுவதை விடுத்து, அவளையும் ஒரு சராசரி மனித இனமாக மதித்து, அவள் உணர்வுகளை மதிகக்ப் பழகும் சமயத்தில் பெண்களின் வாழ்வு மேலும் சிறப்படையும் என்பதோடு, சமூகத்தில் நிகழும் துஷ்பிரயோகங்களும் இல்லாது போகும்.

Unknown said...
Best Blogger Tips

நிரூ கலையில இருந்தே பிஸி, நீங்க வேற விவாத மேடைன்னு சொல்லிடீங்க. அதான் கொஞ்சம் லேட்.

சரி விசயத்துக்கு வரேன்...

ஆண்களின் பார்வைக்கு என்றுமே பெண்கள் அக்கறை காட்டியதில்லை, அப்ப ஏன் அவங்க ஒரு மாதிரி டிரஸ் பண்ணுறாங்க அப்பிடின்னு கேக்குறீங்களா? ஏன்னா அவங்களுக்கு அது அவங்க இஷ்டம் அப்புறம் அது அவங்க இரத்தத்தில ஊறினது.

பெண் ஆதி காலத்தில இருந்தே அப்படித்தான், நம்ம ஆதிவாசியா சுத்திக்கிட்டு இருந்த காலத்தில் இருந்தே வீட்டு பொறுப்பு அவங்க கிட்ட குடுத்துட்டோம், அவங்க முக்கியமான வேலையே தரமான சந்ததிகளை உருவாக்குறது தான், தரமான சந்ததிகள் வேணுமின்னா தரமான துணை வேணும், உடல், புத்தி ரெண்டும் நல்லா இருக்க ஆண் வேணும். போட்டி இருந்தா தானே தேர்ந்து எடுக்குறது சாத்தியம். அதுக்கு தான் எல்லாமே, மேக்-அப் போடுறது கவர்ச்சியா டிரஸ் போடுறது எல்லாமே.

இப்ப கூட அவங்க உங்களை டெஸ்ட் பண்றதுக்கு தான் எல்லாமே புரிஞ்சதா!!??

இன்னும் சொல்லணும்ன்னா உங்க பதிவுக்கு எதிர் பதிவு தான் போடணும் அதுவும் தொடரும்ன்னு போட்டு ஒரு 10 - 15 பதிவு எழுதணும்..

Anonymous said...
Best Blogger Tips

ஆண்கள் வர்க்க பிரதிநிதியாய் முழங்கிவிட்டீர்கள் என்று ஒரு பெண் குரலும் இல்லையே...

vanathy said...
Best Blogger Tips

எங்கள் பெண்கள் திருமணத்தின் பின்னர் உடம்பை கவனிப்பதில்லை. காரணம் : கணவர் என்பதே என் கருத்து. காலையில் எழும்பினால் இரவு படுக்கைக்கு போகும் வரைக்கும் ஓயாத வேலை. அம்மாவுடன் இருக்கும் வரை பெண்களுக்கு நிறைய நேரம் இருக்கும் உடம்பினை ஸ்லிம்மாக வைத்திருப்பார்கள். அதன் பிறகு எல்லாமே தலை கீழ் தான்.

«Oldest ‹Older   201 – 241 of 241   Newer› Newest»

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails