Sunday, February 12, 2012

பதிவர்களின் ஹிட் வெறியால் புறக்கணிக்கப்படும் பெண் பதிவர்கள்!

வலையுலக வங்குரோத்து அரசியலும், வன்மங்களும் - விவாதிப்போம் வாருங்கள்!
எல்லோருக்கும் வணக்கமுங்கோ, எல்லோரும் நல்லா இருக்கீங்களா? 
தமிழ்ப் பதிவுலகம் ஆரோக்கியமான வழியில் செல்லுகின்றதா என்று எம்மை நாமே கேள்வி கேட்டு சுய பரிசோதனை செய்து கொள்வோம். கூகிள்காரன் ப்ரீயா வுடுறான் தானே! நாம என்ன வேண்ணாலும் எழுதுவோம் அப்படீன்னு எல்லோரும் கருத்துச் சொல்லிட்டு போகலாம். ஆனால் தோழமையுடன், உங்களில் ஒருவனாக என்னுடைய சில மன உணர்வுகளை, என் கேள்விகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். இப் பதிவில் தமிழ்ப் பதிவுலகை நாச வழியில் கொண்டு செல்லும் ஆபாசப் பதிவர் (அப்படித்தான் ஊரெல்லாம் பேசிக்கிறாங்க) அடியேனும் உள்ளடக்கம் என்பதால், உங்கள் தெளிவான கருத்துக்களைச் சொல்லுமாறு தாழ்மையாக கேட்கின்றேன். 
இணையத்தில் எம் தமிழ்ப் பதிவுலகில் ஆண் பதிவர்கள் சக பதிவர்களால் அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட அளவிற்கு பல பெண் பதிவர்கள் அடையாளம் காணப்படவில்லை.வெளித் தெரியாத மின்னல்களாகவும், புயல்களாகவும், சமூகத்தினைச் சீர் செய்யும் நல் வழிக் கருத்துக்களை ஆண்களை விடத் திடமாகச் சொல்லக் கூடியவாறும் எழுதுகின்ற வல்லமை படைத்த பல தமிழ்ச் சகோதரிகள் இணையத்தில் எழுதி வருகின்றார்கள். நிரூபன் ஒரு நாளைக்கு ரெண்டு பதிவு எழுதி ஹிட்டுக்காக அலைந்தாலும், அந்த நிரூபனை விட மிகவும் காத்திரமாக தன் ஒத்தைப் பதிவினூடாக திடமான சேதி சொல்லக் கூடிய வகையில் எழுதுகின்ற பெண் சகோதரிகள் எம்மிடையே உள்ளார்கள்.ஆனால் நிரூபன் போன்ற பதிவர்களின் பதிவுகளுக்கு வரும் கூட்டம்,ஏனைய சகோதரிகளின் பதிவுகளுக்கு போவதில்லை!  

என்னுடைய ப்ளாக்கிற்கு ட்ரேங் என்ற ஒன்று இல்லை! விரும்பினால் தேடிப் பார்க்கலாம். ஆனால் பல பெண் சகோதரிகளின் ப்ளாக்கிற்கு ட்ரேங் இருந்தும் வாராந்த தமிழ்மண தரப்படுத்தலில் டாப் 20 என்ற அந்தஸ்த்திற்குள் வராது காணாமற் போகின்றார்கள்.இதற்கான காரணங்கள் என்ன என்று அலசுவோமா? வாருங்கள். மனம் விட்டுப் பேசி மௌனச் சிறைகளை உடைத்தெறிவோம். ஒரு எளிய உதாரணம். சொல்கிறேன் கேளுங்கள். வலையுலகில் ஒரு பெண் பதிவர் நன்றாகவே கவிதை எழுதுவார். ஒரு கவிதையில்;
"முத்தம் கரிக்கும் எனச் சொன்னார்கள். 
நான் மூன்று வேளையும் 
முத்தம் வேண்டும் என்கிறேன் - காரணம் 
உன் முத்தம் இனிக்கிறது!" 
அப்படீன்னு ஓர் கவிதை எழுதினாங்க. அந்தப் பெண் பதிவரின் பதிவிற்கு பதிவுலக சீர்திருத்த வாதிகள் எனத் தம்மைத் தாமே சொல்லிக் கொள்ளுகின்ற ஓர் குழுவினர் என்ன பண்ணினாங்க தெரியுமா? 

"வாடி! நாம உனக்கு முத்தம் குடுத்து காண்பிக்கிறோம்! முத்தம் இனிக்குதா? கரிக்குதா?அப்படீன்னு ஆராய்ச்சி பண்ணுவோம் என அசிங்கமாக பின்னூட்டங்களை அனுப்பியதோடு அந்தப் பெண்ணை கூகிள் ப்ளஸ், பேஸ்புக் எனப் பல குழுமங்களில் அசிங்க அசிங்கமாக கேள்வி கேட்டிருக்கிறார்கள். அப் பெண்ணின் பர்சனல் டீட்டெயிலை பிஸ்ஸிங் முறையில் சுட்டு பர்சனலாக திருமணமாகி ஒரு குழந்தை உள்ள பதிவர் ஒருவர் இம்சித்திருக்கிறார். இப்போது வரை பிரச்சினை தொடர்பான ஆதாரங்கள் கை வைசம் இருக்கு. இதனை வைத்து கடந்த வருடத்தில் இரு பதிவுகளையும் எழுதிச் சம்பந்தப்பட்டவர்களை கண்டித்திருந்தேன். மேற்படி பிரச்சினை தொடர்பில் அடியேன் சம்பந்தப்பட்ட பதிவுலக அதி மேதாவிகளுடன் பேசினேன். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் திருந்துவதாக சொன்னார்கள். உறுதி மொழி வழங்கினார்கள். அப்புறமா பார்த்தா மறுபடியும் அந்தப் பெண் எழுத வந்த போது தமது குரங்கு குணத்தினை ஆரம்பித்து விட்டார்கள். 

இத்தனைக்கும் சம்பந்தப்பட்ட பதிவர்களில் சிலர் மேற்கு நாடுகளில் வாழ்வோர். ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் எனும் பாரதியின் கோட்பாட்டினை அறிந்தவர்கள். ஆனால் ஓர் பெண்ணால் வெளிப்படையாக தன் உணர்வுகளைப் பத்தி எழுதுவதை ஜீரணிக்க முடியாது எனும் ஆணாதிக்க மனப்பாங்கில் இருப்பவர்கள். இவர்களைப் போலப் பல பதிவர்கள் பெண்களின் எழுத்துக்களை அடக்க பதிவுலகில் உள்ளார்கள். ஆனால் இதே போல ஒரு கவிதையினை ஆண் எழுதியிருந்தால் ரசிக்கிறார்கள். பாராட்டுகிறார்கள். வாழ்த்து மழை பொழிகிறார்கள். கில்மாப் பட விமர்சனம் எழுதினால் ஓடோடிப் போய் கும்மியடித்து வரவேற்கிறார்கள். ஆண்கள் எது வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் பெண்கள் எதுவுமே எழுதக் கூடாது என்பது தான் வலையுலக வங்குரோத்து அரசியலாக, படித்த, உயர் பதவிகளில் உள்ள சில புத்தி ஜீவிகளால் மேற்கொள்ளப்படுகின்றது. 
நாற்று நிரூபன்
மேற்படி சம்பவம் ஓர் எளிய உதாரணம். இப்படி இன்னும் பல சம்பவங்கள் இருக்கிறது. அது பற்றி இப்போது விவாதிக்க வேண்டிய நேரம் இல்லை என்பதால் பதிவின் உள்ளடக்கத்தோடு உரையாடுவோம்."தேனம்மை லட்சுமணன்” என்கின்ற படைப்பாளியை பதிவராவதற்கு முன்பதாக அடியேன் ஈழத்தில் விகடன் வாயிலாக, அறிந்திருக்கிறேன். அவரின் படைப்புக்களிற்கு விகடனின் ஊடாக கிடைக்கும் வரவேற்பிற்கு சமனாக வலையுலகில் வரவேற்புக்கள் கிடைப்பதில்லை. இதனைப் பதிவர்கள் யாவரும் நன்கறிவோம். ஹேமா என்கின்ற பெண் பதிவர் பல வருடங்களாக எழுதி வருகின்றார். ஆனால் அவரது எழுத்திற்கு கிடைத்த அங்கீகாரம் ரொம்ப கம்மி என்றே கூறலாம்.அதிரா என்கின்ற பெண் பதிவர் ரொம்பவும் நகைச்சுவையான பதிவுகளை + பின்னூட்டங்களை எழுதுகின்றார். நம்மில் எத்தனை பேருக்கு அதிராவை தெரியும்? ஷர்மி என்கிற பதிவர் சுவையாக + சூடான விடயங்களைத் தொட்டுச் செல்கின்றார். ஷர்மியை அறிந்தவர்கள் எத்தனை பேர்? ரேவா என்கிற பெண் பதிவர் கவிதைகளுள் வித்தியாசமான வடிவங்களை கையாண்டு தமிழ்க் கவிதைகளைப் படைக்கிறார். ஆனால் அவற்றுக்கான அங்கீகாரம் எந் நிலையில் கிடைக்கிறது? அடுத்ததாக என்றும் 16 எனும் பெயரில் எழுதும் சகோதரி, இவரது படைப்புக்களை நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்போம் என்பது கேள்விக்குறியே!
தமிழ்மண டாப் 20 பட்டியலில் உள்ள பதிவர்களை நாம் அறிந்து கொண்ட அளவிற்கு நம்மில் பலர் அறியவில்லை மேற்படி பெண் பதிவர்களை அறிந்து கொள்ளவில்லை. ஆனால் வாய் ஓயா குறையாக எந் நேரமும், நாம் தான் வலை உலகின் வல்லவர்கள் என்று பேச்சு வேறு!! இப்போது புதிதாக களம் புகுந்திருக்கும் தேன் சிட்டு, தென்காசித் தமிழ்ப் பைங்கிளி, யசோதா காந்த் போன்ற பதிவர்களின் பதிவுகளுக்கு கிடைக்கும் அங்கீகாரமானது ரொம்ப கம்மியாகவே இருக்கிறது. ஆனால் அவர்களின் பின்னர் வலை உலகிற்கு வந்து எழுதும் ஆண் பதிவர்களின் பதிவுகள் பிரபலமாகுது.டாப் 20 பட்டியலினுள் வருகிறது. டாப் 20 பட்டியலில் உள்ளவர்களுடன் எனக்கு தனிப்பட்ட போட்டி எதுவும் இல்லை! மீண்டும் சொல்கிறேன் ட்ரேங் ஏதும் என் ப்ளாக்கிற்கு இல்லை எனும் நிலையில்; நடுநிலமையுடன் என் கருத்துக்களை உங்கள் முன் வைக்கின்றேன். சித்தர்களைப் பற்றிப் பதிவிடும் சகோதரி தோழியின் வலைக்குச் செல்லும் வருகையாளர்கள் நம்ம தமிழ்ப் பதிவர்களின் டெய்லி வருகையாளர்களை விட அதிகம். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு அவரின் படைப்புக்களைத் தெரியும்?

பதிவுலகத் திரட்டிகளில் சில பெண் பதிவர்களின் பதிவுகளை காண முடியாது. ஆனால் தனிப்பட்ட ரீதியில் அவர்களின் படைப்புக்களிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். இதே போன்று, சமையல் குறிப்புக்களை எழுதும் சில சகோதரிகள் திரட்டிகள் இன்றி அதிக வாசகர்களைப் பெறுகின்றார்கள். திரட்டிகளின் ஊடே ஆண்களின் படைப்புக்கள் மாத்திரம் பிரபலமாகின்றது. வலை உலகில் ஆண் பதிவர்கள் ஆபாசத்துடன், பரபரப்பு தலைப்புக்களை வைத்து எழுதும் அளவிற்கு பெண் பதிவர்களால் எழுத முடியாது. ஏன் ஓர் ஆண் பரபரப்பு தலைப்பு வைத்து பதிவின் உள்ளே காத்திரமான விடயமின்றி மொக்கைப் பதிவு எழுதுவதனை விட, ஓர் பெண் பதிவர் நல்ல தலைப்பில் மிக மிக சூப்பரான பயனுள்ள பதிவினை எழுதியிருப்பார். ஆனால் அந்தப் பதிவுகள் கண்டு கொள்ளப்படாதிருக்கும். ஆனால் என் போன்ற பதிவர்களின் மொக்கைப் பதிவுகள் பலரின் பார்வைக்கும் எட்டுது. 
நாற்று வலையின் ஒரிஜினல் பதிவு
இதற்கான காரணம் என்ன? ஹிட்டு மேனியாவில் பெண் பதிவர்களை நாம் ஓரங்கட்டுகின்றோமா? இல்லை சுதந்திர எழுத்துக்களைப் பெண்கள் பிரசவிகையில் ஆணாதிக்க மனப்பான்மையால் பல ஆண் பதிவர்கள் புறக்கணிக்கிறார்களா?பெண் பதிவர்களையும் எல்லோரும் அறியும் வண்ணம்,ஆண்களின் படைப்புக்களிற்கு வலை உலகில் இருக்கும் மரியாதையினைப் போன்று சம அந்தஸ்த்தினைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாம் என்ன செய்யலாம்? பெண்களுக்கென்று தனியான தரவரிசைப் பட்டியல் வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்யலாமா? அல்லது தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் ஈழம், அரசியல், மொக்கை எனப் பிரிவுகள் இருப்பது போன்று தனியாகப் பெண் பதிவர்களின் படைப்புக்கள் அடையாளம் கண்டு கொள்ளப்படும் வண்ணம் ஓர் லேபிளினை பெண்கள் எனும் பிரிவின் கீழ் அறிமுகப்படுத்துமாறு கோருவது சிறந்ததா?உங்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அனைத்து உள்ளங்களின் கருத்துக்களையும் பரிசீலித்து தமிழ்மணத்திற்கு ஓர் மடல் அனுப்புகின்றேன்.எம் சகோதரிகளின் கருத்துக்களையும் உலகறியச் செய்யும் வண்ணம் நாமும் சக மனிதர்களாக உழைப்போம்! 

இப் பதிவில் யாரையுமே தாக்கி எழுதலைங்கோ! ஆபாசப் பதிவர், ஹிட்டுக்காக அலையும் பதிவர் என்று என்னை நானே சொல்லியிருக்கேன்! ஸோ...வேறு யாரும் தம்மையும் இந்தப் பட்டியலில் சேர்த்திருப்பதாக தனிப் பதிவு எழுதி மன்னிப்பெல்லாம் கேட்க சொல்ல வேணாம்! நானே இவ் இடத்தில், அப்படி உங்கள் மனம் கோணும் வண்ணம் நான் ஏதாவது சொல்லியிருந்தா மன்னிச்சிடுங்க என்று சொல்லிடுறேன்! வேண்ணா காலில் கூட விழுந்துக்கிறேன்! ஹி...ஹி.. தனித் தனியாக ஒவ்வோர் ப்ளாக்கிற்கும் வந்து மன்னிப்பு கேட்க டைம் இல்லைங்கோ! 

பதிவினை முழுமையாகப் படித்து உங்கள் பின்னூட்டங்களை முன் வைக்குமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன். இப் பதிவிற்குரிய பின்னூட்டங்களுக்கான பதில்கள் இன்னும் ஐந்து மணி நேரம் கழித்து வழங்கப்படும். அது வரை நான் கொஞ்ச நேரம் பீச்சிற்கு போய் காத்து வாங்கிட்டு வாரேன். மொபைலில் உங்கள் பின்னூட்டங்களைப் படிச்சிட்டுத் தான் இருப்பேனுங்க. ஆனால் கமெண்ட் போடுமளவிற்கு மொபைலில் டைப் செய்ய முடியலைங்க. 

இப் பதிவினை எழுதுமாறு என்னைத் தூண்டிய, சில கருத்துக்களை இப் பதிவு தொடர்பில் வழங்கிய குட்டிச் சுவர்க்கம் வலைப் பதிவின் சொந்தக்காரி, அன்பு அக்கா ஆமினாவிற்கு என் சார்பிலும், அனைத்துப் பதிவர்கள் சார்பிலும் உளமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். 

282 Comments:

«Oldest   ‹Older   1 – 200 of 282   Newer›   Newest»
முத்தரசு said...
Best Blogger Tips

வணக்கம்

நம்பிக்கைபாண்டியன் said...
Best Blogger Tips

நல்லதொரு அவசியமான பதிவு!

சில சிறந்த பெண் பதிவர்களையும் அடையாளப்படுத்தியிருக்கிறீர்கள்!

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!சொல்வதற்கு எதுவுமில்லை.காத்திரமான பதிவுகள் யாருக்கு வேண்டும்?நான் கூட சில பெண் பதிவர்களின் பதிவுகள் படித்திருக்கிறேன்!நீங்கள் குறிப்பிட்ட பெண் பதிவர்களுடையது தான்.உண்மையில் பாராட்டப்பட வேண்டிய பதிவுகள்,அதுவும் திரட்டிகளில் இணைக்காமல் அநேகம் பேரை தனிப்பட சென்றடைகின்றன!திரட்டிகளில் இணைத்தால் ஒரு வேளை கவருமோ?அத்தோடு மேற்குலகில் வாழ்ந்தாலும் இன்னமும் தாழ்வு மனப்பான்மையிலேயே இருப்பதும் காரணமாகலாம்!நன்றி!!!!///இப் பதிவிற்குரிய பின்னூட்டங்களுக்கான பதில்கள் இன்னும் ஐந்து மணி நேரம் கழித்து வழங்கப்படும். அது வரை நான் கொஞ்ச நேரம் பீச்சிற்கு போய் காத்து வாங்கிட்டு வாரேன்.////பன்னாட,சுண்டல் விக்க மெரினாக்குப் போறேன்னு சொல்லு,காத்துவாங்கப் போறாராமில்ல?????ஹி!ஹி!ஹி!!!!!!!!

K said...
Best Blogger Tips

மச்சி, இந்தப் பதிவோடு எனக்கு உடன்பாடு இல்லை! அதெப்படி பெண்கள் எல்லாத்தையும் ஓபனாக எழுதலாம்? எம து கலை, கலாச்சாரம், பண்பாடு, விழுமியம், பாரம்பரியம் இதெல்லாம் என்னாவுறது?

Yoga.S. said...
Best Blogger Tips

மொத கமெண்டு "மனசாட்சி"யோடது!ஹ!ஹ!ஹா!!!!!!

K said...
Best Blogger Tips

எமது கலாச்சாரத்தை கட்டிக்காட்டும் பொறுப்பை நாம் பெண்களிடம் தானே ஒப்படைத்திருக்கிறோம்! வெறுமனே பிள்ளை பெறுவதும், சமையல் வேலை செய்வதும் மட்டுமா அவர்களது பொறுப்பு இல்லையே?

எமது கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பதும் அவர்களது தலையாய கடனாகும்! ஸோ, பெண்களுக்கு ஓவரா சுதந்திரம் கொடுக்க முடியாது! தெரிஞ்சுக்க!

Yoga.S. said...
Best Blogger Tips

ரெண்டாவது கமெண்டு,"நம்பிக்கைப் பாண்டிய"னோடது,ஹி!ஹி!ஹி!!!!!!

K said...
Best Blogger Tips

இப்போ நாம ஜீன்ஸ் அணியறோம்! ஓகே வா? ஜீன்ஸ் மேற்கத்தைய கலாச்சாரம்! ஆனா நம்ம பொண்ணுங்க சேலை தான் உடுத்தணும்! சேலை நம்ம கலாச்சாரம்!

ஸோ, இதுல கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பது யார்? பெண்கள் தானே?

மைனஸ் 10 டிகிரி குளிர் அடிக்கும் போதும், பெண்களை டெனிம் ஜீன்ஸ் அணியவிடாமல், சேலை கட்டிக்கொண்டு , லா சப்பேலில் உள்ள தமிழ்க்கடைகளில் மரக்கறிகள் வாங்க அனுப்பும் வீர புருஷர்கள் அல்லவா நாங்கள்! ( விரல்விட்டு எண்ணக் கூடிய சிலர் )

பெண்கள் எப்படி இணையத்தில் சுதந்திரமாக எழுத முடியும்? என்ன மச்சி இது பேய்க்கதை?

K said...
Best Blogger Tips

” உன் முத்தம் இனிக்கிறது” என்று எழுதிய, அந்த பெண்பதிவர் யார் மச்சி? நானும் ஒரு மெயில் அனுப்பப் போகிறேன்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

ஹி ஹி ஹி ஹி ஒரு செம காமெடி சொல்கிறேன் கேள்! படுமோசமான, கில்மா பதிவுகளை எழுதும் பதிவர் என்று வர்ணிக்கப்படும் ஐடியாமணியுடன், வலையுலகில் எந்தப் பெண்பதிவரும் பழக விரும்புவதில்லை! ஹி ஹி ஹி ஹி ஹி

ப்ளாக்குலேயே, கில்மா எழுதுபவன், தனிப்பட்ட முறையில் சாட்டிங்கில் போனால், என்னென்னவெல்லாம் கேட்டுத் தொலைப்பானோ என்று பயம்!

நானும் எந்தப் பெண்பதிவரிடமும் போய் நின்று வழிவதில்லை! அல்லது சாட்டிங்கில் மெஸ்ஸேஜ் அனுப்புவதும் இல்லை!

அப்படி இருந்தும் துணிச்சல் மிக்க 3 பெண்கள் இப்போது என்னோடு பழகி வருகிறார்கள்!

அவர்கள் சொல்வதெல்லாம், “ ஏண்டா இம்புட்டு நல்லவனா இருக்கியே? இவ்ளோ அறிவா பேசுறியே? எதுக்கு ப்ளாகுல கண்டதையும் எழுதி கெட்ட பேரு வாங்குறே?” என்கிறார்கள்!

ஹி ஹி ஹி ஹி ஹி நான் அவர்களுக்குச் சொல்லியிருக்கேன்! - கெட்ட பேர் வாங்குவது எனது பொழுது போக்கு! அதுல ஒரு சந்தோசம் கெடைக்குது!

ஹி ஹி ஹி ஹி மச்சி நிரூ, நானோ நீயோ வெளி வேஷம் போடுவதில்லை! எந்தப் பெண்களோடு என்ன பேச வேண்டும் என்று எமக்கு நல்லாவே தெரியும்! நாம் காய்ந்த மாடுகள் அல்ல, கம்பில் விழுவதற்கு!

அப்புறம் முத்தம் இனிக்கிறது என்று எழுதிய அந்தப் பெண்பதிவரை எனக்கும் தெரியும்! ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஒரு அப்பாவிப் பெண்ணின் உணர்வுகளை, இப்படி நோகடிக்கிறார்களே, பரதேசிகள்!

K said...
Best Blogger Tips

பெண்பதிவர்கள் சுதந்திரமாக எழுதுவதற்கு, ஆண்கள் தடைவிதிக்கிறார்களோ இல்லையோ, சில பெண்பதிவர்க்ளே தடை விதிப்பதும் எமக்கு நல்லாவே தெரியும்! ஹி ஹி ஹி ஹி இது மாமியார் - மருமகள் பிரச்சனை மாதிரி!

உனக்குத் தெரியும் தானே மச்சி, அமெரிக்காவில் இருக்கும் ஒரு பெண்பதிவர் கலாச்சாரம், ஒழுக்கம் பற்றி பதிவுகள் போட்டதும், சில பிரபல பதிவர்களுக்கு எதிராக உள்குத்து போட்டதும், பின்னர் நான் போய் சண்டை போட்டதும்! ஹி ஹி ஹி ஹி பெண்களே, பெண்களை ஒடுக்கும் போது, ஆண்களைக் குறை சொல்லி என்ன பயன்?

சக பெண்பதிவர்களை ஒடுக்க நினைக்கும் சில “ பெரிய” பெண்பதிவர்களுக்கு எதிராக உள்குத்து போடணும்னு நெனைச்சேன்! அப்புறம் வேணாம்னு விட்டுட்டேன்!

ஏன்னா, நான் உள்குத்து போட்டா, எப்படியாவது பர்சனல் தகவல்கள் கறந்து எடுத்துதான் போடுவேன்! அப்புறம் அவங்க ஆயுசுக்கும் வலையுலக பக்கமே வர மாட்டார்கள்! ஹி ஹி ஹி ஹி !!!

K said...
Best Blogger Tips

எனக்கு இன்னொரு கேள்வி இருக்கு! பெண்கள் அரசியல் எழுதக் கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கா என்ன? அல்லது சினிமா விமர்சனம் எழுதக் கூடாது என்று ஏதாவது இருக்கா என்ன? இவற்றையெல்லாம் எழுதலாம்! ஏனோ அவர்கள் தங்களைத் தாங்களே சுருக்கிக்கொள்கிறார்கள்!

இது பற்றி பெண்கள் தான் பேசணும்! நாம பேசி பயன் இல்லை!

K said...
Best Blogger Tips

மச்சி, அனாமிகா துவாரகன் பற்றிப் பேசினாலே நீ கடுப்பாகிடுவாய்! அவ, நம்ம சுதாவின் அம்மா பத்தி பேசினது தவறுதான்! அது ஒருபுறம் இருக்க,

எனக்கு அனாமிகாவின் துணிச்சல் மிக மிகப் பிடிக்கும்! பெண்பதிவர்களில் நம்பர் ஒன் துணிச்சல்காரி அவ தான்! அவவின் தில் எனக்கு ரொம்ப பிடிக்கும்!

அப்பாவி பெண்பதிவர்களுக்கு மெயில் அனுப்பி “ ஃப்ரீயா இருந்தா வர்ரியா?” என்று அழைப்பு விடுத்து, அந்தப் பெண்களைக் கண்ணீர் சிந்த வைக்கும், காம வெறிக்கூட்டம், அனாமிக்கா போன்ற துணிச்சல் மிக்க பெண்களிடம் வாலாட்டுவதே இல்லை!

அப்படியே மெயில் அனுப்பினாலும், நல்ல முறையாகக் கொடுத்து அனுப்புவார் அனாமிகா!

ஆகவே, யார் அப்பாவியாக இருக்கிறார்களோ, அவர்களைச் சீண்டுவதே சில பன்னாடைகளின் வேலையாகிவிட்டது!

K said...
Best Blogger Tips

நாமே பதிவு போட்டு, நாமே பேசிக்கொண்டிருப்பது முறையல்ல! இனி பெண்கள் பேசட்டும்!

அம்பலத்தார் said...
Best Blogger Tips

நல்ல விடயத்தை அலசியிருக்கிறியள் நிரூ.

அம்பலத்தார் said...
Best Blogger Tips

ஆமா

அம்பலத்தார் said...
Best Blogger Tips

ஆமாங்கிறன்.

அம்பலத்தார் said...
Best Blogger Tips

ரொம்பச்சரி....

அம்பலத்தார் said...
Best Blogger Tips

ஆமா
அட ஆமாங்கிறன்.
ரொம்பச்சரி....
இதெல்லாம் இங்க நம்ம மணி போட்டிருக்கிற பின்னூட்டங்களுக்கு நான் சொல்லவேண்டிய வசனங்கள்.
அங்கங்கை விருப்பமானதை தூக்கிப்போட்ட்டுக்குங்க.
அப்பாடா எனக்கு பின்னூட்டம் எழுதுகிற வேலையே இல்லாம நான் சொல்ல நினைச்சதை எல்லாம் மணியே சொல்லிட்டார். Thanks மணி

ஹேமா said...
Best Blogger Tips

ம்...பதிவும் மணியத்தாரின் அலசலும்...அருமை.ஒரு பெண் வெறுக்கப்படுவதும் விரும்பப்படுவதும் அவளது சிந்தனையாலும் செயலாலும் என்பார்கள்.இது பயந்தோ அடிமைத்தனத்தாலோ அல்ல.
தேனக்காவோடு பழகியவர்கள் அவரைப்பற்றியும் அவரின் மென்மையான அன்பு பற்றியும் சொல்வார்கள்.அவவின் எழுத்தில் எத்தனை ஆணித்தரமான கருத்துக்கள் ஆபாசம் இல்லாமல்.சரி விடுங்கோ !

நிரூ...தரப்படுத்தல் ஊரில் மட்டுமில்ல இணையத்திலும் இருக்குப்போல !

J.P Josephine Baba said...
Best Blogger Tips

நாம் நமக்காக நம் சமூகத்தீற்காக எழுதுகின்றோம். அங்கீகாரம் நம்மை தேடி வர வேண்டிய நேரம் வரும். காத்து கிடந்து நம் நேரத்தை விரயம் ஆக்குவதே தோல்வி!!!!

J.P Josephine Baba said...
Best Blogger Tips

நீங்களும் தான் என் எழுத்தை பரிசீலிப்பது இல்லை ஆனால் உங்கள் எழுத்தை தொடர்ந்து வாசித்து வருகின்றேன் நிருபன்( சும்மா ஒரு அரசியல்:-))

K said...
Best Blogger Tips

நிரூ, மேலே சகோதரி ஜோஸ்ஃபின் சொன்னதிலும் ஒரு உண்மை இருக்கு! சகோதரிகள் எவ்வளவுதான் நன்றாக எழுதினாலும், நாமெல்லாம் அங்கு போய் படித்து ஆதரவு கொடுப்பது குறைவு! நீயாவது சில ப்ளாக்குகள் போகிறாய்! நான் எவருடைய ப்ளாக்குக்கும் போவதில்லை!

நான் ஏன் போவதில்லை என்றால், எனக்கு பதிவுலகில் கெட்ட பேர் இருக்கு! நான் ஒரு ப்ளாகில் கமெண்டு போட்டால், அந்த ப்ளாக்கை ஐ - வாஷ் பண்ணணும்னு சொல்றாங்கோ!

அதுனால தான் நான் எங்குமே போவதில்லை! ஹி ஹி ஹி ஹி ஹி ஆஹா எனக்கொரு சாட்டு கிடைத்துவிட்டது! :-)

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

//
இப் பதிவில் யாரையுமே தாக்கி எழுதலைங்கோ! ஆபாசப் பதிவர், ஹிட்டுக்காக அலையும் பதிவர் என்று என்னை நானே சொல்லியிருக்கேன்! ஸோ...வேறு யாரும் தம்மையும் இந்தப் பட்டியலில் சேர்த்திருப்பதாக தனிப் பதிவு எழுதி மன்னிப்பெல்லாம் கேட்க சொல்ல வேணாம்!//

என்னாதூஊஊஊஉ ஆரையும் தாக்கி எழுதவில்லையோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... பிளீஸ்ஸ்ஸ் போற வழியில புண்ணியம் கிடைக்கும் ஆராவது நிரூபனைப் பிடிச்சு அந்த... அதே சாக்கில கட்டிக்கொண்டு வாங்கோ பிரித்தானிய நீதிமன்றத்துக்கு:))...

எவ்வளவு ஒரு பிரபல்யமான பதிவர் நான்... :))(உஸ்ஸ்ஸ் முறைக்கப்பிடா, என்னை முழுவதும் பேச விடோணும்:))... இதுவரை 96 ஃபலோவர்ஸ் இணைந்திருக்கினம்(அதில நானும் ஃபலோவராக இருக்கிறேன் என்பது நமக்குள்ள இருக்கட்டும்:))....

இந்தியாஆஆஆஆஆஅ, இலங்கைஐஐஐஐஐஐஐஐ, சிங்கப்பூர்:) மலேசியா:), ஜப்பான், அமேஏஏஏஏஏஏஏஏஏஎரிக்கா.... சூடான், அவுஸ்திரேலியாஆஆஆஆஆ, பிரான்ஸ்சு, ஜேர்மனி, நியூசிலாந்து, இங்கிலாந்து:)... அஃப்ரிக்கா.... இங்கின எல்லாம் இருந்து தேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏடித் தேடி வந்து என் பதிவு படிக்கினம்.....:))) இப்பூடிப்பட்ட என்னப்போய் இன்னும் பிரபல்யமாகாமல் இருக்கிறேன் எனச் சொன்னால் சும்மா விட்டிடுவனோ? என்ர கை என்ன புளியங்காய் ஆயப்போயிடுமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... பிளீஸ் பிடிச்சு வாங்கோ நிரூபனை... புண்ணியம் கிடைக்கும் உங்களுக்கு.. நான் இண்டைக்கு எங்கயும் போகப்போவதில்லை, இதுக்கொரு முடிவு கட்டாமல்:))))

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

இன்னுமொரு அன்பான தாழ்மையான பண்பான பணிவான வேண்டுகோள்... ஒருக்கால் ஐடியா மணி அவர்களையும் “அழைத்து” வாறீங்களோ?:)) பயப்பூடாதீங்க ஒண்ணும் பண்ண மாட்டோம்:)) பெண்கள் எல்லோரும் சேர்ந்து அவருக்கு “அவார்ட்டு”க்கொடுக்கப்போகிறோம்...:).

இப்பதிவில் அவரின் ஆரம்பப் பின்னூட்டங்களைப் படித்ததால் வந்த எஃபெக்ட்டூஊஊ:))).

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

உஸ்ஸ்ஸ் அது என்னமோ தெரியேல்லை, என் தலை தெரிஞ்சாலே எல்லோரும் ஒளிச்சிடுகினம்:))))... கிக்கிக்க்கீஈஈஈஈஈஇ அப்படி எனக்குள் ஒரு எண்ணம்:)).. சரி அது போகடும், அதனால எப்பவும் தனியே பேசிட்டுப் போகும் நிலைமைக்கு ஆளாகிடுறேன்...

ஏன் நிரூபன் பெண்பதிவர்கள் புளொக் வைத்திருக்கிறோம், என்னைப்பொறுத்து, மனதில் தோன்றுவதை எழுதிவிடுகிறேன், அடுத்தவருக்குப் பயந்து இதுவரை எதையும் எழுதாமல் விட்டதில்லை, ஆனா அடுத்தவர் மனம் நொந்திடக்கூடாதென்பதில்தான் மிகவும் கவனமாக இருப்பேன்... மனமறிந்து தவறு செய்வதில்லை.

எனக்கு பிரபல்யமாகப் பயம்:)) அதனால்தான்... எங்கேயும் பெரிதாகப் போவதில்லை, திரட்டிகளில் இணைவதில்லை.

வலைப்பூ ஆரம்பித்து முதல் ஒருவருடமாக எனக்கும் என் கணவருக்க்கும் மட்டுமே அது தெரியும், ஆரும் கண்டுபிடித்துவிடுவார்களோ எனும் பயத்தில் மிகவும் பாதுகாப்பக ஒளித்து வைத்திருந்தேன்:))... பப்ளிக்கில் எல்லோரோடும் கதைக்கப் பயம்.. அதுதான் காரணம்..

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

அடுத்து சினிமா, அரசியல் இப்படியெல்லாம் எழுதுவதில்லை பெண்கள் எனவும் படித்தேன்... அப்படியெல்லாம் இல்லை, ஆருக்கு எதில் ஆர்வமோ அதை எழுதுகிறோம் அவ்வளவுதான்.

... என்னைப்பொறுத்து என்னிடம் வலைப்பூ இருப்பது... எமக்கும் அடுத்தவருக்கும் மகிழ்ச்சியையும் பொழுதுபோக்கையும் பகிர்ந்துகொள்ளவே... மனதுக்கு ரிலாக்ஸ் ஆகட்டும் என்றுதான் ரீவி பார்ப்பேன்.. அதுபோலத்தான்.. வலைப்பூவும்.. இதைவிட பெரிதாக எழுத நேரம் போதுவதில்லை...

K said...
Best Blogger Tips

@athira

இன்னுமொரு அன்பான தாழ்மையான பண்பான பணிவான வேண்டுகோள்... ஒருக்கால் ஐடியா மணி அவர்களையும் “அழைத்து” வாறீங்களோ?:)) பயப்பூடாதீங்க ஒண்ணும் பண்ண மாட்டோம்:)) பெண்கள் எல்லோரும் சேர்ந்து அவருக்கு “அவார்ட்டு”க்கொடுக்கப்போகிறோம்...:).

இப்பதிவில் அவரின் ஆரம்பப் பின்னூட்டங்களைப் படித்ததால் வந்த எஃபெக்ட்டூஊஊ:))).:///////

ஹா ஹா ஹா நான் இஞ்ச தான் இருக்கிறன்! எனக்கு அவார்டு வேணாம்! இந்த சம்மருக்கு லண்டனுக்கு வரப்போறன்! யூரோ லைன் ரெயின்ல அப் அண்ட் டவுண் டிக்கட் எடுத்து தாங்கோ! அதுவே பெரிய புண்ணியம்! அவ்வ்வ்வ்வ்வ்!

நிரூபன் said...
Best Blogger Tips

எல்லோருக்கும் வணக்கமுங்கோ!
வந்துட்டேன்! வாங்க!
ஆண்கள் இன்னமும் ஆணாதிக்க மன நிலையில் இருந்து மாறவில்லை என்பதற்கு
இப் பல ஆண்கள் இப் பதிவிற்குப் பின்னூட்டம் இடாது ஒதுங்கியிருப்பதன் ஊடாகவும், மைனஸ் ஓட்டு குத்தியிருப்பதனூடாகவும் அறிந்து கொள்ளலாம்!

நிரூபன் said...
Best Blogger Tips

@மனசாட்சி

வணக்கம்
//

என்ன சார்,
வணக்கம் என்று சொல்லிட்டு ஓடிட்டீங்க.
உங்கள் கருத்தையும் சகோதரிகளின் படைப்புக்கள் தொடர்பில் சொல்லியிருக்கலாமே?

நிரூபன் said...
Best Blogger Tips

@நம்பிக்கைபாண்டியன்

நல்லதொரு அவசியமான பதிவு!

சில சிறந்த பெண் பதிவர்களையும் அடையாளப்படுத்தியிருக்கிறீர்கள்!
//

நண்பா,
பதிவில் உள்ள விடயங்கள் பற்றிய உங்கள் கருத்துக்களைச் சொன்னால் விவாதிக்கலாம் அல்லவா?

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR
வணக்கம் நிரூபன்!சொல்வதற்கு எதுவுமில்லை.காத்திரமான பதிவுகள் யாருக்கு வேண்டும்?நான் கூட சில பெண் பதிவர்களின் பதிவுகள் படித்திருக்கிறேன்!நீங்கள் குறிப்பிட்ட பெண் பதிவர்களுடையது தான்.உண்மையில் பாராட்டப்பட வேண்டிய பதிவுகள்,அதுவும் திரட்டிகளில் இணைக்காமல் அநேகம் பேரை தனிப்பட சென்றடைகின்றன!திரட்டிகளில் இணைத்தால் ஒரு வேளை கவருமோ?அத்தோடு மேற்குலகில் வாழ்ந்தாலும் இன்னமும் தாழ்வு மனப்பான்மையிலேயே இருப்பதும் காரணமாகலாம்!//

ஐயா நான் மேற்குலகில் இருப்போர் பற்றிச் சொன்னது, உங்களைப் போன்று பெண்களின் படைப்புக்களைப் பாராட்டும் நபர்களைச் சுட்டிக் காட்ட அல்ல.

பெண்களின் படைப்புக்கள் ஓர் வரையறைக்குள் இருக்கனும் என நினைப்போரைத் தான் நான் சுட்டியிருக்கிறேன்.

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

//
ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
நாமே பதிவு போட்டு, நாமே பேசிக்கொண்டிருப்பது முறையல்ல! இனி பெண்கள் பேசட்டும்//

நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்தீங்களோ?:) ஏனெனில் நாங்க வாய் திறந்தால்... பிறகு நீங்க பழனிக்குப் போய் மொட்டை போட்டாலும்(நிரூபனுக்கு எனச் சொன்னேன்:)), நாங்க வாய் மூடமாட்டோம்...:)))

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR
பன்னாட,சுண்டல் விக்க மெரினாக்குப் போறேன்னு சொல்லு,காத்துவாங்கப் போறாராமில்ல?????ஹி!ஹி!ஹி!!!!!!!!//

எனக்குச் சுண்டல் விக்கப் போயெல்லாம் பழக்கம் இல்லை! ஆனால் கடலை போடப் போயிப் பழக்கம்!

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

@athira

இன்னுமொரு அன்பான தாழ்மையான பண்பான பணிவான வேண்டுகோள்... ஒருக்கால் ஐடியா மணி அவர்களையும் “அழைத்து” வாறீங்களோ?:)) பயப்பூடாதீங்க ஒண்ணும் பண்ண மாட்டோம்:)) பெண்கள் எல்லோரும் சேர்ந்து அவருக்கு “அவார்ட்டு”க்கொடுக்கப்போகிறோம்...:).

இப்பதிவில் அவரின் ஆரம்பப் பின்னூட்டங்களைப் படித்ததால் வந்த எஃபெக்ட்டூஊஊ:))).:///////

ஹா ஹா ஹா நான் இஞ்ச தான் இருக்கிறன்! எனக்கு அவார்டு வேணாம்! இந்த சம்மருக்கு லண்டனுக்கு வரப்போறன்! யூரோ லைன் ரெயின்ல அப் அண்ட் டவுண் டிக்கட் எடுத்து தாங்கோ! அதுவே பெரிய புண்ணியம்! அவ்வ்வ்வ்வ்வ்//////

என்னாது சொகுசு ரெயினில ஓசி ரிக்கேட் தேவையாக்கிடக்கோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).... அதெல்லாம் நிரூபனிடம் நேற்றே சொல்லிட்டேன்... அதே “சா...”இல கட்டி எடுத்து வருவார்:))... வீ ஆ வெயிட்டிங்.. தேம்ஸ் கரையில :)) ஹையோ ஹையோ நிரூபனின் தலை தெரிஞ்சதும் எனக்கு கொஞ்சம் தெகிரியம்:)) வந்து இப்பூடியெல்லாம் எழுத வைக்குது:)))

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
மச்சி, இந்தப் பதிவோடு எனக்கு உடன்பாடு இல்லை! அதெப்படி பெண்கள் எல்லாத்தையும் ஓபனாக எழுதலாம்? எம து கலை, கலாச்சாரம், பண்பாடு, விழுமியம், பாரம்பரியம் இதெல்லாம் என்னாவுறது?//

பன்னாடை இந்தக் கலாச்சாரத்தைக் கொண்டு போயி மூலைக்குள் வை!

எத்தனை வருசத்திற்கு இப்படி கட்டிக் காக்கப் போறீங்க?
ஆண்டாள், காரைக்காம் அம்மையார்,
தாமரை, லீனா மணி மேகலை,
ஆழியாள், யோ.புரட்சி,
கொற்றவை, ஆதிலட்சுமி சிவகுமார்,கப்டன் வானதி,
கவின்மலர், குயிலினி, இவையெல்லாம் என்ன கலாச்சாரத்தைக் கட்டிப்புடிச்சிருந்தே நல்ல படைப்புக்கள் கொடுத்தவை?

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

மொத கமெண்டு "மனசாட்சி"யோடது!ஹ!ஹ!ஹா!!!!!!
//

மனச்சாட்சிக்கும் பெண்கள் எழுதுவது தொடர்பில் உடன்பாடில்லை போலும்! அது தான் ஒன்னுமே சொல்லாமல் போயிட்டாரோ!

Mahan.Thamesh said...
Best Blogger Tips

மச்சி நல்ல தலைப்பினை அலசி இருகிறீர்கள் . சில பெண் பதிவர்களின் பதிவுகள் திரட்டிகளில் இணைக்க படுவதில்லை இதனால் வாசகர்கள் அறிந்துகொள்ள முடிவதில்லை . எனக்கு நீ சொன்ன பெண் பதிவர்களில் ஹேமா அக்காவை மட்டுமே தெரியும் . அவருடைய பதிவுகளை தொடர்தும் படித்து வருகிறேன் . இப்போது தான் உறைத்திருக்கிறது இத்தனை பெண் பதிவர்களை அறியாமல் விட்டிருக்கிறோம் என்று . இனி வரும் நாட்களில் நீங்கள் அறிமுகம் செய்த பதிவர்களின் தளத்தினை படிக்கிறேன் .

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

எமது கலாச்சாரத்தை கட்டிக்காட்டும் பொறுப்பை நாம் பெண்களிடம் தானே ஒப்படைத்திருக்கிறோம்! வெறுமனே பிள்ளை பெறுவதும், சமையல் வேலை செய்வதும் மட்டுமா அவர்களது பொறுப்பு இல்லையே?

எமது கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பதும் அவர்களது தலையாய கடனாகும்! ஸோ, பெண்களுக்கு ஓவரா சுதந்திரம் கொடுக்க முடியாது! தெரிஞ்சுக்க!
//

இப்படிச் சொல்லிச் சொல்லியே ஓர் சக மனுசியின் எண்ணங்களை எத்தனை காலத்திற்குள் மனதிற்குள் புதைச்சு சாகடிக்கப் போறீங்க?

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

ரெண்டாவது கமெண்டு,"நம்பிக்கைப் பாண்டிய"னோடது,ஹி!ஹி!ஹி!!!!!!
//

ஐயா, மூனாவது கமெண்டு உங்கள் நண்பனின் தானே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

இப்போ நாம ஜீன்ஸ் அணியறோம்! ஓகே வா? ஜீன்ஸ் மேற்கத்தைய கலாச்சாரம்! ஆனா நம்ம பொண்ணுங்க சேலை தான் உடுத்தணும்! சேலை நம்ம கலாச்சாரம்!
//

யோ...அதென்ன நீங்க மட்டும் ஒரு சேஞ்ச் வைக்கலாம்! ஆனால் பெண்கள் பண்ணக் கூடாது?
நீங்கள் விரும்பிய ஆடை அணியலாம்! விரும்பிய அனைத்தையும் அனுபவிக்கலாம்!
ஆனால் பெண்கள் தம் உணர்வுகளை எழுதினால் தப்போ?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

பெண்கள் எப்படி இணையத்தில் சுதந்திரமாக எழுத முடியும்? என்ன மச்சி இது பேய்க்கதை?
//

இம்சை குடுக்கும் இம்சைகள்,
கமெண்டுகளின் பின்னால் போய் டெரர் செய்யும் டெரர்கள்
பதிவுலகில் ஆண்கள் எழுதலாம் பெண்கள் எழுதக் கூடாது என நினைக்கும் சித்தப் பிரம்மை பிடித்தவர்கள் இருக்கும் வரை பெண்கள் சுதந்திரமாக எழுத முடியாது என்பது உண்மை தான்!
இனி வரும் பதிவுகளில் நேரடியாக ஒவ்வோர் அடக்குமுறையாளரையும் சுட்டி எழுதனும்!
அப்போது தான் அவர்களுக்கு சுறணை வரும்! உணர்வு பிறக்கும்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

ஹி ஹி ஹி ஹி மச்சி நிரூ, நானோ நீயோ வெளி வேஷம் போடுவதில்லை! எந்தப் பெண்களோடு என்ன பேச வேண்டும் என்று எமக்கு நல்லாவே தெரியும்! நாம் காய்ந்த மாடுகள் அல்ல, கம்பில் விழுவதற்கு!

அப்புறம் முத்தம் இனிக்கிறது என்று எழுதிய அந்தப் பெண்பதிவரை எனக்கும் தெரியும்! ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஒரு அப்பாவிப் பெண்ணின் உணர்வுகளை, இப்படி நோகடிக்கிறார்களே, பரதேசிகள்!
//

ஹி...ஹி..
ஏன்னா நாம பெண்களுடன் சகஜமாக பழகி உளவியல் அடிப்படையில் தேறி வந்திட்டோம்!
ஆனால் சில மனித உருவில் உள்ள பதிவுலக மிருக ஜென்மங்கள் அப்படி இல்லையே!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

உனக்குத் தெரியும் தானே மச்சி, அமெரிக்காவில் இருக்கும் ஒரு பெண்பதிவர் கலாச்சாரம், ஒழுக்கம் பற்றி பதிவுகள் போட்டதும், சில பிரபல பதிவர்களுக்கு எதிராக உள்குத்து போட்டதும், பின்னர் நான் போய் சண்டை போட்டதும்! ஹி ஹி ஹி ஹி பெண்களே, பெண்களை ஒடுக்கும் போது, ஆண்களைக் குறை சொல்லி என்ன பயன்?
//

இப்போது பெண்கள் இன்னவை தான் எழுதனும் என்று யாருமே சட்டம் போடுவதில்லையே!
ஆனால் சுதந்திர எழுத்தாளர்களாக பல சகோதரிகள் உருவெடுத்திருக்கிறார்கள் என்பது உண்மை தானே!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

எனக்கு இன்னொரு கேள்வி இருக்கு! பெண்கள் அரசியல் எழுதக் கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கா என்ன? அல்லது சினிமா விமர்சனம் எழுதக் கூடாது என்று ஏதாவது இருக்கா என்ன? இவற்றையெல்லாம் எழுதலாம்! ஏனோ அவர்கள் தங்களைத் தாங்களே சுருக்கிக்கொள்கிறார்கள்!

இது பற்றி பெண்கள் தான் பேசணும்! நாம பேசி பயன் இல்லை!
//

பெண்கள் அரசியல் எழுதலாம்! என்றும் 16 என்ற ப்ளாக்கினை எழுதும் சகோதரி,
அரசியல் காமெடி, நகைச்சுவை எனப் பல விடயங்களை வெளுத்து வாங்கிறார்.
ஒருவாட்டி அங்கே போய்ப் படிச்சுப் பார்! ஆனால் இது போல பல பெண்கள் எழுதுவதில்லை என்பது உண்மையே!

ஏன் நம்ம ஆமினா அக்காவும் அவ்வப்போது அரசியலும் எழுதுவா, மொக்கை, நகைச்சுவையும் எழுதுவா,
இதே போல பல பதிவர்கள் இருக்காங்க மச்சி!

பெண்களின் கருத்துக்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

மச்சி, அனாமிகா துவாரகன் பற்றிப் பேசினாலே நீ கடுப்பாகிடுவாய்! அவ, நம்ம சுதாவின் அம்மா பத்தி பேசினது தவறுதான்! அது ஒருபுறம் இருக்க,

எனக்கு அனாமிகாவின் துணிச்சல் மிக மிகப் பிடிக்கும்! பெண்பதிவர்களில் நம்பர் ஒன் துணிச்சல்காரி அவ தான்! அவவின் தில் எனக்கு ரொம்ப பிடிக்கும்!
//

மச்சி, உண்மையைச் சொன்னா அனாமிகாவின் துணிச்சல் எனக்கும் பிடிக்கும்!

ஆனால் அவர் அப்படிப் பேசினார் என்பதற்காக தொடர்ந்தும அவரோடு விரோதம் கொள்வது முறையல்லவே!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

நாமே பதிவு போட்டு, நாமே பேசிக்கொண்டிருப்பது முறையல்ல! இனி பெண்கள் பேசட்டும்!
//

சகோதரிகள் வந்து விட்டார்கள் என நினைக்கிறேன்
நீயும் விவாதிக்க வழி விட்டு விலகி நிற்காதே!

வந்து உன் கருத்துக்களையும் சொல்லு!

K said...
Best Blogger Tips

@athira

//
ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
நாமே பதிவு போட்டு, நாமே பேசிக்கொண்டிருப்பது முறையல்ல! இனி பெண்கள் பேசட்டும்//

நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்தீங்களோ?:) ஏனெனில் நாங்க வாய் திறந்தால்... பிறகு நீங்க பழனிக்குப் போய் மொட்டை போட்டாலும்(நிரூபனுக்கு எனச் சொன்னேன்:)), நாங்க வாய் மூடமாட்டோம்...:)))///////

ஹா ஹா ஹா இது தெரிஞ்சுதான், அந்தக் காலத்தில இருந்தே உங்கள பேச விடாமல் செய்திருக்கினம்! அப்படியெண்டால், எங்கட மூதாதையருக்குக்குத்தான் நன்றி சொல்லோணும்!

நீங்கள் பேச ஆரம்பிச்சால், எங்களுக்கு பழனிக்குப் போய் மொட்டை போடுற அளவுக்குப் பொறுமை கிடையாது! நாங்கள் இங்கேயே சென் நதியில் குதிச்சு செத்துடுவம்!

ஹா ஹா ஹா ஹா மேற்கு நாடுகளில் பெண்களுக்குப் பேச்சு சுதந்திரம் அதிகம் என்பதால், இம்சை தாங்க முடியாமல் ஆண்கள் தற்கொலை செய்ய வசதியாகத்தான், ஒவ்வொரு பெருநகரங்களிலும் நதிகளை உருவாக்கியுள்ளார்கள் போலும்! ஹி ஹி ஹி ஹி ஹி

( எப்புடீ என் கண்டுபிடிப்பு? )

நிரூபன் said...
Best Blogger Tips

@அம்பலத்தார்

ஆமா
அட ஆமாங்கிறன்.
ரொம்பச்சரி....
இதெல்லாம் இங்க நம்ம மணி போட்டிருக்கிற பின்னூட்டங்களுக்கு நான் சொல்லவேண்டிய வசனங்கள்.
அங்கங்கை விருப்பமானதை தூக்கிப்போட்ட்டுக்குங்க.
அப்பாடா எனக்கு பின்னூட்டம் எழுதுகிற வேலையே இல்லாம நான் சொல்ல நினைச்சதை எல்லாம் மணியே சொல்லிட்டார். Thanks மணி
//

ஐயா, சத்தமில்லாம ஓடிட்டீங்க! அவ்வ்வ்வ்

நன்றி ஐயா.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா

ம்...பதிவும் மணியத்தாரின் அலசலும்...அருமை.ஒரு பெண் வெறுக்கப்படுவதும் விரும்பப்படுவதும் அவளது சிந்தனையாலும் செயலாலும் என்பார்கள்.இது பயந்தோ அடிமைத்தனத்தாலோ அல்ல.
தேனக்காவோடு பழகியவர்கள் அவரைப்பற்றியும் அவரின் மென்மையான அன்பு பற்றியும் சொல்வார்கள்.அவவின் எழுத்தில் எத்தனை ஆணித்தரமான கருத்துக்கள் ஆபாசம் இல்லாமல்.சரி விடுங்கோ !
//

சூப்பர் கருத்துங்கோ! ஆனால் டாப் 20 போட்டி,
தமிழ்மண ஓட்டுக்கள் காரணமாக பெண் பதிவர்கள் பலர் காணாமற் போகடிக்கப்படுகிறார்களே!

இதனை நம்பர் ஒன் பதிவர்கள் உணருவார்களா?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா

நிரூ...தரப்படுத்தல் ஊரில் மட்டுமில்ல இணையத்திலும் இருக்குப்போல !
//

ஹி ஹி ஹி.
இணையத்தில் அவ்வாறு இல்லையேல் இன்னைக்கு தமிழ்மணத்தில் பல பெண் சகோதரிகள் மகுடம் சூடியிருப்பார்கள்!

ஆனால் ஒரேயொரு சகோதரி மாத்திரம் எல்லோர் பதிவுகளுக்கும் ஒத்த வரியில் அருமை அப்படீன்னு பதிவு ரிலீஸ் ஆகி ஒரு நிமிடம் ஆக முன்னாடி கமெண்ட் எழுதி மகுடம் பிடித்திருக்கிறார்.
இபோது அவங்க் எழுதுவதில்லை!

நிரூபன் said...
Best Blogger Tips

@J.P Josephine Baba

நாம் நமக்காக நம் சமூகத்தீற்காக எழுதுகின்றோம். அங்கீகாரம் நம்மை தேடி வர வேண்டிய நேரம் வரும். காத்து கிடந்து நம் நேரத்தை விரயம் ஆக்குவதே தோல்வி!!!!
//

அக்கா,
நீங்க எத்தனை வருசமா எழுதுறீங்க?
பல வருடங்களாக எழுதுறீங்க தானே! அங்கீகாரம் தேடி வந்திச்சா?

இன்றைய தினம் பெண்களின் பதிவுகள் இலகுவில் அடையாளம் காணபப்டுவதற்குரிய வழியினைத் தான் முன் வைத்திருக்கிறேன்!
அதனைக் கொஞ்சம் பரிசீலித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்!

நிரூபன் said...
Best Blogger Tips

@J.P Josephine Baba

நீங்களும் தான் என் எழுத்தை பரிசீலிப்பது இல்லை ஆனால் உங்கள் எழுத்தை தொடர்ந்து வாசித்து வருகின்றேன் நிருபன்( சும்மா ஒரு அரசியல்:-))
//

அக்கா என் எழுத்தை நீங்களும் தான் பரிசீலிப்பதில்லை! அவ்வ்வ்வ்வ்வ்வ்
ஆனாலும் நான் ஒரு சில சகோதரிகளின் ப்ளாக்கிற்குச் செல்கின்றேன்! கண்டிப்பாக உங்கள் பக்கம் டைம் கிடைக்கையில் வருகினேறேன்!

எல்லாச் சகோதரிகளின் படைப்புக்களும் இலகுவில் அடையாளங் கண்டு கொள்ளப்படும் வண்ணம்
இன்றைக்கு ஓர் ஐடியா சொல்லியிருக்கிறேன்.
அதனை நாளைய பதிவில் தனியாக எழுதி வேண்டுகோளாக முன் வைக்கப் போகின்றேன்!

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

எவ்வளவு ஒரு பிரபல்யமான பதிவர் நான்... :))(உஸ்ஸ்ஸ் முறைக்கப்பிடா, என்னை முழுவதும் பேச விடோணும்:))... இதுவரை 96 ஃபலோவர்ஸ் இணைந்திருக்கினம்(அதில நானும் ஃபலோவராக இருக்கிறேன் என்பது நமக்குள்ள இருக்கட்டும்:))....
//

அக்கா இம்புட்டும் இருந்தா போதுமா?
பலரும் உங்க படைப்புக்களை அறியனும் அல்லவா? குறிப்பிட்ட ஒரு சிலர் தானே உங்கள் படைப்புக்களைப் படிக்கிறாங்க
நீங்க ரெண்டு வருசமா எழுதுறீங்கோ.
ஆனால் 96 பேர் தானே பின் தொடருறாங்கோ! ஆனால் ஒரு வருசமா எழுதுவோர் திரட்டிகளின் உதவியினால் பல பெண் பதிவர்களை வீழ்த்தி விட்டு அல்லவா பயணிக்கிறார்கள்

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

இந்தியாஆஆஆஆஆஅ, இலங்கைஐஐஐஐஐஐஐஐ, சிங்கப்பூர்:) மலேசியா:), ஜப்பான், அமேஏஏஏஏஏஏஏஏஏஎரிக்கா.... சூடான், அவுஸ்திரேலியாஆஆஆஆஆ, பிரான்ஸ்சு, ஜேர்மனி, நியூசிலாந்து, இங்கிலாந்து:)... அஃப்ரிக்கா.... இங்கின எல்லாம் இருந்து தேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏடித் தேடி வந்து என் பதிவு படிக்கினம்.....:))) இப்பூடிப்பட்ட என்னப்போய் இன்னும் பிரபல்யமாகாமல் இருக்கிறேன் எனச் சொன்னால் சும்மா விட்டிடுவனோ? என்ர கை என்ன புளியங்காய் ஆயப்போயிடுமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... பிளீஸ் பிடிச்சு வாங்கோ நிரூபனை... புண்ணியம் கிடைக்கும் உங்களுக்கு.. நான் இண்டைக்கு எங்கயும் போகப்போவதில்லை, இதுக்கொரு முடிவு கட்டாமல்:))))
//

அக்கா நல்ல விசயங்கள் எழுதும் போது டெய்லி ஒரு ஆயிரம் பேர் வருவாங்களா?
ஆனால் என்னை மாதிரி குப்பை பசங்களுக்கு நாலாயிரம் பேர் சில பதிவுகளுக்கு டெய்லி வாறாங்கோ! இந்த அங்கீகாரம் உங்களைப் போன்றோருக்கும் கிடைக்கனும்! அதற்கு ஒரு சூப்பர் திட்டம் வைச்சிருக்கிறேன். அதனை நாளை அறிவிக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

இன்னுமொரு அன்பான தாழ்மையான பண்பான பணிவான வேண்டுகோள்... ஒருக்கால் ஐடியா மணி அவர்களையும் “அழைத்து” வாறீங்களோ?:)) பயப்பூடாதீங்க ஒண்ணும் பண்ண மாட்டோம்:)) பெண்கள் எல்லோரும் சேர்ந்து அவருக்கு “அவார்ட்டு”க்கொடுக்கப்போகிறோம்...:).

இப்பதிவில் அவரின் ஆரம்பப் பின்னூட்டங்களைப் படித்ததால் வந்த எஃபெக்ட்டூஊஊ:))).
//

நீங்கள் எள் என்றால்,
அவர் எண்ணெயாக வந்திருப்பாரே! ஏன்னா அக்காவில் அவர் ரொம்ப பாசம் என்று அறிந்தேன்!
அவ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

உஸ்ஸ்ஸ் அது என்னமோ தெரியேல்லை, என் தலை தெரிஞ்சாலே எல்லோரும் ஒளிச்சிடுகினம்:))))... கிக்கிக்க்கீஈஈஈஈஈஇ அப்படி எனக்குள் ஒரு எண்ணம்:)).. சரி அது போகடும், அதனால எப்பவும் தனியே பேசிட்டுப் போகும் நிலைமைக்கு ஆளாகிடுறேன்...
//

நான் ஒன்னும் ஓடலைங்கோ! சாப்பிட்டு இப்போ தான் ஒன்லைனுக்கு வந்தேன்!

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

உஸ்ஸ்ஸ் அது என்னமோ தெரியேல்லை, என் தலை தெரிஞ்சாலே எல்லோரும் ஒளிச்சிடுகினம்:))))... கிக்கிக்க்கீஈஈஈஈஈஇ அப்படி எனக்குள் ஒரு எண்ணம்:)).. சரி அது போகடும், அதனால எப்பவும் தனியே பேசிட்டுப் போகும் நிலைமைக்கு ஆளாகிடுறேன்...
//

நான் ஒன்னும் ஓடலைங்கோ! சாப்பிட்டு இப்போ தான் ஒன்லைனுக்கு வந்தேன்!

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

ஏன் நிரூபன் பெண்பதிவர்கள் புளொக் வைத்திருக்கிறோம், என்னைப்பொறுத்து, மனதில் தோன்றுவதை எழுதிவிடுகிறேன், அடுத்தவருக்குப் பயந்து இதுவரை எதையும் எழுதாமல் விட்டதில்லை, ஆனா அடுத்தவர் மனம் நொந்திடக்கூடாதென்பதில்தான் மிகவும் கவனமாக இருப்பேன்... மனமறிந்து தவறு செய்வதில்லை.
//

அடுத்தவர் மனங் கோணாமல் எவ்வளவு நல்ல விடயங்களை எழுதுறீங்க.
ஆனால் கண்டு கொள்வோர் குறைவே!

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

எனக்கு பிரபல்யமாகப் பயம்:)) அதனால்தான்... எங்கேயும் பெரிதாகப் போவதில்லை, திரட்டிகளில் இணைவதில்லை.
//

என்ன பிரபலமானால் ப்ராப்ளம் வரும் என்று பயமா?

வலையுலகில் வம்பிழுவோர் ஐடியா மணி, நிரூபன் ஆகியோர் உங்க பக்கம் சேட்டை விடமாட்டாங்க என்று சத்தியம் செஞ்சுட்டாங்களே! அப்புறம் எப்பூடி ப்ராப்ளம் வரும்!

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

அடுத்து சினிமா, அரசியல் இப்படியெல்லாம் எழுதுவதில்லை பெண்கள் எனவும் படித்தேன்... அப்படியெல்லாம் இல்லை, ஆருக்கு எதில் ஆர்வமோ அதை எழுதுகிறோம் அவ்வளவுதான்.
//

ஏன் அரசியல் என்றால் பெண்கள் ஆர்வம் கொள்ளக் கூடாதா?
பீப் பீசி BBC ரேடியோ நம்பர் 04 இல் Comedy show செய்பவர் ஒரு பெண்.
BBC சானலில் அரசியல் விவாதம் செய்பவர் ஓர் பெண்,
Talking Movies என்று I tunes Pod cast இல் நிகழ்ச்சி செய்வதும் ஓர் பெண்.

ஆஸ்திரேலியப் பிரதமர், பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சர் எனப் பல இடங்களில் பெண்கள் அரசியல், சினிமா என இருக்கும் போது நீங்கள் மட்டும் ஏன் ஒதுங்கி இருக்கனும்?

விஷாலி மனோகரன், கௌதமி எனப் பலர் தமிழ்த் தொலைக்காட்சிகளில் வெளுத்துக் கட்டுகிறார்களே!
ஆனால் வலையுலகில் நீங்கள் மட்டும் இன்னவை தான் எழுதனும் என்று தீர்மானிக்கனுமா?

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

//அக்கா இம்புட்டும் இருந்தா போதுமா?
பலரும் உங்க படைப்புக்களை அறியனும் அல்லவா? குறிப்பிட்ட ஒரு சிலர் தானே உங்கள் படைப்புக்களைப் படிக்கிறாங்க
நீங்க ரெண்டு வருசமா எழுதுறீங்கோ.
ஆனால் 96 பேர் தானே பின் தொடருறாங்கோ! ஆனால் ஒரு வருசமா எழுதுவோர் திரட்டிகளின் உதவியினால் பல பெண் பதிவர்களை வீழ்த்தி விட்டு அல்லவா பயணிக்கிறார்கள்//

நான் பதிவெழுதத் தொடங்கி 3 வருஷம் முடியுது நிரூபன், இந்த பெப்ரவரி 17 உடன்:)).

ஃபலோயர்ஸ் எத்தனை பேர் இருப்பினும் எல்லோரும் படிக்கிறார்களா என்ன? நான்கூட நிறைய இடத்தில் ஃபலோயராக இணைந்திருக்கிறேன், ஆனா என்னிடம் வருவோருடையதை மட்டும்தான் படிக்கிறேன், நேரமும் அதுக்குத்தான் போதுமானதாக இருக்கிறது. அதனால் ஃபலோயேர்ஸ் எண்ணிக்கையில் எதுவுமே இல்லை.

அடுத்து தாம் பிரபல்யமாகவேண்டும் என முயற்சிப்போர் பிரபல்யமாகிறார்கள், நான் அப்படி நினைப்பதில்லை.. அதனால அடக்கஒடுக்கமாக:)) இருக்கிறேன்:))).

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

... என்னைப்பொறுத்து என்னிடம் வலைப்பூ இருப்பது... எமக்கும் அடுத்தவருக்கும் மகிழ்ச்சியையும் பொழுதுபோக்கையும் பகிர்ந்துகொள்ளவே... மனதுக்கு ரிலாக்ஸ் ஆகட்டும் என்றுதான் ரீவி பார்ப்பேன்.. அதுபோலத்தான்.. வலைப்பூவும்.. இதைவிட பெரிதாக எழுத நேரம் போதுவதில்லை...
//

நீங்க பெருசா ஒன்று எழுத வேணாம்! சிறுசா எழுதுவதே போகும்! ஆனால் அந்தக் கருத்துக்கள் பல உள்ளங்களைச் சென்றடைய வேண்டும் அல்லவா?

சசிகுமார் said...
Best Blogger Tips

ரேங்க் வாங்குவதில் எல்லாம் அவர்களுக்கு நாட்டமில்லை....

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
நாமே பதிவு போட்டு, நாமே பேசிக்கொண்டிருப்பது முறையல்ல! இனி பெண்கள் பேசட்டும்//

நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்தீங்களோ?:) ஏனெனில் நாங்க வாய் திறந்தால்... பிறகு நீங்க பழனிக்குப் போய் மொட்டை போட்டாலும்(நிரூபனுக்கு எனச் சொன்னேன்:)), நாங்க வாய் மூடமாட்டோம்...:)))
//


வாயெல்லாம் மூடாம இருப்பது பத்தி கவலை இல்லை! வாருங்கள் பேசி இன்னைக்கு ஒரு முடிவிற்கு வருவோம்.

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

// நிரூபன் said...
@athira

அடுத்து சினிமா, அரசியல் இப்படியெல்லாம் எழுதுவதில்லை பெண்கள் எனவும் படித்தேன்... அப்படியெல்லாம் இல்லை, ஆருக்கு எதில் ஆர்வமோ அதை எழுதுகிறோம் அவ்வளவுதான்.
//

ஏன் அரசியல் என்றால் பெண்கள் ஆர்வம் கொள்ளக் கூடாதா?
பீப் பீசி BBC ரேடியோ நம்பர் 04 இல் Comedy show செய்பவர் ஒரு பெண்.
BBC சானலில் அரசியல் விவாதம் செய்பவர் ஓர் பெண்,
Talking Movies என்று I tunes Pod cast இல் நிகழ்ச்சி செய்வதும் ஓர் பெண்//

நிரூபன், என் கருத்து உங்களுக்குப் புரியவில்லை. நான் சொன்னது ஆராருக்கு எதில் ஆர்வம் இருக்கோ அதைத்தான் அவர்கள் காட்டுவார்கள். மற்றும்படி எழுதக்கூடாது, செய்யக்கூடாதென்று ஏதுமில்லை.

இரத்தைத்தைக் கண்டால் மயங்கி விழுவோர் டாக்டருக்குப் படிக்க விரும்பமாட்டினம்...

சமையலில் ஆர்வம் இல்லாதோர் கிச்சினுக்குள் கால் வைக்க மாட்டினம், தையலில் ஆர்வம் இல்லாதோர் அதுபற்றிப் பேசமாட்டினம்... அப்படித்தான்... ஆராருக்கு எதில் ஆர்வம் இருக்கோ அவர்கள் அதை வெளிப்படுத்துவார்கள்...

சும்மா இருப்போரை அரசியல் எழுது என்றால்.. ஓடிப்போய் எங்காவது கொப்பி பண்ணி வந்து எழுதத்தான் முடியும், அதில் படிப்போருக்கு எந்த வித சுவையும் இருக்கப்போவதில்லை..

எமக்குப் பிடித்ததை எம் நடையிலேயே எழுதும்போதுதான் அது அடுத்தோருக்கு சுவாரஸ்யமாகின்றது... இப்போ புரிகிறதோ.

தனிமரம் said...
Best Blogger Tips

எனக்கும் இது புரியாத புதிர் ஹேமாவுடன் இன்னொரு தோழி ரதி அதிகமாக காரசாரமான விடயங்களை எழுதும் ஒரு பதிவாளினி ஆனால் அவரின் வலையைப்பற்றி எத்தனை உள்ளங்களுக்கு தெரியும் ?? இன்னொரு என் மதிப்புக்குரிய இராஜாராஜேஸ்வரி அம்மாவின் வலைப்பதிவு இப்படியும் எழுத முடியும் என்று நிரூபிக்கும் இவர்களை ஊக்கிவிக்க முடியாத இந்த ஹீட்சு மேனியா பிடித்தவர்களுடன் என்ன சொல்வது. சாகாம்பரி மற்றும் சசிகலா கவிதையில் ஒரு இனிய உணர்வை கொடுக்கும் தோழிகள் மொய்க்கு மொய் என்பதும் இவர்களை போய்ச் சேரமுடியாத தடைக்கல்லாக இருக்கின்றது. அதே போல இன்று பதிவுலகில் தன் செயல்களைக் குறைத்துக் கொண்ட சந்திரவதனா (மனஓசை)வலைகூட எத்தனை பேர்களுக்கு தெரியும் இன்னொரு பிரச்சனை குழுவாக இருப்பார்கள் அங்கே தன் தானைத் தலைவன் போடும் மொக்கையைக் கூட சூப்பர் என்று ஓட்டு போடுவோர் மற்றவர்கள் எப்படி எழுதுகின்றார் என்று எட்டியும் பார்க்காத பதிவுலக அரசியலில் பாதிக்கப்படுவது பலர் சகோ! மனவேதனைகளையும் ,பிடித்த பாடல் எழுதும், சித்தாரா மகேஸ் எத்தனை பேருக்குத் தெரியும் ? இன்னொரு பிரச்சனை இருக்கு நம்மவர் (ஈழத்தவர் இடையே ) பிரதேசவாத்தத்தின் பின் புலத்தில் பெண்பதிவாளர்களை ஒதுக்கும் செயல் இதையும் கவனிக்கனும் இன்னும் பல பேசலாம் சகோ வேலை நேரத்தில் பதில் அதிகம் போடமுடியாது! 

தனிமரம் said...
Best Blogger Tips

பாஸ் கடற்கரைக்குப் போறீங்களா எனக்கும் சேர்த்து காற்றுவாங்குக ஹீ (நோ டென்சன்) வரும் போது காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் என்று கவிதையுடன் வாருங்கள் நாளை வாரன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Mahan.Thamesh

மச்சி நல்ல தலைப்பினை அலசி இருகிறீர்கள் . சில பெண் பதிவர்களின் பதிவுகள் திரட்டிகளில் இணைக்க படுவதில்லை இதனால் வாசகர்கள் அறிந்துகொள்ள முடிவதில்லை . எனக்கு நீ சொன்ன பெண் பதிவர்களில் ஹேமா அக்காவை மட்டுமே தெரியும் . அவருடைய பதிவுகளை தொடர்தும் படித்து வருகிறேன் . இப்போது தான் உறைத்திருக்கிறது இத்தனை பெண் பதிவர்களை அறியாமல் விட்டிருக்கிறோம் என்று . இனி வரும் நாட்களில் நீங்கள் அறிமுகம் செய்த பதிவர்களின் தளத்தினை படிக்கிறேன் .
//


நல்ல கருத்துக்கள் நண்பா,
திரட்டிகளில் இணைக்காத பெண் பதிவர்களின் தளங்களை நான் இனங் கண்டு வைத்திருக்கிறேன்.
பின்னூட்டம் எழுதுகிறேன். நேரம் உள்ள போது படிக்கிறேன்.
ஆனால் திரட்டிகளில் இணைத்தால் தமக்கும் மொய் கிடைக்கும் என்பதால் தான் பல பதிவர்கள் திரட்டிகளில் இணைக்காத பெண் பதிவர்களின் பதிவுகளை நாடிச் செல்வதில்லை!

தனிமரம் said...
Best Blogger Tips

விவாதிக்கும் போது கொஞ்சம் நகைச்சுவை தேவையாம் சாலமன் பாப்பையா சொன்னது அதுதான் பாடல் கேட்டேன் ஹீ(கடுப்பாகதீங்க உறவுகளே)

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

நான் பதிவெழுதத் தொடங்கி 3 வருஷம் முடியுது நிரூபன், இந்த பெப்ரவரி 17 உடன்:)).

ஃபலோயர்ஸ் எத்தனை பேர் இருப்பினும் எல்லோரும் படிக்கிறார்களா என்ன? நான்கூட நிறைய இடத்தில் ஃபலோயராக இணைந்திருக்கிறேன், ஆனா என்னிடம் வருவோருடையதை மட்டும்தான் படிக்கிறேன், நேரமும் அதுக்குத்தான் போதுமானதாக இருக்கிறது. அதனால் ஃபலோயேர்ஸ் எண்ணிக்கையில் எதுவுமே இல்லை.

அடுத்து தாம் பிரபல்யமாகவேண்டும் என முயற்சிப்போர் பிரபல்யமாகிறார்கள், நான் அப்படி நினைப்பதில்லை.. அதனால அடக்கஒடுக்கமாக:)) இருக்கிறேன்:))).
//

அக்கா பாலோ பண்ணும் எல்லோரும் கமெண்ட் போடுகிறார்கள் என்று அல்ல,
ஆனால் பாலோ செய்வோர் நல்ல படைப்புக்கள் கிடைக்கையில் படிக்கிறார்கள். கமெண்ட் போட டைம் இல்லாது எஸ் ஆகின்றார்கள்.

அக்கா பிரபல்யமாகுவது வேறு! எழுத்துக்களிற்கு அங்கீகாரம் கிடைப்பது வேறு! ஆண்களின் ஹிட் வெறிக்கு முன்னே பெண்களின் எழுத்துக்களிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது உண்மை தானே?

நிரூபன் said...
Best Blogger Tips

@சசிகுமார்

ரேங்க் வாங்குவதில் எல்லாம் அவர்களுக்கு நாட்டமில்லை....
//

மச்சி! ரேங் வாங்குவதில் நாட்டமில்லை என்பது ஓக்கே!
விடகனில் அவள் விகடன் இருக்கு
மங்கையர் மலர் இருக்கு!
பெண் என்று சஞ்சிகை இருக்கு!
ஆனால் வலையுலகில் ஆண் பதிவர்களை நாம் அடையாளம் கண்டு பாராட்டுவதில்லையே?

இதனால் சகோதரிகளின் படைப்புக்கள் ஓர் குறுகிய எல்லைக்குள் தானே இருக்கிறது.

Yoga.S. said...
Best Blogger Tips

நிரூபன் said... Best Blogger Tips [Reply To This Comment]

@Yoga.S.FR
பன்னாட,சுண்டல் விக்க மெரினாக்குப் போறேன்னு சொல்லு,காத்துவாங்கப் போறாராமில்ல?????ஹி!ஹி!ஹி!!!!!!!!//

எனக்குச் சுண்டல் விக்கப் போயெல்லாம் பழக்கம் இல்லை! ஆனால் கடலை போடப் போயிப் பழக்கம்!///அடடே!இப்ப கடக்கரை மணலில கடலை சாகுபடி செய்யுறியளோ?வெரி குட்!(சும்மா பம்பலுக்கு எழுதினா,மூக்குக்கு மேல கோவம் வருகுது,ஹ!ஹ!ஹா!!!!!)

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

athira said...
இதில் அடுத்தவரைக் குறை கூறுவது தப்பு நிரூபன்.

நாம் நினைத்தால்மட்டுமே நாம் முன்னுக்கு வரமுடியும், அடுத்தவர் வந்து எம்மை தூக்கிக்கொண்டுபோய் முன்னுக்கு விடவேண்டும் என எதிர்பார்ப்பது தப்பு.

அதாவது என்னிடம் ஒருவர் வந்து பின்னூட்டம் போட்டால், பதிலுக்கு நானும் அவரிடம் போய்ப் பின்னூட்டம் போடவேண்டும், போட்டால்தானே அது மனச்சாட்சிப்படி சரியானது... அப்போ அவர்கள் வந்தால் நாமும் போகவேண்டும்...அதை எல்லோரும் செய்கிறார்களோ? இல்லைத்தானே... அப்போ அதை எல்லாம் ஒழுங்காகச் செய்தால் முன்னுக்கு வர முடியும்.

ஆனா முன்னுக்கு வந்து என்ன பண்ணப்போகிறோம்?

நாம் என்ன புத்தகமா எழுதுகிறோம்.... சில எம் நினைவுகள், கைவேலைகள் இப்படியான சிறு சிறு கதைகளைக் கதைக்கிறோம்.... இவைஎல்லாம் ... அனைவரையும் போய்ச் சேரவேண்டும் என ஏன் எண்ண வேண்டும்? அப்படி என் எழுத்தில் என்னதான் இருக்கிறது? இப்படித்தான் நான் நினைட்துப் பின்வாங்கிடுவேன்.. நான் ரொம்ப ஷை ஆக்கும்..க்கும்..க்கும்..:)..

சிறு தவறி இருந்துது அதுதான் திருத்தி மீண்டும் இணைத்தேன்..

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

நிரூபன், என் கருத்து உங்களுக்குப் புரியவில்லை. நான் சொன்னது ஆராருக்கு எதில் ஆர்வம் இருக்கோ அதைத்தான் அவர்கள் காட்டுவார்கள். மற்றும்படி எழுதக்கூடாது, செய்யக்கூடாதென்று ஏதுமில்லை.
//

அக்கா, உங்கள் கருத்துப் புரிகிறது
ஆனால் பெண்களில் அதிகளவானோர் தமக்குப் பிடித்த திரைப்படம்,
பாடல்கள், அரசியல் பற்றியெல்லாம் அலசுவதில்லையே

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

பன்னாட,சுண்டல் விக்க மெரினாக்குப் போறேன்னு சொல்லு,காத்துவாங்கப் போறாராமில்ல?????ஹி!ஹி!ஹி!!!!!!!!//

எனக்குச் சுண்டல் விக்கப் போயெல்லாம் பழக்கம் இல்லை! ஆனால் கடலை போடப் போயிப் பழக்கம்!///அடடே!இப்ப கடக்கரை மணலில கடலை சாகுபடி செய்யுறியளோ?வெரி குட்!(சும்மா பம்பலுக்கு எழுதினா,மூக்குக்கு மேல கோவம் வருகுது,ஹ!ஹ!ஹா!!!!!)
//

இங்க பார்றா
எனக்கு கோபமே வரவில்லை!
பீச்சுக்கு கடலை போடப் போறதென்றால் ஐயா புரியாம இருக்காரே! சைட் அடிக்கப் போனேன் என்று சொல்ல வந்தேன் ஐயா!
அவ்வ்

நீங்க பயங்கர ரியூப் லைட்டு

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

சும்மா இருப்போரை அரசியல் எழுது என்றால்.. ஓடிப்போய் எங்காவது கொப்பி பண்ணி வந்து எழுதத்தான் முடியும், அதில் படிப்போருக்கு எந்த வித சுவையும் இருக்கப்போவதில்லை..

எமக்குப் பிடித்ததை எம் நடையிலேயே எழுதும்போதுதான் அது அடுத்தோருக்கு சுவாரஸ்யமாகின்றது... இப்போ புரிகிறதோ.
//

அக்கா உங்களுக்குப் பிடித்த விடயங்களைக் கூட குறிப்பிட்ட எண்ணிக்கையானோர் தானே படிக்கிறாங்க!
ஆனால் ஒரு ஆணின் படைப்பிற்கு சும்மா ஒரு கூட்டமே பாய்தடித்துக் கொண்டு போய் படிக்கும் அளவிற்கு பெண்ணின் படைப்புக்கள் கண்டு கொள்ளப்படுவதில்லை தானே

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

கொஞ்சம் பொறுங்கோ நிரூபன்.. ஏதோ.. டமால் என்றொரு சத்தம் கேட்டது... ஆரீ கடலுக்குள் குதிச்சிட்டினம்போல:))

எதுக்கும் ஒரு தடவை செக் பண்ணுங்கோ ஐடியா மணி அவர்கள் இருக்கிறார்களோ என:)).. ஏனெனில் அவர் ரொம்ப ரோஷக்காரர் என:) அறிந்தேன்.. சொன்னதைச் செய்திடுவார்:), குதிச்சாலும் குதித்திடுவார்:)).. எனக்குக் கையும் ஓடல்ல காலும் ஓடல்ல:))... என்னால ஒரு அருமந்த ஜீவன்:)) கடலுக்கு இரை ஆவதோ? அவ்வ்வ்வ்:))).

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்
மொய்க்கு மொய் என்பதும் இவர்களை போய்ச் சேரமுடியாத தடைக்கல்லாக இருக்கின்றது.//

உண்மை தான் நேசரே! பெண் பதிவர்களில் பலரின் பதிவுகளுக்கு ஓட்டுப் பட்டை இருக்குமானால் கூட்டம் பொங்கி வழியும் என்பது உண்மையே!

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

இல்லை நிரூபன், பெண்களோடு வலியப் போய்ப் பேசுவதற்கு நிறைய ஆண்கள் தயங்குகிறார்கள் அதுவும் ஒரு காரணம்.

ஏனெனில் பெண்கள் எல்லோருமே ஒரே மாதிரி ஆனவர்கள் அல்ல. பலருக்கு அதிகப்படியான நகைச்சுவைப் பின்னூட்டங்கள் பிடிப்பதில்லை.

நல்லாயிருக்கு, சூப்பர்... இப்படியான பின்னூட்டத்தை மட்டுமே விரும்புகிறார்கள், நான்கூட அதிகம் பின்னூட்டம் இன்னொரு பெண்ணுக்குப் போடும்போது அதை வரவேற்காமல்... வரவுக்கு நன்றி என ஒரு வரியில் சொல்வோரும் உண்டு.. அப்போ எனக்கே பயம் வரும் நான் அதிகம் எழுதுவது பிடிக்கவில்லையாக்கும் என, அதனால் நான் பின்வாங்கிவிடுவேன்.

ஆனால் பெரும்பாலும் ஆண்கள் நகைச்சுவையாகத்தான் அதிகம் கதைப்பார்கள், அதனால் அவர்களால் ஆண்களோடு முண்டியடித்து அதிகம் பழக முடிகிறது, பெண்களோடு பழக பயமாக இருக்கிறது. இதுவும் காரணமாக இருக்கலாம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்
இன்னொரு பிரச்சனை இருக்கு நம்மவர் (ஈழத்தவர் இடையே ) பிரதேசவாத்தத்தின் பின் புலத்தில் பெண்பதிவாளர்களை ஒதுக்கும் செயல் இதையும் கவனிக்கனும் இன்னும் பல பேசலாம் சகோ வேலை நேரத்தில் பதில் அதிகம் போடமுடியாது! //

அதனை ஓர் பிரபல பதிவர் பதிவுலகினுள் வலிந்து திணிக்க முயற்சி செய்து
ஓர் பெண்ணைப் பேட்டியெடுத்து தன் பதிவில் எழுதியதும்
நாம் கூட்டாகச் சேர்ந்து கண்டிக்கும் போது
நாம் தான் பிரிவினையை தூண்டுவதாக எம் மீது திசை திருப்பியதும் நீங்கள் அறியவில்லையா நண்பா?

Yoga.S. said...
Best Blogger Tips

நிரூபன் said... Best Blogger Tips [Reply To This Comment]

@Yoga.S.FR

பன்னாட,சுண்டல் விக்க மெரினாக்குப் போறேன்னு சொல்லு,காத்துவாங்கப் போறாராமில்ல?????ஹி!ஹி!ஹி!!!!!!!!//

எனக்குச் சுண்டல் விக்கப் போயெல்லாம் பழக்கம் இல்லை! ஆனால் கடலை போடப் போயிப் பழக்கம்!///அடடே!இப்ப கடக்கரை மணலில கடலை சாகுபடி செய்யுறியளோ?வெரி குட்!(சும்மா பம்பலுக்கு எழுதினா,மூக்குக்கு மேல கோவம் வருகுது,ஹ!ஹ!ஹா!!!!!)
//

இங்க பார்றா
எனக்கு கோபமே வரவில்லை!
பீச்சுக்கு கடலை போடப் போறதென்றால் ஐயா புரியாம இருக்காரே! சைட் அடிக்கப் போனேன் என்று சொல்ல வந்தேன் ஐயா!
அவ்வ்

நீங்க பயங்கர ரியூப் லைட்டு.§§§§உங்களுக்கும் தெரிஞ்சிட்டுது!அதிராப் பொம்பிளை வேற தூள் கிளப்புறா!!!!!!

Yoga.S. said...
Best Blogger Tips

நிரூபன் said...பீச்சுக்கு கடலை போடப் போறதென்றால் ஐயா புரியாம இருக்காரே! சைட் அடிக்கப் போனேன் என்று சொல்ல வந்தேன் ஐயா!
அவ்வ்.....////சரி,சரி ஏதோ அடியுங்கோ!ஆனா,அடிபடாம(உங்களுக்கு) பாத்துக் கொள்ளுங்கோ!Hi!Hi!!hi!!!!!

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

OKAY.... எனக்கு நேரமாகிவிட்டுது நிரூபன்.... நான் போய் வாறன் பிறகு:))....

என்னது யோகா அண்ணன் ரியூப் லைட்டோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).. சொன்னாத்தான் தெரியுது..:))பார்த்தால் அப்பூடித் தெரியேல்லை..:)))..

மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))

அம்பலத்தார் said...
Best Blogger Tips

இதுக்குபோய் பின்னூட்டம் இடாமல் ஒதிங்கியிருக்கிறதும் மைனஸ் குத்துறதும் செய்யிறவங்க தங்க கருத்தைக்கூட சொல்லப்பயந்த வெறும் கோழைங்க. அவங்களுக்கெல்லாம் என்ரை சார்பில் ஒவ்வொரு துண்டுதுணி அனுப்பி வைக்கிறன் தலையில் போட்டுக்கட்டும்.
அம்மாடி ஹேமா, ஆதிரா, ஜோசபின் பாபா உங்களுக்கெல்லாம் வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்க பாணியில அசத்துங்கோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்
பாஸ் கடற்கரைக்குப் போறீங்களா எனக்கும் சேர்த்து காற்றுவாங்குக ஹீ (நோ டென்சன்) வரும் போது காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் என்று கவிதையுடன் வாருங்கள் நாளை வாரன்.//

பாஸ்...கவிதை வாங்கிறேன் என்று காதலி வாங்கி வருவதை சொல்லவில்லை தானே!
அவ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்

விவாதிக்கும் போது கொஞ்சம் நகைச்சுவை தேவையாம் சாலமன் பாப்பையா சொன்னது அதுதான் பாடல் கேட்டேன் ஹீ(கடுப்பாகதீங்க உறவுகளே)
//

கொஞ்சம் டைம் கொடுத்தால் பேக் ரவுண்ட் மியூசிக்கும் போட்டு ஒரு இசைக் கச்சேரியே வைப்பீங்க போல இருக்கே.

K said...
Best Blogger Tips

கொஞ்சம் பொறுங்கோ நிரூபன்.. ஏதோ.. டமால் என்றொரு சத்தம் கேட்டது... ஆரீ கடலுக்குள் குதிச்சிட்டினம்போல:))

எதுக்கும் ஒரு தடவை செக் பண்ணுங்கோ ஐடியா மணி அவர்கள் இருக்கிறார்களோ என:)).. ஏனெனில் அவர் ரொம்ப ரோஷக்காரர் என:) அறிந்தேன்.. சொன்னதைச் செய்திடுவார்:), குதிச்சாலும் குதித்திடுவார்:)).. எனக்குக் கையும் ஓடல்ல காலும் ஓடல்ல:))... என்னால ஒரு அருமந்த ஜீவன்:)) கடலுக்கு இரை ஆவதோ? அவ்வ்வ்வ்:))).:///////

ஹா ஹா ஹா ஹா நான் சென் நதிக்குள்ள குதிக்கத்தான் போனேன்! கிட்டப் போய் எட்டிப் பார்த்தேன்! முதல்ல என்னோட லப் டப்ப தூக்கி எறிஞ்சிட்டு, கடைசியா நான் குதிப்பம் எண்டு பார்த்தேன்!

சரி போறதுதான் போகம் போறம் கடைசியா, ஒரு ப்ளாக் படிச்சிட்டுப் போவம் எண்டு, ஒரு ப்ளாக்குக்குப் போனேன்! அங்க ஒரு அழகான பூனைக்குட்டி இருந்திச்சு! மௌசக் கண்டா பூனை கடிக்கும் எண்டு அறிவித்தல் வேற இருந்திச்சு!

இப்ப அங்கதான் நிண்டு, பூஸாரோட விளையாடிக்கொண்டு நிக்கிறன்! என்னோட ஒஃப்ஃபிசில வேலை செய்யிற ஆக்களுக்கும் அந்தப் பூஸாரைக் காட்டினேன்!

ஹி ஹி ஹி ஹி ஹி தற்கொலை பண்ற ஐடியாவோட ஐடியாவ, அந்த அஞ்சறிவு ஜீவன் தடுத்துப் போட்டுது! :-)

முதல் முறையாப் போயிருக்கிறன்! ஏதும் பலகாரங்கள், டீ , பிளேண்டி தருவுனம் எண்டு நினைக்கிறன்! தந்தா கொண்டு வந்து தாறன் நிரூ!:-)

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

நாம் நினைத்தால்மட்டுமே நாம் முன்னுக்கு வரமுடியும், அடுத்தவர் வந்து எம்மை தூக்கிக்கொண்டுபோய் முன்னுக்கு விடவேண்டும் என எதிர்பார்ப்பது தப்பு.
//

அக்கா, முன்னுக்கு கொண்டு வருவதற்கு அடுத்தவர் வரனும் என்றில்லை!

ஆனால் பெண் பதிவர்களின் பதிவுகளை இலகுவில் இனங் காண்பதற்கு ஓர் திட்டம் வைத்திருக்கிறேன்!
பதிவில் இறுதியில் சொல்லியிருக்கிறேன்,
அந்த வழியின் மூலம் பெண்களின் பதிவுகள் திரட்டப்பட்டால் பெண் பதிவர்களின் படைப்புக்களை விரும்புவோர் வந்து படிப்பார்கள் அல்லவா?

அம்பலத்தார் said...
Best Blogger Tips

அம்மா அதிரா மணிக்கு அவார்ட்டு கொடுக்கிறிங்க OK.
இந்த ஆமா போட்டு பிற்பாட்டுப்பாடி ஜால்ரா போடுறவங்களுக்கும் முடிஞ்சா எதாவது கொடுங்கோ அவங்களும் பாவம்..
ஹி ஹீ புரிஞ்சுதா இந்தப்பதிவுக்கு நானும் ரொம்பவாட்டி ஆமா போட்ட மீசை வச்ச சிங்கமாக்கும் அதுதான்........

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

அதாவது என்னிடம் ஒருவர் வந்து பின்னூட்டம் போட்டால், பதிலுக்கு நானும் அவரிடம் போய்ப் பின்னூட்டம் போடவேண்டும், போட்டால்தானே அது மனச்சாட்சிப்படி சரியானது... அப்போ அவர்கள் வந்தால் நாமும் போகவேண்டும்...அதை எல்லோரும் செய்கிறார்களோ? இல்லைத்தானே... அப்போ அதை எல்லாம் ஒழுங்காகச் செய்தால் முன்னுக்கு வர முடியும்.
//

அக்கா அப்படிச் செய்யாமல் முன்னுக்கு வர முடியும் என்பதற்கு நம்ம ஐடியா மணி உதாரணம்!

ஹே..ஹே.
ஐடியா மணி பலரின் வலை படிப்பான். ஆனால் சிலருக்குத் தான் கமெண்டுவான்,.
அவனைப் பார்த்தாச்சும் இந்த டெக்னிக்குகளைச் தெரிஞ்சு கொள்ளுங்க!
மொய்க்கு மொய் போன்று, நீங்க கமெண்ட் போட்டால், நான் கமெண்ட் போடுவேன் என்று சொல்வோரிடம் நான் செம அனுபவம் பட்டிருக்கேன்! அந்த அனுபவத்தால் நொந்துமிருக்கேன்!

பதிவினைப் படிக்காது 15வது கமெண்டை தூக்கி 38வது கமெண்டா தமது கமெண்ட் என்று தாமும் கமெண்ட் போட்டிருக்கோம் என காட்ட சிலர் கமெண்டும் போட்டிருக்கீனம் என்னோட ப்ழைய பதிவுகளில்! ஆகவே இதுவும் கடந்து போகும் என நினைத்து விட்டு, எம் தோழிகளின் எழுத்துக்களுக்கும் சம உரிமை கிடைக்க ஆவன செய்வோம்!

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

அதாவது என்னிடம் ஒருவர் வந்து பின்னூட்டம் போட்டால், பதிலுக்கு நானும் அவரிடம் போய்ப் பின்னூட்டம் போடவேண்டும், போட்டால்தானே அது மனச்சாட்சிப்படி சரியானது... அப்போ அவர்கள் வந்தால் நாமும் போகவேண்டும்...அதை எல்லோரும் செய்கிறார்களோ? இல்லைத்தானே... அப்போ அதை எல்லாம் ஒழுங்காகச் செய்தால் முன்னுக்கு வர முடியும்.
//

அக்கா அப்படிச் செய்யாமல் முன்னுக்கு வர முடியும் என்பதற்கு நம்ம ஐடியா மணி உதாரணம்!

ஹே..ஹே.
ஐடியா மணி பலரின் வலை படிப்பான். ஆனால் சிலருக்குத் தான் கமெண்டுவான்,.
அவனைப் பார்த்தாச்சும் இந்த டெக்னிக்குகளைச் தெரிஞ்சு கொள்ளுங்க!
மொய்க்கு மொய் போன்று, நீங்க கமெண்ட் போட்டால், நான் கமெண்ட் போடுவேன் என்று சொல்வோரிடம் நான் செம அனுபவம் பட்டிருக்கேன்! அந்த அனுபவத்தால் நொந்துமிருக்கேன்!

பதிவினைப் படிக்காது 15வது கமெண்டை தூக்கி 38வது கமெண்டா தமது கமெண்ட் என்று தாமும் கமெண்ட் போட்டிருக்கோம் என காட்ட சிலர் கமெண்டும் போட்டிருக்கீனம் என்னோட ப்ழைய பதிவுகளில்! ஆகவே இதுவும் கடந்து போகும் என நினைத்து விட்டு, எம் தோழிகளின் எழுத்துக்களுக்கும் சம உரிமை கிடைக்க ஆவன செய்வோம்!

தனிமரம் said...
Best Blogger Tips

@தனிமரம்
பாஸ் கடற்கரைக்குப் போறீங்களா எனக்கும் சேர்த்து காற்றுவாங்குக ஹீ (நோ டென்சன்) வரும் போது காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் என்று கவிதையுடன் வாருங்கள் நாளை வாரன்.//

பாஸ்...கவிதை வாங்கிறேன் என்று காதலி வாங்கி வருவதை சொல்லவில்லை தானே!
அவ்வ்வ்
// காதலி வாங்கி வரும் வயது நிரூபன் ஐயாவுக்கு இல்லை என்பதைத் தெரியாத அளவுக்கு என்ன கோழிமேய்க்கும் ஆளா??(கோழி ) அடுப்பில் வேகுது பிறகு வாரன் பால் கோப்பி குடிக்கும் நேரத்தில்.ஹீ ஹீ

அம்பலத்தார் said...
Best Blogger Tips

என்ரை வலைப்பூவிலை பதிவு எழுதுகிற பொண்ணுங்களுக்கு நிரந்தரமாகவே ஒரு தனி இடம் ஒதுக்கியிருக்கிறேன்.
ஆனால் அதுக்குப்பின்னாடியும் ஒரு ரகசியம் இருக்கு. ஒருத்தருக்கும் சொல்லிப்போடாதையுங்கோ. அப்படி செய்ய வேணும் என்றது என்ரை செல்லம்மாவின்ரை கட்டளை. மீறினால் பிறகு கஞ்சித்தண்ணிகூட விட்டிலை கிடைக்காது.

நிரூபன் said...
Best Blogger Tips

@athira
ஆனா முன்னுக்கு வந்து என்ன பண்ணப்போகிறோம்?

நாம் என்ன புத்தகமா எழுதுகிறோம்.... சில எம் நினைவுகள், கைவேலைகள் இப்படியான சிறு சிறு கதைகளைக் கதைக்கிறோம்.... இவைஎல்லாம் ... அனைவரையும் போய்ச் சேரவேண்டும் என ஏன் எண்ண வேண்டும்? அப்படி என் எழுத்தில் என்னதான் இருக்கிறது? இப்படித்தான் நான் நினைட்துப் பின்வாங்கிடுவேன்.. நான் ரொம்ப ஷை ஆக்கும்..க்கும்..க்கும்..:)..

சிறு தவறி இருந்துது அதுதான் திருத்தி மீண்டும் இணைத்தேன்..//

இப்படிப் பின் வாங்குவதும் ஓக்கே!
ஆனால் நம்மிடையே இருக்கும் சமூகத்திற்குப் பயனுள்ள பதிவுகள் பலரையும் சென்றடைய வேண்டும் என நாம் நினைப்பதில் என்ன பிழை?

இதனையும் கொஞ்சம் மறு பரிசீலனை செய்யலாமே?

சசிகலா said...
Best Blogger Tips

ஆண் , பெண் என பிரித்து பார்த்தல் வேண்டாம் என்பதே என கருத்து . ஒரு பதிவு உருவாக இருபாலரும் நன்கு யோசித்து இதற்க்கு நமக்கு வரவேற்பு கிடைக்குமா என்று தான் பதிவிடுகிறோம் .
இதில் ஆண் என்ன பெண் என்ன சிறந்த பதிவை பாராட்டுங்கள் எவர் மனதையும் புண்படுத்தாத படி விமர்சனங்கள் இருக்க வேண்டும் . நிறை , குறை பற்றி தோழமையுடன் சொல்லிப் போகலாமே .
ஆணும் , பெண்ணும் சமம் என்பது பேச்சளவில் இல்லாமல் முடிந்தவரை நடைமுறைப் படுத்தவேண்டும் .

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

கொஞ்சம் பொறுங்கோ நிரூபன்.. ஏதோ.. டமால் என்றொரு சத்தம் கேட்டது... ஆரீ கடலுக்குள் குதிச்சிட்டினம்போல:))

எதுக்கும் ஒரு தடவை செக் பண்ணுங்கோ ஐடியா மணி அவர்கள் இருக்கிறார்களோ என:)).. ஏனெனில் அவர் ரொம்ப ரோஷக்காரர் என:) அறிந்தேன்.. சொன்னதைச் செய்திடுவார்:), குதிச்சாலும் குதித்திடுவார்:)).. எனக்குக் கையும் ஓடல்ல காலும் ஓடல்ல:))... என்னால ஒரு அருமந்த ஜீவன்:)) கடலுக்கு இரை ஆவதோ? அவ்வ்வ்வ்:))).
//

இவனாச்சும் சாகிதறாச்சும்!

ஊரில தன்னைக் காதலிச்ச பொட்டை ஏமாத்தினால் கிணத்துல குதிப்பேன் என்று சொல்லிட்டு
கிணற்றுக்குள் கல்லை தூக்கிப் போட்டு விட்டு ஒளிச்சிருந்த கள்ளன் ஐடியா மணி!
நம்பாதேங்கோ! அவனாச்சும் குதிப்பதாச்சும்!

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

இல்லை நிரூபன், பெண்களோடு வலியப் போய்ப் பேசுவதற்கு நிறைய ஆண்கள் தயங்குகிறார்கள் அதுவும் ஒரு காரணம்.

ஏனெனில் பெண்கள் எல்லோருமே ஒரே மாதிரி ஆனவர்கள் அல்ல. பலருக்கு அதிகப்படியான நகைச்சுவைப் பின்னூட்டங்கள் பிடிப்பதில்லை.
//

அக்கா எல்லோருக்கும் நகைச்சுவை பிடிக்காது உண்மை தான்! ஆனால் பெண் பதிவர்களின் பதிவுகளைப் பத்தி கருத்துச் சொல்லுவதற்கு தயங்குவது நல்ல செயல் அல்ல! ஆண்கள் தம்மைத் தாமே திருத்திக்க வேண்டும்!

K said...
Best Blogger Tips

@அம்பலத்தார்

என்ரை வலைப்பூவிலை பதிவு எழுதுகிற பொண்ணுங்களுக்கு நிரந்தரமாகவே ஒரு தனி இடம் ஒதுக்கியிருக்கிறேன்.
ஆனால் அதுக்குப்பின்னாடியும் ஒரு ரகசியம் இருக்கு. ஒருத்தருக்கும் சொல்லிப்போடாதையுங்கோ. அப்படி செய்ய வேணும் என்றது என்ரை செல்லம்மாவின்ரை கட்டளை. மீறினால் பிறகு கஞ்சித்தண்ணிகூட விட்டிலை கிடைக்காது.://////

அம்பலத்தார் அண்ணரின் வாழ்வில் விடுதலை கிடைக்க எல்லாம் வல்ல பரம்பெருளை வேண்டுகிறேன்! ஹி ஹி ஹி ஹி ஹி !!!

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

ஆனால் பெரும்பாலும் ஆண்கள் நகைச்சுவையாகத்தான் அதிகம் கதைப்பார்கள், அதனால் அவர்களால் ஆண்களோடு முண்டியடித்து அதிகம் பழக முடிகிறது, பெண்களோடு பழக பயமாக இருக்கிறது. இதுவும் காரணமாக இருக்கலாம்.
//

இதுவும் உண்மை தான்! ஆனால் பெண்களின் எழுத்துக்களைப் பெண்கள் தான் விமர்சிக்க வேண்டும் எனும் அவசியம் இல்லையே! ஆண்களும் விமர்சித்து ஊக்கப்படுத்தலாமே!

K said...
Best Blogger Tips

@நிரூபன்

இவனாச்சும் சாகிதறாச்சும்!

ஊரில தன்னைக் காதலிச்ச பொட்டை ஏமாத்தினால் கிணத்துல குதிப்பேன் என்று சொல்லிட்டு
கிணற்றுக்குள் கல்லை தூக்கிப் போட்டு விட்டு ஒளிச்சிருந்த கள்ளன் ஐடியா மணி!
நம்பாதேங்கோ! அவனாச்சும் குதிப்பதாச்சும்!.//////

மச்சி ஃப்ளாஸ் பேக்கை கிண்டாதே! அதை இன்னொரு நாளைக்குப் பார்ப்போம்! இப்ப தான் கெஞ்சி கூத்தாடி நல்ல பேர் வாங்குகிறேன்/ நீ கெடுத்திடுவாய் போல் இருக்கு! :-)

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR
நீங்க பயங்கர ரியூப் லைட்டு.§§§§உங்களுக்கும் தெரிஞ்சிட்டுது!அதிராப் பொம்பிளை வேற தூள் கிளப்புறா!!!!!!//

ஐயா, சைட் கப்பில சோக்குச் சொல்லுறார்! அவ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR
அவ்வ்.....////சரி,சரி ஏதோ அடியுங்கோ!ஆனா,அடிபடாம(உங்களுக்கு) பாத்துக் கொள்ளுங்கோ!Hi!Hi!!hi!!!!!//

எனக்கு அடி விழ முன்னாடி கை இருக்கு கும்பிட,
கால் இருக்கு பின் பக்கம் பார்க்காமல் ஓட என்று சொல்லிட்டு ஓடிடுவேனில்லே

நிரூபன் said...
Best Blogger Tips

@athira
OKAY.... எனக்கு நேரமாகிவிட்டுது நிரூபன்.... நான் போய் வாறன் பிறகு:))....

என்னது யோகா அண்ணன் ரியூப் லைட்டோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).. சொன்னாத்தான் தெரியுது..:))பார்த்தால் அப்பூடித் தெரியேல்லை..:)))..

மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))//

உண்மை தான் யோகா ஐயா ரியூப்ட் லைட் இல்லை!

உங்களின் கருத்துக்களுக்கும், விவாதத்தினை மேலும் சிறப்பாக முன்னெடுக்க நீங்கள் எழுதிய பின்னூட்டங்களுக்கும் மீண்டும் நன்றி!

வாருங்கள்! இன்னும் விரிவாக பேசுவோம்.

அம்பலத்தார் said...
Best Blogger Tips

Niru said//ஆண்கள் இன்னமும் ஆணாதிக்க மன நிலையில் இருந்து மாறவில்லை என்பதற்கு பல ஆண்கள் இப் பதிவிற்குப் பின்னூட்டம் இடாது ஒதுங்கியிருப்பதன் ஊடாகவும்...//

ஹா ஹா நிரூ உங்க வார்தை ரொம்ப பீலிங்கை உண்டுபண்ணிடிச்சு. நான் மணி யோகா நம்பிக்கைபாண்டியன் எல்லாம் உங்களுக்கு ஆண்களா தெரியேல்லையோ நாங்களும் கத்தியை தூக்கிட்டு திட்டிட்டு வந்தால்தான் ஆம்பிளையென்று ஏற்றுக்கொள்ளுவியளோ? இந்த வசனத்தை சொன்னதற்கு தண்டனையாக 5 நாட்களுக்கு எந்த பொண்ணுங்க கூடவும் சாற் செய்யக்கூடாது என்று தீர்ப்புக்குறுகிறேன். அப்பாடா ஒருவழியா நிரூவை மிரட்ட ஒரு பாயிண்ட் கிடைச்சுது.

நிரூபன் said...
Best Blogger Tips

@அம்பலத்தார்
இதுக்குபோய் பின்னூட்டம் இடாமல் ஒதிங்கியிருக்கிறதும் மைனஸ் குத்துறதும் செய்யிறவங்க தங்க கருத்தைக்கூட சொல்லப்பயந்த வெறும் கோழைங்க. அவங்களுக்கெல்லாம் என்ரை சார்பில் ஒவ்வொரு துண்டுதுணி அனுப்பி வைக்கிறன் தலையில் போட்டுக்கட்டும்.
அம்மாடி ஹேமா, ஆதிரா, ஜோசபின் பாபா உங்களுக்கெல்லாம் வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்க பாணியில அசத்துங்கோ.//

ஹே...ஹே..

உண்மை தான் ஐயா,
பல பதிவர்கள் இப்படியான பதிவுகள் என்றதும் ஓடிவிடுகிறார்கள்!
அவ்

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

முதல் முறையாப் போயிருக்கிறன்! ஏதும் பலகாரங்கள், டீ , பிளேண்டி தருவுனம் எண்டு நினைக்கிறன்! தந்தா கொண்டு வந்து தாறன் நிரூ!:-)
//

ஸ்ரோபரி சீஸ் கேக் குடுக்கிறாங்களாம்.
வாங்கிட்டு வா! சாப்பிடுவம்!

நிரூபன் said...
Best Blogger Tips

@அம்பலத்தார்

அம்மா அதிரா மணிக்கு அவார்ட்டு கொடுக்கிறிங்க OK.
இந்த ஆமா போட்டு பிற்பாட்டுப்பாடி ஜால்ரா போடுறவங்களுக்கும் முடிஞ்சா எதாவது கொடுங்கோ அவங்களும் பாவம்..
ஹி ஹீ புரிஞ்சுதா இந்தப்பதிவுக்கு நானும் ரொம்பவாட்டி ஆமா போட்ட மீசை வச்ச சிங்கமாக்கும் அதுதான்........
//

ஐயா. உங்களுக்குச் செல்லம்மா விருத்து கொடுப்பாங்க என்பதால அவங்க விருது கொடுக்க மாட்டாங்களாம்!

தனிமரம் said...
Best Blogger Tips

@தனிமரம்
இன்னொரு பிரச்சனை இருக்கு நம்மவர் (ஈழத்தவர் இடையே ) பிரதேசவாத்தத்தின் பின் புலத்தில் பெண்பதிவாளர்களை ஒதுக்கும் செயல் இதையும் கவனிக்கனும் இன்னும் பல பேசலாம் சகோ வேலை நேரத்தில் பதில் அதிகம் போடமுடியாது! //

அதனை ஓர் பிரபல பதிவர் பதிவுலகினுள் வலிந்து திணிக்க முயற்சி செய்து
ஓர் பெண்ணைப் பேட்டியெடுத்து தன் பதிவில் எழுதியதும்
நாம் கூட்டாகச் சேர்ந்து கண்டிக்கும் போது
நாம் தான் பிரிவினையை தூண்டுவதாக எம் மீது திசை திருப்பியதும் நீங்கள் அறியவில்லையா நண்பா?
// பாஸ் நான் அந்த நேரத்தில் பாரிஸில் இல்லைப் @தனிமரம்
இன்னொரு பிரச்சனை இருக்கு நம்மவர் (ஈழத்தவர் இடையே ) பிரதேசவாத்தத்தின் பின் புலத்தில் பெண்பதிவாளர்களை ஒதுக்கும் செயல் இதையும் கவனிக்கனும் இன்னும் பல பேசலாம் சகோ வேலை நேரத்தில் பதில் அதிகம் போடமுடியாது! //

அதனை ஓர் பிரபல பதிவர் பதிவுலகினுள் வலிந்து திணிக்க முயற்சி செய்து
ஓர் பெண்ணைப் பேட்டியெடுத்து தன் பதிவில் எழுதியதும்
நாம் கூட்டாகச் சேர்ந்து கண்டிக்கும் போது
நாம் தான் பிரிவினையை தூண்டுவதாக எம் மீது திசை திருப்பியதும் நீங்கள் அறியவில்லையா நண்பா?
February 11, 2012 5:41 PM
 அப்படி நடந்த ஒரு சம்பவம்  நடந்த போது நான் பாரிசில் இல்லைப்போலும் எனக்குத் தெரியாது அப்படி ஒரு சம்பவம் நடந்தது அந்த லிங்க தாருங்கள் முடியும் போது பார்க்கின்றேன் பாஸ்!

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்
பாஸ்...கவிதை வாங்கிறேன் என்று காதலி வாங்கி வருவதை சொல்லவில்லை தானே!
அவ்வ்வ்
// காதலி வாங்கி வரும் வயது நிரூபன் ஐயாவுக்கு இல்லை என்பதைத் தெரியாத அளவுக்கு என்ன கோழிமேய்க்கும் ஆளா??(கோழி ) அடுப்பில் வேகுது பிறகு வாரன் பால் கோப்பி குடிக்கும் நேரத்தில்.ஹீ ஹீ..

கொய்யாலே! நக்கலைப் பாரு! நான் என்ன பச்சப் புள்ளையா?

நிரூபன் said...
Best Blogger Tips

@அம்பலத்தார்

என்ரை வலைப்பூவிலை பதிவு எழுதுகிற பொண்ணுங்களுக்கு நிரந்தரமாகவே ஒரு தனி இடம் ஒதுக்கியிருக்கிறேன்.
ஆனால் அதுக்குப்பின்னாடியும் ஒரு ரகசியம் இருக்கு. ஒருத்தருக்கும் சொல்லிப்போடாதையுங்கோ. அப்படி செய்ய வேணும் என்றது என்ரை செல்லம்மாவின்ரை கட்டளை. மீறினால் பிறகு கஞ்சித்தண்ணிகூட விட்டிலை கிடைக்காது.
//

ஆகா...இந்த விடயங்களின் பின்னாடி இப்படி ஓர் கட்டளையும் இருக்கே! உங்கட செல்லம்மா போல, ஊரில உள்ள எல்லோரின் செல்லம்மாவும் இருந்தா சந்தோசமா இருக்குமில்லே.

நிரூபன் said...
Best Blogger Tips

@sasikala
ஆண் , பெண் என பிரித்து பார்த்தல் வேண்டாம் என்பதே என கருத்து . ஒரு பதிவு உருவாக இருபாலரும் நன்கு யோசித்து இதற்க்கு நமக்கு வரவேற்பு கிடைக்குமா என்று தான் பதிவிடுகிறோம் //

அன்புள்ள சகோதரி,
மீண்டும் ஓர் தடவை பதிவினைப் படித்துப் பாருங்கள்.
பல ஆண்களின் பதிவுகள் வலையுலகில் போற்றப்படும் அளவிற்கு பெண்களின் பதிவுகள் கண்டு கொள்ளப்படவில்லையே என்று தானே எழுதியிருக்கிறேன்

இந்தக் குறையினை நிவர்த்தி செய்ய ஓர் ஆலோசனையும் முன் வைத்திருக்கிறேன். ஆனால் யாரையும் பிரித்துப் பார்த்து பேதமை கொள்ளும் நோக்கில் இப் பதிவினை எழுதவில்லை.

K said...
Best Blogger Tips

@அம்பலத்தார்

Niru said//ஆண்கள் இன்னமும் ஆணாதிக்க மன நிலையில் இருந்து மாறவில்லை என்பதற்கு பல ஆண்கள் இப் பதிவிற்குப் பின்னூட்டம் இடாது ஒதுங்கியிருப்பதன் ஊடாகவும்...//

ஹா ஹா நிரூ உங்க வார்தை ரொம்ப பீலிங்கை உண்டுபண்ணிடிச்சு. நான் மணி யோகா நம்பிக்கைபாண்டியன் எல்லாம் உங்களுக்கு ஆண்களா தெரியேல்லையோ நாங்களும் கத்தியை தூக்கிட்டு திட்டிட்டு வந்தால்தான் ஆம்பிளையென்று ஏற்றுக்கொள்ளுவியளோ? இந்த வசனத்தை சொன்னதற்கு தண்டனையாக 5 நாட்களுக்கு எந்த பொண்ணுங்க கூடவும் சாற் செய்யக்கூடாது என்று தீர்ப்புக்குறுகிறேன். அப்பாடா ஒருவழியா நிரூவை மிரட்ட ஒரு பாயிண்ட் கிடைச்சுது.:////////

இது கொடுமையான தண்டனை அம்பலத்தார்! நிரூபன் சாப்பிடமல் வேண்டுமானால் இருப்பான்! ஆனா சாட் பண்ணாமல் அவனால இருக்க முடியாது!

தனிமரம் said...
Best Blogger Tips

@தனிமரம்
மொய்க்கு மொய் என்பதும் இவர்களை போய்ச் சேரமுடியாத தடைக்கல்லாக இருக்கின்றது.//

உண்மை தான் நேசரே! பெண் பதிவர்களில் பலரின் பதிவுகளுக்கு ஓட்டுப் பட்டை இருக்குமானால் கூட்டம் பொங்கி வழியும் என்பது உண்மையே!// நிரூபன் இப்படி என்னை பாசத்தோடு பதிவுலகில் அழைக்கும் ஒருவர் செங்கோவி ஐயா மட்டும் தான் இன்று அவர் பதிவுலகில் இல்லாவிட்டாலும் என் மனதில் இருக்கின்றார் முருகா முருகா இது இன்னொரு உறவு .iravu varan

நிரூபன் said...
Best Blogger Tips

@sasikalaஇதில் ஆண் என்ன பெண் என்ன சிறந்த பதிவை பாராட்டுங்கள் எவர் மனதையும் புண்படுத்தாத படி விமர்சனங்கள் இருக்க வேண்டும் . நிறை , குறை பற்றி தோழமையுடன் சொல்லிப் போகலாமே .
ஆணும் , பெண்ணும் சமம் என்பது பேச்சளவில் இல்லாமல் முடிந்தவரை நடைமுறைப் படுத்தவேண்டும் .//

அப்படித் தோழமையுடன்,
ஆண்கள் அனைவரும் பெண்களின் பதிவுகளை நோக்குவதில்லையே! இது தொடர்பில் ஓர் உதாரணக் கதையினையும் இப் பதிவில் சொல்லியிருக்கிறேனே!

தங்களின் கருத்துக்களுக்கு நன்றி!

ஆண்களின் படைப்புக்களுக்கு கிடைக்கும் சம அந்தஸ்த்து
பெண்களின் படைப்புக்களுக்கும் கிடைக்கனும் என்பது தான் என் ஆசையும்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

மச்சி ஃப்ளாஸ் பேக்கை கிண்டாதே! அதை இன்னொரு நாளைக்குப் பார்ப்போம்! இப்ப தான் கெஞ்சி கூத்தாடி நல்ல பேர் வாங்குகிறேன்/ நீ கெடுத்திடுவாய் போல் இருக்கு! :-)
//

உன்னோட சாதனைப் புத்தகத்தில இதையெல்லாம் குறிச்சு வைச்சிருக்கனுமில்லே!
அவ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@அம்பலத்தார்
ஹா ஹா நிரூ உங்க வார்தை ரொம்ப பீலிங்கை உண்டுபண்ணிடிச்சு. நான் மணி யோகா நம்பிக்கைபாண்டியன் எல்லாம் உங்களுக்கு ஆண்களா தெரியேல்லையோ நாங்களும் கத்தியை தூக்கிட்டு திட்டிட்டு வந்தால்தான் ஆம்பிளையென்று ஏற்றுக்கொள்ளுவியளோ? இந்த வசனத்தை சொன்னதற்கு தண்டனையாக 5 நாட்களுக்கு எந்த பொண்ணுங்க கூடவும் சாற் செய்யக்கூடாது என்று தீர்ப்புக்குறுகிறேன். அப்பாடா ஒருவழியா நிரூவை மிரட்ட ஒரு பாயிண்ட் கிடைச்சுது.//

ஐயா,
நீங்க தவறாகப் புரிந்து கொண்டீங்க,

இங்கே கருத்துரை வழங்கியிருக்கும் ஆண்களைத் தவிர ஏனைய பதிவர்கள் இப் பதிவு தொடர்பில் கருத்துரை சொல்லவில்லை என்று தான் சொல்ல வந்தேன்!

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்
தனிமரம் சார்,
உங்களுக்கு பேஸ்புக்கில மெசேஜ் போட்டிருக்கேன்,
பாருங்க.

சேகர் said...
Best Blogger Tips

நல்ல பதிவு நண்பரே..

ஆமினா said...
Best Blogger Tips

இந்த பதிவுக்கு முக்கியமா என்னைய நீ வெத்தல பாக்கு வச்சு அழைச்சுருக்கணுமா இல்லையா?????

யோவ் கமென்ட் முழுக்க படிச்சு முடிக்குறதுக்குள்ள செத்துடுவேன் போல...


சரி சரி
யார் யாரெல்லாம் எதிர்கட்சி?

பெண்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள்... இப்ப வாங்கப்பா...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா

Yoga.S. said...
Best Blogger Tips

ஆமினா said... ஆமினா,வெத்தல,பாக்கு,சுண்ணாம்பு,

இந்த பதிவுக்கு முக்கியமா என்னைய நீ வெத்தல பாக்கு வச்சு அழைச்சுருக்கணுமா இல்லையா?????

யோவ் கமென்ட் முழுக்க படிச்சு முடிக்குறதுக்குள்ள செத்துடுவேன் போல...


சரி சரி
யார் யாரெல்லாம் எதிர்கட்சி?

பெண்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள்... இப்ப வாங்கப்பா...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா!////வாங்கோ,வாங்கோ,ஆமினா!!!!வெத்திலை,பாக்கு,சுண்ணாம்பு,பொயிலை நறுக்கு எல்லாம் இருக்குது.இடிக்கிறதுக்கு உரலும் இருக்குது!ஹ!ஹ!ஹா!!!!!!!

ஆமினா said...
Best Blogger Tips

@யோகா

நா வயசானவ தான். அதுக்காக இப்படியா பப்ளிக்ல புகழ்றது??? ஹி..ஹி..ஹி...

@நிரூ
இன்னும் கொஞ்ச நேரத்துல வந்து கொட்டிட்டு போறேன்.. வெயிட்

ஆமினா said...
Best Blogger Tips

// ரேங்க் வாங்குவதில் எல்லாம் அவர்களுக்கு நாட்டமில்லை....//

ஏன் இல்ல?

போட்டி போட்டும் தோத்து போறாங்க என்பது தான் உண்மை

அங்கிகாரம் கிடைக்க தான் பலரும் எழுதுகிறார்கள். ஆக தான் அனைவராலும் பாராட்டப்பட வேண்டும் என தான் விருப்பம். சில பெண்கள் ஒதுங்குகிறார்கள் தான். ஆரோக்யமான சூழ்நிலை யாரும் ஏற்படுத்தி கொடுக்காதது தான் காரணம்!

நிரூபன் said...
Best Blogger Tips

ஆகா,
நம்ம பொம்பிளை தாதா,
சாரிங்க
நம்ம அன்பு அக்காச்சி வந்திட்டாங்களா!
இனிமே ஆட்டம் சூடு பிடிச்சிடும்!

எஸ்.எஸ்.பூங்கதிர் said...
Best Blogger Tips

சார், சத்தியமா சொல்றேன். என் மனசுல இருக்கறதை பதிவா எழுதிட்டிங்க. பாராட்டுகள்!

ஆமினா said...
Best Blogger Tips

ரேங்கை ஒரு புறம் தள்ளிவிடுங்க. பலரும் குருகிய வட்டத்தில் சுற்றுவதே சில ஆணாதிக்ககுணம் கொண்டவர்கள் தான்.

கவிதை எழுதும் பெண் விடைபெறுவதாய் சொல்லிச்சென்றார். காரணம் என்ன தெரியுமா? தொடர்ந்து மைனஸ் ஓட்டு குத்தி அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது! ஆணுக்கு நிகராய் பெண்கள் எங்கும் வம்புக்கு போக முடியாது என்பதால் ஒதுங்குவதே மேல் என நினைத்து விலகிவிடுகிறார்கள்

இன்னொரு க்ரூப். இவரு நல்லது செய்றேன்னு சொல்லி இவரோட தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி "சக ஊழியரை மரியாதையா நடத்தலன்னா நா பொதுவில் எல்லா ஆதாரங்களையும் வெளிபடுத்துவேன்"ன்னு சொல்லியிருக்கார். அந்த பதிவர் அத்துடன் முற்றுபுள்ளி வைத்தது தான். (இதற்கு பின் ஆணாதிக்கம் இல்லை என தெரியும் ஆனால் ஒரு பெண் தவறு செய்தால் மட்டும் தான் இங்கே பூதாகரமாக வெளிப்படுகிறது. ஏன் இந்த தவறுகள் என்ன யாரும் செய்யாததா? அவரின் பர்ஷனல் விஷயங்களை ஏன் பொதுவில் வைக்க வேண்டும்? - பெண்கள் அரசியல், கும்மி என தன் எல்லைய விரிவாக்க பயப்படுவதே இது போன்ற செயல்களால் தான்!

ஆமினா said...
Best Blogger Tips

//நம்ம பொம்பிளை தாதா,//

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நிரூபன் said...
Best Blogger Tips

@சேகர்

நல்ல பதிவு நண்பரே..
//

நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆமினா

இந்த பதிவுக்கு முக்கியமா என்னைய நீ வெத்தல பாக்கு வச்சு அழைச்சுருக்கணுமா இல்லையா?????

யோவ் கமென்ட் முழுக்க படிச்சு முடிக்குறதுக்குள்ள செத்துடுவேன் போல...


சரி சரி
யார் யாரெல்லாம் எதிர்கட்சி?

பெண்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள்... இப்ப வாங்கப்பா...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா
//

உன்னையை வெத்திலை பாக்கு வைச்சு அழைச்சேன்!
ஆனால் நீ தான் வரலை! கரண்ட் கட் என்று எஸ் ஆகிட்டாய்.
நீ வர முன்னாடி கமெண்டை மழையா பொழிஞ்சிட்டாங்க!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆமினா

ஏன் இல்ல?

போட்டி போட்டும் தோத்து போறாங்க என்பது தான் உண்மை

அங்கிகாரம் கிடைக்க தான் பலரும் எழுதுகிறார்கள். ஆக தான் அனைவராலும் பாராட்டப்பட வேண்டும் என தான் விருப்பம். சில பெண்கள் ஒதுங்குகிறார்கள் தான். ஆரோக்யமான சூழ்நிலை யாரும் ஏற்படுத்தி கொடுக்காதது தான் காரணம்!
//

பெண்களோடு பெண்களிற்குரிய கடமைகளை உணர்ந்தவர்களாக ஆண்கள் போட்டி போட வேண்டும்! அப்போது தான் பெண்களின் படைப்புக்களும் நல்ல நிலையினை நோக்கிச் செல்லும்.
ஆண்கள் யாராச்சும் அப்படிச் செய்கிறாங்களா? இல்லையே!

நிரூபன் said...
Best Blogger Tips

@எஸ்.எஸ்.பூங்கதிர்சார், சத்தியமா சொல்றேன். என் மனசுல இருக்கறதை பதிவா எழுதிட்டிங்க. பாராட்டுகள்!
//

நன்றிங்கோ!

ஆமினா said...
Best Blogger Tips

அப்பறம் ஓட்டுக்கு ஓட்டுங்குற முறை...

இதனால அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். தன் வேலை போக மீதம் இருக்கும் நேரத்தில் காத்திரமான பதிவுகள் போட்டால்... "என் பதிவுக்கு நீ வரல அதுனால நா வரல", "எனக்கு நீ ஓட்டு போடல அதுனால உனக்கு நா போடல"ன்னு உப்பு சப்பில்லாத மேட்டர்க்கெல்லாம் பெண்களை புறந்தள்ளிவிடுவது!

ஒருவர் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி ஒரு பதிவு போடுறார். அதன் கீழ் பின்னூட்டங்கள் பார்த்தால் பதிவுக்கு சம்மந்தமே இல்லாம இருக்கும். ஆன்லைன், ஆப்லைன், மீ பஸ்ட், 2,3,4,........,ன்னுல இருந்து ஆரம்பிச்சு கழுத எருமைன்னு திட்டுறதுவரைக்கும் பர்சனல் சாட்டிங்க்ல வச்சுக்க வேண்டிய பேச்சுக்களையெல்லாம் தன் பின்னூட்டங்கள் வாயிலாக அரங்கேற்றுவது. இந்த ஆட்கள் இங்கே கும்மி அடிக்கிற வேலைல பெண்பதிவர்களுக்கு ஊக்கம் கொடுக்கலாம்.... ஹி...ஹி...ஹி.. (நிரூபன் ப்ளாக்குக்கே வந்து நிரூபனை தாக்குறீயா நீய்யி)

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆமினா
ரேங்கை ஒரு புறம் தள்ளிவிடுங்க. பலரும் குருகிய வட்டத்தில் சுற்றுவதே சில ஆணாதிக்ககுணம் கொண்டவர்கள் தான்.

கவிதை எழுதும் பெண் விடைபெறுவதாய் சொல்லிச்சென்றார். காரணம் என்ன தெரியுமா? தொடர்ந்து மைனஸ் ஓட்டு குத்தி அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது! ஆணுக்கு நிகராய் பெண்கள் எங்கும் வம்புக்கு போக முடியாது என்பதால் ஒதுங்குவதே மேல் என நினைத்து விலகிவிடுகிறார்கள் //

கவிதை எழுதும் பெண் விலகிச் சென்றமைக்கு வேறு காரணங்கள் ஏதும் இருக்கலாம் என நினைக்கிறேன்! காரணம் அவருடன் தனிப்ப்ட்ட முறையில் பல தடவை பேசியிருக்கிறேன். பதிவுலகில் தனக்கு யாரோ டாச்சர் கொடுப்பதாக சொன்னார். அதனை விட தனது பிள்ளைகளின் கல்வி பற்றியும் குறிப்பிட்டார்.

இப் பதிவில் நாம குறிப்பிட்டிருக்கும் கவிதை எழுதுபவர் வேறு! அந்தக் கவிதை எழுதுற ஆள் வேறு!

Jayadev Das said...
Best Blogger Tips

\\பெண் பதிவர்களையும் எல்லோரும் அறியும் வண்ணம்,ஆண்களின் படைப்புக்களிற்கு வலை உலகில் இருக்கும் மரியாதையினைப் போன்று சம அந்தஸ்த்தினைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாம் என்ன செய்யலாம்?\\

பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் இயக்கிய படங்கள் பெயரும், புகழும் வாங்கிய மாதிரி ஸ்ரீபிரியா, சுகாசினி இயக்கிய படங்கள் பெயரும், புகழும் வாங்க வில்லை, அங்கீகாரம், மரியாதை கிடைக்கவில்லை என்று புலம்பினால் யார் என்ன செய்ய முடியும்? ஒரு பெண், ராமானுஜம் மாதிரி ஒரு கணித மேதையாக இதுவரை வர வில்லை. ஐன்ஸ்டீன் மாதிரி விஞ்ஞானியாக ஒரு பெண் வர வில்லை. சாக்ரடிஸ் மாதிரி ஒரு பிலாசபர் பெண்களில் தோன்றவில்லை. ஏனெனில் அது இயற்கையின் முடிவு. [The human brain is a soft, shiny, grayish white, mushroom-shaped structure encased within the skull. At birth, a typical human brain weighs between 12 and 14 ounces (350 and 400 grams). By the time an average person reaches adulthood, the brain weighs about 3 pounds (1.36 kilograms). Because of greater average body size, the brains of male are generally about 10 percent larger {fifty ounces for the adult male, and forty-five for the female} than those of females]. அந்தஸ்து, அங்கீகாரம், மரியாதை..... இதெல்லாம் ரிசர்வே ஷன் பண்ணி வராது தானா வரணும். தானா எப்ப வரும்..? சரக்கு இருந்தா வரும். இயற்கையிலேயே பெண்களுக்கு மண்டையில் சரக்கு கம்மி. அதனால அதுங்க நானும் எழுதறேன்னு எழுதலாம், ஆனால் படிக்க ஆள் வேணுமே?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆமினா
இன்னொரு க்ரூப். இவரு நல்லது செய்றேன்னு சொல்லி இவரோட தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி "சக ஊழியரை மரியாதையா நடத்தலன்னா நா பொதுவில் எல்லா ஆதாரங்களையும் வெளிபடுத்துவேன்"ன்னு சொல்லியிருக்கார். அந்த பதிவர் அத்துடன் முற்றுபுள்ளி வைத்தது தான். (இதற்கு பின் ஆணாதிக்கம் இல்லை என தெரியும் ஆனால் ஒரு பெண் தவறு செய்தால் மட்டும் தான் இங்கே பூதாகரமாக வெளிப்படுகிறது. ஏன் இந்த தவறுகள் என்ன யாரும் செய்யாததா? அவரின் பர்ஷனல் விஷயங்களை ஏன் பொதுவில் வைக்க வேண்டும்? - பெண்கள் அரசியல், கும்மி என தன் எல்லைய விரிவாக்க பயப்படுவதே இது போன்ற செயல்களால் தான்!//

அக்காச்சி! இந்த விடயத்தினை கொஞ்சம் பரிசீலனை செய்ய வேண்டும்!
காரணம் சமூகத்தின் முன்னே தான் ஒரு நல்லவனாகவும்,
திரை மறைவில் ஒருத்தன் இரட்டை வேடம் போடும் போதும்,
அவனை அம்பலப்படுத்துவதில் என்ன தவறு சொல்லுங்கள்?

ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன்!

உங்களுக்கு ஒரு அழகான பெண் பிள்ளை இருக்கிறது! அது இந்த மேடத்தின் ஆப்பிசில் ஒர்க் பண்ணுது.

மேடம் உங்க மகளை கெட்ட வார்த்தையால திட்டி,
நாலு பேருக்கு முன்னாடி பச்சையா பேசி
கேட்க கூடாத கேள்வி கேட்டால்,
மேடமும் ஒரு ப்ளாக்கர் என்பதால் நீங்க திட்டுவது சரிங்க! ப்ளாக்கில எழுதுவது போல சமூகத்தை நல்வழிப்படுத்துவது போல திட்டுங்க! ஆனால் ஆப்பிசில் மகளைப் பேசுங்க என்று சொல்ல முடியுமா?>

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆமினா
//நம்ம பொம்பிளை தாதா,//

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

இது தான்! இதுக்குத் தான் தாமரைக்குட்டியை கூட்டியந்திருக்கனும்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆமினா

அப்பறம் ஓட்டுக்கு ஓட்டுங்குற முறை...

இதனால அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். தன் வேலை போக மீதம் இருக்கும் நேரத்தில் காத்திரமான பதிவுகள் போட்டால்... "என் பதிவுக்கு நீ வரல அதுனால நா வரல", "எனக்கு நீ ஓட்டு போடல அதுனால உனக்கு நா போடல"ன்னு உப்பு சப்பில்லாத மேட்டர்க்கெல்லாம் பெண்களை புறந்தள்ளிவிடுவது!
//

யுவர் ஆனர்! நீங்க என் பதிவுக்கு வராட்டியும் நான் போயி பின்னூட்டம் போட்டிருக்கேன்!
இப்படிச் சொல்லுறவன் எவனா இருந்தாலும் அவன் வாயில பினாயில் ஊத்தனும்;-))))

உதாரணத்திற்கு ரேவா எனும் பெண் பதிவர் என் கடையில கமெண்டோ ஓட்டோ போடுறதில்லை!
ஆனால் நேத்தைக்கும் நான் கமெண்ட் போட்டேன்!

மீ நல்லவன்!

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆமினா

ஒருவர் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி ஒரு பதிவு போடுறார். அதன் கீழ் பின்னூட்டங்கள் பார்த்தால் பதிவுக்கு சம்மந்தமே இல்லாம இருக்கும். ஆன்லைன், ஆப்லைன், மீ பஸ்ட், 2,3,4,........,ன்னுல இருந்து ஆரம்பிச்சு கழுத எருமைன்னு திட்டுறதுவரைக்கும் பர்சனல் சாட்டிங்க்ல வச்சுக்க வேண்டிய பேச்சுக்களையெல்லாம் தன் பின்னூட்டங்கள் வாயிலாக அரங்கேற்றுவது. இந்த ஆட்கள் இங்கே கும்மி அடிக்கிற வேலைல பெண்பதிவர்களுக்கு ஊக்கம் கொடுக்கலாம்.... ஹி...ஹி...ஹி.. (நிரூபன் ப்ளாக்குக்கே வந்து நிரூபனை தாக்குறீயா நீய்யி)
//

சத்தியமா இந்தக் கமெண்ட் எனக்கில்லை என்பது உங்க மனச்சாட்சிக்கே வெளிச்சம்! என்னோட ப்ளாக்கில இப்படி கமெண்ட் போட்டு பலர் பல்பு மேல பல்பு வாங்கியிருககங்க!

நீங்க கத்தி, கோடாரி, அருவா குரூப்பை சொல்லலைன்னு நெனைக்கிறேன்! சரியா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஏதோ நம்மால முடிஞ்சது!

நிரூபன் said...
Best Blogger Tips

@Jayadev Das
பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் இயக்கிய படங்கள் பெயரும், புகழும் வாங்கிய மாதிரி ஸ்ரீபிரியா, சுகாசினி இயக்கிய படங்கள் பெயரும், புகழும் வாங்க வில்லை, அங்கீகாரம், மரியாதை கிடைக்கவில்லை என்று புலம்பினால் யார் என்ன செய்ய முடியும்? ஒரு பெண், ராமானுஜம் மாதிரி ஒரு கணித மேதையாக இதுவரை வர வில்லை. ஐன்ஸ்டீன் மாதிரி விஞ்ஞானியாக ஒரு பெண் வர வில்லை. சாக்ரடிஸ் மாதிரி ஒரு பிலாசபர் பெண்களில் தோன்றவில்லை. ஏனெனில் அது இயற்கையின் முடிவு. //

இயற்கையினை நீங்க நம்புறீங்களா? இயற்கையின் முடிவினை மனிதனால் மாத்திக்க முடியாதா?
கல்பனா சாவ்லா அறிந்திருக்கிறீங்களா? ஜூலியா ஹில்லர்ட் அறிந்திருக்கிறீங்களா?
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அறிந்திருக்கிறீர்களா? பல பெண் விஞ்ஞானிகள், மருத்துவர்களின் பெயர்களை எடுத்து விடவா?
ப்ளோரன்ஸ் நைட்டிங் கேள் எனும் தாதியப் பெண் மணி பற்றி தெரியுமா
இரும்புச் சீமாட்டி பற்றி எப்போதாச்சும் படித்திருக்கிறீர்களா?

அப்புறமா எதுக்கு சார் பெண்களால் முடியாது என்று சொல்லுறீங்க? உங்களின் மனோ நிலையில் ஆண்கள் இருப்பதால் தான் இன்றளவில் வீட்டுக்குள் பல பெண்களின் திறமைகள் முடக்கப்படுகின்றன,.

Please stop harassing them

நிரூபன் said...
Best Blogger Tips

@Jayadev Das

அங்கீகாரம், மரியாதை..... இதெல்லாம் ரிசர்வே ஷன் பண்ணி வராது தானா வரணும். தானா எப்ப வரும்..? சரக்கு இருந்தா வரும். இயற்கையிலேயே பெண்களுக்கு மண்டையில் சரக்கு கம்மி. அதனால அதுங்க நானும் எழுதறேன்னு எழுதலாம், ஆனால் படிக்க ஆள் வேணுமே?
//

சார்,
ஒரு தேனம்மை லட்சுமணன் மாதிரி உங்களால் எழுத முடியுமா?
ஹேமா, ரேவா மாதிரி உங்களால் கவிதை எழுத முடியுமா?
அப்புறம் சேலஞ்ச் பண்ணி ஆட்டத்தில் இறங்க முடியுமா நண்பா?
அப்புறம் எதுக்கு சரக்கு கம்மின்னு பெண்களின் திறமையைப் பார்த்து வயித்தெரிச்சல் படுறீங்க?

Jayadev Das said...
Best Blogger Tips

நீங்க உபயோகிக்கும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் பெண் கண்டுபிடித்தது என்று ஏதாவது ஒன்றைக் குறிப்பிடவும். நீங்கள் படித்த கணித்தத்தில், இயற்பியலில் ஏதாவது ஒரு சூத்திரத்தை அல்லது விதியை பெண் கண்டு பிடித்திருந்தால் காட்டவும். ரஹ்மான், இசைஞானி, இளையராஜா மாதிரி ஒரு இசையமைப்பாளர் ஒரு பெண் இருந்தால் காட்டவும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Jayadev Das

நீங்க உபயோகிக்கும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் பெண் கண்டுபிடித்தது என்று ஏதாவது ஒன்றைக் குறிப்பிடவும். நீங்கள் படித்த கணித்தத்தில், இயற்பியலில் ஏதாவது ஒரு சூத்திரத்தை அல்லது விதியை பெண் கண்டு பிடித்திருந்தால் காட்டவும். ரஹ்மான், இசைஞானி, இளையராஜா மாதிரி ஒரு இசையமைப்பாளர் ஒரு பெண் இருந்தால் காட்டவும்.
//

நண்பரே தமிழ்ப் பதிவுலகில் யாராச்சும் அறிவியல் கண்டு பிடிப்புச் செய்யவா எழுதுறாங்க? மனித மூளையினைக் கொண்டு தமக்குத் தெரிந்த விடயத்தினைப் பகிர எதற்கு கண்டு பிடிப்பு அவசியம்?

அப்புறமா MIA, Rihanna, Nattalley Kelly, Lady Gaga இவங்க பத்தி தெரியுமா?

Jayadev Das said...
Best Blogger Tips

பெண்களுக்கு திறமை இருந்தால், அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க ரிசர்வே ஷன் slip-போடு நீங்கள் ஏன் அலைய வேண்டும்?

Jayadev Das said...
Best Blogger Tips

\\மனித மூளையினைக் கொண்டு தமக்குத் தெரிந்த விடயத்தினைப் பகிர எதற்கு கண்டு பிடிப்பு அவசியம்?\\ பெண்களுக்கு சில விஷயங்களில் திறமை கம்மி என்று கோடிட்டு காட்ட சில உதாரணங்களைக் கூறினேன். கீழ் லெவலுக்கு உதாரணம் வேண்டுமானால் தமிழ்ப் பட இயக்குனர்களில் பெண்கள் இயக்கிய படங்களைப் பாருகளேன், எந்த லட்சணத்தில் இருக்கிறது என்று.

Jayadev Das said...
Best Blogger Tips

\\அப்புறமா MIA, Rihanna, Nattalley Kelly, Lady Gaga இவங்க பத்தி தெரியுமா?\\ Thanks for the info. When I go for bookshop next time I will be careful, not to buy books bearing these names as authors.

Jayadev Das said...
Best Blogger Tips

\\இயற்கையினை நீங்க நம்புறீங்களா?\\ நீங்க நம்பாவிட்டாலும் அது தான் உண்மை.

\\இயற்கையின் முடிவினை மனிதனால் மாத்திக்க முடியாதா?\\ முடியாது. ஆணும் பெண்ணும் இணைந்தால் பெண் தான் கர்ப்பமடைவால். உங்கள் விஞ்ஞானத்தால் ஆண் கற்ப்பமாகுமாறு செய்ய முடிந்தாலும் [அதையும் ஒரு ஆண்தான் கண்டுபிடித்திருப்பான்!!] பெண்ணை அறிவுஜீவிகளாக மாற்ற முடியாது.
\\கல்பனா சாவ்லா அறிந்திருக்கிறீங்களா? \\ இவரு ஒன்னும் ராக்கெட்டை கண்டு புடிச்சவர் இல்லைன்னு மட்டும் தெரியும்.

\\ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அறிந்திருக்கிறீர்களா? \\ இவர் ஆட்சியில இலங்கை மக்கள், இந்திரா காந்தி, ஜெயலலிதா ஆட்சியின் பொது எவ்வளவு சித்திரவதையை அனுபவிதார்களோ அதே அளவு அனுபவித்தார்கள் என்று தெரியும்.

\\பல பெண் விஞ்ஞானிகள், மருத்துவர்களின் பெயர்களை எடுத்து விடவா?\\ Ph .D பட்டம் பெற எத்தனை பெண்களின் Thesis -களை ஆண்கள் எழுதித் தருகிறார்கள் என்று சொல்லவா?
\\ப்ளோரன்ஸ் நைட்டிங் கேள் எனும் தாதியப் பெண் மணி பற்றி தெரியுமா?\\ அந்த அம்மாவுக்கு எனது வணக்கங்கள். தாதி வேலை செய்ய மூளை அதிகம் தேவையில்லை.

Jayadev Das said...
Best Blogger Tips

\\உங்களின் மனோ நிலையில் ஆண்கள் இருப்பதால் தான் இன்றளவில் வீட்டுக்குள் பல பெண்களின் திறமைகள் முடக்கப்படுகின்றன,.\\ஒருத்தருடைய உண்மையான பலம் அவர்களது புத்திசாலித் தனம் என்று சொல்வார்கள். அலெக்சாண்டருக்கும் ரெண்டு கையும் காலும்தான் இருந்தது. நான்கு பேர் சேர்ந்தால் அவனைக் கொன்று விட முடியும். ஆனாலும் அவன் எப்படி ஆயிரக் கணக்கான வீரர்களை அடக்கி ஆண்டான்? பெண்களுக்கு உடல் பலம் குறைவு என்பது உண்மை என்றாலும், அவர்கள் ஆண்களுக்கு அடங்கிப் போக வேண்டிய கட்டாயம் என்ன? மூளை பலம் இல்லை, அதைத் தவிர வேறு எந்த காரணமும் கிடையாது.

நிரூபன் said...
Best Blogger Tips

@Jayadev Das

பெண்களுக்கு திறமை இருந்தால், அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க ரிசர்வே ஷன் slip-போடு நீங்கள் ஏன் அலைய வேண்டும்?
//

மொதல்ல பதிவில என்ன சொல்லியிருக்கேன் என்று படிச்சிட்டு வாங்க சார்!

பெண்களின் திறமைகள் ஆண்கள் செய்யும் ஒரு சில காரணங்களால் முடக்கப்படுவதாக சொல்கிறேன்! புரியுதா?

நிரூபன் said...
Best Blogger Tips

@Jayadev Das

நீங்க உபயோகிக்கும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் பெண் கண்டுபிடித்தது என்று ஏதாவது ஒன்றைக் குறிப்பிடவும். நீங்கள் படித்த கணித்தத்தில், இயற்பியலில் ஏதாவது ஒரு சூத்திரத்தை அல்லது விதியை பெண் கண்டு பிடித்திருந்தால் காட்டவும். ரஹ்மான், இசைஞானி, இளையராஜா மாதிரி ஒரு இசையமைப்பாளர் ஒரு பெண் இருந்தால் காட்டவும்.
//

நண்பரே, நாம இப்போது தமிழ்ப் பதிவுலகம் பத்தி பேசுறோம்!

பெண்களின் சாதனைகள், பெண்களின் எழுத்துலகிற்கு அப்பாற்ற்பட்ட விடயங்களைப் பத்தி பேசலை!
ஸோ..இங்கே பெண்ணின் படைப்புக்களைப் பத்தி தான் விவாதிக்கிறோம்!

நிரூபன் said...
Best Blogger Tips

@Jayadev Das
\மனித மூளையினைக் கொண்டு தமக்குத் தெரிந்த விடயத்தினைப் பகிர எதற்கு கண்டு பிடிப்பு அவசியம்?\\ பெண்களுக்கு சில விஷயங்களில் திறமை கம்மி என்று கோடிட்டு காட்ட சில உதாரணங்களைக் கூறினேன். கீழ் லெவலுக்கு உதாரணம் வேண்டுமானால் தமிழ்ப் பட இயக்குனர்களில் பெண்கள் இயக்கிய படங்களைப் பாருகளேன், எந்த லட்சணத்தில் இருக்கிறது என்று.//

கில்மாப் படத்திற்கு விமர்சனம் எழுதும் ஒரு ஆண் பதிவரை விட,
தமிழ்ப் பதிவுலகில் பெண்கள் நன்றாக எழுதுறாங்க தானே சார்?
அப்புறம் எதுக்கு தமிழ்ச் சினிமா உலகை இதற்குள் கொண்டு வந்து நுழைக்கிறீங்க?

நிரூபன் said...
Best Blogger Tips

@Jayadev Das

\\அப்புறமா MIA, Rihanna, Nattalley Kelly, Lady Gaga இவங்க பத்தி தெரியுமா?\\ Thanks for the info. When I go for bookshop next time I will be careful, not to buy books bearing these names as authors.
//

யோவ்..புக்கே வாங்க மாட்டேன்னா அப்புறமா எதுக்கு இப்படி கேட்டேய்?

நிரூபன் said...
Best Blogger Tips

@Jayadev Das

\\பல பெண் விஞ்ஞானிகள், மருத்துவர்களின் பெயர்களை எடுத்து விடவா?\\ Ph .D பட்டம் பெற எத்தனை பெண்களின் Thesis -களை ஆண்கள் எழுதித் தருகிறார்கள் என்று சொல்லவா?
\\ப்ளோரன்ஸ் நைட்டிங் கேள் எனும் தாதியப் பெண் மணி பற்றி தெரியுமா?\\ அந்த அம்மாவுக்கு எனது வணக்கங்கள். தாதி வேலை செய்ய மூளை அதிகம் தேவையில்லை.
//

நர்ஸிங் என்ற ஓர் புனிதத் தொழிலை உலகிற்கு அறிமுகப்ப்டுத்தியது அந்த அம்மா தான்!

நிரூபன் said...
Best Blogger Tips

@Jayadev Das
பெண்களுக்கு உடல் பலம் குறைவு என்பது உண்மை என்றாலும், அவர்கள் ஆண்களுக்கு அடங்கிப் போக வேண்டிய கட்டாயம் என்ன? மூளை பலம் இல்லை, அதைத் தவிர வேறு எந்த காரணமும் கிடையாது.//

பெண்களுக்கு உடல் பலம் குறைவு, அதனால் தான் அவர்கள் உடல் அழகை ரசித்து பல ஆண்கள் அவர்கள் பின்னே செல்கிறார்கள்!

ஹே...ஹே....

அப்புறமா, நீங்க என்ன தான் பல சாலி என்றாலும், ஆண்களுக்குப் பெண்கள் அடங்கிப் போகனும் என்றாலும், நைட்டில நீங்க அவங்களுக்கு அடங்கிப் போகனுமே! இது எப்பூடி!

மூளை பலம், உடல் பலம் இருந்தாலும் நீங்க ஆண்மையுள்ளவங்க என்று நிரூபிக்க ஒரு பெண்ணோட சதை பலம் தேவையில்லே! இதுக்கு மேல எனக்கு நாகரிகமா பதில் சொல்ல தெரியலைங்கோ!

Jayadev Das said...
Best Blogger Tips

நானும் பெண் பதிவர்கள் சிலரின் பதிவுகளைப் படித்தேன் பாஸ். சாந்தி முஹூர்த்தம் [ஸ்ரீபிரியா இயக்கிய படம்] மாதிரியே இருந்தது. [படம் பார்த்தவங்க பாதிக்கு மேல எவனும் தியேட்டரில் உட்கார மாட்டான்]. இதில, சிலர் தன்னோட பதிவுக்கு வேறு பெயரில் தாங்களே கமெண்டு போடுதல், எதிர் பிளாக் ஆரம்பித்தல் மாதிரி 'கிறுக்கல்கள்' வேலையெல்லாம் பண்ணினார்கள். அப்புறம் ஒரு ஸ்டேஜுக்கு மேல, இனிமே பெண்கள் எழுத்தும் பதிவுகளைப் படிப்பதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்.

Jayadev Das said...
Best Blogger Tips

\\அப்புறமா, நீங்க என்ன தான் பல சாலி என்றாலும், ஆண்களுக்குப் பெண்கள் அடங்கிப் போகனும் என்றாலும், நைட்டில நீங்க அவங்களுக்கு அடங்கிப் போகனுமே! இது எப்பூடி!
மூளை பலம், உடல் பலம் இருந்தாலும் நீங்க ஆண்மையுள்ளவங்க என்று நிரூபிக்க ஒரு பெண்ணோட சதை பலம் தேவையில்லே! இதுக்கு மேல எனக்கு நாகரிகமா பதில் சொல்ல தெரியலைங்கோ!\\ இந்த கமெண்டை நீங்களே நீக்கிடுவீங்க!! பாருங்க பெண்களுக்கு வக்காலத்து வாங்கப் போயி நீங்க பேலன்சை விட்டுட்டு மஞ்சள் கலரில் [சாறு நிவேதிதா மாதிரி] எழுத ஆரம்பிச்சிட்டீங்க. ஆனா, என்னால் அப்படி எழுத முடியாது, அவசியமும் இல்லை, ஏனெனில் புத்தி கம்மியான இனத்துக்கு நான் வக்காலத்து வாங்கும் வேலையைச் செய்யவில்லை.

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

//ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

ஹா ஹா ஹா ஹா நான் சென் நதிக்குள்ள குதிக்கத்தான் போனேன்! கிட்டப் போய் எட்டிப் பார்த்தேன்! முதல்ல என்னோட லப் டப்ப தூக்கி எறிஞ்சிட்டு, கடைசியா நான் குதிப்பம் எண்டு பார்த்தேன்!

சரி போறதுதான் போகம் போறம் கடைசியா, ஒரு ப்ளாக் படிச்சிட்டுப் போவம் எண்டு, ஒரு ப்ளாக்குக்குப் போனேன்! அங்க ஒரு அழகான பூனைக்குட்டி இருந்திச்சு! மௌசக் கண்டா பூனை கடிக்கும் எண்டு அறிவித்தல் வேற இருந்திச்சு!

இப்ப அங்கதான் நிண்டு, பூஸாரோட விளையாடிக்கொண்டு நிக்கிறன்! என்னோட ஒஃப்ஃபிசில வேலை செய்யிற ஆக்களுக்கும் அந்தப் பூஸாரைக் காட்டினேன்!

ஹி ஹி ஹி ஹி ஹி தற்கொலை பண்ற ஐடியாவோட ஐடியாவ, அந்த அஞ்சறிவு ஜீவன் தடுத்துப் போட்டுது! :-)

முதல் முறையாப் போயிருக்கிறன்! ஏதும் பலகாரங்கள், டீ , பிளேண்டி தருவுனம் எண்டு நினைக்கிறன்! தந்தா கொண்டு வந்து தாறன் நிரூ!:-///

நிரூபன்... நிரூபன்... இந்தக் கொடுமையைக் கொஞ்சம் கேழுங்கோ... நம்பியெல்லோ என்பக்கத்துக்குப் பூட்டுப் போடாமல் வைத்திருக்கிறேன், என் கறுப்புப் பூஸாரின் கழுத்திலிருந்த 5 பஉண் சங்கிலியையும், அதில் கோத்திருந்த வைரக்கல் பதித்த பென்ரனையும் காணவில்லையே..... இப்ப நான் எங்கின போய்த் தேடுவேன்:)))... இதில ரீ, பலகாரம் வேற தேவையாக்கிடக்காமே... அவ்வ்வ்வ்வ்வ்:))).

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

அம்பலத்தார் said...
அம்மா அதிரா மணிக்கு அவார்ட்டு கொடுக்கிறிங்க OK.
இந்த ஆமா போட்டு பிற்பாட்டுப்பாடி ஜால்ரா போடுறவங்களுக்கும் முடிஞ்சா எதாவது கொடுங்கோ அவங்களும் பாவம்..
ஹி ஹீ புரிஞ்சுதா இந்தப்பதிவுக்கு நானும் ரொம்பவாட்டி ஆமா போட்ட மீசை வச்ச சிங்கமாக்கும் அதுதான்.......///

ஹா..ஹா..ஹா.. சிங்கம் பார்த்திருக்கிறேன், ஆனா மீசை வச்ச சிங்கத்தை இப்போதான் பார்க்கிறேன்:)

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

நான் ஆரோடும் வாதிட வரவில்லை.. அதே நேரம் இத்தலைப்பு பெண்களுக்கு அறுவு கூடவோ குறையவோ என்பதெல்லாம் பற்றியதில்லை என்பதால், இதுபற்றி ஏதும் நான் கதைக்க விரும்பவில்லை.

யாருக்காவது தெரியுமோ? எதுக்காக பெண்களின் வயதைவிட ஆண்களின் வயதை அதிகமாக்கி திருமண பந்தத்தில் இணைக்கிறார்கள் என?.

பெண்களின் அறிவுக்கூர்மை ஆண்களைவிட அதிகமாக இருப்பதினாலேயே ஒரே வயதில் திருமணம் முடித்துக் கொடுக்காமல் ஆண்களுக்கு கொஞ்சம் வயது அதிகமாக வைக்கிறார்கள்... இது அன்று தொட்டு ஏற்படுத்திய முறை.

பெண் புத்தி பின்புத்தி என்பதன் கருத்து தெரியுமோ?... ஆண்களைவிட பெண்களுக்கே.. உள்ளுணர்வு அதிகம்.... இந்த உள்ளுணர்வான அறிவு.. ஆண்களுக்கு மிகவும் குறைவாகவே இருக்கிறதாம்.

Jayadev Das said...
Best Blogger Tips

ஒரு பெண்ணுக்கு நாற்ப்பது வயதுக்குள் மேல் மெனோபாஸ் வந்துவிடும் தாம்பத்தியத்தில் ஈடுபாடு இருக்காது, ஆனால் ஆண் அந்த மாதிரி வயது வரம்பு எதுவும் இல்லாதவன். அவனால் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருப்பது கடினம். அதனால் பெண் ஐந்து முதல் பத்து வருடங்கள் வரை இளையவளாக இருப்பது நலம். இது தவிர இந்த வயது வேறுபாட்டுக்கு எந்த காரணமுமில்லை.

Jayadev Das said...
Best Blogger Tips

இந்த பதிவின் தலைப்பு, பெண்களின் எழுத்துக்களை ஏன் யாரும் அதிகம் படிப்பதில்லை, பார்த்தாலே பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுகிறார்கள் என்பதுதான். அவர்கள் புத்திசாலிகளா இல்லியா என்பதல்ல என்பதல்ல. இதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. ஆனால், பதிவுகள் படிக்கப் படவேண்டுமால், பதிவருக்கு வாசகர்களுக்கு பிடிக்கும்படியாக எழுதும் புத்திசாலித் தனம் வேண்டும், அது பெண்களுக்கு இல்லை எனபது எனது கருத்து.

Jayadev Das said...
Best Blogger Tips

பஸ்ஸில் பிக் பாக்கெட் அடிக்குமாறு மூஞ்சியை வைத்துக் கொண்டிருக்கும் அதிகம் படிக்காத ஒருத்தன், நன்றாகப் படித்து சர்வதேச நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிக்கும் முப்பத்தியிரண்டு பெண்களை கல்யாணம் செய்து காட்டலாம் என்ற அளவுக்குத்தான் \\பெண்களின் அறிவுக்கூர்மை\\ இருக்கிறது.

ம.தி.சுதா said...
Best Blogger Tips

மீக நீண்ட நாளுக்குப் பின் வருகிறேன் என நினைக்கிறேன்....

நிறையச் சொல்லாம் மச்சி ஆனால் வருகை பிந்திவிட்டதோ எனத் தோணுகிறது...

எப்படிச் சொல்லலாம் என்கிறாயா... என்னோடயே ஒரு பெண் பதிவர் இருப்பதால் அவர்களின் மனநிலை, தாக்கம் என்பவற்றை நேரேயே அறிகிறேன்...

தனிமரம் said...
Best Blogger Tips

நானும் பெண் பதிவர்கள் சிலரின் பதிவுகளைப் படித்தேன் பாஸ். சாந்தி முஹூர்த்தம் [ஸ்ரீபிரியா இயக்கிய படம்] மாதிரியே இருந்தது. [படம் பார்த்தவங்க பாதிக்கு மேல எவனும் தியேட்டரில் உட்கார மாட்டான்]. இதில, சிலர் தன்னோட பதிவுக்கு வேறு பெயரில் தாங்களே கமெண்டு போடுதல், எதிர் பிளாக் ஆரம்பித்தல் மாதிரி 'கிறுக்கல்கள்' வேலையெல்லாம் பண்ணினார்கள். அப்புறம் ஒரு ஸ்டேஜுக்கு மேல, இனிமே பெண்கள் எழுத்தும் பதிவுகளைப் படிப்பதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்.
// yeyadev das சார் நீங்க இந்தப்பதிவையும் ஒழுங்கா வாசிக்கவில்லை என்று உங்க பின்னூட்டம் மூலம் சொதப்பிக்கொண்டு இருக்கின்றீர்கள் . விடயம் தெரியாமல் ஏன் சார் ஒப்பீடு திருடன் பார்வைக்குப் போகுது ????

Jayadev Das said...
Best Blogger Tips

\\விடயம் தெரியாமல் ஏன் சார் ஒப்பீடு திருடன் பார்வைக்குப் போகுது ???? \\ அதென்ன 'விடயம்', நீங்க தான் கொஞ்சம் சரியாச் சொல்லுங்களேன்! \\நீங்க இந்தப்பதிவையும் ஒழுங்கா வாசிக்கவில்லை என்று உங்க பின்னூட்டம் மூலம் சொதப்பிக்கொண்டு இருக்கின்றீர்கள் .\\ ஒழுங்கா வாசித்து சொதப்பாமல் பின்னூட்டம் போடும் புத்திசாலியாக நீங்கள் ஏன் வாசிக்கவே தெரியாத ஒருத்தரைப் பற்றி எழுது உங்களது பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டும்?

ஹேமா said...
Best Blogger Tips

நிரூ...நித்திரைக்குப் போயிருப்பீங்கள்.இப்பத்தான் வேலையால வந்து பின்னூட்ட அலசல்கள் பாத்தேன்.பாத்தீங்களோ இப்பிடியான ஆக்கள் இருக்கிறவரைக்கும் பொம்பிளைகளை முன்னேற விடுவினமோ.இவைமாதிரி ஆக்களுக்குள்ள கொஞ்சமாவது மனுசரைப்போல நடமாடித் திரியிறதே பெரும் புண்ணியம்தான்.கோடு தாண்டினால் தேவடியாள் எண்டு சொல்லுவினம்.வீட்டோட அடங்கிக் கிடந்தால் மூளயில்லை முண்டம் என்பினம்.இப்பிடியான ஆக்களுக்குப் பயந்தே இஞ்சாலயும் இல்லாம அங்காலயும் இல்லாம அரைகுறையாக் கிடக்கிறம்.ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்.இங்க உங்களோட வாதாடுற பின்னூட்டம் இதைத்தான் சொல்லுது !

நிரூ...நீங்க போட்ட அடியில மணியத்தார் இண்டைக்கு உப்புமடச்சந்திப்பக்கம் வந்திட்டுப் போயிருக்கிறார்.அப்பா யோகாவுக்கும்,அப்பலத்தாருக்கும் ஒருக்காச் சொல்லிவிடுங்கோ நானும் பதிவு எழுதிறனானாம் எண்டு !

ஆமினா said...
Best Blogger Tips

//இனி வரும் பதிவுகளில் நேரடியாக ஒவ்வோர் அடக்குமுறையாளரையும் சுட்டி எழுதனும்!
அப்போது தான் அவர்களுக்கு சுறணை வரும்! உணர்வு பிறக்கும்!//

அம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாடி

ஆமினா said...
Best Blogger Tips

//
ஏன் நம்ம ஆமினா அக்காவும் அவ்வப்போது அரசியலும் எழுதுவா, மொக்கை, நகைச்சுவையும் எழுதுவா//

ஸ்ஸ்ஸ்ஸப்பா... இப்பவாவவது என் நியாபகம் வந்துச்சே :-)

நிரூபன் said...
Best Blogger Tips

நண்பர்களே, தொடர்ந்து விவாதிப்போம்.

இன்று மாலை இப் பதிவுடன் தொடர்புடைய இன்னோர் பதிவினையும்,
இப் பதிவிற்கான தொகுப்புரையினையும் எழுதுகின்றேன்.

ஆமினா said...
Best Blogger Tips

//
சூப்பர் கருத்துங்கோ! ஆனால் டாப் 20 போட்டி,
தமிழ்மண ஓட்டுக்கள் காரணமாக பெண் பதிவர்கள் பலர் காணாமற் போகடிக்கப்படுகிறார்களே!

இதனை நம்பர் ஒன் பதிவர்கள் உணருவார்களா? //

அந்த தரவரிசையிலும் குறை சொல்ல முடியாது நிரூ

ஒரு நாளைக்கு 4 பதிவு, சூடான தலைப்பு வச்சாலே நம்பர் ஒன் ஆகிடலாம். ஆனா பெண்களுக்கு குறைந்த அளவே நேரம் இருப்பதால் வாரம் ஒரு பதிவு என்பதே பெரிய விஷயம் தான்.

ஆக இந்த விஷயத்தில் ஆண்கள் பெண்கள் என போட்டி போடுவது சாத்தியப்படாத ஒன்று. அப்படியே போட்டி இல்லாமல் போனாலும் கவனிக்கப்படாமல் போக வாய்ப்புண்டு.

பெண்பதிவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி அவர்களுக்கென்று தனியாக தரவரிசை கொடுக்கணும்.


இவ்வளவு பேசுற நிரூ ஏன் இந்த வேலை செய்ய கூடாது? பதிவின் தரம்,ஹிட்ஸ், அதற்குறிய விமர்சனங்கள் அடிப்படையில் தரவரிசைபடுத்தலாமே... தொழில் நுட்பம் தெரிந்தவர் தானே ஹி...ஹி..ஹி..

ஆமினா said...
Best Blogger Tips

//
ஆனால் வலையுலகில் நீங்கள் மட்டும் இன்னவை தான் எழுதனும் என்று தீர்மானிக்கனுமா? //

பெண்களின் எண்ணங்கள் பலவற்றை அங்கிகரிக்காத சமூகம் தான் இதற்கு காரணம். அதையும் மீறி எழுதிட்டா ஒடனே பல பிரச்சனைகள்...

ஆனாலும் பதிவுலகில் பல ஆண்பதிவர்கள் பெண்களுக்கு கொடுக்கும் முன்னுரிமை மிகவும் வியப்புக்குரியதே.. சிபி செந்தில், மெட்ராஸ்பவன் சிவகுமார், சிட்டிசன், எதிர்குரல் ஆஷிக், ஹைதர் அலி, சிராஜ், காட்டான், பொன்னர் அம்லத்தார், புட் ஆபிசர், ..... என நீண்டுக்கொண்டே போகும் பட்டியல்... இவங்களாம் மறைமுகமா எந்த அளவுக்கு ஊக்கம் கொடுக்கணுமோ அந்த அளவுக்கு தன்னால் இயன்ற ஆலோசனைகள், வேலைகளை செய்றாங்க. பெண்கள் இன்னவை தான் எழுதணுங்குற கட்டுப்பாடு விதிப்பது பெண்களாகவே தான். ஆனால் அதன் பின்னால் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாதோரின் மீதான் அச்சம் ஒரு புறம்

Jayadev Das said...
Best Blogger Tips

\\பாத்தீங்களோ இப்பிடியான ஆக்கள் இருக்கிறவரைக்கும் பொம்பிளைகளை முன்னேற விடுவினமோ.\\ "ஆயிரம் கைகள் சேர்த்து மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை"- உண்மையான திறமையை யாராலும் தடுத்து நிறுத்தி விட முடியாது. அதே போல இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி ரொம்ப நாளைக்கு ஏமாற்றவும் முடியாது.

\\இவைமாதிரி ஆக்களுக்குள்ள கொஞ்சமாவது மனுசரைப்போல நடமாடித் திரியிறதே பெரும் புண்ணியம்தான்.கோடு தாண்டினால் தேவடியாள் எண்டு சொல்லுவினம்.வீட்டோட அடங்கிக் கிடந்தால் மூளயில்லை முண்டம் என்பினம்.\\ அம்மணி நான் இங்கே எழுதியதெல்லாம், பெண்களுக்கு பெரிய அளவில் சிந்திக்க முடியாது என்று மட்டுமே. ஐன்ஸ்டீன் மாதிரி ஒரு விஞ்ஞானியோ, சாக்ரடிஸ் மாதிரி ஒரு தத்துவஞாநியோ பெண்களில் வரவில்லை என்று மட்டுமே. இதற்க்கு எந்த மாதிரி பதிலை இந்தப் பதிவர் தந்தார் தெரியுமா? சிந்திக்கும் திறனுடைய மேதாவிப் பெண் வருவாள் என்று கூட வாதாடவில்லை, படுக்கையறையில் பெண் மேலே வந்துவிடுவாளாம், ஆண் அவளுக்கு அடிமையாக இருப்பானாம் என்று சாரு நிவேதிதா கொச்சையாக எழுதியுள்ளார். நீங்களும் ஒரு பெண்தானே, இது மாதிரி பெண்களை சதைப் பிண்டமாகப் பார்த்தது தவறு என்று சொல்ல மனம் வந்தாதா? இல்லையே! காரணம் என்ன? இவர் பெண்களுக்கு வக்காலத்து வாங்குகிறார், அதனால் அவர் பெண்கள் படுக்கைக்குத்தான் லாயக்கு என்று சொன்னாலும் உங்களுக்கு அது சரியாகப் படுகிறது. இதற்குத்தான் சொன்னேன் பெண்களுக்கு புத்தி கம்மி என்று.

\\இப்பிடியான ஆக்களுக்குப் பயந்தே இஞ்சாலயும் இல்லாம அங்காலயும் இல்லாம அரைகுறையாக் கிடக்கிறம்.ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்.இங்க உங்களோட வாதாடுற பின்னூட்டம் இதைத்தான் சொல்லுது !\\
பெண் பதிவர்களுக்கு ஆபாசமாக பின்னூட்டம் போடுகிறார்கள் என்று பதிவில் சொல்லிவிட்டு \\அப்புறமா, நீங்க என்ன தான் பல சாலி என்றாலும், ஆண்களுக்குப் பெண்கள் அடங்கிப் போகனும் என்றாலும், நைட்டில நீங்க அவங்களுக்கு அடங்கிப் போகனுமே! இது எப்பூடி! மூளை பலம், உடல் பலம் இருந்தாலும் நீங்க ஆண்மையுள்ளவங்க என்று நிரூபிக்க ஒரு பெண்ணோட சதை பலம் தேவையில்லே! \\ என்று எழுத்தும் இவர் பெண் இனத்தின் உரிமையை நிலை நாட்டப் போகிறார். இதற்க்கு வக்காலத்து வாங்கி சில பெண்கள் இங்கே. விளங்குமா இது? பெண்கள் முட்டாள்கள என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

/நிரூ...நீங்க போட்ட அடியில மணியத்தார் இண்டைக்கு உப்புமடச்சந்திப்பக்கம் வந்திட்டுப் போயிருக்கிறார்.அப்பா யோகாவுக்கும்,அப்பலத்தாருக்கும் ஒருக்காச் சொல்லிவிடுங்கோ நானும் பதிவு எழுதிறனானாம் எண்டு !///

மீயும்...மீயும்... பதிவு எழுதுறனாம் எண்டு எல்லோரிடமும் சொல்லிவிடுங்கோ நிரூபன்..... உஸ்ஸ்ஸ் எதுக்கெடுத்தாலும் முறைக்கிறாங்கப்பா:))

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

அச்சச்சோஒ.. நிரூபன் லொக் பண்ணிட்டாரே அவ்வ்வ்வ்வ்வ்.. என்ர பூஸிண்ட சங்கிலியின் முடிவென்ன நிரூபன், நீங்களும் உப்பூடிப் பேசாமல் இருந்தால் விடமாட்டனெல்லோ?:))

நிரூபன் said...
Best Blogger Tips

@Jayadev Das

பெண்களுக்கு திறமை இருந்தால், அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க ரிசர்வே ஷன் slip-போடு நீங்கள் ஏன் அலைய வேண்டும்?
//

நண்பரே,
ஆண் பதிவர்களுக்கு பதிவுலகில் வரையறைகள் கட்டுப்பாடுகள் குறைவு,
ஆனால் பெண் இன்னவை தான் எழுதனும் என சில ஆணாதிக்கவாதிகள் நினைக்கிறார்கள்.

அடுத்த விடயம் பெண் பதிவர்களால் தமது கருமங்களில் கவனம் செலுத்துவதை விடுத்து எப்போதும் பதிவுலகே கதி என்று ஆண்களைப் போல இருக்க முடியாது! ஆகவே தான் பெண் பதிவர்கள் எழுதினாலும்,
ஆண்கள் தமக்கு ஓட்டு வருவதில்லை, பின்னூட்டம் கிடைப்பதில்லை என்று அவர்களின் எழுத்துக்களைத் தட்டிக் கழிக்கிறார்கள்.

இதனால் தான் பெண் பதிவர்களுக்கு மங்கை, அவள் விடகன், பெண், சக்தி போன்று பத்திரிகைகளில் தனியான பங்களிப்பு இருப்பது போல,
திரட்டிகளிலும் பெண்களின் எழுத்துக்களை இலகுவாக எல்லோரும் அடையாளங் கண்டு படிக்கும் வண்ணம் இப்படி ஓர் அங்கீகாரம் இருந்தால் நல்லதாக அமையுமே என மேற்படி விவாதத்தினைக் கையிலெடுத்திருக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Jayadev Das
பெண்களுக்கு சில விஷயங்களில் திறமை கம்மி என்று கோடிட்டு காட்ட சில உதாரணங்களைக் கூறினேன். கீழ் லெவலுக்கு உதாரணம் வேண்டுமானால் தமிழ்ப் பட இயக்குனர்களில் பெண்கள் இயக்கிய படங்களைப் பாருகளேன், எந்த லட்சணத்தில் இருக்கிறது என்று.//

ஐயா அறிவியலாளரே! பெரியவரே!

எழுத்துலகில் எதற்கு ஐயா, இப்படி அறிவியல் லாஜிக் வேண்டும் என்று சொல்லுறீங்க?

பல பெண்கள் நாவலாசிரியர்களாக, சிறந்த எழுத்தாளர்களாக இல்லையா?

கவிஞர் தாமரை சினிமாவில் சிறந்த பாடகராக இல்லையா?

பொன்மணி வைரமுத்து சிறந்த கவிஞராக இல்லையா?

யோ.புரட்சி, கப்டன் வானதி, மலைமகள், ஆதிலட்சுமி சிவகுமார், கோகிலா மகேந்திரன், எனப் பல பெண் படைப்பாளிகள் ஈழத்தில் மிகத் திறமையான எழுத்தாளர்களாக மிளிர்ந்திருக்கிறார்கள்!

எந்தவொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் பெண் தான் இருக்கிறாள் எனச் சொல்லுகிறது ஆன்றோர் வாக்கு!

உங்களைப் பெற்றவளும் ஓர் தாய் தான்!
நீங்கள் கூறும் தத்துவவியலாளர்கள், அறிவியல் மேதைகள் எனப் பலரைப் பெற்றவளும் ஓர் தாய் தான் என்பதனை மறந்து விட வேண்டாம்!

சாள்ஸ் டார்வினின் கொள்கை என்ன சொல்லுகிறது?

பரம்பரை அணுக்கள் தாயிலிருந்தும், தந்தையிலிருந்தும் கடத்தப்படுகின்றன என்று!

பெண்களை நன்றாகச் சிந்திக்க எமது சமூகம் விடுவதில்லை! இந்தியா என்கின்ற ஒரு நாட்டினையே இத்தாலியினைச் சேர்ந்த பெண் தன் விரல் நுனியில் வைத்து ஆட்டிப் படைக்கலையா?

பெண்களால் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை!
ஆனால் ஆண்கள் பெண்களின் வளர்ச்சியினை புறக்கணித்து, அவர்களின் திறமைகளை மட்டுப்படுத்தி தமக்கு கீழே அமிழ்த்தி வைத்திருக்க நினைத்திருக்கிறார்கள்! கொஞ்ச நேரம் உங்கள் மனதில் உள்ள சில சிந்தனைகளைத் தூரத் தள்ளி வைத்து விட்டு, யோசியுங்கள் புரியும்!

உங்கள் அம்மாவிடம் போய் கேளுங்கள்!

அம்மா நீ ஏன் அம்மா ஓர் விஞ்ஞானியாகவோ இல்லை ஓர் அறிவியல் மேதையாகவோ வரலை என்று?
அந்தக் கதைக்குப் பின்னால் நிச்சயம் உங்களுக்கு கண்ணீர் வரும்! உங்களின் ஐயங்களுக்கு விடையும் கிடைக்கும்.
Please don't waste your time. do it now.

நிரூபன் said...
Best Blogger Tips

@Jayadev Das

\\அப்புறமா MIA, Rihanna, Nattalley Kelly, Lady Gaga இவங்க பத்தி தெரியுமா?\\ Thanks for the info. When I go for bookshop next time I will be careful, not to buy books bearing these names as authors.
//

சார்,
அப்புறம் என்ன இழவிற்கு பெண் எழுத்தாளர்களைப் பத்தி கேட்டீங்க?
பெண்களில் ஏ.ஆர் ரகுமான், இளையராஜா போல உள்ளார்களா என்று கேட்டீங்க?

புத்தகக் கடைக்குப் போனால் இந்த எழுத்தாளர்களின் நூல்களை வாங்க மாட்டேன் என்று சொல்லுறீங்க! இது காமெடி பண்ணுவதற்குரிய நேரம் அல்ல! காத்திரமாக விவாதிப்பதற்குரிய நேரமுங்கோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@Jayadev Das

நானும் பெண் பதிவர்கள் சிலரின் பதிவுகளைப் படித்தேன் பாஸ். சாந்தி முஹூர்த்தம் [ஸ்ரீபிரியா இயக்கிய படம்] மாதிரியே இருந்தது. [படம் பார்த்தவங்க பாதிக்கு மேல எவனும் தியேட்டரில் உட்கார மாட்டான்]. இதில, சிலர் தன்னோட பதிவுக்கு வேறு பெயரில் தாங்களே கமெண்டு போடுதல், எதிர் பிளாக் ஆரம்பித்தல் மாதிரி 'கிறுக்கல்கள்' வேலையெல்லாம் பண்ணினார்கள். அப்புறம் ஒரு ஸ்டேஜுக்கு மேல, இனிமே பெண்கள் எழுத்தும் பதிவுகளைப் படிப்பதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்.
/

நண்பரே

ஆண் பதிவர்கள் தான் தமது பதிவிற்கு கள்ள ஐடி வைத்து கமெண்ட் போடுவது,
அனானி போல கமெண்ட் போடுவது போன்ற செயல்களைச் செய்வது. தமக்குத் தாமே ஓட்டுப் போடும் செயலைச் செய்வது.
ஆனால் பெண் பதிவர்கள் அப்படி அல்ல.
தமது பதிவுகளுக்கு தாமே கமெண்ட் போடுவதில்லை! முதலில் உங்களின் வக்கிர புத்தியினைக் கொஞ்சம் களையப் பாருங்கள்!

பல பெண் பதிவர்களின் பதிவுகளை நீங்கள் இன்னமும் படிக்கவில்லை போலும்!

நிரூபன் said...
Best Blogger Tips

@Jayadev Das
பாருங்க பெண்களுக்கு வக்காலத்து வாங்கப் போயி நீங்க பேலன்சை விட்டுட்டு மஞ்சள் கலரில் [சாறு நிவேதிதா மாதிரி] எழுத ஆரம்பிச்சிட்டீங்க. ஆனா, என்னால் அப்படி எழுத முடியாது, அவசியமும் இல்லை, ஏனெனில் புத்தி கம்மியான இனத்துக்கு நான் வக்காலத்து வாங்கும் வேலையைச் செய்யவில்லை.///

நண்பரே, நீங்கள் சொன்னீங்கள் பெண்கள் எதற்குமே லாயக்கு இல்லை என்று!
ஓக்கே!

அதற்குத் தான் உங்களைப் போன்ற ஈனத் தனமாகச் சிந்திக்கும் அற்ப பிறவிகள் பார்வையில் பெண்கள் இதற்காச்சும் லாயக்கா இருப்பார்களே என்று சொல்ல வந்தேன், மற்றும் படி பெண்களைக் கொச்சைப்படுத்தனும் எனும் நோக்கில் நான் இப்படி எழுதலைங்கோ!

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

நிரூபன்... நிரூபன்... இந்தக் கொடுமையைக் கொஞ்சம் கேழுங்கோ... நம்பியெல்லோ என்பக்கத்துக்குப் பூட்டுப் போடாமல் வைத்திருக்கிறேன், என் கறுப்புப் பூஸாரின் கழுத்திலிருந்த 5 பஉண் சங்கிலியையும், அதில் கோத்திருந்த வைரக்கல் பதித்த பென்ரனையும் காணவில்லையே..... இப்ப நான் எங்கின போய்த் தேடுவேன்:)))... இதில ரீ, பலகாரம் வேற தேவையாக்கிடக்காமே... அவ்வ்வ்வ்வ்வ்:))).
//

சங்கிலியை வைத்து அவன் ஆப்பிள் ஐபோன் வாங்கிப்போட்டானாம்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

ஹா..ஹா..ஹா.. சிங்கம் பார்த்திருக்கிறேன், ஆனா மீசை வச்ச சிங்கத்தை இப்போதான் பார்க்கிறேன்:)
//

அம்பலத்தார் ஐயாவையே சீண்டிப்புட்டீங்களே!

நிரூபன் said...
Best Blogger Tips

@athira
யாருக்காவது தெரியுமோ? எதுக்காக பெண்களின் வயதைவிட ஆண்களின் வயதை அதிகமாக்கி திருமண பந்தத்தில் இணைக்கிறார்கள் என?.

பெண்களின் அறிவுக்கூர்மை ஆண்களைவிட அதிகமாக இருப்பதினாலேயே ஒரே வயதில் திருமணம் முடித்துக் கொடுக்காமல் ஆண்களுக்கு கொஞ்சம் வயது அதிகமாக வைக்கிறார்கள்... இது அன்று தொட்டு ஏற்படுத்திய முறை.

பெண் புத்தி பின்புத்தி என்பதன் கருத்து தெரியுமோ?... ஆண்களைவிட பெண்களுக்கே.. உள்ளுணர்வு அதிகம்.... இந்த உள்ளுணர்வான அறிவு.. ஆண்களுக்கு மிகவும் குறைவாகவே இருக்கிறதாம்.//

ஹே..ஹே..
இது கருத்து! இப்போவாச்சும் சிலருக்கு புத்தி வந்திருக்கும் என நினைச்சேன்! ஆனால் வரலைங்கோ!

நிரூபன் said...
Best Blogger Tips

@Jayadev Das
ஒரு பெண்ணுக்கு நாற்ப்பது வயதுக்குள் மேல் மெனோபாஸ் வந்துவிடும் தாம்பத்தியத்தில் ஈடுபாடு இருக்காது, ஆனால் ஆண் அந்த மாதிரி வயது வரம்பு எதுவும் இல்லாதவன். அவனால் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருப்பது கடினம். அதனால் பெண் ஐந்து முதல் பத்து வருடங்கள் வரை இளையவளாக இருப்பது நலம். இது தவிர இந்த வயது வேறுபாட்டுக்கு எந்த காரணமுமில்லை.//

இது செம காமெடிங்கோ!

ஊரில நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெருசுங்கள் தான் வீதியில் இருக்கும் வயது வந்தவர்களுக்கான படப் போஸ்டரைப் பார்த்து ஜொள்ளு வடிப்பதும், பெண்களைப் பார்த்து கிண்டல் அடிப்பதும்! ஆனால் பெண்கள் நாற்பது வயதின் பின்னர் நன்றாக இருக்கிறார்களே!
செய்திகளில் தன்னோட மகளை மானபங்கப்படுத்திய நாற்பது வயது தந்தை என்று தானே வந்திருக்கு!!!

எங்கேயாச்சும் தன்னோட மகனை வல்லுறவிற்கு உட்படுத்திய தாய் அப்படீன்னு வரல்லையே!

நிரூபன் said...
Best Blogger Tips

@Jayadev Das
ஆனால், பதிவுகள் படிக்கப் படவேண்டுமால், பதிவருக்கு வாசகர்களுக்கு பிடிக்கும்படியாக எழுதும் புத்திசாலித் தனம் வேண்டும், அது பெண்களுக்கு இல்லை எனபது எனது கருத்து.//

நண்பரே! நீங்கள் இன்னமும் ஓர் குறுகிய சிந்தனை வட்டத்திற்குள் தான் இருக்கிறீங்க.

பெண்களில் பலர் புத்திசாதுரியமாகவும் எழுதுகிறார்கள்! அவர்களின் படைப்புக்களை வெகு விரைவில் தேடிப்படித்து தங்களின் அறியாமையைப் போக்கிட திருப்பதி வெங்கடேசன் அருள் புரிவார் என நினைக்கிறேன்!

நிரூபன் said...
Best Blogger Tips

@Jayadev Das

பஸ்ஸில் பிக் பாக்கெட் அடிக்குமாறு மூஞ்சியை வைத்துக் கொண்டிருக்கும் அதிகம் படிக்காத ஒருத்தன், நன்றாகப் படித்து சர்வதேச நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிக்கும் முப்பத்தியிரண்டு பெண்களை கல்யாணம் செய்து காட்டலாம் என்ற அளவுக்குத்தான் \\பெண்களின் அறிவுக்கூர்மை\\ இருக்கிறது.
//

சார்...
இப்போதைய காலப் பெண்களுடன் நீங்கள் இப்படி வாலாட்ட முடியாது! இப்ப எல்லோரும் உஷாராகிட்டாங்கோ! வேண்ணா, உங்க அடுத்த தெருப் பெண் கிட்ட ஜொள்ளு விட்டுப் பாருங்க! அடுத்த நிமிடம் ஈவிடீசிங் கேஸில கம்பி எண்ணுறீங்களா இல்லையா என்று பார்ப்போம்!
அவ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔
மீக நீண்ட நாளுக்குப் பின் வருகிறேன் என நினைக்கிறேன்....

நிறையச் சொல்லாம் மச்சி ஆனால் வருகை பிந்திவிட்டதோ எனத் தோணுகிறது...

எப்படிச் சொல்லலாம் என்கிறாயா... என்னோடயே ஒரு பெண் பதிவர் இருப்பதால் அவர்களின் மனநிலை, தாக்கம் என்பவற்றை நேரேயே அறிகிறேன்...//

மச்சி வருகை பிந்தலை! தொடர்ந்து விவாதிப்போம் என பதிவில் அறிவித்திருக்கிறேன்!
உன்னோட அக்காவைப் பத்தியும் நாம் இங்கே குறிப்பிட்டிருக்கிறோம்! நேசன் சிறப்பான கருத்துக்களை உன்னோட அக்கா பத்திச் சொல்லியிருக்கார்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா
இப்பிடியான ஆக்களுக்குப் பயந்தே இஞ்சாலயும் இல்லாம அங்காலயும் இல்லாம அரைகுறையாக் கிடக்கிறம்.ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்.இங்க உங்களோட வாதாடுற பின்னூட்டம் இதைத்தான் சொல்லுது !//

இதுவும் கடந்து போகும் எனச் சொல்லி விட்டு இருப்போம்! இப்படியும் வக்கிர மனிதர்கள் உள்ளார்கள் என்பது வேதனை தான்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமாநிரூ...நீங்க போட்ட அடியில மணியத்தார் இண்டைக்கு உப்புமடச்சந்திப்பக்கம் வந்திட்டுப் போயிருக்கிறார்.அப்பா யோகாவுக்கும்,அப்பலத்தாருக்கும் ஒருக்காச் சொல்லிவிடுங்கோ நானும் பதிவு எழுதிறனானாம் எண்டு !
//

பல தடவை சொல்லியிருக்கேன்! இனிமேல் வருவார்கள் என நினைக்கிறேன்.

உங்கட பதிவுகளையும் பேஸ்புக்கில சேர் செய்வேன்.

இனிமேல் எல்லோரும் வருவார்கள்! நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆமினா
//இனி வரும் பதிவுகளில் நேரடியாக ஒவ்வோர் அடக்குமுறையாளரையும் சுட்டி எழுதனும்!
அப்போது தான் அவர்களுக்கு சுறணை வரும்! உணர்வு பிறக்கும்!//

அம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாடி //

அதான் பின்னூட்டத்தில நான் பெயர் சுட்டாமலே தானும் ஓர் அடக்குமுறையாளர் என ஒரு பதிவர் பின்னூட்டம் இடுகிறாரே! பார்த்தா தெரியலை!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆமினா
ஏன் நம்ம ஆமினா அக்காவும் அவ்வப்போது அரசியலும் எழுதுவா, மொக்கை, நகைச்சுவையும் எழுதுவா//

ஸ்ஸ்ஸ்ஸப்பா... இப்பவாவவது என் நியாபகம் வந்துச்சே :-)//

உங்கள் பெயர் இப் பதிவெழுத முன்னாடியே ஞாபகத்தில் இருந்திச்சு.
ஆனால் நீங்கள் தந்த கருப் பொருளின் அடிப்படையில் எழுதப்பட்ட பதிவிற்கு எப்படி உங்கள் பெயரையும் சேர்ப்பது என்று நினைத்து பம்மிட்டேன்!
அவ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆமினா

அந்த தரவரிசையிலும் குறை சொல்ல முடியாது நிரூ

ஒரு நாளைக்கு 4 பதிவு, சூடான தலைப்பு வச்சாலே நம்பர் ஒன் ஆகிடலாம். ஆனா பெண்களுக்கு குறைந்த அளவே நேரம் இருப்பதால் வாரம் ஒரு பதிவு என்பதே பெரிய விஷயம் தான்.
//

ஒரு நாளைக்கு நாலு தலைப்பு எழுதுவோர், வெறி கொண்டு எழுதுவோர், அவர்களின் வெறிக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வண்ணம் நான் இரண்டு பதிவு எழுதி,. நான்கு பதிவினை விட இரண்டு பதிவுகள் பவர்புல் என்றும் செய்து காட்டியிருக்கேன்!

ஆனால் என்ன தான் தலைகீழாக நின்று ஒரு நாளைக்கு நாலு பதிவினை எழுதி, பல தலைப்புக்களினைப் போட்டாலும்,
ஒரு பெண் பதிவர் எழுதும் சிங்கிள் பதிவினைப் போல அவர்களால் எழுத முடியாது அல்லவா?

அப்படி நம்பர் வன் என்று இனிமே யாரும் சொல்லட்டும்! செம பேச்சு குடுக்கிறேன்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆமினாஆக இந்த விஷயத்தில் ஆண்கள் பெண்கள் என போட்டி போடுவது சாத்தியப்படாத ஒன்று. அப்படியே போட்டி இல்லாமல் போனாலும் கவனிக்கப்படாமல் போக வாய்ப்புண்டு.
பெண்பதிவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி அவர்களுக்கென்று தனியாக தரவரிசை கொடுக்கணும்.
இவ்வளவு பேசுற நிரூ ஏன் இந்த வேலை செய்ய கூடாது? பதிவின் தரம்,ஹிட்ஸ், அதற்குறிய விமர்சனங்கள் அடிப்படையில் தரவரிசைபடுத்தலாமே... தொழில் நுட்பம் தெரிந்தவர் தானே ஹி...ஹி..ஹி..
//

பெண் பதிவர்களை போட்டி போடச் சொல்லவில்லை! அவர்களின் எழுத்துக்களிற்கு முன்னே சிலரின் மொக்கைகள் எல்லாம் கால் தூசி!
பெண் பதிவர்களுக்கென்று திரட்டிகளில் தனிப் பிரிவு இருந்தாலே அவர்களின் படைப்புக்கள் கண்டறியப்படும். வெகு விரைவில் இந்த முறையினைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறேன்!

இது தொடர்பான இன்னோர் விளக்கப் பதிவினை எழுதுகின்றேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆமினா

பெண்களின் எண்ணங்கள் பலவற்றை அங்கிகரிக்காத சமூகம் தான் இதற்கு காரணம். அதையும் மீறி எழுதிட்டா ஒடனே பல பிரச்சனைகள்...
//

உண்மை தான்! இன்றைய பதிவில் கூட பல ஆண் பதிவர்கள் தம் உண்மை முகத்தினைக் காட்டியிருக்கிறார்கள்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆமினா

ஆனாலும் பதிவுலகில் பல ஆண்பதிவர்கள் பெண்களுக்கு கொடுக்கும் முன்னுரிமை மிகவும் வியப்புக்குரியதே.. சிபி செந்தில், மெட்ராஸ்பவன் சிவகுமார், சிட்டிசன், எதிர்குரல் ஆஷிக், ஹைதர் அலி, சிராஜ், காட்டான், பொன்னர் அம்லத்தார், புட் ஆபிசர், ..... என நீண்டுக்கொண்டே போகும் பட்டியல்... இவங்களாம் மறைமுகமா எந்த அளவுக்கு ஊக்கம் கொடுக்கணுமோ அந்த அளவுக்கு தன்னால் இயன்ற ஆலோசனைகள், வேலைகளை செய்றாங்க. பெண்கள் இன்னவை தான் எழுதணுங்குற கட்டுப்பாடு விதிப்பது பெண்களாகவே தான். ஆனால் அதன் பின்னால் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாதோரின் மீதான் அச்சம் ஒரு புறம்
//

இந்தப் பட்டியலில் என்னோட பெயரைத் தவறவிட்டமை ஒரு வரலாற்றுப் பிழை என்பதனை கண்ணீருடன் அறிவிக்கிறேன்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@Jayadev Das
அம்மணி நான் இங்கே எழுதியதெல்லாம், பெண்களுக்கு பெரிய அளவில் சிந்திக்க முடியாது என்று மட்டுமே. ஐன்ஸ்டீன் மாதிரி ஒரு விஞ்ஞானியோ, சாக்ரடிஸ் மாதிரி ஒரு தத்துவஞாநியோ பெண்களில் வரவில்லை என்று மட்டுமே. இதற்க்கு எந்த மாதிரி பதிலை இந்தப் பதிவர் தந்தார் தெரியுமா? சிந்திக்கும் திறனுடைய மேதாவிப் பெண் வருவாள் என்று கூட வாதாடவில்லை, படுக்கையறையில் பெண் மேலே வந்துவிடுவாளாம், ஆண் அவளுக்கு அடிமையாக இருப்பானாம் என்று சாரு நிவேதிதா கொச்சையாக எழுதியுள்ளார்.//

ஐயா, பெரியவரே! மீண்டும் ஒருவாட்டி பின்னூட்டங்களை படியுங்கள். விஞ்ஞானிகளின் பெயர், பெண் படைப்பாளிகளின் பெயர், மற்றும் அறிவியல், இசை, இன்னும் பல துறைகளில் பெண்களின் பங்களிப்புக்கள் என்ற என்று நான் விரிவாக தங்களுக்கு ஓர் பதில் கொடுத்தேனே!

அந்தப் பதிலை நீங்கள் ஏற்றுக் கொள்ளாது பெண் ஒருத்தி ராக்கட் அனுப்பினாளா என்று கேட்டீங்க! அப்புறமா பெண் பலசாலியா என்றோர் கேள்வி கேட்டீங்க!

உங்களைப் போன்ற வக்கிர மனம் படைத்தோர் பார்வையில் பெண்ணை எந் நிலையில் நீங்கள் வைத்திருக்கிறீங்க என்பதனை விளக்கவே இப்படியான ஓர் பதிலைக் கொடுத்தேன்!

புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்!

நிரூபன் said...
Best Blogger Tips

@Jayadev Das
நீங்களும் ஒரு பெண்தானே, இது மாதிரி பெண்களை சதைப் பிண்டமாகப் பார்த்தது தவறு என்று சொல்ல மனம் வந்தாதா? இல்லையே! காரணம் என்ன? இவர் பெண்களுக்கு வக்காலத்து வாங்குகிறார், அதனால் அவர் பெண்கள் படுக்கைக்குத்தான் லாயக்கு என்று சொன்னாலும் உங்களுக்கு அது சரியாகப் படுகிறது. இதற்குத்தான் சொன்னேன் பெண்களுக்கு புத்தி கம்மி என்று. //

நண்பரே! உங்கள் கேள்விகள் அனைத்திற்கும் சரியான பதிலைச் சொன்னேன்!
வக்கிர குணமுள்ள உங்களைப் போன்றோர் பெண்ணைச் சதைப் பிண்டமாகவும், ஆடைகளைத் துவைக்கவும் பாவிக்கிறார்கள் என்பதனை நண்பர் ஐடியமணியும் பதிவின் ஆரம்ப பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார்!

பெண்களின் பங்களிப்பு தொடர்பில் கேட்டீங்க! அறிவியல், அரசியல் எனப் பல துறைகளில் அவர்களின் பங்களிப்புக்களைப் பற்றிச் சொன்னேன்! எள்ளி நகைத்தீர்கள்!

இறுதியாக பெண்கள் பலசாலிகளா என்று கேட்டீங்க! அந்தக் கேள்வியின் அடிப்படையில் உங்களைப் போன்ற ஈனப் பிறவிகளின் மன நிலையில் பெண்களை நீங்கள் எந் நிலையில் வைத்திருக்கிறீங்க என்பதனை விளக்கவே மேற்படி பதிலைக் கொடுத்தேன்!

நிரூபன் said...
Best Blogger Tips

@Jayadev Das

பெண் பதிவர்களுக்கு ஆபாசமாக பின்னூட்டம் போடுகிறார்கள் என்று பதிவில் சொல்லிவிட்டு \\அப்புறமா, நீங்க என்ன தான் பல சாலி என்றாலும், ஆண்களுக்குப் பெண்கள் அடங்கிப் போகனும் என்றாலும், நைட்டில நீங்க அவங்களுக்கு அடங்கிப் போகனுமே! இது எப்பூடி! மூளை பலம், உடல் பலம் இருந்தாலும் நீங்க ஆண்மையுள்ளவங்க என்று நிரூபிக்க ஒரு பெண்ணோட சதை பலம் தேவையில்லே! \\ என்று எழுத்தும் இவர் பெண் இனத்தின் உரிமையை நிலை நாட்டப் போகிறார். இதற்க்கு வக்காலத்து வாங்கி சில பெண்கள் இங்கே. விளங்குமா இது? பெண்கள் முட்டாள்கள என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?
//

நீங்கள் ஓர் முட்டாள் என்பதற்கும், நீங்கள் ஓர் சைக்கோ என்பதற்கும் மேலே உள்ள பின்னூட்டங்கள் சிறந்த பதிலைக் கொடுக்கும்!

நீங்கள் கேட்ட பலசாலி கேள்வியின் அடைப்படையிலும்,
பெண்களின் பங்களிப்புக்கள் பற்றி நீங்கள் கேள்வி கேட்கையில் நான் சொன்ன பதிலை அடிப்படையாக வைத்து நீங்கள் பெண்கள் எதற்குமே லாயக்கு இல்லை என்று சொல்லிய நிலமையின் அடிப்படையிலும் தான் மேற்படி கருத்துக்களை
உங்கள் புத்தியில் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்பதனை விளக்கிடக் கையாண்டேன்!

தவிர, பெண்களை முட்டாளாக்கும் நோக்கில் இப்படி ஓர் கருத்தினைக் கையாளவில்லை!

பெண்களை முட்டாள் எனச் சொல்லும் நீங்கள் உங்களைப் பெற்ற தாயிற்கு முன்னே போயி அவளிடம் சொல்லி விட்டு வாருங்கள்!
உங்கள் பாசையின் அடிப்படையில் பெண்கள் முட்டாள் என்றால் முட்டாளுக்குப் பிறந்த நீங்களும் ஓர் முட்டாள் தானே!

நீங்கள் என்ன புத்திசாலியா?

நான் முட்டாளுடன் பேச விரும்பவில்லை!
காரணம் உங்கள் அன்னை ஓர் முட்டாளாக இருப்பதால், உங்கள் உடன் பிறந்த சகோதரிகள் முட்டாளாக இருப்பதால்
உங்களுக்கும் சிறு வயது முதல் ஏனைய பெண்களும் முட்டாள் என்கின்ற வக்கிர புத்தி மனதில் பதிந்திருக்கும்!

இனிமே நான் முட்டாளுடன் பேச விரும்பவில்லை!
அறிவீலீகளுடன் என் நேரத்தை வீணடிக்க விரும்பலை!
புத்தியற்ற அற்ப ஜென்மங்களுடன் பேச விரும்பலை!

உங்களை நீங்களே முட்டாள் என ஒத்துக் கொள்ளுங்கள் நண்பா!

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

மீயும்...மீயும்... பதிவு எழுதுறனாம் எண்டு எல்லோரிடமும் சொல்லிவிடுங்கோ நிரூபன்..... உஸ்ஸ்ஸ் எதுக்கெடுத்தாலும் முறைக்கிறாங்கப்பா:))
//

எல்லோரிடமும் மீண்டும் ஒருவாட்டி ஓர் அறிமுகம் கொடுத்து சொல்லிடுறேன்!

கொஞ்ச பலகாரமும், ஸ்ரோபரி சீஸ் கேக்கும், ரைஸ் புட்டிங்கும் அனுப்பி வையுங்க!

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

அச்சச்சோஒ.. நிரூபன் லொக் பண்ணிட்டாரே அவ்வ்வ்வ்வ்வ்.. என்ர பூஸிண்ட சங்கிலியின் முடிவென்ன நிரூபன், நீங்களும் உப்பூடிப் பேசாமல் இருந்தால் விடமாட்டனெல்லோ?:))
//

ஹே...ஹே..

அதான் பூஸின் சங்கிலி களவெடுத்த ஆள், உங்க ப்ளாக் பக்கம் வேறு ஏதும் திருடலாம் என்ற நோக்கத்தில வந்திருக்காரே!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

6 மனமே 6...
அந்த ஆண்டவன் கட்டளை 6....


கடவுளே எல்லோருக்கும் நல்ல புத்தியைக் கொடு:).

வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை...
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை....

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..
இருட்டினில் நீதி மறையட்டுமே...
தன்னாலே வெளிவரும் தயங்காதே..
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே.....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இது சிட்டுவேஷன் சோங்... பிபிசில போகுது...:))

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. குறைமாதத்தில பிறந்தவர்போல அவதிப்பட்டு புதுத்தலைப்பைப் போட்டிட்டார்... இதுக்கொரு முடிவு கட்டாமல்... இன்றும் விட்டிருக்கலாமெல்லோ தலைப்பை.. சும்மா பின்னிப் பெடல் எடுத்திருப்போமெல்லோ... ஹையோ நான் இப்பவும் கட்டிலுக்குக் கீழ இருந்துதான் ரைப் பண்ணுறேன்:))..

//கொஞ்ச பலகாரமும், ஸ்ரோபரி சீஸ் கேக்கும், ரைஸ் புட்டிங்கும் அனுப்பி வையுங்க!//

ரொம்ப முக்கியம்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

//அதான் பூஸின் சங்கிலி களவெடுத்த ஆள், உங்க ப்ளாக் பக்கம் வேறு ஏதும் திருடலாம் என்ற நோக்கத்தில வந்திருக்காரே!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

உஸ்ஸ்ஸ்ஸ் நிரூபன்.. என்பக்கம் வந்த ஆக்களை உப்பூடி மரியாதை இல்லாமல் கதைக்கப்படாது okay? அவர் ரொம்ப நல்லவர் பேசிக்ல:)).. ஆனா இப்பத்தான் ஆரோடயோ கூட்டுச் சேர்ந்து கெட்டுப்போயிருப்பதாகக் கேள்வி....:))

ஹையையோ... இதுக்குமேலயும் நான் இங்கின நிற்பேன் என எதிர்பார்க்கிறீங்களோ?

நிரூபன் போட்ட புதுத்தலைப்பை டிலீட் பண்ணுங்க.. இதிலயே கதைக்கலாம் சொல்லிட்டேன்.. பேச்சுப் பேச்சா இருக்கோணும்...

இத்தலைப்பை மேல விடுங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

அடுத்த பொம்பிளைத் தாதா,
சாரி அன்பு அக்காச்சி அதிராவின் வேண்டுகோளுக்கு அமைவாக இப் பதிவினை மேலே கொண்டு வந்தாச்சு!

வாருங்கள் விவாதிப்போம்!
அவ்வ்வ்வ்வ்வ்

«Oldest ‹Older   1 – 200 of 282   Newer› Newest»

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails