tag:blogger.com,1999:blog-5377138428900965733.post3969503962133368004..comments2024-02-22T06:50:07.010+05:30Comments on நாற்று - புரட்சி எப்.எம்: ஈழத்தில் சாதியம்- பிடிக்காதவர்கள் தயவு செய்து படிக்க வேண்டாம்நிரூபன்http://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-5377138428900965733.post-70763180672192578762011-08-15T16:45:34.543+05:302011-08-15T16:45:34.543+05:30யாழ்ப்பாணத்தின் மேலும் சில சாதிப் பெயர்களைத் தாங்க...யாழ்ப்பாணத்தின் மேலும் சில சாதிப் பெயர்களைத் தாங்கள் தவறவிட்டுள்ளீர்கள். அவையாவன, ஒன்று திமிலர் என்போர். இவர்கள் ஒரு வகையான மீன் பிடிக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இன்னொரு பெயர், "தவசியர்" என்பதாகும். இவர்கள் வலி வடக்கில் ஒரு ஊரில் மட்டுமே மிகக் குறைந்தளவில் வாழ்கின்றனர்.Avathaanyhttps://www.blogger.com/profile/15952599168410870462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-13833714184264518302011-03-01T09:35:37.224+05:302011-03-01T09:35:37.224+05:30//தமிழகத்திலோ ஐந்திணைகளும் ஒரே நேரத்தில் தோன்றியுள...//தமிழகத்திலோ ஐந்திணைகளும் ஒரே நேரத்தில் தோன்றியுள்ளதையே காண்கிறோம்.//<br /><br />ஒரு காலத்தில் வேளாளர்கள் அனைவருக்கும் கீழ்நிலையிலே இருந்துள்ளனர். பின்னர் நடந்த மாற்றங்களால் உயர்வுபெற்று இன்று உயர்சாதியினர் போல தோற்றமளிக்கும் நிலையை அடைந்துள்ளனர் என்பதையே இத்தளம் சொல்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-72958991909664519542011-03-01T09:22:38.245+05:302011-03-01T09:22:38.245+05:30இதுவும் அத்தளத்திளிருந்தே எடுக்கப்பட்டது.
http://...இதுவும் அத்தளத்திளிருந்தே எடுக்கப்பட்டது.<br /><br />http://www.sishri.org/kalathai.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-63159500720420548462011-03-01T08:56:07.075+05:302011-03-01T08:56:07.075+05:30http://www.sishri.org/tt2.html
இக்பால் செல்வன் - ...http://www.sishri.org/tt2.html<br /><br />இக்பால் செல்வன் - இதைக் காண்பீராக. வேளாளர்கள் சாதி ஆட்டம் போட்டிருக்கின்றனர் என்பதை மறுக்க மாட்டேன். அக்காலத்தில் இருந்த நிலையை இக்காலக் கண்ணோட்டத்தில் நோக்குதல் தவறு. <br /><br />நிரூபன் - இந்தத் தளம் உங்களுக்கு ஏதேனும் வகையில் உதவியாக இருக்கலாம். நேரமிருப்பின் இதைக் காணுங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-69065293438280489542011-02-28T02:06:00.716+05:302011-02-28T02:06:00.716+05:30நிரூபன்....சுகம்தானே.
அற்புதமான பதிவும் அலசல்களும...நிரூபன்....சுகம்தானே.<br /><br />அற்புதமான பதிவும் அலசல்களும் ஆரோக்யமான விவாதங்களும்.<br />இக்பால் செல்வன் இன்னும் நிறையவே தெளிவுபடுத்தியிருக்கிறார்.<br />நன்றி அவருக்கும்.<br /><br />வடையண்ணா சொன்னதுபோல சாதி கொஞ்சம் மறைந்திருக்கிறதே தவிர யாரும் மறந்துவிடவில்லை.சாதி என்றால் என்னவென்றே தெரியாத இங்கு பி்றந்து வளர்ந்த குழந்தைகளுக்குக்கூடச் சொல்லிக் கொடுத்து பிரித்துப் பார்க்க வைக்கிறார்கள்.இது நான் கண்ணால் கண்டது.ஒன்றும் தெரியாத அந்தக் குழந்தை முழுசியடிக்குது.இப்ப என்ன செய்யப்போறீங்கள்...இப்ப என்ன சொல்லப்போறீங்கள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-1671341326741603382011-02-26T16:38:35.281+05:302011-02-26T16:38:35.281+05:30சகோதரன் இக்பால் செல்வன் குறிப்பிடுவது போல மகாவம்சம...சகோதரன் இக்பால் செல்வன் குறிப்பிடுவது போல மகாவம்சம் விஜயனது வம்ச வரலாற்றினை கூறவில்லை. மாறாக அனுராதபுர காலப் பகுதியில் பிரபலம் வாய்ந்து விளங்கிய பௌத்த நிறுவனமான ‘மகாவிகாரை’ என்ற பௌத்தப் பள்ளியை முழுக்க முழுக்க மையப்படுத்தியே இந் நூலினை எழுதியுள்ளார் இம் மகாவம்ச ஆசிரியர். ஆகவே இதனை ஒரு தல புராணமாக ஏற்றுக் கொள்ளலாமே தவிர, விஜயனது வம்ச வரலாற்று நூலாக ஏற்றுக் கொள்ள முடியாது. இது இலங்கையில் உள்ள வரலாற்று ஆசிரியர்களான பேராசிரியர் இந்திரபாலா, கலாநிதி குணசிங்கம் முதலியோர்களின் ஆய்வின் வெளிப்பாடு.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-12001524518469245972011-02-26T16:34:19.123+05:302011-02-26T16:34:19.123+05:30இக்பால் செல்வன் said...
மகாவம்சம் விஜயனின் வம்ச வ...இக்பால் செல்வன் said...<br /> மகாவம்சம் விஜயனின் வம்ச வரலாறைத் தான் கூறுகிறது, ஏனைய குலத்தவர் தமக்கென மரபுக் கதைளை<br />வைத்திருந்ததாக அறிய முடிகிறது//<br /><br />மீண்டும் வணக்கங்கள் சகோதரா, <br /><br />இவ் இடத்தில் தாங்கள் விட்டிருக்கும் வரலாற்றுத் தவறைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இலங்கையின் ஆரம்ப கால வரலாறானது அனுராதபுர இராச்சிய வரலாற்றுடன் ஆரம்பமாகிறது. இங்கே தாங்கள் எடுகோளாகக் குறிப்பிடும் ‘பாளி நூலான மகாவம்சம்(பாளி மொழியில் எழுதப்பட்ட) இலங்கையின் ஆரம்ப கால வரலாற்றைப் பௌத்த- சிங்கள வரலாறாகக் காட்ட முனைந்திருக்கிறது. <br /><br />இந் நூல் எழுதப்பட்ட காலப் பகுதி கி.பி ஐந்தாம் நூற்றாண்டு காலப் பகுதி எனப் பொதுவாக அறிஞர்கள் கருதுவர். இந் நூலை எழுதியவர் மகாநாம தேரர் எனும் பௌத்த பிக்கு ஆவார். கிபி ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட போதும், இந் நூற்றாண்டிலிருந்து பத்து நூற்றாண்டுகள் முற்பட்ட வரலாற்றுத் தகவல்களை இந் நூல் தன்னகத்தே கொண்டுள்ளது.<br />வரலாற்று ஆய்வாளர்களினால் மகாவம்சம் ஒரு வரலாற்று நூல் என உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. <br /><br />கி.மு 300ம் ஆண்டினைத் தொடர்ந்து வருகின்ற பல வரலாற்றுச் செய்திகளை பிற கல்வெட்டு, இலக்கிய ஆதாரங்களுடன் ஒப்பிட்டு நோக்கும் போது சில நம்பகத்தன்மைகளை இந்த மகாவம்சம் கொண்டுள்ளது என்பதும் மறுப்பதற்கில்லை. <br /><br />‘இந் நூலின் அடிப்படை நோக்கம் பௌத்த மதத்தின் முக்கியத்துவத்தினை அக்கால மக்களின் ஆன்மீகத் தேவை கருதி ஆன்மீகத் திருப்திக்காகச் சொல்லுவதேயாகும் என இம் மகாவம்சத்தின் ஆசிரியரே குறிப்பிட்டுள்ளார்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-19864054503912103142011-02-25T10:18:06.634+05:302011-02-25T10:18:06.634+05:30//இன்றைய தமிழகத்து ஆதிக்கச் சாதிகள் மற்றும் ஈழத்து...//இன்றைய தமிழகத்து ஆதிக்கச் சாதிகள் மற்றும் ஈழத்து ஆதிக்கச் சாதிகள் - இவர்கள் எல்லோரும் வந்தேறிகள். சிங்களவர்கள், சமஸ்கிருதம் கலந்த மொழி பேசும் பூர்வகுடிகள்//<br /><br />//தமிழகத்து ஆதிக்கச் சாதியில் சிலர் வந்தேறிகள் உதா. பிராமணர், நாயக்கர், ரெட்டியார், போன்றோர். வேளாளர், வன்னியர், படையாச்சி, முதலியார், கௌன்டர் போன்ற வேளாளரின் உபசாதிகள் யாவும் தமிழகக்குடிகளாயினும், அவர்கள் இந்து மதத்தை ஏற்றுக் கொண்டு பிராமண வருணாசிரமத்தை இங்குத் திணித்தார்கள். இலங்கையில் வேளாளர் வந்தக் குடிகளே, பிற சாதிகளான நழவர், தானைக்காரர், கோவியர், கரவார் யாவரும் அந்நாட்டில் முதலில் குடியேறி வாழ்ந்து வந்த மக்கள்..... வேளாளர், கோவிகமர், பிராமணர், நாயக்கர் போன்றோர் தமிழ்நாடு ஊடாக அங்கு வந்தேறியவர்கள் என்பது எனது வாதம். சிங்கள் மக்களில் பெரும்பாலான சாதிகள் அங்கு வாழ்ந்த வந்த தமிழர்களே பின்னாளில் மலையாளிகளைப் போன்று சிங்களவர் ஆகி உள்ளனர். சேர நாட்டில் வந்த இந்து மதமும், சமஸ்கிருதமும் மலையாளிகளைத் தமிழர்களிடம் இருந்து பிரித்தது. தாமிரபரணி நாடான இலங்கையில் வந்த பௌத்த மதமும், பிராகிருதமும் சிங்களவர்களாக தமிழர்களை மாற்றியது என்பது எனது வாதம். இதைத் தான் இலங்கை வரலாற்று ஆசிரியரான பரணவிதானவும் கூறுகிறார். ஆனால் இனவெறிப் பிடித்த தமிழர்களும், சிங்களவர்களும் இதனை ஏற்க மறுக்கின்றனர்................ என்ன செய்ய இனவெறி இருந்தால் தானே சண்டையிட முடியும்................. மலையாளிகள் தமிழர்களின் சகோதரம் போல, சிங்களவரும் தமிழர்களின் சகோதரமே //Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-53483474639615489672011-02-25T10:11:35.435+05:302011-02-25T10:11:35.435+05:30பார்ப்பன ஆதிக்கச் சாதி ஊடுவரலால் கூட இணைந்துக் கொண...பார்ப்பன ஆதிக்கச் சாதி ஊடுவரலால் கூட இணைந்துக் கொண்ட வேளாளர், சத்திரியர்கள் போன்றவர்கள் தான் தீண்டாமைக் கொடுமையை தமிழகத்தில் நிகழ்த்தினார்கள். சோழருக்கு பின் சிதைந்து ஓடிய வேளாளரின் இடத்தை பின் வந்த நாயக்கர் நிறைப்பிக் கொண்டு வழிநடத்தினார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-67407128014300566462011-02-25T10:09:00.535+05:302011-02-25T10:09:00.535+05:30//அவர்கள் தான் சாதிவெறிக்கு மொத்த காரணம் என்பது மி...//அவர்கள் தான் சாதிவெறிக்கு மொத்த காரணம் என்பது மிகத் தவறான தகவலாகும். காரணம், வடஇந்தியாவைப் பொறுத்தவரையில் சாதி ஆதிக்கம் செலுத்துபவர்கள் விவசாயிகள் அல்ல. //<br /><br />வேளாளார் தான் மொத்தக் காரணம் என்றிலலை, ஆனால் வேளாளரின் ஆதிக்கத்தால் பரவிய இந்து மதம் தான் சாதிய வெறிக்கு முக்கிய காரணமாகும். வடநாட்டில் சாதி ஆதிக்கம் செலுத்தும் சாதிகள் பிராமணரும், சத்திரியரும், ஜாத் போன்ற விவசாய சாதிகளுமே ஆகும். இதே நிலைத் தான் தமிழகத்திலும் பிராமணரும், சத்திரியரான வன்னியரும், சூத்திரரான வேளாளருமே ஆகும். கேரளத்திலும் பிராமணரான நம்பூதிரிகளும், சத்திரியரான நாயர்களும் ஆகும்.......... இதே நிலைத் தான் யாழ்ப்பாணத்திலும் இருக்கின்றது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-23207208380512964402011-02-25T10:03:10.053+05:302011-02-25T10:03:10.053+05:30சாதி என்ற சொல் ஜாதி என்ற வடமொழிச் சொல் இதனை சிங்கள...சாதி என்ற சொல் ஜாதி என்ற வடமொழிச் சொல் இதனை சிங்களத்தில் ஜாதிய எங்கின்றார்கள். நான் கூறும் சாதியம் முழு இலங்கைக்கும் ஆனது அல்ல, மாறாக வடக்கே யாழ்ப்பாணத்தில் எப்படிச் சாதியம் முளைத்தது. அங்கு ஒடுக்கப்பட்ட சாதிகள் யாவரும் மண்ணின் மைந்தர்களே ! மாறாக தமிழர்களில் இருக்கும் வேளாளரும், சிங்களவர்களிலும் இருக்கும் கோவியரும் இந்தியாவில் இருந்து சோழப் படையெடுப்பால் வந்தேறி நாட்டை ஆக்கிரமித்தவர்கள். உதாரணமாக தமிழ்நாட்டுக்கு வந்த நாயக்கரைப் போல, தமிழ்நாட்டில் இருக்கும் நாயக்கர் சிலர் தெலுங்கு பேசி வருவதும், சிலர் தமிழராய் மாறியதும் போல வேளாளர் சிலர் சிங்களவர் ஆயினர். சிலர் தமிழராய் இருக்கின்றனர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-58841574487355070522011-02-25T09:59:51.562+05:302011-02-25T09:59:51.562+05:30//விக்ரமசிங்கே என்ற பெயரும், ராமநாயகே என்ற பெயரும்...//விக்ரமசிங்கே என்ற பெயரும், ராமநாயகே என்ற பெயரும், இன்றைய தமிழகத்தில் நிலவும் சமஸ்கிருதப் பெயர்களை விட, வடநாட்டில் இன்று நிலவும் பெயர்களுடன் அதிகம் ஒத்துப் போகின்றன //<br /><br />நீங்கள் யாழ்ப்பாணத்தவரா? அப்படி இருந்தால் உங்களுக்கு இந்த சந்தேகம் எழுந்திருக்காது. விக்கிரமசிஙகே என்ற சிங்களப் பெயரில் உள்ளதைப் போல ஈழத்தமிழர்களில் விக்கிரமசிங்கம், பூபாலசிங்கம், என்ற பெயர்கள் எல்லாம் அதிகம், அதே போல நாயக்கர் வழி பெயர்களான நாயக்கே என்ற பெயர் சிங்களத்தில் இருப்பது போல நாயக்கம் என்றப் பெயர் வட இலங்கையில் சர்வ சாதாரணம் அய்யா. முதலில் யாழ்ப்பாண போங்கள் அங்கே உள்ளவரோடு பார்த்துப் பழுகுங்கள் புரிந்துக் கொள்வீர்கள். அது மட்டுமின்றி சிங்கே ஆர்யா என்ற பெயரில் யாழ்ப்பாணத்தை 400 ஆண்டுகள் தமிழ் மன்னர்கள் ஆண்டுள்ளார்கள். அவர்கள் யாவரும் என்ன ஆரியரா? அந்த மன்னர்களே தமது குலத்துக்கு ஆரியச் சக்கரவர்த்தி என்று அழைத்தார்கள். அவர்கள் குலத்தில் வந்த அரசக் குடும்பத்தார் சிலர் எனக்கு நண்பர்கள் என்ற முறையில் கூறுகிறேன். ஆரியப் பெயர்கள் அக்கால கௌரவம் கருதி வைத்தார்களே ஒழிய தமிழர்களும், சிங்களவர்களும் திராவிடர்களே !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-10102399297514330762011-02-25T09:53:53.925+05:302011-02-25T09:53:53.925+05:30//தமிழில் கொஞ்சம் அல்ல நிறையவே சமஸ்கிருதம் கலந்திர...//தமிழில் கொஞ்சம் அல்ல நிறையவே சமஸ்கிருதம் கலந்திருக்கிறது, அதனால் தமிழ் ஆதிசமஸ்கிருதம் ஆகிவிடுமா? தமிழர்கள் ஆதிஆரியர்கள் ஆகிவிடுவோமா?//<br /><br />சும்மா காமெடிப் பண்ணாதீங்க சார் ! தமிழ் மொழியில் தான் இந்திய மொழிகளிலேயே சமஸ்கிருதம் மிகவும் குறைவாக கலந்துள்ளது............... சிங்களவத்தில் பாலி அதிகம் கலந்திருப்பதால் அவர்கள் ஆரியர் என்பது மடத்தனம். மலையாளத்திலும், தெலுங்கிலும் தான் சமஸ்கிருதம் அதிகம் கலந்துள்ளது. அதனால் அவர்கள் எல்லாரும் ஆரியரா? இன்றளவும் ஐரிஷ், வேளிஷ் மொழியில் ஆங்கிலம் கலப்புற்று இருப்பதால் செல்டிக் எல்லாம் ஜெர்மானியர்கள் ஆவார்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-44641805805405735572011-02-25T09:50:54.698+05:302011-02-25T09:50:54.698+05:30இன்று மலையாளிகள் அனைவரும் சமஸ்கிருதம் சார்ந்த மொழி...இன்று மலையாளிகள் அனைவரும் சமஸ்கிருதம் சார்ந்த மொழி பேசுவதால் அவர்கள் வடநாட்டில் இருந்தா வந்தார்கள். அவர்களும் 1000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களே ! அதே போல் தான் சிங்கள் மொழி பேசுபவர்களின் மொழியில் பாலி ஆதிக்கம் செலுத்துவதால் அவர்கள் யாவரும் வடநாட்டவர் என்பது மிகவும் தவறானக் கருத்து ஆகும்.<br /><br />// அதே போல மலையாளத்தையும் ஈழத்தமிழையும் உற்றுப் பாருங்கள் !!! இரண்டுக்கும் சில தொடர்பு இருக்கிறது, அது எப்படிச் சாத்தியம் ஆகியது, இடையில் இருந்த தென்பாண்டி மண்டலத்தைத் தாண்டி காற்றில் கலந்து வந்தததோ. அருகருகே இருக்கும் மொழிகளில் சொற்கலப்பு ஆவது இயற்கை. ஆனால் சிங்களத்தில் தமிழ் சொற்கள் கலந்துள்ள வேளையில், ஏன் ஈழத்தமிழில் சிங்கள்ச் சொற்கள் கலப்படம் ஆகவில்லை? விளக்க முடியுமா உங்களால் ....//<br /><br />//யாழ்ப்பாணத்தவர் சேர் சோழருக்கு இடைப்பட்டது என்றால் என்ன? பாண்டியராக இருப்பார்களோ?//<br /><br />விக்கிபீடியாவில் இருந்து நான் ஒரு சுட்டியைக் கொடுத்ததால் விக்கிபீடியா என்னும் குப்பையைத் தான் நான் படித்தேன் என எப்படி உங்களால் கூற முடியும். நான் நினைக்கிறேன் நீங்கள் அதைக் கூடப் படிப்பதில்லை என்று.<br /><br />//அங்கே வாழ்ந்த மக்களுக்குத் தெரியும் புரிதலில் எங்கே என்ன தவறு இருக்கிறது என்று//<br /><br />நீங்கள் எங்கே வாழ்ந்தவர் - எமது பாட்டனார் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர் என்றப் படியால் எனக்கு யாழ்ப்பாணத் தோழர்கள் இந்தியாவில் அதிகம் இருந்தமையால் எனக்குத் தெரிந்தவைகளை எடுத்து வைக்கின்றேன். நான் கூறுவது பிழை என்று ஆதாரப்பூர்வமாய் கூறினால் ஏற்றுக்கொள்வேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-7179527874126706482011-02-25T06:08:37.267+05:302011-02-25T06:08:37.267+05:30இறுதியாக ஒன்று - விவசாய வெள்ளாமை செய்தவர்கள் அவர்க...இறுதியாக ஒன்று - விவசாய வெள்ளாமை செய்தவர்கள் அவர்களின் விளைச்சலுக்கு கிடைத்த சந்தை காரணமாக பிற குடிகளின் பால் தொழில் ரீதியாக ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ளும் அதே நேரம், அவர்கள் தான் சாதிவெறிக்கு மொத்த காரணம் என்பது மிகத் தவறான தகவலாகும். காரணம், வடஇந்தியாவைப் பொறுத்தவரையில் சாதி ஆதிக்கம் செலுத்துபவர்கள் விவசாயிகள் அல்ல. தத்தம் தொழில்களைக் கொண்டு பண்டமாற்றம் செய்து ஓரளவு ஏற்றதாழ்வுகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த சமூகத்தில், தீண்டாமை என்ற பெயரில் சில இனக்குடிகள் தாழ்த்தப்பட்டதற்கு ஆரியப் பார்ப்பனர்களே காரணம். நாயக்கர்கள் பின் வந்தவர்களே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-5191164325329761972011-02-25T05:32:12.316+05:302011-02-25T05:32:12.316+05:30//வேளாளரின் வருகைக்கு பின்னரே சாதிய வெறி அங்கு அதி...//வேளாளரின் வருகைக்கு பின்னரே சாதிய வெறி அங்கு அதிகரித்துள்ளது.//<br /><br />அப்படியா?? சாதி என்ற சொல் எந்த மொழியில் இருந்து வந்தது என்று தெரியும் தானே? இனக்குடிகளாக தத்தம் தொழில் செய்து கொண்டு இருந்தவர்களை எல்லாம் வர்ணங்களாக பிரித்துப் போட்டது வேளாளர்களா? இது தெரியாமல் போயிற்றே எங்களுக்கு. (இதனைச் சொல்வதன் மூலம் வேளாளர்கள் செலுத்திய ஆதிக்கத்தை நான் நியாயப்படுத்தவில்லை என்று தெளிவு படுத்திவிடுகிறேன்)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-79631011033596841962011-02-25T04:58:05.983+05:302011-02-25T04:58:05.983+05:30இக்பால் நீங்களும் உடனுக்குடன் பதிலிட்டுக் கொண்டு இ...இக்பால் நீங்களும் உடனுக்குடன் பதிலிட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். விக்ரமசிங்கே என்ற பெயரும், ராமநாயகே என்ற பெயரும், இன்றைய தமிழகத்தில் நிலவும் சமஸ்கிருதப் பெயர்களை விட, வடநாட்டில் இன்று நிலவும் பெயர்களுடன் அதிகம் ஒத்துப் போகின்றன. மேலும், தமிழுடன் கலந்த சமஸ்கிருதம், ன் அல்லது ம் கொண்டு முடியும். ரஜீந்தர மற்றும் ராஜேந்திரன் - எது தமிழ் என்று சில காலம் வடநாட்டில் பிழைப்பு நடத்திய என்னால் சொல்ல முடியும். <br /><br />நீங்கள் நிரூபிக்க நினைப்பது, இன்றைய தமிழகத்து ஆதிக்கச் சாதிகள் மற்றும் ஈழத்து ஆதிக்கச் சாதிகள் - இவர்கள் எல்லோரும் வந்தேறிகள். சிங்களவர்கள், சமஸ்கிருதம் கலந்த மொழி பேசும் பூர்வகுடிகள். ஆஹா..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-39291379118648366332011-02-25T04:47:56.843+05:302011-02-25T04:47:56.843+05:30தமிழில் கொஞ்சம் அல்ல நிறையவே சமஸ்கிருதம் கலந்திருக...தமிழில் கொஞ்சம் அல்ல நிறையவே சமஸ்கிருதம் கலந்திருக்கிறது, அதனால் தமிழ் ஆதிசமஸ்கிருதம் ஆகிவிடுமா? தமிழர்கள் ஆதிஆரியர்கள் ஆகிவிடுவோமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-64775811138319463532011-02-25T04:45:22.531+05:302011-02-25T04:45:22.531+05:30//அப்போதையக் காலத்தில் இலங்கைத் தீவு முழுதும் ஒரே ...//அப்போதையக் காலத்தில் இலங்கைத் தீவு முழுதும் ஒரே மொழிப் பேசிய தமிழ்-வேடுவ-மணிப்பிரவாளம் கலந்த மொழி பேசப்பட்டுள்ளது.//<br /><br />சரி இன்று சிங்கள மொழியையும் உங்களது கூற்றுப்படி அதே கலப்பு கொண்ட மலையாளத்தையும் மற்றும் யாழ்பாணத் தமிழையும் ஆராய்ந்து பாருங்கள். மலையாளமும் யாழ்பாணத் தமிழும் மிக நெருங்கியதாகவும், சிங்களம் பாலியை நெருங்கியதாகவும் இருக்கும். சில தமிழ் சொற்கள் கலந்ததால் எல்லாம் சிங்களம் ஆதித் தமிழாகிவிடாது. மேலும் சிங்களத்தின் ஸ்க்ரிப்ட் அடிப்படை என்ன? மலையாளத்தின் ஸ்க்ரிப்ட் எதனை அடிப்படையாகக் கொண்டது? இதையும் பாருங்கள்.<br /><br />//விவசாயம் செய்ய உகந்தாத ஒரு மாவட்டத்தில் விவசாயக் குலம் நீடித்து இருக்க, விவசாயம் செய்யக் கூடிய பிற மாவட்டங்களில் அவர்கள் குறைவாக இருக்க காரணம் என்ன?//<br /><br />வேறன்ன? சிங்கள ஒடுக்குமுறை தான்.<br /><br />//யாழ்ப்பாண வேளாளர்கள் சோழ நாட்டுக் குடிகள் இல்லை என்று யாராவது தக்க ஆதரத்துடன் எடுத்து வைத்தால் ஆதரிக்கலாம்....//<br /><br />சோழ சேர ஆளுகைக்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது எனது அனுமானம்.<br /><br />//அதே போல சிங்கள் இனம் ஒட்டு மொத்தமும் வடநாட்டில் இருந்து வந்ததாக நம்பி வருவது பொய். //<br /><br />நீங்கள் வேளாளரா என்பது தெரியவில்லை. ஆனால் பார்ப்பனர் என்பது தெளிவாகிறது. <br /><br />நீங்கள் விக்கிப்பீடியாவில் இருந்து நிறைய படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அங்கே வாழ்ந்த மக்களுக்குத் தெரியும் புரிதலில் எங்கே என்ன தவறு இருக்கிறது என்று.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-50699229179977231032011-02-25T04:42:09.817+05:302011-02-25T04:42:09.817+05:30//ஆனால் வேளாளர்களைப் போல பிராமணர்கள் மேட்டுக் குடி...//ஆனால் வேளாளர்களைப் போல பிராமணர்கள் மேட்டுக் குடி எனும் கிறுக்குப் பிடித்தவர்களாகவோ//<br /><br />இதற்கு முக்கியக் காரணம் உண்டு, தமிழ்நாட்டில் உள்ள பிரமாணர்களின் கிறுக்குத்தனமும், ஈழவ பிரமாணர்களின் கிறுக்குத்தனமும் வெவ்வேறாய் இருப்பதை நான் பார்த்துள்ளேன். <br /><br /><br />அதாவது ஈழப் பிரமாணர்கள் நேரிடையாக வடநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படவில்லை.<br /><br />மாறாக உள்ளூர் தமிழ் சாதிகளில் இருந்தும் அல்லது மணமுறையாலும் தொடர்புப் பட்டிருக்க வேண்டும். <br /><br />வேளாளர் என்போர் வெளியில் இருந்து வந்தமையால் தமது ஆதிக்கத்தை பிற உள்ளூர் சாதிகள் மீது காட்டி தமது இருப்பை உறுதி செய்துள்ளனர். இதற்கு, சோழ பேரரசும், அதன் பின்னான் யாழ்ப்பாண அரசும் உதவி உள்ளன. அதனை தொடர்ந்து வந்த டச்சு, ஆங்கில அரசும் அவர்களுக்கு உதவின. போர்த்துகேய அரசு வேளாளருக்கு முரணாய் அமைந்தததால் தான் பிற சாதிகள் கத்தோலிக்கம் ஆகி இருக்க வேண்டும். <br /><br />இலங்கையின் விடுதலைக்குப் பின் அவர்களின் ஆதிக்கம் சிங்கள ஆதிக்கத்தால் நிலைகுழைந்து இருக்க வேண்டும். அந்தக் காலகட்டதில் ஈழ தலித்கள் சமூக விடுதலை வேண்டி போராடி இருத்தல் வேண்டும். <br /><br />ஈழப் போராட்டத்தில் கூட தலித்களின் பங்கு தான் அதிகம். பெரும்பாலான ஆதிக்கச் சாதி புலம் பெயர்ந்து விட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-9217106625278428832011-02-25T04:35:29.974+05:302011-02-25T04:35:29.974+05:30நல்லது சகோதரனே ! தங்களின் கருத்துகளும், பொறுமையான ...நல்லது சகோதரனே ! தங்களின் கருத்துகளும், பொறுமையான ஆழமான பதில்களும் என்னைக் கவர்ந்து உள்ளது. மேலும் இந்தப் பதிவை தொடர்பதிவாக எழுத எனது வாழ்த்துக்கள் .... <br /><br />வேளாளர் குடியில் பிறந்தாலும், வேளாளர் வரலாறை ஆய்வறிந்தாலும், வேளாளர் இடைக் காலங்களில் செய்த சாதியக் கொடுமைகளையும் ... அது இன்று வரை தொட்டு தொடர்வதையும் கடுமையாக நான் எதிர்க்கிறேன் ... .<br /><br />சாதிய வெறி ஓங்கிய யாழ்ப்பாணம் ஒரு சமத்துவ யாழ்பாணமாய், முற்போக்கு யாழ்பாணமாய், தமிழ் யாழ்பாணமாய் மாற வேண்டும்.. அதற்காக தங்களைப் போன்ற இளம்தலை முறையினரின் முன்வருதல் மிகவும் பாரட்டப் பட வேண்டிய விசயம்.......<br /><br />அதே போல யாழ்பாணத்தவர் தமக்கு முன் இருந்த வரலாறை அறிவியல் ரீதியாக எழுதாமல் விட்டுச் சென்றக் குறையை உம்மைப் போன்றவர்கள் முன் நின்று தொடர வேண்டுவது அவசியம். அதில் நம் சொந்தக் கருத்தை வைக்காமல்... அறிவியல் ரீதியாக அனைவரும் புரியும் படி தொடர வாழ்த்துக்கள்......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-5805208728873866612011-02-25T04:24:19.913+05:302011-02-25T04:24:19.913+05:30இக்பால் செல்வன் said...
நல்லதொரு முயற்சி நண்பரே ! ...இக்பால் செல்வன் said...<br />நல்லதொரு முயற்சி நண்பரே ! நீங்கள் இதனை உங்கள் பதிவில் விளக்கி விட்டு தொடர்ந்து இருந்தால் புரிந்துக் கொண்டு இருப்போம். எனதுப் பதில்கள் அனைத்துமே வரலாற்று ரீதியானது. இதில் சில சங்கடங்கள் ஏற்பட்டு இருந்தால் எம்மை மன்னிக்க ... //<br /><br />சகோதரம், சபாஷ் சரியான போட்டி, உங்களின் அறிவும், தேடலும் என்னை வியக்க வைக்கிறது. ஈழத்தில் பல பதிவர்கள் இருந்தும் அவர்களை விடவும் பல கடல் மைல்கள் தொலைவில் இருக்கும் உயிரின் உறவான நீங்கள், தாய்த் தமிழக சகோதரனான நீங்கள் எங்கள் ஈழம் பற்றி அதிக விடயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் எனும் போது மெய் சிலிர்க்கிறது அண்ணா.<br /><br />சகோதரம் உங்களின் தேடல், ஈழம் பற்றிய வரலாற்றினை அறியும் ஆர்வம், வாதிடும் திறமை ஆகியவற்றிற்கு வாழ்த்துக்கள் தோழா. தொடர்ந்தும் உங்களின் விவாத நோக்கிலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். <br /><br />இதில் எங்கள் அறியாமைகளை நீக்கித் தெளிவடைகிறோம். பிறகு எதற்கு மன்னிப்பு. அண்ணன் தம்பிகளிடம் மன்னிப்பு எனும் வார்த்தையை பயன்படுத்துவது பிரித்துப் பார்ப்பது போலாகி விடும்:)நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-61886146971672338722011-02-25T04:15:11.460+05:302011-02-25T04:15:11.460+05:30முத்துக் கவிராசரின் கைலாயமாலை(கிபி பதினாறாம் நூற்ற...முத்துக் கவிராசரின் கைலாயமாலை(கிபி பதினாறாம் நூற்றாண்டு) மயில்வாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை(கிபி 18ம் நூற்றாண்டு) என்பன யாழ்ப்பாண இராச்சியம் சார்ந்த தமிழர்களின் இராச்சிய, கலாசார முறமைகளை அறிவதற்குச் சிறந்த சான்றாதாரங்களாக விளங்குகின்றன. <br /><br />இங்கே இன்னொரு விடயத்தை உற்று நோக்குதல் சிறந்தது;<br /><br />பிரித்தானியர் காலப் பகுதியில் எழுதப் பெற்ற வரலாற்று நூல்களில் பின்வருவன அடங்கும், எஸ் காசிச்செட்டியின் 'History of Jaffna'(1884) துரையப்பாபிள்ளையின் ‘Jaffna Today And Yesterday'(1907ம் ஆண்டு நூல்) முத்துத்தம்பிப் பிள்ளையின் History of Jaffna(1912) க. வேலுப்பிள்ளையின் ‘யாழ்ப்பாண வைபவ கௌமுதி’(1918) இராசநாயகத்தின் ‘Ancient Jaffna'(1926ம் ஆண்டு வெளியான நூல்) ஞானப்பிரகாசரின் ‘Critiques of Jaffna'(1928),’யாழ்ப்பாண வைபவமாலை, “The Jaffna Kingdom' 'The Ancient people of SriLanka are Tamil's, 'யாழ்ப்பாணப் பூர்வீக வைபவம்’ யாழ்ப்பாணக் குடியேற்றம் முதலியவை ‘’இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த வரலாற்று நூல்களாகும். <br /><br />அதன் பின்னர் கே. கணபதிப்பிள்ளையின் ‘இலங்கை வாழ் தமிழரின் வரலாறு’, சி.எஸ் நவரட்ணத்தின் ‘Tamil's and Ceylon' என்ற நூல்களும் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்த தமிழரைப் பற்றிப் பெரிதும் அறிந்து கொள்ளப் பயன்படும். இருந்த போதிலும், இந்த இலக்கிய ஆக்கங்கள் யாழ்ப்பாணம், அதன் இராச்சியம், அதன் மக்கள் என்பவை பற்றியே எடுத்துச் சொல்கின்றன. <br /><br />''இவற்றில் வரலாற்றுச் சான்றுகள் இல்லாமையால் இவை பெருமளவிற்கு பின் வந்த வரலாற்று அறிஞர்களால் புறந்தள்ளப்படுகின்றன. பிரதாபக் கதைகள், காவியங்கள், நாட்டார் கதைகள், இடங்களின் பெயர்கள் போன்றவற்றையே இவ் இலக்கியங்கள் அடிப்படையாகக் கொண்டுள்ளன. இராசநாயகம், ஞானப்பிரகாசர் ஆகியோரின் இலக்கியங்களில் ஓரளவிற்கு விதிவிலக்காக இருந்தாலும், இவ் இருவரின் திறமை காரணமாக ஒரு சில வரலாற்று உண்மைகள் வெளி வந்துள்ளனவே தவிர, இவ் ஆக்கங்கள் தொல்லியல் சான்றுகளுடன், ஆதார அடிப்படையில் அமையாத காரணத்தால் வரலாற்று அறிஞர்கள் இவற்றை ஏற்ற்க் கொள்ளத் தயங்குவது போல் உள்ளது.’’<br />மேற் கூறப்பட்ட பத்தி கலாநிதி மு. குணசிங்கம் அவர்களின் ‘இலங்கையில் தமிழர் எனும் நூலில் இருந்து உங்களுக்காக, இராசநாயகத்தின் நூலின் உட் கிடக்கையினைப் பற்றி விபரிக்கும் முகமாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.’நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-20118772814219465492011-02-25T03:55:31.847+05:302011-02-25T03:55:31.847+05:30நல்லதொரு முயற்சி நண்பரே ! நீங்கள் இதனை உங்கள் பதிவ...நல்லதொரு முயற்சி நண்பரே ! நீங்கள் இதனை உங்கள் பதிவில் விளக்கி விட்டு தொடர்ந்து இருந்தால் புரிந்துக் கொண்டு இருப்போம். எனதுப் பதில்கள் அனைத்துமே வரலாற்று ரீதியானது. இதில் சில சங்கடங்கள் ஏற்பட்டு இருந்தால் எம்மை மன்னிக்க ... <br /><br />எனது வாதங்களை அல்லது கருத்துக்களை கூறிவிடுகிறேன் ....<br /><br />சாதியம் என்பது இலங்கையில் பல்வேறு காலங்களில் பல்வேறு விதமாக இருந்துள்ளது.<br /><br />வேளாளரின் வருகைக்கு பின்னரே சாதிய வெறி அங்கு அதிகரித்துள்ளது. <br /><br />ஆந்திராவில் இருந்து வந்த நாயக்கர் -<br />உள்ளூர் தமிழர்களை தீண்டத்தகாதவர் ஆகியது போல, சோழ நாட்டில் இருந்து வந்த வேளாளர் ஈழநாட்டுக் மக்களை தீண்டத்தகாதவர் ஆக்கியுள்ளனர்.<br /><br />சாதியம் ஈழத்தில் 1940 களுக்கு முன்னரே வேரூன்றியது மட்டுமில்லை, பல கலவரங்களையும் சந்தித்து உள்ளது. <br /><br />தலித் இலக்கியங்கள் ஈழத்தமிழர் மத்தியில் சமூக விடுதலை வேண்டி நிற்பதை மஹாகவி, முருகையன், ஜீவா ஆகியோரின் இலக்கியங்களில் நான் படித்துள்ளேன். அவற்றை தவறு எனக் கூற முடியாது..........<br /><br />உமது பதிவுகளை எதிர்பார்க்கிறேன். எமது வாத விவாதங்களை மேலும் ஆதாரத்துடன், எடுத்து வைக்க அவா. வாழ்த்துக்கள்.......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5377138428900965733.post-69879083945830292392011-02-25T03:52:28.745+05:302011-02-25T03:52:28.745+05:30அண்ணா இக்பால் செல்வனிற்கு, (நீங்கள் என்னைத் தம்பி ...அண்ணா இக்பால் செல்வனிற்கு, (நீங்கள் என்னைத் தம்பி என்று அழைத்த பிறகு அண்ணா என அழைப்பதில் தவறில்லைத் தானே சகோதரா)<br /><br />ஈழத்தில் தமிழர் வரலாறு பற்றி தமிழர்களால் எழுதப்பட்ட இலக்கியங்கள்,கல்வெட்டுக்கள் என்று பார்க்கும் போது ‘இராசமுறமை, வையாபாடல், திருகோணமலையிலுள்ள கோணேசர் கல்வெட்டு, முதலியன சான்றாதாரங்களாக விளங்குகின்றன. <br /><br />இவ் இடத்தில் ‘கலாநிதி முருகர் குணசிங்கத்தின் இலங்கையில் தமிழர் எனும் நூலின் 16ம் பக்கத்தில் கூறப்பட்ட கருத்துக்களை உற்று நோக்குதல் சாலச் சிறந்தது என நினைக்கிறேன்.<br /><br />‘’எழுத்துருவில் உள்ள ஆவணங்களுடன் தான் வரலாறு ஆரம்பிக்கிறது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட வரவிலக்கணம் ஆகும். இதன் வழி பார்த்தால் இலங்கைத் தமிழரின் பெரும் பகுதி வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்டதாகவும், வழி வழி வந்த கதைகளாகவுமே உள்ளன. இந்த நிலையில் தொல்லியற் சான்றுகள், கல்வெட்டுக்கள், குறிப்புக்கள் போன்ற சான்றுகளே தமிழரின் ஆரம்ப கால வராறுகளைச் சரியான முறையில் வெளிக் கொண்டு வரும் ஊடகங்களாக விளங்கியிருக்கின்றன. <br /><br />ஐரோப்பியர் வருகைக்கு முன்னதான ஆரம்பகாலத் தமிழிலக்கியப் படைப்புக்களில் ‘வையாபாடல்’ தமிழர் வரலாறு பற்றி ஓரளவிற்குச் சொல்கின்றது.<br /><br />இது வையாபுரி ஐயரினால் கி.பி பதினான்காம் நூற்றாண்டில் கி.பி பதினாறாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் எழுதப்பட்டது. <br /><br />நிற்க, இவ் இடத்தில் ஒரு கருத்தினைச் சொல்லி சாதியம் பற்றிய விளக்கத்திற்கு ஆதாரம் சேர்க்க நான் முனைகிறேன். ‘ஈழத்தில் இந்தியாவில் இருந்து வந்த உயர் குலத்தவர் என அழைக்கப்படும் பிராமணர்களே சமூகத்தில் தமது இருப்பினை ஆரம்ப காலத்தில் முதன்மைப்படுத்தியவர்களாக விளங்குகிறார்கள். மன்னர்களாகவும், இலக்கியங்களை எழுதுகின்றோராகவும், கல்வி கற்பிப்போராகவும் இப் பிராமணர்களே விளங்கியிருக்கிறார்கள். இக் காலப் பகுதியில் பிராமணியம் என்றோர் சாதி இருந்திருக்கிறது, ஆனால் வேளாளர்களைப் போல பிராமணர்கள் மேட்டுக் குடி எனும் கிறுக்குப் பிடித்தவர்களாகவோ, கர்வம் உடையவர்களாகவோ வாழ்ந்திருக்கவில்லை. ஆதலால் தான் வரலாற்றுக்கு முற்பட்ட காலப்பகுதிகளில் பிராமணியம் பற்றிய ஆதிக்க, சாதியம் சார் கோட்பாடுகள் இலக்கியங்களில் இடம் பெற்றிருப்பினும் முதன்மை பெறாமற் போய் விட்டது என்று கூறுவது ஏற்கத் தக்க விடயம் தானே?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com