Wednesday, September 7, 2011

ஆண்களின் பார்வையில் பெண்கள் கவர்ச்சிப் பதுமைகளா இல்லை அழகுப் பொம்மைகளா?

உலகில் தன்னுடைய புற அழகிற்காக அதிகளவான நேரங்களைச் செலவிடுகின்ற பெருமை பெண்களுக்கே உண்டு. பெண்கள் தம்மை அழகுபடுத்துவதற்காக அதிகளவான நேரங்களைச் செலவிடுவதோடு, பிறர் தம் அழகினைப் பற்றிக் கூறும் போது ஆனந்தப்படுகிறார்கள். பெண்களின் மனம் அவர்களின் உடல் அழகினைப் பற்றி ஆண்கள் கமெண்ட் அடிப்பதால் சந்தோசத்தில் மிதக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இலங்கை, இந்திய நாடுகளிலும் சரி, உலகின் ஏனைய நாடுகளிலும் சரி பெண்களின் நடை- உடை- பாவனைகளை அடிப்படையாக வைத்து அவர்களை தம் கண்களின் மூலம் எடை போடுகின்றது ஆண்களின் உள்ளம்.
ஒரு பெண் அழகாக இருந்தால் போதும், அவளைப் பின் தொடர்ந்து ஜொள்ளு வடிப்பதற்கும், அவள் அழகைப் பற்றிக் கமெண்ட் அடிப்பதற்கும் பல ஆடவர்கள் காத்திருப்பார்கள். சில பெண்கள் ஆண்களைத் தம் ஓர விழியால்- கடைக் கண் மூலம் பார்த்து ஆண்கள் தம்மைப் பின் தொடர்ந்து ஜொள்ளு விட வேண்டும் என்பதற்காக ஒரு புன்னகையினை உதிர்த்து விட்டுச் செல்லுவார்கள். ஒரு முறை மட்டும் பெண் ஆணினைப் பார்த்து விட்டு, மறு முறை பார்க்காமல்- அவ் ஆடவனைத் தெரியாதவளாகப் போகும் போது, அவள் முதன் முறை உதிர்த்த புன்னகையினை மனதில் வைத்து மாதக் கணக்கில் அப் பெண்ணினைப் பாதுகாப்பாகப் பின் தொடர்ந்து பாடிகார்ட் போல அழைத்துச் செல்வது முதல், வீட்டு வாசல் வரை கொண்டு வந்து சேர்ப்பதிலும் ஆண்கள் அளப்பரிய சேவை செய்திருக்கிறார்கள்.

பெண் ஆண்களுக்காகவா தன்னை அழகுபடுத்துகிறாள்? இயற்கை தனக்கு வழங்கிய இன்பமான வளைவு நெளிவுகளை தன் அழகிய ஆடைகள் கொண்டு மேலும் அழகாக்கி மகிழ்வடைகிறாள். உலகினில் ஆண்களை விட, பெண்களுக்குத் தான் உடுத்திக் கொள்ள அதிகளவான ஆடைகளே இருக்கின்றன. ஆனால் ஆண்களின் உடைகளோ குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவையாகத் தான் இருக்கின்றன. தமிழ்ப் பெண்கள் திருமணத்திற்கு முன்னர் தம் புற அழகில் காட்டும் அக்கறையினைத் திருமணத்திற்குப் பின்னர் காட்டுவதில்லை. இதனால்த் தான் ஏனைய மொழிப் பெண்கள் திருமணமாகி இரண்டு பிள்ளை பெத்த பின்னரும் இளமைத் தோற்றப் பொலிவுடன் இருக்க, எம் தமிழ் மாதுகள் பலர் திருமணமாகிக் குழந்தை பெற்ற பின்னர் தொள தொளக்கும் உடம்போடு, சள்ளை பெருத்தவர்களாக மாற்றம் பெறுகின்றார்கள்.
ஆண்கள் அழகிய பெண்களைத் தான் விரும்புவார்களா என்று கேட்டால், அதற்கான விடை ஆம் என்று தான் பெரும்பாலான ஆண்களிடமிருந்து கிடைக்கும். காரணம் "திருமணத்திற்கு முன்னரும் சரி, திருமணத்திற்குப் பின்னரும் சரி ஆண்கள் பெண்களின் அழகினை ரசிக்கிறார்கள். தம் மனைவியின் அழகிய உடல் வனப்புக்கள் குறைவடைகின்ற சந்தர்ப்பத்தில், மனைவியுடன் வெளியே போகும் போது கூட மாற்றானின் மனைவிகள் மேல் கண் பார்வையினை மேயவிடுகின்றார்கள்". அதிகளவான ஆண்களின் பார்வையில் பெண் அழகுப் பொம்மையாகத் தெரிவதை விடக் கவர்ச்சிப் பொருளாகத் தான் தெரிகிறாள்.

எங்கள் நாடுகளில் சேலைகளில் பெண் வந்தால் அவள் அழகாக இருப்பாள், குடும்ப லட்சணமாக இருப்பாள் என்று கூறுவோர் யார் என்று பார்த்தால் அவர்கள் நிச்சயமாக ஆண்களாகத் தான் இருப்பார்கள். எப்படிப்பட்ட ஆண்களாக இருப்பார்கள். பெண்ணின் புற அழகினைச் சேலையினூடாக ரசிக்கும் மனங் கொண்டவர்களாக இருப்பார்கள். "சேலையினை அடிக்கடி இடுப்பில் செருகும் போது மேற்சட்டையூடே தெரியும் பிரா கட்டிங்கை ரசிக்கும் ஆண்களாகத் தான் அந்த மன நிலை கொண்டவர்கள் இருப்பார்கள்". அழகும் கவர்ச்சியும் ஒரு பெண்ணிடம் இருக்கும் போது ஆண்கள் கவர்ச்சிக்குத் தான் முதன்மை கொடுத்து, பெண்ணை ரசிக்கின்றார்கள்.

பெண்ணின் உடற் கவர்ச்சி என்பது, ஆண்களின் காம வெறிக்கும், இன்பங்களுக்கும் தீனி போடும் ஒன்றாகத் தான் இருக்கின்றது. அழகிய ஆடைகளை அணிகின்ற பெண்ணை விட, தம் உடலை எடுப்பாகக் காட்டுகின்ற பெண்கள் மீது தான் ஆண்களின் பார்வைகள் அதிகமாகப் படுகின்றது. ஒரு வீதியால் சேலையில் போகின்ற பெண்ணை உற்றுப் பார்க்கும் அதிகளவான ஆடவர்களின் கண்கள் சுடிதாரில் போகும் பெண் மீது அதேயளவான கூர்ந்து பார்க்கும் பார்வைகளோடு உற்று நோக்குவதில்லை. இதற்கான காரணம் உடையமைப்பில் பெண்களின் கவர்ச்சி வேறுபட்டுக் கொள்வதால், பெண்கள் ஆண்களின் பார்வையில் கவர்ச்சிப் பொருளாகத் தோன்றுவதாகும்.
பெரும்பான்மையான ஆண்கள் அழகிய பெண்களை விரும்புகின்றார்கள்.
ஆனால் திருமணம் என்ற ஒன்று வருகின்ற போது, கவர்ச்சிப் பெண்கள் மீதான விருப்பத்தைப் பொத்தி வைத்து அடக்க ஒடுக்கமான- குடும்பப் பாங்கான பெண்கள் மீது தம் பார்வையினைச் செலுத்துகிறார்கள். திருமணத்தின் பின் அடக்க ஒடுக்கமாக தம் மனைவியினை மாற்ற முயற்சிக்கிறார்கள். மனைவிக்குத் தெரியாமல் கவர்ச்சிப் பெண்களைச் சைட் அடித்து ஜொள்ளு வடிக்கிறார்கள்.

அழகு என்பது மன உணர்வினை மாத்திரம் தூண்டக் கூடிய ஒன்றாகும். அதாவது "அட இந்தப் பொண்ணு இவ்வளவு அழகாக இருக்கிறாளே" என்று எண்ணி அவள் மீது மனதளவில் ஆசையினைத் தூண்டுவது அழகு.
கவர்ச்சி என்பது ஒரு பெண்ணின் உடற் கட்டமைப்பின் மூலம் உணர்ச்சியினைத் தூண்டச் செய்து, ஆணின் உடல் உணர்வுகளில் மாற்றங்களை உருவாக்கச் செய்வதாகும்.


இப்போது மேலே தரப்பட்ட கூற்றுக்களின் அடிப்படையில் நான் உங்களிடம் கேட்கும் கேள்வி, ஆண்களின் பார்வையில் பெண்கள் கவர்ச்சிப் பதுமைகளா அல்லது அழகுப் பொம்மைகளா?
ஆண்களும் பெண்களும் சளைக்காது தம் தரப்பு வாதங்களை முன் வைக்கலாம். உங்களுக்கான விவாத மேடை நீண்ட நாட்களின் பின்னர் இன்று திறந்திருக்கிறது. 
எங்கே...........ஆண்களின் பார்வையில் பெண்கள் கவர்ச்சிப் பதுமைகளா அல்லது அழகுப் பொம்மைகளா? எனும் வாதத்திற்கான உங்களது கருத்துகளோடு களமிறங்குங்கள் உறவுகளே! 
*******************************************************************************************************************************
கள்ளக் காதல் ஒரு கொடுமையான விடயமாக இருந்தாலும், இது பற்றிய தவறுகளுக்கு நீங்கள் உணர்வுகள் அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்றால் யாரை நாடுவீங்க முதலில்? ஒரு கவுன்சிலரைத் தானே!
பாலியல் நோய்கள் பற்றிய குழப்பங்கள் இருந்தாலும் வெளியே சொல்லப் பயம் என்றால், உங்கள் மனதினுள் காணப்படும் அகத் தடையினைப் போக்க நீங்கள் யாரை நாடுவீங்க? அதற்கும் கவுன்சிலரைத் தானே!
கள்ளக் காதல், பாலியல் நோய்கள் பற்றிய அறிவுரைகள், மனதில் உள்ள தீராத குழப்பங்கள் எனப் பல விடயங்கள் இன்றைய உலகில் மக்களின் நிம்மதியைப் பறித்துக் கொண்டிருக்கின்றது. 

வலையுலகில் கவுன்சிலிங் தொடர்பான செய்திகள், ஆரோக்கியமான உணவு வகைகள் பற்றிய குறிப்புக்கள், சமூகத்தில் குடும்பங்களுக்கு இடையே நிகழும் அதிரடிப் பிரச்சினைகள் எனப் பல தரப்பட்ட விடயங்களுக்கான ஆராய்ச்சிப் பதிவுகளையும் தன் வலையில் பகிர்ந்து வருகிறார் கவுன்சிலர் சண்முகவேல் அண்ணாச்சி அவர்கள். 
நீங்கள் அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய சண்முகவேல் அண்ணாச்சியின் COUNSEL FOR ANY வலைப் பதிவிற்குச் செல்ல:
http://counselforany.blogspot.com/
*********************************************************************************************************************************
முக்கிய குறிப்பு: இன்ட்லி ஓட்டுப் பட்டையில் ஓட்டுப் போட முடியவில்லையே எனும் உறவுகளின் வேண்டு கோளுக்கமைவாக, இன்ட்லியில் ஓட்டுப் போடுவதற்கான இணைப்பினை இங்கே பகிர்ந்துள்ளேன். 
இன்ட்லியில் ஓட்டளிக்க:

241 Comments:

«Oldest   ‹Older   1 – 200 of 241   Newer›   Newest»
K said...
Best Blogger Tips

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!

நிரூபன் சாருக்கு வணக்கம்!

இப்போது ஆன் லைன்ல இருக்கும் 10 பேருக்கும் வணக்கம்!

என்னைத் தொடர்ந்து கமெண்டு போட இருக்கும் நண்பர்களுக்கு வணக்கம்!

சப்போஸ் யாராவது மைனஸ் ஓட்டுப் போட இருந்தால் அவர்களுக்கும் வணக்கம்!

டெம்ப்ளேட் கமெண்ட் போட இருக்கும் நண்பர்களுக்கும் வணக்கம்!

கும்புடுறேனுங்க!

K said...
Best Blogger Tips

ஆண்களின் பார்வையில் பெண்கள் கவர்ச்சிப் பதுமைகளா இல்லை அழகுப் பொம்மைகளா?////

சார், ரெண்டுமே ஒண்ணுதானே சார்!

செங்கோவி said...
Best Blogger Tips

// ஆண்களின் பார்வையில் பெண்கள் கவர்ச்சிப் பதுமைகளா இல்லை அழகுப் பொம்மைகளா? //

இரண்டுமே ஒன்று தானே?

K said...
Best Blogger Tips

உலகில் தன்னுடைய புற அழகிற்காக அதிகளவான நேரங்களைச் செலவிடுகின்ற பெருமை பெண்களுக்கே உண்டு.///

அதை ரசிப்பதற்கு அதிகளவு நேரத்தை செலவிடும் பெருமை ஆண்களுக்கே உண்டு சார்!

K said...
Best Blogger Tips

@செங்கோவி

// ஆண்களின் பார்வையில் பெண்கள் கவர்ச்சிப் பதுமைகளா இல்லை அழகுப் பொம்மைகளா? //

இரண்டுமே ஒன்று தானே?///

ஸேம் ப்ளட்!

செங்கோவி said...
Best Blogger Tips

//ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...//

ஆமா, ரெண்டு கமெண்ட்டுமே ஒன்னு தான்..

பரவாயில்லை, துணைக்கு ஆளிருக்கு..

யோ நிரூ, பதில் சொல்லும்யா.

செங்கோவி said...
Best Blogger Tips

//ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...//

ஆமா, ரெண்டு கமெண்ட்டுமே ஒன்னு தான்..

பரவாயில்லை, துணைக்கு ஆளிருக்கு..

யோ நிரூ, பதில் சொல்லும்யா.

K said...
Best Blogger Tips

பெண்கள் தம்மை அழகுபடுத்துவதற்காக அதிகளவான நேரங்களைச் செலவிடுவதோடு, பிறர் தம் அழகினைப் பற்றிக் கூறும் போது ஆனந்தப்படுகிறார்கள். ///

சார், நம்மளப் பத்தி யாராச்சும் புகழ்ந்து சொன்னா, நமக்கும் சந்தோசமா இருக்கும்தானே!

K said...
Best Blogger Tips

பெண்களின் மனம் அவர்களின் உடல் அழகினைப் பற்றி ஆண்கள் கமெண்ட் அடிப்பதால் சந்தோசத்தில் மிதக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ///

ஆஹா! அருமையான கண்டுபிடிப்பு!

K said...
Best Blogger Tips

இலங்கை, இந்திய நாடுகளிலும் சரி, உலகின் ஏனைய நாடுகளிலும் சரி பெண்களின் நடை- உடை- பாவனைகளை அடிப்படையாக வைத்து அவர்களை தம் கண்களின் மூலம் எடை போடுகின்றது ஆண்களின் உள்ளம்.////

ஆமாங்க! உண்மைதான்!!

K said...
Best Blogger Tips

ஒரு பெண் அழகாக இருந்தால் போதும், அவளைப் பின் தொடர்ந்து ஜொள்ளு வடிப்பதற்கும், அவள் அழகைப் பற்றிக் கமெண்ட் அடிப்பதற்கும் பல ஆடவர்கள் காத்திருப்பார்கள்.////

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

K said...
Best Blogger Tips

சில பெண்கள் ஆண்களைத் தம் ஓர விழியால்- கடைக் கண் மூலம் பார்த்து ஆண்கள் தம்மைப் பின் தொடர்ந்து ஜொள்ளு விட வேண்டும் என்பதற்காக ஒரு புன்னகையினை உதிர்த்து விட்டுச் செல்லுவார்கள். ////

இப்படித்தான் ஒரு நாள் பியா என்னைப் பார்த்து...... வேணாம் விட்டுடுவோம்!

K said...
Best Blogger Tips

ஒரு முறை மட்டும் பெண் ஆணினைப் பார்த்து விட்டு, மறு முறை பார்க்காமல்- அவ் ஆடவனைத் தெரியாதவளாகப் போகும் போது, அவள் முதன் முறை உதிர்த்த புன்னகையினை மனதில் வைத்து மாதக் கணக்கில் அப் பெண்ணினைப் பாதுகாப்பாகப் பின் தொடர்ந்து பாடிகார்ட் போல அழைத்துச் செல்வது முதல், வீட்டு வாசல் வரை கொண்டு வந்து சேர்ப்பதிலும் ஆண்கள் அளப்பரிய சேவை செய்திருக்கிறார்கள்.////

அதுல ஒரு சுகம் இருக்குங்க ஸார்! நீங்க அனுபவிச்சதில்ல?

செங்கோவி said...
Best Blogger Tips

/ பிறர் தம் அழகினைப் பற்றிக் கூறும் போது ஆனந்தப்படுகிறார்கள். பெண்களின் மனம் அவர்களின் உடல் அழகினைப் பற்றி ஆண்கள் கமெண்ட் அடிப்பதால் சந்தோசத்தில் மிதக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.//

இதுக்கெல்லாமா ஆய்வு நடத்தறாங்க? பெண்கள் பிடித்த நபர் கமெண்ட் அடித்தால் மட்டுமே ரசிப்பார்கள்னு நினைக்கேன்...

K said...
Best Blogger Tips

பெண் ஆண்களுக்காகவா தன்னை அழகுபடுத்துகிறாள். இயற்கை தனக்கு வழங்கிய இன்பமான வளைவு நெளிவுகளை தன் அழகிய ஆடைகள் கொண்டு மேலும் அழகாக்கி மகிழ்வடைகிறாள். ////

சார், ஆம்பளைங்க பார்க்கலைன்னா, பொண்ணுங்க அழகா இருக்குறதே வேஸ்ட்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!

நிரூபன் சாருக்கு வணக்கம்!

இப்போது ஆன் லைன்ல இருக்கும் 10 பேருக்கும் வணக்கம்!

என்னைத் தொடர்ந்து கமெண்டு போட இருக்கும் நண்பர்களுக்கு வணக்கம்!

சப்போஸ் யாராவது மைனஸ் ஓட்டுப் போட இருந்தால் அவர்களுக்கும் வணக்கம்!

டெம்ப்ளேட் கமெண்ட் போட இருக்கும் நண்பர்களுக்கும் வணக்கம்!

கும்புடுறேனுங்க!//

ஒரு நாளைக்கு எத்தனை வாட்டி சார் கும்பிடுவீங்க?
உங்களுக்கும் வணக்கம் சார்!
என ஒரு பெருந் தன்மை.

K said...
Best Blogger Tips

உலகினில் ஆண்களை விட, பெண்களுக்குத் தான் உடுத்திக் கொள்ள அதிகளவான ஆடைகளே இருக்கின்றன. ///

ஹி ஹி ஹி !!!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
ஆண்களின் பார்வையில் பெண்கள் கவர்ச்சிப் பதுமைகளா இல்லை அழகுப் பொம்மைகளா?////

சார், ரெண்டுமே ஒண்ணுதானே சார்!//

கவர்ச்சி, அழகு இரண்டும் வேறு வேறு தானேங்க சார்.

செங்கோவி said...
Best Blogger Tips

//ஒரு முறை மட்டும் பெண் ஆணினைப் பார்த்து விட்டு, மறு முறை பார்க்காமல்- அவ் ஆடவனைத் தெரியாதவளாகப் போகும் போது, அவள் முதன் முறை உதிர்த்த புன்னகையினை மனதில் வைத்து மாதக் கணக்கில் அப் பெண்ணினைப் பாதுகாப்பாகப் பின் தொடர்ந்து பாடிகார்ட் போல அழைத்துச் செல்வது முதல், வீட்டு வாசல் வரை கொண்டு வந்து சேர்ப்பதிலும் ஆண்கள் அளப்பரிய சேவை செய்திருக்கிறார்கள்.//

இப்படியும் சில உண்டு தான்..

K said...
Best Blogger Tips

ஆனால் ஆண்களின் உடைகளோ குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவையாகத் தான் இருக்கின்றன. ///

சார், வட் டூ யூ மீன்?

K said...
Best Blogger Tips

தமிப் பெண்கள் திருமணத்திற்கு முன்னர் தம் புற அழகில் காட்டும் அக்கறையினைத் திருமணத்திற்குப் பின்னர் காட்டுவதில்லை. ///

‘ழ்’ எங்கே சார்?

K said...
Best Blogger Tips

தமிப் பெண்கள் திருமணத்திற்கு முன்னர் தம் புற அழகில் காட்டும் அக்கறையினைத் திருமணத்திற்குப் பின்னர் காட்டுவதில்லை.////

ஆனால், இது ரொம்ப தப்புங்க!

K said...
Best Blogger Tips

இதனால்த் தான் ஏனைய மொழிப் பெண்கள் திருமணமாகி இரண்டு பிள்ளை பெத்த பின்னரும் இளமைத் தோற்றப் பொலிவுடன் இருக்க, எம் தமிழ் மாதுகள் பலர் திருமணமாகிக் குழந்தை பெற்ற பின்னர் தொள தொளக்கும் உடம்போடு, சள்ளை பெருத்தவர்களாக மாற்றம் பெறுகின்றார்கள்.///

சார், கையைக் குடுங்க சார்! நான் இதுபத்தி ஒரு பதிவு போட இருந்தேன்! சத்தியமா சார்!

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி
// ஆண்களின் பார்வையில் பெண்கள் கவர்ச்சிப் பதுமைகளா இல்லை அழகுப் பொம்மைகளா? //

இரண்டுமே ஒன்று தானே?//

அப்படீன்னா கவர்ச்சியா இருக்கும் எல்லோரும் அழகா இருபாங்களா பாஸ்?
கவர்ச்சி என்பது அழகினை மாத்திரமா குறிக்கப் பயன்படுகின்றது,
அப்படீன்னா செக்ஸி லுக் என்று சொல்லுவோமே?
அது எதற்குப் பயன்படுகிறது பாஸ்?

K said...
Best Blogger Tips

ஆண்கள் அழகிய பெண்களைத் தான் விரும்புவார்களா என்று கேட்டால், அதற்கான விடை ஆம் என்று தான் பெரும்பாலான ஆண்களிடமிருந்து கிடைக்கும்.////

எனது பதிலும் ‘ ஆம் ‘ தான்!

K said...
Best Blogger Tips

காரணம் "திருமணத்திற்கு முன்னரும் சரி, திருமணத்திற்குப் பின்னரும் சரி ஆண்கள் பெண்களின் அழகினை ரசிக்கிறார்கள். ////

ஹி ஹி ஹி உண்மை!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

உலகில் தன்னுடைய புற அழகிற்காக அதிகளவான நேரங்களைச் செலவிடுகின்ற பெருமை பெண்களுக்கே உண்டு.///

அதை ரசிப்பதற்கு அதிகளவு நேரத்தை செலவிடும் பெருமை ஆண்களுக்கே உண்டு சார்!//

நம்ம ஜொள்ளு மாஸ்டர் பதில் சொல்லுறாரே...

அவ்....

செங்கோவி said...
Best Blogger Tips

//எங்கள் நாடுகளில் சேலைகளில் பெண் வந்தால் அவள் அழகாக இருப்பாள், குடும்ப லட்சணமாக இருப்பாள் என்று கூறுவோர் யார் என்று பார்த்தால்.........பெண்ணின் புற அழகினைச் சேலையினூடாக ரசிக்கும் மனங் கொண்டவர்களாக இருப்பார்கள்.//


அப்படி இல்லைய்யா..சேலையில் ஒரு பாந்தமான அழகு இருக்கு..(பாந்தத்தை இவருக்கு எப்படி புரியவைக்க...)

K said...
Best Blogger Tips

தம் மனைவியின் அழகிய உடல் வனப்புக்கள் குறைவடைகின்ற சந்தர்ப்பத்தில், மனைவியுடன் வெளியே போகும் போது கூட மாற்றானின் மனைவிகள் மேல் கண் பார்வையினை மேயவிடுகின்றார்கள்". ///

இதில் பெண்கள் மீதே தப்பு இருக்கிறது!

K said...
Best Blogger Tips

அதிகளவான ஆண்களின் பார்வையில் பெண் அழகுப் பொம்மையாகத் தெரிவதை விடக் கவர்ச்சிப் பொருளாகத் தான் தெரிகிறாள்.////

பெண்ணை போகப் பொருளாகப் பார்க்ககூடாது என்பது இயற்கைக்கு மாறான சட்டம்! தமிழர்களின் பெரும்பாலான வாழ்க்கை முறைமை இயற்கைக்கு எதிரானது!

சொன்னா யார் கேக்குறா?

செங்கோவி said...
Best Blogger Tips

//ஆனால் ஆண்களின் உடைகளோ குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவையாகத் தான் இருக்கின்றன. //

ஆமாய்யா..ஆம்பிளைகளுக்கு இருக்கிறதே ஆறு கலர் தான்..அநியாயம்.

K said...
Best Blogger Tips

எங்கள் நாடுகளில் சேலைகளில் பெண் வந்தால் அவள் அழகாக இருப்பாள், குடும்ப லட்சணமாக இருப்பாள் என்று கூறுவோர் யார் என்று பார்த்தால் அவர்கள் நிச்சயமாக ஆண்களாகத் தான் இருப்பார்கள். ///

எனக்கு சேலை கட்டும் பெண்களைக் கண்டால் பிடிப்பதே இல்லை! அதுவும் பட்டுச் சேலைகள் கட்டும் பெண்களைக் கண்டால், உவ்வ்வ்வ்வ்வே.....!

K said...
Best Blogger Tips

எப்படிப்பட்ட ஆண்களாக இருப்பார்கள். பெண்ணின் புற அழகினைச் சேலையினூடாக ரசிக்கும் மனங் கொண்டவர்களாக இருப்பார்கள்.///

சேலைல எங்க சார் ரசிக்க இருக்கு! கன்றாவியா இருக்கும்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
@செங்கோவி

// ஆண்களின் பார்வையில் பெண்கள் கவர்ச்சிப் பதுமைகளா இல்லை அழகுப் பொம்மைகளா? //

இரண்டுமே ஒன்று தானே?///

ஸேம் ப்ளட்!//

சகோதரர்களே,
கவர்ச்சி என்றால் என்ன, அழகு என்றால் என்ன?
கவர்ச்சி என்பது கிறங்கடிக்கும் ஒரு லுக். அதாவது ஒரு ஆணைச் சுண்டியிழுக்கும் ஒரு லுக். அல்லது கவர்ச்சி என்பது உடையினைக் குறைத்து உடல் அழகினைக் காட்டி மயக்கும் ஒரு மாயை.
கவர்ச்சி எனப்படுவது செக்ஸி லுக்.

ஆனால் அழகு என்பது இயற்கையாகவே பெண்களிற்கு கிடைத்துள்ள அழகு. இதனைத் தானே நாம் வடிவு என்கிறோம்,

ஒரு உதாரணத்திற்கு இரண்டு நடிகைகளை ஒப்பிட்டுப் பார்போம்,
வானம் படத்தில் நடித்த அனுஷ்கா- இவரிடம் நாம அழகினையா அல்லது உடல் கவர்ச்சியினையா எதிர்பார்ப்போம்?

அடுத்தவர் சிநேகா...இவரிடம் கவர்ச்சியா அல்லது அழகா நிறைந்திருக்கிறது?

ஆக கவர்ச்சி, அழகு எனும் இரண்டு சொற்களுக்குமான விளக்கம் இப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி
//ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...//

ஆமா, ரெண்டு கமெண்ட்டுமே ஒன்னு தான்..

பரவாயில்லை, துணைக்கு ஆளிருக்கு..

யோ நிரூ, பதில் சொல்லும்யா.//

இப்போ சொல்லிட்டேனே தெளிவான விளக்கம்,.

இது போதுமா?

செங்கோவி said...
Best Blogger Tips

//சகோதரர்களே,
கவர்ச்சி என்றால் என்ன, அழகு என்றால் என்ன?//

என்னய்யா இவரு, நைட்டு 2 மணிக்கி கிளாஸ் எடுக்கிறாரு..

K said...
Best Blogger Tips

"சேலையினை அடிக்கடி இடுப்பில் செருகும் போது மேற்சட்டையூடே தெரியும் பிரா கட்டிங்கை ரசிக்கும் ஆண்களாகத் தான் அந்த மன நிலை கொண்டவர்கள் இருப்பார்கள்". ///

இது உண்மைதான்! ஆனால் இதைவிடக் கவர்ச்சியான பல ஆடைகள் வந்துவிட்டன! எமது பெண்கள் அணிவதே இல்லை! அவர்களுக்கு அணிய விருப்பம் இருந்தாலும், சுற்றி இருப்பவர்கள் விடுவதே இல்லை!

இந்த இயற்கை மீறிகளை - கட்டி வச்சு உதைக்கணும் சார்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

சார், நம்மளப் பத்தி யாராச்சும் புகழ்ந்து சொன்னா, நமக்கும் சந்தோசமா இருக்கும்தானே!//

ஆனாலும் நாம பெண்களிடம் அவர்களின் அழகினைப் புகழ்ந்து கூறும் போது வரும் சந்தோசம் இருக்கிறதெ..
அவர்கள் முகத்தில் தெரியும் புன்னகை இருக்கிறதே..
அதனை வர்ணிக்கவே முடியாது பாஸ்.

செங்கோவி said...
Best Blogger Tips

இப்போ புரிஞ்சிடுச்சு...கவர்ச்சியா பார்க்கப்படுவதை பெண்கள் விரும்புகிறார்களா? அழகான பதுமையாக பார்க்கப்பட விரும்புகிறார்களா? --இது தான் கேள்வியா?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
பெண்களின் மனம் அவர்களின் உடல் அழகினைப் பற்றி ஆண்கள் கமெண்ட் அடிப்பதால் சந்தோசத்தில் மிதக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ///

ஆஹா! அருமையான கண்டுபிடிப்பு!//

இது நான் கண்டு பிடிச்ச உண்மை இல்லை பாஸ்..
பலஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருக்காங்க.

K said...
Best Blogger Tips

பெண்ணின் உடற் கவர்ச்சி என்பது, ஆண்களின் காம வெறிக்கும், இன்பங்களுக்கும் தீனி போடும் ஒன்றாகத் தான் இருக்கின்றது. ///

அதுக்காக மட்டுமே படைக்கப்பட்டது சார்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

சில பெண்கள் ஆண்களைத் தம் ஓர விழியால்- கடைக் கண் மூலம் பார்த்து ஆண்கள் தம்மைப் பின் தொடர்ந்து ஜொள்ளு விட வேண்டும் என்பதற்காக ஒரு புன்னகையினை உதிர்த்து விட்டுச் செல்லுவார்கள். ////

இப்படித்தான் ஒரு நாள் பியா என்னைப் பார்த்து...... வேணாம் விட்டுடுவோம்!//

அவ்....என்னங்க பாஸ்..கனவிலையா?

K said...
Best Blogger Tips

அழகிய ஆடைகளை அணிகின்ற பெண்ணை விட, தம் உடலை எடுப்பாகக் காட்டுகின்ற பெண்கள் மீது தான் ஆண்களின் பார்வைகள் அதிகமாகப் படுகின்றது. ////

ஆடைகள் யாருக்கு வேணும் சார்?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

ஒரு முறை மட்டும் பெண் ஆணினைப் பார்த்து விட்டு, மறு முறை பார்க்காமல்- அவ் ஆடவனைத் தெரியாதவளாகப் போகும் போது, அவள் முதன் முறை உதிர்த்த புன்னகையினை மனதில் வைத்து மாதக் கணக்கில் அப் பெண்ணினைப் பாதுகாப்பாகப் பின் தொடர்ந்து பாடிகார்ட் போல அழைத்துச் செல்வது முதல், வீட்டு வாசல் வரை கொண்டு வந்து சேர்ப்பதிலும் ஆண்கள் அளப்பரிய சேவை செய்திருக்கிறார்கள்.////

அதுல ஒரு சுகம் இருக்குங்க ஸார்! நீங்க அனுபவிச்சதில்ல?//

யாரு நாமளா...
போங்க சார்...நீங்க பொய் சொல்லுறீங்க;-))))))
இதையெல்லாம் மிஸ்ட் பண்ணியிருப்போமா?
சான்ஸே இல்லை சார்.

sarujan said...
Best Blogger Tips

(பாதுகாப்பாகப் பின் தொடர்ந்து பாடிகார்ட் போல.....)அட நான் போனது இப்ப ஊருக்கே தெரிஞ்சு விட்டுது

K said...
Best Blogger Tips

ஒரு வீதியால் சேலையில் போகின்ற பெண்ணை உற்றுப் பார்க்கும் அதிகளவான ஆடவர்களின் கண்கள் சுடிதாரில் போகும் பெண் மீது அதேயளவான கூர்ந்து பார்க்கும் பார்வைகளோடு உற்று நோக்குவதில்லை. ////

சுடிதாரில் போகும் பெண்களைப் பார்த்தால் - திருவிழாவில் கோமளிப் பொம்மைகள் போவது போல இருக்கும் சார்!

சுடிதாரைக் கண்டு பிடிச்சவனைக் கொல்லணும் சார்!

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

/ பிறர் தம் அழகினைப் பற்றிக் கூறும் போது ஆனந்தப்படுகிறார்கள். பெண்களின் மனம் அவர்களின் உடல் அழகினைப் பற்றி ஆண்கள் கமெண்ட் அடிப்பதால் சந்தோசத்தில் மிதக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.//

இதுக்கெல்லாமா ஆய்வு நடத்தறாங்க? பெண்கள் பிடித்த நபர் கமெண்ட் அடித்தால் மட்டுமே ரசிப்பார்கள்னு நினைக்கேன்...//

இல்ல பாஸ்,
பிடித்தவங்களை விட,
பாடம் நடத்துறவங்க, ரோட்டில் போறவங்க என, பெண்கள் மனதினைப் புரிஞ்சுக்கிட்டவங்க சொன்னாலும் ரசிப்பாங்களாம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

பெண் ஆண்களுக்காகவா தன்னை அழகுபடுத்துகிறாள். இயற்கை தனக்கு வழங்கிய இன்பமான வளைவு நெளிவுகளை தன் அழகிய ஆடைகள் கொண்டு மேலும் அழகாக்கி மகிழ்வடைகிறாள். ////

சார், ஆம்பளைங்க பார்க்கலைன்னா, பொண்ணுங்க அழகா இருக்குறதே வேஸ்ட்!//

அட அதில இப்படியும் ஓர் விடயம் இருக்கா...

செங்கோவி said...
Best Blogger Tips

அழகு மட்டும் ரசிக்கப்படறதுல ஒரு மரியாதை இருக்கு..கவர்ச்சியா பார்க்கப்படுவதில் என்ன இருக்கு?

அதனால யாரும் கவர்ச்சியா பார்க்குறதை விரும்ப மாட்டாங்க.

K said...
Best Blogger Tips

இதற்கான காரணம் உடையமைப்பில் பெண்களின் கவர்ச்சி வேறுபட்டுக் கொள்வதால், பெண்கள் ஆண்களின் பார்வையில் கவர்ச்சிப் பொருளாகத் தோன்றுவதாகும்.////

ஒரு ஆணின் பார்வையில், அரு அழகான பெண் கவர்ச்சியாகத் தெரியவில்லை என்றால், அந்த ஆணை உடனடியாக ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போகணும் சார்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
ஆனால் ஆண்களின் உடைகளோ குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவையாகத் தான் இருக்கின்றன. ///

சார், வட் டூ யூ மீன்?//

ஓ...அதுவா பாஸ்..
ஆண்களுக்கு பெண்களைப் போல நிறைய ஆடைகள் இல்லை என்று சொல்ல வந்தேன் பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
தமிப் பெண்கள் திருமணத்திற்கு முன்னர் தம் புற அழகில் காட்டும் அக்கறையினைத் திருமணத்திற்குப் பின்னர் காட்டுவதில்லை. ///

‘ழ்’ எங்கே சார்?//

நம்ம ஊரில தான் சார்.
ஏன் உங்க ஊரிலயும் இப்படித் தானே இருப்பாங்க சார்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

சார், கையைக் குடுங்க சார்! நான் இதுபத்தி ஒரு பதிவு போட இருந்தேன்! சத்தியமா சார்!//

ஆய்..சேம் பிளட்

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

சார், கையைக் குடுங்க சார்! நான் இதுபத்தி ஒரு பதிவு போட இருந்தேன்! சத்தியமா சார்!//

ஆய்..சேம் பிளட்

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
ஆண்கள் அழகிய பெண்களைத் தான் விரும்புவார்களா என்று கேட்டால், அதற்கான விடை ஆம் என்று தான் பெரும்பாலான ஆண்களிடமிருந்து கிடைக்கும்.////

எனது பதிலும் ‘ ஆம் ‘ தான்!//

இப்படி நீங்க பொது இடத்தில சொன்னாலும், நாம உங்களுக்குப் பொண்ணு தர மாட்டம் பாஸ்.
ஜாக்கிரதை..பிச்சுப் புடுவேன் பிச்சு.

K said...
Best Blogger Tips

பெரும்பான்மையான ஆண்கள் அழகிய பெண்களை விரும்புகின்றார்கள்.
ஆனால் திருமணம் என்ற ஒன்று வருகின்ற போது, கவர்ச்சிப் பெண்கள் மீதான விருப்பத்தைப் பொத்தி வைத்து அடக்க ஒடுக்கமான- குடும்பப் பாங்கான பெண்கள் மீது தம் பார்வையினைச் செலுத்துகிறார்கள். ////

எல்லா ஆம்பளைங்களும் கோழைத்தனமாக முடிவெடுக்கும் இடம் அதுதானே!

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி
அப்படி இல்லைய்யா..சேலையில் ஒரு பாந்தமான அழகு இருக்கு..(பாந்தத்தை இவருக்கு எப்படி புரியவைக்க...//


புரிஞ்சிடுச்சு பாஸ், பாந்தம் புரிஞ்சிடுச்சு பாஸ்,
ஆனாலும் சேலையில் தானே அதிக கவர்ச்சி இருக்கு பாஸ்.

K said...
Best Blogger Tips

திருமணத்தின் பின் அடக்க ஒடுக்கமாக தம் மனைவியினை மாற்ற முயற்சிக்கிறார்கள். மனைவிக்குத் தெரியாமல் கவர்ச்சிப் பெண்களைச் சைட் அடித்து ஜொள்ளு வடிக்கிறார்கள்.///

மிகவும் மோசமான முட்டாள்தனம்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw


தம் மனைவியின் அழகிய உடல் வனப்புக்கள் குறைவடைகின்ற சந்தர்ப்பத்தில், மனைவியுடன் வெளியே போகும் போது கூட மாற்றானின் மனைவிகள் மேல் கண் பார்வையினை மேயவிடுகின்றார்கள்". ///

இதில் பெண்கள் மீதே தப்பு இருக்கிறது!//

அவ்...எப்படிச் சொல்லுறீங்க...பெண் வீட்டில் அழகாக இருந்தால் கணவன் ஏன் வெளியே பார்வையினை மேய விடுகிறான் என்று சொல்ல வாறீங்களா?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
அதிகளவான ஆண்களின் பார்வையில் பெண் அழகுப் பொம்மையாகத் தெரிவதை விடக் கவர்ச்சிப் பொருளாகத் தான் தெரிகிறாள்.////

பெண்ணை போகப் பொருளாகப் பார்க்ககூடாது என்பது இயற்கைக்கு மாறான சட்டம்! தமிழர்களின் பெரும்பாலான வாழ்க்கை முறைமை இயற்கைக்கு எதிரானது!

சொன்னா யார் கேக்குறா?//

அவ்...இதனை எப்படி பாஸ் மாத்தலாம்?

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

//ஆனால் ஆண்களின் உடைகளோ குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவையாகத் தான் இருக்கின்றன. //

ஆமாய்யா..ஆம்பிளைகளுக்கு இருக்கிறதே ஆறு கலர் தான்..அநியாயம்.//

உடையில் ஆண்களுக்குச் சம உரிமை வேண்டின் என்ன பண்ணலாம் பாஸ்?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

எங்கள் நாடுகளில் சேலைகளில் பெண் வந்தால் அவள் அழகாக இருப்பாள், குடும்ப லட்சணமாக இருப்பாள் என்று கூறுவோர் யார் என்று பார்த்தால் அவர்கள் நிச்சயமாக ஆண்களாகத் தான் இருப்பார்கள். ///

எனக்கு சேலை கட்டும் பெண்களைக் கண்டால் பிடிப்பதே இல்லை! அதுவும் பட்டுச் சேலைகள் கட்டும் பெண்களைக் கண்டால், உவ்வ்வ்வ்வ்வே.....!//

நெசமாவா சொல்லுறீங்க...

தனிமரம் said...
Best Blogger Tips

வணக்கம் பாஸ் 
விவாதமா ஐயோ ஆளைவிடுங்க சாமி !

K said...
Best Blogger Tips

இப்போது மேலே தரப்பட்ட கூற்றுக்களின் அடிப்படையில் நான் உங்களிடம் கேட்கும் கேள்வி, ஆண்களின் பார்வையில் பெண்கள் கவர்ச்சிப் பதுமைகளா அல்லது அழகுப் பொம்மைகளா?///

சார், நான் ஒண்ணு சொல்லவா? உலகத்துல, இயற்கை அமைப்புல, ஆணுக்கு தாகம் தீர்க்கப் பெண்ணும், பெண்ணுக்குத் தாகம் தீர்க்க ஆணும் படைக்கப்பட்டிருக்கிறாங்க!

ஆணின் அழகு பெண்ணுக்கு!

பெண்ணின் அழகு ஆணுக்கு!!

இத மறந்துட்டு, சில இனத்தவர்களும், சில மதத்தவர்களும் பண்ணுகிற அநியாயம் இருக்கே!

வேணாம் சார், உலகத்தில் எல்லா மனிதனும் மாறிட்டன் சார்!

மூன்றாம்தர நாடுகளை அதிகம் கொண்ட தெற்காசிய நாடுகள் சில தான், இன்னமும் அடி மட்டத்தில் இருக்கு!

எப்படியும் 2030 ல உலகம் ஒரே மாதிரியாகிடும் சார்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

எப்படிப்பட்ட ஆண்களாக இருப்பார்கள். பெண்ணின் புற அழகினைச் சேலையினூடாக ரசிக்கும் மனங் கொண்டவர்களாக இருப்பார்கள்.///

சேலைல எங்க சார் ரசிக்க இருக்கு! கன்றாவியா இருக்கும்!//

உண்மையினை வெளிப்படையாகச் சொல்லிட்டீங்களே பாஸ்..
நீங்க நெசமாத் தான் சொல்லுறீங்களா?

K said...
Best Blogger Tips

ஆண்களும் பெண்களும் சளைக்காது தம் தரப்பு வாதங்களை முன் வைக்கலாம். உங்களுக்கான விவாத மேடை நீண்ட நாட்களின் பின்னர் இன்று திறந்திருக்கிறது.
எங்கே...........ஆண்களின் பார்வையில் பெண்கள் கவர்ச்சிப் பதுமைகளா அல்லது அழகுப் பொம்மைகளா? எனும் வாதத்திற்கான உங்களது கருத்துகளோடு களமிறங்குங்கள் உறவுகளே! ////


சூப்பர் தலைப்பு சார்! இன்னைக்கு ஒரு வழி பண்ணாமல் போக மாட்டேன்!

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

இப்போ புரிஞ்சிடுச்சு...கவர்ச்சியா பார்க்கப்படுவதை பெண்கள் விரும்புகிறார்களா? அழகான பதுமையாக பார்க்கப்பட விரும்புகிறார்களா? --இது தான் கேள்வியா?//

ஆமா பாஸ்...இதனைத் தான் நானும் கேட்கிறேன்.

K said...
Best Blogger Tips

@நிரூபன்

தமிப் பெண்கள் திருமணத்திற்கு முன்னர் தம் புற அழகில் காட்டும் அக்கறையினைத் திருமணத்திற்குப் பின்னர் காட்டுவதில்லை. ///

‘ழ்’ எங்கே சார்?//

நம்ம ஊரில தான் சார்.
ஏன் உங்க ஊரிலயும் இப்படித் தானே இருப்பாங்க சார்.///

சார், நான் சொல்ல வந்தது தமிழ் என்பதுக்கு ழ் ஐ விட்டுட்டு தமி என்று எழுதியிருக்கீங்க! அத சொன்னேன்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
பெண்ணின் உடற் கவர்ச்சி என்பது, ஆண்களின் காம வெறிக்கும், இன்பங்களுக்கும் தீனி போடும் ஒன்றாகத் தான் இருக்கின்றது. ///

அதுக்காக மட்டுமே படைக்கப்பட்டது சார்!//

இந்தக் கருத்தினை நான் மறுத்துரைக்கின்றேன்.
காரணம் பெண்ணை எம்முடைய ஆண்கள் அணுகின்ற முறையினால் தான் இவ்வாறான பார்வை எம் சமூகத்தில் இன்றும் இருக்கின்றது.


ஆண் பெண்ணைப் பற்றிய தெளிவான புரிதலுடன் கூடிய கல்வி முறையினை எம் நாட்டில் அறிமுகப்படுத்தியிருந்தால் இப்படி ஒரு நிலமை வந்திருக்குமா?

நிரூபன் said...
Best Blogger Tips

@sarujan♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ !

(பாதுகாப்பாகப் பின் தொடர்ந்து பாடிகார்ட் போல.....)அட நான் போனது இப்ப ஊருக்கே தெரிஞ்சு விட்டுது//

ஆமா பாஸ்..
நீங்களும் இப்படிப் போவீங்களா?

K said...
Best Blogger Tips

@நிரூபன்

தம் மனைவியின் அழகிய உடல் வனப்புக்கள் குறைவடைகின்ற சந்தர்ப்பத்தில், மனைவியுடன் வெளியே போகும் போது கூட மாற்றானின் மனைவிகள் மேல் கண் பார்வையினை மேயவிடுகின்றார்கள்". ///

இதில் பெண்கள் மீதே தப்பு இருக்கிறது!//

அவ்...எப்படிச் சொல்லுறீங்க...பெண் வீட்டில் அழகாக இருந்தால் கணவன் ஏன் வெளியே பார்வையினை மேய விடுகிறான் என்று சொல்ல வாறீங்களா?///

யா யா

K said...
Best Blogger Tips

சார், மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் என்று ஒரு இத்துப்போன கெழவி சொல்லியிருக்குதே! தெரியுமா?

இது ஒரு சுத்த முட்டாள் தனம்! ஒவ்வொரு பெண்ணும் நினைத்தால், ஆண்களின் மோகத்தை முப்பது வருஷமாவும், ஆசையை அறுபது வருஷமாவும் மாத்த முடியும்!

அவ்வைக் கெழவியின் கருத்து ஒழிக!

காட்டான் said...
Best Blogger Tips

மாப்பிள நீங்க பின்னூட்டத்தில விளக்கம் கொடுக்குற அளவிக்கு எங்கள குழப்பீட்டிங்க.. ஆக மொத்தத்தில உங்களுக்கு சினேகா வேண்டிக்கிடக்குது...

K said...
Best Blogger Tips

@நிரூபன்

பெண்ணின் உடற் கவர்ச்சி என்பது, ஆண்களின் காம வெறிக்கும், இன்பங்களுக்கும் தீனி போடும் ஒன்றாகத் தான் இருக்கின்றது. ///

அதுக்காக மட்டுமே படைக்கப்பட்டது சார்!//

இந்தக் கருத்தினை நான் மறுத்துரைக்கின்றேன்.
காரணம் பெண்ணை எம்முடைய ஆண்கள் அணுகின்ற முறையினால் தான் இவ்வாறான பார்வை எம் சமூகத்தில் இன்றும் இருக்கின்றது.


ஆண் பெண்ணைப் பற்றிய தெளிவான புரிதலுடன் கூடிய கல்வி முறையினை எம் நாட்டில் அறிமுகப்படுத்தியிருந்தால் இப்படி ஒரு நிலமை வந்திருக்குமா?:////

அப்படி கல்வி முறையால் புரிதல் ஏற்படுத்தி என்னத்தை சாதிக்கிறது சார்?

பாலியல் கல்வியும், உளவியல் ஆலோசனையும் என்ன சொல்லுதுண்ணா, கல்யாணத்துக்கு முன்னாடி உடலுறவு வைக்காதே, அது தப்பு எயிட்ஸ் வரும் , அது வரும் இது வரும் என்று!

இவையெல்லாம் முட்டாள்தனமான போதனைகள் என்று உலகம் எப்போதோ ஒதுக்கிவிட்டது!!

ஆசியாவின் சில பிந்தங்கிய நாடுகளில் மட்டும் இன்னமும் இந்த முட்டாள்தனமான கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது!

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

//சகோதரர்களே,
கவர்ச்சி என்றால் என்ன, அழகு என்றால் என்ன?//

என்னய்யா இவரு, நைட்டு 2 மணிக்கி கிளாஸ் எடுக்கிறாரு..//

சார்...தூக்கம் வருதில்லையே..என்ன பண்ண சார்?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
அழகிய ஆடைகளை அணிகின்ற பெண்ணை விட, தம் உடலை எடுப்பாகக் காட்டுகின்ற பெண்கள் மீது தான் ஆண்களின் பார்வைகள் அதிகமாகப் படுகின்றது. ////

ஆடைகள் யாருக்கு வேணும் சார்?//

கன்ராவி...இப்படியெல்லாம் பதில் சொல்லுறீங்களே..

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

ஒரு வீதியால் சேலையில் போகின்ற பெண்ணை உற்றுப் பார்க்கும் அதிகளவான ஆடவர்களின் கண்கள் சுடிதாரில் போகும் பெண் மீது அதேயளவான கூர்ந்து பார்க்கும் பார்வைகளோடு உற்று நோக்குவதில்லை. ////

சுடிதாரில் போகும் பெண்களைப் பார்த்தால் - திருவிழாவில் கோமளிப் பொம்மைகள் போவது போல இருக்கும் சார்!

சுடிதாரைக் கண்டு பிடிச்சவனைக் கொல்லணும் சார்!//

சுடிதாரைக் கொன்றிட்டு, பெண்களுக்கான உடையாக எதனை நீங்க அறிமுகப்படுத்தப் போறீங்க?

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

அழகு மட்டும் ரசிக்கப்படறதுல ஒரு மரியாதை இருக்கு..கவர்ச்சியா பார்க்கப்படுவதில் என்ன இருக்கு?

அதனால யாரும் கவர்ச்சியா பார்க்குறதை விரும்ப மாட்டாங்க.//

இல்லே பாஸ்,
நீங்க அழகா இருக்கிற நடிகையோட படத்தை விட, கவர்ச்சியா இருக்கிற நடிகையின் படத்திற்குத் தானே அதிக மதிப்புக் கொடுப்பீங்க.

ரோட்டில அரை குறை ஆடையுடன் போகும் பெண்ணிற்கா.
இல்லை குடும்பப்பாங்கான உடையோடு போகும் பெண்ணையா பலர் லுக்கு விடுவாங்க

K said...
Best Blogger Tips

சார், ஒரு ஆண் பருவமடைந்து, அவனது உடலில் விந்தணுக்கள் ஊறத் தொடங்கிய நாள் முதல், அவன் அழகிய பெண்களை ரசிக்கத்தான் செய்வான்ிது இயற்கையானது

14 வயதில் பருவமைடையும் ஒரு ஆணுக்கு, பெண்ணின் கவர்ச்சி உறுப்புக்கள் பற்றிய சிந்தனை வந்துவிடுகிறது! - இதுவும் இயற்கையானது!

ஆனால் அந்த வயதில் , ஒரு பெண்ணின் பாலியல் உறுப்புக்களை கண்களினால் பார்ப்பதற்கோ, தொட்டுப் பார்ப்பதற்கோ வாய்ப்பு வழங்கப்படுவதில்லை!

14 வயதில் ஒரு ஆணின் மனதில் உதிக்கும் பாலியல் ஆசை பொத்தி வைக்கப்பட்டு, பொத்திவைக்கப்பட்டு 17 , 18 வயது வரும் போது காதல் என்ற பேரில் ஒரு பெண்ணோடு நேசம் கொள்ள வைக்கிறது!

அங்கே அடிப்படையில் அவனது காம உணர்வுகளே தூண்டப்படுகின்றன!

அதனை நேரடியாக சொல்ல முடியாது! ஒரு பெண்ணிடம் போய், உன்னைத் தொட்டுப் பார்க்க ஆசையாக இருக்கிறது என்று சொன்னால் உதைதான் கிடைக்கும்!

அதனால்தான் கண்ணே, மானே , தேனே என்று பசப்பு வார்த்தைகளை சொல்லி ஒரு பெண்ணை அனுகுகிறான்!

அப்படி அணுகி, ஒரு பெண்ணைக் காதலிக்கத் தொடங்கியதும் முதலில் கையைத் தொட்டு , பின்னர் முத்தமிட்டு அவனது காம இச்சையினைத் தீர்த்துக் கொள்கிறான்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

இதற்கான காரணம் உடையமைப்பில் பெண்களின் கவர்ச்சி வேறுபட்டுக் கொள்வதால், பெண்கள் ஆண்களின் பார்வையில் கவர்ச்சிப் பொருளாகத் தோன்றுவதாகும்.////

ஒரு ஆணின் பார்வையில், அரு அழகான பெண் கவர்ச்சியாகத் தெரியவில்லை என்றால், அந்த ஆணை உடனடியாக ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போகணும் சார்!//

அவ்...ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போரது ஓக்கே...

அழகான பெண்கள் எல்லோரிடத்திலும் கவர்ச்சி இருக்குமா பாஸ்?

காட்டான் said...
Best Blogger Tips

தமிப் பெண்கள் திருமணத்திற்கு முன்னர் தம் புற அழகில் காட்டும் அக்கறையினைத் திருமணத்திற்குப் பின்னர் காட்டுவதில்லை. ///

இந்த கருத்த நான் கண்டிக்கிறேங்க நம்ம பொண்ணுங்க கல்யாணம் முடிஞ்சோன எல்லாமே முடிஞ்சுதெண்டு நினைக்கிறாங்க.. ஆனா வெள்ளைகாரிங்கள பார்தீங்கன்னா அவங்க உடம்ப ரெம்பதான் கவனிக்கிறாங்க ஏன்னா அவங்க புருசன் இண்டைக்கு இருப்பாங்க நாளைக்கு..?? அப்ப இன்னொண்ட தேட வசதியாய் இருக்கதான்யா அவங்க உடம்ப பாதுகாக்கிறாங்க.. நம்ம பொண்ணுங்களுக்கு இருக்கே ஒரு பழ மொழி கல்லானாலும்ன்னு...

தனிமரம் said...
Best Blogger Tips

சினேகாவையும் அனுஸ்காவையும் ஒப்பிடுவது மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் போடும் முடிச்சு சினேஹா தேவதை என்றாள் அனுஸ்கா ஒரு குயிலி அந்த நடிகையைத் தெரியுமா? அவங்கதான் பூவிலங்கு ஹீரோயினி பிற்காலத்தில் குத்தாட்டம் ஆடியவங்க இப்படி இருக்கும் போது எப்படி பாஸ் கவர்ச்சி என்பது வெறு அழகுதான் அழகுப்பதுமைதான்  விருப்பமானது (இது சத்தியமா நானா ஜோசித்தது சினேஹாமேல் சத்தியம்)

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

பெரும்பான்மையான ஆண்கள் அழகிய பெண்களை விரும்புகின்றார்கள்.
ஆனால் திருமணம் என்ற ஒன்று வருகின்ற போது, கவர்ச்சிப் பெண்கள் மீதான விருப்பத்தைப் பொத்தி வைத்து அடக்க ஒடுக்கமான- குடும்பப் பாங்கான பெண்கள் மீது தம் பார்வையினைச் செலுத்துகிறார்கள். ////

எல்லா ஆம்பளைங்களும் கோழைத்தனமாக முடிவெடுக்கும் இடம் அதுதானே!//

அப்படீன்னா உங்களாலை ஊருக்கே கவர்ச்சி காட்டும் ஒரு பெண் கூட வாழ முடியுமா பாஸ்?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
திருமணத்தின் பின் அடக்க ஒடுக்கமாக தம் மனைவியினை மாற்ற முயற்சிக்கிறார்கள். மனைவிக்குத் தெரியாமல் கவர்ச்சிப் பெண்களைச் சைட் அடித்து ஜொள்ளு வடிக்கிறார்கள்.///

மிகவும் மோசமான முட்டாள்தனம்!//

இது தான் நல்ல செயல் என்று பலர் சொல்லுகிறார்களே பாஸ்...

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

வணக்கம் பாஸ்
விவாதமா ஐயோ ஆளைவிடுங்க சாமி !//

சும்மா அடிச்சாடுங்க பாஸ்.

வாங்க...எங்கே போகிறீங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
இப்போது மேலே தரப்பட்ட கூற்றுக்களின் அடிப்படையில் நான் உங்களிடம் கேட்கும் கேள்வி, ஆண்களின் பார்வையில் பெண்கள் கவர்ச்சிப் பதுமைகளா அல்லது அழகுப் பொம்மைகளா?///

சார், நான் ஒண்ணு சொல்லவா? உலகத்துல, இயற்கை அமைப்புல, ஆணுக்கு தாகம் தீர்க்கப் பெண்ணும், பெண்ணுக்குத் தாகம் தீர்க்க ஆணும் படைக்கப்பட்டிருக்கிறாங்க!

ஆணின் அழகு பெண்ணுக்கு!

பெண்ணின் அழகு ஆணுக்கு!!

இத மறந்துட்டு, சில இனத்தவர்களும், சில மதத்தவர்களும் பண்ணுகிற அநியாயம் இருக்கே!

வேணாம் சார், உலகத்தில் எல்லா மனிதனும் மாறிட்டன் சார்!

மூன்றாம்தர நாடுகளை அதிகம் கொண்ட தெற்காசிய நாடுகள் சில தான், இன்னமும் அடி மட்டத்தில் இருக்கு!

எப்படியும் 2030 ல உலகம் ஒரே மாதிரியாகிடும் சார்!//

பார்ப்போம். எம் தமிழ்ச் சமூகம் எப்போது மாறப் போகின்றது என்று?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

சூப்பர் தலைப்பு சார்! இன்னைக்கு ஒரு வழி பண்ணாமல் போக மாட்டேன்!//

அது தான் தலைப்பிற்கும் விளக்கம் கொடுத்திருக்கிறேனே பாஸ்..
இனி என்ன உங்க வேலை அடித்தாட வேண்டியது தானே.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

தமிப் பெண்கள் திருமணத்திற்கு முன்னர் தம் புற அழகில் காட்டும் அக்கறையினைத் திருமணத்திற்குப் பின்னர் காட்டுவதில்லை. ///

‘ழ்’ எங்கே சார்?//

நம்ம ஊரில தான் சார்.
ஏன் உங்க ஊரிலயும் இப்படித் தானே இருப்பாங்க சார்.///

சார், நான் சொல்ல வந்தது தமிழ் என்பதுக்கு ழ் ஐ விட்டுட்டு தமி என்று எழுதியிருக்கீங்க! அத சொன்னேன்!//

தூக்கக் குழப்பத்தில எழுதிட்டேன் பாஸ்..
இப்பவே மாத்திடுறேன்.
ரொம்ப நன்றிங்க சார்.

Anonymous said...
Best Blogger Tips

////ஆண்களின் பார்வையில் பெண்கள் கவர்ச்சிப் பதுமைகளா இல்லை அழகுப் பொம்மைகளா? /// ஹிஹி ஆமா உங்க பார்வையில எப்பூடி தெரியினம் சார் ))

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
சார், மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் என்று ஒரு இத்துப்போன கெழவி சொல்லியிருக்குதே! தெரியுமா?

இது ஒரு சுத்த முட்டாள் தனம்! ஒவ்வொரு பெண்ணும் நினைத்தால், ஆண்களின் மோகத்தை முப்பது வருஷமாவும், ஆசையை அறுபது வருஷமாவும் மாத்த முடியும்!

அவ்வைக் கெழவியின் கருத்து ஒழிக//

பெண்களிடம் ஆண்களைத் தம் வசப்படுத்தும் விடயங்கள் இருந்தும் திருமணம்- குழந்தைகள் என்று வந்ததும் அவர்கள் தவற விடுவது தான் இத்தகைய மாற்றான் மனைவி மீதான சைட் அடித்தல் செயற்பாடுகளுக்கு காரணம் பாஸ்.

Anonymous said...
Best Blogger Tips

////அவள் முதன் முறை உதிர்த்த புன்னகையினை மனதில் வைத்து மாதக் கணக்கில் அப் பெண்ணினைப் பாதுகாப்பாகப் பின் தொடர்ந்து பாடிகார்ட் போல அழைத்துச் செல்வது முதல், வீட்டு வாசல் வரை கொண்டு வந்து சேர்ப்பதிலும் ஆண்கள் அளப்பரிய சேவை செய்திருக்கிறார்கள்.////ரொம்ப அனுபவம் போல )))

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்

மாப்பிள நீங்க பின்னூட்டத்தில விளக்கம் கொடுக்குற அளவிக்கு எங்கள குழப்பீட்டிங்க.. ஆக மொத்தத்தில உங்களுக்கு சினேகா வேண்டிக்கிடக்குது...//

நான் குழப்பலை பாஸ்,
அழகு கவர்ச்சி ரெண்டுக்கும் வித்தியாசம் புரியாம என்னைத் தான் செங்கோவியும், ஐடியாமணி சாரும் குழப்பிட்டாங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

பெண்ணின் உடற் கவர்ச்சி என்பது, ஆண்களின் காம வெறிக்கும், இன்பங்களுக்கும் தீனி போடும் ஒன்றாகத் தான் இருக்கின்றது. ///

அதுக்காக மட்டுமே படைக்கப்பட்டது சார்!//

இந்தக் கருத்தினை நான் மறுத்துரைக்கின்றேன்.
காரணம் பெண்ணை எம்முடைய ஆண்கள் அணுகின்ற முறையினால் தான் இவ்வாறான பார்வை எம் சமூகத்தில் இன்றும் இருக்கின்றது.


ஆண் பெண்ணைப் பற்றிய தெளிவான புரிதலுடன் கூடிய கல்வி முறையினை எம் நாட்டில் அறிமுகப்படுத்தியிருந்தால் இப்படி ஒரு நிலமை வந்திருக்குமா?:////

அப்படி கல்வி முறையால் புரிதல் ஏற்படுத்தி என்னத்தை சாதிக்கிறது சார்?

பாலியல் கல்வியும், உளவியல் ஆலோசனையும் என்ன சொல்லுதுண்ணா, கல்யாணத்துக்கு முன்னாடி உடலுறவு வைக்காதே, அது தப்பு எயிட்ஸ் வரும் , அது வரும் இது வரும் என்று!

இவையெல்லாம் முட்டாள்தனமான போதனைகள் என்று உலகம் எப்போதோ ஒதுக்கிவிட்டது!!

ஆசியாவின் சில பிந்தங்கிய நாடுகளில் மட்டும் இன்னமும் இந்த முட்டாள்தனமான கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது!//

நான் சொல்லும் பெண்கள் - ஆண்கள் பற்றிய பார்வை வேறு பாஸ்,
அதாவது பெண்ணைக் கவர்ச்சிப் பொருளாகப் பார்ப்பது, ஆண் பெண் இனக் கவர்சி பற்றி ஒரு தெளிவான விளக்கத்தினை எம் தமிழ்ச் சமூகத்திற்கு கல்வி முறை மூலம் அல்லது பெற்றோர்கள் மூலம் போதிக்கலாம் அல்லவா.

Anonymous said...
Best Blogger Tips

///////தம் மனைவியின் அழகிய உடல் வனப்புக்கள் குறைவடைகின்ற சந்தர்ப்பத்தில், மனைவியுடன் வெளியே போகும் போது கூட மாற்றானின் மனைவிகள் மேல் கண் பார்வையினை மேயவிடுகின்றார்கள்"/// நான் நினைக்கிறான் இதை எழுதியவருக்கு கல்யாணம் நடந்து நாலஞ்சு புள்ள குட்டியும் இருக்கும் எண்டு . அது தான் அனுபவாம் கொட்டுது ))

K said...
Best Blogger Tips

எங்கள் காதல் புனிதமானது என்று பிரகடனம் செய்துவிட்டு, காதலித்துக்கொண்டு திரியும் இரண்டு காதல் ஜோடிகளை பிடித்துக்கொண்டு வந்து, ஒரு அறையில் போட்டுப் பூட்டி வைத்துவிட்டு, காலையில் தொறந்து பாருங்கள்!

இரவிரவாக என்ன கம்பராமாயணமா படித்திருப்பார்கள்?

காய்ஞ்ச மாடு கம்புல பாய்ஞ்ச மாதிரி, பாய்ந்திருக்க மாட்டார்கள்?

இது எதனால் வருகிறது? காதல் புனிதமானது, நாம் உடலைப் பார்த்து காதல் கொள்ளவில்லை என்று புலம்புபவர்கள், ஒரு சான்ஸ் கெடைச்சதும் எல்லை மீறுவது எதற்காக?

ஒரு வெள்லைக்காரச் சிறுவனுக்கு அல்லது 16 வயது இளைஞனுக்கு ஒரு பெண்ணின் அத்தனை உறுப்பும் தெரிந்துவிடுகிறது!

அவனைப் பொறுத்தவரை பெண் என்பவள் ஒரு புதிர் அல்ல! அவனுக்கு பெண்ணின் மனது ஆழமும் இல்லை!

நமக்குத்தான் இந்த எல்லாக் கன்றாவியும்!

பெண்ணின் மனது ஆழம் என்று ஒருவர் புலம்புகிறாரா? அவர் பெண்ணின் அந்தரங்க உறுப்புக்களை ஒருபோதும் பார்த்ததில்லை என்று அர்த்தம்!

காதல் வேதனையில் துடிப்பதாக ஒருவர் சொல்லிக்கொண்டு இருக்கிறாரா? அவரை அழைத்துச்சென்று ஒரு விபச்சாரி வீட்டில் 10 நாட்கள் தங்கி நிற்க விடுங்கள்!

11ம் நாள் நல்ல தெளிவுடன் வெளியே வருவான்!

அதன் பிறகு காதல் , கத்தரிக்காய் என்ற வார்த்தையே அவனது வாயில் வராது!

எதையும் அறிவியல் கண் கொண்டு பாருங்க சார்!

Anonymous said...
Best Blogger Tips

////பெரும்பான்மையான ஆண்கள் அழகிய பெண்களை விரும்புகின்றார்கள்.
ஆனால் திருமணம் என்ற ஒன்று வருகின்ற போது, கவர்ச்சிப் பெண்கள் மீதான விருப்பத்தைப் பொத்தி வைத்து /// அதுக்கு தானே வெளிநாட்டு மாப்பிள்ளைகள் உள்நாட்டிலேயே பொண்ணு தேடுறது ))

Anonymous said...
Best Blogger Tips

சண்முகவேல் சாருக்கு வாழ்த்துக்கள்.. சிறந்த பதிவர்

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan
சினேகாவையும் அனுஸ்காவையும் ஒப்பிடுவது மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் போடும் முடிச்சு சினேஹா தேவதை என்றாள் அனுஸ்கா ஒரு குயிலி அந்த நடிகையைத் தெரியுமா? அவங்கதான் பூவிலங்கு ஹீரோயினி பிற்காலத்தில் குத்தாட்டம் ஆடியவங்க இப்படி இருக்கும் போது எப்படி பாஸ் கவர்ச்சி என்பது வெறு அழகுதான் அழகுப்பதுமைதான் விருப்பமானது (இது சத்தியமா நானா ஜோசித்தது சினேஹாமேல் சத்தியம்)//

சகோதரம், நான் சினேகா அனுஸ்கா பற்றிப் பதிவில் ஒப்பிடவில்லை. அழகு- கவர்ச்சி என்பதற்கான வேறுபாட்டினைப் புரிய வைக்கவே பின்னூட்டம் மூலமாகச் சொன்னேன்.
விவாதத்தினை நாங்கள் முதலில் பதிவிலிருந்து ஆரம்பித்து விட்டுப், பின்னர் பின்னூட்டத்தில் காணப்படும் கருத்துக்களில் உள்ள தவறுகளை நோக்குவோமா சகோதரம்?

K said...
Best Blogger Tips

சார், தமிழனுக்கு வாழவே தெரியாது சார்! வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாத ஒரு முட்டாள்தான் தமிழன்!

நான் உங்களிடம் ஒரு சிம்பிள் கேள்வி கேட்கிறேன்!

உடனடியாகப் பதில் சொல்லுங்கள்!

கணவனை இழந்த ஒரு பெண்ணை எதற்காக வாழாவெட்டி என்று சொல்கிறார்கள்?

சீக்கிரம் சொல்லுங்க சார்!

Anonymous said...
Best Blogger Tips

////14 வயதில் ஒரு ஆணின் மனதில் உதிக்கும் பாலியல் ஆசை பொத்தி வைக்கப்பட்டு, பொத்திவைக்கப்பட்டு 17 , 18 வயது வரும் போது காதல் என்ற பேரில் ஒரு பெண்ணோடு நேசம் கொள்ள வைக்கிறது!

அங்கே அடிப்படையில் அவனது காம உணர்வுகளே தூண்டப்படுகின்றன!

அதனை நேரடியாக சொல்ல முடியாது! ஒரு பெண்ணிடம் போய், உன்னைத் தொட்டுப் பார்க்க ஆசையாக இருக்கிறது என்று சொன்னால் உதைதான் கிடைக்கும்!
//// ஐடியா மணி சார் இது ஆண்களுக்கு மட்டும் தான் எண்டு இல்லை ...

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

சார், ஒரு ஆண் பருவமடைந்து, அவனது உடலில் விந்தணுக்கள் ஊறத் தொடங்கிய நாள் முதல், அவன் அழகிய பெண்களை ரசிக்கத்தான் செய்வான்ிது இயற்கையானது

14 வயதில் பருவமைடையும் ஒரு ஆணுக்கு, பெண்ணின் கவர்ச்சி உறுப்புக்கள் பற்றிய சிந்தனை வந்துவிடுகிறது! - இதுவும் இயற்கையானது!

ஆனால் அந்த வயதில் , ஒரு பெண்ணின் பாலியல் உறுப்புக்களை கண்களினால் பார்ப்பதற்கோ, தொட்டுப் பார்ப்பதற்கோ வாய்ப்பு வழங்கப்படுவதில்லை!

14 வயதில் ஒரு ஆணின் மனதில் உதிக்கும் பாலியல் ஆசை பொத்தி வைக்கப்பட்டு, பொத்திவைக்கப்பட்டு 17 , 18 வயது வரும் போது காதல் என்ற பேரில் ஒரு பெண்ணோடு நேசம் கொள்ள வைக்கிறது!

அங்கே அடிப்படையில் அவனது காம உணர்வுகளே தூண்டப்படுகின்றன!

அதனை நேரடியாக சொல்ல முடியாது! ஒரு பெண்ணிடம் போய், உன்னைத் தொட்டுப் பார்க்க ஆசையாக இருக்கிறது என்று சொன்னால் உதைதான் கிடைக்கும்!

அதனால்தான் கண்ணே, மானே , தேனே என்று பசப்பு வார்த்தைகளை சொல்லி ஒரு பெண்ணை அனுகுகிறான்!

அப்படி அணுகி, ஒரு பெண்ணைக் காதலிக்கத் தொடங்கியதும் முதலில் கையைத் தொட்டு , பின்னர் முத்தமிட்டு அவனது காம இச்சையினைத் தீர்த்துக் கொள்கிறான்!//

அவ்...இவ்வளவு தெளிவாக எம் சமூகத்தின் உணர்வுகளைச் சொல்லியிருக்கிறீங்களே...

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்
தமிப் பெண்கள் திருமணத்திற்கு முன்னர் தம் புற அழகில் காட்டும் அக்கறையினைத் திருமணத்திற்குப் பின்னர் காட்டுவதில்லை. ///

இந்த கருத்த நான் கண்டிக்கிறேங்க நம்ம பொண்ணுங்க கல்யாணம் முடிஞ்சோன எல்லாமே முடிஞ்சுதெண்டு நினைக்கிறாங்க.. ஆனா வெள்ளைகாரிங்கள பார்தீங்கன்னா அவங்க உடம்ப ரெம்பதான் கவனிக்கிறாங்க ஏன்னா அவங்க புருசன் இண்டைக்கு இருப்பாங்க நாளைக்கு..?? அப்ப இன்னொண்ட தேட வசதியாய் இருக்கதான்யா அவங்க உடம்ப பாதுகாக்கிறாங்க.. நம்ம பொண்ணுங்களுக்கு இருக்கே ஒரு பழ மொழி கல்லானாலும்ன்னு..//

ஏனுங்க காட்டான் அண்ணாச்சி,
நான் சொன்னதில ஏதும் தவறு இருக்கா?
தமிழ் பெண்கள் திருமணத்தின் பின்னர் தம் உடல் அழகில் கவனம் செலுத்துவதில்லை என்பது சரி தானே..
என்ன தான் வெள்ளைக்காரிங்க கணவனை விட்டுப் பிரிந்தாலும், எம் தமிழ்ப் பெண்கள் வாழும் காலம் வரைக்கும் கணவனின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கும் நோக்கில் அழகில் கவனம் செலுத்தலால் அல்லவா?

Anonymous said...
Best Blogger Tips

///எப்படியும் 2030 ல உலகம் ஒரே மாதிரியாகிடும் சார்!/// மணி இரண்டாயிரத்து பன்னிரண்டில ஒலகம் அழிஞ்சிடுமாம்)))

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

////ஆண்களின் பார்வையில் பெண்கள் கவர்ச்சிப் பதுமைகளா இல்லை அழகுப் பொம்மைகளா? /// ஹிஹி ஆமா உங்க பார்வையில எப்பூடி தெரியினம் சார் ))//

அதை இப்ப எப்பூடி சார் சொல்ல முடியும்?
கொஞ்ச நேரம், வெயிட் பண்ணுங்க சார்.

K said...
Best Blogger Tips

@கந்தசாமி.

அதனை நேரடியாக சொல்ல முடியாது! ஒரு பெண்ணிடம் போய், உன்னைத் தொட்டுப் பார்க்க ஆசையாக இருக்கிறது என்று சொன்னால் உதைதான் கிடைக்கும்!
//// ஐடியா மணி சார் இது ஆண்களுக்கு மட்டும் தான் எண்டு இல்லை ...:///

ஆமா சார், இது அப்படியே 100 வீதம் பெண்களுக்கும் பொருந்தும்!

Anonymous said...
Best Blogger Tips

ஐடியாமணி பின்னுறார் ..நான் நாளைக்கு வந்து கமெண்டுகளை வாசிக்கிறன் ..கண்ணை கட்டுது )

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

////அவள் முதன் முறை உதிர்த்த புன்னகையினை மனதில் வைத்து மாதக் கணக்கில் அப் பெண்ணினைப் பாதுகாப்பாகப் பின் தொடர்ந்து பாடிகார்ட் போல அழைத்துச் செல்வது முதல், வீட்டு வாசல் வரை கொண்டு வந்து சேர்ப்பதிலும் ஆண்கள் அளப்பரிய சேவை செய்திருக்கிறார்கள்.////ரொம்ப அனுபவம் போல )))//

இல்ல சார், லைட்டா அனுபவம் சார்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

///////தம் மனைவியின் அழகிய உடல் வனப்புக்கள் குறைவடைகின்ற சந்தர்ப்பத்தில், மனைவியுடன் வெளியே போகும் போது கூட மாற்றானின் மனைவிகள் மேல் கண் பார்வையினை மேயவிடுகின்றார்கள்"/// நான் நினைக்கிறான் இதை எழுதியவருக்கு கல்யாணம் நடந்து நாலஞ்சு புள்ள குட்டியும் இருக்கும் எண்டு . அது தான் அனுபவாம் கொட்டுது ))//

நானே பொண்ணு கிடைக்காம கலியாணம் கட்டாமல் இருக்கேன் பாஸ்.
நீங்க வேற..

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

சண்முகவேல் சாருக்கு வாழ்த்துக்கள்.. சிறந்த பதிவர்//
உங்கள் வாழ்த்துக்கள் நிச்சயம் அவரைப் போய்ச் சேரும் பாஸ்.

K said...
Best Blogger Tips

@கந்தசாமி.

///எப்படியும் 2030 ல உலகம் ஒரே மாதிரியாகிடும் சார்!/// மணி இரண்டாயிரத்து பன்னிரண்டில ஒலகம் அழிஞ்சிடுமாம்)))///

சார், நீங்க காமெடிக்காக சொல்றீங்கன்னு நெனைக்கிறேன்! - 2016 ம் ஆண்டு ஜனவரி மாசம் ஐரோப்பிவிலேயே உயரமான கட்டடம், ஃபிரான்சில் திரந்து வைக்கப்பட இருக்குதாம்! அதுக்கான கட்டுமான வேலைகள் நடந்துக்கிட்டு இருக்காம்! நேத்தைய த ஹிண்டு வில் படிச்சேன்!

என்ன நம்பிக்கையில் கட்டுறாங்க?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

சார், தமிழனுக்கு வாழவே தெரியாது சார்! வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாத ஒரு முட்டாள்தான் தமிழன்!

நான் உங்களிடம் ஒரு சிம்பிள் கேள்வி கேட்கிறேன்!

உடனடியாகப் பதில் சொல்லுங்கள்!

கணவனை இழந்த ஒரு பெண்ணை எதற்காக வாழாவெட்டி என்று சொல்கிறார்கள்?

சீக்கிரம் சொல்லுங்க சார்!//

பாஸ், திருமணம் முடித்துக் கணவனோடு ஏனைய பெண்கள் வெளி உலகின் பார்வைக்கு சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்க, கணவனை இழந்த பெண், வாழ்க்கையினைத் தொலைத்து விட்டாள் என எமது சமூகம் வரைவிலக்கனம் கொடுத்து, வாழாவெட்டி என்று சொல்லுவதால் தான் கணவனை இழந்த பெண்ணை வாழாவெட்டி என்று ஒரு வரையறைக்குள் வைத்து மகிழ்கிறது எம் சமூகம் பாஸ்.
ஆனால் இது தவறு.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

எதையும் அறிவியல் கண் கொண்டு பாருங்க சார்!//

இது யாருக்கு பாஸ்?

K said...
Best Blogger Tips

சார், தமிழன் உருப்படணும்னா மொதல்ல சமூகத்துக்குப் பயந்து வாழுறத நிறுத்தணும்! ஒவ்வொரு மனிதனும் தனியாள் அப்டீங்கற எண்ணம் வரணும்! இந்தக் கருத்த நாங்க ஒரு 10 பதிவுகள் போட்டு விவாதிக்கணும் சார்!\

அதிருக்க, ஒருத்தன் கல்யாணம் கட்டி எத்தனை நாளைக்கு மனைவியோட சந்தோசமா இருக்கான்?

எண்ணிப் பத்தே மாசத்தில் ஒரு குழந்தையைப் பெத்துவிட்டு, இனி என் வாழ்க்கை என் குழந்தைக்காகவே என்று சொல்கிறார்! அத்தோடு முடிஞ்சு போச்சு அவனோட வாழ்க்கை!!

ஏன் சார், கல்யாணமாகி ஒரு அஞ்சு வருஷத்துக்கு குழந்தையே பெறாமல், கணவனும் மனைவியும் நல்லா ஊர் உலகமெல்லாம் சுத்தி, ஒரு ஆறாயிரம் தடவைகள் உடலுறவு கொண்டுவிட்டு, பின்னர் ஒரு குழந்தையைப் பெறலாமே!

ஆனால் தமிழர்கள் அப்படிச் செய்வதில்லை! காரணம் குழந்தை பெறாவிட்டால், மனைவியை மலடி என்று சமூகம் திட்டு்ம் - முதலில் அந்த சமூகத்தின் மீது பொஸ்பரஸ் குண்டு போட்டு சாவடிக்கணும்!

ஒருத்தன் புள்ள பெத்தா என்ன? பெறாட்டி என்ன?

இப்படி புள்ளையப் பெத்து, அந்தப் பெண் தாயான பின்னாடி, அந்தப் பெண் குண்டாகி, அழகு குறைஞ்சு , கவர்ச்சியே இல்லாமல் போய்விடுகிறாள்!

அதன் பின்னர் ஆண் , வேறு பெண்கள் பக்கம் போகிறான்!

ஏனென்றால், அந்த ஆணோ பெண்ணோ ஆசைதீர உடலுறவு கொண்டிருக்கவே மாட்டார்கள்!

அப்புறம் எங்க ஆசை தீருறது?

ஒரு வெள்ளைக்காரி 60 வயசிலும், 18 வயதுப் பெண்ணைப் போல அவ்வளவு இளமையாக இருக்கிறாள்!

ஆனால், எமது பெண்களுக்கோ உடலை சிக்கென்று, வாளிப்பாக, கவர்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்றே தோன்றுவதில்லை!

K said...
Best Blogger Tips

எமது பெண்களுக்கு உடல் முழுக்க நகை போட்டுக்கொண்டு திரிவதுதான் ரொம்ப பிடிக்கும் போல, நான் பல பெண்களைப் பார்த்திருக்கிறேன்! கழுத்து, கை கால் எங்கும் நகைகளை அடுக்கிக்கொண்டு, உடலைப் பற்றிக் கவலைப்படாமல் பூதம் நடந்து வருவதைப் போல வருவார்கள்!

இப்படியான பெண்களைக் கண்டால் எனக்கு பிடிப்பதே இல்லை!

அதே வேளை கழுத்தில் ஒரு சிறிய செயினை மட்டும் போட்டுக்கொண்டு, மெல்லிய இடையோடும், அழகிய உடல் வாழிப்போடும் வரும் பெண்களை அவ்வளவு பிடிக்கும்!

எமது பெண்கள் முதலில் மாற வேண்டும்!!

சில பெண்கள் ஃபேசியல் செய்து முகத்தை மட்டும், அழகாக மினுக்கிக்கொண்டு திரிவார்கள்! - இவர்கள் சுத்த வேஸ்டு! பெண்களின் அழகோ கவர்ச்சியோ முகத்தில் இல்லை!

காதல் பிறப்பது கழுத்துக்கு கீழே!

இதனை எல்லா ஆண்களும், பெண்களும் புரிந்து கொள்ளவேண்டும்!

K said...
Best Blogger Tips

திருமணமான பெண்கள், அல்லது குழந்தை பெற்ற பெண்கள், நகை வாங்கி கொடு என்று கணவனை நச்சரித்து, டாச்சர் பண்ணுவதை விடுத்து, உடற்பயிற்சி கருவிகள் வாங்கிக்கொடு என்று கணவனை நச்சரித்து, அவற்றை வாங்கி உடற்பயிற்சி செய்யணும் சார்!

தினமும் உடற்பயிற்சி செய்து, தனது உடலை கவர்ச்சியாகவும், வாளிப்பாகவும் வைத்திருந்தால், கணவனை மயக்கக்கூடிய காதல் பேச்சையும், நளின பார்வையையும் ஒவ்வொரு பெண்ணும் கற்றுக் கொண்டால் ஆம்பளை ஒருபோதுமே வேறு பெண்ணை நாடமாட்டான்!

ஆனால், எமது பெண்கள் அப்படி செய்வதில்லை! பெண்கள் அப்படி இருக்க வேண்டும் என்று ஆண்கள் ஊக்கப்படுத்துவதும் இல்லை!

வெளிநாடுகளில் வாழும் பல தமிழ் பெண்கள் உப்பிப் பெருத்து, 152 மில்லி மீட்டர் ஆட்டிலறி போல இருக்கிறார்கள்!

வெள்ளைக் காரிகளைப் போல வீதியில் ஓடுவதில்லையா? அற்லீஸ்ட் பார்க்குகளிலாவது ஓடுவதில்லையா? என்று கேட்டால், இல்லையாம் வெட்கமாம் என்கிறார்கள்!

என்றைக்கு தமிழ் பெண்கள் தமது வெட்கத்தை விட்டுத் தொலைக்கிறார்களோ அன்றைக்குத்தான் உருப்படுவார்கள்!

மேலும் பெண்களின் இலக்கணமாக அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்று சொல்லி வைத்த தேசத்துரோகிகளை மின்கம்பத்தில் கட்டி வைத்து சுட வேண்டும்!

K said...
Best Blogger Tips

நிரூபன் சார், நமது ஆண்களில் நடுத்தர வயது ஆண்களை நம்பி ஒரு பொண்ணை அனுப்பக்கூடாது என்று சொல்வார்கள்!

காரணம் அந்த ஆணால், அந்தப் பெண்ணுக்கு ஆபத்து வந்துவிடும் என்பதால்!

இதுவே ஒரு வெள்ளைக்கார ஆம்பளையோடு நம்பி அனுப்பலாம், சார், இவ என் பொண்ணு, காலேஜுக்குப் போறா! பத்திரமா கொண்டு போய் இறக்கிவிடுங்க சார்’ என்று சொல்லி அனுப்பினால், அவன் பத்திரமாகவே கொண்டுபோய் உரிய இடத்தில் சேர்ப்பான்!

காரணம் அவனுக்கு அந்தப் பெண்ணை அனுபவிக்கவேண்டும் என்று தோன்றுவதில்லை!ஏன் தெரியுமா? அவன் அப்போதுதான், சற்று முன்னர் யாரோ ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டுவிட்டு வந்திருப்பான்!!

ஆனால் நம்மவர்களை நம்பி அனுப்ப முடியாது? ஏன் தெரியுமா அவர்கள் பல நாட்களாக எந்தப் பெண்ணையும் தொடாமல் காய்ந்து போய்க் கிடப்பார்கள்!

அதனால் தன்னை நம்பி அனுப்பப்பட்ட ஒரு பெண்ணையே கெடுக்கும் அளவிற்குப் போய் விடுகிறான்!

இதெல்லாம் உண்மையா? பொய்யா?

இப்படியான கேவலமான கலாச்சாரம் எமக்குத் தேவையா?

K said...
Best Blogger Tips

எல்லாப் பெண்களுக்கும் ஒரு ரகசியம் சொல்கிறேன் கேளுங்கள்!

ஒரு ஆண் உங்கள் பின்னாலே வந்து ‘ தோ பாரு சாந்தி, நான் உன்னையத்தான் நேசிக்கிறேன்! நீயில்லாமல் என்னால வாழவே முடியாது ‘ என்று சொல்கிறான் என்று வைத்துக் கொள்வோம்!

இந்த இடத்தில்தான் எமது முட்டாள் பெண்கள் என்ன செய்கிறார்கள் என்றால், மைனரின் வார்த்தைகளை நம்பித் தொலைக்கிறார்கள்!

மாறாக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால், ‘ என்னது என்னைய லவ் பண்றீங்களா? ‘ ஓகே! உங்ககிட்ட ஒரு கேள்வி, நீங்க இதுவரைக்கும் யார்கூடயாவது செக்ஸ் வைச்சிருந்த அனுபவம் இருக்கா? ‘ என்று கேட்டுப் பாருங்கள்!

பெண்கள் இப்படிக் கேட்டால், ஆண்கள் மிரண்டு , விழி பிதுங்கி, என்னது இப்படிக் கேக்குறாளே என்று சிலர் அலறியடித்துக்கொண்டு ஓடிவிடுவார்கள்!

தைரியம் உள்ல சிலர் ‘ இல்லீங்க, நான் இதுவரைக்கும் யாரையும் தொட்டதில்ல ‘ என்று நெளிந்துகொண்டே சொல்வார்கள்!

இப்போது பெண் என்ன சொல்லணும் தெரியுமா?

‘ சரி, மொதல்ல போயி ஒரு ப்ரஸ்டிடியூட்ட பார்த்து அவகூட 15 வாட்டி செக்ஸ் வச்சுட்டு வாங்க! அப்புறம் என்னையப் பிடிச்சிருந்தா லவ் பண்ணுங்க’ என்று சொல்லிப் பாருங்கள்!!

உங்களின் இந்த அதிர்ச்சியான பதிலினால், ஆண் 3 நாளைக்குப் பேய் பிடித்தவன் போல திரிவான்! - இத சமன்பாடு அப்படியே பெண்களுக்கும் பொருந்தும்!

ஒரு பெண்ணைத் தொட்டுப் பார்க்கவோ, உடலுறவு கொள்ளவோ எமது சமூகத்தில், ஆண்களுக்கு அனுமதி இல்லாததால் தான், சமூகத்தில் கற்பழிப்புக்களும், அங்க சேட்டைகளும் நடக்கின்றன!

பல நாள் காய்ஞ்சு கிடந்தவர்கள்தான் - சிறுமிகளைக்கூட விட்டு வைப்பதில்லை!

- மேற்கு நாடுகளில், ஒரு பெண்ணை அடைவது வெகு சுலபம்! தோ பார், எங்கூட வர்ரியா? என்று ஒரு வரியில் கேட்டாலே போதும்

அவள் ஒன்று எஸ் சொல்லுவாள்! அல்லது நோ சொல்லுவாள்! அவ்வளவுதான்!

ஒரு பெண் நோ சொல்லிவிட்டால், அப்புறம் அந்த இடத்தைவிட்டு நீங்கள் காலி செய்துவிட வேண்டும்!

அடுத்த பெண்ணை தேடி போக வேண்டியதுதான்!

மாறாக, ‘ இல்லைங்க, உங்களப் பார்த்த நாள் தொடக்கம் என் மனசு எங்கிட்டேயே இல்லைங்க’ என்று டயலாக் வுட்டீங்க, அவ்வளவுதான், அடுத்த நிமிஷம் போலிஷ் வந்து நிக்கும்!

ஆனா, எமது சமூகத்தில அப்படியில்லை! ஒரு பெண் மாட்டேன் என்று மறுத்துவிட்டாலும், அவள் பின்னால் தொடர்ந்து சென்று, டயலாக் பேசி, வழிந்து, ஏச்சு வாங்கி, மான்ம்கெட்டு எமது ஆண்கள் படும்பாடு சொல்லி மாளாது!!

எல்லாத்துக்கும் காரணம் நான் சொன்ன அந்த காய்ஞ்சு கெடக்கும் மேட்டர்தான்!

K said...
Best Blogger Tips

நிரூபன் சார், உங்களுக்குத் தெரிந்த ஒரு 60 வயதுப் பெரியவரிடம் மனம் விட்டுப் பேசிப்பாருங்கள்!

அதனை ஒரு உரையாடல் வடிவில் கீழே போடுகிறேன்!

நிரூபன் - வணக்கம் ஐயா! உங்களுக்கு இப்போது 60 வயசு! கடைசியா எப்போது உடலுறவு கொண்டீர்கள்?

பெரியவர் - என்னோட 45 ஆவது வயசுல, கடைசியா என் பொண்டாட்டியோட போனேன்! அதுக்குப் பிறகு போகவே இல்லை!

நிரூபன் - ஐயா அப்படியானால் கடந்த 15 வருஷமா நீங்க எதுவுமே பண்ணலியா?

பெரியவர் - இல்லை தம்பி! என் பொண்டாட்டிக்கும் வயசாகிடிச்சு! புள்ளைங்களும் பெரியவங்க ஆகிட்டாங்க! இந்த நேரத்துல நான், இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருந்தா, அது நல்லா இருக்குமா?

நிரூபன் - ஐயா இந்த 15 வருஷங்களில நீங்க ஐயாயிரத்தி அறு நூறு தடவைகள், உடலுறவு கொண்டிருக்க முடியுமே! அதுல ஒரு தடவைகூட நீங்க, செய்யாயதது உங்களுக்கு வருத்தமா இல்லையா?

இப்படிக் கேட்டதும் அந்தப் பெரியவருக்கு கண்கள் முட்டி கண்ணீரே வந்துவிடும்,

சிலர் தங்களை மறைக்க கோபமாகப் பேசுவதும் உண்டு!

ஆனால் அடி மனசில், அவர்களுக்கு அந்த ஏக்கம் இருக்கவே செய்யும்!

இதுதான் சார் தமிழனின் வாழ்க்கை!

ஏக்கங்களுடனும், ஏமாற்றங்களுடனும், கவலைகளுடனும் வாழ்ந்து தொலைப்பதால்தான் தமிழன் 65 வயதிலேயே போய்ச் சேர்ந்துவிடுகிறான்!

வெள்ளைக்காரனோ 98 வயதிலும் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நடக்கிறான்!!

இதெல்லாத்தையும் சொன்னால் - ஐயோ தமிழ் கலாச்சாரம் என்னாவது? அதைக் கட்டிக்காக்க முடியலியே/

என்று ஒப்பாரி வைக்கிறார்கள்!

ஓவ்வொரு தமிழனும், தமிழச்சியும் தனது வாழ்நாளில் பத்தாயிரம் தடவைகள் உடலுறவு கொள்ள அனுமதிக்கப்படாவிட்டால், அவர்கள் செத்த பிறகு, ஆத்மா சாந்தியடையாமல், அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருக்கும்!

ஹி ஹி ஹி ஹி !!!!

K said...
Best Blogger Tips

@நிரூபன்


எதையும் அறிவியல் கண் கொண்டு பாருங்க சார்!//

இது யாருக்கு பாஸ்?::///

பொதுவா சொன்னேன் சார்!

ஆகுலன் said...
Best Blogger Tips

நான் இந்த வாதத்துக்கு வரேல்ல........

Senthilmani Thuvarakan said...
Best Blogger Tips

வணக்கம்,, என்னைப் பொறுத்த வரையில் இரண்டுமே என்று தான் கூறுவேன் குறிப்பாக சாரி கட்டி வரும் நம்மட தமிழ் பொண்ணுகள
பார்த்தா ஒரு கிக்கு வரும் அது வேற எந்த நாட்டு பிகருகள பார்த்தாலும் வராது

K.s.s.Rajh said...
Best Blogger Tips

எங்கள் நாடுகளில் சேலைகளில் பெண் வந்தால் அவள் அழகாக இருப்பாள், குடும்ப லட்சணமாக இருப்பாள் என்று //கூறுவோர் யார் என்று பார்த்தால் அவர்கள் நிச்சயமாக ஆண்களாகத் தான் இருப்பார்கள். எப்படிப்பட்ட ஆண்களாக இருப்பார்கள். பெண்ணின் புற அழகினைச் சேலையினூடாக ரசிக்கும் மனங் கொண்டவர்களாக இருப்பார்கள். "சேலையினை அடிக்கடி இடுப்பில் செருகும் போது மேற்சட்டையூடே தெரியும் பிரா கட்டிங்கை ரசிக்கும் ஆண்களாகத் தான் அந்த மன நிலை கொண்டவர்கள் இருப்பார்கள்". //

கரக்டா சொன்னீங்க தலீவா.........

K.s.s.Rajh said...
Best Blogger Tips

//உலகில் தன்னுடைய புற அழகிற்காக அதிகளவான நேரங்களைச் செலவிடுகின்ற பெருமை பெண்களுக்கே உண்டு. //

இறைவன் படைப்பில் உயிர் இனங்களில் பொதுவாகப்பாருங்கள்.பெண் மயிலைவிட ஆண் மயில்தான் இயற்கையில் அழகு,அதேபோல்,ஆண் சிங்கம்.சேவல்,இப்படி நிறைய உயிரினங்களில் பெண் உயிரினத்தைவிட ஆண் உயிர் இனங்கள் இயற்கையில் அழகு.
சோ ஆண்கள் நாமெல்லாம் இயற்கையில் அழகு கம்பீரம் பாஸ் நமக்கு புற அழகில் கவனம் செலுத்த அதிக நேரம் செலவிட தேவை இல்லை.ஹி.ஹி.ஹி.ஹி(இது சும்மா தமாசுக்கு.....உண்மையில் நம்ம பசங்களைவிட பொண்ணுங்க அழகுப்பா/அப்பாட தப்பிச்சாச்சு)

K.s.s.Rajh said...
Best Blogger Tips

//எங்கள் நாடுகளில் சேலைகளில் பெண் வந்தால் அவள் அழகாக இருப்பாள், குடும்ப லட்சணமாக இருப்பாள் என்று கூறுவோர் யார் என்று பார்த்தால் அவர்கள் நிச்சயமாக ஆண்களாகத் தான் இருப்பார்கள். எப்படிப்பட்ட ஆண்களாக இருப்பார்கள். பெண்ணின் புற அழகினைச் சேலையினூடாக ரசிக்கும் மனங் கொண்டவர்களாக இருப்பார்கள்//

””முட்டி தெரிய சேல நீ தூக்கி கட்டுறவேள கண்ணுமுழிச்சு காத்துருப்பேன் கைத்து கட்டில் மேல””

உங்க பாட்டுதான் பாஸ்(அதாவது நீங்க ஒரு பதிவில் யூஸ் பன்னின பாட்டு என்று சொல்லவந்தேன்)மேலே உள்ள வரிகளுக்கு சிட்டிவேசன் சோங்.

Unknown said...
Best Blogger Tips

மாப்ள என்னை பொறுத்தவரை அழகை ரசிப்பது தவறு அல்ல(!)...அதே நேரத்தில அதை தனதாக்கிக்க எடுக்கும் முயற்சிகள் தவறு....சைட் அடி கொண்டாடு..ஹிஹி!

shanmugavel said...
Best Blogger Tips

அறிமுகத்திற்கு நன்றி நிரூபன்

shanmugavel said...
Best Blogger Tips

மிகவும் விவாதத்திற்கான விஷயமாக இருக்கிறதே! பிறகு வருகிறேன்

மகேந்திரன் said...
Best Blogger Tips

சகோ இப்போது ஒட்டு மட்டும்
பிறகு வந்து கருத்திடுகிறேன்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
Best Blogger Tips

ம் ...

சசிகுமார் said...
Best Blogger Tips

@நிரூபன்

நல்ல ஆராய்ச்சி மச்சி நடதுய்யா

rajamelaiyur said...
Best Blogger Tips

//
ஆண்களின் பார்வையில் பெண்கள் கவர்ச்சிப் பதுமைகளா அல்லது அழகுப் பொம்மைகளா?
//
அது அவர்கள் மனதை பொறுத்து மாறும் ?

rajamelaiyur said...
Best Blogger Tips

நல்ல ஆராய்ச்சி

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

தலைப்பே விவாதப் பொருளாக உள்ளதே?

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

பெண்கள் எப்போதும் அழகு தான்.... அதை மேக்கப் மூலம் இன்னும் அழகாக காட்டுகிறார்கள்.

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

ஆண்களும் அழகான பெண்களைத் தான் விரும்பறோம்...

Prabu Krishna said...
Best Blogger Tips

அவ்வவ் விவாதமே முடிஞ்சுடுச்சு போல....

எனக்கு மன அழகுதான் முக்கியம் பாஸ்

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

நிரூபன்.. எனக்கு ஒரு டவுட், இந்த மாதிரி வெரைட்டியா எழுத ஏதாவது பி ஹெச் டி படிச்சீங்களா? நிஜமா டவுட்டு

பிரணவன் said...
Best Blogger Tips

தன்னை அழகாக காட்டிக்கொள்வாதும் கவர்ச்சியாய் காட்டிக்கொள்வதும் பெண்களின் கையில் தான் உள்ளது. . .கவர்ச்சியாய் வரும் பெண்களை ஆண்கள் எல்லை மீறி பார்க்கின்றார்கள். அழகு பெண்களை ரசிக்கின்றார்கள் அவ்வளவுதான். . .

Anonymous said...
Best Blogger Tips

////ஒரு பெண்ணைத் தொட்டுப் பார்க்கவோ, உடலுறவு கொள்ளவோ எமது சமூகத்தில், ஆண்களுக்கு அனுமதி இல்லாததால் தான், சமூகத்தில் கற்பழிப்புக்களும், அங்க சேட்டைகளும் நடக்கின்றன/// அப்ப ஏரியாவுக்கு ஒரு ரெட்லைட் வைத்திடலாம் என்கிறீங்களா மணி சார்? உங்க ஏனைய காமன்டுகளோடு ஒத்துபோகிறேன்.. ஆனால் இதை பார்க்கும் போது மனுசனுக்கும் விலங்குகளுக்கும் வித்தியாசம் இல்லாத போல எல்லாத்தையும் அவுட்டுவிடவேனும் எண்டு சொல்லுறது போலவல்லோ இருக்கு..

வாழ்க்கையில் ஒரு பகுதி செக்ஸ், ஆனா வாழ்க்கையே/ மனுஷன் பிறந்ததே செக்ஸ்சுக்காக எண்டு சொல்லுறது போல இருக்கு உங்க இந்த வரிகள்....உணர்வுகளை தேவையான பொழுதுகளில் கட்டுப்படுத்திகொளுவதற்க்கு தான் விலங்குகளை விட கூட ஒரு அறிவு மனுஷனுக்கு இருக்கு..!

shanmugavel said...
Best Blogger Tips

சில ஆண்களுக்கு பெண்கள் தாயாய் தெரிவதும் உண்டு.இப்போதைக்கு ஆண்கள் பலருக்கும் அழகும்,கவர்ச்சியுமே முக்கியமாகத்தெரிகிறது.நல்ல ஆன்மாக்கள் புறக்கணிக்கப்படுவதும் உண்டு.

கூடல் பாலா said...
Best Blogger Tips

ரொம்பவே ஆராய்ச்சி பண்றீங்க !

shanmugavel said...
Best Blogger Tips

அழகுக்கும்,கவர்ச்சிக்கும் நிரூபனின் விளக்கம் சரியானது.

கூடல் பாலா said...
Best Blogger Tips

என்ன இது ...ஒரு மைல் நீளத்துக்கு நீண்டுட்டு போகுது !

shanmugavel said...
Best Blogger Tips

@நிரூபன்

கும்பிடுவது நமது பண்பாடுதானே!அதிலும் மணி நிறைய படித்தவர்.பட்டங்கள் பெற்றவர்.ஏற்றுக்கொள்ளுங்கள்.

shanmugavel said...
Best Blogger Tips

@கந்தசாமி. said...
சண்முகவேல் சாருக்கு வாழ்த்துக்கள்.. சிறந்த பதிவர்

தங்கள் தொடர் ஆதரவிற்கும்,அன்புக்கும் நன்றி

shanmugavel said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
சார், தமிழனுக்கு வாழவே தெரியாது சார்! வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாத ஒரு முட்டாள்தான் தமிழன்!

நான் உங்களிடம் ஒரு சிம்பிள் கேள்வி கேட்கிறேன்!

உடனடியாகப் பதில் சொல்லுங்கள்!

கணவனை இழந்த ஒரு பெண்ணை எதற்காக வாழாவெட்டி என்று சொல்கிறார்கள்?

சீக்கிரம் சொல்லுங்க சார்!


கணவனை இழந்த பெண்ணை வாழாவெட்டி என்று சொல்வதுண்டா?கணவனை விட்டு பிரிந்தவர்களைத்தானே சொல்வார்கள்?

Anonymous said...
Best Blogger Tips

//விக்கியுலகம் said...
மாப்ள என்னை பொறுத்தவரை அழகை ரசிப்பது தவறு அல்ல(!)...அதே நேரத்தில அதை தனதாக்கிக்க எடுக்கும் முயற்சிகள் தவறு....சைட் அடி கொண்டாடு..ஹிஹி!//

ஆனாலும் உங்களுக்கு ரவுசு ஜாஸ்தி மாம்சு.

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

அழகை ரசிக்கலாம் தப்பில்லை, அனுபவிக்க நினைக்கக் கூடாது...

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

சண்முகவேல் அய்யாவின் அறிமுகத்துக்கு நன்றி..

Yoga.s.FR said...
Best Blogger Tips

பொல்லுப் புடிக்கிற வயதில இதுக்கு கருத்துச் சொல்லுறார் எண்டு காட்டான் என்ரை இந்தக் கருத்தைப் பாத்திட்டுச் சொல்லப் போறார்!உண்மையச் சொல்லுறதெண்டால்,நிரூபனோட எழுத்தில இருக்கிற உண்மை சிலருக்கு கசக்கும்!அழகுக்கும்,கவர்ச்சிக்கும் தொடர்பு இருக்கிறதே தவிர இரண்டும் ஒன்றல்ல!அழகிருக்கும் இடத்தில் கவர்ச்சி இருக்காது.கவர்ச்சி இருக்கும் இடத்தில் அழகு இருக்காது!இரண்டும் சேரப் பெற்ற பெண்கள் பாக்கியசாலிகள்.அவ்வாறில்லாத பெண்கள்,கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்று அழகுள்ள பெண்களும்,அழகாக இருக்க வேண்டும் என்று கவர்ச்சியான பெண்களும் பல் வேறு வழிகளை நாடுவார்கள்.நிரூபன் கேள்விக்கு வருவோம்;ஆண்களின் பார்வையில் பெண்கள் கவர்ச்சிப் பதுமைகளா அல்லது அழகுப் பொம்மைகளா?என்னுடைய பதில்;இரண்டுமே!!!!!

K said...
Best Blogger Tips

@கந்தசாமி.

அப்ப ஏரியாவுக்கு ஒரு ரெட்லைட் வைத்திடலாம் என்கிறீங்களா மணி சார்? ///

கண்டிப்பாக! தமிழர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையே அதுதான்!சங்க இலக்கியங்கள் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்!

எமது பண்டைய தமிழன் மிகவும் தெளிவாகவே இருந்தான்!

இப்போதைய தமிழனுக்குத்தான், வாழ்க்கையின் அர்த்தமே புரியல கந்தசமி சார்!

உங்களிடம், ஒரு கேள்வி கந்தசாமி சார்,

“ மனிதன் தனது உணர்வுகளை அடக்கி வாழும்போது, அதற்குப் பின்விளைவுகள் இருக்காதா? “

“ ஒரு உணர்வு அடகி வைக்கப்படும் போது, அந்த உணர்வு மனதை விட்டு மறந்துவிடுமா? அல்லது வேறு ரூபத்தில் வெளிப்படுமா?”

” உணர்வுகளை வெளிப்படுத்துபவன் மகிழ்ச்சியாக இருப்பானா? அன்றேல் உணர்வுகளைப் ஒத்தி வைத்திருப்பவன் மகிழ்ச்சியாக இருப்பான?”

” குறுகிய காலத்துக்கேனும் அல்லது நீண்ட காலத்துக்கேனும் ஒரு உணர்வு அடக்கப்படும் போது, அந்த உணர்வுக்கு என்ன நடக்கிறது?”

“ மனிதன் முதலில் எதற்காக தனது உணர்வுகளை அடக்க வேண்டும்?”

“ மனித வாழ்க்கையில், உணர்வுகளை அடக்கி வாழ்வதால் மனித வாழ்க்கை மேம்பட்டுவிடுமா?”

தயவு செய்து விளக்கம் சொல்லுங்க சார்!

K said...
Best Blogger Tips

பதிவர், திரு ஷண்முகவேல் அவர்களுக்கு எனது வணக்கங்கள்! கும்புடுறேனுங்க!

சார், இந்தப் பதிவுலகத்துல உங்களுக்கு மேலும் மேலும் வெற்றிகிடைக்கணும் சார்!

வாழ்த்துக்கள் சார்!

K said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ

அழகை ரசிக்கலாம் தப்பில்லை, அனுபவிக்க நினைக்கக் கூடாது...///

அப்டீன்னா?

K said...
Best Blogger Tips

@shanmugavel

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
சார், தமிழனுக்கு வாழவே தெரியாது சார்! வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாத ஒரு முட்டாள்தான் தமிழன்!

நான் உங்களிடம் ஒரு சிம்பிள் கேள்வி கேட்கிறேன்!

உடனடியாகப் பதில் சொல்லுங்கள்!

கணவனை இழந்த ஒரு பெண்ணை எதற்காக வாழாவெட்டி என்று சொல்கிறார்கள்?

சீக்கிரம் சொல்லுங்க சார்!


கணவனை இழந்த பெண்ணை வாழாவெட்டி என்று சொல்வதுண்டா?கணவனை விட்டு பிரிந்தவர்களைத்தானே சொல்வார்கள்?///

ஆமா சார், சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சார்!

K said...
Best Blogger Tips

@கந்தசாமி.

உணர்வுகளை தேவையான பொழுதுகளில் கட்டுப்படுத்திகொளுவதற்க்கு தான் விலங்குகளை விட கூட ஒரு அறிவு மனுஷனுக்கு இருக்கு..!///

இந்தக் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் சார்! மனிதன் தனது ஆறாம் அறிவைப்பயன்படுத்தி உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்!

ஆனால் அடக்கி வைக்க கூடாது! தமிழனின் வாழ்க்கை முறைமையே அடக்குவதில்தான் இருக்கிறது!

14 வயதில் உணர்வுகள் வரப்பெற்ற ஒருவனை 28 வயதில் அவன் திருமணம் செய்யும் வரை, உணர்வுகளை அடக்கி வை என்று சொல்லுவது, மஹா கொடுமை!

இந்த இடத்தில் அவன் தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்தவில்லை! - அடக்குகிறான்! - இது பெண்களுக்கும் பொருந்தும்!

30 வயது வரை திருமணமாகாத ஒரு பெண் - சாதாரணமாகவே இருப்பதில்லை! Unnormal Condition ல தான் இருப்பாள்!

இதனை ‘ கலியாண விசர் ‘ என்று சொல்வார்களாம்!

என்ன சொல்கிறீர்கள்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

இப்படி அழகழகான பிகர்களின் படத்த போட்டுட்டு அவங்க யாரு என்னன்னு விபரம் போடாம இருட்டடிப்பு செய்த நிரூபனை கண்டிக்கிறேன்........ ஒவ்வொரு பிகரையும் ஃபைல் நேம் வெச்சுத்தான் பேர் கண்டுபுடிக்க வேண்டி இருக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

ரெண்டு நல்ல படம் போட்டுட்டு மூணாவதா ஒரு அட்டு போட்டிருக்கீங்களே எதுக்கு? அது மட்டும் சிபி ஸ்பெசலா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

//////"சேலையினை அடிக்கடி இடுப்பில் செருகும் போது மேற்சட்டையூடே தெரியும் பிரா கட்டிங்கை ரசிக்கும் ஆண்களாகத் தான் அந்த மன நிலை கொண்டவர்கள் இருப்பார்கள்"./////////

ஆராய்ச்சி தாறுமாறா இருக்கே.......

சுதா SJ said...
Best Blogger Tips

அவ்வவ்
எங்க பாஸ் தமிழ்மணத்தை காணோம்.

சுதா SJ said...
Best Blogger Tips

அனுஷ்கா சினேகாவிடம் இருப்பது எல்லாம்
கவர்ச்சி இல்லை பாஸ் அழகுதான்,

அதே நமிதா சோனா விடம் இருப்பது
கவர்ச்சி பாஸ்

நமக்கு
கவர்ச்சியான பெண்களை விட
அழகான பொண்ணுங்க மேலேயே ஒரு "இது" பாஸ்.
ஹீ ஹீ

சுதா SJ said...
Best Blogger Tips

பாஸ் ரெம்பத்தான் ஆராட்சி பண்ணுறீங்க
நல்லாவே இருக்கு பாஸ்
ஹீ ஹீ

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

மனிதனும் தனியாள் அப்டீங்கற எண்ணம் வரணும்! இந்தக் கருத்த நாங்க ஒரு 10 பதிவுகள் போட்டு விவாதிக்கணும் சார்!\

அதிருக்க, ஒருத்தன் கல்யாணம் கட்டி எத்தனை நாளைக்கு மனைவியோட சந்தோசமா இருக்கான்?

எண்ணிப் பத்தே மாசத்தில் ஒரு குழந்தையைப் பெத்துவிட்டு, இனி என் வாழ்க்கை என் குழந்தைக்காகவே என்று சொல்கிறார்! அத்தோடு முடிஞ்சு போச்சு அவனோட வாழ்க்கை!!

ஏன் சார், கல்யாணமாகி ஒரு அஞ்சு வருஷத்துக்கு குழந்தையே பெறாமல், கணவனும் மனைவியும் நல்லா ஊர் உலகமெல்லாம் சுத்தி, ஒரு ஆறாயிரம் தடவைகள் உடலுறவு கொண்டுவிட்டு, பின்னர் ஒரு குழந்தையைப் பெறலாமே!//

ஆமா சார், தமிழர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையான வளர்ப்பு அப்படி,
அவர்களின் கலாச்சாரம் இதனைத் தானே சொல்கிறது.
ஆகவே தமிழர்கள் கலாச்சார அடிப்படையில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் சார்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

மனிதனும் தனியாள் அப்டீங்கற எண்ணம் வரணும்! இந்தக் கருத்த நாங்க ஒரு 10 பதிவுகள் போட்டு விவாதிக்கணும் சார்!\

அதிருக்க, ஒருத்தன் கல்யாணம் கட்டி எத்தனை நாளைக்கு மனைவியோட சந்தோசமா இருக்கான்?

எண்ணிப் பத்தே மாசத்தில் ஒரு குழந்தையைப் பெத்துவிட்டு, இனி என் வாழ்க்கை என் குழந்தைக்காகவே என்று சொல்கிறார்! அத்தோடு முடிஞ்சு போச்சு அவனோட வாழ்க்கை!!

ஏன் சார், கல்யாணமாகி ஒரு அஞ்சு வருஷத்துக்கு குழந்தையே பெறாமல், கணவனும் மனைவியும் நல்லா ஊர் உலகமெல்லாம் சுத்தி, ஒரு ஆறாயிரம் தடவைகள் உடலுறவு கொண்டுவிட்டு, பின்னர் ஒரு குழந்தையைப் பெறலாமே!//

ஆமா சார், தமிழர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையான வளர்ப்பு அப்படி,
அவர்களின் கலாச்சாரம் இதனைத் தானே சொல்கிறது.
ஆகவே தமிழர்கள் கலாச்சார அடிப்படையில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் சார்.

மாய உலகம் said...
Best Blogger Tips

ஹலோ என்ன தொடர்ந்து ஆம்பளைகளை மட்டந்தட்டியே பதிவ போடுறீங்க ஹி ஹி இருங்க பதிவ படிச்சுட்டு வாரேன்....

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

ஆனால் தமிழர்கள் அப்படிச் செய்வதில்லை! காரணம் குழந்தை பெறாவிட்டால், மனைவியை மலடி என்று சமூகம் திட்டு்ம் - முதலில் அந்த சமூகத்தின் மீது பொஸ்பரஸ் குண்டு போட்டு சாவடிக்கணும்!

ஒருத்தன் புள்ள பெத்தா என்ன? பெறாட்டி என்ன?

இப்படி புள்ளையப் பெத்து, அந்தப் பெண் தாயான பின்னாடி, அந்தப் பெண் குண்டாகி, அழகு குறைஞ்சு , கவர்ச்சியே இல்லாமல் போய்விடுகிறாள்!

அதன் பின்னர் ஆண் , வேறு பெண்கள் பக்கம் போகிறான்!

ஏனென்றால், அந்த ஆணோ பெண்ணோ ஆசைதீர உடலுறவு கொண்டிருக்கவே மாட்டார்கள்!

அப்புறம் எங்க ஆசை தீருறது?

ஒரு வெள்ளைக்காரி 60 வயசிலும், 18 வயதுப் பெண்ணைப் போல அவ்வளவு இளமையாக இருக்கிறாள்!

ஆனால், எமது பெண்களுக்கோ உடலை சிக்கென்று, வாளிப்பாக, கவர்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்றே தோன்றுவதில்லை!//

ஆமாம் பாஸ், இந்தக் கருத்துக்களோடு நானும் உடன்படுகின்றேன்,
தமிழ் பெண்கள் தாம் மணமாகும் வரை கட்டிக் காக்கின்ற அழகினை, திருமண்ம் முடித்த பின்னர் கை நழுவ விடுகின்றார்கள்.

இதனால் தான் எம் சமூகத்தில் கள்ளக் காதலும், குடும்பங்களுக்கு உள்ளே சண்டையும் நிகழ்கின்றது சார்.

மாய உலகம் said...
Best Blogger Tips

ஒரு பெண் அழகாக இருந்தால் போதும், அவளைப் பின் தொடர்ந்து ஜொள்ளு வடிப்பதற்கும், அவள் அழகைப் பற்றிக் கமெண்ட் அடிப்பதற்கும் பல ஆடவர்கள் காத்திருப்பார்கள்.//

ஹா ஹா என்னங்க காமெடி பண்றீங்க... அழகான பொண்ணுங்கள பாத்து தான் ரசிப்பாங்க ஜொள்ளு வடிப்பாங்க பின்ன அசிங்கமான ஆம்பளைய பாத்தா ஜொள்ளூ வடிப்பாங்க நல்லா சொல்றாய்ங்க டீட்டெயிலு ஹி ஹி ஹி

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

சில பெண்கள் ஃபேசியல் செய்து முகத்தை மட்டும், அழகாக மினுக்கிக்கொண்டு திரிவார்கள்! - இவர்கள் சுத்த வேஸ்டு! பெண்களின் அழகோ கவர்ச்சியோ முகத்தில் இல்லை!

காதல் பிறப்பது கழுத்துக்கு கீழே!

இதனை எல்லா ஆண்களும், பெண்களும் புரிந்து கொள்ளவேண்டும்!//

இதனை ஏனோ தெரியவில்லை எல்லாப் பெண்களும் உணர மறுக்கிறார்கள். ஒரு வேளை அதிகளவான பெண்கள் கணவனில் தங்கி வாழ்வதால் தாம் வெளியே வேலைக்குச் செல்ல வேண்டிய தேவை இல்லை என்பதை உணர்ந்தும் தவற விடுகின்றார்களோ தெரியவில்லை.

மாய உலகம் said...
Best Blogger Tips

சில பெண்கள் ஆண்களைத் தம் ஓர விழியால்- கடைக் கண் மூலம் பார்த்து ஆண்கள் தம்மைப் பின் தொடர்ந்து ஜொள்ளு விட வேண்டும் என்பதற்காக ஒரு புன்னகையினை உதிர்த்து விட்டுச் செல்லுவார்கள். //

கைய குடுங்க..... இப்ப தான் சரியா வரீங்க

மாய உலகம் said...
Best Blogger Tips

மறு முறை பார்க்காமல்- அவ் ஆடவனைத் தெரியாதவளாகப் போகும் போது, அவள் முதன் முறை உதிர்த்த புன்னகையினை மனதில் வைத்து மாதக் கணக்கில் அப் பெண்ணினைப் பாதுகாப்பாகப் பின் தொடர்ந்து பாடிகார்ட் போல அழைத்துச் செல்வது முதல், வீட்டு வாசல் வரை கொண்டு வந்து சேர்ப்பதிலும் ஆண்கள் அளப்பரிய சேவை செய்திருக்கிறார்கள்.//

ஆஹா... அப்ப அனுபவமா நீங்களும் அந்த சேவை செஞ்சிருப்பீங்களே..சேம் பிளட்டா

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

ஆனால், எமது பெண்கள் அப்படி செய்வதில்லை! பெண்கள் அப்படி இருக்க வேண்டும் என்று ஆண்கள் ஊக்கப்படுத்துவதும் இல்லை!

வெளிநாடுகளில் வாழும் பல தமிழ் பெண்கள் உப்பிப் பெருத்து, 152 மில்லி மீட்டர் ஆட்டிலறி போல இருக்கிறார்கள்!

வெள்ளைக் காரிகளைப் போல வீதியில் ஓடுவதில்லையா? அற்லீஸ்ட் பார்க்குகளிலாவது ஓடுவதில்லையா? என்று கேட்டால், இல்லையாம் வெட்கமாம் என்கிறார்கள்!

என்றைக்கு தமிழ் பெண்கள் தமது வெட்கத்தை விட்டுத் தொலைக்கிறார்களோ அன்றைக்குத்தான் உருப்படுவார்கள்!

மேலும் பெண்களின் இலக்கணமாக அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்று சொல்லி வைத்த தேசத்துரோகிகளை மின்கம்பத்தில் கட்டி வைத்து சுட வேண்டும்!//


ஹே....ஹே...இது செம பாயிண்ட் பாஸ்.
ஏன்னா எங்கள் தமிழ் பெண்கள் கலியாணம் முடித்த பின்னர் தான் அதிகமாக வெட்கப்படுகின்றார்கள்.
அதனை விட அவர்கள் உண்ணுகின்ற உணவினைப் பாருங்கள்.

வெளிநாட்டுப் பெண்களோடு ஒப்பிடும் போது, தமிழ் பெண்கள் குழந்த பெற்ற பின்னர் அதிகளமாக உண்ணுகின்றார்கள். இதே போல குழந்தை வயிற்றில் இருக்கும் போதும் அதிகளவாக உண்ணுகின்றார்கள். காரணம் கேட்டால் வயிற்றிலுள்ள குழந்தைக்கும் சேர்த்து உண்ண வேண்டும் என்று விளக்கம் வேறு கொடுப்பார்கள் எம் தமிழ்க் குல மாதுக்கள். இந்த நிலையினை நாம் அனைவரும் மாற்ற வேண்டும்,

மாய உலகம் said...
Best Blogger Tips

பெண் ஆண்களுக்காகவா தன்னை அழகுபடுத்துகிறாள்? இயற்கை தனக்கு வழங்கிய இன்பமான வளைவு நெளிவுகளை தன் அழகிய ஆடைகள் கொண்டு மேலும் அழகாக்கி மகிழ்வடைகிறாள். //

ஆஹா தலைவரே! பயங்கர ரசனை உள்ள பார்ட்டியா இருப்பீங்க போலருக்கே

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

இதுவே ஒரு வெள்ளைக்கார ஆம்பளையோடு நம்பி அனுப்பலாம், சார், இவ என் பொண்ணு, காலேஜுக்குப் போறா! பத்திரமா கொண்டு போய் இறக்கிவிடுங்க சார்’ என்று சொல்லி அனுப்பினால், அவன் பத்திரமாகவே கொண்டுபோய் உரிய இடத்தில் சேர்ப்பான்!

காரணம் அவனுக்கு அந்தப் பெண்ணை அனுபவிக்கவேண்டும் என்று தோன்றுவதில்லை!ஏன் தெரியுமா? அவன் அப்போதுதான், சற்று முன்னர் யாரோ ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டுவிட்டு வந்திருப்பான்!!

ஆனால் நம்மவர்களை நம்பி அனுப்ப முடியாது? ஏன் தெரியுமா அவர்கள் பல நாட்களாக எந்தப் பெண்ணையும் தொடாமல் காய்ந்து போய்க் கிடப்பார்கள்!

அதனால் தன்னை நம்பி அனுப்பப்பட்ட ஒரு பெண்ணையே கெடுக்கும் அளவிற்குப் போய் விடுகிறான்!

இதெல்லாம் உண்மையா? பொய்யா?

இப்படியான கேவலமான கலாச்சாரம் எமக்குத் தேவையா?//

ஆசைகள் முற்று முழுதாக அடக்கி வைக்கபடாத காரணத்தினால் எம் சமூகம் பெண்ணை அழகுப் பொருளாகப் பார்ப்பதனை விடுத்துக் கவர்ச்சிப் பொருளாகப் பார்த்து மகிழ்கிறது. இதனால் தான் இத்தகைய காணத பொருளைக் கண்டு விட்டோம் எனும் மன நிலையினை எம் தமிழர்கள் பெற்று விபரீதமான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

அதனால் தன்னை நம்பி அனுப்பப்பட்ட ஒரு பெண்ணையே கெடுக்கும் அளவிற்குப் போய் விடுகிறான்!

இதெல்லாம் உண்மையா? பொய்யா?

இப்படியான கேவலமான கலாச்சாரம் எமக்குத் தேவையா?//

எம் கலாச்சாரத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும், ஆனால் கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பதாகக் கூறுவோர் இருக்கும் வரை இது கொஞ்சம் கடினமான முயற்சியாகவே இருக்கும் சார்.

மாய உலகம் said...
Best Blogger Tips

தம் மனைவியின் அழகிய உடல் வனப்புக்கள் குறைவடைகின்ற சந்தர்ப்பத்தில், மனைவியுடன் வெளியே போகும் போது கூட மாற்றானின் மனைவிகள் மேல் கண் பார்வையினை மேயவிடுகின்றார்கள்". //

இதுல ஒரு உண்மையான விசயம் பாத்தீங்கன்னா பாஸ்... நம் ஆடவருக்கே உள்ள சுயநலம் மிளிரும் என்னன்னா... இவர் அடுத்தவன் பொண்டாட்டிகளை ரசிப்பானா..ஆனா அடுத்தவன் அவன் பொண்டாட்டிய ரசிச்சா பல்ல கடிப்பானா என்னா நியாயம் பாஸ் இந்த ஆடவர்களின் சுயநலம் ஞாயம் .... என்னமோ போங்க

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

சரி, மொதல்ல போயி ஒரு ப்ரஸ்டிடியூட்ட பார்த்து அவகூட 15 வாட்டி செக்ஸ் வச்சுட்டு வாங்க! அப்புறம் என்னையப் பிடிச்சிருந்தா லவ் பண்ணுங்க’ என்று சொல்லிப் பாருங்கள்!!

உங்களின் இந்த அதிர்ச்சியான பதிலினால், ஆண் 3 நாளைக்குப் பேய் பிடித்தவன் போல திரிவான்! - இத சமன்பாடு அப்படியே பெண்களுக்கும் பொருந்தும்!

ஒரு பெண்ணைத் தொட்டுப் பார்க்கவோ, உடலுறவு கொள்ளவோ எமது சமூகத்தில், ஆண்களுக்கு அனுமதி இல்லாததால் தான், சமூகத்தில் கற்பழிப்புக்களும், அங்க சேட்டைகளும் நடக்கின்றன!

பல நாள் காய்ஞ்சு கிடந்தவர்கள்தான் - சிறுமிகளைக்கூட விட்டு வைப்பதில்லை!

- மேற்கு நாடுகளில், ஒரு பெண்ணை அடைவது வெகு சுலபம்! தோ பார், எங்கூட வர்ரியா? என்று ஒரு வரியில் கேட்டாலே போதும்

அவள் ஒன்று எஸ் சொல்லுவாள்! அல்லது நோ சொல்லுவாள்! அவ்வளவுதான்!

ஒரு பெண் நோ சொல்லிவிட்டால், அப்புறம் அந்த இடத்தைவிட்டு நீங்கள் காலி செய்துவிட வேண்டும்!

அடுத்த பெண்ணை தேடி போக வேண்டியதுதான்!

மாறாக, ‘ இல்லைங்க, உங்களப் பார்த்த நாள் தொடக்கம் என் மனசு எங்கிட்டேயே இல்லைங்க’ என்று டயலாக் வுட்டீங்க, அவ்வளவுதான், அடுத்த நிமிஷம் போலிஷ் வந்து நிக்கும்!

ஆனா, எமது சமூகத்தில அப்படியில்லை! ஒரு பெண் மாட்டேன் என்று மறுத்துவிட்டாலும், அவள் பின்னால் தொடர்ந்து சென்று, டயலாக் பேசி, வழிந்து, ஏச்சு வாங்கி, மான்ம்கெட்டு எமது ஆண்கள் படும்பாடு சொல்லி மாளாது!!

எல்லாத்துக்கும் காரணம் நான் சொன்ன அந்த காய்ஞ்சு கெடக்கும் மேட்டர்தான்!//

ஆமா சார், காதல் உடல் சார்ந்த பொருளா?
இல்லை உணர்வு சார்ந்த பொருளா என்று நான் ஒரு தனிப் பதிவு போட்டு இது தொடர்பாக அலசியிருக்கேன் சார்.

சரியாகவே சொல்லியிருக்கிறீங்க.

ஆண்களிடமிருந்து பெண் உண்மைக் காதலை அறிய வேண்டும் என்றால்,
உடல் சார்ந்த தேடலின் பின்னர், ஒரு ஆடவன் தன் மனைவி மீது கொள்ளும் காதலே உண்மையானதாகும், அது வரை காட்டும் அன்பு...அந்த ஒன்றை எதிர்பார்த்த நடவடிக்கையாகும்,

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
ஏக்கங்களுடனும், ஏமாற்றங்களுடனும், கவலைகளுடனும் வாழ்ந்து தொலைப்பதால்தான் தமிழன் 65 வயதிலேயே போய்ச் சேர்ந்துவிடுகிறான்!

வெள்ளைக்காரனோ 98 வயதிலும் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நடக்கிறான்!!

இதெல்லாத்தையும் சொன்னால் - ஐயோ தமிழ் கலாச்சாரம் என்னாவது? அதைக் கட்டிக்காக்க முடியலியே/

என்று ஒப்பாரி வைக்கிறார்//

நன்றாகச் சொல்லியிருக்கிறீங்க. எமது தமிழ்க் கலாச்சாரத்தின் இன்றைய நிலையினை, வயதானவர்களின் ஆசைகள் அடக்கி வைக்கப்படும் நிலையினை விளக்கமாக உரைத்திருக்கிறீங்க. இதற்கெல்லாம் காரணம் காலதி காலமாக நாம் கட்டிக் காக்கும் கலாச்சாரம் தான்.

இதனை மாற்றுவதற்கான சிந்தனைகளை எம் சமூகத்தில் நாம் தூவ வேண்டும் பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆகுலன்

நான் இந்த வாதத்துக்கு வரேல்ல........//

அட வாங்க பாஸ்..சும்மா அடித்து ஆடியிருக்கலாம் இல்லே.

நிரூபன் said...
Best Blogger Tips

@thuvaaa

வணக்கம்,, என்னைப் பொறுத்த வரையில் இரண்டுமே என்று தான் கூறுவேன் குறிப்பாக சாரி கட்டி வரும் நம்மட தமிழ் பொண்ணுகள
பார்த்தா ஒரு கிக்கு வரும் அது வேற எந்த நாட்டு பிகருகள பார்த்தாலும் வராது//

நண்பா சாரி என்பது ஓர் செக்ஸியான அல்லது பெண்ணின் மேடு பள்ளங்களைத் தெளிவாகக் காட்டும் உடை என்பதால் தான் இப்படியான கிக் உங்களுக்கு வருகின்றது,

ஆனால் நான் இங்கே விவாதத்தில் கேட்பது பெண்கள் அழகுப் பொம்மைகளா?
இல்லை கவர்ச்சிப் பொம்மைகளா என்று தானே சகோ

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh

””முட்டி தெரிய சேல நீ தூக்கி கட்டுறவேள கண்ணுமுழிச்சு காத்துருப்பேன் கைத்து கட்டில் மேல””

உங்க பாட்டுதான் பாஸ்(அதாவது நீங்க ஒரு பதிவில் யூஸ் பன்னின பாட்டு என்று சொல்லவந்தேன்)மேலே உள்ள வரிகளுக்கு சிட்டிவேசன் சோங்.//

இது என்னோட பாட்டு இல்ல பாஸ்,
மஜா படத்தில வந்த பாட்டு,
விவாதத்திற்குப் பதில் சொல்லாம நைசாக எஸ் ஆகிட்டீங்களே பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh

””முட்டி தெரிய சேல நீ தூக்கி கட்டுறவேள கண்ணுமுழிச்சு காத்துருப்பேன் கைத்து கட்டில் மேல””

உங்க பாட்டுதான் பாஸ்(அதாவது நீங்க ஒரு பதிவில் யூஸ் பன்னின பாட்டு என்று சொல்லவந்தேன்)மேலே உள்ள வரிகளுக்கு சிட்டிவேசன் சோங்.//

இது என்னோட பாட்டு இல்ல பாஸ்,
மஜா படத்தில வந்த பாட்டு,
விவாதத்திற்குப் பதில் சொல்லாம நைசாக எஸ் ஆகிட்டீங்களே பாஸ்.

மாய உலகம் said...
Best Blogger Tips

ஆடவர்களின் கண்கள் சுடிதாரில் போகும் பெண் மீது அதேயளவான கூர்ந்து பார்க்கும் பார்வைகளோடு உற்று நோக்குவதில்லை.//

உணமையான விசயம் பாஸ்

நிரூபன் said...
Best Blogger Tips

@விக்கியுலகம்

மாப்ள என்னை பொறுத்தவரை அழகை ரசிப்பது தவறு அல்ல(!)...அதே நேரத்தில அதை தனதாக்கிக்க எடுக்கும் முயற்சிகள் தவறு....சைட் அடி கொண்டாடு..ஹிஹி!//

இது ஓக்கே பாஸ்,
ஆனால் எல்லா ஆண்களும் பெண்ணை அழகானவள் என்ற கண்ணோடு தான் நோக்குகிறார்களா?
இல்லையே?
கவர்ச்சித் தேவதை போன்று தானே அணுகின்றார்கள்,

நிரூபன் said...
Best Blogger Tips

@shanmugavel

அறிமுகத்திற்கு நன்றி நிரூபன்//

இதுக்கெல்லாம் நன்றியா பாஸ்..
அவ்....
நன்றிக்கும் நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@shanmugavel

அறிமுகத்திற்கு நன்றி நிரூபன்//

இதுக்கெல்லாம் நன்றியா பாஸ்..
அவ்....
நன்றிக்கும் நன்றி பாஸ்.

மாய உலகம் said...
Best Blogger Tips

அழகு என்பது மன உணர்வினை மாத்திரம் தூண்டக் கூடிய ஒன்றாகும். அதாவது "அட இந்தப் பொண்ணு இவ்வளவு அழகாக இருக்கிறாளே" என்று எண்ணி அவள் மீது மனதளவில் ஆசையினைத் தூண்டுவது அழகு.//

அது காதல்


கவர்ச்சி என்பது ஒரு பெண்ணின் உடற் கட்டமைப்பின் மூலம் உணர்ச்சியினைத் தூண்டச் செய்து, ஆணின் உடல் உணர்வுகளில் மாற்றங்களை உருவாக்கச் செய்வதாகும்.//


இது காமம்

நிரூபன் said...
Best Blogger Tips

@shanmugavel


மிகவும் விவாதத்திற்கான விஷயமாக இருக்கிறதே! பிறகு வருகிறேன்//

ஓக்கே நீங்க லேட்டா வாங்கோ, நான் இருக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@மகேந்திரன்

சகோ இப்போது ஒட்டு மட்டும்
பிறகு வந்து கருத்திடுகிறேன்.//

நன்றி அண்ணாச்சி,

நிரூபன் said...
Best Blogger Tips

@நண்டு @நொரண்டு -ஈரோடு


ம் ...//

நன்றி அண்ணா.

நிரூபன் said...
Best Blogger Tips

@சசிகுமார்

நல்ல ஆராய்ச்சி மச்சி நடதுய்யா//

சொல்லிட்டீங்க இல்லே...நடத்திடுவோம்,
நன்றி மச்சி

நிரூபன் said...
Best Blogger Tips

@"என் ராஜபாட்டை"- ராஜா

அது அவர்கள் மனதை பொறுத்து மாறும் ?//

சரியாகச் சொன்னீங்க பாஸ்,
ஆனால் எல்லா ஆண்களும் பென்ணைப் பொதுவாக எந்த நிலையில் நோக்குகிறார்கள்?
இது தான் என் கேள்வி,

மாய உலகம் said...
Best Blogger Tips

இன்றைய அறிமுக பதிவரான அன்பு நண்பர் சண்முகவேல் அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்....

நிரூபன் said...
Best Blogger Tips

@இராஜராஜேஸ்வரி

உருப்படியான நல்ல ஆராய்ச்சி ???!!/

நன்றி அம்மா.

நிரூபன் said...
Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!

தலைப்பே விவாதப் பொருளாக உள்ளதே?//

ஆமா...தலைப்பினூடாக விவதாம் செய்வது தானே நோக்கம் பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!

தலைப்பே விவாதப் பொருளாக உள்ளதே?//

ஆமா...தலைப்பினூடாக விவதாம் செய்வது தானே நோக்கம் பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி - Prakash

பெண்கள் எப்போதும் அழகு தான்.... அதை மேக்கப் மூலம் இன்னும் அழகாக காட்டுகிறார்கள்.//

ஓக்கே பாஸ்..ஆனால் ஆண்கள் கவர்சியான பெண்களைப் பார்க்கிறார்களா?
இல்லை அழகான பெண்களைப் பார்க்கிறார்களா என்பது தான் என் கேள்வி.

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி - Prakash

ஆண்களும் அழகான பெண்களைத் தான் விரும்பறோம்...//

நீங்க ஒரு ஓப்பின் மைனட் பாஸ்,

நிரூபன் said...
Best Blogger Tips

@Prabu Krishna (பலே பிரபு)

அவ்வவ் விவாதமே முடிஞ்சுடுச்சு போல....

எனக்கு மன அழகுதான் முக்கியம் பாஸ்//

ஆமா. உங்களை மாதிரி எல்லா ஆண்களும் இருந்தால் பெண்கள் மீதான தொல்லைகள் குறைந்து விடும் அல்லவா.

நல்ல கருத்து பாஸ். நன்றி,

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

நிரூபன்.. எனக்கு ஒரு டவுட், இந்த மாதிரி வெரைட்டியா எழுத ஏதாவது பி ஹெச் டி படிச்சீங்களா? நிஜமா டவுட்டு//

இதுக்கெல்லாம் போய்ப் படிப்பாங்களா பாஸ்,
உங்கள மாதிரி பெரியவங்களோட ஆசிர்வாதம் தான் இதற்கான காரணம் பாஸ்,

நிரூபன் said...
Best Blogger Tips

@பிரணவன்

தன்னை அழகாக காட்டிக்கொள்வாதும் கவர்ச்சியாய் காட்டிக்கொள்வதும் பெண்களின் கையில் தான் உள்ளது. . .கவர்ச்சியாய் வரும் பெண்களை ஆண்கள் எல்லை மீறி பார்க்கின்றார்கள். அழகு பெண்களை ரசிக்கின்றார்கள் அவ்வளவுதான். . .//

உங்கள் கருத்து ஓக்கே பாஸ்,
ஆனால் எல்லா ஆண்களும் அழகாக உள்ள பெண்களை விடக் கவர்ச்சியான பெண்களைத் தான் திருமணத்திற்கு முன்னாடி ரசிக்கிறாங்க.
திருமணமானதும், மனைவிக்குத் தெரியாமலும் ரசிக்கிறாங்க
ஆக மொத்தத்தில ஆண்கள் அழகை விடக் கவர்ச்சிக்குத் தான் முதன்மையளிக்கிறாங்க.

«Oldest ‹Older   1 – 200 of 241   Newer› Newest»

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails