Thursday, June 9, 2011

நடு ரோட்டிற்கு வந்து விட்ட நாய்(க்) காதல்! 

சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுத்தல்! 

கலியாணம் கட்டச் சொல்லி 
கசின் ஓட்ட வடை சொல்லுறான்;
பலியாடு நானாகப் பார்த்துச் சிரிக்கவோ?
விலையின்றி மோதிரங்கள், விளையாடப் பல பொருட்கள்
சுளையாக கிடைத்திடுமாம்- ஆனாலும் அவனோ
சும்மா கிடந்த சங்கை ஊதி(க்) கெடுத்திடப் போடுகிறான் திட்டம்
சுதந்திரத்தை நான் இழந்து பெட்டிப் பாம்பாய் ஆகுவதில்
அவனுக்கு இப்போது இருக்கிறதாம் இஷ்டம்! 

யகோ ஆளை விடு முருகா!

எஞ்ஜினியர் ஏகாம்பரம் ஏறாவூரு போனார்
றஞ்சினியை பைக்கில் ஏற்றி லவ்சு விட்டுப் பார்த்தார்
அஞ்சு மணி ஆனதுமே அம் மணமாய் ஆனார்
பஞ்சு மெத்தை மீதினிலே பம்பரமாய் சுழன்றார்
வஞ்சியவள் மொழி கேட்டு வாழ்க்கையினை இழந்தார்
பஞ்சணைக்கு(ப்) பதிலாய் ஜெயில் கம்பியிற்குள் கிடந்தார்! 

விண்ணப்பம் கிடைத்தால் விரைந்து வா! 

சின்ன இடை கொண்ட உனை அன்னமென்பதா
கண்ணில் உனை வைத்து நானும் கவிதை சொல்வதா?
என்னை விட உன்னழகை ரசிக்க யாருமில்லையா
பெண்ணே உந்தன் பூவிதழை நான் சுவைக்க ஆசையில்லையா?
மின்னும் உந்தன் வண்ணம் கண்டு, 
மேனியெங்கும் மோகம் கொண்டு
பெண்ணே உனை(ப்) பார்க்க ஏங்கி நிற்கிறேன்
கண்ணில் காமம் தனை ஒளித்து காதலிக்கிறேன்
வன்னி(க்) காட்டில் தொலைந்த உனைத் தேடி காத்திருக்கிறேன்!!

ன்பப் போர்க்களம்! 

அந்தியிலே நிதம் வந்து
அழகான கனவுகளை நீயோ
தந்து விட்டுப் போகின்றாய்
தவிப்போடு இருக்கின்றேன்
சிந்தையிலே பிடித்த பித்தம்
சீக்கிரமாய் தீர முத்தம்
தந்து விடு பெண்ணே தப்பில்லை
பந்து போல என் மனதை
பாய வைத்து(ப்) பார்ப்பதும் ஏன்?
நொந்து போய் இருக்கும் எனை
நோக்கி ஒரு பதில் தா- இளமை(ச்)
சந்தமது கொண்டு சரசமாடுவேன்
விந்தை பல புரிந்து என்
வீரம் காட்டுவேன் வா!!

143 Comments:

Mahan.Thamesh said...
Best Blogger Tips

NANA 1 ST

Mahan.Thamesh said...
Best Blogger Tips

படிக்கிறேன்

நிரூபன் said...
Best Blogger Tips

@Mahan.Thamesh

NANA 1 ST//

ஆமா மகனே! நீங்கள் தான் பெஸ்ட்...

வருக வருக...

Mahan.Thamesh said...
Best Blogger Tips

என்னையா எப்பிடி பாராட்டுறது பின்னி பிடலேடுத்திருக்கிங்க

நிரூபன் said...
Best Blogger Tips

@Mahan.Thamesh

என்னையா எப்பிடி பாராட்டுறது பின்னி பிடலேடுத்திருக்கிங்க//

தமிழில் 247 + ஆயுத எழுத்து ஒன்றும் எழுத்திருக்கு, அதிலை எதையாச்சும் கோர்த்துப் பாராட்ட வேண்டியது தானே?
ஹி...ஹி....

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

மாப்ளே.... எப்படியா? முடியுது உன்னால... அருமை.

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

கலியாணம் கட்டச் சொல்லி
கசின் ஓட்ட வடை சொல்லுறான்;
பலியாடு நானாகப் பார்த்துச் சிரிக்கவோ?>>>

ஓட்ட வடையை வம்புக்கு இழுக்காம இருக்க மாட்டிங்க போல....

தமிழ்வாசியில்: அட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்

பிரபாஷ்கரன் said...
Best Blogger Tips

சின்ன இடை கொண்ட உனை அன்னமென்பதா
கண்ணில் உனை வைத்து நானும் கவிதை சொல்வதா?
என்னை விட உன்னழகை ரசிக்க யாருமில்லையா
பெண்ணே உந்தன் பூவிதழை நான் சுவைக்க ஆசையில்லையா?
மின்னும் உந்தன் வண்ணம் கண்டு,
மேனியெங்கும் மோகம் கொண்டு
பெண்ணே உனை(ப்) பார்க்க ஏங்கி நிற்கிறேன்
கண்ணில் காமம் தனை ஒளித்து காதலிக்கிறேன்
வன்னி(க்) காட்டில் தொலைந்த உனைத் தேடி காத்திருக்கிறேன்!!


இது சூப்பர் கவிதை இந்த தலைப்பில் வந்திருக்க வேண்டியது இல்லை

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

என்னை விட உன்னழகை ரசிக்க யாருமில்லையா>>>>

நான் இருக்கேன் மாப்ளே! ஹி..ஹி..ஹி..

தமிழ்வாசியில்: அட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி - Prakash


மாப்ளே.... எப்படியா? முடியுது உன்னால... அருமை.//

இது ரொம்ப ஓவரு
என்ன எப்படி முடியுது?
எல்லோராலும் தானே இது முடியுது.
என்னால் மட்டும் என்றால் என்ன மாப்பு நியாயம்?

ஹி...ஹி...

Mahan.Thamesh said...
Best Blogger Tips

அதுதான் அ தொடங்கி சகல எழுத்தினையும் கோர்த்து கோர்வையாக்கி உங்களுக்கு ஒரு பாமாலை பாடனும் ஏன்னு ஆசை முடியல்லியே சாமி

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி - Prakash

ஓட்ட வடையை வம்புக்கு இழுக்காம இருக்க மாட்டிங்க போல....

தமிழ்வாசியில்: அட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்//

மவனே, இந்த தடவை கருத்தோடு கமெண்ட் போட்டிருக்கீங்க..
இல்லேன்னா விளம்பர கட்டணம் அறவிட்டிருப்பேனில்ல:-))

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

@நிரூபன்
ஹி...ஹி.... நாலு லட்டு ஒரே பதிவில் இருக்கே, அதை சொன்னேன்..

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

மவனே, இந்த தடவை கருத்தோடு கமெண்ட் போட்டிருக்கீங்க..
இல்லேன்னா விளம்பர கட்டணம் அறவிட்டிருப்பேனில்ல>>>

எவ்வளவுன்னு சொல்லு.. சி.பி கிட்ட வாங்கி தர்றேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@பிரபாஷ்கரன்


இது சூப்பர் கவிதை இந்த தலைப்பில் வந்திருக்க வேண்டியது இல்லை//

ஆமா பாஸ், ஆனால் இப்பவெல்லாம் இலக்கியத் தலைப்பினைக் கவிதைக்கு வைத்தால், ஒரு பயபுள்ளையும் கண்டுக்கிறாங்களில்ல பாஸ்.

நானே ஈ ஓட்ட வேண்டிக் கிடக்கு, அதான் இடக்கு முடக்கான தலைப்பு வைத்தேன் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி - Prakash


என்னை விட உன்னழகை ரசிக்க யாருமில்லையா>>>>

நான் இருக்கேன் மாப்ளே! ஹி..ஹி..ஹி..//

மவனே, பிச்சுப் புடுவேன் பிச்சி...
அண்ணியைப் பார்த்து என்னா வார்த்தை பேசுறீங்க;-))

Mahan.Thamesh said...
Best Blogger Tips

சின்ன இடை கொண்ட உனை அன்னமென்பதா
கண்ணில் உனை வைத்து நானும் கவிதை சொல்வதா?
என்னை விட உன்னழகை ரசிக்க யாருமில்லையா
பெண்ணே உந்தன் பூவிதழை நான் சுவைக்க ஆசையில்லையா?
மின்னும் உந்தன் வண்ணம் கண்டு,
மேனியெங்கும் மோகம் கொண்டு
பெண்ணே உனை(ப்) பார்க்க ஏங்கி நிற்கிறேன்
கண்ணில் காமம் தனை ஒளித்து காதலிக்கிறேன்
வன்னி(க்) காட்டில் தொலைந்த உனைத் தேடி காத்திருக்கிறேன்!!
தேடுங்கள் கிடைக்கும் வாழ்த்துக்கள் அண்ணா அத்தனை வரியும் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது.
தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும் தேடுங்கள் கிடைக்கும் என்றார் இயேசு

நிரூபன் said...
Best Blogger Tips

@Mahan.Thamesh


அதுதான் அ தொடங்கி சகல எழுத்தினையும் கோர்த்து கோர்வையாக்கி உங்களுக்கு ஒரு பாமாலை பாடனும் ஏன்னு ஆசை முடியல்லியே சாமி//

பாஸ்...இது ரொம்ப ஓவர்!!

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

என்னை விட உன்னழகை ரசிக்க யாருமில்லையா>>>>

நான் இருக்கேன் மாப்ளே! ஹி..ஹி..ஹி..//

மவனே, பிச்சுப் புடுவேன் பிச்சி...
அண்ணியைப் பார்த்து என்னா வார்த்தை பேசுறீங்க>>>>

நிரு தம்பி.... அண்ணி மேல இம்புட்டு மரியாதையா? ஹி..ஹி..

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி - Prakash


எவ்வளவுன்னு சொல்லு.. சி.பி கிட்ட வாங்கி தர்றேன்.//

என்னய்யா ஐஞ்சை, பத்தையா கேட்கப் போறேன்,
ஒரு ஐம்பதாயிரம்
ஹி...ஹி...

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

என்னய்யா ஐஞ்சை, பத்தையா கேட்கப் போறேன்,
ஒரு ஐம்பதாயிரம்
ஹி...ஹி...>>>>

யோவ்... இது உனக்கே ஓவரா இருக்கு...

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி - Prakash


நிரு தம்பி.... அண்ணி மேல இம்புட்டு மரியாதையா? ஹி..ஹி..//

ஜனங்களே, இப்ப கூட ஒரு நல்ல வார்த்தையா இவரு சொல்வார் என்றா,
அண்ணி மேல....
ஹி...ஹி...
ஐயோ ஐயோ!

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

ஜனங்களே, இப்ப கூட ஒரு நல்ல வார்த்தையா இவரு சொல்வார் என்றா,
அண்ணி மேல....
ஹி...ஹி...
ஐயோ ஐயோ!>>>>

அழாதேடா தம்பி... அண்ணிகிட்ட சொல்லி பிஸ்கட் வாங்கி தர சொல்றேன்....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

அப்பவும் சொன்னான்! எடேய்....கறுப்போ சிவப்போ, கட்டையோ, நெட்டையோ யாராவது ஒருத்தியப் பார்த்து கட்டு எண்டு! கேட்டாத்தானே!

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

ஓட்ட வடை வாங்க... நிருபனுக்கு நல்லா அறிவுரை சொல்லுங்க///

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


அப்பவும் சொன்னான்! எடேய்....கறுப்போ சிவப்போ, கட்டையோ, நெட்டையோ யாராவது ஒருத்தியப் பார்த்து கட்டு எண்டு! கேட்டாத்தானே!//

தாங்களும் இந்தக் கூட்டத்தினுள் இருக்கிறீங்களா குருவே!
அது சரி, நீங்க சொல்லுற எல்லாத்தையும் கட்டவா முடியும்;-))

நிரூபன் said...
Best Blogger Tips

@Mahan.Thamesh

தேடுங்கள் கிடைக்கும் வாழ்த்துக்கள் அண்ணா அத்தனை வரியும் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது.
தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும் தேடுங்கள் கிடைக்கும் என்றார் இயேசு//

அது சரி, நீங்க சொல்லுற மாதிரித் தேடினாலு,
அவ தான் கண்டுக்க மாட்டேங்கிறாவே.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

அந்த பரந்தன் சந்தி, பரமலிங்கம் விதானைன்ர பெட்டை பாமினிக்கு என்ன குறைச்சல் கேக்கிறன்? அட அவள் கொஞ்சம் ஆள் கட்டை! அதுக்காக மாட்டன் எண்டு சொல்லுறதே! உவனுக்கு கலியாணம் பேசினதும் போதும், என்ர மோட்டச்சைக்கிளுக்கு டயர் தேஞ்சதும் போதும்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

அந்த பரந்தன் சந்தி, பரமலிங்கம் விதானைன்ர பெட்டை பாமினிக்கு என்ன குறைச்சல் கேக்கிறன்? அட அவள் கொஞ்சம் ஆள் கட்டை! அதுக்காக மாட்டன் எண்டு சொல்லுறதே! உவனுக்கு கலியாணம் பேசினதும் போதும், என்ர மோட்டச்சைக்கிளுக்கு டயர் தேஞ்சதும் போதும்!//

அவளை விட, எனக்கு சிந்துவைத் தான் பிடிச்சிருக்கு புறோக்கர். அவள் தான் உங்களை விரும்புறாளே;-))

ஹி...ஹி....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

விசுவமடு ஏகாம்பரத்தாரின்ர பெட்டை.... அவள் கண்மனியோ... என்னோ ஒரு பேர்! அவளுக்கு என்ன குறைச்சல்! இத்தனைக்கும் ஒரே ஒரு பெட்டை! அதையேன் மாட்டன் எண்டு சொன்னவன்?

அவளுக்கு கொஞ்சம் பல்லு மிதப்பாம்! அட பல்லு மிதப்பெண்டா இனி அவள் வாழுறேலையே!

அவளைக் கட்டியிருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமே!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

விசுவமடு ஏகாம்பரத்தாரின்ர பெட்டை.... அவள் கண்மனியோ... என்னோ ஒரு பேர்! அவளுக்கு என்ன குறைச்சல்! இத்தனைக்கும் ஒரே ஒரு பெட்டை! அதையேன் மாட்டன் எண்டு சொன்னவன்?

அவளுக்கு கொஞ்சம் பல்லு மிதப்பாம்! அட பல்லு மிதப்பெண்டா இனி அவள் வாழுறேலையே!

அவளைக் கட்டியிருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமே!//

புறோக்கர், நீங்க சொல்லுறதெல்லாம் ஓக்கே தான்,
ஆனால் என் டேஸ்ட்டுக்கு,
அச்சுப் பிசகாமல் பாலப் பழம் போல பொட்டை வேண்டும்,
கொண்டு வர முடியுமோ?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

சரி உள்நாட்டுக்கதான் உவனுக்கு ஒண்டையும் புடிக்கேல வெளினாட்டிலையாவது பாப்பம் எண்டு கனடாவில ஒரு பகுதி கேட்டு வந்தது! உவன நம்பி நானும் ஓம் எண்டு போட்டன்! துலைவான் கடைசி நேரத்தில கழுத்தறுத்துப் போட்டான்!

அவள் இப்ப வேற கலியாணம் கட்டி நல்லாத்தானே இருக்கிறாள்! என்ன பெட்டை கொஞ்சம் குண்டு! உதுகள பாக்கேலுமே!

பேசாமல் கலியாணத்த கட்டி அங்க போய் செட்டில் ஆகுவம் எண்டு இல்ல! இப்ப கிடந்து காயுது! உது தேவையோ?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

அவள் இப்ப வேற கலியாணம் கட்டி நல்லாத்தானே இருக்கிறாள்! என்ன பெட்டை கொஞ்சம் குண்டு! உதுகள பாக்கேலுமே!

பேசாமல் கலியாணத்த கட்டி அங்க போய் செட்டில் ஆகுவம் எண்டு இல்ல! இப்ப கிடந்து காயுது! உது தேவையோ?//

யோ, குண்டு, பல்லு மிதப்பு இதை விட உங்க கிட்ட வேறு பொண்ணுங்க விபரமே இல்லையா புறோக்கர் ஐயா..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

இடையில கொஞ்சநாள் காதல் கூதல் எண்டு வெளிக்கிட்டார்! அதுவும் ஆரை காதலிச்சவர் தெரியுமே! ........... அட அவங்கள் ஆக்கள் ஒரு மாதிரி! பரம்பர வெட்டுக் கொத்துக்காரர்! அதுக்குள்ள போய் உவன் ஏன் விழுந்தவன் எண்டு நான் நேராத கோயில் இல்ல! வேண்டாத தெய்வம் இல்ல!

ஆறு மாசம் ரெண்டு பேரும் வலு குஷியா காதலிச்சினம்! கடைசியா என்ன நடந்தது! அவங்கள் ஒருனாள் கூட்டமா வந்து உவரை வெட்ட எல்லோ வெளிக்கிட்டாங்கள்

பேந்து நான் கையில கால்ல விழுந்து கெஞ்சி மண்டாடியெல்லே ஆளை கொண்டு வந்தனான்!

கிறகம்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

ஆறு மாசம் ரெண்டு பேரும் வலு குஷியா காதலிச்சினம்! கடைசியா என்ன நடந்தது! அவங்கள் ஒருனாள் கூட்டமா வந்து உவரை வெட்ட எல்லோ வெளிக்கிட்டாங்கள்

பேந்து நான் கையில கால்ல விழுந்து கெஞ்சி மண்டாடியெல்லே ஆளை கொண்டு வந்தனான்!

கிறகம்//

எங்களூர்க் காதல்களை பிச்சுப் பிச்சு வைக்கிறீங்க, ஆனால் கவிதையப் பற்றிக் கொஞ்சம் சொன்னால் சந்தோசமா இருக்குமெல்லே.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

என்னது பாலபழம் போல பெட்டை வேணுமோ! இனி நான் பெத்துதான்ரா உனக்கு தரவேணும்!

மகேஸ் அக்கா அப்பவும் சொன்னவா.... உவன் கண்ட கண்ட சினிமாப் படங்கள பாத்து கெட்டுப் போறான்! உவனுக்கு உந்த டீவி டெக்குகள் வேண்டிக் குடுக்காதேங்கோ எண்டு!

அவள் ஆரோ சினிமாக்காரி சிம்மிரனோ அம்மிரனோ அவளமாதிரி எல்லெ பெட்டை வேணும் எண்டு கொஞ்சனாளா திமிர் எடுத்துக்கொண்டு திரிஞ்சவர்......!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

கவிதையோ... அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு! அதில பழுதில்ல!

இல்ல நான் என்ன சொல்ல வாறன் எண்டா, நேர காலத்துக்கு ஒரு கலியாணத்த கட்டியிருந்தா இப்பிடி ஏனப்பா கவிதையள் எழுத வேண்டி வருது!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

இல்ல நான் என்ன சொல்ல வாறன் எண்டா, நேர காலத்துக்கு ஒரு கலியாணத்த கட்டியிருந்தா இப்பிடி ஏனப்பா கவிதையள் எழுத வேண்டி வருது!//

அதுக்கு பொம்பிளை ஓம் என்று சொல்ல வேணுமெல்லே மாப்பிளை

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

இல்ல நான் என்ன சொல்ல வாறன் எண்டா, நேர காலத்துக்கு ஒரு கலியாணத்த கட்டியிருந்தா இப்பிடி ஏனப்பா கவிதையள் எழுத வேண்டி வருது!//

அதுக்கு பொம்பிளை ஓம் என்று சொல்ல வேணுமெல்லே மாப்பிளை

June 10, 2011 12:49 AM

பின்ன ஏன் வலிய வந்த சம்மந்தத்த விட்டனி?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


பின்ன ஏன் வலிய வந்த சம்மந்தத்த விட்டனி?//

பொம்பிளையை எனக்கும் பிடிச்செல்லே இருக்கனும் புறோக்கர்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

அந்த இணுவில் பகுதி பிடிச்சிருக்குதெண்டுதானே சொன்னதுகள்! அதை ஏன் வேண்டாம் எண்டு சொன்னனி! நல்ல சீதனமும் தாறதெண்டுதானே சொன்னதுகள்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

அந்த இணுவில் பகுதி பிடிச்சிருக்குதெண்டுதானே சொன்னதுகள்! அதை ஏன் வேண்டாம் எண்டு சொன்னனி! நல்ல சீதனமும் தாறதெண்டுதானே சொன்னதுகள்!//

அப்பா கொழும்புக்கு வந்தாப் பிறகு, ஊரில் உள்ள சாதி குறைவான பொண்ணுங்களை விட, கொழும்பில் உள்ள பொண்ணுங்கள் தான் நல்லம் என்று என் மனசை மாற்றிட்டார் புறோக்கர். அதான்,
அரசனை நம்பி புருசனை இழந்த கதையா என் கதை இப்போ ஆகிட்டு.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

சரியடாப்பா உன்னால நானும் எல்லெ கட்டாம இருக்கிறன்! நீ இளம் பெடியன் கவிதைய எழுதியாவது, காலத்த ஓட்டுறாய்! நான் என்ன செய்யிறது?

அப்ப எனக்கொரு முடிவ சொல்லு ?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

சரியடாப்பா உன்னால நானும் எல்லெ கட்டாம இருக்கிறன்! நீ இளம் பெடியன் கவிதைய எழுதியாவது, காலத்த ஓட்டுறாய்! நான் என்ன செய்யிறது?

அப்ப எனக்கொரு முடிவ சொல்லு ?//

மனசிற்குப் பிடிச்ச பிரெஞ்சு காரியைப் பார்த்து ஐ லவ் யூ சொல்லு மாப்பிளை.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

அவளுகளுக்கு காசு குடுத்து அண்டாது! அதோட அதுகள கட்டி குடும்பம் நடத்தேலுமே! இடையில அறுத்துக்கொண்டு ஓடுங்கள்!

நீ பேசாமல் அந்த ராயலிங்கத்தார்ர வனிதாவ ஒருக்கா......

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

அவளுகளுக்கு காசு குடுத்து அண்டாது! அதோட அதுகள கட்டி குடும்பம் நடத்தேலுமே! இடையில அறுத்துக்கொண்டு ஓடுங்கள்!

நீ பேசாமல் அந்த ராயலிங்கத்தார்ர வனிதாவ ஒருக்கா......//

வனிதாவிற்கு இப்ப இரண்டாம் கலியாணம் ஆகி, மூன்று பிள்ளைகளும் இருக்காம் மாப்பிளை..

ஹி...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

அவள் தாயாக்களோட சாவச்சேரிலதானே இருக்கிறாள்! 18 வரியத்துக்கு முதல் அவளும் நானும் ஒண்டா...........



படிச்சனாங்கள்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

அடேய் நிரூபன்..... எனக்கும் முன்பக்கத்தால வெல்மூடி ஆகிக்கொண்டு போகுது! இஞ்ச தனிய கிடந்து காயுறன்

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

அடேய் நிரூபன்..... எனக்கும் முன்பக்கத்தால வெல்மூடி ஆகிக்கொண்டு போகுது! இஞ்ச தனிய கிடந்து காயுறன்//

இன்னும் கொஞ்சக் காலம் வெயிட் பண்ணுங்க பாஸ்,,

முழுசா மண்டையில மயிர் கொட்டினால் தான் உங்களுக்கு உள்ளூரில் நல்ல மரியாதை கிடைக்கும்,
அதாவது வெளி நாட்டு வெல் மூடி மாப்பிளைகளுக்குத் தான் உள் நாட்டில் இருந்து அழகான பெண் கொடுப்பாங்கள்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

சரியடாப்பா நான் போப்போறன்! கவிதையேல்லம் கன கச்சிதமா வந்திருக்கு! நான் முதலே சொன்னான் தானே நீ ஒரு வலு விண்ணன் எண்டு!

அந்த ஏறாவூர் கவிதை...... ஹி ஹி ஹி சிரிப்பு அடக்க முடியேல!

பின்ன வரட்டே!

Unknown said...
Best Blogger Tips

பழையதை இன்னும் மறக்கலையோ... ஹ்ம்ம் நடத்து நடத்து

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

அந்த ஏறாவூர் கவிதை...... ஹி ஹி ஹி சிரிப்பு அடக்க முடியேல!

பின்ன வரட்டே!//

அந்த ஏறாவூர் ஆள் நீங்க இல்லைத் தானே...

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@டி.சாய்

பழையதை இன்னும் மறக்கலையோ... ஹ்ம்ம் நடத்து நடத்து//

எப்புடி மச்சி மறக்க ஏலும்?
ஹி....ஹி....

மதுரை சரவணன் said...
Best Blogger Tips

அருமை...வாழ்த்துக்கள்

தனிமரம் said...
Best Blogger Tips

அண்ணா கவிதைகள் பிரமாதம் உங்களுக்கேற்ற பிலாப்பழம் பிரென்ஸ்சுக்காரிதான் ஓட்டை வடையிடம் விட்டால் நல்ல வடிவாக முடிப்பார் கூடியவிரைவில் மாப்பிள்ளைக் கோலம் கானும் வரம் கிடைக்கட்டும் அப்படியே அந்த மோதிரத்தையும் அனுப்பி விடுங்க இந்த பச்சை மண்ணுக்கு?

தனிமரம் said...
Best Blogger Tips

ராசா உன் அழகுக்கு ஒரு காந்திமதியோ ஒரு கோவை சரளாவோ கிடைக்காமலா போவாள் கவலையை விடு வன்னி தாண்டலாம் நம்பிக்கை இருந்தால்

தனிமரம் said...
Best Blogger Tips

எல்லாரும் பெட்டிப் பாம்பா எப்பமாறுவினம் என்று ஆராட்சி செய்தனிங்களா அண்ணா!

தனிமரம் said...
Best Blogger Tips

ஏகாம்பரம் மாட்டர் ஊருக்கே தெரியுமோ! பாவம் அந்தாளு இருக்கும் ஜெயில் எதைய்யா சின்ன ராஜா!கொஞ்சம் லிங்கு குடு கண்ணா!

Anonymous said...
Best Blogger Tips

வணக்கம்பாஸ் .)

Anonymous said...
Best Blogger Tips

////கலியாணம் கட்டச் சொல்லி
கசின் ஓட்ட வடை சொல்லுறான்;
பலியாடு நானாகப் பார்த்துச் சிரிக்கவோ?
விலையின்றி மோதிரங்கள், விளையாடப் பல பொருட்கள்
சுளையாக கிடைத்திடுமாம்- ஆனாலும் அவனோ
சும்மா கிடந்த சங்கை ஊதி(க்) கெடுத்திடப் போடுகிறான் திட்டம்
சுதந்திரத்தை நான் இழந்து பெட்டிப் பாம்பாய் ஆகுவதில்
அவனுக்கு இப்போது இருக்கிறதாம் இஷ்டம்! //// பாத்துகீத்து கட்டுங்க பாஸ் ,, புரோக்கர் செலவு மிச்சம் தானே .......... ஆமா எத்தனையாவது கல்யாணம் .ஹிஹிஹி

Anonymous said...
Best Blogger Tips

எஞ்ஜினியர் ஏகாம்பரம் ஏறாவூரு போனார்
றஞ்சினியை பைக்கில் ஏற்றி லவ்சு விட்டுப் பார்த்தார்
அஞ்சு மணி ஆனதுமே அம் மணமாய் ஆனார்
பஞ்சு மெத்தை மீதினிலே பம்பரமாய் சுழன்றார்
வஞ்சியவள் மொழி கேட்டு வாழ்க்கையினை இழந்தார்
பஞ்சணைக்கு(ப்) பதிலாய் ஜெயில் கம்பியிற்குள் கிடந்தார்! /// ஆகா ஆகா, சந்தம் தப்பாது பின்னி பெடல் எடுத்திறிக்கீங்க.. டி ஆர் கூட தோத்துபோவாரு போல .......

Anonymous said...
Best Blogger Tips

////சின்ன இடை கொண்ட உனை அன்னமென்பதா
கண்ணில் உனை வைத்து நானும் கவிதை சொல்வதா?
என்னை விட உன்னழகை ரசிக்க யாருமில்லையா
பெண்ணே உந்தன் பூவிதழை நான் சுவைக்க ஆசையில்லையா?
மின்னும் உந்தன் வண்ணம் கண்டு,
மேனியெங்கும் மோகம் கொண்டு
பெண்ணே உனை(ப்) பார்க்க ஏங்கி நிற்கிறேன்
கண்ணில் காமம் தனை ஒளித்து காதலிக்கிறேன்
வன்னி(க்) காட்டில் தொலைந்த உனைத் தேடி காத்திருக்கிறேன்!!/// நெசமாவே நல்லாருக்கு....

Anonymous said...
Best Blogger Tips

///விந்தை பல புரிந்து என்
வீரம் காட்டுவேன் வா!!/// ஹிஹிஹி உங்கட வித்தைய பாத்து தான் பயந்து வராம நிக்கிறா போல...

சுதா SJ said...
Best Blogger Tips

கவிதை வழமை போல் சூப்பர் தான் அண்ணா
ஒரு உண்மை சொல்லட்டா
கவிதைய விட நீங்களும் ஓட்டவடையும் பேசிகொண்டது
வெரி நைஸ் பாஸ்

Anonymous said...
Best Blogger Tips

இண்டைக்கு பாட்டிமார் கனவில வரேல்லையா பாஸ் ஹிஹிஹி ..நான் நாளைக்கு வாறன் ......

டக்கால்டி said...
Best Blogger Tips

Intha paiyanukku Mutthiduchu...

ஹேமா said...
Best Blogger Tips

சரி...சரி பகிடியாக் கவிதை போட்டுக் காட்டி கல்யாண ஆசை வந்தாச்சு எண்டு சொல்ற மாதிரி இருக்கு.சுவிஸில ஒரு பொம்பிளை பாக்கவோடா பொடியா.
வன்னிக்காட்டில துலைச்சவளை இங்க பிடிச்சிடலாம் !

உணவு உலகம் said...
Best Blogger Tips

//கலியாணம் கட்டச் சொல்லி
கசின் ஓட்ட வடை சொல்லுறான்;
பலியாடு நானாகப் பார்த்துச் சிரிக்கவோ?//
எல்லாம் ஒரு பொது நலம்தான்!

உணவு உலகம் said...
Best Blogger Tips

//என்னை விட உன்னழகை ரசிக்க யாருமில்லையா
பெண்ணே உந்தன் பூவிதழை நான் சுவைக்க ஆசையில்லையா?//
கவிதை, கவிதை.காதலனின் நியாயமான ஆசைதான்!

உணவு உலகம் said...
Best Blogger Tips

ஒவ்வொரு வரியிலும் உங்கள் தனித்திறமை பளிச். வாழ்த்துக்கள். அறுபது வயதிலாவது, தேத்திடுவீங்களா?

உணவு உலகம் said...
Best Blogger Tips

தமிழ்மணம் ஏழு!

ரிஷபன் said...
Best Blogger Tips

காதல் மனசு விளையாடும் கவிதைகள்..

vanathy said...
Best Blogger Tips

கலியாணம் கட்டச் சொல்லி
கசின் ஓட்ட வடை சொல்லுறான்;//

அவர் உங்க கஸினா???
நையாண்டிக் கவிதைகள் ரசித்தேன்.

Unknown said...
Best Blogger Tips

//விலையின்றி மோதிரங்கள், விளையாடப் பல பொருட்கள்
சுளையாக கிடைத்திடுமாம்//
என்னாலே சொல்றீங்க...விளையாட விளையாட்டுசாமானும் குடுப்பாங்களா??
அண்ணே அண்ணே அப்போ நானும் கல்யாணம் கட்டப்போறேன் அண்ணே...
நல்லா விளையாடலாம்லே!!!

Unknown said...
Best Blogger Tips

//எஞ்ஜினியர் ஏகாம்பரம் ஏறாவூரு போனார்/
ஏகாம்பரம் அடிக்கடி உங்க வாழ்க்கையில க்ரோஸ் ஆகிறார் போல!!!

Unknown said...
Best Blogger Tips

//பெண்ணே உந்தன் பூவிதழை நான் சுவைக்க ஆசையில்லையா?///
ஆமா இப்பிடி இப்பிடி அலையிறது அப்புறம் கல்யாணம் எண்டோன ஆடு எண்டுறது
என்ன ஆஹ??பிச்சு பிச்சு

Unknown said...
Best Blogger Tips

//பெண்ணே உந்தன் பூவிதழை நான் சுவைக்க ஆசையில்லையா?///
ஆமா இப்பிடி இப்பிடி அலையிறது அப்புறம் கல்யாணம் எண்டோன ஆடு எண்டுறது
என்ன ஆஹ??பிச்சு பிச்சு

Unknown said...
Best Blogger Tips

// இளமை(ச்)
சந்தமது கொண்டு சரசமாடுவேன்
///
ஓட்டவடை சொன்னதை தான் நானும் சொல்கிறேன்...சீக்கிரமா கழுத்தை நீட்டுங்க பாஸ்

Unknown said...
Best Blogger Tips

மாப்ள........வீரம் காட்டும் இடமா விவேகம் காட்டும் இடமா ஹிஹி!

Ashwin-WIN said...
Best Blogger Tips

//எஞ்ஜினியர் ஏகாம்பரம் ஏறாவூரு போனார்///
இது து துதான் மாப்புள எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.
அப்புறம் ஒரு பலியாடு தயார்.. சாரி சாரி மாப்புள தயார்.. கெட்டி மேலாம் கெட்டி மேளம .. டும் டும் டும்.
அப்புறம் என்ன //விந்தை பல புரிந்து என்
வீரம் காட்டுவேன் வா!//

Mathuran said...
Best Blogger Tips

//சின்ன இடை கொண்ட உனை அன்னமென்பதா
கண்ணில் உனை வைத்து நானும் கவிதை சொல்வதா?
என்னை விட உன்னழகை ரசிக்க யாருமில்லையா
பெண்ணே உந்தன் பூவிதழை நான் சுவைக்க ஆசையில்லையா?//

சூப்பர் பாஸ்

Mathuran said...
Best Blogger Tips

//////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
இல்ல நான் என்ன சொல்ல வாறன் எண்டா, நேர காலத்துக்கு ஒரு கலியாணத்த கட்டியிருந்தா இப்பிடி ஏனப்பா கவிதையள் எழுத வேண்டி வருது!//

அதுக்கு பொம்பிளை ஓம் என்று சொல்ல வேணுமெல்லே மாப்பிளை

பின்ன ஏன் வலிய வந்த சம்மந்தத்த விட்டனி?/////

அட்டடடடடா.. இதுவேற நடக்குதா? ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... முடியல!!!!!!!

Unknown said...
Best Blogger Tips

அதேப்படி நான்க மட்டும் கஷ்டப்படும்போது நீங்க சுகந்திரமா திறிவிகளோ....நாட்டாமை சீக்கிரம் கட்ட சொல்லு தாலியை ,சகோ போடுங்க கல்யாண சாப்பாட்டை ...

செங்கோவி said...
Best Blogger Tips

சகோ, ஓட்டைவடை உங்களை புதை குழில தள்ளப் பார்க்காரு..பார்த்து உஷாரா இருந்துக்கோங்க.

செங்கோவி said...
Best Blogger Tips

//எஞ்ஜினியர் ஏகாம்பரம் ஏறாவூரு போனார்// எங்களை ஏன்யா வம்புல மாட்டி விடுறீர்?

Unknown said...
Best Blogger Tips

கவித கவித

//கண்ணில் காமம் தனை ஒளித்து காதலிக்கிறேன்
வன்னி(க்) காட்டில் தொலைந்த உனைத் தேடி காத்திருக்கிறேன்!!

இதுக்கெல்லாம் டைம் இருக்கா? இல்லை இதுவும் கவிதை பொய்யா?



//வஞ்சியவள் மொழி கேட்டு வாழ்க்கையினை இழந்தார்
பஞ்சணைக்கு(ப்) பதிலாய் ஜெயில் கம்பியிற்குள் கிடந்தார்!

யாரையோ சொல்ற மாதிரி இருக்கு, அது அவர் தானா?

//இளமை(ச்)
சந்தமது கொண்டு சரசமாடுவேன்
விந்தை பல புரிந்து என்
வீரம் காட்டுவேன் வா!!

இங்க வீரம் முக்கியமில்ல பாஸ், விவேகம் தான் முக்கியம்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

/////////
சுதந்திரத்தை நான் இழந்து பெட்டிப் பாம்பாய் ஆகுவதில்
அவனுக்கு இப்போது இருக்கிறதாம் இஷ்டம்!
////////


நம் கலாச்சாரம் இதைத்தன் மேன்மை என்கிறது என்ன செய்ய...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

//////
இன்பப் போர்க்களம்!

/////////

கவிதை அருமை....

எல்லாருடைய வாழ்க்கையிலும் இந்த இன்பபோர்க்களம் நிற்காமல் இருந்தால் வாழ்க்கையில் பிரச்சனைகளே கிடையாது...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

தமிழ்மணம் 14

Yoga.s.FR said...
Best Blogger Tips

நல்ல கவிதை!(சுட்டதோ?)வாழ்த்துக்கள்!லேட்டாப் போச்சு எண்டாலும் லேட்டஸ்டா வந்திட்டன்?!பாலப்பழம் கையில ஒட்டும்.எண்ணெய் போட்டுத் தான் கழுவ வேணும்!ஓட்டவடய நம்பாதயுங்கோ!பாழ்ங்கிணத்துக்க விழுத்திப் போடுவர்!

Yoga.s.FR said...
Best Blogger Tips

//Profession:ஒட்டுக் கேட்டல், நம்பர் நோட் பண்ணல்.///அடப்பாவி,இது வேறயா?தெரியாம வாய ச்சீ கைய குடுத்து கொம்பியூட்டரில தட்டி.................................................!"வாங்க, வந்த வேலையைப் பார்க்கலாமில்ல!"(புடிச்சுப் போடுவனோ?)

A.R.ராஜகோபாலன் said...
Best Blogger Tips

இளமை(ச்)
சந்தமது கொண்டு சரசமாடுவேன்
விந்தை பல புரிந்து என்
வீரம் காட்டுவேன் வா!!

சரிதான் மன்மத சகோ கைவசம்
நிறைய சரக்கு சங்கதிகள் உள்ளது போல இருக்கு
பல்லுல்லவர் பட்டாணி சாப்பிடறார்
கூந்தல் உள்ளவர் அள்ளி முடியறார்
இம்ம்ம் ....

சரி இத்தனை ஆசையை மனசில பூட்டி வச்சிக்கிட்டு
அப்புறமென்ன முதல் கவிதையில் ஆடு , சுதந்திரமுன்னு
கவிதை யாரை ஏமாத்த மன்மத சகோ

வடலியூரான் said...
Best Blogger Tips

கவிதை,கவிதை, கலக்கிறீங்க பொஸ் பிரமாதம் அதிலையும் அந்த இரண்டாவது பந்தி,சூபர்

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

காதல் மன்னன் கவிதை அண்ணன் ஆன மர்மம் என்ன? அட்டகாசம்

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

இரண்டாவது லிமரிக் வகையைப் போன்று இருக்கிறது!கல்யாணம் வேண்டாம்,காதல் போதும் என்கிறீர்கள்!

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

நிரூபா.. உண்மையான காதல்ல காமம் இருக்குமா? #டவுட்டு


>>கண்ணில் காமம் தனை ஒளித்து காதலிக்கிறேன்
வன்னி(க்) காட்டில் தொலைந்த உனைத் தேடி காத்திருக்கிறேன்!!

கவி அழகன் said...
Best Blogger Tips

கவிதை எல்லாம் அமரக்கலமாய் இருக்கு சிலேடையுடன் சிந்தனையும் தூவி எளிய நடையில் எடுத்தியம்பியிருக்கிறீர்கள் அதனை கவிதைகளும் அருமை நிருபன்.

vidivelli said...
Best Blogger Tips

கலியாணம் கட்டச் சொல்லி
கசின் ஓட்ட வடை சொல்லுறான்;
பலியாடு நானாகப் பார்த்துச் சிரிக்கவோ?

ஹாஹா!!!!

நல்லாயிருக்குங்க...


!!!!நம்ம பக்கமும் காத்திருக்கிறேன்!!!!

சசிகுமார் said...
Best Blogger Tips

நிரூ பதிவு சூப்பர்

NKS.ஹாஜா மைதீன் said...
Best Blogger Tips

அசத்தல் அண்ணா....எதை குறிப்பிட்டு சொல்வது? எல்லாமே டாப்...

shanmugavel said...
Best Blogger Tips

ரஜீவன இந்த மாதிரி வாரிட்டீங்களே சகோ ! good

கார்த்தி said...
Best Blogger Tips

கலக்கல் சார்! வழமை போல! எனக்கு ஒரு காதல் கவிதை வேணும்! எதுக்கெண்டு தெரியும்தானே? முதல் கவிதை பதிவில சொன்னனான்! சீக்கிரமா ரெடி பண்ணுங்கோ!!

jgmlanka said...
Best Blogger Tips

simply superb... thamil type panna vasathiyilla. Mannikkavum.

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரை சரவணன்

அருமை...வாழ்த்துக்கள்//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan


அண்ணா கவிதைகள் பிரமாதம் உங்களுக்கேற்ற பிலாப்பழம் பிரென்ஸ்சுக்காரிதான் ஓட்டை வடையிடம் விட்டால் நல்ல வடிவாக முடிப்பார் கூடியவிரைவில் மாப்பிள்ளைக் கோலம் கானும் வரம் கிடைக்கட்டும் அப்படியே அந்த மோதிரத்தையும் அனுப்பி விடுங்க இந்த பச்சை மண்ணுக்கு?//

சகோ நான் பாலப் பழத்தைப் பற்றித் தான் சொன்னேன், பிலாப்பழம் பற்றி அல்ல. நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan


ராசா உன் அழகுக்கு ஒரு காந்திமதியோ ஒரு கோவை சரளாவோ கிடைக்காமலா போவாள் கவலையை விடு வன்னி தாண்டலாம் நம்பிக்கை இருந்தால்//

ஏன்யா, என்னயப் பார்க்க அப்படியா உங்களுகுத் தெரிகிறது;-))

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.


வணக்கம்பாஸ் .)//

வணக்கம் பெரிய பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

///விந்தை பல புரிந்து என்
வீரம் காட்டுவேன் வா!!/// ஹிஹிஹி உங்கட வித்தைய பாத்து தான் பயந்து வராம நிக்கிறா போல...//

பாஸ்...பதிலைச் சொன்னால் தானே வரச் சொல்லி கேட்கலாம்.
ஹி...ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்

கவிதை வழமை போல் சூப்பர் தான் அண்ணா
ஒரு உண்மை சொல்லட்டா
கவிதைய விட நீங்களும் ஓட்டவடையும் பேசிகொண்டது
வெரி நைஸ் பாஸ்//

நாம பேசுறதையும் ரசிக்கிறீங்களா.
ஹி...ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்

கவிதை வழமை போல் சூப்பர் தான் அண்ணா
ஒரு உண்மை சொல்லட்டா
கவிதைய விட நீங்களும் ஓட்டவடையும் பேசிகொண்டது
வெரி நைஸ் பாஸ்//

நாம பேசுறதையும் ரசிக்கிறீங்களா.
ஹி...ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.


இண்டைக்கு பாட்டிமார் கனவில வரேல்லையா பாஸ் ஹிஹிஹி ..நான் நாளைக்கு வாறன் ......//

பழஞ் சோறு புளிச்சுப் போச்சு பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி

Intha paiyanukku Mutthiduchu...//

நிஜமாவா பாஸ்...
ஹி...ஹி...
இதுக்கு மருந்தேதும் இல்லையா.

நிரூபன் said...
Best Blogger Tips

@FOOD


ஒவ்வொரு வரியிலும் உங்கள் தனித்திறமை பளிச். வாழ்த்துக்கள். அறுபது வயதிலாவது, தேத்திடுவீங்களா?//

என்னது அறுபது வயதிலா...ஐயோ.. நான் இன்னமும் யூத் தான் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ரிஷபன்


காதல் மனசு விளையாடும் கவிதைகள்..//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@vanathy

கலியாணம் கட்டச் சொல்லி
கசின் ஓட்ட வடை சொல்லுறான்;//

அவர் உங்க கஸினா???
நையாண்டிக் கவிதைகள் ரசித்தேன்//

இல்லை....கசின் மாதிரி..
அட இது கூடவா உங்களுக்கு இவ்ளோ நாளா தெரியலை.
ஹி,...ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா

//விலையின்றி மோதிரங்கள், விளையாடப் பல பொருட்கள்
சுளையாக கிடைத்திடுமாம்//
என்னாலே சொல்றீங்க...விளையாட விளையாட்டுசாமானும் குடுப்பாங்களா??
அண்ணே அண்ணே அப்போ நானும் கல்யாணம் கட்டப்போறேன் அண்ணே...
நல்லா விளையாடலாம்லே!!!//

மவனே, உனக்கு கலி முத்திப் போச்சு.

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா

//பெண்ணே உந்தன் பூவிதழை நான் சுவைக்க ஆசையில்லையா?///
ஆமா இப்பிடி இப்பிடி அலையிறது அப்புறம் கல்யாணம் எண்டோன ஆடு எண்டுறது
என்ன ஆஹ??பிச்சு பிச்ச//

பாஸ்...கலியாணம் கட்டாமல்....ஆசை இருக்கும் தானே
ஹி....ஹி...அதன் வெளிப்பாடு தான் இக் கவிதைகள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@விக்கி உலகம்


மாப்ள........வீரம் காட்டும் இடமா விவேகம் காட்டும் இடமா ஹிஹி!//

அனுபவசாலிங்க தான் சொல்லனும் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@Ashwin-WIN

//எஞ்ஜினியர் ஏகாம்பரம் ஏறாவூரு போனார்///
இது து துதான் மாப்புள எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.
அப்புறம் ஒரு பலியாடு தயார்.. சாரி சாரி மாப்புள தயார்.. கெட்டி மேலாம் கெட்டி மேளம .. டும் டும் டும்.
அப்புறம் என்ன //விந்தை பல புரிந்து என்
வீரம் காட்டுவேன் வா!//

கலியாணச் சாப்பாடு சாப்பிடும் குறிக்கோளோடு தான் அலையுறீங்க.
ஹி...ஹி..
இருங்க இன்விட்டேசன் அனுப்பினா போச்சு.

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்


சூப்பர் பாஸ்//

நன்றி மாப்பு.

நிரூபன் said...
Best Blogger Tips

@ரியாஸ் அஹமது


அதேப்படி நான்க மட்டும் கஷ்டப்படும்போது நீங்க சுகந்திரமா திறிவிகளோ....நாட்டாமை சீக்கிரம் கட்ட சொல்லு தாலியை ,சகோ போடுங்க கல்யாண சாப்பாட்டை ...//

அடடா, மற்றவனோட துன்பத்தை ரசிக்கனும் எனும் நோக்கோடு ஒரு கூட்டமிருப்பது தெரியாற் போச்சே.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜீ...

:-)

நன்றி மாம்ஸ்

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி


சகோ, ஓட்டைவடை உங்களை புதை குழில தள்ளப் பார்க்காரு..பார்த்து உஷாரா இருந்துக்கோங்க.//

அவர் தள்ளினாலும்,
நீங்க என்னையை மேலே தூக்கிட மாட்டீங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

//எஞ்ஜினியர் ஏகாம்பரம் ஏறாவூரு போனார்// எங்களை ஏன்யா வம்புல மாட்டி விடுறீர்?//

அப்போ ஏகாம்பரத்திற்கும் உங்களுக்கும் ஏதோ தொடர்பிருக்கு;-))

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜ.ரா.ரமேஷ் பாபு


இதுக்கெல்லாம் டைம் இருக்கா? இல்லை இதுவும் கவிதை பொய்யா?//

பாஸ்...சும்மா ஒரு காமெடிக்கா எழுதின கவிதை பாஸ்..
நிஜமாவே இதுக்கெல்லாம் டைம் இல்லை.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜ.ரா.ரமேஷ் பாபு


இங்க வீரம் முக்கியமில்ல பாஸ், விவேகம் தான் முக்கியம்//

அனுபவசாலி சொல்றாரு..
ஹி, ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

# கவிதை வீதி # சௌந்தர் said...

எல்லாருடைய வாழ்க்கையிலும் இந்த இன்பபோர்க்களம் நிற்காமல் இருந்தால் வாழ்க்கையில் பிரச்சனைகளே கிடையாது...//

உண்மைதான் சகோ,
ஆனால் வயசு ஏறிட்டா என்ன பண்ணுவது;-))

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.s.FR


நல்ல கவிதை!(சுட்டதோ?)வாழ்த்துக்கள்!லேட்டாப் போச்சு எண்டாலும் லேட்டஸ்டா வந்திட்டன்?!பாலப்பழம் கையில ஒட்டும்.எண்ணெய் போட்டுத் தான் கழுவ வேணும்!ஓட்டவடய நம்பாதயுங்கோ!பாழ்ங்கிணத்துக்க விழுத்திப் போடுவர்!//

மாம்ஸ், சுட்டதெல்லாம் இல்ல..
ஹி...ஹி..
சுட்டதென்றால் ஒளிக்காமல் ஓப்பினா சொல்லிடுவன்,
இது உட்கார்ந்து யோசித்தது.

ஓட்ட வடையை நம்பின உங்க நிலமை நமக்குத் தெரியும் தானே;-))
அதனால் நான் எப்பவுமே அலேர்ட்

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.s.FR
//Profession:ஒட்டுக் கேட்டல், நம்பர் நோட் பண்ணல்.///அடப்பாவி,இது வேறயா?தெரியாம வாய ச்சீ கைய குடுத்து கொம்பியூட்டரில தட்டி.................................................!"வாங்க, வந்த வேலையைப் பார்க்கலாமில்ல!"(புடிச்சுப் போடுவனோ?)//

இது தானுங்க நம்ம தொழிலே...
ரெலி கொம்மினிக்கேசன்.
ஹி...ஹி...
இடக்கு முடக்கா பேசுறீங்களே;-))
குசும்பு...

நிரூபன் said...
Best Blogger Tips

@A.R.ராஜகோபாலன்

இளமை(ச்)
சந்தமது கொண்டு சரசமாடுவேன்
விந்தை பல புரிந்து என்
வீரம் காட்டுவேன் வா!!

சரிதான் மன்மத சகோ கைவசம்
நிறைய சரக்கு சங்கதிகள் உள்ளது போல இருக்கு
பல்லுல்லவர் பட்டாணி சாப்பிடறார்
கூந்தல் உள்ளவர் அள்ளி முடியறார்
இம்ம்ம் ....

சரி இத்தனை ஆசையை மனசில பூட்டி வச்சிக்கிட்டு
அப்புறமென்ன முதல் கவிதையில் ஆடு , சுதந்திரமுன்னு
கவிதை யாரை ஏமாத்த மன்மத சகோ//

அவ்...யாரையும் ஏமாற்ற இல்ல சகோ.
மனசில ஆசை இருந்தாலும்,
வயசு வர வேண்டுமெல்லே...
ஹி...ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@வடலியூரான்


கவிதை,கவிதை, கலக்கிறீங்க பொஸ் பிரமாதம் அதிலையும் அந்த இரண்டாவது பந்தி,சூபர்//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்


காதல் மன்னன் கவிதை அண்ணன் ஆன மர்மம் என்ன? அட்டகாசம்//

அடடா...சும்மா ஒரு சேஞ்சுக்காக எழுதினேன் சகோ, மற்றும்படி மர்மம் எல்லாம் இல்லே.

ஹி...ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@சென்னை பித்தன்


இரண்டாவது லிமரிக் வகையைப் போன்று இருக்கிறது!கல்யாணம் வேண்டாம்,காதல் போதும் என்கிறீர்கள்!//

ஐயா, லிமரிக் வகைக்குள் என் கவிதையா...
ஏதோ என்னால் முடிஞ்சதை கிறுக்கியிருக்கேன்.
கல்யாணம் வேண்டாம், காதலே போதும்.
நம்ம பாலிசியை சரியாத் தான் புரிஞ்சிருக்கிறீங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்


நிரூபா.. உண்மையான காதல்ல காமம் இருக்குமா? #டவுட்டு//

பாஸ்..பெரும்பாலான காதல்கள் இக் காலத்தில் உடல் இச்சையினைத் தணிக்கும் நோக்கில் தானே முளை கொள்கின்றன,
அத்தோடு இக் காலத்தில் உண்மையான காதல்கள் கூட காமம் என்ற தூர நோக்குப் பார்வையினைச் சார்ந்து தானே பிறக்கின்றன. ஆதலால் உண்மையான காதல் என்ற முகமூடி அணிந்து நிற்கும் காதல்களில் காமம் எனும் பார்வையும் கலந்தே இருக்கிறது என்பதனைத் தான் இங்கே சுட்டினேன் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@யாதவன்


கவிதை எல்லாம் அமரக்கலமாய் இருக்கு சிலேடையுடன் சிந்தனையும் தூவி எளிய நடையில் எடுத்தியம்பியிருக்கிறீர்கள் அதனை கவிதைகளும் அருமை நிருபன்.//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@vidivelli

கலியாணம் கட்டச் சொல்லி
கசின் ஓட்ட வடை சொல்லுறான்;
பலியாடு நானாகப் பார்த்துச் சிரிக்கவோ?

ஹாஹா!!!!

நல்லாயிருக்குங்க...


!!!!நம்ம பக்கமும் காத்திருக்கிறேன்!!!!//

நன்றி சகோ, கண்டிப்பாக உங்கள் பக்கமும் வாறேன்,

நிரூபன் said...
Best Blogger Tips

@சசிகுமார்


நிரூ பதிவு சூப்பர்//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@NKS.ஹாஜா மைதீன்


அசத்தல் அண்ணா....எதை குறிப்பிட்டு சொல்வது? எல்லாமே டாப்...//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@shanmugavel


ரஜீவன இந்த மாதிரி வாரிட்டீங்களே சகோ ! good//

என்ன செய்ய, அவன் நம்ம மச்சானாச்சே.

நிரூபன் said...
Best Blogger Tips

@கார்த்தி


கலக்கல் சார்! வழமை போல! எனக்கு ஒரு காதல் கவிதை வேணும்! எதுக்கெண்டு தெரியும்தானே? முதல் கவிதை பதிவில சொன்னனான்! சீக்கிரமா ரெடி பண்ணுங்கோ!!//

பாஸ், காதல் கவிதை என்ன, ஒரு காதல் காவியம் எழுதித் தர நான் தயார். ஆனால் அதனைக் கொடுத்து அடி வாங்கினால் நான் பொறுப்பாளி அல்ல,
இந்த டீலுக்கு ஓக்கே என்றா,
நானும் ஓக்கே.

நிரூபன் said...
Best Blogger Tips

@பூங்கோதை


simply superb... thamil type panna vasathiyilla. Mannikkavum.//

நன்றி சகோ.

சிவகுமாரன் said...
Best Blogger Tips

என் பள்ளிப் பருவத்தில் இது போன்ற கவிதைகளை நிறை எழுதி இருக்கின்றேன் .
அருமை,.

ம.தி.சுதா said...
Best Blogger Tips

////சிந்தையிலே பிடித்த பித்தம்
சீக்கிரமாய் தீர முத்தம்
தந்து விடு பெண்ணே தப்பில்லை////

யோவ் அப்பறம் விதானையின்ர பெட்டைக்கு யாரு பதில் சொல்றது...

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails