Friday, March 30, 2012

Trespass - திடுக்! திடுக்! திரிலிங் பட விமர்சனம்!

கோலிவுட்/ஹாலிவூட்/ஹோலிவூட்/கொலிவூட் பட விமர்சனம்!
படம் பற்றிய அவுட் லைன் ஸ்டோரி:
ஊருக்குச் சற்றுத் தொலைவாக, அழகிய கடற்கரைக்கு அருகே ஓர் பென்னாம் பெரிய பங்களா. அங்கே, அழகும் இளமையும் குன்றாத மனைவி, அன்புக்கு இணையாக ஓர் மகள். பணத்திற்கு குறைவின்றி டைமன் வியாபாரம் என மிகவும் சந்தோசமாக இருக்கும் ஓர் பணக்கார வியாபாரியின் வீட்டினை கொள்ளையிட நீண்ட நாட்களாக கொள்ளையர்கள் திட்டம் தீட்டுகிறார்கள். பல்வேறு வழிகளிலும் உளவு நடவடிக்கைகள் மேற்கொண்டு, இறுதியில் போலீஸ் போன்று வேஷமிட்டு, வீட்டினுள் செல்ல காத்திருக்கிறார்கள். டைமண்ட் வியாபாரியின் ஆசை மகளோ தன் நண்பர் குழாத்துடன் அவுட்டிங் போகப் பெற்றோரிடம் பர்மிஷன் கேட்கின்றார்.

Thursday, March 29, 2012

கலியாணம் கட்டாத பசங்களின் ஹவுஸ்புல் பார்ட்டி -30/03/2012

ஆபாசானந்தா மேல சத்தியமா, இப் பதிவு அனைத்து வயதினருக்கும் ஏற்ற பதிவாகும். அச்சப்படாம, வெட்கப்படாம, இப் பதிவினைப் படிக்க, ஆர்வமுள்ள அனைவரும் வரலாம் என்பதை இத்தால் அறியத்தருகின்றேன். அனைவருக்கும் வணக்கமுங்கோ!

வட்டியும் முதலுமாக இலங்கையிடம் இந்தியா வாங்கி கட்டுமா?

இந்தியாவைப் போர்க் குற்ற வழக்கில் நிறுத்தப் போகும் இலங்கை! காஷ்மீர் படுகொலைகள் மீண்டும் கிளறப்படுமா? 
எல்லோருக்கும் வணக்கமுங்கோ, இனிய சந்தோசமான வியாழக்கிழமை வாழ்த்துக்களுங்கோ!

Tuesday, March 27, 2012

அப்பாவி என் பார்வை தப்பானதோ - மப்பாலே என் வாழ்வும் செக்கானதோ?

குணத்தை கெடுக்கும் குடிபானம்! குமரிப் பெண்ணால் வாழ்வே நாசம்!

அப்பாவியாய் இருந்தேன் - அன்றொரு நாள்
அருமை நண்பன் ஆசையாய் அழைத்தான்
தப்பாக இருக்காது மச்சான் என்றான் 
தரமான சரக்கிது அடி என்றான்
முப்பாலும் கற்காது இவ் உலகில்
மூன்றாம் பால் கற்ற நானோ
மப்பேத்தும் கள்ளதனை கண்டதுமே நெகிழ்ந்தேன்
மனதையும் பறி கொடுத்தேன் - மயக்கத்தில்
தப்பான ரூட்டில் போவேனா என்றேன்!
தரமான கள்ளு என தமிழுரைத்தேன்
அப்பாவி என் பார்வை தப்பானதோ? 
அடுத்தாத்து பெண் மீதும் ஒப்பானதோ?
மப்பாலே மனம் போன போக்கில் 
மதி கெட்டும் போய் விட்டேன்
அப்பாவாய் ஆகாத குறையாக இன்றோ
ஆருமற்ற ஜெயிலில் களி தின்றேன்!

Saturday, March 24, 2012

கந்தர்மடம் சந்தியில காலுதையை வாங்கி நொந்தவரின் நிலை!

யோகாவின் நினைப்பில் ஜொலிக்கும் பவளத்தின் நினைவலைகள்!

முத்தவெளி முனியப்பர் கோயில் பின்னாலே
மூன்று மணி நேரம் காத்திருந்தாள் பவளம் தன்னாலே
பத்தரைக்கு வருவேன் என்றார் யோகா
பாவை "வோச்சை" பார்த்து நொந்து போனாள் லேசா
சத்தியமாய் ஆம்பிளைங்க குணமிதென்று சலித்தாள்
சரக்கடிக்க போயிருப்பாரோ யோகா என்று மனதுள் நினைத்தாள்
குத்துக்கலாய் நானிருக்க இந்த யோகருக்கோ
குஷ்பூ எனை விட்டு விட்டு குமரிப் பொண்ணா கேட்கிறது?
பத்துப் பவுண் தாலியா கேட்டேன்? 
பாவை எனை கைப்பிடித்து கூட்டிப் போடா என்றேன்!
சித்தமதில் பிரம்மை பிடித்தவனாய் 
சீரியஸ் பேச்சும் அறியாது இருக்கிறானே இவனோர் அப்பாவி
மொத்தமாக அள்ளி கொடுப்போம் என்றால்
மோப்பம் கூட புடிக்க தெரியாதவனாய் இருக்கிறானே அடப் பாவி!

Friday, March 23, 2012

போலீஸ் வெறியாட்டத்தால் பொசுங்கிப் போகுமா கூடங்குளம் போராட்டம்?

நம்ப வைத்து கழுத்தறுத்த ஜெயலலிதா! நம்பி கெட்ட அப்பாவி மக்கள்!

கூடங்குளம் அணு உலையினை மூடக் கோரி கூடங்குளம் அணு மின் நிலையத்தினைச் சுற்றியுள்ள 20km தூரத்தினுள் வசிக்கும் மக்களால் கடந்த வருடம் புரட்டாதி மாதம் முதல் பல்வேறுபட்ட போராட்டங்கள் அஹிம்சை முறையில் இடம் பெற்று வருவது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும். இப் போராட்டங்களினை நன்கு திட்டமிட்டு நசுக்கும் நோக்கில் சில மாதங்களுக்கு முன்னர் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் "அணு உலை சுற்றுச் சூழலுக்கு ஆபத்தானது. மக்கள் குடியிருப்புக்களின் மத்தியில் அணு உலையினை நிறுவி இருப்பது தவறு. தானும் கூடங்குளம் மக்களுள் ஒருவராக போராட்டக் களத்தில் வெகு விரைவில் இருப்பேன்” என அறிக்கை விட்டிருந்தார். இந்த அறிக்கையானது சங்கரன் கோவில் இடைத் தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கை என அப்பொழுது யாருமே நினைத்திருக்கவில்லை.

Sunday, March 18, 2012

பல்லு வெளக்காத பதிவுலக சங்கிலி திருடனின் கள்ள குறும்புகள்!

சங்கிலி திருடன்! சம்போ ஜம்போ! இட்லி கள்ளன் டப்போ டிப்போ! 
எல்லோருக்கும் வணக்கமுங்கோ!இனிய ஞாயிற்றுக் கிழமை வாழ்த்துக்கள்! ஐடியா மணி வழியில கும்பிடுறேனுங்கோ!!
தமிழ்ப் பதிவர்களிடம்; பல்லு வெளக்காத பன்னாடை யாருன்னு கேட்டா, எல்லோர் விரலும் அந்த ஒருவரைப் பார்த்துத் தான் நீளுமுங்க. ரொம்ப குள்ளமா, கறுப்பு கேலர் கண்ணாடி போட்டுக்கிட்டு மிக நீண்ட பெயருடன் ஒருத்தர் பதிவுலகில் வலம் வருவாரே! அவர் தான் பதிவுலகின் பல்லு வெளக்காத சங்கிலி திருடன். அவர் பெயர் ஐடியா மணி என்று நான் சொல்லி தான் ஒங்களுக்கு தெரியனும் என்கிற அவசியமெல்லாம் கிடையாது என்று நெனைக்கிறேன். இட்லி திருடன், சங்கிலி திருடன், Watermelon thief, பூனைக்குட்டி அபகரிப்பாளன் எனப் பல்வேறுபட்ட திருட்டுப் பட்டங்களைத் தன்னகத்தே கொண்டிருப்பவர் தான் இந்த ஐடியா மணி. 

வாருங்கள் ஜனங்களே! புலிகளை வைத்து பொ(பி)ழைப்பு நடாத்துவோம்!!

காலப் பெரு வெளியின் கனத்த இருள் நிறைந்த பக்கங்களைக் கடந்தவர்களாய் இன்று பெரு மூச்சு விட்டு, எமக்கான ஏதும் கிடைக்கப் பெறவில்லை என்றாலும் மகிழ்ச்சியோடு வாழ்வதாக நடிக்கப் பழகி விட்டோம். நமக்கான தீர்வோ, நாம் எதிர்பார்த்த எண்ணங்களுக்கான ஒரு பிடி நிலமோ கிடைக்கவில்லை என்றாலும், ஆட்சியாளர்களின் போலி நாடகத் திரை முன்னே நாம் இப்போதும் சந்தோசமாக இருப்பதாக காண்பிக்கப்படும் வேளையில் பணம் வாங்காது உடலை விற்கும் விபச்சாரி போல் எம் பங்களிப்பினையும் செய்யத் தொடங்கி விட்டோம். கந்தகத் துகள் செறிந்துள்ள எங்கள் காற்றும் இப்போது சுத்தம் செய்யப்பட்டு சிங்களத் தமிழ் கலந்து வரும் வடக்கு நோக்கிய வசந்த காற்றாக மாற்றம் பெற்று விட்டது. 

Saturday, March 17, 2012

தீக்குளிக்க தயாராகும் கலைஞர்! தீயை வைக்க தாமதிப்பாரா ஜெயா?

கலைஞர் கலாட்டா - கருத்து கடிவாளம் - கப்ஸிங் ஜிங்கிங் - சொங்கிங் ஜிங்கிடி!

*அண்ணா நூலகம் இடிக்கப்பட்டால் நான் தீக்குளிப்பேன் கலைஞர் ஆவேசம்:
அட போங்க பெரியவரே! இன்னுமா இந்த உலகம் உங்களை நம்பிட்டிருக்கு? சங்கரன் கோவில் தேர்தல் முடிஞ்சா நான் டீ குடிப்பதாக சொன்னதை தீக்குளிப்பதாக யாரோ எழுதிட்டாங்க என்று நீங்க பல்டி அடிச்சாலும் அடிப்பீங்க என்று நமக்கு முன்னாடியே தெரியாதா சார்?

ஐங்கரனின் தங்கை ஈழத்தில் சிங்கள ஜந்துகளால் சிதைக்கப்பட்டாள்!

கொடூரம் - கொடுமை - சிங்கள அராஜகம் - இன்றும் மனக் கண் முன்னே நிற்கும் ஆதிக்க வாதத்தின் அநாகரிகத்தை விளக்கும் ஓர் பதிவு!

ஒரு இலக்கியத்திற்குரிய
பாடு பொருட்கள்
பல இருந்தும்,
எழுது கோல் கொண்டு
எழுத முடியாதவாறு
கண்காணிப்புக்கள்
அச்சமூட்டும் ஆக்கிரமிப்பு
வடிவங்களாக நகர்ந்து செல்கின்றன!

Friday, March 16, 2012

கலியாணம் கட்டாத பசங்களின் கலர்புல் பார்ட்டி -16/03/2012

ஆபாசானந்தா மேல சத்தியமா இப் பதிவில் ஒரு துளி ஆபாசமும் இல்லைன்னு சொன்னாலும் நம்பவா போறீங்க? வெளியே நின்று வெட்கப்பட்டு பதிவை படிக்காம ஓடுவதை விடுத்து, அச்சப்படாம வாருங்கள்! இன்றைய பதிவினை படித்து நம்ம பார்டியை கலக்கிட ஒன்று சேருங்கள்! 
எல்லோருக்கும் இனிய வெள்ளிக் கிழமை வணக்கம் & வாழ்த்துக்களுங்கோ! 

தீக்குளிக்க தயாராகும் கலைஞர்! தீயைவைக்க ரெடியாவாரா ஜெயலலிதா?

அண்ணா நூலகம் இடிக்கப்பட்டால், அடியேன் தீக்குளிப்பேன் என இம்முறை வீராவேசத்துடன் பொங்கியெழுந்து சூளுரைத்துள்ளார் கடிதம் எழுதும் கலாய்ப்பிற்கு பேர் பெற்ற நம்ம கலைஞர் ஜி அவர்கள். தன்னுடைய வழமையான அரசியல் பாணியில் அறிக்கை விட்டு அசத்தல் காமெடிகளை அள்ளி வீசிய கலைஞர் ஜி இப்போது ஒரு படி மேலே போய், அண்ணா நூலகம் இடிக்கப்பட்டு மருத்துவமனை கட்டடம் கட்டப்படுவதை எதிர்த்து என்னால் முடிந்த வரை உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு மேல் வழக்குப் போட்டு வாதாடுவேன்! முடியலைன்னா நூலகம் இடிக்கப்படும் நாளில் தீக்குளித்து என் உயிரை மாய்ப்பேன் என சூளுரைத்துள்ளார்! ஆகா..85 வயசில ஒருத்தன் சாகப் போறார் என்றால் ஜனங்க சும்மா இருப்பாங்களா? கலைஞர் ஜி! நீங்க சந்தோசமா தீக்குளியுங்க. உங்களை யாருமே தடுக்க மாட்டாங்கோ...

Wednesday, March 14, 2012

திருமணத்திற்கு முன்னரான பாதுகாப்பற்ற உறவிற்கு கிடைக்கும் பரிசு!!

Thanks Mum - நன்றி அம்மா : ஈழத்து குறும்பட விமர்சனம்!
ஈழத்துத் தமிழ்ச் சினிமா என்ற ஒன்று காலவோட்ட மாற்றத்தில் காணாமற் போய் விட்ட பிற்பாடு, அத்தி பூத்தாற் போல எப்போதாவது ஒரு முறை வெளியாகும் ஈழத்துக் குறும்படங்கள், ஈழத்தவர்களாலும் ஒரு சினிமாவினை எடுக்க முடியும் எனும் நம்பிக்கையினை மெய்ப்பித்து விடுகின்றன. முழு நீளத் திரைப்படங்கள்(நீலப் படம் அல்ல) எனும் வரிசையில் இருந்து ஈழச் சினிமாவானது விலகி, இன்று அதற்கென்றோர் தள வடிவம் ஏதுமற்றிருப்பதற்கான பிரதான காரணம் ஈழத்துப் போர்ச் சூழலாகும்.

Tuesday, March 13, 2012

இத்தாலி நாய்க்கு இலங்கை என்ன நக்கும் எலும்புத் துண்டா?

இத்தாலி நாய் நீஎன
இன்று எல்லோரும்
உனை அழைக்கிறார்கள்
இதற்கான காரணம்
என்னவாய் இருக்கும் என
இரவு பகலாய் தேடினேன்
இலகுவில் பல விடைகள்
கிடைத்ததால் இங்கு நான் பகிர்கிறேன்!

Monday, March 12, 2012

சங்கரன் கோவிலில் அரங்கேறப் போகும் சிங்கிடி நடனம்!

எம் உறவுகளின்
ஊரில் இப்போது
தேர்தல் காலம்!

தம் தேவைகளை உணர்ந்தோராய்
வேட்பாளர்கள் அனைவரும்
 வீடு தேடி வரும் காலம்
கையெடுத்து கும்பிட்டு
தம் சுயத்தை வெளிப்படுத்த
கவலையின்றி பிச்சை கேட்கும் காலம்!

பொய்களையெல்லாம் வர்ணமடித்து
பேச்சோசை எனும் பூ(ச்) சூடி
அலங்கரித்து, அழகாக்கி
அனைவரின் கதவுகளையும் தட்டி
வாக்குக் கேட்கும் இழிவான காலம்!
வங்குரோத்து அரசியல்வாதிகளின்
வயித்து பிழைப்புக்கான வசந்த காலம்!!

அதிமுக - திமுக இரண்டையும் அடியோடு விரட்டுவது எப்படி?

அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்: திமுக - அதிமுக கட்சிகளின் தனி நபர் விசுவாசம் என்கின்ற உள்ளுணர்வோடு இப் பதிவினைப் படிக்க நினைப்பவர்களுக்குப் பொருத்தமான பதிவு இது அல்ல! தயவு செய்து உங்கள் விசுவாசங்களைக் கொஞ்ச நேரம் தூரத் தள்ளி வைத்து விட்டு; மனச்சாட்சிக்கு நேர்மையான முறையில் இப் பதிவினை நீங்கள் உற்று நோக்கினால் நன்றாக இருக்கும் அல்லவா! தயவு செய்து அனைவரும் பதிவினை முழுமையாகப் படித்து விட்டுக் கருத்தினைப் பகிருங்கள். உங்கள் வருகைப் பதிவிற்காக இப் பதிவில் கருத்துரைகளைப் பகிர்ந்து மொய்க்கு மொய் தேட முயற்சிக்க வேண்டாம்! இது என் அன்பான வேண்டுகோள்! மன்னிக்கவும்!

பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய தாய்த் தமிழக உறவுகளே! 
ஈழத்தின் தெருக் கோடியில் கிடக்கும் இவனுக்கு உங்கள் தாய்த் தமிழகம் மீது ஏன் இந்த அக்கறை! "இந்தப் பதிவை அழித்து விட்டு பொத்திட்டுப் போடா நிரூபன்" என்று நீங்கள் என் மீது கோபப்படலாம்! இலங்கையின் ஊடகச் சுதந்திரம் பற்றி நீங்கள் யாவரும் அறியாததல்ல! இலங்கையில் "ஆச்சி மாற்றம் வேண்டும்" என்று எங்கள் கொள்ளுப் பாட்டியைப் பார்த்து நாங்கள் கேட்கும் போது அருகே ஒரு சீருடை தரித்த கொஞ்சம் தமிழ் பேசத் தெரிந்த இராணுவ வீரன் நின்றால், "ஆட்சி மாற்றம் வேண்டும்" என நாங்கள் கூறியதாக நினைத்து எங்கள் கதையினையே முடித்து விடுவார்கள். இது பற்றி நீங்கள் அறியாதல்ல. உங்கள் ஆத்திரங்கள், கட்சி விசுவாசங்கள், பொங்கியெழும் உணர்ச்சியலைகள் என அனைத்தையும் கொஞ்சம் தூரத் தள்ளி வைத்து விட்டு இனிப் பதிவிற்குள் நுழைவோமா? 
ஐயா ஆட்சியில் இருக்கும் போது செய்யும் மரண மொக்கைகளை அம்மா டீவிக்குள்ளால் பார்த்து சிரிப்பார்! அம்மா ஆட்சியில் இருக்கும் போது பண்ணும் காமெடிகளை ஐயா பார்த்து சிரிப்பார்!

அவளை(லை) நினைத்து உரலை இடிப்பது இப்படித் தானோ?

மனமென்னும் பெருங் கடலின் ஓரத்தில் சிறு துகள்களாய் ஞாபகச் சிதறல்களின் பெரும் பாகத்தினை அவள் எடுத்து விடுகின்றாள். நினைவுகளில் நீந்தச் செய்து, உணர்வுகளுக்கு உருவம் கொடுத்து, காலப் பெரு வெளியின் கோலக் கிறுக்கல்கள் அவள் மூலமாக வசியம் செய்யப்பட்டு விடுகின்றது. இரவுகளின் அர்த்தமற்ற பொழுதுகள் இதமான கனவுகள் மூலம் இனிமையாக்கப்படும் வேளைகளில் மனம் எத்தனை சாந்தம் பெறும்? 
ஓ! அப்படியானால் அவள் நினைவுகளைத் தந்து விட்டுச் செல்லும் நீல மேகமா?
சே... இல்லை! இல்லை! மேகத்திற்கு இணையாக அவளை எப்படி ஒப்பிட முடியும்?

Friday, March 9, 2012

சங்கரன் கோவில் தேர்தல் மேடையில் எறியப்படும் எச்சில் பருக்கைகள்!

நீயும், நானும்
நாமும், நம் முன்னோர்களும்
காலதி காலமாய் இதனைத் தான்
கேட்டுக் கேட்டு
காலத்தை கடத்துகிறோம்;

Thursday, March 8, 2012

இலங்கைக்கு அமெரிக்கா விதித்திருக்கும் காலக் கெடு!

அச்சத்தில் சிங்கள தேசம் - ஆரவாரத்தில் தமிழர்கள் - ஆப்பினை அகற்றும் முயற்சியில் அல்லக்கை அமைச்சர்கள்!
இறுதிப் போரின் போது இலங்கையில் மனித உரிமை மீறல்கள், சர்வதேச போர் விதிகளுக்கு முரணான அரஜாகங்கள், மற்றும் கொடூரமான சம்பவங்கள் பல தமிழ் மக்கள் மீதும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டதாக தகவல்கள் கசியத் தொடங்கின. இறுதிப் போர் முடிந்த பின்னர், இலங்கையின் அக்கிரமங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் அவசியம் என தமிழர் தரப்பினர் இடை விடாது குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர். 

Wednesday, March 7, 2012

இன்பத்தை கூ(ஊ)ட்டும் இலக்கண காதல்!

என்னைப் பார்த்து இப்படிக் கேட்டுப்புட்டாளே!
நிரூபன்: சாரி நேமிசா, இன்னைக்கு கொஞ்சம் லேட்டாகிடுச்சு,  உங்களைப் பார்க்க இனைக்காச்சும் கொஞ்சம் வேளைக்கு வரனும். நீ வர்ற முன்னாடியே, நான் வந்து நின்று, நீ வந்ததும் ஓடோடி வந்து உன்னைக் கட்டிப் பிடித்து ஒரு பிரெஞ்ச் கிஸ் அடிக்கனும் என ஆவல் மேலிட வந்தேன். வர்ற வழியிலை வண்டி சொதப்பிடிச்சு. அதான் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. என்னை மன்னிக்க மாட்டியா செல்லம்?

Tuesday, March 6, 2012

"ABDUCTION" - கிரிமினலின் அசைவுகள் பட விமர்சனம்

ஹாலிவூட்/ ஹோலிவூட்/ ஹொலிவூட்/ கோலிவுட் ஆக்சன், த்ரிலிங் சினிமா விமர்சனம்!
இப் படமானது 15 வயதிற்கு மேற்பட்டோர் மாத்திரம் பார்த்து மகிழும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இன்றைய உலகில் பல்வேறுபட்ட குறிக்கோள்களின் அடிப்படையில் மனித உயிர்களைக் கொல்லுகின்ற யுத்தங்கள் இடம் பெற்று வருகின்றன. சுதந்திரத்திற்காகவும், உணவுத் தேவைக்காகவும், இனவாதக் கொள்கைகளின் அடிப்படையிலும் ஒருவரை ஒருவர் அடக்கி வாழும் நோக்கிலும் யுத்தங்கள் இடம் பெற்று வரும் இக் காலத்தில் சைபர் கிரைம் எனப்படுகின்ற நவீன தொழில் நுட்பத் தரவிற்காக (DATA) இடம் பெறுகின்ற கொலை முயற்சிகளைப் பற்றிப் பேசுகின்ற படம் தான் ABDUCTION ஆகும். 

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க