Saturday, April 28, 2012

இத்துப் போன திமுக! இந்த ஜென்மத்தில உருப்படுமா?

சுய சிந்தனையற்ற தொண்டர்களாலும், சுய நல தலைவராலும் சிதறிப் போகும் உதிரி கட்சியாக இப்போது திமுக! 

ஒரு காலத்தில் திமுக என்றால் தமிழ் செழுமைக்கும், மக்கள் நலனுக்கும் பேர் போன கட்சி என்று சிறப்பான பேர் இருந்திச்சு. ஆனால் இன்றளவில் ஆட்சியினை தக்க வைக்கும் நோக்கிலும், மந்திரிப் பதவியினை மக்களை ஏமாற்றி கைப்பற்றி சொகுசு அரசியல் நடாத்தும் நோக்கிலும் திமுக கட்சி செயற்படுவதால் தமிழ் நாட்டில் மூன்றாவது அணியாக கூட இருக்க லாயக்கு இல்லா நிலமைக்கு திமுக கட்சி ஆளாகி விட்டது. அப்பாவி மக்களுக்கு இலவசத்தை கொடுத்து தம் ஆட்சி வெறியினை இன்பமாக மாற்றலாம் என நினைத்த கட்சி தலமைகளுக்கு இலவசத்தை வாங்கி விட்டு ஓட்டுப் போடாம ஏமாற்றும் நல்ல செயலுக்கு மக்கள் ஆளாகி உள்ளதன் மூலம் கடந்த தேர்தலில் பாடம் கற்பித்தாங்க.

திமுக அல்லக்கைஸை முட்டாளாக்கும் கருநாய்நிதி!

கழக கண் மணிகளே! குவாட்டர் கட்டிங் செய்வோம்! ஓடியாங்க! 
இன்று உலகிலுள்ள மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளின் அரசியல் பொருளாதார நிலமைகளை உன்னிப்பாக அவாதானித்தால் ஒவ்வோர் நாட்டின் முன்னேற்றத்திற்கும் அந் நாடுகளில் ஆட்சியில் உள்ளோரின் சிறப்பான திட்டமிடலும், வழி நடத்தலும் தான் காரணமாக இருக்கும். ஆனால் நம்ம இலங்கை, இந்திய நாடுகளில் ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகளோட புள்ளைங்க நிலமை தான் சிறப்பாக இருக்கும். இதற்கான காரணம் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் மந்திரிகளின் சீரிய பணியும், குடும்ப அரசியலுமே ஆகும். என்றைக்கு எம் தலைவர்கள் மக்கள் மேல் தீவிர அக்கறை கொண்டு நாட்டின் முன்னேற்றம் பத்தி சிந்திக்கிறாங்களோ, அன்றைக்கு தான் நம்ம நாடுகளின் வீதிகள் பள பளக்கும், ஏழைகள் இல்லாது நம்ம நாடுகள் பொருளாதாரத்தில் வலுவாக வளர்சியடையும்.

Friday, April 27, 2012

க(கொ)லைஞரின் அல்லக் கைகளும் பல்லக்கு தூக்கும் பதிவுலக பச்சோந்திகளும்!

திமுக கட்சியோட பேரும் புகழும் ரொம்பவே நாறிப் போயிட்டுதாம். இலவசத்தை அள்ளி கொடுத்து, கடுதாசி மேல கடுதாசியை மத்திய அரசிற்கு எழுதி குவித்து, மகளை கூட்டி கொடுத்து ஊழல் செய்து திமுக நாறிட்டு  என்பதனை உணர்ந்த கருணாய் அய்யா இப்போது புதிய உத்தரவு பிறப்பித்திருக்கிறார். தயாநிதிமாறன் தலமையில அந்த உத்தரவினை செயற்படுத்துவதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் குழுக்களை நியமித்திருக்கிறாங்கோ. திமுக கட்சி கட்சி பத்தி இணையத்தில பிரச்சாரம் செய்யனுமாம். அச்சு ஊடகங்களை அல்லக்கைகள் கட்சி பத்தி போற்றி புகழ்ந்து எழுதனுமாம். அப்போ தான் இழந்த பேரு மீண்டும் கிடைக்கும். கொல்லைஞர் கட்டைல போற வயசிலையும் ஆட்சி கதிரையில் ( மந்திரி சீட்டில்) இருக்க முடியுமாம்! 

Thursday, April 26, 2012

சிங்களனின் சித்திரவதை முகாம்!

இளகிய மனமுடையோருக்கும், குழந்தைகளுக்கும் இப் பதிவு உகந்தது அல்ல!
பாகம் 01
ஈழ வள நாட்டின் வட புலத்தில் அமைந்துள்ள பலாலி எனும் சிற்றூர் விவசாயத்திற்கு நன்கு பெயர் பெற்றது. இன்று வரை தம் சொந்த இடத்திற்குப் போக முடியாது 22 வருடங்களுக்கும் மேலாக அகதி என்ற நாமத்தோடு இலங்கை முழுதும் அடுத்தவர்களின் குடிலுக்கு கீழ் ஒதுங்கி வாழும் துர்ப்பாக்கிய நிலையில் உள்ளவர்கள் தான் இந்த வலி வடக்கு மக்கள். பலாலியிலிருந்து இடம் பெயர்ந்து மீசாலையில் குடி புகுந்தவர்கள் தான் சின்னமணி குடும்பத்தினர்.

அல்லாவின் பெயரால் பொல்லாங்கு செய்யலாமா?

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும், இஸ்லாமியர்களால் நடாத்தப்படும் க்ரைம் 419 பற்றி ஓர் அலசல்!
உங்களில் சிலருக்கு இவ் வகையான மின்னஞ்சல்கள் கிடைத்திருக்கும். சிலர் இந்த மின்னஞ்சல்களை கண்டுக்காது விட்டிருப்பீங்க. ஆனால் சிலரோ குறுகிய வழியில் கோடீஸ்வரன் ஆகும் நோக்கத்தில் இந்த மின்னஞ்சலுக்கு பணம் கட்டி ஏமாந்திருப்பீங்க. உலக நாடுகளின் பல அரசியல் தூதுவர்கள் இம் மாதிரியான மின்னஞ்சலுக்கு ஏமாந்திருக்கும் சூழலில் சாதாரண மக்கள் பத்தி சொல்லவா வேண்டும்? இந்த க்ரைம் இன்று சர்வதேச போலீஸின் கவனத்தினை ஈர்த்திருப்பதோடு, இந்த கிரிமினல் செயற்பாடுகளில் ஈடுபடுவோரை உடனடியாக பிடித்து கொடுப்போருக்கு பல இலட்சம் ரூபாக்கள் சன்மானம் வழங்கப்படும் என இன்ரபோல் அறிவித்திருக்கிறது.

Tuesday, April 24, 2012

இச்சையை தீர்ப்பது தமிழன் குணமா? பச்சையாய் பேசுதல் காதல் வரமா?

ஏக்கமும், ஏமாற்றமும்!

நாய் குட்டியை செல்லமாய் முத்தமிட்டாள் அவள்
நாணத்தில் என் கன்னத்தை தடவி
எனக்கும் கிடைக்காதா என 
ஏப்பம் விட்டு எச்சிலை உமிழ்ந்தேன் நான்!!

ஈழ மகன் இன்னும் இறக்கவில்லை!

எல்லோருக்கும் இனிய காலை வணக்கம், எல்லோரும் இன்றைய பயிற்சிக்கு ரெடியோ? என்ன கடைசி வரிசையில ஒராள் குறைகிற மாதிரி இருக்கு. ஓ...செந்தோழன் இன்னும் ட்ரெயினிங்கிற்கு வரவில்லையே! ஓக்கே நீங்கள் எல்லோரும் ஒரு ஐஞ்சு நிமிசம் துள்ளத் தொடங்குங்கோ. நான் செந்தோழனைப் போய்க் கூட்டி வாரேன்" என்று சொல்லியவாறு ட்ரெயினிங் மாஸ்டர் புரட்சி வேகமாக தன் வேஸினுள்(போராளிகள் முகாம்) போய் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த செந்தோழனைத் தட்டி எழுப்புகிறார்.

Monday, April 23, 2012

American Pie Reunion - அடல்ஸ் ஒன்லி - சிரிப்போ சில்லி

ஹாலிவூட்/ கோலிவுட்/ ஹாலிவுட்/ ஹொலொவூட் திரைப் பட விமர்சனம்:
கண்டிப்பாக 15 வயதிற்கு மேற்பட்டோர் மாத்திரம் பார்க்க கூடிய படம்!
அமெரிக்கன் பை படத்தின் பாகம் ஒன்று, பாகம் ரெண்டு பார்த்தவங்களுக்கு இப் படத்தின் தலைப்பை பார்த்ததுமே புரிஞ்சிருக்கும். அட ஏலவே வந்த ரெண்டு பாகங்களிலும் அசத்தினவங்களோட மீள் இணைவு தான் இந்தப் படம் என்கிற மேட்டர். சுருங்கச் சொல்லின் காலேஜ்ஜில படித்து கலாட்டா பண்ணிய நண்பர்கள் நீண்ட காலத்தின் பின்னர் ஒன்றாகச் சேர்ந்தா என்னா பண்ணுவாங்க என்பதனை காமெடியா சொல்லும் படம் தான் இந்த அமெரிக்கன் பை Reunion ஆகும். 

கள்ள நோட்டு, நல்ல நோட்டு, கொள்ளை நோட்டு அடிப்பது எப்படி?

விளக்கப் படங்களுடன் விபரமாக கத்து கொடுக்கிறேன்! விடயம் அறிய குரு தட்சணையுடன் கெளம்பி வாங்கோவ்!
உலகில் மிகவும் பெறுமதி வாய்ந்த நாணயங்களுள் மூன்றாம் இடத்தில் ஆஸ்திரேலிய டாலர் விளங்குகின்றது. பிரித்தானியர்கள் ஆஸ்திரேலியாவிற்கு குடி பெயர்ந்த பின்னர் பிரித்தானியர்களின் காலனியாக ஆஸ்திரேலியா இருந்தது. இந்தக் காலப் பகுதியில் ஆஸ்திரேலிய நாணயமாக லண்டன் ஸ்ரேலிங் பவுண்ட் விளங்கியது. பின்னர் ஆஸ்திரேலியா பிரித்தானியாவின் காலனித்துவப் பிடியிலிருந்து விடுதலை அடைந்த பின்னர் 1966ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் உத்தியோக பூர்வ நாணயமாக ஆஸ்திரேலிய டாலர் அறிவிக்கப்பட்டது. 

Sunday, April 22, 2012

கலியாணம் கட்டாத பசங்களின் கேலர் புல் பார்ட்டி - 24/04/2012

காலாச்சார காவலர்கள் தலை மேல அடிச்சு, சுவாமி ஆபாசானந்தா முன்னாடி தேங்கா ஒடைச்சு சொல்றேன்! சத்தியமா இது ஓர் பாபாச பதிவு கெடையாதுங்க. தலைப்பு மட்டும் தான் சும்மா தக தகன்னு ஜொலிக்கும் வண்ணம் வைச்சிருக்குங்க. உள்ளே கள்ளூறும் விடயம் எதும் கெடையவே கெடையாதுங்க. வாருங்கள் பேச்சிலர் பார்ட்டியினுள் இறங்கி நீராடுவோம். சாரி பார்ட்டியை லூட்டியாய் கலக்குவோம்.

ஆஸ்திரேலிய தலை நகரின் அழகில் மயங்க ஆசையா?

இப்போதே பறந்து வாருங்கள்!
ஆஸ்திரேலியாக் கண்டத்தின் தலை நகராக விளங்கும் இடம் தான் கான்பரா எனும் அழகிய நகராகும். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா (மெல்பேண்) மாநிலத்திற்கும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கும் (சிட்னி) இடையில் இந்த அழகிய நகரம் அமைந்துள்ளது.1908ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் தலை நகரமாக இந்த கன்பரா நகரம் பிரகடனப்படுத்தப்பட்டது. மெல்பேணிலிருந்து 640km தொலைவிலும், சிட்னியிலிருந்து 280km தொலைவிலும் இந் நகரம் அமைந்திருக்கிறது. சுருங்க கூறின் ஓர் நாட்டின் அரசியல், வெளிவிவகாரா விடயங்களிற்கென்று தனியாக அமைக்கப்பட்ட, வடிவமைக்கப்பட்ட நகராக இந்த கன்பரா விளங்குகின்றது. 

உலகெலாம் நக்கி பொழைக்கும் ஈ(ழ)னத் தமிழர்கள்!

"தமிழன் இல்லாத நாடும் இல்லை! தமிழனுக்கு என்றோர் நாடும் இல்லை!" என்பது ஈழத்து ஆஸ்தான கவிஞரின் கவி வரிகளாகும். உலக நாடுகள் எங்கும் தமிழன் பரந்து வாழ்கின்றான் எனும் விடயத்திற்கும் அப்பால் இன்றளவில் உலக நாடுகள் சிலவற்றின் அரசியல் நிலமைகளை / ஆட்சியில் உள்ள கட்சியின் வாக்குப் பலத்தினைத் தீர்மானிக்கின்ற மாபெரும் சக்தியாகவும் உலகத் தமிழன் விளங்குகின்றான். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? வாருங்கள் பதிவினுள் நுழைவோம். 

Thursday, April 12, 2012

சந்திரனில் தமிழர்கள் காலடி வைக்க சூப்பர் ஐடியாக்கள்!

நிலவில் தமிழன் கால் வைக்கும் நாள் வெகு விரைவில் நிகழுமா?

உலகில் வெறும் இரு நூறு ஆண்டுகள் வரலாற்றினை உடைய ஆஸ்திரேலியா இன்று உலகமே வியந்து நோக்கும் வண்ணம் சகல துறைகளிலும் முன்னேறியிருக்கின்றது. அமெரிக்கப் பொருளாதாரத்துடன் போட்டி போடுமளவிற்கு, அமெரிக்க நாணயப் பெறுமதியினை அடிக்கடி முந்தும் அளவிற்கு வேகமாக வளர்ச்சி கண்டு வரும் நாடு தான் ஆஸ்திரேலியா. நம்ம தமிழர்களின் வரலாறு என்ன என்று கேட்டால் நாம் அனைவரும் வாய்ல இருந்து சீத்துவாய் ஊத்தா குறையா "கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி” அப்படீன்னு ஒரு வசனத்தை திரும்ப திரும்ப பேசி, மூவாயிரம் ஆண்டுகள் பழமையான இனம் தமிழினம் அப்படீன்னு சொல்லி எம் பெருமையை நாமே பீத்திக்குவோம். 

Saturday, April 7, 2012

எடையை குறைக்க ஏற்ற உணவுகளை தயாரிப்பது எப்படி?

ஊதிப் பருத்த உடம்பை ஊசி போல மாற்றும் உணவுகளை தயாரிப்பது எப்படி?
எல்லோருக்கும் வணக்கமுங்க, எல்லோரும் நல்லா இருக்கீங்களா? "நலமாக இருந்தால் தான் பல காலம் வாழலாம்" அப்படீன்னு சொல்லுவாங்க. அந்த முது மொழிக்கு அமைவாக கடந்த வாரம் "ஊதிப் பருத்த உடம்பை ஊசி போல மாற்ற உகந்த வழிகள்!” எனும் பதிவினூடாக உடல் எடையை குறைக்க உதவும் சில குறிப்புக்களை உங்களோடு பகிர்ந்திருந்தேன். இப் பதிவினூடாகவும், இப் பதிவின் தொடர்ச்சியாகவும், ஆரோக்கியமான வாழ்விற்கு தேவையான உணவுகளை நம்ம கையாலே நாமே நம்ம வீட்டில தயாரித்து உண்பது எப்படீன்னு பார்ப்போமா?

Friday, April 6, 2012

பிச்சைக்காரி மீது இச்சை கொள்ளும் பச்சைத் தமிழர்கள்!

வக்கிர மனதின் அக்கிரமக் காதல்!

சிதறிய சில்லறைகளை 
பொறுக்கி எடுக்க குனிகிறாள் அவள்
சல்லாப மனதோடு
இச்சை கொண்டு அலைகிறது
ஆடவனின் மனம்! 

முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் தோற்றது எப்படி?

உறங்கும் உண்மைகள் இப்போது உலக அரங்கில்! 
உலக அரங்கில் பிரபாகரனின் திட்டமிடல்கள், பிரபாகரனின் நகர்வுகள் யாவும் அவருக்கு அருகே மிக நெருக்கமாக உள்ளோரால் கூட இலகுவில் அறிய முடியாது என்று கூறுவார்கள். ஆனால் இன்று ஈழப் போராட்டம் பற்றி ஆய்வுகளை மேற்கொள்ளும் அரசியல் அறிவு ஜீவிகள் அனைவரும் பிரபாகரனின் மன உறுதி பற்றி அளவிட முடியாதவர்களாக உள்ள நேரத்தில் 25 வருடங்களிற்கு மேலாக புலம் பெயர்ந்து வாழும் ஓர் அரசியல் புத்திஜீவி பிரபாகரனின் தோல்வி பற்றி புதியதோர் விளக்கம் கொடுக்கின்றார். 

ஈழத் தமிழர்களே! அடிச்சுக்கிட்டு சாகுங்கடா!

ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான்கீமூனைச் சந்திக்க வேண்டும் என மிகுந்த சிரமத்தின் மத்தியில் ஒரு பெண் ஓடோடி வந்தாள். அவள் பெயரை காவலர்கள் கேட்டார்கள். அதற்கு அவளோ தன் பெயர் "சலீமா" என்று உரைத்தாள். "பான்கிமூன் பயங்கர பிசியாக இருக்காரே!" என ஐநா சபையில் பணி புரியும் ஊழியர்கள் கூறியும், நீ செவிமடுக்காதவளாய்; என்னைச் சந்திக்க ஓடோடி வந்திருக்கிறாயே! அதற்கான காரணம் என்ன? என்று கேட்டார் பான்கிமூன்! 

கலியாணம் கட்டாத பசங்களின் கலர்புல் பார்ட்டி - 06/04/2012

இணைய வலையினூடே இப் பக்கம் வந்திருக்கும் அனைவருக்கும் இனிய இந் நேர வணக்கம், ஈஸ்டர் ஹாலிடேயில் இதமான ஓர் பார்ட்டியினை ரசிக்க, படிக்க ஆவலாக இருக்கிறீங்களா? வாருங்கள் பார்ட்டியினுள் நுழைவோம்!  அனைவருக்கும் இனிய ஈஸ்டர் வாழ்த்துக்கள்!

Thursday, April 5, 2012

கலியாணம் கட்டனும் என்றேன்! சீ! போடா இது கலியுக காதல் என்றாள்!

தாலியை கட்டு! தாரமாய் ஆக்கு!

வேற்றுக் கிரக வாசியாய் நான்
வேலி போட்டு பிரித்து
தாலியோடு வா என
வாசலில் நின்று
விடை கொடுக்கிறாய் நீ!

பதிவுலக பெண் சூப்பர் ஸ்டாரின் பல்சுவைப் பதிவுகள் ஓர் அலசல்!

பதிவுலகில் ஹிட்ஸ் பத்தியும், ரேங் பத்தியும், திரட்டிகள் பத்தியும் கவலைப் படாது மனத் திருப்திக்காகவும், தன்னை நாடி வரும் பதிவர் உள்ளங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் நோக்கிலும் பல பெண் பதிவர்கள் எழுதி வருகின்றார்கள். பெண் பதிவர்களுள் சகலகலா வல்லவர்களாக விளங்கும் பதிவர்களுள் புன்னகை வலையின் சொந்தக்காரியும் வந்து கொள்வார். உங்கள் நாற்று வலைப் பதிவில், அம்பலத்தார் பக்கம் வலைப் பதிவின் சொந்தக்காரர் அம்பலத்தார் அவர்கள் எழுதி வரும் பதிவர்களின் படைப்புக்கள் விமர்சனப் பகுதி இன்று எந்த வலைப் பூவினை உங்களிடம் கொண்டு வருகின்றது என்று படித்துப் பார்ப்போமா? வாருங்கள் பதிவர்களே! அம்பலத்தாரின் விமர்சனத்திற்குச் செல்வோம்!

சிங்களனின் சித்திரவதை முகாம் - வேம்பிராய் கொலைக் களம்!

இளகிய மனமுடையோருக்கும், குழந்தைகளுக்கும் இப் பதிவு உகந்தது அல்ல!
 பாகம் 01
ஈழ வள நாட்டின் வட புலத்தில் அமைந்துள்ள பலாலி எனும் சிற்றூர் விவசாயத்திற்கு நன்கு பெயர் பெற்றது. இன்று வரை தம் சொந்த இடத்திற்குப் போக முடியாது 22 வருடங்களுக்கும் மேலாக அகதி என்ற நாமத்தோடு இலங்கை முழுதும் அடுத்தவர்களின் குடிலுக்கு கீழ் ஒதுங்கி வாழும் துர்ப்பாக்கிய நிலையில் உள்ளவர்கள் தான் இந்த வலி வடக்கு மக்கள். பலாலியிலிருந்து இடம் பெயர்ந்து மீசாலையில் குடி புகுந்தவர்கள் தான் சின்னமணி குடும்பத்தினர்.

Wednesday, April 4, 2012

ஊதிப் பருத்த ஊர்மிளா! உன் ஒடம்பு சைஸிற்கு இது தேவையா?

தூர இடப் பயணம் போறவங்க எல்லாரும் இரவு ரயிலினைத் தான் தெரிவு செய்வாங்க. நானும் அலுவலகப் பணி நிமித்தம் தலை நகருக்குச் செல்லும் நோக்கில் ஒருவாட்டி இரவு ரயிலில் என் பயணத்தினைத் தொடங்கினேன். 

வழமையாக பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழியும் ரயில், அன்று மட்டும் சன நெரிசல் ஏதுமின்றி இருந்திச்சுங்க. இதுக்குப் பேர் தான் நல்ல நேரமோ! என எண்ணியவாறு; யாருமே இல்லாத பெட்டி ஒன்று எனக்கு கிடைக்க, அதில் டபுள் சீட் உள்ள இடத்தில் நான் நீட்டி நிமிர்ந்து தூங்கத் ஆரம்பிச்சிட்டேன்.  பாயிண்டு பாயிண்ட் எக்ஸ்பிரஸ் ஆகப் புறப்பட்ட ரயில் ஒரு இடத்தில் நிற்கத் தொடங்க, நானும் விழித்துக் கொள்ள, அழகிய பெண்ணொருத்தி, நான் இருந்த அதே பெட்டியினுள் வந்து உட்காருகிறாள். (டைம்மிங் நிரூபா! விடாத! சீக்கிரமே புடிச்சிரு என மனதினுளோ முணு முணுத்தேன்!)

Tuesday, April 3, 2012

யோவ்! கஸ்மாலம் என்னையா நீ காதலிக்கிறே? காரி துப்பினாள் கார்த்தி!

சருகாகிப் போன காதல்!

உன் பார்வை அம்புகளால்
என் காதல் துளிர் விட்டது - இன்றோ
சந்தேகப் பார்வைகளால்
அது சருகாகி விட்டது!

Monday, April 2, 2012

சிங்களனின் சித்திரவதை முகாம்!

இளகிய மனமுடையோருக்கும், சிறுவர்களுக்கும் இப் பதிவு உகந்தது அல்ல!
இணையத்தினூடே, இப் புதிய தொடரைப் படிக்க வந்திருக்கும் அனைவருக்கும் இந் நேர வணக்கம்;
உலகில் இங்கிலாந்திலிருந்து புறப்பட்ட வெள்ளையின மக்களால் ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூஸிலாந்து எனப் பல தேசங்கள் உருவாக்கப்பட்டன. அங்கிருந்த பூர்வீக குடிகள் பலர் வெள்ளையர்களின் அத்துமீறல்களினால் அழிக்கப்பட்டார்கள். அவர்கள் சில பகுதிகளில் வாழ்ந்ததற்கான எச்சங்களும் அழிக்கப்பட்டன. ஆனாலும் பிற்காலத்தில் ஜனநாயகப் பண்பாட்டிற்குள் தம்மை உட்புகுத்திக் கொண்ட வெள்ளையின மக்கள் திருடப்பட்ட சந்ததியின் வரலாறுகள் வருசக் கணக்கில் அழிவுறாது இருக்க வேண்டும் என்பதனை உணர்ந்து ஆவணப்படுத்தல்களில் ஈடுபட ஆரம்பித்தார்கள். சக மனிதர்களையும் மனித நேயம் கொண்டு மதித்தார்கள்!

ஈனர்களால் மானத் தமிழ் வாழ்வை இழந்த ஈழச் சிறுமியின் கதை!

ஈழப் போர், பல துயரங்களை இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் விடை காண முடியாத வினாக்களின் எச்சங்களாக எம்மிடையே விட்டுச் சென்றிருக்கிறது. ஈழப் போர்ச் சூழலில் வாழ்ந்த வயதானவர்களிடம் கூட, சில காட்சிகளை, சில கொடூரங்களைத் தாங்குகின்ற சக்தி இல்லாத போது, சிறியவர்களிடம் எப்படி இக் கொடூரங்களைத் தாங்கிக் கொள்கின்ற பக்குவம் வந்திருக்கும்? ஈழப் போரில் தம் கனவுகளை, எதிர்காலத்தைத் தொலைத்த பல மனிதர்களுள், சிறுவர்கள் தான் தம் வாழ் நாள் முழுவதும் ஆற்றுப்படுத்த முடியாத வடுக்களைத் தாங்கியவாறு இன்றும் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கலைஞரின் கோவணம் கோபாலபுரத்து காற்றினில் பறந்ததோ?

காற்றினில் பறந்தன தேர்தல் வாக்குறுதிகள்
கண்ணீரால் நனைந்தன ஏழைகள் கண்கள்
சேற்றினில் கால் வைத்த குடும்பங்கள் வீட்டில்
செல்லா காசாய் இப்போ இலவச டீவீக்கள்!

Sunday, April 1, 2012

ஊதிப் பருத்த உடம்பை ஊசி போல மாற்ற உகந்த வழிகள்!

எல்லோருக்கும் வணக்கமுங்க, எல்லோரும் நல்லா இருக்கீங்களா?
நம்மில் பலருக்கு ஓர் தீராத மன அழுத்தம் இருந்துக்கிட்டே இருக்குமுங்க. அது தான் உடல் எடை பற்றிய பிரச்சினையாகும். நம்ம ஆன்றோர்கள் "கண்டதைக் கற்றவன் பண்டிதனாவான்" அப்படீன்னு ஓர் நன் மொழி சொல்லியிருக்காங்க. ஆனால் இன்றளவில் "கண்டதை தின்பவன் வண்டியனாவான் (தொப்பையனாவான்)" அப்படீன்னு நம்ம பசங்க அந்த வசனத்தையே மாத்திப்புட்டாங்க. இளைஞர்களில் கட்டிளம் பருவத்தை அடைந்ததும், நம் அழகை நாமே கண்ணாடியில் பார்த்து ரசிக்க ஆரம்பிப்போம்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க