Thursday, August 2, 2012

ஊடகங்களின் வாயை அடைக்கும் ஸ்ரீலங்காவின் மகிந்த வம்சம்!

வணக்கம் உறவுகளே, எல்லோரும் சௌக்கியமா? சாப்பிட்டாச்சா?
இன்றைய நவீன தொழில்நுட்ப விருத்தியின் காரணமாக சுயாதீன ஊடகங்களின் வளர்ச்சி என்பது வளர்ந்த நாடுகளில் தாவிப் பிடிக்க முடியாத எல்லையினை எட்டியுள்ளது எனலாம். ஆனால் ஓர் இனத்தின் இரு கண்களுள் ஒன்றாக விளங்கும் மொழி வளர்ச்சியினைச் சிதைக்கும் நோக்கில் ஊடகங்கள் மீது சுருக்கு கயிறு வீசுகின்ற அசிங்கமான செயல் இலங்கையில் மாத்திரம் தான் இன்றும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. 1983ம் ஆண்டு தென்னாசியாவில் மிகப் பெரியதும், பழமை வாய்ந்ததுமான யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்துடன் பேரினவாதிகளின் தமிழர்களின் தாய் மொழியினைச் சிதைக்கின்ற செயற்பாடு ஆரம்பமாகின்றது.
அதன் பின்னர் தமிழர்கள் சார்ந்த ஊடகங்கள் மீதும், தமிழர்களுக்கு சார்பாக செய்தி வெளியிடும் ஊடகங்கள் மீதும், தமிழர்களின் அபிலாஷைகளை நடு நிலையோடு சொல்லுகின்ற ஊடகவியலாளர்கள் மீதும், இலங்கை அரசின் ஆளும் வர்க்கத்தினர் பல்வேறுபட்ட கொலை மற்றும் அச்சுறுத்தல் முயற்சிகளையும் நிகழ்த்தி வருகின்றார்கள். ஈழப் போர் முடிவுற்ற பின்னர் கூட ஊடகங்கள் மூலமாக சிங்கள அரசிற்கு இருக்கின்ற அச்சம் கனவில் வரும் புலிகளைப் போல இன்றும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஊடகங்களாலும், ஓர் எழுது கருவியாலும் எதுவும் முடியுமென்பதற்கு தகுந்த உதாரணம் சிங்கள அரசு ஊடகங்களைக் கண்டு அஞ்சுகின்ற செயற்பாடாகும்.

முள்ளிவாய்க்கால் பேரலவத்த்தின் பின்னர் தமிழர் தாயகப் பகுதிகளில் அத்தி பூத்தாற் போல போராட்டம் மற்றும் தமிழ் மக்கள் தொடர்பான சேதிகளைத் தாங்கி வரும் ஆனந்த விகடன், குமுதம், நக்கீரன் உள்ளிட்ட பல தமிழகச் சஞ்சிகைகள் தடை செய்யப்பட்டன. கடுமையான அச்சுறுத்தல், துப்பாக்கி முனை மிரட்டல்கள் காரணமாக தமிழ் மக்களின் உணர்வுகள் தொடர்பில் செய்தி வெளியிட இலங்கையில் உள்ள ஒரு சில ஊடகங்களைத் தவிர ஏனைய ஊடகங்கள் இன்றும் அஞ்சிக் கொண்டிருக்கின்றன. புலம் பெயர் நாட்டிலிருந்து இலங்கை அரசின் ஒவ்வோர் தமிழர் விரோதச் செயற்பாடுகளையும் படம் பிடித்துக் காட்டிய ஊடகங்கள் வரிசைக்கிரமமாக இலங்கையில் மாத்திரம் படிக்க முடியாதவாறு தடை செய்யப்பட்டன.

தமிழ்நெட் இணையத் தளத்தினை இலங்கையில் பார்க்க முடியாதவாறு ஆரம்பத்தில் தடை செய்த பேரினவாத அரசு, இன்றளவில் தமிழ் மக்களைப் பிரதிபலிக்கின்ற, தமிழ் மக்கள் சார்பான செய்திகளை வெளியிடுகின்ற ஏனைய ஊடகங்களையும் இலங்கையில் பார்க்க முடியாதவாறு தடை செய்துள்ளது. உலகில் உள்ள சர்வாதிகார நாடுகள் வரிசையினுள் மெது மெதுவாக நுழைந்து கொண்டிருக்கும் இலங்கை அரசிற்கு இன்னமும் புலிகள் பற்றிய அச்சம் முற்று முழுதாக நீங்கவில்லை எனலாம். தமிழ் மக்களின் உளவியலை இணையத் தளங்கள் மாற்றும், இணையத் தளச் செய்திகளைப் படிப்பதன் மூலம் தமிழ் மக்கள் மனதில் தாயக உணர்வும், தேசியப் பற்றும் வளரும் என்று போலியாக புரிந்து வைத்திருக்கிறது இலங்கை அரசு!

மக்கள் மனங்களில் வேர் கொண்ட பற்றினை மந்தைகளால் அழித்திட முடியுமா?
********************************************************************************************************

அன்பு உறவுகளே,
உங்கள் புரட்சி வானொலிக்குரிய பனர் விளம்பரத்திற்கான HTML கோடிங்கை கீழே இணைத்திருக்கிறேன். இதனை உங்கள் வலைப் பூக்களில் இணைத்து ஏனைய தமிழ்ச் சொந்தங்களிடமும் இந்த வானொலியை அறிமுகப்படுத்துவற்கு நீங்களும் உதவலாம் அல்லவா? 

<a href="http://www.puradsifm.com/" target="_blank"><img src="http://i1219.photobucket.com/albums/dd437/nirupans/puradshi-1.gif" border="0" alt="Photobucket"></a>
அன்பு நண்பர்களே, மேலே உள்ள கோடிங்கை, உங்கள் ப்ளாக்கின் சைட் பாரில் Widget பகுதி ஊடாக Add Html பெட்டியில் அட் செய்வதனூடாக எமது வானொலியை பல உறவுகளிடம் கொண்டு சேர்ப்பதற்கு நீங்களும் உதவலாம் அல்லவா?

இன்றைய தினம் இலங்கை - இந்திய நேரம் காலை 10.00 மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணி வரைக்கும் உங்கள் புரட்சி இணைய வானொலியில் நேரடி நிகழ்ச்சிகள் இடம் பெற்றவிருக்கிறது.. நீங்களும், மின்னஞ்சல், தொலைபேசி, பேஸ்புக், Skype, Google Talk ஊடாக இணைந்து கொண்டு உங்களுக்குப் பிடித்தமனாவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லி மகிழலாம். 

காலை 10.00 மணிக்கு ஹலோ இணையம் நிகழ்ச்சி இடம் பெற காத்திருக்கிறது. அதனை தொடர்ந்து நண்பகல் 12.00 மணி முதல் 03.00 மணி வரை வாங்க பேசலாம் நிகழ்ச்சி இடம் பெறவிருக்கிறது. இரவு 08.00 மணிக்கு காதலா காதலா நிகழ்ச்சி இடம் பெறவிருக்கிறது. நீங்களும் இணைந்து உங்கள் விருப்ப பாடல்களை உங்கள் மனதிற்கு பிடித்தமானவருகு கேட்டு மகிழலாம். உங்கள் விருப்ப பாடல்களை அனுப்ப puradsifm@gmail.com


"காதலா காதலா” நிகழ்ச்சியோடு இணைந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்:
புரட்சி எப்.எம் ஐ கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள்:
புரட்சி எப்.எம் உடன் இணைந்திருங்கள்! 

1 Comments:

கவி அழகன் said...
Best Blogger Tips

Unmai than puradsikku vaalthukkal

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails