Monday, January 30, 2012

ஈழச் சிசுவை கொன்றொழித்த ஈன பிரதேசவாதம்!

யாழ்ப்பாணக் குடா நாட்டில் பிரதேச வாதம்!
அனைவருக்கும் வணக்கமுங்க; யாழ்ப்பாணத் தீவகற்பத்தில் வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் என நான்கு பெரும் பிரிவுகள் உள்ளன, இவை பூகோள அடிப்படையில் குடாநாட்டினை அடையாளப்படுத்தும் நோக்கில்; பல நூறு ஆண்டுகளுக்கு முன்பதாகவே ஒல்லாந்தர்களினால் பிரிக்கப்பட்டிருந்தன. இங்கே வாழும் மக்கள் அனைவருக்கும் தனி நாடு வேண்டும், எனும் ஆசை இருந்தாலும், இப் பிரதேசங்களின் அடிப்படையில் வேற்றுமைகள் அவர்களின் அடி மனங்களில் காணப்படுகின்றது என்பது உண்மையே! (நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது ஈழச் சிசுவைக் கொன்றொழித்த ஈனப் பிரதேசவாதம் தொடரின் இரண்டாவது பாகமாகும். இத் தொடரின் முதற் பாகத்தினைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்)

மாசமான பொண்ணுங்களின் மோசமான உடம்பை குறைப்பது எப்படி?

எல்லோருக்கும் வணக்கமுங்க, இந்தப் பதிவு கலியாணம் கட்டப் போறவங்க, ஆல்ரெடி கலியாணமானவங்க, கட்டிளம் காளைங்க, அதே போல கட்டிளம் கன்னியர்கள் அனைவருக்குமே ஏத்த பதிவுங்க.வாருங்கள் பதிவிற்குள் நுழைவோம். நம்ம தமிழ் கலாச்சாரத்தில ஒரு பழக்கம் இருக்குங்க. வூட்டிற்கு வந்த மருமவள் கண் கலங்க கூடாதுன்னு அப்படியே பொத்திப் பொத்தி ஒரு வேலையும் செய்ய விடாது பூப் போல பாதுகாப்பதுங்க. இதனால மாமியார்,மத்தும் கணவன் துணையோட பூப் போன்ற பெண்ணோட வாழ்க்கை; வருங்காலத்தில புஷ்வானமாகிடுமுங்க. இதனால தினம் தினம் பல பொண்ணுங்க வெளியே சொல்ல முடியாமலும், உள்ளே தமது சோகத்தைப் பூட்டி வைச்சிருக்க முடியாமலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி வெந்து வெந்து சாகிறாங்க. www.thamilnattu.com

பதிவரின் மனைவிக்கு பெயர் ஹிட்டழகியா? பதிவுலகம் அதிர்ச்சி!

ஜாலினோ ஜிம்கானா காமெடி ஜிம்மி!

பதிவுலக நகைச்சுவை இளவல் சாம் ஆன்டர்சனும், சா(தா)தா பதிவரும் பேசிக்கிறாங்க
சாம் ஆன்டர்சன்: ஏலேய் தாதா பதிவரு, ஒனக்கு விசயம் தெரியுமா? அந்தப் பதிவரோட மனைவிக்கு ஏன் ஹிட்டழகின்னு பேரை மாத்தி வைச்சிருக்காங்க தெரியுமா?
சா(தா)தா பதிவர்: தெரியலைங்க. நான் பதிவுலகிற்கு புதுசில்லே!
சாம் ஆன்டர்சன்: அடப் போய்யா, ஹிட்டு பதிவு போட முன்னாடி சுட்டுப் போடுற பதிவுகளை அவங்க வூட்டுக்காரம்மா தான் கரெக்சன் பார்த்து கம்புசூட்டரில ஏத்தி கொடுப்பாங்களாம். அதற்கு பரிகாரமா பொண்டாட்டி பேரை மாத்திப்புட்டாரு.

Sunday, January 29, 2012

முத்துக்குமார் மூட்டிய தீ மூளி சோனியாவை சுட்டுப் பொசுக்கும்!

இன்றல்ல நேற்றல்ல 
மூன்றாண்டுகள் ஆகி விட்டன- ஆனாலும்
முத்துக்குமார் நீ மூட்டிய விடுதலை(த்) தீ
இன்னமும் மிளாசி எரிகிறது!

One Day: பெண்ணை பாதுகாக்கும் நட்பு- அனுபவிக்க போராடும் காதல்!

கோலிவுட்/ ஹாலிவூட் திரை விமர்சனம்:
12வயதிற்கு மேற்பட்டோர் பார்க்க கூடிய படம்.
எல்லோருக்கும் வணக்கமுங்க, 
நட்பினைக் காதலாக மாற்றுவதும், காதலை நட்பாக மாற்றுவதும் இக் கால இளசுகளின் ஒரு ஜாலியான வாலிப வயசின் விளையாட்டு என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.கல்லூரியில் ஓர் ஆணுக்கு கிடைக்கும் அதிஷ்டவசமான பெண் நட்பினை வாழ்வின் இறுதிக் கணங்கள் வரை தன் கூடவே அழைத்துச் செல்லும் பாக்கியம் எல்லோருக்கும் இலகுவில் கிடைப்பதில்லை. இப்படியான ஓர் சம்பவத்தினைக் கொண்ட படம் பற்றிய விமர்சனத்தினைத் தான் இப் பதிவினூடாக படிக்கப் போகிறோம். கொஞ்சம் வித்தியாசமான கான்செப்ட் ஆக இருந்தாலும், நம்ம தமிழ்ப் படங்களில் இப்படியான கான்செப்ட்டினைப் பார்த்திருக்கிறோம் என்று கூட கூறலாம். சரி, வாருங்கள்..படத்திற்குள் நுழைவோம்.

Saturday, January 28, 2012

ஈழச் சிசுவை கொன்றொழித்த ஈனப் பிரதேசவாதம்!

தயவு செய்து பிடிக்காதவர்கள் படிக்க வேண்டாம்!!
நாற்று வலைப் பதிவினை நாடி வந்திருக்கும் அனைவருக்கும் இனிய வணக்கம், தமிழன் என்கின்ற தனித்துவமான இனக் கட்டமைப்பினுள், காலந் தோறும் பிரதேசவாதங்களும், மதவாதங்களும் தலை விரித்தாடுவது விரும்பத்தக்க விடயமல்ல. ஒன்றுபட்ட இனமாக தம்மிடையேயான பேதங்களைக் களைந்து தமிழன் ஓரணியின் கீழ் நின்றிருந்தால் இந் நேரம் வென்று நிமிர்ந்த தலை முறையாக இந்தப் பூமியில் நாம் நிமிர்ந்திருப்போம். பிரதேசவாதம், சாதியம், போர் ஆகியவை தொடர்பான மாற்றுக் கருத்துக்களை வலையுலகிற்கு வந்த ஆரம்ப காலத்தில் எழுதி வந்தேன். நண்பர்களான சிபி செந்தில்குமார், கந்தசாமி, ஓட்டவடை நாராயணன் ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்த வகையறாப் பதிவுகளை கொஞ்ச காலம் தொடருவதில்லை என ஒதுக்கி வைத்திருந்தேன். 

Friday, January 27, 2012

என்னை கெடுத்த பொண்ணுங்கள் - சூடான & சுவையான தொகுப்பு

மச்சாள்காரிங்க கூட ஜாலியாக பால்ய வயதினைக் கழிச்சுக் கொண்டிருந்த எனக்கு இடியாக அமைந்தது என் அப்பாவின் வேலை மாற்றம். இதன் காரணமாக முதலாம் ஆண்டு கல்வியினை நாம் யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்து சென்று தொடர வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. இதனால் மீண்டும் வித்யா & நித்யா கூட விளையாட மாட்டேனா என்று ஏங்கிக் கொண்டிருந்தேனுங்க. அப்போது தான் எனக்குப் பக்கத்தில் ஒரு பூக் கட்டுக் கட்டிய ஆளு வந்து அமர்ந்திருந்தா. என் ஐஞ்சாம் கிளாஸ் வரைக்கும் அவங்க என் கூடவே வருவா என்று நான் நினைச்சிட்டிருந்தேன். ஆனால் அவங்க மூனாம் கிளாஸ் முடிய முன்னாடியே எஸ் ஆகிட்டாங்க. 
இனிப் பாகம் ஒன்றின் தொடர்ச்சியாக......

கலியாணம் கட்டாத பசங்களின் ஹவுஸ்புல் திருவிழா!

அபாய அறிவிப்பு / முன் எச்சரிக்கை: இப் பதிவு குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், தாய்க் குலங்களுக்கும் மற்றும் கலாச்சார காவலர்களுக்கும் உகந்தது அல்ல. ஆனாலும் ஆர்வமுள்ளவங்க படிக்கலாம். விரும்பின் கமெண்ட் கூடப் போட்டுக்கலாம். விருப்பமில்லைன்னா படிச்ச தடயம் இல்லாம சாமி குத்தம் வர முன்னதா எஸ்கேப் ஆகிடலாம். அலுவலகங்களிலும்,பொது இடங்களிலும் இப் பதிவினைப் படிக்க விரும்புவோர் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. "கலியாணம் கட்டினவங்க இப் பதிவினைப் படிக்க முடியாதா?" அப்படீன்னு உங்களுக்கு இப்போ லைட்டா ஒரு டவுட்டு வரலாம். அவங்களும் படிக்கலாமுங்க. இனி பதிவிற்குள் நுழைவோமா?
சனீஸ்வரனுக்கு நெய் விளக்கு எரிக்கிறாரோ? டவுட்டு!

Thursday, January 26, 2012

ஆங்கில மொழி புலமையை அதிகரிக்க அசத்தலான ஐடியாக்கள்!

கணினித் திரையூடாக உங்கள் இதயங்களை இணைத்து, இணைய வலையினூடே இப் பதிவினைப் படிக்க வந்திருக்கும் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்! 
தாய்த் தேச உறவுகள் அனைவருக்கும் இனிய குடியரசுத் திருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
ஆங்கிலம் என்றால் நம்மில் அதிகளவானோருக்கு ஓர் இனம் புரியாத கசப்புணர்வு ஏற்படும். சிலரைப் பார்த்தால் ஆங்கில மொழியில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக எழுத்து, வாசிப்பு ஆகிய துறைகளில் நன்றாக வெளுத்து கட்டுவார்கள். ஆனால் பேசும் போது பம்மிடுவாங்க. இன்னும் சிலரைப் பார்க்கையில் நம்மில் சிலருக்கு "அடடா இவனு ரொம்ப நல்லா இங்கிலீசு பேசுறானே...நம்மால முடியலையே" என்கிற தாழ்வு மனப்பான்மை ஏற்படும். இன்னும் சிலர் என்னா பண்ணுவாங்க என்றால் நம்ம டீவி, ரேடியோக்களில் புரோக்கிராம் பண்றவங்க மாதிரி ஒரு வசனம் பேசும் போது மூனு தமிழ்ச் சொற்களையும், நாலு ஆங்கிலச் சொற்களையும் கலந்து கட்டிப் பேசுவாங்க. இவங்க பேசும் இங்கிபீசைக் கேட்டால் நம்மளுக்கு இருக்கிற ஆங்கில அறிவும் பறந்தோடிப் போயிடுமுங்க.

ஜெயாவின் பிரதமர் ஆசையும் கலைஞரின் பிரிவினை குணமும்!

                            அதிரடி அரசியல் நையாண்டி அரங்கம்!

சோ பத்த வைச்ச சோக்கான நெருப்பு!

மன்னருக்கு எப்போதும் அருகே இருக்கும் 
மந்திரிகள் தான் 
ஆசையெனும் தீயை பற்ற வைப்பார்கள் - எங்கள்
மம்மியிற்கும் சோ ஐயா 
சோக்கான தீயை பத்த வைச்சார்!

Wednesday, January 25, 2012

சினிமா & சின்னத்திரை மூலம் சீரழியும் பாரம்பரிய கலைகள்!

தமிழரின் பாரம்பரிய கலைகள், தமிழர் விளையாட்டுக்கள் எவை என்று இன்றைய சமுதாயத்திடம் கேள்வி கேட்டால் ஒருவரை ஒருவர் பார்த்து முழிக்கின்ற நிலையில் தான் எமது சமுதாயத்தினர் உள்ளார்கள் எனலாம். இதற்கான பிரதான காரணம் தமிழரின் கலைகள் பற்றிய பரிச்சயம் இன்றைய இளைய சமுதாயத்திடமிருந்து அந்நியப்படுகின்றது என்பதேயாகும். தமிழரின் பூர்வீக விளையாட்டுக்களும், தமிழர் கலாச்சாரத்தினைப் பிரதிபலிக்கும் கலைகளும், கால ஓட்டத்தில் எமது சமூகத்தின் கவனிப்பாரற்ற நிலையினால் அழிந்து போகின்றன அல்லது மருவிச் செல்கின்றன எனலாம். ஆரம்ப காலங்களில் தமிழ்ப் பெருமன்னர்களாலும், கிராமங்கள் தோறும் இருந்த அமைப்புக்களாலும், குழுக்களாலும் வளர்த்தெடுக்கப்பட்ட இந்தக் கலை அம்சங்கள் இன்றைய காலத்தில் ஆதரிப்பார் யாருமின்றி அழிவடையும் நிலையில் இருக்கின்றன.

Tuesday, January 24, 2012

என்னை கெடுத்த பொண்ணுங்கள் - சூடான & சுவையான தொகுப்பு

மனம் ஓர் குரங்கு என்று சொல்லுவார்கள். எல்லா மனிதருள்ளும் காதல், அன்பு, பாசம் என்கின்ற பல்வேறுபட்ட உணர்வுகள் பொதிந்து கிடக்கும். அவை ஓர் அலாரம் போன்று தமக்குரிய நேர காலம் வரும் போது தம் குண இயல்பினை வெளிப்படுத்தக் கூடியவை.பூமியில் பிறந்த மனிதனுக்கு என்றோ ஓர் நாள் காதல் என்ற ஓர் தெய்வீக உணர்வு நிச்சயமாக வந்திருக்கும். இரு தலையாக காதல் வரா விட்டாலும், ஒரு தலையாக நிச்சயமாக காதல் உணர்வுகள் அவன் மனதினைக் கட்டிப் போட்டிருக்கும் எனலாம். ஆசாபாசங்கள் என்பப்படுவது ஒரு திரி தூண்டி போன்று தூண்டி விட்டால் பற்றி எரியக் கூடிய வல்லமை பெற்றவை. யாருக்கு எப்போது, எந்த இடத்தில் தம் வெப்பியாரத்தினைக் காட்டுகின்ற திறன் கொண்டவை இந்த உணர்ச்சிகள் என்று இலகுவில் எல்லோராலும் அளக்கவோ, அறியவோ முடிவதில்லை.

பதிவுலகை நாறடிக்கும் உள் குத்து நா(ற)ரதரின் பக்கீர் பேட்டி!

ஜாலினோ ஜிம்கானா! காமெடி கு(ஜி)ம்மி கலாட்டா!
ஐயா வணக்கம், அம்மா வணக்கம், மற்றும் அனைவருக்கும் வணக்கமுங்கோ!நம்ம பேட்டிக்கு வந்திருக்கும் ஹெஸ்ட்டை பார்க்கிறதுக்கு முன்னாடி, அவரைப் பத்தி ஒரு சின்ன அறிமுகம் படிப்போமா? "பதிவுலகில் உள் குத்திற்கு ரொம்பவே பேர் போனவர் நான் தான் என்று" அடிக்கடி தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளும் மகான் இவர். இவரோட ஸ்பெசாலிட்டியே உள்குத்து என்ற பெயரில் மத்தவங்களுக்கு புரியாத மாதிரியும், தனக்கு மாத்திரம் புரிகிற மாதிரியும் பதிவெழுதி; தன்னோட எழுத்துக்கள் பின் நவீனத்துவ இலக்கியம் என்று மார் தட்டிக் கொள்வது தான். இப்போ...நாம நேரடியாக நாரதரைச் சந்திக்கப் போவோமா? வாருங்கள்!

Monday, January 23, 2012

அத்தி பூத்தாற் போல அமைதியாக எழுதும் அபூர்வ பதிவர்!

இயந்திரமயமான உலகில் இன்று எம்முடன் கூட வந்து கொண்டிருப்பவை இலத்திரனியல் ஊடகங்கள் என்றால் மிகையாகாது. எமக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் காகிதாதிகள் மூலம் உருவாகும் படைப்புக்களை விட, அப் படைப்புக்களின் இலத்திரனியல் வடிவங்களைப் படிப்பதற்கு தான் நேரம் கிடைக்கின்றது. இதனால் புகழ் பூத்த பல சஞ்சிகைகள், பத்திரிகைகள் எல்லாம் இணையத்த்தின் இணையில்லா வளர்ச்சிக்கு ஏற்றாற் போல மின் நூல்களாகத் தம்மை மாற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டன. வாரந் தோறும் "அம்பலத்தார் பக்கங்கள்" வலைப் பதிவின் சொந்தக்காரர் "திரு. பொன்னர் அம்பலத்தார்" அவர்கள் பதிவர்களின் படைப்புக்களை விமர்சனங்களால் அலங்கரித்து பகிர்ந்து வருகின்றார். அவரது இந்த வார விமர்சனம் யாருடைய படைப்புக்களைத் தாங்கி வருகின்றது என்று பார்ப்போமா?வாருங்கள், பதிவிற்குள் நுழைவோம். 

The Losers : அமெரிக்க உளவு துறைக்கு ஆப்படிக்கும் கேங்!

ஹாலிவூட் அதிரடி ஆக்சன் திரைப்பட விமர்சனம்!
ஒரு தாக்குதலை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க வேண்டுமாயின் சிறந்த திட்டமிடல் அவசியம். திட்டமிடலுக்கு அடுத்த கட்டமாக ஆயுத வளம், மனித வலு,மற்றும் தாக்குதலுக்கான இலகு வழிகளைக் கண்டறிவது அவசியமாகின்றது. குறுகிய வளங்களுடன், பெருமளவான சேதத்தினை ஏற்படுத்தக் கூடிய தாக்குதலை செய்வதற்கு பல குறுக்கு வழிகளைக் கையாள வேண்டியிருக்கலாம். அதே வேளை, ஆயுத வளம் இல்லாத சந்தர்ப்பத்தில் சுயமாக தமக்கு உள்ள அறிவின் அடிப்படையில் ஆயுதங்களையும் வடிவமைக்க வேண்டிய சாத்தியம் ஏற்படலாம். அமெரிக்க உளவுத்துறையினைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட கும்பலானது, CIA நிறுவனத்தின் நடவடிக்கைகள் பிடிக்காததன் காரணத்தினால் CIA நிறுவனத்தினை அழிக்க முயற்சிக்கின்றார்கள். இது சாத்தியமா என நீங்கள் நினைக்கிறீர்களா? ஆம், இந்தச் சம்பவங்களை உள்ளடக்கிய படம் தான் The Losers. 

Sunday, January 22, 2012

ஆபாச தளங்களுக்கு வீடியோ சப்ளை செய்யும் யாழ்ப்பாண ஆசாமி!

போட்டோக்களும், ஆதாரங்களும் இணைக்கப்பட்டிருக்கிறது:
newjaffna.com எனும் பெயரைக் கேட்டாலே யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள மக்களில் அதிகளவானோருக்கு ஓர் இனம் புரியாத நடுக்கம் ஏற்படும். யாழ்ப்பாணக் குடாநாட்டில் மூத்திரச் சந்துகளில் சிறு நீர்கழிக்க ஒதுங்குவோர் முதல் சொந்த மனைவியுடன் பேருந்தில் அளவளாவி அன்பாகச் செல்லம் பொழிந்து செல்லும் கணவன்மார் வரை எல்லோருக்கும் இவர்கள் பெயரைக் கேட்டாலே நடுக்கம் உருவாகும். எம்மை இந்த newjaffna குழுவினர் வீடியோ எடுத்து ஆபாசத் தளங்களிலும், தமது அந்தரங்கத் தளத்திலும் பிரசுரித்து அசிங்கத்திற்குள்ளாக்கி விடுவார்களோ என எண்ணி; அனைவரும் அச்சத்திற்குள்ளாகின்ற இழி நிலையினை இந்த இணையத் தளம் இன்று யாழ்ப்பாண மக்களுக்கு கொடுத்திருக்கிறது.யாழ்ப்பாண கலாச்சாரத்தினை கட்டிக்காக்கப் புறப்பட்டிருக்கிறோம் என்று களமிறங்கியிருக்கும் இந்த newjaffna.com இணையத் தளத்தின் இன்னோர் முகத்தினைப் பலரும் அறிந்திருக்கமாட்டார்கள்.
நியூ ஜப்னா தளத்தின் உரிமையாளர் & காம வியாபாரி சிவராஜா பிரசாத்.

Friday, January 20, 2012

பிறர் பதிவுகள் மூலம் சுய இன்பம் காணும் பதிவர்கள்!

அடுத்தவன் குழந்தைக்கு அப்பனாக நினைக்கும் பதிவர்கள் - ஓர் அலசல்!
"ஒத்தப் பதிவின் மூலம் மொத்த ஹிட்ஸையும் அள்ளுவது எப்படி?" எனும் தொடர் பதிவின் ஆறாவது பாகத்தினைப் படிக்க வந்திருக்கும் அன்புச் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்;
நான்காவது பாகத்தினைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்>>>
ஐந்தாவது பாகத்தினைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்>>> இனி ஐந்தாவது பாகத்தின் தொடர்ச்சியினைப் படிப்போமா? எல்லோரும் பதிவினைப் படிக்க ரெடியா? ஸ்னாக்ஸ், சிப்ஸ், அப்புறம், கூல் ட்ரிங்க்ஸ் எல்லாமே கொண்டு வந்திருக்கிறீங்களா?  வாங்க, வாங்க.

வண்டியை தடவினாள் - வாந்திக்கு முன் கலைச்சிடச் சொன்னேன் நான்!

கண்ணாடிக்கு முன்னாடி நின்று கழுத்தின் கீழ் அப்பியிருந்த கிரீமினை சரி செய்து கொண்டிருந்தேன்.பெண்ணாக என் மனதை கொள்ளையிட்ட அவளைப் பார்க்கச் செல்வது போல, இப் பூவுலகில் எனக்கு வேறெந்தச் செயல்களும் பெருமை தரவில்லை எனும் நினைப்பு வர, பேர் அண்ட் லவ்லி கீரிமைத் தேடினேன். ஏலவே 15 வெளிநாட்டு கிரீம்களை உறவினர்களின் உதவியுடன் இறக்குமதி செய்து மூஞ்சியில் அப்பிப் பார்த்தும் என் ஸ்கின் ட்ரை ஸ்கின் என்பதால் ஏதும் ஒத்துப் போகவில்லை என்பதால் எனக்கு ஏத்தது உள்ளூர் தயாரிப்புத் தான் என உணர்ந்து உருப்படியான காரியம் செய்தேன். கைகளில் இப்போது Fair and lovely கிரீம். 
மூஞ்சியில் அப்பி, மீண்டும் மீண்டும் இன்று நான் ஸ்மார்ட்டா இருக்கேனா என செக்கப் செய்து கொண்டேன். பேரழகியினைத் தரிசிக்கச் செல்வதற்கும், பேர் அண்ட் லவ்லி கை கொடுக்கிறதே என நினைத்து மனதினுள் சிரித்துக் கொண்டேன்.

Thursday, January 19, 2012

பதிவுலகத்தை ஏமாற்றி பதிவர்கள் காதில் பூச்சுத்தும் பம்மாத்து பதிவர்கள்!

இப் பதிவினைப் படிக்க வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கமுங்க;
புதிய பதிவர்களுக்கும், ஏனைய பதிவுலக நண்பர்களுக்கும் ஒரு சின்ன உதவியாக அமையும் வண்ணம்; வலைப் பதிவில் "ஒத்தப் பதிவின் மூலம் மொத்த ஹிட்ஸையும் அள்ளுவது எப்படி?" எனும் தொடரினை எழுதிட்டு வருகிறேன். ஸோ அந்த தொடரின் ஐந்தாவது பாகமாக இப் பதிவு உங்களை நாடி வருகின்றது. இப் பதிவின் தொடர்ச்சியான:
நான்காவது பாகத்தினைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்>>> இனி நான்காவது பாகத்தின் தொடர்ச்சியினைப் படிப்போமா? எல்லோரும் பதிவினைப் படிக்க ரெடியா? அப்படீன்னா ஓக்கே

கலியாணம் கட்டாத பிரமச்சாரிகளின் ஹவுஸ்புல் திருவிழா - 18+

அபாய அறிவிப்பு / ஆபாச அறிவிப்பு: இப் பதிவு குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், தாய்க் குலங்களுக்கும் மற்றும் கலாச்சார காவலர்களுக்கும் உகந்தது அல்ல. ஆனாலும் ஆர்வமுள்ளவங்க படிக்கலாம். விரும்பின் கமெண்ட் கூடப் போட்டுக்கலாம். விருப்பமில்லைன்னா படிச்ச தடயம் இல்லாம சாமி குத்தம் வர முன்னதா எஸ்கேப் ஆகிடலாம். அலுவலகங்களிலும்,பொது இடங்களிலும் இப் பதிவினைப் படிக்க விரும்புவோர் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. "கலியாணம் கட்டினவங்க இப் பதிவினைப் படிக்க முடியாதா?" அப்படீன்னு உங்களுக்கு இப்போ லைட்டா ஒரு டவுட்டு வரலாம். அவங்களும் படிக்கலாமுங்க. 

Wednesday, January 18, 2012

பதிவர்களை முட்டாளாக்கும் பதிவர்கள் - பதிவுலக ரகசியங்கள்!

அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம், பதிவுலகில் பல புதியவர்களாலும், அனுபவம் நிரம்பிய பதிவர்களாலும் இலகுவில் புரிந்து கொள்ள முடியாத விடயங்கள் சில இருக்கு. ஸோ..அது பத்தி அலசுவது தான் இன்றைய பதிவின் நோக்கம். நாற்று வலைப் பதிவில் "ஒத்தப் பதிவின் மூலம் மொத்த ஹிட்ஸையும் அள்ளுவது எப்படி?" எனும் தொடரின் நான்காவது பாகமாக இப் பதிவு உங்களை நாடி வருகின்றது. இப் பதிவின் தொடர்ச்சியான:
மூன்றாவது பாகத்தினைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்>>> இனி மூன்றாவது பாகத்தின் தொடர்ச்சியினைப் படிப்போமா? வாருங்கள் பதிவிற்குள் நுழைவோம்.

இந்தியாவை நெருங்கும் கொடிய நோய் - ராஜபக்ஸேவாக மாறும் ஒபாமா!

உலக வரலாற்றில் கடந்த 2011ம் ஆண்டு போலியோ அற்ற வளமான நாட்டினை உருவாக்கிய பெருமையினை முதன் முதலாக இந்தியா பெற்றிருக்கிறது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் மார்க்கிரட் சான் (WHO - World Health Organisation) அவர்கள் அரசாங்க நிதியின் கீழ் இந்தியா முழுவதும் பரந்து வாழும் மிகப் பெரிய குடித்தொகை மக்களுக்கு சிறப்பான சிகிச்சையளித்தமைக்காக இந்திய அரசினையும்,இந்திய சுகாதார அமைச்சினையும் பாராட்டியிருக்கின்றார். இது மட்டுமன்றி, மைக்ரோசொப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ் அவர்களும் போலியோ அற்ற ஆண்டினை சிறப்பாக உருவாக்கியமைக்காக இந்தியாவினைப் பாராட்டி,அனைத்துலகும் இந்தியாவினை முன்மாதிரியாகக் கொண்டு போலியோ ஒழிப்புச் செயற்பாட்டினைத் தொடர வேண்டும் எனக் கேட்டிருந்தார். 

Tuesday, January 17, 2012

மயிலிறகால் வருடி இன்ப வைத்தியம் செய்யும் பதிவர்!

சங்க காலந் தொட்டு தமிழில் பாண்டித்தியம் பெற்றவர்கள் தான் இலக்கணங்களையும், தமிழ் தொடர்பான படைப்புக்களையும் எழுதலாம் எனும் நிலமை எம் தமிழ் இலக்கிய உலகில் இருந்து வந்தது. இம் மரபினைப் பின் வந்த தமிழ் ஆர்வலர்கள் தமிழ் இலக்கியம் தெரியா விட்டாலும் இலகு தமிழ் இலக்கியம் படைக்கலாம் என மாற்றினார்கள்.இன்று தமிழ்த் துறையோடு நெருங்கிய தொடர்பில்லாது தமிழ் மீதான காதல் இருந்தாலே தமிழில் பல படைப்புக்களையும் எழுதலாம் எனும் நிலைக்கு தமிழும், தமிழ் இலக்கிய உலகும் எளிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. வாரந் தோறும் நாற்று வலைப் பதிவில் "அம்பலத்தார் பக்கம்" வலைப் பூவின் சொந்தக்காரர் "திரு. பொன்னர் அம்பலத்தார்" அவர்கள் பதிவர்களின் படைப்புக்களைப் பற்றிய விமர்சனங்களை எழுதி வருகின்றார்.இப் பதிவினை அம்பலத்தாரின் விமர்சனத்தினூடாக அலங்கரிக்கப் போகும் பதிவர் யார் எனப் பார்ப்போமா?

பதிவுலகில் ஒரு வருடம் & தமிழ்மண நட்சத்திர வாரம்!

இணைய வலையேறி கணித் திரை வழி புகுந்து உங்கள் இதயங்களை நாடி வரும் நாற்று வலைப் பதிவிற்கு வருகை தந்திருக்கும் அனைத்துச் சொந்தங்களுக்கும் அன்பான வணக்கங்கள்;
சுய புலம்பல்:
நேற்றுப் போல இருக்கிறது. கடந்த வருடம் தை மாதம் 19ம் திகதி (19.01.2011) அன்று ப்ளாக் எழுத வந்து இப்போது ஒரு வருடமும் ஆகி விட்டது. என்னமோ தெரியவில்லை. சின்ன வயதிலிருந்து இலக்கியம், வானொலி, நாடகங்கள் மீது தீராத காதல். ஹை இஸ்கூல் வந்த பின்னர் தமிழுக்கும் எனக்குமான நெருக்கம் கல்லூரிப் பாடத்தின் அடிப்படையில் குறைந்தாலும், தமிழோடு நானும் தவழ வேண்டும் எனும் ஆர்வம் மட்டும் என்னை விட்டுப் போகவேயில்லை.

Monday, January 16, 2012

ஊடக சுதந்திரம் - அடக்கு முறை - சிங்கள இனவாதத்தின் கோர முகம்!

இலங்கை அரச கைக் கூலிகளின் கையாலாகத் தனம் & இழி நிலை:
காலங் காலமாக அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போர் மீதும், எழுத்துக்கள் ஊடாக தம் கருத்துக்களை முன் வைப்போர் மீதும் சரியான முறையில் எதிர்க்கத் திராணியற்றவர்களாக ஊடக அடக்கு முறை எனும் ஆயுதத்தினை சிங்களப் பேரினவாதம் பிரயோகித்து வருவது நாம் அனைவரும் அறியாத ஓர் விடயம் அல்ல. இருண்ட தீவிற்குள் முடங்கிய செய்திகளை, குட்டித் தீவின் உண்மை நிலையினை உலகம் அறிய வேண்டும் எனும் நோக்கில் தம் உயிரைப் பற்றிக் கூடக் கவலைப்படாது நேர்த்தியான செய்திகளை வழங்க வேண்டும் எனும் நோக்கில் செயற்பட்ட பல ஊடகவியலாளர்கள் இலங்கையில் ஆயுத முனையில் கொல்லப்பட்டுள்ளார்கள். கடத்தப்பட்டிருக்கிறார்கள். காணாமற் போகடிக்கச் செய்யப்பட்டுள்ளார்கள்.

Sunday, January 15, 2012

குசு(று)ம்புப் பதிவர்களின் பொங்கல் தின கிளு கிளுப்பு கவியரங்கம்!

தைத் திருநாளை முன்னிட்டு, பொங்கிப் படைத்து சுற்றத்தாரோடு உணவுகள் பரிமாறி உண்ட பின்னர்; பதிவர்கள் அனைவரும் இணைந்து, தமிழகத்தில் கலைகளுக்குப் புகழ் பெற்ற மதுரை மாநகரில் கவியரங்கம் ஒன்றினை இன்றைய தினம் பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஒழுங்கமைத்திருந்தார்கள். கவியரங்கத்தினை திரு.பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களும், திரு.யோகா(Yoga.S.FR) அவர்களும், திருமதி ஏஞ்சலின் அவர்களும் தலமையேற்று நடாத்தியிருந்தார்கள். பல ஆயிரம் பதிவர்கள் போட்டி போட்டு இக் கவியரங்கில் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்த முண்டியடித்த போதும், குறிப்பிட்ட சில பதிவர்களை மாத்திரம் தான் இக் கவியரங்கில் இணைத்துக் கொள்ள முடிந்தது. நேரம் போதாமையே இதற்கான காரணம் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்திருந்தார்கள். வாருங்கள்! கவியரங்கினுள் நுழைவோம்.

நண்பன் - சிந்தனையை தூண்டும் விஜயின் சினிமா திருப்பு முனை

2012ம் ஆண்டின் பொங்கல் வெளியீட்டு திரைவிமர்சனம்:
அனைத்து உள்ளங்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
இன்றைய இயந்திர உலகில் மனித மூளையின் செயற்பாடுகளை மனிதனால் உருவாக்கப்பட்ட கம்பியூட்டர்கள் வெல்லத் துடிக்கும் வேளையில்; வியாபார நோக்கம்,பொழுதுபோக்கு அம்சம் மற்றும் ஜனரஞ்சக அந்தஸ்து ஆகியவற்றினை முன்னிறுத்தி,சமூகத்திற்கு ஒரு ஆக்கபூர்வமான செய்தியினைக் கொடுக்கின்ற திரைப்படங்களானது வெளி வருவது அரிதாகிக் கொண்டிருக்கிறது. இந்தக் குறைகளையெல்லாம் நிவர்த்தி செய்யும் நோக்கில் எம் வாசல் எங்கும் இன்பம் தங்க வேண்டும் என நாம் பொங்கத் தயாராகும் இந் நேரத்தில் திரைக்கு வந்திருக்கிறது R.ஷங்கரின் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்திருக்கும் நண்பன் படம்.

Saturday, January 14, 2012

மப்படித்த சுப்பரின் மன்மத க(லீ)லை விளையாட்டு - வினையாச்சு!

சுப்பருக்கு அடுத்த ஆத்து சுந்தரி மேல் ஆசை
சுதியேத்த கள்ளு தேடி அரும்பிடும் அவர் மீசை
மப்படிக்க நல்ல நேரம் கிட்டாதா என காத்திருந்தார்
மாலையான வேளையில் சைக்கிளினிலே கள் அடிக்க புறப்பட்டார்
தப்பு தண்டா பண்ணிக் கொ(ல்)ள்ள பெண்ணொருத்தி வேண்டி
தவித்த படி அலைந்தார் - சுந்தரியின் மேல் விழுந்தார்
அப்பனுக்கு பேர் கெடுக்கா பிள்ளையென இருந்தார் - ஊரில்
அயவலர்கள் நடத்தை கண்டு திட்டிடவும் கண்டுக்காது நடந்தார்!

Friday, January 13, 2012

சிங்கிள் பதிவினூடாக சிக்ஸர் அடிப்பது சாத்தியமா?

பொங்கல் பொங்கப் போறவங்க,பொங்கல் பொங்காது தைத் திருநாளை அனுபவிக்கப் போறவங்க; மற்றும் அனைத்து உள்ளங்களுக்கும் இனிய தைத் திருநாள் வாழ்த்துக்களும், வணக்கங்களும் உரித்தாகட்டும்! 
உங்கள் நாற்று வலைப் பதிவில் "ஒத்தப் பதிவில் மொத்த ஹிட்ஸையும் அள்ளுவது எப்படி? எனும் தொடர் வாயிலாக பதிவு எழுதும் போது பதிவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டு வருகிறேன். இப் பதிவின் தொடர்ச்சியாக மூன்றாவது பாகம் இன்றைய பொங்கல் திரு நாளில் உங்களை நாடி வருகின்றது. 

ஐபோட்டின் உதவியுடன் ஆங்கில அறிவை பெருக்குவது எப்படி?

இந்தப் பதிவானது ஐபோட், ஐபாட், ஐடியூன்ஸ் உள்ளவங்களுக்கு மாத்திரமன்றி; கம்பியூட்டர் உள்ளவங்களுக்கும் ரொம்ப யூஸ்புல் ஆகுமுங்க.
எல்லோருக்கும் வணக்கமுங்க & இனிய தைத் திரு நாள் வாழ்த்துக்கள் அனைவருக்கும் உரித்தாகட்டுமுங்க. 
ஊரில ஏலவே 90 நாளில் இங்கிலீசு பேசுவது எப்படீன்னு ஒரு புக்கு சக்கை போடு போட்டு விற்பனையாகிட்டு இருக்கு. அதை வாங்கிப் படிச்சே ஆங்கில அறிவு வளரலை. இதுல நீ ஐபோட்டை வைத்து ஆங்கில அறிவினை வளர்க்கப் போறியா? ராஸ்கல் அப்படீன்னு எல்லோரும் திட்டுறீங்க இல்லே! ஐபோட் உள்ளவங்களுக்கு மாத்திரம் தான் இந்தப் பதிவா? அப்போ நமக்கெல்லாம் இல்லையா என்று சிலர் எஸ் ஆக ரெடி ஆகிட்டீங்க இல்லே. கவலையை விடுங்க. கம்பியூட்டர் உள்ள எல்லோருக்கும் இந்தப் பதிவு ரொம்ப யூஸ் புல்லா இருக்குமுங்க. ஆனால் IPOD, IPAD, I PHONE உள்ளவங்களுக்கும் இந்தப் பதிவு ரொம்ப ரொம்ப யூஸ்புல்லா இருக்குமுங்க. வாருங்க. பதிவிற்குள் நுழைவோம்.

Thursday, January 12, 2012

தமிழக மக்களிடம் வெட்கித் தலை குனியும் நிலையில் ஈழ மக்கள்!

ஈழ மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையிலான உறவானது ஆழமானது. தொன்று தொட்டு வரலாறுகளின் அடிப்படையில் நோக்கும் போது தொப்புள் கொடி என்ற இறுக்கமான பந்தத்தினால் பிணைக்கப்பட்டது. ஈழ மக்களின் ஒவ்வோர் வலிகளையும், ஈழ மக்கள் சுமந்த அவலங்களையும் பார்த்தும், கேட்டும், எமக்காக கண்ணீர் வடித்தும் இரக்கம் கொண்டவர்களாக, ஈழ மக்களுக்காகப் பல அர்ப்பணிப்புக்களையும், தியாகங்களையும் புரிந்தவர்களாக எம் தமிழகச் சொந்தங்கள் விளங்குகின்றார்கள். ஈழத்தின் துயர் கண்டு தம் இயல்பு நிலையினைக் கூடத் தொலைத்து கண்ணீர் விட்டு எமக்காக கலங்கிய பெருமை எம் தமிழகச் சொந்தங்களிடம் உண்டு.

Wednesday, January 11, 2012

பெண் குறி - ஆபாசம் - அந்தரங்கம் - பெண் விடுதலையின் புது வடிவம்!

சர்ச்சையினை கிளப்பும் விவாத மேடை: 
அன்பிற்குரிய சொந்தங்களே, எல்லோரும் நலமா? இலக்கியம் எனப்படுவது காலத்தின் கண்ணாடி என்று கூறுவார்கள். நாம் வாழும் காலத்தினைப் பிரதிபலிப்பது தான் இலக்கியமாகும் எனும் வகையறாவினைத் தழுவியும், வரலாறுகளைத் தழுவியும் பல படைப்பிலக்கியங்கள் இன்று உருவாகிக் கொண்டிருக்கின்றன.பெண்ணியம், தலித்தியம், நட்டார் வழக்கு இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள், பின் நவீனத்துவப் படைப்புக்கள் எனப் பல வகையான இலக்கிய வடிவங்கள் இன்றளவில் எம்மிடையே புழக்கத்தில் உள்ளன. ஆனால் பெண் விடுதலை பற்றிய படைப்புக்கள் மாத்திரம் ஓர் வித்தியாசமான திசையினை நோக்கிப் பயணிக்கின்றன. 

பிரபாகரனின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்த வன்னி மக்கள்

அன்பிற்கினிய தமிழ் வாசக உள்ளங்களே,
மக்கள் படை மூலம் ஆமிக்கு மரண பயத்தைக் கொடுத்த புலிகள் தொடரின் நிறைவுப் பாகத்தினூடாக உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இந்த வரலாற்று நினைவு மீட்டலின் முதற் பாகத்தினைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். இனி முதலாம் பாகத்தின் தொடர்ச்சியாக....இவ் வேளையில் புலிகள் ஈழப் போராட்ட வரலாற்றில் யாழ் குடா நாட்டினை மையமாக வைத்து ஓர் படையினை உருவாக்க நினைத்தார்கள்.யாழ்பாணக் குடாநாட்டிலிருந்து பயிற்சிக்காக மக்களைத் திரட்டி பளையில் அமைந்திருந்த எரிமலை பயிற்சிப் பாசறையில் போர்ப் பயிற்சினை வழங்கினார்கள் புலிகள். பயிற்சியின் நிறைவில் விடுதலைப் புலிகளின் தேசிய அணியாக இந்த அணி பெயர் மாற்றம் பெற்றதோடு, குடா நாட்டிற்கு மீளவும் திருப்பி அனுப்பப்பட்டு, அவர்களுக்குரிய மாதாந்த சம்பளம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் புலிகள் அமைப்பினரால் அப்போது மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

மக்கள் படை மூலம் ஆமிக்கு மரண பீதியை கொடுத்த புலிகள்!

காற் சட்டைக் காலத்தில் 1991ம் ஆண்டில் இது புலிகள் காலம் எனும் இசைப்பேழையில் காசி ஆனந்தனின் பாடல் வரிகளில் தேனிசை செல்லப்பா அவர்கள் இசையமைத்துப் பாடிய பாடலை முணு முணுக்கும் போது மனதில் பல கேள்விகள், பல ஐயங்கள் தோன்றும். ஆனாலும் அந் நேரத்தில் அந்த கேள்விகளுக்கான விடைகளை யாரிடம் கேட்டுப் பெறுவது எனும் சிந்தனையுடன் என் நாட்கள் நகர்ந்தன. "மக்கள் எல்லாம் மக்கள் எல்லாம் பிரபாகரன் பக்கம். மக்கள் படை என்றைக்கும் அவன் பக்கம் தான் நிற்கும்..." என்றவாறு அந்தப் பாடல் அமைந்திருக்கும். இப் பாடலில் குறிப்பிடப்படும் மக்கள் படை ஈழத்தில் அப்போது இல்லையே எனும் நிலையில் என் சிந்தனைகள் பின்வருமாறு விரிந்திருந்தது. 

Tuesday, January 10, 2012

ஒத்தப் பதிவின் மூலம் மொத்த ஹிட்ஸையும் அள்ளுவது இப்படியா?

நாற்று வலைப் பதிவினைப் படிக்க வந்திருக்கும் அனைவருக்கும் அன்பான வணக்கம்;
நாற்று வலைப் பதிவில் பதிவெழுதுவதில் உள்ள சூட்சுமங்கள், எம் பதிவுகளை எப்படிப் பிரபலமாக்குவது தொடர்பான விடயங்களை "ஒத்தப் பதிவின் மூலம் மொத்த ஹிட்ஸையும் அள்ளுவது எப்படி?" எனும் தொடரினூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இத் தொடரின் முதற் பாகத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்:
பாகம் 02:
உங்கள் ப்ளாக்கில் ஒரே பக்கத்தில் அல்லது முகப்பு பக்கத்தில் பத்துப் பதிவுகளை காட்சிப்படுத்தாது Read More ஆப்சன் வைத்து அழகாக மூன்று பதிவுகளை மாத்திரம் முகப்பில் பார்க்க கூடியவாறு டிஸ்பிளே பண்ணினால் ப்ளாக் லோடிங் ஆகும் டைம் குறையுமுங்க. அப்புறம் பாருங்க; உங்க ப்ளாக் ரொம்ப ஈஸியா ஓப்பின் ஆகும்.

Monday, January 9, 2012

Ticking Clock - கொடூரமாக துன்புறுத்தி கொல்லும் குரூர சிறுவன்!

ஹாலிவூட் சயன்டிபிக்கல் & திரிலர் & க்ரைம் பட விமர்சனம்:
நம்ம முன்னோர்கள் காலத்தில நெனைச்ச மாத்திரத்தில பறக்கிற விமானங்களும், விரும்பின நேரத்தில கூடு விட்டு கூடு பாயுற மந்திரங்களும் இருந்ததாக புராணக் கதைகளையும், உப கதைகளையும் அடிப்படையாக வைச்சு இன்னைக்கும் பேசிக்கிட்டிருக்காங்க. இவை எல்லாவற்றையும் விட, டைம் மெசின் என்கின்ற ஒன்று கிடைச்சா எவ்ளோ நல்லா இருக்கும் என்று விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து காமிக்ஸ் கதைகளையும், பிக்ஸன் கதைகளையும் எழுத ஆரம்பிச்சாங்க. இவ் வழியில் காலச் சக்கரத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஒரு சயன்டிபிக்கல், ஆக்சன், த்ரிலர், படம் தான் Ticking Clock. எல்லோரும் ஸ்னாக்ஸ், சிப்ஸ் என்று உங்க கூடவே நொறுக்குத் தீனிகளை எடுத்திட்டு வந்திருப்பீங்க என்பதால டைரக்டா விமர்சனத்திற்குள் நுழைவோமா? 

ஒத்தப் பதிவின் மூலம் மொத்த ஹிட்ஸையும் அள்ளுவது எப்படி?

வண்ணத் தமிழ் மொழியினூடாக எம் எண்ணங்களை வலையேற்றி, இணைய வலையினூடே உங்கள் இதயங்களை இணைத்திருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் வணக்கமுங்க;
இணையம் தந்த இணையற்ற வரப்பிரசாதத்தின் வெளிப்பாடாய் இன்று எம் கைகளில் கூகிள் அம்மம்மாவின் வலைப்பூவானது எம் எண்ணங்களை வலையேற்றியவுடன் உலகின் எட்டுத் திசையில் உள்ளோரும் படிக்கும் வண்ணம் எடுத்துச் செல்கிறது. நம்மாளுங்களில் அதிகமானோருக்கு ஓர் கவலை இருக்கும். நாமளும் பதிவெழுதுகிறோமே! அட இராப் பகலா கண்ணு முழிச்சு பதிவு எழுதினாலும், யாருமே படிக்கிறாங்க இல்லையே என்பது தான் அந்தக் கவலை. அந்தக் கவலை உள்ளவங்க எல்லோரும் இங்கிட்டு வாங்க. காதைக் கொஞ்சம் குடுங்க. கவனமா நோட் பண்ணிக்குங்க.

ப்ராப்ள பதிவர் பிலாசபி பிரபாகரனின் மறு பக்கம்!

நாற்று வலைப் பதிவினைத் தரிசிக்க வந்திருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் வணக்கம்,
இணையத்தில் எழுதி வரும் பல்லாயிரக் கணக்கான தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி நாம் இலகுவில் அறிய முடியாதவர்களாக இருப்போம். தனிபட்ட மனித விருப்பு வெறுப்புக்களும், பாதுகாப்பு காரணங்களும், தனி நபர் உரிமைகளும் தான் ஒருவரைப் பற்றிய விபரங்களை மறைத்து, அவரது படைப்புக்களினூடாக அந்த எழுத்தாளர் எப்படி இருப்பார் எனும் எண்ணத்திற்கான விடையினை வழங்கி நிற்கின்றது. இந்த வகையில் வலைப் பதிவர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட "ப்ராப்ள பதிவர் பிலாசபி பிரபாகரனின் மறு பக்கம்" என்பது எப்படியிருக்கும் என நாம் அனைவரும் அறிவதற்கு ஆவல் கொண்டிருப்போம் அல்லவா? எமக்கு பிலாசபி பிரபாகரன் என்கின்ற தனி மனிதர் பற்றிய விபரங்கள் இப்போது வேண்டாம். 

Sunday, January 8, 2012

Rabbit Hole - விழிகளை ஈரமாக்கும் விருதுகள் பல பெற்ற படம்!

ஹாலிவூட் திரை விமர்சனம்!
மீட்டிப் பார்க்க சுகம் தரும் நினைவுகள் ஒரு புறமும், நினைத்துப் பார்க்க முடியாதவாறு அனலாய் மனதைக் கொதிக்க வைத்து நரக வேதனைகளைக் கொடுக்கும் ஞாபகங்கள் மறு புறமும் என மனித வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்பமும், துன்பமும் இடைவிடாது எம்மைத் தொடர்ந்து கொண்டிருப்பது இயல்பு தான் என்றாலும், மனத் திரையிலிருந்து சில நினைவுகளை நாம் அழிக்க நினைத்தாலும் பாசம் எனும் பிணைப்பானது இலகுவில் அழிக்க முடியாதவாறு அந்த நினைவுகளைப் பின் தொடர்ந்து வர வைத்து வேதனைத் தீயினுள் தினம் தினம் மனித வாழிவினைத் தள்ளிக் கொண்டிருக்கும். 

வாங்கி கட்டுகிறது நக்கீரன்! ஓங்கி அடிக்கிறது அதிமுக!

ஊடகங்களின் தலையாய கடமை என்பது நம்பகத் தன்மை வாய்ந்த செய்திகளை வழங்குவது மாத்திரமன்றி, மக்களைச் சென்றடையும் செய்திகளானது மக்களுக்கு அந்த ஊடகங்கள் மீதான நம்பிக்கையினை வலுப்படுத்தும் நோக்கில் இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். பரபரப்பு, விறு விறுப்பு, புலனாய்வு எனும் பெயரில் அதிரடிச் செய்திகளையும், கற்பனைச் செய்திகளையும் மக்களை நம்ப வைக்கும் நோக்குடன் வெளியிட்டு வருகின்ற பத்திரிகை தான் நக்கீரன் பத்திரிகை. ஈழ மக்களின் உணர்ச்சிகளோடு விளையாடிய பெருமையினையும் தமிழக ஊடகங்கள் வரிசையில் இந்த நக்கீரன் பத்திரிகையே அதிகளவில் பெற்றிருக்கிறது. 

Saturday, January 7, 2012

தமிழக மக்கள் தலையில் மிளகாய் அரைக்கும் ஊடகங்கள்!

ஊடகங்களின் தலையாய கடமை என்பது நடு நிலமையான செய்திகளைப் பகிர்வதோடு சமூக மேம்பாட்டிற்காப் பாடுபடுவதாகும். இன்றளவில் தமிழ் ஊடகங்களில் அதிகளவானவை நடு நிலமை என்ற பதத்தின் கீழ் இயங்குவதில்லை எனலாம். ஓசியில கூகிள்காரன் ப்ரீயா வுடுற வலைப் பூவில் கூட நாமெல்லாம் பிரபலமாகனும், எம் பதிவுகளைச் சந்தைப்படுத்தி ஹிட் அடித்து அண்ணா நகரில அப்பார்ட்மெண்ட் வாங்கனும் என்று அலையும் போது வியாபார நோக்கத்தில் செயற்படுகிற, ஊடகங்கள் என்ன சும்மாவா இருப்பாங்க?தமிழ் ஊடகங்களாயினும் சரி,பிற மொழி ஊடகங்களாயினும் சரி விளம்பரங்களை அடிப்படையாக வைத்துத் தான் தமது ஊடகப் பணியினைச் செய்து வருகின்றன. இந் நிலமையில் நாம் ஊடகங்களிடம் நடு நிலமை என்பதனை எதிர்பார்ப்பது தவறு அல்லவா?

Friday, January 6, 2012

ஏகாம்பரத்தாரின் பொண்டாட்டிக்கு என்னால ஏழில சனி!

ஏகாம்பரத்தாரின் ஏக்கப் புலம்பல்!

கலியாண வயசில் கனவுகளின் தொல்லை கூட
கன்னியரைத் தேடி ஏகாம்பரத்தாருக்கு மனதில் ஏக்கம்
பலியாடாய் ஒருத்தி எ(ன்)னை தேடி வந்து - இன்ப
பாவம் தனைப் போக்கிடாளா என்று தினம் வாட்டம்
சிலையான மங்கையவள் என் சிந்தையினை தூண்டி
சில்மிஷங்கள் செய்யாளா என்பதனால் இல்லை தூக்கம்
வலை போட்டு பெண்களினை நாளும் தேடிப் பார்த்தார்
வடிவான குட்டி மாட்டிடவே வாஞ்சையுடன் தொடர்ந்தார்!

கொடுங்கோலர் மகிந்தரின் அழிவு காலம் நெருங்கி விட்டதா?

இலங்கையின் நவீன துட்டகைமுனு, ஆறாம் பராக்கிரமபாகு எனச் சிங்கள மக்களால் அழைக்கப்படுபவரும், மனிதாபிமானம் நிறைந்த உலக நாடுகளாலும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களாலும் போர்க் குற்றவாளி, கொடுங்கோலர் எனச் சிறப்பிக்கப்படுவரும் தான் இன்றைய இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்கள்.இந்தியாவிற்கு அடுத்தபடியாக குடும்ப ஆட்சியில் குல விளக்காக இவரது வம்சங்களும், சொந்தங்களும் தான் இன்றைய இலங்கை அரசியலை ஆட்டிப் படைக்கின்றது எனலாம். இலங்கையில் பேச்சுச் சுதந்திரம் முதல், நீங்கள் வீதியில் ஊச்சா இருக்கின்ற நிலமை வரை காரணம் இன்றி ஏதாவது செய்கின்ற போது உங்களையே காரணம் இன்றி காணாமற் போகச் செய்யும் வல்லமை கொண்டவராக விளங்குபவர் தான் இந்த ராஜபக்ஸ.

Thursday, January 5, 2012

பெண்குறி மையப் புனைவைச் செதுக்கும் சித்திரங்கள்!

திமிர் கொண்டபடி 
துருத்திக் கொண்டிருக்கும் தனங்களும்
நத்தை போல நீண்டிருக்கும்
பெண் குறி பற்றிய வர்ணிப்புக்களும்
இப்போது ஆணாதிக்கத்திற்கு எதிரான
வீரியம் மிக்க எழுத்துக்களாக
தமிழ் உலகில் பரிணமித்துள்ளது!

Wednesday, January 4, 2012

Dear Frankie - மனதை உருக்கும் உலக சினிமா

போராட்டம் நிறைந்த எம் அன்றாட வாழ்க்கையில் சோகங்களும், சந்தோசங்களும் மாறி மாறிச் சுழல் சக்கரம் போன்று வந்து கொண்டேயிருக்கும். இன்று சிரிக்கும் மன நிலையில் இருக்கையில் நாளை நாம் அழுகின்ற மன நிலையினைப் பெற்றுக் கொள்வோம் என்பது வாழ்க்கையின் யதார்த்தமாகி விட்டது. இன்பங்களும், துன்பங்களும் மாறி மாறி எம்மைத் துரத்திக் கொண்டிருக்கையில் எம் வாழ்க்கையினைக் கட்டியெழுப்புவதற்காக சின்னச் சின்னச் சந்தோசங்களைச் சில்லறைகளைப் போன்று ஒத்தியெடுத்து நாம் இப் பூமியில் நடை போட்டுக் கொண்டிருக்கிறோம். 

இந்தியா VS ஆஸ்திரேலியா தொடரை ஆஸியா கைப்பற்றப் போகிறது?

ஆஸ்திரேலியாவிற்குச் சுற்றுப் பயணம் மேற் கொண்டிருக்கும் இந்திய அணி Vodafone நிறுவனத்தின் அணுசரணையில் இடம் பெறும் நான்கு டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளிலும் இலங்கை, ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் பங்கு பற்றும் முக்கோண ஒரு நாள் தொடரிலும், ஆஸ்திரேலியா அணியுடன் Twenty Twenty ஆட்டத்திலும் பங்கெடுக்கவுள்ளது. இதன் டெஸ்ட் கிரிக்கட் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதி வருகின்றன. இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கட் தொடரின் முதலாவது போட்டி கடந்த 26.12.2011 அன்று ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் கிரிக்கட் மைதானத்தில் இடம் பெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணியினர் 122 ஓட்டங்களால் வெற்றியீட்டியிருந்தார்கள். 

Red - Bruce Wills இன் அதிரடி ஆக்சன் & காமெடி பட விமர்சனம்!

வணிக நோக்கில் தயாரிக்கப்படும் திரைப் படங்களில் ஆத்மார்த்த ரீதியில் ரசிகர்களைத் திருப்திப்படுத்த வல்ல நவரசச் சுவையினை நாம் எல்லாப் படங்களிலும் எதிர்பார்க்க முடியாது. எங்காவது ஓர் படம், வருஷத்தில் ஒரு தடவையாச்சும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்களைப் போக்கும் வண்ணம் அனைத்து விதமான சுவைகளையும் உள்ளடக்கி அத்தி பூத்தாற் போல வந்து கொள்ளும்.ஹாலிவூட் திரைப் படங்களின் வித்தியாசமான எண்ணக் கருக்கள், வித்தியாசமான கோணத்திலான கதை நகர்வுகளின் மத்தியில் 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகிருக்கும் Red திரைப்படமும் தன்னளவில் அனைத்து விதமான ரசனைகளையும் உள்ளடக்கி ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் வண்ணம் திரைக்கு வந்திருக்கிறது.

ஒரு குட்டிப் பதிவரின் எழுத்துலக சுட்டித் தனம் பற்றிய அலசல்!

அன்பிற்குரிய சொந்தங்களே, இணையத்தில் எழுதி வரும் பல்லாயிரக் கணக்கான படைப்பாளிகளுக்கு காலச் சக்கரச் சுழற்சியின் பயனாக விரிவான விமர்சனங்கள் கிடைப்பதில்லை.இணையத்தில் கருத்துரைப் பெட்டியினூடாக பின்னூட்டங்களைப் பகிர்ந்து கொள்வோரில் அதிகளவானோர் எல்லோரின் பதிவுகளையும் படிக்க வேண்டும் எனும் காரணத்தினாலும், ஓடி ஓடிப் பின்னூட்டங்களை எழுதி விட்டுச் செல்ல வேண்டும் என நினைப்பதாலும் பல படைப்பாளிகளின் படைப்புக்களைப் பற்றிய எண்ணக் கருத்துக்களை யாராலுமே வெளிப்படுத்த முடிவதில்லை. அந்தக் குறைகளையெல்லாம் எண்ணிய "அம்பலத்தார் பக்கங்கள் வலைப் பதிவின் சொந்தக்காரர் திரு.பொன்னர் அம்பலத்தார்" அவர்கள் வித்தியாசமான முயற்சியாக வாரம் ஒரு படைப்பாளியின் படைப்புக்களை அலசுகின்ற பணியினைக் கையிலெடுத்திருக்கிறார்.அவரது இம் முயற்சியினை வரவேற்று உங்கள் நாற்று வலையில் அம்பலத்தார் ஐயாவின் பதிவினை இங்கே தவழ விடுகின்றேன்.

Monday, January 2, 2012

ஜெயா மாளிகையில் சசிகலா- நடராஜன் நடாத்திய ஈழ ஆதரவு நாடகம்!

போயஸ் கார்டனுள் புதைந்திருக்கும் ரகசியங்களும்,துலங்கும் மர்மங்களும்!
தமிழக மக்களின் தார்மீக ஆதரவுக் குரலைத் தமக்குச் சாதகமாக்கி அனுதாபம் தேட முற்படும் அரசியல்வாதிகள் ஒரு புறமும், ஈழ மக்களுக்காக இணையற்ற அரசியல் பணிகளைச் செய்யும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் மறு புறமும் என; காலச் சக்கர வேகத்திற்கு இணையாக தமிழகத்து ஈழ ஆதரவும் சுழன்று கொண்டிருக்கிறது.  தமிழக மக்கள் மத்தியில் அண்மையில் பரபரப்பினை ஏற்படுத்திய விடயம் தான் சரித்திரத்தில் சந்தோசத் தோழிகளாக இருந்த சசிகலா அம்மையாரும், ஜெயா அம்மையாரும் பிரிந்தமை ஆகும். 

Sunday, January 1, 2012

இதயத்தில் ஊறிய ஈழ நெருப்பு இலகுவில் அணைந்திடுமா?

நேற்றோடு ஓர் ஆண்டு
எம் நெஞ்சு நிறை வடுக்களுக்கு
மருந்திட்டு ஆற்றாது
காற்றோடு கலந்தது போல
கண் இமைக்கும் நொடிப் பொழுதில்
மறைந்து போயிட்டு!
வந்து போகும் ஒவ்வோர் ஆண்டிலும்
வண்ண வண்ண கனா கொண்டு
தந்திடுவார் தமிழீழம் என
தமிழர் விழி பார்த்திருக்கும்- விடுதலை தீயில்
வெந்து போன உள்ளங்களின்
விழிச் சுடரில் எம் தேசம்
ஒளி கொள்ளும் என
எம் நெஞ்சமெல்லாம் தினந் தோறும்
ஏங்கி நிற்கும்!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க