Friday, August 30, 2013

பதிவுலகில் சர்ச்சையை கிளப்பப் போகும் பதிவர் சந்திப்பு

வணக்கம் பாசத்திற்கும், நேசத்திற்கும் உரிய உறவுகளே, 
உலகின் ஓர் மூலையில் இருந்து, நானும் இச் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லையே எனும் கவலையோடு மிகவும் பிரமாண்டமாக எழுத்துலகால் எதையும் சாதிக்கலாம் எனும் உத்வேகத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இரண்டாவது பதிவர் சந்திப்பு சிறக்க சிறியேனின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பதிவர் சந்திப்பை முன்னிட்டு, பொங்கிப் படைத்து சுற்றத்தாரோடு உணவுகள் பரிமாறி உண்ட பின்னர்; பதிவர்கள் அனைவரும் இணைந்து, தமிழகத்தில் கலைகளுக்குப் புகழ் பெற்ற மதுரை மாநகரில் கவியரங்கம் ஒன்றினை ஒழுங்கமைத்திருந்தார்கள். கவியரங்கத்தினை திரு.பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களும், திரு.யோகா(Yoga.S.FR) அவர்களும், திருமதி ஏஞ்சலின் அவர்களும் தலமையேற்று நடாத்தியிருந்தார்கள். பல ஆயிரம் பதிவர்கள் போட்டி போட்டு இக் கவியரங்கில் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்த முண்டியடித்த போதும், குறிப்பிட்ட சில பதிவர்களை மாத்திரம் தான் இக் கவியரங்கில் இணைத்துக் கொள்ள முடிந்தது. நேரம் போதாமையே இதற்கான காரணம் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்திருந்தார்கள். வாருங்கள்! கவியரங்கினுள் நுழைவோம்.
அரங்கில் தலைவர்கள் மூவரும், அவர்களிற்கு எதிர் எதிர்த் திசையில் பதிவர்களும் அமர்ந்திருக்கிறார்கள். முதலில் தலமை உரையினை ஏஞ்சலின் அவர்கள் ஆரம்பிக்கிறார்.
ஏஞ்சலின்:
பதிவர் திருநாளில் கவி படிக்க வந்திருக்கும் தமிழ் பதிவர்களே
மெய் குளிர கவி கேட்டு சிரிக்க வந்திருக்கும் உறவுகளே
இத் தினத்தில் உங்களை அரங்கிற்குள் வருக வருக என வரவேற்கிறேன்
முத்தமிழால் உமை குளிப்பாட்டி முந்நூறு கவி பாட வல்ல
வித்தகர்கள் அரங்கினிலே நிறைந்திருக்கிறார்கள் - அடியேன் நானும்
சத்தியமாய் கவியரங்கில் டெக்கரேசன் பண்ணவில்லை - ஆளை விடுங்கள்
புத்தம் புது கவி படிக்க வந்திருக்கும் பதிவர்களின் பாடல் கேட்போம் வாரீர்!
பன்னிக்குட்டி ராம்சாமி:
ஐயா வணக்கங்களா! அம்மா வணக்கங்களா! மற்றும் அனைவரும் வணக்கங்களா!
கூலிங்கிளாஸினால் அரங்கில் யாராவது கூச்சமற்ற பிகர் உண்டா என
கூர்ந்து பார்க்கும் சிபியே
கோலிங் பெல் போல அடிக்கடி ரிங் ரிங் என அடித்துக் கொண்டிருக்கும்
பதிவுலக Anti வைரஸ் ஐடியா மணியே
பாலும் தேளிதேனும் என ஔவை சொன்ன தெள்ளு தமிழில் - வர்ண
கோலக் கவி உரைக்க வந்திருக்கும் கவி வேந்தர்களே!
அனைவரையும் வரவேற்கிறேன்! கும்தலக்கடி கும்மா! கவியரங்கை ஆரம்பியுங்கடா சும்மா!

Yoga.S.FR.
தெள்ளு தமிழ் கவி கேட்டு மனம் மகிழ்ந்து
உள்ளங்களை மறந்து கவிதையிலே கிறங்கி
கள்ளமில்லா உள்ளத்துடன் கனிவான சர்க்கரை பொங்கலிட்டு - மனதை
அள்ளுகின்ற கவி படிக்க வந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன்.

கவியரங்கினுள் வருபவர்கள் பட்டியில் நீளம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்பதால், அறிமுகம் ஏதுமின்றி அவர்களே அரங்கினில் கவி பாடுவார்கள் என நினைக்கிறேன்.

சிபி.செந்தில்குமார்:
வண்ணமயமான ரகசிய கூடாரம்
கொஞ்சம் காசு கொடுத்தால் கலர் கலராய் படம் காட்டும் சினிமாடம்
என்னிடத்தே வந்து இந்த உலகில் உனக்கு பிடித்த
எளிமையான இடம் எது என்று யாராச்சும் கேட்டால்
சென்னி மலை அருகே உள்ள ஜோதி - அவள்
என்னை தினமும் சொக்க வைக்கும் முல்லை ஜாதி
பரங்கிமலை ஜோதி தியேட்டர் தான் என்னை
பரவசத்தில் ஆழ்த்துவதால் அரங்கினிலே
இந்த இனிய தை திருநாளில் அடியேனும் வேண்டுகிறேன்
கூலிங் கிளாஸில் டீவி பொருத்திய ஓர் டெக்னாலஜி வர வேண்டும்
கூலாய் நானும் வீட்டில் இருந்தே
புதுப் படம் பார்த்து விமர்சனம் தர வேண்டும்! இது நிறை வேறுமா?

ஒன்னும் தெரியாத ஐடியாமணி: POWDER STRAR
சென்னிமலை செந்தில் - என்னை சொக்க வைத்த அன்றில்
கூலிங்கிளாற்குள்ளால் என்னை லவ்சு பண்ணாது
எதிரே இருக்கும் பிகரை பார்க்கும் என் ஏஞ்சல்
இவரை நானும் காதலிக்கிறேன்! I Love you CP

பன்னிக்குட்டி ராம்சாமி: அடோய் நாதாரி! கஸ்மாளம்! பன்னாடை! பரதேசி ஐடியாமணி! நிறுத்து! நிறுத்து! ஒனக்கு வெளங்காதா? இஞ்சே நடப்பது கவியரங்கம்காளா! நீங்க கவிதை பாடனுங்களாம்!உணர்ச்சி வேகத்தில இங்கே தனிமனித உணர்வுகளை காட்டிக்க கூடாதுங்க. கம்முன்னு இருங்க!

ஐடியா Funny: ஓ சாரிங்க! நான் என்னோட பர்சனல் லவ்வை பப்ளிக்கில போட்டு உடைச்சிட்டேன்! அவ்வ்வ்வ்வ்
இந்த பொன் நாளில் காலையில் என் மனைவி கனிகாவுடன் பொங்கினேன்
இன்பம் தங்குமா என்றேன்!
செல்லமாய் அவளோ இது தகுமா மணி என்றாள்!
அங்கம் எல்லாம் ஏதோ செய்ய ஐ மீன் ஆண்டியாய் இருந்த என்னை இங்கே
தங்க தமிழில் கவி பாடு என்று சொல்லி மேடை ஏற்றியுள்ளார்கள் -
நீங்களே சொல்லுங்கள் என் மங்கலப் பொங்கலை இடை நடுவில் இவர்கள் குழப்புவதும் சரியா?

பன்னிக்குட்டி ராம்சாமி: மூதேவி! நீ இந்தப் பதிவர் சந்திப்பு நாளிலும் லீவு விடமாட்டியா? கறுமம் கறுமம்! ஓடுறா ராஸ்கல்! ஒரு நிமிசம் இங்கே வெயிட் பண்ணிட்டு நின்னாய் உன்னயை ஆப்பிரிக்கா காட்டுக்கு அனுப்பிடுவேன்.

பேபிஅதிரா: 
பதிவர்கள் எல்லோரும் பானையிலே அரிசியிட்டு பொங்கும் நேரம் நானோ
மெல்லிய பூனைகளுடன் என் டைம்மை செலவு செஞ்சிடுவேன்
கவியரங்கில் என்னை கொண்டு வந்து கவி பாடட்டாம்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
புவியரங்கில் குழை போட்டு கொண்டு திரியும் காட்டானை - உடல்
அவிய முன்னர் உடுப்புக்களை போடச் சொல்லுங்கள் - அப்புறமா
நானும் இனிய கவி பாடுகின்றேன்! குழை போடுறாராம்! குழை!
மொதல்ல ஆதி வாசி ஆடைக்கு ஒரு முழுக்கு போடச் சொல்லுங்க;-))

ஹேமா:
வேலியில் ஓடியது வௌவால்
சாலையில் படர்ந்தது கொடி
வீட்டு முற்றத்தில் போட்டிருக்கு கோலம்
ஆனால் தமிழர்கள் வாழ்வோ விதியினை நினைத்து அழுகிறது
காலையில் எழுந்தேன் - சுவிஸில் ஒரே பனிமூட்டம்
பானையை வைத்து பொங்கவா?
இல்லே வேலைக்கு இறங்கவா என யோசனை
இலகுவில் புரிந்திடா என் இறுக்க கவிதை போல
இனிமைக்கு குறைவிலா பொங்கல் செய்யனும் என்றும் ஆசை
சுவிஸினில் எனக்கு வேலை அழைப்பதால்
கனிவுடன் பொங்கி படைக்க நேரம் இல்லை!
கவியரங்கை முடித்து நானும் விடை பெறுகின்றேன்.

பதிவர் திடங்கொண்டு போராடு சீனு
மங்கலம் பொங்கும் இத் திரு நாளில் - யாரோ என் கவியில் ஆணாதிக்கம் என
பொங்கியே விட்டார் - பாவம் நானோ குற்றமே செய்யாது
சிங்கத்தின் கர்ச்சனைக்குள் மாட்டி விட்டவனாய்
சிரிப்பினை தொலைத்து நியாயம் கேட்கின்றேன்!
அங்கத்தில் ஒரு வார்த்தையை குறைத்து மதிப்பிட்டாலும்
ஆணாதிக்கமாகுமோ! அடடா! புரட்சிப் பெண்ணிய இலக்கியம் புதிய
சங்கத்து மரபுகளையல்லவா பதிவுலகிலும் கொண்டு வருகிறது!

தமிழ்வாசி பிரகாஷ்:
காலையில் எழுந்தேன்! கனிவாய் புது வீட்டில் பொங்கினேன்
மாலையில் வெளியில் கிளம்பினேன் - மக்கா யாரோ கவியரங்கம் என அழைத்து வந்தான்
இனிய சர்க்கைப் பொங்கல் உண்டு எம் இளைய கவியை ரசிக்க வந்திருக்கும்
கவிஞர் அனைவரையும் மதுரை மண்ணின் சார்பில் வரவேற்கிறேன்! வருக!

வீடு சுரேஸ்குமார்: 
எனக்கு இன்று பொங்கலாம் - நான் என்னை வைத்து பொங்கும் மாட்டு பொங்கலை சொல்லவில்லை
தமிழில் கவி வடிக்க எல்லோரும் கூடியிருக்கும் இவ் வேளையில் நானோ
கிராபிக்ஸ் கவி படைக்க கிளம்பியுள்ளேன் - போட்டோசொப்பை பானையாக்கி
இலியானா இடுப்பில் கோலமிட்டு இனிதாக கிராபிக்ஸ் பொங்கலிட
அனைவரையும் வாழ்த்துகிறேன்! கிராபிக்ஸ் பொங்கலை கண்டு மகிழ வேண்டுகிறேன்!

விக்கி உலகம் வெங்கட்குமார்:
வியட்னாம் தமிழ் வணக்கம் சொல்லி,
விழியில் அரிசி பொங்கல் பார்த்து நீண்ட நாள் ஆச்சே எனும் கவலைவலையுடன் விக்கி நான் இங்கு வந்தேன்!
கவிதை தந்தேன்!
முன்னுக்கு இருக்கும் கூலிங் கிளாஸ் மன்னனையும். அவனை அடிக்கடி திட்டும் மனோவையும் பார்த்தால் எனக்கு கவிதை வரலை!
கவலை தான் வருகிறது! அவ்வ்வ்வ்
எல்லோரும் பொங்கி இனிமையாய் உண்டு மகிழ மாப்பிளைங்களா வாரேன் என்று சொல்லி மெல்லமாய் நானும் விடை பெறுகின்றேன்!

மகேந்திரன்:
நித்தம் நித்தம் வலையுலகில் நீண்ட நேரம் பொங்கலிட்டு
பத்து வலை சுத்தி வந்தேன் கண்னே ரத்தினமே - என்னோட
பாசக்கார பையங்களுக்கு கமெண்டும் போட்டேன் கண்ணே ரத்தினமே
புத்தம் புது கவி படிக்க ஏத்த ராகம் கண்டு கொண்டேன் - இனி
என் கவிதை சொல்லப் போனால் நீங்க எழுந்து நின்று ஆடுவீங்க
பதிவர் சொந்தங்களே! நம்ம பதிவர் சொந்தங்களே!
அழகான கிராம மெட்டு! உங்களை அசத்துகின்ற சந்தக் கட்டு
அச்சுவெல்லம் பச்சரி போட்டு பொங்கும் இந்த நாளில்
தமிழ் கவிதையாலே நாமும் பொங்கி விட்டோம் கண்ணே ரத்தினமே!
என் கண்ணே ரத்தினமே!

பிலாசபி பிரபாகரன்: 
மங்கலம் பொங்கும் இத் திரு நாளில் என்னை சூழ்ந்திருக்கும் அனானிகள்
நீங்கிட வேண்டும் - வலையுலகில் எனக்கு இலியானா மோகம்
தங்கிட வேண்டும் - வடிவான பொண்ணு ஏதாச்சும் அப்படியே எனக்கு
மாட்டிட வேண்டும் - தாலியை கட்டிட துடிக்குது மனசு
வேலியை போட்டு வீட்டினுள் பூட்டிட நினைக்குது என் வயசு!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

காட்டான்: 
காட்டான் குழ போட்டான் - காலமெல்லாம் இந்த தேசிய உடையுடன் தான் வலம் வருவான்
காட்டான் கவி எடுத்தால் கவியரங்கும் அதிரும் - நல்ல
பாட்டால் உமை மயக்கி கிராமிய சந்தத்திலும் பாடிடுவான் - என் வித்துவத்தை
கேட்டால் நீர் எல்லோரும் மயங்கிடுவீர் - சொல்கின்றேன் கேளும்!

Yoga.S.FR: யோவ்.....சும்மா பீலா வுடுறதை விட்டிட்டு போய் குளிச்சு கோமணத்தை துவைச்சிட்டு வாரும்! நாத்தம் தாங்க முடியலை! அதில உம்மடை வித்துவத்தை கேட்டால் எல்லோரும் மயங்கிடுவாரோ!
கொய்யாலே! உம்மட தேசிய உடைக்கு கிட்ட வந்தாலே எல்லோரும் மணம் தாங்காம மயங்கிடுவார்கள்!

உமாஜீ/Umajee:
மேகம் பொழியும் மழை போல் பால் பானையுள் பொழியட்டும்
வானும் மண்ணும் எப்போதுக் காதல் கொள்ளட்டும் என்
தாகம் எல்லாம் எனக்கு ஹாலிவூட் மூவி மேல் பாயட்டும்
வானம் தாண்டிய சிறகுகளில் எனக்கு ஓர் கவிதையாச்சும் பிறக்கட்டும்!
அப்புறமாய் கவியரங்கில் என் கவிதை பறக்கட்டும்!
ஆளை விடுங்கடா சாமி! இலக்கணம் என்றாலே எனக்கு வாந்தி வரும்! அதில கவிதை என்று ஏதோ என்னை பாடச் சொல்லி கொல பண்றாங்களே! ஆள விடுங்கடா;-))

ஹாலிவூட் ரசிகன்: 
ஆங்கிலீஸ் கவி படித்து இந்த பொங்கல் நாளை அசிங்க நாள்
ஆக்கிட விரும்பவில்லை - ஆனாலும்
ஜேம்ஸ்பாண்ட் போல நிறைவான கோலமிட்டு
ஆர்னல்ட் சுபாஸ்நேக்கர் போல் அடுப்பினை பத்த வைத்து
ஜசான் சத்தாம் போல பானையுள் அரிசி போட்டு
பமீலா ஆண்டர்சன் போல பொங்கி வழிய வாழ்த்துகிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி: என்னதூ.........பமீலா அண்டர்சன் போல....கொய்யாலே! வெளங்கிரும்...வெளங்கிரும்!

கற்போம் ப்ளாக் பிரபு
மங்கலம் தங்கும் இந் நாளில் கம்பியூட்டர் மவுஸ் போல
நீங்க அழுத்தையில் செயற்படாது அசத்தலாய் செயற்பட வாழ்த்தி
என் கவியினை தொடர்கிறேன்!
அடியேன் ஒரு தொழில்நுட்ப பிரியன் - ஆனாலும் எப்போதாச்சும்
தமிழும் எழுதும் குறும்பு பையன்
ப்ளாக்கிலும் பேஸ்புக்கிலும் மங்கலம் பொங்கி
புதிய தொழில்நுட்பங்கள் உலகெங்கும் பரவி
இனிதாய் எல்லோரும் பொங்கலை கொண்டாட வாழ்த்துகிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி: 
எல்லா பதிவர்களையும் அழைத்து இனிய கவி கொடுக்க முடியவில்லை! மன்னியுங்கள்! எங்கள் நேரமும் போகிறது!
உங்களுக்கு பொல்லாப்பு ஒன்றும் இல்லையெனில் மீதமுள்ள பொங்கலையும் உண்டு மகிழுங்கள்! எல்லோரும் கவி பாடுங்கள் என அழைத்து வந்தேன்!
சொந்தக் கதை - சோக கதை என எல்லோரும் பாடி என்னக்கு வெறியை ஐ மீன் தமிழ் கொல வெறியை கூட்டி விட்டார்கள்! இதோ இறுதியாக ஓர் கவி பாடி கவியரங்கை நிறைவு செய்கிறேன்! கேட்பீர்கள்! இது தான் இலகு தமிழ் கவிதை! அண்ணன் கவுண்டமணி சாரிங்க பன்னிக்குட்டி ராம்சாமி ஸ்டைலில் படியுங்கள்!
கும்தலக்கடி கும்மா
வைச்சாங்கட ஒரு கவியரங்கம் சும்மா
பம்மிக்கிட்டிருந்த பன்னிக்குட்டியை நடுவராக்கி
பாசமழை பொழிந்திட்டாங்க நம்ம மதுரக்காரப் பசங்க
நம்மளுக்கு எப்பவுமே நமிதா என்று சொன்னாலும் நம்பிடவா போறீங்க;-))
இலியானா வந்தாச்சு - ஹன்சிகா வந்தாச்சு - கார்த்திகா வந்தாச்சு
இனி என்னனென்னவோ வந்தாலும் வருமுங்க - ஆனால்
நம்ம நமீதா போல எவரும் வருவாங்களா?
எடுங்கடா அந்த அருவாளை!

நன்றி! வணக்கம்!

2 Comments:

சீனு said...
Best Blogger Tips

ஹா ஹா ஹா எங்க திரும்புனாலும் அடிகிராயிங்களே..

ஆன்லைன் ஒளிபரப்பு இருக்கிறது... கண்டுகளியுங்கள்

Mahesh said...
Best Blogger Tips

aiyo eppadi oru nalaikku 2 pathivu poduringa. mudiyala ungaloda vekathththai ninaichu... super post

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails