Friday, May 18, 2012

மண்டை ஓடுகளில் ரத்தம் குடித்த சிங்களப் பேய்களும் பேரினவாதிகளும்!

கைகளில் சுடுகலன்
கனரக ஆயுதங்களின்
திணிப்பில் கற்பழிப்புக்கள்
மெய்யினில் தமிழர் மீதான
வெறியினை வெளிப்படுத்தும்
அங்க அடையாளங்கள்!
வர்ணிக்க முடியாத
கற்பனைக்குள் இலகுவில்
உட்படுத்திட முடியாத
இராட்சத நரமாமிசப் பசி கொண்ட
பட்சிகள் நாலா பக்கமிருந்தும்
நகரை சூழ்ந்து கொண்டன! 

கண்களின் இனவாத வெறி
கைகளில் இருக்கும் சுடுகலன்களின்
ரவைக் குண்டுகள் வடிவில்
தெறித்து விழுந்தன;
சல்லாப உணர்வு கொண்ட
சிப்பாய்களின் வடிவில்
சீழ்ப் படிந்த பிணங்களைத் தேடியது
சிங்கள ஆதிக்க வாத மொழி!

சுடப்பட்டு இறந்த பிணங்களின் 
மண்டை ஓடுகள் மட்டும்
வெட்டி எடுக்கப்பட்டு
அருகே நின்றவர்களின்
ஈனப் பசி போக்க
இரத்தம் ஊற்றப்படுகின்றது!

இரக்கமற்ற இனவாதிகளின்
இன்ப வெறி தீர்க்க 
இரத்தப் படலம் அரங்கேற்றப்பட்டது!
புசித்து முடித்த பின்
புணர்ச்சி வெறி தீர்க்க
தமிழ் மங்கைகள் உடலங்கள்
மிரட்டல் தொனியில்
பணிய வைக்கப்பட்டன,

எதிர்க் குரல் ஏதுமின்றி
நகரம் அன்றோடு ஸ்தம்பித்தது
நாதியவற்றவர்களாகிய நாம்
நாளை இருப்போமா எனும் அச்சத்துடன்
நடக்க தொடங்கினோம் - பின்னிருந்து
துப்பாக்கி சுடு கலனின் முனையில்
நடக்கப் பழக்கப்பட்டோம்! 

*கவிதைக்குரிய பட உதவி: நிகழ்வுகள் வலைப் பதிவின் உரிமையாளர் கந்தசாமி!

3 Comments:

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...
Best Blogger Tips

இந்த பதிவுகள் ஆறாத வலிகளை ஏற்படுத்துகின்றன .இதற்காக என்ன செய்தால் தடுக்கமுடியும் என தெரிந்தவர்கள் பதவிகளின் போர்வையை போர்த்தி பாதுகாக்கும் பொருட்டு மௌனம் காக்கிறார்கள் .அங்கு அழிந்து கொண்டு இருப்பது இவன் இனமா என கூட தெரியாமல் இந்த கட்சிகள் அரசியல் ஆதாயத்தில் விலை போகிறார்கள் .நாம் என்னதான் செய்வது ?

Athisaya said...
Best Blogger Tips

வலி சுமந்தே நிற்கின்றன உங்கள் வரிகள் நம்மரின் மனங்களைப்போல...நாமும் ஏதிலிகளே...

Athisaya said...
Best Blogger Tips

வலி சுமந்தே நிற்கின்றன உங்கள் வரிகள் நம்மரின் மனங்களைப்போல...நாமும் ஏதிலிகளே...

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails