Monday, September 26, 2011

சிங்களவர்க்கு அடிமையாக வாழ்ந்து செத்தொழிவதா இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலை!

இலங்கையில் பல ஆண்டுகளாக இடம் பெற்ற விடுதலை வேண்டிய மக்களின் ஈழப் போரினை- பயங்கரவாதிகளின் போர் என்று உலகமெங்கும் பரப்புரை செய்து உலக நாடுகளின் அரவணைப்புடன் வெற்றியீட்டிய மமதையில் இலங்கை அரசாங்கமானது தற்போது தமிழர்களுக்கான தீர்வினைப் பின் தள்ளி வருகின்றது. புலிகளின் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த பின்னர்; ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக இருக்கின்றார்கள் என்று தன்னுடைய மறைமுக ஆயுத பலப் பிரயோகத்தின் மூலம் (துப்பாக்கி முனையில்) மக்களின் உணர்வுகளை அடக்கி; மக்களுக்கு வசந்த வாழ்வை வழங்கி வருவதாக கபட நாடகமாடி வருகின்றது.
மக்கள் மனங்களை வென்றிருக்கிறோம் என்பதற்குச் சான்றாக மூன்றாம் உலக நாடுகளுக்குச் சில கலை நிகழ்வுகள்- அபிவிருத்தித் திட்டங்களை வீடியோவாக எடுத்துக் காண்பித்து;உலக நாடுகளின் தூதுவர்களை இலங்கைக்கு அழைத்துப் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாகப் பார்வையிடச் செய்து; அவர்களின் மனதில் இடம் பிடித்துப் பெருமளவான பணத்தினை ஈழத்தின் வட கிழக்குப் பகுதிகளின் அபிவிருத்திக்கு என்று பொய்ப் பிரச்சாரம் சொல்லிப் பெற்று தென் பகுதியின் முன்னேற்றத்திற்குச் செலவு செய்து வருகின்றது.

புறக்கணிக்கப்படும் தமிழ்- முஸ்லிம்- மலையக மக்கள் நிலை!

முள்ளிவாய்க்கால் பெருந் துயரத்தின் பின்னரும், இலங்கைத் தமிழர்களின் மனங்களினை இலகுவில் வெற்றி கொள்ள முடியாது என்பதனைத் தமிழர்கள் ஒவ்வோர் தேர்தல்களிலும் தம் வலிமையான வாக்குகளைத் தம் தரப்பிற்கான ஏக பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதன் மூலம் காட்டி வருகின்றார்கள். இதே நிலமை தான் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றது. முஸ்லிம் மக்களிற்கென்று எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் மறைவிற்குப் பின்னர் காத்திரமான தலமை இன்று வரை நிர்ணயிக்கப்படாததனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வரும் இலங்கையின் சிங்கள அரசியல் தலைவர்கள், தற்போது முஸ்லிம் மக்களின் மத ரீதியான உணர்வுகளோடும் தம் கேலி இனவாதச் சித்தரிப்பு வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்கள். 

"வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கான தனியான தீர்வு என்ற ஒன்று அறிவிக்கப்படுகின்ற போது, அறிவியல் ரீதியிலும், இனங்களிற்கிடையேயான ஒற்றுமையின் அடிப்படையிலும், வரலாற்றுப் புவியியல் ஆய்வின் அடிப்படையிலும் முஸ்லிம் மக்களையும் தமிழர்கள் அரவணைத்து வாழுகின்ற நிலமை நிச்சயமாக உருவாக வேண்டும்." தமிழ்- முஸ்லிம் தலைவர்கள் புரிந்துணர்வோடு பிரிவினைகள் அற்ற ஓர் சமூகத்தினைத் தம் பழைய காழ்ப்புணர்வுகளைத் தூர வீசிக் கட்டியெழுப்ப பாடுபட வேண்டும். அப்போது தான் பலமான ஒரு சமூகமாகத் தமிழ் மக்கள் இனத்தால் தமிழர்கள் என்ற ரீதியில் தம் ஸ்திரத் தன்மையினை உலகினுக்கு எடுத்துரைக்க முடியும்.

இலங்கையில் வாழும் தமிழ்- முஸ்லிம்- மலையக மக்கள் சமூகத்தின் ஏகப் பிரதி நிதிகளில் ஒரு சிலர் பாராளுமன்றம் சென்றவுடன் தம் மக்களிடம் தாம் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை மறந்தவர்களாய் அரசாங்கத்தின் பக்கம் நிற்பது நாம் அனைவரும் அறியாத விடயம் அல்ல.  மக்களுக்கான உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காகத் தான் ஆளும் வர்க்கத்தின் பக்கம் தமிழ் -முஸ்லிம் - மலையக அரசியல் தலமைகள் சார்ந்திருக்கிறார்கள் என்று கூறினாலும் சிங்கள அரசியல்வாதிகள் பார்வையில் "தமிழ்- முஸ்லிம் - மலையக அரசியல்வாதிகள் எச்சில் எலும்புத் துண்டுக்கு வாலாட்டுவோர் என்ற நிலையில் தான் வைத்து நோக்கப்படுகின்றார்கள்." 

இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாக இதுவரை காலமும் புலிகள் தொல்லை கொடுக்கிறார்கள், புலிகள் நாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கிறார்கள் என நொண்டிச் சாட்டுக் கூறிய இலங்கை அரசாங்கம் தமிழ்- முஸ்லிம் மக்களின் அபிவிருத்திப் பணிகளைத் தாமதப்படுத்தியே வந்துள்ளது. ஆனால் 2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான காலப் பகுதியினைத் தொடர்ந்து தென் இலங்கை- மற்றும் சிங்கள இன மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இடம் பெற்ற அபிவிருத்திகளுக்கு நிகராக முஸ்லிம் பகுதிகளில் - மலையகத் தமிழர்களின் பகுதிகளில் எங்காவது அபிவிருத்திகள் இடம் பெற்றிருக்கின்றனவா? இது ஒன்றே போதும், "இனத்துவேச விகிதாசார அடிப்படையில் நாம் எப்போதும் இரண்டாம் நிலையில் தான் பெரும்பான்மை அரசியல் தலமைகளால் நோக்கப்படுகின்றோம்."

தமிழர்களும் முஸ்லிம்களும், மலையக மக்களும் சிங்களவர்களுக்கு அடிமையாக வாழுகின்ற நிலைக்குத் தான் இன்றைய கால கட்டத்தில் தள்ளப்படுகின்றார்கள். சேர் என்று பணியிடங்களிலும் (Sir), ஏனைய அலுவலகங்களிலும், ஏன் இராணுவ- காவற் துறை நிலையங்களைத் தாண்டிப் போகும் போதும் கூட நாம் வற்புறுத்தி பெரும்பான்மை இன ஊழியர்களை அழைக்க வைக்கபடுகின்றோம். மரியாதையின் நிமித்தம் நாம் இவ்வாறு அழைக்கின்றோம் என்று யாராவது கூறினாலும், பெரும்பான்மை இன மக்களுக்கு அடுத்த நிலையில் பதவிகளில் இருக்கும் முஸ்லிம் சகோதர்களை நாம் இவ்வாறு அழைப்பதுமில்லை. அவர்களாக விரும்பித் தம்மை மரியாதை கூட்டி அழைக்கச் சொல்லிக் கேட்பதுமில்லை. 

ஒரு பேருந்தில் நாம் அனைவரும் பயணம் செய்கின்றோம். அதில் தமிழ்- முஸ்லிம்- சிங்கள இன மக்கள் பயணஞ் செய்தாலும், பல் கலாச்சார நாடு (Multicultural Country SriLanka)  இலங்கை என அரசியல்வாதிகள், ஜனநாயக மொழி பேசுகின்ற சூழலில், ஆங்கிலத்தில் அல்லது பொதுவான மொழியில் உரையாடுகின்றோமா? இல்லைத் தானே? நாம் விரும்பியொ விரும்பாமலோ ஒரு பொது இடத்தில் இலங்கைத் தலை நகரிலிருந்து 264Km தூரத்திற்கு இடையேயான பகுதி வரை சிங்கள மொழிக்குத் தானே முதன்மை கொடுக்கின்றோம். 

எல்லாத் துறைகளிலும் முதன்மையான மொழி சிங்களம் என்று தானே கொண்டாடுகின்றார்கள். தமிழ்- இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் இலங்கையில் மூன்றாம் தலைமுறையினரிடையே (இப்போது சிறுவர்களாக உள்ளோர்) ஒரு தெளிவான புரிந்துணர்வினைக் கட்டியெழுப்பும் வண்ணம் ஆங்கில மொழியினைப் பொதுவான மொழியாக அறிவித்து நடை முறைப்படுத்த முடியாதா? இலங்கையின் அதிகார மொழி சிங்கள மொழி தான் என்று அறிவித்து முஸ்லிம் தமிழ் மக்களிடம் வலிந்து சிங்கள மொழியினைத் திணித்து மீண்டும் நாம் அடிமைகள் போல வாழ்வதனை விரும்பும் அதிகார வர்க்கத்திற்கு நாம் ஓர் புரிந்துணர்வோடு கூடிய திட்டத்தினை முன் வைக்க முடியாதா? 

காலதி காலமாக சிங்கள இன மக்களின் கீழ் தமிழர்கள் வாழுகின்ற எழுதப்படாத விதிக்கு எவ் வகையில் தீர்வு காணப் போகின்றோம்? ஆனால் சாதாரண மக்களிடம் மீண்டும் இனவாதத்தினை விதைக்கும் வண்ணம் அரசாங்கம் நடை முறைப்படுத்தும் அதிகார வர்க்கத்திற்கு அடி பணிந்து அவர்களின் மொழியினைக் கற்கும் இச் செயற் திட்டத்திற்கு எம் மூன்றாம் தலை முறையினையும் பலிக்கடாக்கள் ஆக்கி, அடிமைகள் போல வாழத் தூண்டு கோலாக இருக்கப் போகின்றோமா?

தமிழ் முஸ்லிம் பாராளுமன்றப் பிரதி நிதிகள் ஒன்று சேர்ந்து இலங்கை மக்களின் தொடர்பாடலுக்குத் தேவையான ஒரு பொதுவான மொழியினை நடை முறைப்படுத்துவது தொடர்பில் ஆராய முடியாதா? சிங்களத்தைக் கற்று அவர்களின் கலாச்சாரத்தினைப் பின் பற்றி வாழுகின்ற அடிமை நிலைக்கு எம் சந்ததிகளை இட்டுச் செல்வது தான் எங்கள் எல்லோரின் முன்னும் உள்ள கையாலாகத நிலையா? இந் நிலையினை ஜனநாயக வழியில் மாற்ற முடியாதா?

இது தான் இன்றைய விவாத மேடைப் பதிவு தாங்கி வரும் கேள்விகள். 

என்னுடைய கருத்துக்கள் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் அளவிற்கு வலிமை உள்ளவை அல்ல. சமூகங்களிற்கிடையே இனவாதத் தீயினை உருவாக்கும் நோக்கில் நான் இப் பதிவினை எழுதவில்லை. எம் கருத்துக்களின் மூலம் அரசியல்வாதிகள் மக்களின் உணர்வுகளைப் புரிந்து ஏதாவது செய்ய மாட்டார்களா எனும் ஆதங்கத்தில் தான் இப் பதிவினை உங்கள் முன் வைக்கின்றேன். 
********************************************************************************************************************************
இலங்கைப் பெண் எழுத்தாளர்களின் படைப்புக்களினை வலைப் பதிவில் காண்பது அரிதாக உள்ளது வருத்தமான விடயம் தான். எண்ணிக்கையின் அடிப்படையில் இலங்கைப் பெண் எழுத்தாளர்கள்- படைப்பாளிகளின் வீதம் இணைய வெளியில் குறைவாக காணப்பட்டாலும், ஒரு சில படைப்பாளிகள் தம் பல் சுவைப் பதிவுகள் மூலம் இக் குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் தம் படைப்புக்களைப் பகிர்ந்தும் வருகின்றார்கள். 

இலங்கையில் நாளிதழ்கள், வார இதழ்கள் மூலமாகத் தன் படைப்புக்கள் ஊடாகப் பலராலும் அறியப்பட்ட சகோதரி "(F.NIHAZHA) F.நிஹாஷா" அவர்கள் தற்போது "தூரிகை", "கற்றது கையளவு" எனும் இரண்டு வலைப் பதிவுகள் ஊடாக இலக்கியம் மற்றும் பல்சுவைப் பதிவுகளோடு பதிவுலகிலும் வலம் வருகின்றார். 
நிஹாசா அவர்களின் தூரிகை வலைப் பதிவிற்குச் செல்ல:
***********************************************************************************************************************************

133 Comments:

Unknown said...
Best Blogger Tips

பதிவு ஒரு சாட்டையடி அரசாங்கதுக்கு இருந்தும் என்ன மாற்றம் வந்துவிட போகிறது?

Yoga.s.FR said...
Best Blogger Tips

இனிய காலை(பகல்?)வணக்கம்,நிரூபன்!கேள்வியில் நியாயம் இருக்கிறது!எனினும்,பேரினவாதத்தில் "ஊற" வைக்கப்பட்டு,ஆக்கிரமிப்புக்குப் பழக்கப்பட்டுப் போன தேசத்தில் இது சாத்தியமா?மொழியுரிமை பொதுவாக இருத்தல் வேண்டும்!சமவுடைமை பேணப்படின் மொழிப் பிரச்சினைக்கே இடமில்லை என்பது என் வாதம்!

நிரூபன் said...
Best Blogger Tips

@M.Shanmugan

பதிவு ஒரு சாட்டையடி அரசாங்கதுக்கு இருந்தும் என்ன மாற்றம் வந்துவிட போகிறது?//

இல்லை நண்பா,
நாம் எம் மொழி அடிப்படையில் இன ஒற்றுமையினை வலியுறுத்தினால் பொதுவான மொழிக் கொள்கையினைக் கொண்டு வர முடியாதா?

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.s.FR

இனிய காலை(பகல்?)வணக்கம்,நிரூபன்!கேள்வியில் நியாயம் இருக்கிறது!எனினும்,பேரினவாதத்தில் "ஊற" வைக்கப்பட்டு,ஆக்கிரமிப்புக்குப் பழக்கப்பட்டுப் போன தேசத்தில் இது சாத்தியமா?மொழியுரிமை பொதுவாக இருத்தல் வேண்டும்!சமவுடைமை பேணப்படின் மொழிப் பிரச்சினைக்கே இடமில்லை என்பது என் வாதம்!//

இனிய காலை வணக்கம் ஐயா,
சமவுடமை என்ற ஒன்று தேவையெனில் நாம் அதிகார வர்க்கத்தின் மொழியினைக் கரும மொழியாக கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லைத் தானே ஐயா.

மூவின மக்களும் ஒற்றுமையோடு பேதங்களின்றித் தொடர்பாடல் மேற்கொள்ள ஒரு பொதுவான மொழியினைக் கடைப்பிடிக்கும் வண்ணம் எமது பாராளுமன்ற பிரதிநிதிகள் பெரும்பான்மைத் தலைவர்களோடு பேசித் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியாதா?

Unknown said...
Best Blogger Tips

சொந்த நாட்டில் அகதி போல் வாழ்வது கொடுமை??

என்னதான் செய்ய நினைகிறார்கள் தெரியவில்லை.. இன்று இவர்கள் கொடுக்கும் அழுத்தம் ஒரு நாள் வெடிக்கும்.. இவர்கள் அந்த பேரு வெடிப்பில் காணாமல் போய் விடுவர்..

Prabu Krishna said...
Best Blogger Tips

என்ன சொல்ல எனத் தெரியவில்லை சகோ. இன்னும் நமக்கு நீதி இல்லை.

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

உலகில் பெரிய வலி சக மனிதன் காயப்படும்போதும் ஏதும் செய்ய இயலாமல் நாம் பார்த்துகொண்டிருப்பதே!

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@மூவின மக்களும் ஒற்றுமையோடு பேதங்களின்றித் தொடர்பாடல் மேற்கொள்ள ஒரு பொதுவான மொழியினைக் கடைப்பிடிக்கும் வண்ணம் எமது பாராளுமன்ற பிரதிநிதிகள் பெரும்பான்மைத் தலைவர்களோடு பேசித் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியாதா?////

ஒரு மொழியை அறிந்து கொள்வதில் எந்தத்தவறும் இல்லை என்பது என் கருத்து..இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் சகோதரமொழி பேசிபவர்கள் என்றபடியால் சிங்களம் அரசகரும மொழியாக உள்ளதில் என்ன தவறு..
அதைவிட இலங்கையில் பேசப்படுகின்ற மொழிகளில் தமிழ்,சிங்களம்,ஆங்கிலம்,ஆகியன உள்ளது ஆனால் ஆங்கிலத்தை தாய் மொழியாகக்கொண்ட மக்கள் யாரும் இலங்கையில் இல்லை...மூன்றாம் தரப்பு செயற்பாடுகளுக்குத்தான் ஆங்கிலம் பயன் படுத்தப்படுகின்றது.சாதாரன சாமன்ய மக்களில் எத்தனை பேருக்கு இலங்கையில் ஆங்கிலம் தெரியும்.சகோதரமொழி,தமிழ் மொழியுடன் ஓப்பிடும் போது அதன் வீதாசாரம் மிகக்குறைவே,எனவே அதிகளவு பேருக்கு தெரியாத ஒரு மொழியை நடைமுறைப்படுத்துவதைவிட அதிகளவு மக்களால்(இலங்கையில்)பேசப்படும் சகோதர மொழியை..பேசுவதில் தவறு ஏதும் இல்லை என்பது என் கருத்து இது என் கருத்து மட்டுமே.....தவறாக இருந்தால் மன்னிக்கவும் பாஸ்

தனிமரம் said...
Best Blogger Tips

வணக்கம் அண்ணா இன்று திங்கள்கிழமை இப்படி ஒரு வாசகத்தை தமிழர்கள் மற்றவர்களிடம் சொல்லாமல் போவது ஏன்?!

தமிழன் வர்த்தகம் said...
Best Blogger Tips

எனக்கு ஒரு சந்தேகம் கிழக்கு மாகாண திருகொனமலைல் இந்துக்கள் பெருபான்மை இழந்து விட்டனரா
திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களும் பாராளுமன்றமும்

http://lankamuslim.org/2010/05/08/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2/

காட்டான் said...
Best Blogger Tips

ராசுக்குட்டி எந்த மொழியையும் படிக்கலாம் அதில் தவறில்லை.. ஆனால் இவர்கள் திணிக்கிறார்கள் சுயமரியாதை உள்ள எவனும் திணிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டான்யா...!!!!

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@ஒரு பேருந்தில் நாம் அனைவரும் பயணம் செய்கின்றோம். அதில் தமிழ்- முஸ்லிம்- சிங்கள இன மக்கள் பயணஞ் செய்தாலும், பல் கலாச்சார நாடு (Multicultural Country SriLanka) இலங்கை என அரசியல்வாதிகள், ஜனநாயக மொழி பேசுகின்ற சூழலில், ஆங்கிலத்தில் அல்லது பொதுவான மொழியில் உரையாடுகின்றோமா? இல்லைத் தானே? நாம் விரும்பியொ விரும்பாமலோ ஒரு பொது இடத்தில் இலங்கைத் தலை நகரிலிருந்து 264Km தூரத்திற்கு இடையேயான பகுதி வரை சிங்கள மொழிக்குத் தானே முதன்மை கொடுக்கின்றோம். /////

மொழிகளில் பிரிவினை பார்ப்பது தேவை அற்ற ஒன்று ஏன் என்றால் மொழி என்பது தொடர்பாடலுக்குறியது..ஒரு மொழியை அறிந்து கொள்வதில் எந்த பாகுபாடும் தேவையில்லை..ஏன் என்றால் இங்கு பொதுவான மொழி என்று நீங்கள் குறிப்பிடுவது ஆங்கிலத்தைதான் வேறு எந்த பொதுவான மொழியும் இலங்கையில் பேசப்படுவது இல்லை...ஆனால் சாதாரன சாமன்ய மக்களில் பலருக்கு ஆங்கிலம் தெரியாது...எனவே ஆங்கிலத்தை அவர்கள் கற்றுக்கொண்டு பேசிவதைவிட...சமூகத்தில் பேசப்படும் சகோதர மொழியை பேசுவது அவர்களுக்கு இலகுவானதாக இருக்கின்றது எனவே சகோதர மொழிபேசப்படுவதில் தவறு ஏதும் இல்லை.இதுவும் என் கருத்து மட்டுமே

தனிமரம் said...
Best Blogger Tips

ஆட்சியில் இருக்கும் பெருன்பாண்மையின மக்கள் தம்மொழி மீது வைத்திருக்கும் பற்று என்றே சொல்லிச் சொல்லி தமிழும் ஆங்கிலமும் இரண்டாம் தரமாகிவிட்டது !அப்போது பாராளமண்றத்தில் இருந்தோர் பாண்டாவின் தனிச்சிங்களத்தை மும்மரமாக எதிர்க்கவில்லை எங்களின் மொழி அன்றே அழியத்தொடங்குவிட்டது பின்வந்தோர் திட்டமிட்டு தமிழ்மொழியையும் சீரலித்தார்கள் நீங்கள் சொல்வது போல் பொதுமொழியாக மீண்டும் ஆங்கிலம் வந்தால் இன்னும் சிறப்பான வினைத்திரன் மிக்க சமுதாயம் உருவாகும் அதைச் செய்ய சட்டம் வழி வகுக்காது!

தனிமரம் said...
Best Blogger Tips

இலங்கையின் கொள்கை வகுக்கும் இனவாத அன்னக்காவடி அதிகாரிகள் இருக்கும் வரை சட்டத்தையோ சமுகத்தையோ திருத்த முடியாது நிரூசார்!

தனிமரம் said...
Best Blogger Tips

பொதுவான மொழியை தமிழ்/சிங்களம்/அரபு மொழிகளை எல்லோருக்கும் கற்பிப்பதற்கு போதிய வளம் இல்லை நாட்டில் இவற்றை களையனும் என்றாள் ஆட்சியாளர்களுக்கு தெளிவான நாட்டை சிறப்பாக கட்டி எழுப்போனும் என்ற கொள்கை உள்ள ஒருத்தன் பிறந்து வரவேனும் ஏன் எனில் இருப்போர் எல்லோரிடமும் இனவாத மொழிக்கொள்கை மூச்சுக்காற்றில் கலந்துவிட்டது இதை வெட்டி எறிய முடியாது !

தமிழன் வர்த்தகம் said...
Best Blogger Tips

@K.s.s.Rajhதமிழ் நாட்டில் உள்ள நங்கள் தமிழ் நட்டிற்குலே குதிரை ஓட்டுகிறோம் கரணம் எங்களுக்கு தேசிய மொழியான ஹிந்தி தெரியாது

இன்று தமிழ்நாட்டில் பிழைக்க சிறந்த ஒரே வழி தமிழ் தேசியம் பேசுவோர் தமிழ் அறிஞர்கள் தமிழ் இலகியவதிகள் இவர்கள் தான் இவரு பேசி எதனை பேர் கல்லா கட்டுகிறார்கள் தமிழ் நாட்டில் இன்று தமிழ் நாட்டில் விவசாயம் இல்லை விலை நிலங்கள் விட்டுமனையாக மாறிவிட்டன காய்கனிகளை வெளி மாநிலத்தில் இருந்து தருவிக்கும் நிலை இன்று

தனிமரம் said...
Best Blogger Tips

சிங்கப்பூர் போல் மொழியை பொதுவாக வைத்தால் நாங்களும் சுபீட்சமாக கற்றிருக்க முடியும் ஆனால் தரப்படுத்தல் தொடங்கி சமத்துவத்தை சாக்கடையில் அல்ல போட்டுவிட்டது இதை கேட்கும் பாராளமன்றத்தில் ஆட்சியே  சகோதரமொழிதானே முதலில் அடிப்படை சட்டத்தை மாற்றனும் இது சாத்தியம் இல்லை சார்!

காட்டான் said...
Best Blogger Tips

இப்போ புலத்து தமிழர்கள் எவ்வளவு மொழிகள் பேசுகிறார்கள் ஏன்..!? அந்தந்த நாட்டில் உள்ளவர்களை அவர்களை தங்கள் மொழியைத்தான் பேசுன்னு கட்டாயப்படுத்தினார்களா..??ஐரோபிய பாராளு மன்றத்தில் அவர்களின் சொந்த மொழியில்தானே உரையாற்றுகிறார்கள்..  தொழில் நிமிர்த்தமாக எவ்ளவு பேர் சிங்களம் பேசுகிறார்கள்.. கட்டாயப்படுத்தி எதையுமே சாதிக்கமுடியாது...!!

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@
காட்டான் said...
ராசுக்குட்டி எந்த மொழியையும் படிக்கலாம் அதில் தவறில்லை.. ஆனால் இவர்கள் திணிக்கிறார்கள் சுயமரியாதை உள்ள எவனும் திணிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டான்யா...////

மாமா யாரும் சிங்கள மொழியை கட்டாயம் கற்கவேண்டும் என்று இங்கே திணிக்கவில்லை..
நாம்தான் சகோதர மொழிகற்றால் எதோ பாரிய தவறுபோல ஒரு விம்பத்தை உருவாக்கிவைத்து இருக்கின்றோம்...தென்னிலங்கையில் வாழும் பெரும்பகுதி தமிழர்களுக்கு சகோதர மொழி பேசத்தெரியும் ஆனால் வன்னியில் வாழ்ந்த மக்களுக்கு சகோதர மொழி பேசுகின்ற சூழ் நிலை இல்லை என்பதால் அவர்களில் பெரும்பாலானோருக்கு சகோதர மொழி பேசத்தெரியாது..ஆனால் இபோது பலர் சரளமாக பேசுகின்றார்கள்..

அதைவிட வன்னியில் கடமை ஆற்றும் பெரும்பான்மையான இராணுவத்தினர்,மற்றும் பொலிசார்..சரளமாக தமிழ் மொழி பேசுபவர்களாக இருக்கின்றார்கள்.. யாரும் உனக்கு சிங்களம் தெரிந்தால்தான் கதைக்கலாம் போ என்று வன்னியில் சொல்வது இல்லை.இங்குவாழும் மக்களுக்கு சிங்களம் தெரியாவிட்டால் தமிழில் அவர்கள் கதைக்கின்றார்கள்.

எனவே மொழிகளில் பிரிவினைவாதம் பார்க்கத்தேவை இல்லை என்பது என் கருத்து மாமா சின்னப்பையன் எதும் தவறாக சொல்லி இருந்தால் மன்னிச்சுக்கொள்ளுங்க(நெம்பு நெளிவில் இருந்து நான் தப்ப)

Anonymous said...
Best Blogger Tips

K.s.s.Rajh said...
.இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் சகோதரமொழி பேசிபவர்கள் என்றபடியால் சிங்களம் அரசகரும மொழியாக உள்ளதில் என்ன தவறு.////
ஒரு முறை அறிஞர் அண்ணாவை ஒரு ஊடகவிலயாளர் கேட்டாராம் ...பெரும்பான்மையான மக்களாக ஹிந்தி பேசுபவர்கள் தான் இந்தியாவிலே இருக்கிறார்கள், ஆகவே இந்தியாவின் தேசிய மொழியாக ஹிந்தியே வைத்திருப்பதில் என்ன தவறு எண்டு ...உடனே அறிஞர் அண்ணா கேட்டாராம் நம் நாட்டிலே மயில்களை விட காகங்கள் தான் பெரும்பான்மையாய் இருக்கிறது ஆகவே பெரும்பான்மையாக இருக்கும் காகங்களை விடுத்து எதற்கு மயில்களை தேசிய பறவையாக தெரிவு செய்து வைத்திருக்கிறார்கள் என்று...உடனே சுத்தி இருந்தவர்களின் கரகோசத்தால் அவ்விடமே ஆரவார பட்டதாம் ...

ராஜாவின் பின்னூட்டத்தை பார்த்த பின்பு எனக்கு அண்ணா தான் நினைவுக்கு வருகிறார் )))

தனிமரம் said...
Best Blogger Tips

இரண்டாம் மொழி சிங்களம் என்று ஒரு காலத்தில் பாடசாலைகளில் வந்தது யாரும் தொடக்கூடாத விபச்சாரி என்று சிலருக்கு மகுடி ஊதியவர்கள் தங்கள் பிள்ளைகளை தலைநகரில் சிங்களம்/ஆங்கிலம் வழிக் கல்வியை கற்பித்தார்கள் இது உண்மையான சம்பவம் சகோ! அன்று அதையும் தொட்டுப்பார்க்கத் துனிந்தவன் மொழியைக் கற்று வேலையில் சேர்ந்தான் வீட்டில் படிக்க வேண்டாம் என்று தடுத்தவனின் பிள்ளை இன்று சாதாரன சங்கக் கடையில் மனேச்சர் வேலை செய்கின்றான் இந்த பிரிவினையை நம்மூத்தோரும் சேர்ந்து தானே ஊக்கிவித்தார்கள்!

Anonymous said...
Best Blogger Tips

நிரூபன் பாஸ் என் மேல கோபம் ஏதும் இல்லையே ))

கொஞ்ச நேரம் கழிச்சு விவாதத்துக்கு வாறன் இப்ப போறான்...

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@
காட்டான் said...
இப்போ புலத்து தமிழர்கள் எவ்வளவு மொழிகள் பேசுகிறார்கள் ஏன்..!? அந்தந்த நாட்டில் உள்ளவர்களை அவர்களை தங்கள் மொழியைத்தான் பேசுன்னு கட்டாயப்படுத்தினார்களா..??ஐரோபிய பாராளு மன்றத்தில் அவர்களின் சொந்த மொழியில்தானே உரையாற்றுகிறார்கள்.. தொழில் நிமிர்த்தமாக எவ்ளவு பேர் சிங்களம் பேசுகிறார்கள்.. கட்டாயப்படுத்தி எதையுமே சாதிக்கமுடியாது...!////

மிகச்சரியானதே எதையும் கட்டாயப்படுத்தி திணிக முடியாது..ஆனால் ஒரு நாட்டின் அரசகரும மொழியை அந்த நாட்டுமக்கள் கற்றுக்கொள்வதில் தவறு ஏது இல்லை(அப்பாடா செம்பு நெளிவில் இருந்து தப்பிச்சாச்சு)

தனிமரம் said...
Best Blogger Tips

தமிழ் முஸ்லிம் பாராளுமன்றப் பிரதி நிதிகள் ஒன்று சேர்ந்து இலங்கை மக்களின் தொடர்பாடலுக்குத் தேவையான ஒரு பொதுவான மொழியினை நடை முறைப்படுத்துவது தொடர்பில் ஆராய முடியாதா? சிங்களத்தைக் கற்று அவர்களின் கலாச்சாரத்தினைப் பின் பற்றி வாழுகின்ற அடிமை நிலைக்கு எம் சந்ததிகளை இட்டுச் செல்வது தான் எங்கள் எல்லோரின் முன்னும் உள்ள கையாலாகத நிலையா? இந் நிலையினை ஜனநாயக வழியில் மாற்ற முடியாதா?
//இதில் பாராளமன்றம் என்ற கோட்டைக்குல் போனவர்கள் பணத்தாசையாலும் மற்ற விடயங்களாலும் மக்கள் பற்றி சிந்திக்கும் திறன் இல்லாதவர்கள் முக்கியமா எங்கள் தமிழ் உறுப்பினர்கள் வீரவசனம் எல்லாம் வேறும் நடிப்பு சார்!

தனிமரம் said...
Best Blogger Tips

தங்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் பெரிய படிப்பு படிக்கனும் முனுசாமியின் பிள்ளையும் பரஞ்சோதியின் பிள்ளையும் தமிழில் படிக்கனும் சிங்களம் தெரியாது இப்படியே சொல்லிச் சொல்லி சீரத்தவர்களிடம் எப்படி ஐயா தீர்க்கமான பொதுமொழிக் கொள்கை வகுருங்கோ என்று கேட்க முடியும்!

தனிமரம் said...
Best Blogger Tips

ராசின்கூற்று
நாம்தான் சகோதர மொழிகற்றால் எதோ பாரிய தவறுபோல ஒரு விம்பத்தை உருவாக்கிவைத்து இருக்கின்றோம்//இதுவும் உண்மை விம்பங்களை உருவாக்கியவர் ?????

தனிமரம் said...
Best Blogger Tips

ஐயா நிரூ நீங்கள் சொல்வது போல் பொதுமொழிக் கொள்கையை வகுக்கும் போது சட்டத்தில் திருத்தம் செய்யனும் இது பாராளமன்றத்தில் முடியாது மொழிக் கொள்கையை மட்டும்மல்ல இனப்பிரச்சனைக்கு தீர்வுக்கும் இந்தச்சட்டம் வழிவிடாது அதை ஆளுவோரும் விடமாட்டினம் இதுதான் நிஜம்!

M.R said...
Best Blogger Tips

வேதனையான விசயம் தான் நண்பரே சம்பந்த பட்டவர்கள் உணர வேண்டுமே

தனிமரம் said...
Best Blogger Tips

நீங்கள் எதிர் பார்ப்பது போல் ஆங்கிலம் பொதுமொழியாகினால்(ஆகாது) இன்னும் நாட்டை வேகமாக வினைத்திரனுடன் செயல்படலாம் அதற்கு அந்தகல்வியில் போதிய புலமை/தகமை வளம் தற்போது நாட்டில் இல்லை என்பேன் அதற்கும் நாம் வெளிநாட்டைத்தான் நம்பி இருக்கனும் பாஸ் பிறகும் இன்னொரு அடிமைத்தனம்தானே?

தனிமரம் said...
Best Blogger Tips

சிங்களம் பொதுமொழியாக இருப்பது அரச/தனியார் உயர்பதவி வேலைகளுக்கு தடையாக இருப்பது நிஜம்.ஆனால் இதை மாற்ற முடியாது காலம் எல்லாம் இப்படித்தான் இருக்கும் என்ன செய்வது பதில் தெரியாது!

தனிமரம் said...
Best Blogger Tips

என்னையா இண்ட்லி பட்டையில் கோளாரா! இல்லை அமலாபாலுடன் டூயட்டா????

Mohamed Faaique said...
Best Blogger Tips

K.s.s.Rajh உடைய கருத்தே என் கருத்தும்... நடு நிலமையாகவே கர்த்துக்களை கூறி வருகிறார்..

SURYAJEEVA said...
Best Blogger Tips

விழிப்புணர்வு ஒன்றே நிதர்சனம், அரசு தூங்குவது போல் நடிக்கும் ஆகையால் எழுப்ப முடியாது

Anonymous said...
Best Blogger Tips

////இலங்கையில் வாழும் தமிழ்- முஸ்லிம்- மலையக மக்கள் சமூகத்தின் ஏகப் பிரதி நிதிகளில் ஒரு சிலர் பாராளுமன்றம் சென்றவுடன் தம் மக்களிடம் தாம் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை மறந்தவர்களாய் அரசாங்கத்தின் பக்கம் நிற்பது நாம் அனைவரும் அறியாத விடயம் அல்ல. /// முக்கியமாக இந்த சாதி அரசியல் பாஸ் ...வெள்ளாளர் தவிர்ந்த ஏனைய சாதியினர் என கருதப்படுபவர்கள் தமிழர் அரசியல் தலைமையாக முடியாதா?? என்னை பொறுத்தவரை தமிழர்களை அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவ படுத்தும் தலைமை கிழக்கு மாகாணத்தில் இருந்தே உருவாக வேண்டும்.. அப்போது தான் இந்த பிரதேசவாதம் மற்றும் தமிழர்களுக்கிடையில் இருக்கிற தாழ்வு மனப்பான்மை என்பன நீங்க வழிவகை செய்யும். ஆனால் அது நடைமுறையில் சாத்தியமா என்பது கேள்விக்குறியே!!!

அதுக்காக கருணா பிள்ளையான் வர வேண்டும் என்று சொல்லவில்லை.. அவர்களை போல ஒரு மட்டமான தலைமை இருப்பதும் பார்க்க அரசியல் தலைமை இல்லாமலே இருக்கலாம்.. இப்ப பிள்ளையான் சொல்லுகிறார் தான் தமிழன் இல்லை வேடுவ இனத்தை சேர்ந்தவனாம் ...அப்ப பாருங்கள் இவங்கள் செய்யும் இணக்க அரசியலுக்காக எப்பிடியெல்லாம் இருக்க வேண்டியிருக்கிறது எண்டு...

Anonymous said...
Best Blogger Tips

///ஏன் இராணுவ- காவற் துறை நிலையங்களைத் தாண்டிப் போகும் போதும் கூட நாம் வற்புறுத்தி பெரும்பான்மை இன ஊழியர்களை அழைக்க வைக்கபடுகின்றோம். மரியாதையின் நிமித்தம் நாம் இவ்வாறு அழைக்கின்றோம் என்று யாராவது கூறினாலும், /// ம்ம் எனக்கும் உந்த அனுபவம் இருக்கு பாஸ் ... எந்தவித தகுதியுமே இல்லாதவனை எல்லாம் சேர் என்று கூப்பிட வேண்டும், ஆமிக்காரனை கூப்பிட்டா அவனுக்குள் எதோ ஒரு பெருமிதம் முகத்திலே பொங்கி வழியும் பாருங்கள்))

Anonymous said...
Best Blogger Tips

////எல்லாத் துறைகளிலும் முதன்மையான மொழி சிங்களம் என்று தானே கொண்டாடுகின்றார்கள். தமிழ்- இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் இலங்கையில் மூன்றாம் தலைமுறையினரிடையே (இப்போது சிறுவர்களாக உள்ளோர்) ஒரு தெளிவான புரிந்துணர்வினைக் கட்டியெழுப்பும் வண்ணம் ஆங்கில மொழியினைப் பொதுவான மொழியாக அறிவித்து நடை முறைப்படுத்த முடியாதா? /// வன்மையான கண்டனம் இந்த வரிகளுக்கு... எவனோ ஆங்கிலேயன் வது பரப்பிப்போட்டு போன மொழியை எதற்க்காக பொதுவான மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.. சிங்களம் முதன்மை படுத்துவதை எதிர்த்து ஆங்கில மொழியை ஏற்றுக்கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்..
ஆங்கிலம் என்பது எமக்கு இரண்டாம் மொழி இல்லை அது மூன்றாம் மொழி..

இதை தான் சொல்வார்கள் வேட்டிக்கு ஆசைபட்டு கோமணத்தையும் இழந்த கதை என்று... எமக்கு சிங்களம் வேண்டாம் தமிழ் மொழி தான் வேண்டும் என்று விட்டு இப்போ இரண்டும் இல்லாமல் மூன்றாவது ஒரு மொழியை ஏற்றுக்கொள்வது என்பது எப்பிடி சார்...???

தமிழ் மக்களுக்கு அவர்களின் தாய் மொழி தமிழே ..அதே போல பெரும்பானமையான முஸ்லீம் மக்களுக்கும் தாய் மொழியாக தமிழ் தான்... அப்பிடி இருக்க எதற்கு இன்னொரு மொழி..அவரவர் செறிவாக வாழும் பிரதேசங்களில் அவர்களின் தாய் மொழியில் அரச கருமங்கள் ஆற்றப்படுவதில் என்ன தப்பு...

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

மனசுக்கு வேதனையா இருக்குய்யா.....

Anonymous said...
Best Blogger Tips

பாஸ் இப்ப எங்க நாட்டிலே ஆங்கில மொழி மூலம் தங்கள் கல்வியை கற்க முண்டியடிப்பவர்களையும், அவ்வாறு கற்பதை பெருமையாக எடுத்துக்கொள்பவர்களையும் நினைக்க ரத்தக்கண்ணீரே வருகிறது...

ஆங்கிலம் என்பது அறிவு மொழியா என்ன?? அதுவும் ஒரு தொடர்பாடல் மொழியே அப்பிடி இருக்க எதுக்கு சார் தாய் மொழியை விடுத்து இன்னொரு மொழியில் தம் கல்வியை தொடருகிறார்கள் என்பது புரியாத புதிரே...

உண்மையை சொன்னால் இவ்வாறு ஆங்கில மொழி மூலம் கற்று எதிர்காலத்தில் வேலைதேடி இங்கிலாந்திலோ அமெரிக்காவிலோ குடியேறும் நோக்கம் தான் அடிப்படையாக இருக்கிறது..

மாலதி said...
Best Blogger Tips

உலக வரலாற்றின் விடுதலைப் போராட்டத்தை நாம் ஆய்வு நோக்குடன் பார்க்கும்போது எங்குமே வீரம் வீழ்ந்து போனதாக வரலாறு இல்லை விடுதலைப் போராட்டம் தோற்றதாக வரலாறு இல்லை இதற்க்கு நம்மிடையே பல சான்றுகள் உண்டு எங்கெல்லாம் இசுரேலியர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று கொன்றன kolaikkaaran இட்லர் இன்று அவன் ஒரு இசுறேலியன் என ஆய்வர்கள் கூறுகிறார்கள் . அதேபோல ராஜபக்சேவை அவனின் தனதையை பற்றி அருள் கூர்ந்து தேடுங்கள் சிங்களனுக்கு அவ்வளவு உடல்பலமும் இல்லை மூளை பலமும் இல்லை எனவே அவன்தந்தை தமிழனாக இருக்க போகிறார் . தமிழீழம் வெல்லும் வரலாறு அதை சொல்லும்

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@மாலதி///aid...
//உலக வரலாற்றின் விடுதலைப் போராட்டத்தை நாம் ஆய்வு நோக்குடன் பார்க்கும்போது எங்குமே வீரம் வீழ்ந்து போனதாக வரலாறு இல்லை விடுதலைப் போராட்டம் தோற்றதாக வரலாறு இல்லை இதற்க்கு நம்மிடையே பல சான்றுகள் உண்டு எங்கெல்லாம் இசுரேலியர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று கொன்றன kolaikkaaran இட்லர் இன்று அவன் ஒரு இசுறேலியன் என ஆய்வர்கள் கூறுகிறார்கள் . அதேபோல ராஜபக்சேவை அவனின் தனதையை பற்றி அருள் கூர்ந்து தேடுங்கள் சிங்களனுக்கு அவ்வளவு உடல்பலமும் இல்லை மூளை பலமும் இல்லை எனவே அவன்தந்தை தமிழனாக இருக்க போகிறார் . தமிழீழம் வெல்லும் வரலாறு அதை சொல்லு///

சகோதரி
இப்படி கதைத்து கதைத்துதான் ஈழத்தமிழன் இந்த நிலையில் இருக்கின்றான்..இனியாவது இந்தக்கதைகளை விட்டுத்தள்ளுங்கள்...அடுத்து எப்படி ஈழத்தமிழனின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்புவது எப்படி என்று சிந்திக்கவேண்டுமே தவிற...இந்தக்கதைகளால் எந்த பிரயோசனமும் எங்களுக்கு(ஈழத்தமிழன்)கிடைத்துவிடப்போவதில்லை.

மன்னிக்கவேண்டும் நிரூபன் பாஸ் சகோதரி இந்தப்பதிவுக்கு சம்மந்தம் இல்லாத கருத்துரையை கூறியதால் இந்தக்கருத்துக்கு நான் பதிலிடுகின்றேன்

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@கந்தசாமி. said...
////எல்லாத் துறைகளிலும் முதன்மையான மொழி சிங்களம் என்று தானே கொண்டாடுகின்றார்கள். தமிழ்- இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் இலங்கையில் மூன்றாம் தலைமுறையினரிடையே (இப்போது சிறுவர்களாக உள்ளோர்) ஒரு தெளிவான புரிந்துணர்வினைக் கட்டியெழுப்பும் வண்ணம் ஆங்கில மொழியினைப் பொதுவான மொழியாக அறிவித்து நடை முறைப்படுத்த முடியாதா? /// வன்மையான கண்டனம் இந்த வரிகளுக்கு... எவனோ ஆங்கிலேயன் வது பரப்பிப்போட்டு போன மொழியை எதற்க்காக பொதுவான மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.. சிங்களம் முதன்மை படுத்துவதை எதிர்த்து ஆங்கில மொழியை ஏற்றுக்கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்..
ஆங்கிலம் என்பது எமக்கு இரண்டாம் மொழி இல்லை அது மூன்றாம் மொழி..

இதை தான் சொல்வார்கள் வேட்டிக்கு ஆசைபட்டு கோமணத்தையும் இழந்த கதை என்று... எமக்கு சிங்களம் வேண்டாம் தமிழ் மொழி தான் வேண்டும் என்று விட்டு இப்போ இரண்டும் இல்லாமல் மூன்றாவது ஒரு மொழியை ஏற்றுக்கொள்வது என்பது எப்பிடி சார்...???

தமிழ் மக்களுக்கு அவர்களின் தாய் மொழி தமிழே ..அதே போல பெரும்பானமையான முஸ்லீம் மக்களுக்கும் தாய் மொழியாக தமிழ் தான்... அப்பிடி இருக்க எதற்கு இன்னொரு மொழி..அவரவர் செறிவாக வாழும் பிரதேசங்களில் அவர்களின் தாய் மொழியில் அரச கருமங்கள் ஆற்றப்படுவதில் என்ன தப்பு.////
இந்தக்கருத்துடன் நானும் உடன் படுகின்றேன்

Unknown said...
Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி மாப்ள...மொழி கற்றலுக்கும் திணிப்புக்குமிடையே உங்க சேதி உள்ளது...இதிலிருந்து ஒன்று புலனாவதை கண்டீரா...தமிழை ஏற்ப்பதை விட சிங்களத்தை ஏற்க்க தங்கள் மனம் இசைய வில்லை...ஏன்னெனில் அதை அடிமைத்தனம் என்கிறீர்....அப்படி இருக்க அடிமை மொழியினை(ஆங்கிலம்!) பொதுவாக கொள்ள சிங்களர்கள் எப்படி ஒத்துக்கொள்வர்...என்னய்யா இந்தியாவில் நடப்பதும் இதுதானே....அதிகப்படியாக பேசப்படும் இந்தியை ஒதுக்கித்தான் இன்று ஒதுக்கப்பட்டவராக தமிழன் இருக்கிறான்...அதை போலத்தான் இதுவும்...என் பின்னூட்டத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்!

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

சகோதரி "(F.NIHAZHA) F.நிஹாஷா அவர்களின் வலைப்பூ அருமையாக உள்ளது.
வாழ்த்துக்கள் பகிர்ந்த உங்களுக்கும் + அவர்களுக்கும்..

தனிமரம் said...
Best Blogger Tips

K.s.s.Rajh has left a new comment on the post "சிங்களவர்க்கு அடிமையாக வாழ்ந்து செத்தொழிவதா இலங்கை...": 

@மாலதி///aid...
//உலக வரலாற்றின் விடுதலைப் போராட்டத்தை நாம் ஆய்வு நோக்குடன் பார்க்கும்போது எங்குமே வீரம் வீழ்ந்து போனதாக வரலாறு இல்லை விடுதலைப் போராட்டம் தோற்றதாக வரலாறு இல்லை இதற்க்கு நம்மிடையே பல சான்றுகள் உண்டு எங்கெல்லாம் இசுரேலியர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று கொன்றன kolaikkaaran இட்லர் இன்று அவன் ஒரு இசுறேலியன் என ஆய்வர்கள் கூறுகிறார்கள் . அதேபோல ராஜபக்சேவை அவனின் தனதையை பற்றி அருள் கூர்ந்து தேடுங்கள் சிங்களனுக்கு அவ்வளவு உடல்பலமும் இல்லை மூளை பலமும் இல்லை எனவே அவன்தந்தை தமிழனாக இருக்க போகிறார் . தமிழீழம் வெல்லும் வரலாறு அதை சொல்லு///

சகோதரி
இப்படி கதைத்து கதைத்துதான் ஈழத்தமிழன் இந்த நிலையில் இருக்கின்றான்..இனியாவது இந்தக்கதைகளை விட்டுத்தள்ளுங்கள்...அடுத்து எப்படி ஈழத்தமிழனின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்புவது எப்படி என்று சிந்திக்கவேண்டுமே தவிற...இந்தக்கதைகளால் எந்த பிரயோசனமும் எங்களுக்கு(ஈழத்தமிழன்)கிடைத்துவிடப்போவதில்லை.

மன்னிக்கவேண்டும் நிரூபன் பாஸ் சகோதரி இந்தப்பதிவுக்கு சம்மந்தம் இல்லாத கருத்துரையை கூறியதால் இந்தக்கருத்துக்கு நான் பதிலிடுகின்றேன் 

Post a comment. 

Unsubscribe to comments on this post. 

Posted by K.s.s.Rajh to நாற்று at September 26, 2011 2:57 PM//
நானும் இதை வழி மொழிகின்றேன்  மாலதியின் கூற்று பிழையாகும்  அவர்கள் அறிவாளிகள் அதனால் தான் இத்தனையும் கச்சிதமாக செய்திருக்கின்றார்கள்!

செங்கோவி said...
Best Blogger Tips

//தமிழ்- முஸ்லிம் தலைவர்கள் புரிந்துணர்வோடு பிரிவினைகள் அற்ற ஓர் சமூகத்தினைத் தம் பழைய காழ்ப்புணர்வுகளைத் தூர வீசிக் கட்டியெழுப்ப பாடுபட வேண்டும். அப்போது தான் பலமான ஒரு சமூகமாகத் தமிழ் மக்கள் இனத்தால் தமிழர்கள் என்ற ரீதியில் தம் ஸ்திரத் தன்மையினை உலகினுக்கு எடுத்துரைக்க முடியும். //

உண்மை நிரூ..இன்னும் கடந்த காலத்திலேயே தேங்கிக்கிடக்காமல், ஒற்றுமையுடன் முன்னேறவேண்டிய கட்டாயம் நமக்குள்ளது.

செங்கோவி said...
Best Blogger Tips

//Yoga.s.FR said...
இனிய காலை(பகல்?)வணக்கம்,நிரூபன்!
//

தலைவரைக் காணோமேன்னு நான் அங்க தேடிக்கிட்டு இருக்கேன்..இங்க விவாதமேடையில் இருக்கிறாரா?

செங்கோவி said...
Best Blogger Tips

//தமிழ் முஸ்லிம் பாராளுமன்றப் பிரதி நிதிகள் ஒன்று சேர்ந்து இலங்கை மக்களின் தொடர்பாடலுக்குத் தேவையான ஒரு பொதுவான மொழியினை நடை முறைப்படுத்துவது தொடர்பில் ஆராய முடியாதா? //

இந்தக் கேள்விக்கு இலங்கையில் வாழ்ந்த/வாழும் பதிவர்கள் தான் நல்ல பதிலைச் சொல்ல முடியும். நானும் தெரிந்துகொள்ள ஆவலாய் இருக்கின்றேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

மீண்டும் அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,

இப் பதிவின் நோக்கம் தமிழுக்குப் பதிலாக இன்னோர் மொழியாக ஆங்கில மொழியினை அறிமுகப்படுத்துவது அல்ல. அரச கரும மொழியாக இருக்கும் பெரும்பான்மை இன மக்களின் பேச்சு மொழிக்குப் பதிலாகவும், இனங்களுக்கிடையே நல்லுறவினை ஏற்படுத்தும் வகையிலும் ஒரு பொது மொழியாக ஆங்கில மொழியினைக் கொண்டு வர வேண்டும் என்பது தான் இப் பதிவின் நோக்கம்.
அதுவும் ஆங்கில மொழியினை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று நான் ஒரு கருத்தினையும் முன் வைக்கவில்லை.

பின்னூட்டமிட்ட அன்பு உள்ளங்களே, மீண்டும் ஒரு தரம் மேலிருந்து கீழாக பத்தாவது பந்தியினை மீண்டும் ஒரு தரம் படித்து விட்டு, உங்களின் கருத்துக்களை முன் வைத்தால் இன்னும் மகிழ்வடைவேன் நான்.

//தமிழ் முஸ்லிம் பாராளுமன்றப் பிரதி நிதிகள் ஒன்று சேர்ந்து இலங்கை மக்களின் தொடர்பாடலுக்குத் தேவையான ஒரு பொதுவான மொழியினை நடை முறைப்படுத்துவது தொடர்பில் ஆராய முடியாதா? சிங்களத்தைக் கற்று அவர்களின் கலாச்சாரத்தினைப் பின் பற்றி வாழுகின்ற அடிமை நிலைக்கு எம் சந்ததிகளை இட்டுச் செல்வது தான் எங்கள் எல்லோரின் முன்னும் உள்ள கையாலாகத நிலையா? இந் நிலையினை ஜனநாயக வழியில் மாற்ற முடியாதா?
//

இங்கே நான் கேட்பது எம்மால் சாதிக்க முடியாது. எமது மூன்றாந் தலை முறை ஊடாக இனங்களுக்கிடையிலான நல்லுறவைப் பேணுகின்ற முறைக்கு, கரும மொழி என்று அலுவலகங்களில் சிங்களம் இருப்பதற்குப் பதிலாக ஆங்கிலத்தினை உருவாக்கிச் சாதிக்க முடியாதா?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜ.ரா.ரமேஷ் பாபு

சொந்த நாட்டில் அகதி போல் வாழ்வது கொடுமை??

என்னதான் செய்ய நினைகிறார்கள் தெரியவில்லை.. இன்று இவர்கள் கொடுக்கும் அழுத்தம் ஒரு நாள் வெடிக்கும்.. இவர்கள் அந்த பேரு வெடிப்பில் காணாமல் போய் விடுவர்..//

இப்படிச் சொல்லிச் சொல்லியும்,
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்று சொல்லியும் தான் எங்களின் கடந்த காலங்கள் நிறைவேறாத கனவுகளாகச் சிதைந்து போய் விட்டன நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@Prabu Krishna

என்ன சொல்ல எனத் தெரியவில்லை சகோ. இன்னும் நமக்கு நீதி இல்லை.//

ஆம் நண்பா..
அந்த நீதியினை இப்படி ஏதாவது ஓர் வழி மூலம் அடைய முடியாதா என்பது தான் என் ஆதங்கம்?

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

உலகில் பெரிய வலி சக மனிதன் காயப்படும்போதும் ஏதும் செய்ய இயலாமல் நாம் பார்த்துகொண்டிருப்பதே!
//

ஈழ மக்கள் மீதான உங்களின் பாசத்திற்குத் தலை வணங்குகிறோம் பாஸ்..
உங்களின் உதவிகளையோ, உங்கள் ஆதரவினையோ தமிழ் மக்களைச் சென்று சேர ஆட்சியாளர்கள் விட மாட்டார்கள் என்பது தான் வேதனையான விடயம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh
இலங்கையில் பேசப்படுகின்ற மொழிகளில் தமிழ்,சிங்களம்,ஆங்கிலம்,ஆகியன உள்ளது ஆனால் ஆங்கிலத்தை தாய் மொழியாகக்கொண்ட மக்கள் யாரும் இலங்கையில் இல்லை...மூன்றாம் தரப்பு செயற்பாடுகளுக்குத்தான் ஆங்கிலம் பயன் படுத்தப்படுகின்றது.சாதாரன சாமன்ய மக்களில் எத்தனை பேருக்கு இலங்கையில் ஆங்கிலம் தெரியும்.சகோதரமொழி,தமிழ் மொழியுடன் ஓப்பிடும் போது அதன் வீதாசாரம் மிகக்குறைவே,எனவே அதிகளவு பேருக்கு தெரியாத ஒரு மொழியை நடைமுறைப்படுத்துவதைவிட அதிகளவு மக்களால்(இலங்கையில்)பேசப்படும் சகோதர மொழியை..பேசுவதில் தவறு ஏதும் இல்லை என்பது என் கருத்து இது என் கருத்து மட்டுமே.....தவறாக இருந்தால் மன்னிக்கவும் பாஸ//

உங்கள் கருத்தில் தவறில்லை பாஸ்..

நான் இங்கே முன் வைத்திருப்பது காலாதி காலமாக எம் மூன்றாந் தலை முறையினரையும், சிங்களம் மட்டும் கரும மொழி என்ற கொள்கையின் கீழ் அடிமைகளாக நடாத்த விரும்புகின்றோமா?
இல்லைத் தானே...
இப்போது தொடக்கம் எம் சிறுவர்களுக்குப் பொதுவான ஒரு மொழியினைத் தொடர்பாடலுக்கு அமுல்படுத்தி அவர்களின் எதிர்காலத்தினையாவது வளமாக்கலாமே..

நான் இங்கே மூன்றாந் தலை முறை பற்றித் தான் பகிர்ந்திருக்கிறேன். இலங்கையில் உள்ள வயோதிகர்கள் யாரும் ஆங்கிலம் கற்க வேண்டும் என்று சொல்லவில்லை பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்

வணக்கம் அண்ணா இன்று திங்கள்கிழமை இப்படி ஒரு வாசகத்தை தமிழர்கள் மற்றவர்களிடம் சொல்லாமல் போவது ஏன்?!//

அது தமிழனின் பிறவியில் ஊறிய குணம் பாஸ்.. அதாவது ஏனைய மனிதர்களைச் சரி நிகர் சமனாக மதிக்கும் பண்பிலும், பழக்க வழக்கத்திலும் நாம் எப்போதும் பின் தங்கித் தான் இருக்கிறோம். அதன் ஒரு வடிவம் தான் இதுவும். அது தான் வணக்கம் நன்றி என்று எல்லோரும் உரையாடுவதில்லை.

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழன் வர்த்தகம்

எனக்கு ஒரு சந்தேகம் கிழக்கு மாகாண திருகொனமலைல் இந்துக்கள் பெருபான்மை இழந்து விட்டனரா
திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களும் பாராளுமன்றமும்///

பாஸ் மாகாண மாவட்ட ரீதியில் பிரித்துப் பார்ப்பதை விடுத்து, தற்போதைய சூழலில் தமிழன் தனது தனித் தன்மையினை மெது மெதுவாக இழந்து கொண்டே வருகின்றான் என்று தான் எண்ணத் தூண்டுகின்றது அண்மைக்கால விரும்பத்தகாத செயற்பாடுகள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh
ஏன் என்றால் இங்கு பொதுவான மொழி என்று நீங்கள் குறிப்பிடுவது ஆங்கிலத்தைதான் வேறு எந்த பொதுவான மொழியும் இலங்கையில் பேசப்படுவது இல்லை...ஆனால் சாதாரன சாமன்ய மக்களில் பலருக்கு ஆங்கிலம் தெரியாது...எனவே ஆங்கிலத்தை அவர்கள் கற்றுக்கொண்டு பேசிவதைவிட...சமூகத்தில் பேசப்படும் சகோதர மொழியை பேசுவது அவர்களுக்கு இலகுவானதாக இருக்கின்றது எனவே சகோதர மொழிபேசப்படுவதில் தவறு ஏதும் இல்லை.இதுவும் என் கருத்து மட்டுமே//

பாஸ்..மொழியினை அறிந்து கொள்வது தவறில்லை. ஆனால் அலுவலகங்களிலும், ஏனைய வேலையிடங்களிலும் சிங்களம் அறிந்தால் தான் சீவியம் நடத்தலாம் எனும் நிலையல்லவா இருக்கின்றது.

இதற்கு உங்கள் பதில் என்ன?

ஆங்கிலத்தையோ அல்லது ஒரு பொதுவான மொழியினையோ உடனடியாக அறிமுகப்படுத்தச் சொல்லிக் கேட்கவில்லையே. அனைத்து மக்களுக்கும் ஏற்றாற் போல ஒரு பொதுவான மொழியினைத் தானே அரச கரும மொழியாக எம் மூன்றாந் தலை முறையினூடாக உருவாக்கும் வண்ணம் கேட்கின்றேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்
நீங்கள் சொல்வது போல் பொதுமொழியாக மீண்டும் ஆங்கிலம் வந்தால் இன்னும் சிறப்பான வினைத்திரன் மிக்க சமுதாயம் உருவாகும் அதைச் செய்ய சட்டம் வழி வகுக்காது//

காத்திரமான கருத்துக்கள் பாஸ்...

இதனைச் செய்யச் சட்டம் இடமளிக்காவிட்டால், அதற்கு நாம் என்ன செய்யலாம்? சொல்லுங்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்
இப்போ புலத்து தமிழர்கள் எவ்வளவு மொழிகள் பேசுகிறார்கள் ஏன்..!? அந்தந்த நாட்டில் உள்ளவர்களை அவர்களை தங்கள் மொழியைத்தான் பேசுன்னு கட்டாயப்படுத்தினார்களா..??ஐரோபிய பாராளு மன்றத்தில் அவர்களின் சொந்த மொழியில்தானே உரையாற்றுகிறார்கள்.. தொழில் நிமிர்த்தமாக எவ்ளவு பேர் சிங்களம் பேசுகிறார்கள்.. கட்டாயப்படுத்தி எதையுமே சாதிக்கமுடியாது...!!//

நல்ல கருத்துக்கள் காட்டான் பாஸ்,

வலிந்து ஒரு மொழியினைத் திணிப்பதனை எவ்வாறு எதிர் கொள்ளலாம்?
இதற்கு மாற்றீடாகத் திட்டங்கள் எவற்றையாவது எமது வருங்காலச் சந்ததியாக இருக்கப் போகின்ற சிறுவர்களுக்கு வழங்கும் வண்ணம் உங்களிடம் ஆலோசனைகள் ஏதாவது இருக்கிறதா பாஸ்?

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh

மாமா யாரும் சிங்கள மொழியை கட்டாயம் கற்கவேண்டும் என்று இங்கே திணிக்கவில்லை..
நாம்தான் சகோதர மொழிகற்றால் எதோ பாரிய தவறுபோல ஒரு விம்பத்தை உருவாக்கிவைத்து இருக்கின்றோம்...தென்னிலங்கையில் வாழும் பெரும்பகுதி தமிழர்களுக்கு சகோதர மொழி பேசத்தெரியும் ஆனால் வன்னியில் வாழ்ந்த மக்களுக்கு சகோதர மொழி பேசுகின்ற சூழ் நிலை இல்லை என்பதால் அவர்களில் பெரும்பாலானோருக்கு சகோதர மொழி பேசத்தெரியாது..ஆனால் இபோது பலர் சரளமாக பேசுகின்றார்கள்..//

மாப்பிளே, தமிழர்கள் பணிந்து போக அல்லது சிங்கள மொழியினைக் கற்கத் தயாராக இருக்கின்றார்கள் என்று நீங்கள் சொல்வதனை ஏற்றுக் கொண்டால்,
எத்தனை சத வீத சிங்கள மக்கள் சிங்கள மொழ்யினைக் கற்பதற்குத் தயாராக இருப்பார்கள்?

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்
ஆங்கிலம் வழிக் கல்வியை கற்பித்தார்கள் இது உண்மையான சம்பவம் சகோ! அன்று அதையும் தொட்டுப்பார்க்கத் துனிந்தவன் மொழியைக் கற்று வேலையில் சேர்ந்தான் வீட்டில் படிக்க வேண்டாம் என்று தடுத்தவனின் பிள்ளை இன்று சாதாரன சங்கக் கடையில் மனேச்சர் வேலை செய்கின்றான் இந்த பிரிவினையை நம்மூத்தோரும் சேர்ந்து தானே ஊக்கிவித்தார்கள்//

ஓக்கே சகோதரம்,
எம் கடந்த காலத்தில் மூத்தோர்கள் மூலம் பல வரலாற்றுத் தவறுகள் நிகழ்ந்திருக்கின்றன. அதனை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் எத்தனை காலத்திற்கு நாம் எல்லோரும் மூத்தோட் முட்டுக்கட்டை போட்டதால், இனியும் எமது சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்கப் போகின்றோம்?

எம் வருங்காலச் சந்ததியின் மனங்களையாவது வெல்லுகின்ற பக்குவம் எமக்கு இல்லையா? இதற்கான திட்டங்களை நாம் நினைத்தால். எம் தமிழ் எம்பிக்கள் நினைத்தால் அறிமுகப்படுத்த முடியாதா?

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.
நிரூபன் பாஸ் என் மேல கோபம் ஏதும் இல்லையே ))

கொஞ்ச நேரம் கழிச்சு விவாதத்துக்கு வாறன் இப்ப போறான்..//

அடிங் கொய்யாலே..

நீங்க போட்ட ஆன்மீகப் பதிவில் அதிகமாகச் சொல்லும் அளவிற்கு எனக்கு நேரம் அமையவில்லை.
மன்னிக்கவும்
ஏன் நான் கோபிக்கனும்..

மவனே பிச்சுப் புடுவேன், பிச்சு.
.

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh
மிகச்சரியானதே எதையும் கட்டாயப்படுத்தி திணிக முடியாது..ஆனால் ஒரு நாட்டின் அரசகரும மொழியை அந்த நாட்டுமக்கள் கற்றுக்கொள்வதில் தவறு ஏது இல்லை(அப்பாடா செம்பு நெளிவில் இருந்து தப்பிச்சாச்சு)//

ஸப்பா...முடியலையே..

தொழில் நிமித்தம் மொழி கற்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி நான் இங்கே பேசவில்லை.
இனங்களுக்கிடையேயான புரிதலை உருவாக்குவதற்கு ஓர் பொதுவான மொழி வேண்டும் அல்லவா.

அது தொடர்பாகத் தான் பதிவில் கேள்விகளை முன் வைத்திருக்கிறேன் பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@M.R

வேதனையான விசயம் தான் நண்பரே சம்பந்த பட்டவர்கள் உணர வேண்டுமே//

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்
நீங்கள் எதிர் பார்ப்பது போல் ஆங்கிலம் பொதுமொழியாகினால்(ஆகாது) இன்னும் நாட்டை வேகமாக வினைத்திரனுடன் செயல்படலாம் அதற்கு அந்தகல்வியில் போதிய புலமை/தகமை வளம் தற்போது நாட்டில் இல்லை என்பேன் அதற்கும் நாம் வெளிநாட்டைத்தான் நம்பி இருக்கனும் பாஸ் பிறகும் இன்னொரு அடிமைத்தனம்தானே//

பாஸ்..அப்படீன்னா ஆங்கிலம் பொது மொழியாக உள்ள சிங்கப்பூர் மேற்குலகிற்கு அடிமையாகவா இருக்கிறது?

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்

என்னையா இண்ட்லி பட்டையில் கோளாரா! இல்லை அமலாபாலுடன் டூயட்டா????//

இல்ல பாஸ்..
இண்ட்லியில் ஏதோ திருத்த வேலைகள் செய்கிறார்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Mohamed Faaique

K.s.s.Rajh உடைய கருத்தே என் கருத்தும்... நடு நிலமையாகவே கர்த்துக்களை கூறி வருகிறார்..//

நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@suryajeeva

விழிப்புணர்வு ஒன்றே நிதர்சனம், அரசு தூங்குவது போல் நடிக்கும் ஆகையால் எழுப்ப முடியாது//

உங்களின் வருகைக்கு நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.
தமிழர்களை அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவ படுத்தும் தலைமை கிழக்கு மாகாணத்தில் இருந்தே உருவாக வேண்டும்.. அப்போது தான் இந்த பிரதேசவாதம் மற்றும் தமிழர்களுக்கிடையில் இருக்கிற தாழ்வு மனப்பான்மை என்பன நீங்க வழிவகை செய்யும். ஆனால் அது நடைமுறையில் சாத்தியமா என்பது கேள்விக்குறியே!!/

நல்லதோர் கருத்து பாஸ்..

தமிழர்களின் உணர்வுகளையும், தற்கால யதார்த்த அரசியலையும் புரிந்து கொண்டு உங்களின் கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.
வன்மையான கண்டனம் இந்த வரிகளுக்கு... எவனோ ஆங்கிலேயன் வது பரப்பிப்போட்டு போன மொழியை எதற்க்காக பொதுவான மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.. சிங்களம் முதன்மை படுத்துவதை எதிர்த்து ஆங்கில மொழியை ஏற்றுக்கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்..
ஆங்கிலம் என்பது எமக்கு இரண்டாம் மொழி இல்லை அது மூன்றாம் மொழி..//

பாஸ்..

சிங்கள மொழியினை, தமிழ் மொழியினைப் புறக் கணித்து மூன்றாம் மொழியாக ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தச் சொல்லி நான் சொல்லவில்லை.

அரச கரும மொழியாகச் சிங்களம் இருக்கும் நிலைக்கும், இனங்களுக்கிடையேயான தொடர்பாடலை விருத்தியாக்கும் நோக்கிலும் தான் ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தலாம் என்று சொன்னேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.
தமிழ் மக்களுக்கு அவர்களின் தாய் மொழி தமிழே ..அதே போல பெரும்பானமையான முஸ்லீம் மக்களுக்கும் தாய் மொழியாக தமிழ் தான்... அப்பிடி இருக்க எதற்கு இன்னொரு மொழி..அவரவர் செறிவாக வாழும் பிரதேசங்களில் அவர்களின் தாய் மொழியில் அரச கருமங்கள் ஆற்றப்படுவதில் என்ன தப்பு.//

இந்த லாஜிக் ஓக்கே பாஸ்..

ஆனால் தென்னிலங்கைப் பகுதிகளில் தமிழ் தெரியாதோர் படும் அவலங்களை அறிந்த பின்னரும், தொடர்ந்தும் சிங்கள மொழியினை அரச கரும மொழியாக வைத்திருக்கச் சொல்கிறீர்களா?

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ

மனசுக்கு வேதனையா இருக்குய்யா.....//

என்ன செய்ய,

தமிழனின் நிலை இது தானே...

தனிமரம் said...
Best Blogger Tips

நிரூபன் has left a new comment on the post "சிங்களவர்க்கு அடிமையாக வாழ்ந்து செத்தொழிவதா இலங்கை...": 

@தனிமரம்
நீங்கள் எதிர் பார்ப்பது போல் ஆங்கிலம் பொதுமொழியாகினால்(ஆகாது) இன்னும் நாட்டை வேகமாக வினைத்திரனுடன் செயல்படலாம் அதற்கு அந்தகல்வியில் போதிய புலமை/தகமை வளம் தற்போது நாட்டில் இல்லை என்பேன் அதற்கும் நாம் வெளிநாட்டைத்தான் நம்பி இருக்கனும் பாஸ் பிறகும் இன்னொரு அடிமைத்தனம்தானே//

பாஸ்..அப்படீன்னா ஆங்கிலம் பொது மொழியாக உள்ள சிங்கப்பூர் மேற்குலகிற்கு அடிமையாகவா இருக்கிறது?
/:/

 பாஸ் நான் சொல்ல வந்தது மொழியை கற்பிக்க இன்னொரு நாட்டில் தங்கியிருக்கும் நிலையை என்னி!
நம்நாட்டில் ஆங்கிலம் புலமைமிக்க (உங்களைப்போல்)பண்டிதர்கள்/மனிகள் எத்தனை பேர் இருக்கின்றார்கள்!
சிங்கப்பூர் அடிமையில்லை சகோ! 

நிரூபன் said...
Best Blogger Tips

@மாலதி
ஆமா நல்லாத் தானே போய்க் கிட்டிருக்கு.

தமீழப் போர் வெல்லுமா இல்லைத் தோற்குமா என்று நான் இங்கே விவாதம் வைக்கவில்லையே சகோதரி.

உங்களின் புரிந்துணர்விற்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh

மன்னிக்கவேண்டும் நிரூபன் பாஸ் சகோதரி இந்தப்பதிவுக்கு சம்மந்தம் இல்லாத கருத்துரையை கூறியதால் இந்தக்கருத்துக்கு நான் பதிலிடுகின்றேன்//

இதில் தவறேதும் இல்லை பாஸ்..
நீங்கள் சரியான கருத்தினைத் தான் சொல்லியிருக்கிறீங்க.

அம்பலத்தார் said...
Best Blogger Tips

நிரூபன், அடிக்கடி சமுதாய அக்கறைகொண்ட பதிவுகளாகப் போடுகிறீர்கள். வாழ்த்துக்கள்

தனிமரம் said...
Best Blogger Tips

@செங்கோவி ஐயா சொன்னது
ு//தமிழ் முஸ்லிம் பாராளுமன்றப் பிரதி நிதிகள் ஒன்று சேர்ந்து இலங்கை மக்களின் தொடர்பாடலுக்குத் தேவையான ஒரு பொதுவான மொழியினை நடை முறைப்படுத்துவது தொடர்பில் ஆராய முடியாதா? //

இந்தக் கேள்விக்கு இலங்கையில் வாழ்ந்த/வாழும் பதிவர்கள் தான் நல்ல பதிலைச் சொல்ல முடியும். நானும் தெரிந்துகொள்ள ஆவலாய் இருக்கின்றேன்.
September 26, 2011 3:53 PM
 ஐயா அது எப்போதும் முடியாது நான் எக்கேடு கெட்டாலும் எதிரிக்கு மூக்குப் போகனும் என்று  என்னும் பாராளமன்ற சேவகர்கள் இருக்கும் வரை நிச்சயம் முடியாது(சிறுபான்மை உறுப்பினர்கள்) அவர்களை எப்படி கோவனத்தை உருவளாம் என்று ஆட்சியாளர்கள் சிங்கம்களுக்கு சித்துவேலை  நல்லாத் தெரியும் ! இவர்கள் விலைபோகும் கறுப்பாடுகள்!

தனிமரம் said...
Best Blogger Tips

தொலைநோக்குப் பார்வை இவர்களிடம் இல்லை.பல   எம்பிமார்  ஐரோப்பாவை சுற்றிப்பார்த்தவர்கள்( கொட்டைபோட்டவர்கள்) இங்கு இருக்கும் தொலைநோக்குத் திட்டங்களை பார்த்தும் வாய் மூடிக்கொண்டு இருப்பது ஏன் அவர்களுக்கு முன்னேற்றம் பற்றி சிந்திக்கும் நிலையில் இல்லை முன்னால் எத்தனை பெட்டி வரும் பின்னால் எத்தனை குட்டி(மதுபானம்) என்றுதான் கணக்குப் போடத்தெரியும்! 

அம்பலத்தார் said...
Best Blogger Tips

நீங்கள் சொல்லி ஆகப்போறது ஒன்றும் இல்லையென ஆதங்கப்படத்தேவையில்லை. இராமனுக்கு அணைகட்ட அணிலும் உதவியதுபோல நாம் ஒவ்வொருவரும் செய்யும் இதுபோன்ற சின்னச் சின்ன விடயங்களும் இலக்கு நோக்கிய எமது நகர்வுகளிற்கு வலுச்சேர்க்கும்

தனிமரம் said...
Best Blogger Tips

செங்கோவி ஐயா சொன்னது
ு//தமிழ் முஸ்லிம் பாராளுமன்றப் பிரதி நிதிகள் ஒன்று சேர்ந்து இலங்கை மக்களின் தொடர்பாடலுக்குத் தேவையான ஒரு பொதுவான மொழியினை நடை முறைப்படுத்துவது தொடர்பில் ஆராய முடியாதா?/
நிச்சயம் முடியாது ஐயா யாரின் கோவனத்தையும் கோட்டையும் கிழிக்கத்தான் இவர்கள் முண்டியடிப்பார்கள் அதிகம் போனால் பின்னால் பிரதேசவாதம் இனவாதம், சாதியம் என்று ஒரு வட்டத்துள்தான் கும்மியடிப்பார்கள் இவர்களை வேவுபார்க்கும் பெருன்பான்மை ஆட்சியாளர்கள் பின் நல்ல கவனிப்பு கொடுப்பார்கள் பதிவு இன்னும்பல சொல்லலாம் செங்கோவி ஐயா!

shanmugavel said...
Best Blogger Tips

அழுத்தமான பதிவு நிரூபன்.காலம் மாறும்.அதற்கு இது போன்ற கவன ஈர்ப்பு எழுத்துக்கள் அவசியம்.தொடர்ந்து செல்லுங்கள் சகோ!

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
Best Blogger Tips

ரொம்ப முக்கியமான ஒரு பதிவு போட்டிருக்கீங்க, அமைதியா படிச்சிட்டு, அப்புறமா கருத்து சொல்றேன்.. மறக்காம பதில் போட்டுடுங்க

நிரூபன் said...
Best Blogger Tips

@விக்கியுலகம்

பகிர்வுக்கு நன்றி மாப்ள...மொழி கற்றலுக்கும் திணிப்புக்குமிடையே உங்க சேதி உள்ளது...இதிலிருந்து ஒன்று புலனாவதை கண்டீரா...தமிழை ஏற்ப்பதை விட சிங்களத்தை ஏற்க்க தங்கள் மனம் இசைய வில்லை...ஏன்னெனில் அதை அடிமைத்தனம் என்கிறீர்....அப்படி இருக்க அடிமை மொழியினை(ஆங்கிலம்!) பொதுவாக கொள்ள சிங்களர்கள் எப்படி ஒத்துக்கொள்வர்...என்னய்யா இந்தியாவில் நடப்பதும் இதுதானே....அதிகப்படியாக பேசப்படும் இந்தியை ஒதுக்கித்தான் இன்று ஒதுக்கப்பட்டவராக தமிழன் இருக்கிறான்...அதை போலத்தான் இதுவும்...என் பின்னூட்டத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்!//

உங்கள் கருத்துக்களை நீங்கள் சொல்வதற்கு உரிமை இருக்கிறது பாஸ்.
இதில் மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டிய அவசியல் இல்லை.

பாஸ்..சிங்களத்தை வலிந்து ஆட்சியாளர்களே திணிக்கிறார்கள், பௌத்த கோயில்களைத் தமிழ்ப் பகுதிகளில் ஆட்சியாளர்களே வலிந்து உருவாக்குகிறார்கள். அப்படியான சூழ்நிலையினை எவ்வாறு சொல்வது?

இதுவும் ஓர் அடிமைத் தனம் தானே பாஸ். மொழியினைக் கற்பது வேறு. மக்களிடையே இனத்துவேச அடிப்படையில் பிணக்குகள்- வேறுபாடுகள் காணப்படும் போது எப்படி இன்னோர் மொழியினை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியில் உள்ளோர் கூற முடியும்?

நிரூபன் said...
Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!
சகோதரி "(F.NIHAZHA) F.நிஹாஷா அவர்களின் வலைப்பூ அருமையாக உள்ளது.
வாழ்த்துக்கள் பகிர்ந்த உங்களுக்கும் + அவர்களுக்கும்..//

ரொம்ப நன்றி மச்சி...

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி
உண்மை நிரூ..இன்னும் கடந்த காலத்திலேயே தேங்கிக்கிடக்காமல், ஒற்றுமையுடன் முன்னேறவேண்டிய கட்டாயம் நமக்குள்ளது//

ஆமாம் பாஸ்..

இதற்கேற்றாற் போலத் தான் இப் பதிவினை எழுதியுள்ளேன்.

நன்றி பாஸ்.

Anonymous said...
Best Blogger Tips

///தனிமரம் said...


பாஸ் நான் சொல்ல வந்தது மொழியை கற்பிக்க இன்னொரு நாட்டில் தங்கியிருக்கும் நிலையை என்னி!
நம்நாட்டில் ஆங்கிலம் புலமைமிக்க (உங்களைப்போல்)பண்டிதர்கள்/மனிகள் எத்தனை பேர் இருக்கின்றார்கள்!
சிங்கப்பூர் அடிமையில்லை சகோ! ////

ஹஹஹா ஏனுங்கோ நேசன் அண்ணா நீங்கள் எப்பவுமே இப்படி தான் காமெடி பண்ணுவிங்களா ...

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்
பாஸ் நான் சொல்ல வந்தது மொழியை கற்பிக்க இன்னொரு நாட்டில் தங்கியிருக்கும் நிலையை என்னி!
நம்நாட்டில் ஆங்கிலம் புலமைமிக்க (உங்களைப்போல்)பண்டிதர்கள்/மனிகள் எத்தனை பேர் இருக்கின்றார்கள்!
சிங்கப்பூர் அடிமையில்லை சகோ!//

அடிங்க்..............

மாற்றங்களும், பழையன கழிந்து புதியன உருவாக்கம் பெறுவதும் ஒரே நாளில் வருவதில்லை பாஸ்..

ஆகவே ஆங்கிலமோ, அல்லது பொதுவான மொழியோ அறிமுகப்படுத்தப்படும் போது நிச்சயமாக காலவோட்டத்தில் எம் மக்களே அதனைக் கற்பிப்பதில் பாண்டித்தியம் பெறுவார்கள்.
பிரித்தானியர்களின் காலத்தின் பின்னர் இலங்கையில் இன்று வரை ஆங்கில ஆசிரியர்கள் கை தேர்ந்தவர்களாக- பாண்டித்தியம் பெற்றவர்களாக இருப்பதனை நீங்கள் அறியவில்லையா பாஸ்?

நிரூபன் said...
Best Blogger Tips

@அம்பலத்தார்

நிரூபன், அடிக்கடி சமுதாய அக்கறைகொண்ட பதிவுகளாகப் போடுகிறீர்கள். வாழ்த்துக்கள்//

உங்களைப் போன்ற பெரியவர்களின் அன்பும் ஆதரவும், ஆசியும் தான் இதற்கெல்லாம் காரணம் ஐயா.

மிக்க நன்றி ஐயா.

Anonymous said...
Best Blogger Tips

////ஆனால் தென்னிலங்கைப் பகுதிகளில் தமிழ் தெரியாதோர் படும் அவலங்களை அறிந்த பின்னரும், தொடர்ந்தும் சிங்கள மொழியினை அரச கரும மொழியாக வைத்திருக்கச் சொல்கிறீர்களா?/// அது தான் சொல்லுகிறான் பாஸ். மூன்றாம் மொழியை கற்று தேர்வதை விட அருகில் இருக்கிற இரண்டாம் மொழியை கற்றால் என்ன??

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்

ஐயா அது எப்போதும் முடியாது நான் எக்கேடு கெட்டாலும் எதிரிக்கு மூக்குப் போகனும் என்று என்னும் பாராளமன்ற சேவகர்கள் இருக்கும் வரை நிச்சயம் முடியாது(சிறுபான்மை உறுப்பினர்கள்) அவர்களை எப்படி கோவனத்தை உருவளாம் என்று ஆட்சியாளர்கள் சிங்கம்களுக்கு சித்துவேலை நல்லாத் தெரியும் ! இவர்கள் விலைபோகும் கறுப்பாடுகள்!//

பாஸ்..

ஆட்சியாளர்களைக் குறை சொல்லி, நாம் எல்லாம் எத்தனை நாளைக்கு காலத்தைக் கடத்தப் போகின்றோம்?

முதலில் ஆட்சியாளர்களை மாற்ற முடியாதா? அவர்களின் சிந்தனைகளை மாற்ற வேண்டாமா என்று சிந்திக்கவே முடியாதா பாஸ்?

நிரூபன் said...
Best Blogger Tips

@அம்பலத்தார்
நீங்கள் சொல்லி ஆகப்போறது ஒன்றும் இல்லையென ஆதங்கப்படத்தேவையில்லை. இராமனுக்கு அணைகட்ட அணிலும் உதவியதுபோல நாம் ஒவ்வொருவரும் செய்யும் இதுபோன்ற சின்னச் சின்ன விடயங்களும் இலக்கு நோக்கிய எமது நகர்வுகளிற்கு வலுச்சேர்க்கும்//

உங்களின் புரிந்துணர்விற்கும், கருத்துக்களுக்கும் நன்றி ஐயா.

நிரூபன் said...
Best Blogger Tips

@shanmugavel

அழுத்தமான பதிவு நிரூபன்.காலம் மாறும்.அதற்கு இது போன்ற கவன ஈர்ப்பு எழுத்துக்கள் அவசியம்.தொடர்ந்து செல்லுங்கள் சகோ!//

நன்றி பாஸ்..

Anonymous said...
Best Blogger Tips

////தமிழ் முஸ்லிம் பாராளுமன்றப் பிரதி நிதிகள் ஒன்று சேர்ந்து இலங்கை மக்களின் தொடர்பாடலுக்குத் தேவையான ஒரு பொதுவான மொழியினை நடை முறைப்படுத்துவது தொடர்பில் ஆராய முடியாதா? /// இருக்கிறதே இரண்டு மொழி இதில் மூன்றாவது மொழியை பொதுவான தொடர்பாடல் மொழியாக ஆக்குவதைவிடுத்து.. தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் சிங்களத்தையும், சிங்களத்தை தாய் மொழியாக கொண்டவர்கள் தமிழையும் பள்ளி காலம் முதலே இரண்டாம் மொழியாக கற்றலை கட்டாயமாக்கினால் பிரச்சனை தீர்ந்ததே..

இங்கே நீங்கள் சொன்னது போல மூன்றவதாக ஒரு மொழியை தொடர்பாடல் மொழியாக்குவதன் மூலம் வருங்காலத்தில் அம் மொழியிலே அதிகம் நாட்டமீட்டுவதற்க்கான வாய்ப்பாக அமைந்துவிடும்.. அத்தோடு தங்களின் தாய்மொழியை விடுத்து ஆங்கிலத்திலே கல்வி கற்பதற்கு வழிவகுக்கும்.. சொல்ல போனால் எதிர்காலத்தில் தமிழ் மொழியின் இடத்தை அதே ஆங்கிலம் பிடித்துவிடும் - தமிழ் இரண்டாம் மொழியாகி விடும்..

இப்பவே தமிழில் பாதி ஆங்கிலம் கலந்து கொல்லுகிறோம்.. இதில் ஆங்கிலம் என்பது தொடர்பாடல் மொழியாக கட்டாயபடுத்தினால் எதிர்காலத்தில் தமிழின் நிலையை எண்ணி பாருங்கள்...

நிரூபன் said...
Best Blogger Tips

@Dr. Butti Paul

ரொம்ப முக்கியமான ஒரு பதிவு போட்டிருக்கீங்க, அமைதியா படிச்சிட்டு, அப்புறமா கருத்து சொல்றேன்.. மறக்காம பதில் போட்டுடுங்க//

அவ்....பதில் எல்லாம் போட்டு முடிகிறது பாஸ்.

Anonymous said...
Best Blogger Tips

நிரூபன்////பாஸ்..

ஆட்சியாளர்களைக் குறை சொல்லி, நாம் எல்லாம் எத்தனை நாளைக்கு காலத்தைக் கடத்தப் போகின்றோம்?

முதலில் ஆட்சியாளர்களை மாற்ற முடியாதா? /// ஆமாம் பாஸ் ..உலகிலே படிக்காதவன் எல்லாம் பாராளு மன்றத்தை அலங்கரிக்கும் கேவலம் ஆசியநாடுகளில் தான் நிகழ்கிறது...

தமிழன் வர்த்தகம் said...
Best Blogger Tips

இலங்கை தமிழர்கள் மத ரீதியான வேறுபாட்டை உணர்தேன் சமிபத்தில் நடத்த பரிசைல் மாகாண ரீதியாக வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு உடகங்கள் வாழ்த்து தெரிவித்தன
அனல் மட்டகளப்பில் மாகாணத்தில் நடத்த பரிசைல் முதல் இடம் பெற்ற மாணவிக்கு தமிழ் உடகங்கள் வாழ்த்து தெரிவிக்கவில்லை கரணம் இந்த மாணவி இஸ்லாமிய சமுகத்தை சேர்த்தவள் ஏன் இந்த வேற்றுமை

இவ்வாண்டு நடைபெற்று முடிந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 190 புள்ளிகளை பெறுவதற்கு காரணமாகயிருந்த அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன் என ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாமிடத்தைப்பெற்றுள்ள மீராபாலிகா மகா வித்தியாலய மாணவி ரஸுல் பாத்திமா ஸீனா காத்தான்குடி இன்போவுக்கு தெரிவித்தார்.
இது தொடர்பாக இந்த மாணவி காத்தான்குடி இன்போவுக்கு வழங்கிய பேட்டியின் காணொளியை இங்கு தருகின்றோம்.

http://www.youtube.com/watch?v=eoQqgI4w7jU&feature=player_embedded

Anonymous said...
Best Blogger Tips

சிங்கப்பூரில் நான்கு மொழிகள் ஆட்சியில் இருக்கிறது அதில் தமிழ் மற்றும் ஆங்கிலமும் அடங்குகிறது..அங்கே மொழி புறக்கணிப்பு இல்லை பாஸ்..

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@நிரூபன்
மாப்பிளே, தமிழர்கள் பணிந்து போக அல்லது சிங்கள மொழியினைக் கற்கத் தயாராக இருக்கின்றார்கள் என்று நீங்கள் சொல்வதனை ஏற்றுக் கொண்டால்,
எத்தனை சத வீத சிங்கள மக்கள் சிங்கள மொழ்யினைக் கற்பதற்குத் தயாராக இருப்பார்கள்////

நீங்கள் மாறி சொல்கின்றீர்கள் சிங்கள மக்கள் ஏன் சிங்கள மொழியை கற்கவேண்டும்....என்ன சண்டே----- முறியலையா?அட நித்திரையை சொன்னன் பாஸ்

உங்கள் கேள்வி எத்தனை சிங்கள மக்கள் தமிழ் மொழியை கற்பதற்கு தயாராக இருப்பார்கள் இதானே?இது கேள்வி என்றால்

தென்னிலங்கையில் வாழும் மக்களுக்கு.தமிழ் மொழியை கற்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை ஆனால் தமிழர் வாழும் பகுதிகளில் குறிப்பாக வன்னியில் கடமையாற்றும் இராணுவத்தினர்,பொலிசார்,சரளமாக தமிழ் மொழியைபேசுகின்றார்கள்..எனவே தமிழ் பகுதிகளில் கடமையாற்றுபவர்கள் தமிழ் மொழியைக் கற்று பேசும் போது..சிங்கள மொழி பேசப்படும் பிரதேசங்களில் சிங்களதை கற்று நாம் பேசுவதில் என்ன பிரச்சனை

தனிமரம் said...
Best Blogger Tips

@கந்தசாமி இது
கந்தசாமி. has left a new comment on the post "சிங்களவர்க்கு அடிமையாக வாழ்ந்து செத்தொழிவதா இலங்கை...": 

///தனிமரம் said...


பாஸ் நான் சொல்ல வந்தது மொழியை கற்பிக்க இன்னொரு நாட்டில் தங்கியிருக்கும் நிலையை என்னி!
நம்நாட்டில் ஆங்கிலம் புலமைமிக்க (உங்களைப்போல்)பண்டிதர்கள்/மனிகள் எத்தனை பேர் இருக்கின்றார்கள்!
சிங்கப்பூர் அடிமையில்லை சகோ! ////

ஹஹஹா ஏனுங்கோ நேசன் அண்ணா நீங்கள் எப்பவுமே இப்படி தான் காமெடி பண்ணுவிங்களா ... 

Post a comment. 

Unsubscribe to comments on this post. 

Posted by கந்தசாமி. to நாற்று at September 26, 2011 5:50 PM//
 நல்லாப் புரியவில்லை எனக்கு எதை கமடி என்கிறீங்கள் சற்றுவிளக்க முடியுமா கந்தசாமி?

தனிமரம் said...
Best Blogger Tips

நிரூபன் has left a new comment on the post "சிங்களவர்க்கு அடிமையாக வாழ்ந்து செத்தொழிவதா இலங்கை...": 

@தனிமரம்
பாஸ் நான் சொல்ல வந்தது மொழியை கற்பிக்க இன்னொரு நாட்டில் தங்கியிருக்கும் நிலையை என்னி!
நம்நாட்டில் ஆங்கிலம் புலமைமிக்க (உங்களைப்போல்)பண்டிதர்கள்/மனிகள் எத்தனை பேர் இருக்கின்றார்கள்!
சிங்கப்பூர் அடிமையில்லை சகோ!//

அடிங்க்..............

மாற்றங்களும், பழையன கழிந்து புதியன உருவாக்கம் பெறுவதும் ஒரே நாளில் வருவதில்லை பாஸ்..

ஆகவே ஆங்கிலமோ, அல்லது பொதுவான மொழியோ அறிமுகப்படுத்தப்படும் போது நிச்சயமாக காலவோட்டத்தில் எம் மக்களே அதனைக் கற்பிப்பதில் பாண்டித்தியம் பெறுவார்கள்.
பிரித்தானியர்களின் காலத்தின் பின்னர் இலங்கையில் இன்று வரை ஆங்கில ஆசிரியர்கள் கை தேர்ந்தவர்களாக- பாண்டித்தியம் பெற்றவர்களாக இருப்பதனை நீங்கள் அறியவில்லையா பாஸ்? 

Post a comment. 

Unsubscribe to comments on this post. 

Posted by நிரூபன் to நாற்று at September 26, 2011 5:53 PM
// அப்படி என்றாள் ஏன் நிரூசார் நாங்கள் கல்வி கற்கும் போது ஆங்கிலப் பாடத்திற்கு ஆசிரியர்கள் இல்லை பிள்ளைகளே விளையாடுங்கோ என்று கடல்கரைப்பக்கம் விட்ட எத்தனை ஆண்டுகள் ஒரு பாடசாலையில் முறையாக ஆங்கிலம் கற்றுத்தந்தார்கள்?

K.s.s.Rajh said...
Best Blogger Tips

மற்றது உங்கள் பதிவு எனக்கு புரிகின்றது பாஸ் மூன்றாம் தலைமுறையை சொல்லியுள்ளீர்கள்..

ஆனால் நான் இங்கு சகோதர மொழியை பேசுவதை பற்றி சில கருத்துக்கள் கூறியது ஏன் என்றால்..இந்தப்பதிவை சிலர்...இனவாத கண்ணோட்டத்தோடு பார்ப்பார்கள் அது தவறாகும் உதாரணத்துக்கு சகோதரி மாலதி,மற்றும் நண்பர்,ஜ.ரா.ரமேஷ் பாபு,ஆகியோரின் கருத்துரைகள் இதனால் சகோதர மொழி மீது ஒரு காழ்ப்புணர்ச்சி தோற்றுவிக்கப்படும் இதானால் எமக்கு எந்த பிரயோசனமும் இல்லை...இதற்காகத்தான் நான் சகோதர மொழிபற்றி சில கருத்துகளை முன்வைத்தேன்.
நன்றி
வணக்கம்

இத்தோடு நான் அப்பீட்டு ஏற்கனவே சகோதர மொழிப் பிகருகள் பத்தி நான் ஒன்று இரண்டு பதிவுகள் போட்டுள்ளதால் கிசு கிசு போட்டுவிடுவாங்க.ஹி.ஹி.ஹி.ஹி..செம்பையும் கடுமையா நெளிச்சிடுவாங்க..ஹி.ஹி.ஹி.ஹி

ராஜ் அப்பீட்டு............மீண்டும் அடுத்த பதிவுக்கு ரிப்பீட்டு....

தனிமரம் said...
Best Blogger Tips

நிரூபன் has left a new comment on the post "சிங்களவர்க்கு அடிமையாக வாழ்ந்து செத்தொழிவதா இலங்கை...": 


பாஸ்..

ஆட்சியாளர்களைக் குறை சொல்லி, நாம் எல்லாம் எத்தனை நாளைக்கு காலத்தைக் கடத்தப் போகின்றோம்?

முதலில் ஆட்சியாளர்களை மாற்ற முடியாதா? அவர்களின் சிந்தனைகளை மாற்ற வேண்டாமா என்று சிந்திக்கவே முடியாதா பாஸ்? 
// 
இதற்கு தற்போது முடியாது ஆட்சிமாற்றம் என்பதைப் பற்றி எழுத வெளிக்கிட்டால் இந்த பதிவின் காத்திரத்தன்மை மாறிப்போய்விடும் அதனால் மொனம் காக்கின்றேன்!
 முதுகெலும்பு இல்லாத எதிர்க்கட்சி தலைவர் இருக்கும் வரை சாத்தியம் இல்லை என்று மட்டும் சொல்லிக்கொள்கிரேன் தாய்நாட்டில் இருக்கும் உங்களுக்கு நான் சொல்லனுமா ?எதிர்கட்சியைப் பற்றின செயல்பாடு?

K.s.s.Rajh said...
Best Blogger Tips

பாஸ் ஒரு சின்ன கருத்து..இப்படி காரசாரமான விவாதமேடைப்பதிவுகளில் பதிவர் அறிமுகத்தை தவிர்களாம் ஏன் என்றால் எல்லோறும் விவாதத்தில் பிசியாகிவிடுவார்கள்..இதனால் அறிமுகப்படுத்திய பதிவரின் விபரங்களை கவனிக்க சந்தர்ப்பம் குறைவு...ஏன் நான் கூட இன்று பதிவர் அறிமுகத்தை பார்த்தேன் ஆனால் அவரது தளத்திற்கு செல்லவில்லை இதோ இப்பதான் செல்கின்றேன்..எனவே விவாதமேடைகளில் பதிவர் அறிமுகத்தை தவிர்ந்து மற்ற பதிவுகளில் தொடரலாம் இதனால் அறிமுகப்படுத்தப்படும் பதிவரின் தளத்திற்கு பலர் போவார்கள்.

தனிமரம் said...
Best Blogger Tips

K.s.s.Rajh has left a new comment on the post "சிங்களவர்க்கு அடிமையாக வாழ்ந்து செத்தொழிவதா இலங்கை...": 

பாஸ் ஒரு சின்ன கருத்து..இப்படி காரசாரமான விவாதமேடைப்பதிவுகளில் பதிவர் அறிமுகத்தை தவிர்களாம் ஏன் என்றால் எல்லோறும் விவாதத்தில் பிசியாகிவிடுவார்கள்..இதனால் அறிமுகப்படுத்திய பதிவரின் விபரங்களை கவனிக்க சந்தர்ப்பம் குறைவு...ஏன் நான் கூட இன்று பதிவர் அறிமுகத்தை பார்த்தேன் ஆனால் அவரது தளத்திற்கு செல்லவில்லை இதோ இப்பதான் செல்கின்றேன்..எனவே விவாதமேடைகளில் பதிவர் அறிமுகத்தை தவிர்ந்து மற்ற பதிவுகளில் தொடரலாம் இதனால் அறிமுகப்படுத்தப்படும் பதிவரின் தளத்திற்கு பலர் போவார்கள். 

//நானும் இதை ஆமோதிக்கின்றேன் பாஸ்!

Anonymous said...
Best Blogger Tips

K.s.s.Rajh said...////ஆனால் தமிழர் வாழும் பகுதிகளில் குறிப்பாக வன்னியில் கடமையாற்றும் இராணுவத்தினர்,பொலிசார்,சரளமாக தமிழ் மொழியைபேசுகின்றார்கள்..எனவே தமிழ் பகுதிகளில் கடமையாற்றுபவர்கள் தமிழ் மொழியைக் கற்று பேசும் போது// என்னது தமிழர் பகுதிகளில் இராணுவம் "கடமையாற்றுருகிறார்களா"..ஏனுங்கோ அவர்கள் இதுவரை "ஆற்றிய கடமை" உங்களுக்கு தெரியாதா என்ன)))

சார் அவன் பதினஞ்சு வருசமாய் யாழில குந்தியிருக்கான் .. சூழ்நிலையே அவனுக்கு தமிழ் கற்று கொடுத்தது..

வேணுமெண்டா பாருங்கோ அவனுக்கு தமிழிலே தெரிஞ்ச வார்த்தைகளில் கெட்ட வார்த்தைகள் தான் அதிகமாயிருக்கும் ..)

எனது அனுபவம் சார்

Anonymous said...
Best Blogger Tips

தமிழர் தென்னிலங்கையில் பிழைக்க வேண்டுமென்றால் சிங்களம் அவசியம் ..அது போல சிங்களவர் ( எம் இனம் சாகும் போது பாற் சோறு கொடுத்து மகிழ்ந்தவர்களை சகோதரர்கள் எண்டு சொல்ல வாய் கூசுகிறது) தமிழர் வாழும் பிரதேசங்களில் பிழைக்க தமிழ் மொழி அவசியம் இது சாதாரணமானது..

இந்த அடிப்படையில் தான் தென்னிலங்கை தமிழ் மக்கள் சாரளமாக சிங்களம் பேசுகிறார்கள்..அதே போல வட கிழக்கில் இராணுவமும்.. ஆனால் இவர்கள் அல்லாத , தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களிலே சிங்களத்தை அரசகரும மொழியாக்குவததால் யார் பாதிக்க படபோகுறார்கள்.. சிங்கப்பூர் போன்ற சின்ன நாடுகளிலே நான்கு மொழிகள் அரச கரும மொழியாக இருக்கும் போது, மண்ணாங்கட்டி ஒரு ரண்டு மொழி பேசும் நாட்டில் ,அவரவர் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்களில் அந்தந்த மொழிகளை அரச கரும மொழியாக்குவதில் என்ன தப்பு..?

அதை விடுத்து சிங்களம் தான் இந்த நாட்டிலே பெரும்பான்மை ஆகவே அவர்களை மொழி மட்டுமே அரச கரும மொழியாக இருப்பதில் தப்பில்லை என்று ஏற்றுக்கொள்கிற பெரிஈஈஈய மனசு எமக்கு இருக்கலாம்.. ஆனால் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்..

தீர்வு என்பது நியாயமானதாக இருக்க வேண்டுமே ஒழிய முரண்பாடுகளை இன்னொரு சந்ததிக்கும் கடத்துவதாக இருக்கக்கூடாது....

சீனிவாசன் said...
Best Blogger Tips

இந்தியாவில் தமிழகம் தவிர வேறு மாநிலங்களுக்கு செல்லும் பொழுது குறிப்பாய் வட இந்தியாவெங்கும் இந்தி தொடர்பு மொழியாய் பயன்படுகிறது. தென் இந்தியாவிலும் தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களில் அடிப்படை இந்தியை அறிந்துள்ளனர். இந்தியாவில் இந்தியென்பது பெரும்பான்மையோரின் மொழி அல்ல, அது ஒரு தொடர்பு மொழிதான். மகாராஷ்டிரா,குஜராத்,இராஜஸ்தான்,காஷ்மீர்,மே.வங்கம்,ஒரிசா என பல மாநிலங்களுக்கு அந்தந்த மாநிலங்களுக்குரிய மொழி உள்ளது. உ.பி மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ளோரின் தாய் மொழியும் இந்தி அல்ல, போஜ்பூரி. இந்தியாவில் இந்தியை தாய்மொழியாய் கொண்டவர்கள் உண்மையில் குறைவு. இம்மாதிரி நிலையில் வேலைக்காக வட மாநிலங்களுக்கு செல்லும் தமிழர் அந்தந்த மாநில மொழியையையோ அல்லது தொடர்பு மொழியான இந்தியையோ கற்றுகொண்டு வாழத்தொடங்குகின்றனர். இதே போல் தமிழகத்திற்கு வேலைக்காக வரும் வட மாநிலத்தவரும் தமிழை கற்றுக்கொண்டு தமது வாழ்க்கையை தொடருகின்றனர். யார் எந்த இடத்திற்கு சென்றாலும் அந்த இடத்திற்குரிய மொழியை கற்றறிந்து கொள்வது அவசியமானதாகிறது. இதே நிலையை இலங்கைக்கும் பொருத்தி பார்க்கலாம் என நினைக்கிறேன். K.s.s.Rajh வழங்கிய கருத்துகள் சிறப்பானவையாக உள்ளன. நண்பருக்கு எனது பாராட்டுகள்.

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

//தமிழ் முஸ்லிம் பாராளுமன்றப் பிரதி நிதிகள் ஒன்று சேர்ந்து இலங்கை மக்களின் தொடர்பாடலுக்குத் தேவையான ஒரு பொதுவான மொழியினை நடை முறைப்படுத்துவது தொடர்பில் ஆராய முடியாதா? சிங்களத்தைக் கற்று அவர்களின் கலாச்சாரத்தினைப் பின் பற்றி வாழுகின்ற அடிமை நிலைக்கு எம் சந்ததிகளை இட்டுச் செல்வது தான் எங்கள் எல்லோரின் முன்னும் உள்ள கையாலாகத நிலையா? இந் நிலையினை ஜனநாயக வழியில் மாற்ற முடியாதா?//
நடக்குமா?

Anonymous said...
Best Blogger Tips

நல்லதே நடக்கும்...அதுவும் சீக்கிரம்...சில நேரங்களில் நமக்கு பிடித்ததை தியாகம் செய்யலாம் மொழி உட்பட...அது ஒரு பெரிய நன்மையை உலகுக்கு தருவதானால்....

Yoga.s.FR said...
Best Blogger Tips

சிங்களவர்க்கு அடிமையாக வாழ்ந்து செத்தொழிய வேண்டியதில்லை!சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே விஷம் விதைக்கப்பட்டு விட்டது.அதனால்,இன்று போராட வேண்டியது எங்கள் பாரம்பரிய பிரதேசங்களைக் காத்து,எங்களை,அதாவது எங்கள் தேவைகளை நாமே நிறைவேற்றிக் கொள்ளும் ஓர் அதிகார அலகைப் பெற்று எங்கள் தாயகம்,மொழியு ரிமையைக் காத்தலே இன்றிருக்கும் ஒரே தெரிவு!ஒரு மொழி என்பதெல்லாம் சாத்தியமேயில்லை!

தனிமரம் said...
Best Blogger Tips

கந்தசாமி. has left a new comment on the post "சிங்களவர்க்கு அடிமையாக வாழ்ந்து செத்தொழிவதா இலங்கை...": 

K.s.s.Rajh said...////ஆனால் தமிழர் வாழும் பகுதிகளில் குறிப்பாக வன்னியில் கடமையாற்றும் இராணுவத்தினர்,பொலிசார்,சரளமாக தமிழ் மொழியைபேசுகின்றார்கள்..எனவே தமிழ் பகுதிகளில் கடமையாற்றுபவர்கள் தமிழ் மொழியைக் கற்று பேசும் போது// என்னது தமிழர் பகுதிகளில் இராணுவம் "கடமையாற்றுருகிறார்களா"..ஏனுங்கோ அவர்கள் இதுவரை "ஆற்றிய கடமை" உங்களுக்கு தெரியாதா என்ன))) 

சார் அவன் பதினஞ்சு வருசமாய் யாழில குந்தியிருக்கான் .. சூழ்நிலையே அவனுக்கு தமிழ் கற்று கொடுத்தது..

வேணுமெண்டா பாருங்கோ அவனுக்கு தமிழிலே தெரிஞ்ச வார்த்தைகளில் கெட்ட வார்த்தைகள் தான் அதிகமாயிருக்கும் ..) 

எனது அனுபவம் சார் 

// கந்தசாமி இதைச் சொல்லிக்கொடுப்பது யாரு நம்ம இனப்பிறப்புக்கள்தானே அவர்கள் தம் துனைவியுடன் சகோதரியுடன் போகும்போது தமிழில் சொன்னால் எப்படி இருக்கும் கந்தசாமி!

நிரூபன் said...
Best Blogger Tips

வழமை போல இன்றைய விவாதமேடையினையும் காத்திரமான முறையில் கொண்டு செல்வதற்குப் பேராதரவு வழங்கிய அனைத்து உள்ளங்களிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

தங்களின் கருத்துக்களால் இப் பதிவில் விவாதத்தினை மேற்கொண்டு, காத்திரமான கருத்து மோதலை முன்னகர்த்திச் சென்ற தனிமரம், கே.எஸ்.எஸ்.ராஜ், கந்தசாமி, சீனிவாசன், யோகா ஐயா உட்பட ஏனைய அனைத்து உள்ளங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

நிரூபன் said...
Best Blogger Tips

உண்மையில் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்விற்குப் பொதுவாக ஒரு மொழியினை நாம் பயன்படுத்த வேண்டிய தேவை இருந்தாலும், ஆளும் வர்க்கமோ அல்லது இலங்கையின் சட்டத் துறையோ அதற்கு ஆதரவளிக்கப் போவதில்லை. அத்தோடு தமிழர்கள் தமது தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு உள்ள போது, சிங்கள மொழியினைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகினாலும், அம் மொழியினைப் பாவிப்பதில் தவறில்லை எனும் சகோதரன் கே.எஸ்.எஸ்.ராஜ் அவர்களின் பதில் தான் இன்றைய விவாத மேடையிற்கான விடையாக அமைகின்றது.

ஈழத்தில் காலதி காலமாக- தமிழ் முஸ்லிம் சமூகங்கள் மேற்கொண்ட வரலாற்றுத் தவறின் காரணமாக எம் சந்ததிகளும் தமக்கென்று ஒரு பொது மொழி இன்றி, பெரும்பான்மைச் சமூகத்தின் மொழியினைப் பயன்படுத்திப் பேச வேண்டிய தேவைக்கு ஆளாகின்றார்கள். அத்தோடு ஈழத்தில் தமிழர்களின் தற்போதைய நிலையிலிருந்தும் நோக்கும் போது, எம்மால் எமக்கான ஒரு பொது மொழியினை வேண்டியோ அல்லது அரச கரும மொழியாகச் சிங்களத்திற்குப் பதிலாக இன்னோர் மொழியினை அறிமுகப்படுத்தக் கோரியோ போராட்டங்களை நிகழ்த்த முடியாது. சட்ட ரீதியாகவும் நீதிமன்ற உதவியோடும் நெறிப்படுத்த முடியாது.

இன்றைய கால கட்டத்தில் தமது அரசசேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு தமிழர்கள் சிங்களவர்களின் கீழ் வாழ வேண்டிய துர்பார்க்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். எமக்கென்று இருக்கின்ற தமிழ் மொழியினை நாம் எவ்வாறு பாதுகாத்து, எம் சந்ததியினைப் பெருக்கி ஈழத்தில் பெரும்பான்மையினமாக தமிழினத்தை மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு தமிழ் முஸ்லிம் மக்களின் இன ஒற்றுமையினை வலுப்படுத்தினால் தான்....சந்தர்ப்ப சூழ் நிலைகளால் தமிழ் மொழிக்கென்று தனியிடம் கிடைக்க நேரிடலாம்.

ஆகவே இருக்கின்ற எம் மொழியினைப் பாதுக்காக்க வேண்டும் எனும் யோகா ஐயாவின் கருத்துக்களுக்கும் இந் நேரத்தில் நன்றிகளைச் சொல்லிக் கொண்டு, எம் தமிழை வலுப்படுத்துவதற்கேற்ற நடவடிக்கைகளில் தமிழ் முஸ்லிம் மக்கள் ஈடுபட்டால் தான் இன்னும் பல ஆண்டுகளின் பின்னர் இலங்கையில் அழிவுறாத நிலையில் தமிழ் வாழும் எனும் உண்மையினையும் உங்கள் முன் வைக்கின்றேன்.


சகோதரன் தனிமரம்- நேசன் வழமையை விட, இம் முறை நீண்ட காலத்தின் பின்னர் விவாத மேடையில் காத்திரமான கருத்துக்களையும், வழுக்கற்ற சொல்லாடல்களையும் வழங்கியிருந்தார். அவருக்கும் இந் நேரத்தில் சிற்ப்பான நன்றிகள்.

கந்தசாமி பாஸ் அவர்களும் தன் கலக்கலான பதில்கள் மூலம் நேசன், ராஜ் இருவருடனும் தர்க்கங்களில் ஈடுபட்டு இவ் விவாதத்திற்கு வலுச் சேர்த்திருந்தார்.
அவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இப் பதிவிற்கு ஓட்டுக்கள் போட்டு, இப் பதிவிற்கு கருத்துரைகள் வழங்கி, இப் பதிவானது பலரிடமும் சென்று சேரும் வண்ணம் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து உதவிய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மீண்டும் மற்றுமோர் விறு விறுப்பான விவாத மேடையில் சந்திக்கும் வரை.

தற்காலிகமாக உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்வது.
நேசமுடன்,
செ.நிரூபன்.

Anonymous said...
Best Blogger Tips

தனிமரம் /// கந்தசாமி இதைச் சொல்லிக்கொடுப்பது யாரு நம்ம இனப்பிறப்புக்கள்தானே அவர்கள் தம் துனைவியுடன் சகோதரியுடன் போகும்போது தமிழில் சொன்னால் எப்படி இருக்கும் கந்தசாமி!//

ஏன் சாரு, நீங்க பிறந்தது முதல் இந்த நிமிடம் வரை கெட்ட வார்த்தை எண்ட ஒன்றே பேசியதில்லையா... அப்பிடி இருந்தால் நீங்க கொண்டாடப்பட வேண்டியவர் தானுங்க...ஹிஹி ஒவ்வொருத்தனும் தன்னை நல்லவனாக காட்டிக்க தான் பெரும் பிராயத்தனம் செய்வானாம் என்பது சிம்பிள் லாஜிக்..)))

மற்றும்படி நம்மவர்கள் சொல்லி கொடுத்தால் அதையே திருப்பி சொல்லுவதற்கு அவர்கள் என்ன கிளிப்பிள்ளையா..."அட நாட்டையும் நாட்டு மக்களையும் காக்கும் ராணுவமிங்க.."))

Anonymous said...
Best Blogger Tips

///சகோதரன் தனிமரம்- நேசன் வழமையை விட, இம் முறை நீண்ட காலத்தின் பின்னர் விவாத மேடையில் காத்திரமான கருத்துக்களையும், வழுக்கற்ற சொல்லாடல்களையும் வழங்கியிருந்தார். அவருக்கும் இந் நேரத்தில் சிற்ப்பான நன்றிகள்.
//// ஏன்யா ஏன்...))

Anonymous said...
Best Blogger Tips

///கந்தசாமி பாஸ் அவர்களும் தன் கலக்கலான பதில்கள் மூலம் நேசன், ராஜ் இருவருடனும் தர்க்கங்களில் ஈடுபட்டு இவ் விவாதத்திற்கு வலுச் சேர்த்திருந்தார்.
அவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.// நேசன் அண்ணாவை பற்றி தெரியும் அவர் சீரியஸாக எடுக்கமாட்டார் ..ஆனா ராஜ் மச்சி தான் என்னை கோபிச்சாரோ தெரியல்ல...

எங்கிருந்தாலும் ராஜ் இங்கே வருக..)))

தனிமரம் said...
Best Blogger Tips

//கந்தசாமி. 


ஏன் சாரு, நீங்க பிறந்தது முதல் இந்த நிமிடம் வரை கெட்ட வார்த்தை எண்ட ஒன்றே பேசியதில்லையா... அப்பிடி இருந்தால் நீங்க கொண்டாடப்பட வேண்டியவர் தானுங்க...ஹிஹி ஒவ்வொருத்தனும் தன்னை நல்லவனாக காட்டிக்க தான் பெரும் பிராயத்தனம் செய்வானாம் என்பது சிம்பிள் லாஜிக்..)))

மற்றும்படி நம்மவர்கள் சொல்லி கொடுத்தால் அதையே திருப்பி சொல்லுவதற்கு அவர்கள் என்ன கிளிப்பிள்ளையா..."அட நாட்டையும் நாட்டு மக்களையும் காக்கும் ராணுவமிங்க..")) //
 சார் கந்தசாமி நான் சொல்லவில்லை மிகவும் உத்தமன் என்று ஆனால் நம்மவர்கள் கனியிருக்க காயை நாடுவது ஏன் என்று தான் கேட்டேன்  கெட்டவார்த்தை சொல்லிக்கொடுக்கும் ஒருத்தர் ஏன் நல்ல வார்த்தைகளை சொல்லிக்கொடுக்கலாமே?? பெண்களுடன் போகும் போது போக்கிரி மாதிரிப்பேசினா விஜய் அளவு கோபம் வராட்டியும் ஒரு சாமானியனுக்கு ரோசம் வராதா சார் கொஞ்சம் ஜோசியுங்கள்! கந்தசாமி தாத்தா தன் பேத்தியுடன் கோயில் போட்டு வரும் போது ஆமிக்காரன் கெட்டவார்த்தையில் ஒரு வாசனம் சொன்னால் எப்படி இருக்கும் அந்தவாக்கியத்தை இரு மொழியிலும் என்னால் எழுத முடியும் ஆனால் பொது இடத்தில் நாகரிகம் என்ற ஒன்று இருக்கு சார்!
கிளிப்பிள்ளைதான் சார் நமக்கு பிரென்ஸ் ஆரம்பத்தில் ஒரு வார்த்தையும் தெரியாது அப்படிக்கும் போது ஒருத்தர் நம்மவர் (கழுதை) என்று சொல்லிக்கொடுத்தால் நாங்கள் பிரென்ஸ்காரனிடம் அதைச் சொன்னால் என்ன நடக்கும் ஒரு நிமிடம் சிந்தியுங்கள் சார்!
(தனிமரத்திற்கு கந்தசாமியை நல்லாத் தெரியும் பாவம் ராச் அழுதிடுவான் ஹீ ஹீ)
வாங்க நிரூபன் கடையை முடிவிட்டார் இனி ஐடியாமணியிடம் போவம்

Anonymous said...
Best Blogger Tips

தனிமரம் ////சொல்லிக்கொடுக்கும் ஒருத்தர் ஏன் நல்ல வார்த்தைகளை சொல்லிக்கொடுக்கலாமே?? /// ஆமா இண்டையில இருந்து ஆமிக்காரனுக்கு ரியூசன் எடுப்பம் ...நேசன் அண்ணாச்சி தான் தமிழ் கிளாஸ் ...)))

Anonymous said...
Best Blogger Tips

தனி மரம் ////பெண்களுடன் போகும் போது போக்கிரி மாதிரிப்பேசினா விஜய் அளவு கோபம் வராட்டியும் ஒரு சாமானியனுக்கு ரோசம் வராதா சார் கொஞ்சம் ஜோசியுங்கள்!// ஏனுங்கோ இப்ப யார் பெண்களுடன் போறதை பற்றியும் ...அப்பிடி போகேக்க போக்கிரி தனமுமாய் கதைக்கிறது பற்றியும் இங்க எழுதியது .........நிரூபன் சார் நீங்களா??? ))

Anonymous said...
Best Blogger Tips

தனிமரம் ///கந்தசாமி தாத்தா தன் பேத்தியுடன் கோயில் போட்டு வரும் போது/// இன்னாய இது எனக்கு யார் கல்யாணம் கட்டி வச்சது..? போதா குறைக்கு பேத்தியா... ? யோவ்! அதுக்கு முதலில கொழந்தை பெறனும்.. அதுக்கு கல்யாணம் கட்டனும்..அதுக்கு பிறகு தான் பேத்தி...பூட்டி எல்லாம்

தனிமரம் said...
Best Blogger Tips

கந்தசாமி. has left a new comment on the post "சிங்களவர்க்கு அடிமையாக வாழ்ந்து செத்தொழிவதா இலங்கை...": 

தனிமரம் ////சொல்லிக்கொடுக்கும் ஒருத்தர் ஏன் நல்ல வார்த்தைகளை சொல்லிக்கொடுக்கலாமே?? /// ஆமா இண்டையில இருந்து ஆமிக்காரனுக்கு ரியூசன் எடுப்பம் ...நேசன் அண்ணாச்சி தான் தமிழ் கிளாஸ் ...))) 

//ஏனையா என்னைவிட மொழிப்புலமையுள்ள பண்டிதர்மார்கள் இருக்கினம் நான் தனிமரம் என்னை வம்பில் மாட்டாதீங்க சார்  தனிமரம் விரைவில் செம்பனிப்பக்கம் போகனும் என்று ஆசையோ???? ஹீ

Anonymous said...
Best Blogger Tips

///ஆமிக்காரன் கெட்டவார்த்தையில் ஒரு வாசனம் சொன்னால் எப்படி இருக்கும் அந்தவாக்கியத்தை இரு மொழியிலும் என்னால் எழுத முடியும் ஆனால் பொது இடத்தில் நாகரிகம் என்ற ஒன்று இருக்கு சார்!///

அதாகப்பட்டது உங்களுக்கு தமிழ் மொழியும் சிங்கள மொழியும் எழுத தெரியும் எண்டதை சொல்ல வருகிறதுக்கு இம்மாம் பெரிய கமெண்ட்டா... ஏனுங்க நேசன் அண்ணா ஒற்றை வரியில் சொன்னா நாங்க புரிஞ்சுக்க மாட்டமா ஹிஹி

தனிமரம் said...
Best Blogger Tips

   தனிமரம் படிச்சவன் இல்ல சார் !

Anonymous said...
Best Blogger Tips

சரி சரி விடுங்க பாஸ் அந்தாளின்ர பதிவை திசை திருப்பாமல் ..............நான் விடை பெறுகிறேன்!

தனிமரம் said...
Best Blogger Tips

///ஆமிக்காரன் கெட்டவார்த்தையில் ஒரு வாசனம் சொன்னால் எப்படி இருக்கும் அந்தவாக்கியத்தை இரு மொழியிலும் என்னால் எழுத முடியும் ஆனால் பொது இடத்தில் நாகரிகம் என்ற ஒன்று இருக்கு சார்!/// 

அதாகப்பட்டது உங்களுக்கு தமிழ் மொழியும் சிங்கள மொழியும் எழுத தெரியும் எண்டதை சொல்ல வருகிறதுக்கு இம்மாம் பெரிய கமெண்ட்டா... ஏனுங்க நேசன் அண்ணா ஒற்றை வரியில் சொன்னா நாங்க புரிஞ்சுக்க மாட்டமா ?
// ஐயா கந்தசாமி தனிமரம் ஒரு மொழியும் சரியாகப் படிக்கல சும்மா பீதியைக் கிளப்பி என்ற இமேஸ் (அப்படியாரோ சொன்னாங்க) டமேச் சாக்கக்கூடாது!

மாய உலகம் said...
Best Blogger Tips

சொந்த நாட்டில் அகதி போல் வாழ்வது கொடுமை??

மாய உலகம் said...
Best Blogger Tips

பூவாக உதிர்ந்ததாக நினைக்கிறார்கள்.. பூகம்பமாக வெடிக்கும் போது அதிர்வார்கள்

மாய உலகம் said...
Best Blogger Tips

இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு சக மனிதர்கள் கையாளத்தனமாக ஆக்கிவிட்டார்கள்

K said...
Best Blogger Tips

ஏ மல்லி, ஒயா மொக்கத கியன்னே! ஏக்க ஹரி நே! தெமல கட்டிய ஒக்கமே சின்ஹல இகனகன்ன ஓனே! சிங்ஹல கதாகரன்ன ஓனே! சிங்ஹல பாஷாவ தமாய், லங்காவட லஸ்ஸசன பாஷாவ! ஹரித!

ஏ சிங்ஹல பௌத ரட! ஹரித!

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@கந்தசாமி.நான் ஏன் பாஸ் கோவிக்கப்போறன்..விவாதமேடை என்கிறபோது பல காரசாரமான கருத்துக்கள் முன்வைக்கப்படும் போதுதான் பல விடயங்களை வாசகர்கள் அறிந்து கொள்ளமுடியும்.அந்தவகையில் இந்தப்பதிவுக்கு..நீங்கள்,நான்,நேசன் அண்ணா,நிரூபன்,பாஸ் போன்ற நம் ஊர்காரங்கதான் சிறப்பான விவாதத்தை முன் வைக்கமுடியும் அப்போதுதான் பல தகவல்கள் சரியான முறையில் வெளிப்படும் வாசகர்கள் அறிந்து கொள்வார்கள்.சோ டீ.ஆர்(என்னது டீ ஆரிபோச்சா)ஸ்டையில் சொன்னால் நான்,நீங்க,,எங்க கடமையத்தானே செஞ்சோம்.ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி
///
Powder Star - Dr. ஐடியாமணி said...
ஏ மல்லி, ஒயா மொக்கத கியன்னே! ஏக்க ஹரி நே! தெமல கட்டிய ஒக்கமே சின்ஹல இகனகன்ன ஓனே! சிங்ஹல கதாகரன்ன ஓனே! சிங்ஹல பாஷாவ தமாய், லங்காவட லஸ்ஸசன பாஷாவ! ஹரித!

ஏ சிங்ஹல பௌத ரட! ஹரித////

மச்சான் சார் உண்மையா சொல்லுறீங்களா.இல்லை நக்கலா சொல்லுறீங்களா..ஹி.ஹி.ஹி.ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

இந்தியாவில் ஆங்கில பொதுமொழி என்று வைத்திருந்தும் இந்திதான் கோலோச்சுகிறது..... இதெல்லாம் தவிர்க்க முடியாத ஒன்று என்றே தோன்றுகிறது.........

F.NIHAZA said...
Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!

மிக்க நன்றி...

நிரூபனின் பரந்த மனசுக்கு எல்லையில்லை பாருங்கள்......

Unknown said...
Best Blogger Tips

பயனுள்ள ஆய்வுகுக கட்டுரை
நன்றி சகோ!

புலவர் சா இராமாநுசம்

கார்த்தி said...
Best Blogger Tips

தமிழ் தலைமைகளும் முஸ்லீம் அரசியல் தலைவர்களும் ஒன்று சேர்ந்து மக்களின் அபிவிருத்திக்காக செயற்படுவது நடைமுறை சாத்தியமற்றது. பல தடவைகள் இது முயன்று பிழைத்துப்போயிருக்கிறது.

மேலும் நாங்கள் முன்வைக்கும் திட்டங்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று எதைக்கொண்டு நம்புவது.????

சார் போன கிழமை என்னால் உங்கள் தளத்திற்கு வர முடியவில்லை. கடந்த கிழமை பூராகவும் விளையாட்டு வேறு வேலைகளில் சென்று விட்டது. நீண்ட காலத்திற்கு பிறகு நண்பர்களின் தளங்களிற்கு வருகிறேன்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails