Tuesday, November 15, 2011

The Pursuit Of Happyness: விமர்சனம் - கண்களில் நீர் சொரிய வைக்கும் கண்ணீர் காவியம்!

கண்டிப்பாக நாம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்: இளமையில் கொடுமை வறுமை என்று ஔவையார் சொல்லிய வரிகளுக்கான அர்த்தத்தினை எம் வாழ் நாளில் நாம் ஒவ்வொருவரும் என்றாவது ஒரு நாள் கடந்து வந்திருப்போம். ஒரு இளைஞனின் வாழ்வில் வறுமை வந்தால் தன்னால் இயன்ற முயற்சிகளைச் செய்து தள்ளாடும் தன் வாழ்வினைத் தூக்கி நிறுத்திட அவன் முயற்சி செய்வான். ஆனால் ஒரு குடும்பஸ்தனின் வாழ்வில் வறுமை ஏற்பட்டால் அவனது நிலமை என்னாகும்? உலகில் இடம் பெற்ற யுத்தங்களில் பெரும்பாலான யுத்தங்கள் பசிக் கொடுமையினாலும், ஆற்றாத வறுமைப் பிணியினாலும் இடம் பெற்றிருக்கின்றன. ஏன் இன்றும் ஆபிரிக்க கண்டத்தில் கொடிய வறுமையின் காரணத்தினால் பல துயரங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
எம் போன்ற பிற நாட்டவர்களின் பார்வையில் அமெரிக்கா எனப்படுவது முதலாளித்துவ நாடு! பிற நாடுகளைச் சுறண்டித் தம் விடா முயற்சியினால் செல்வச் செழிப்போடு விளங்கும் நாடு.ஆனால் அந்த அமெரிக்கப் பொருளாதாரத்தினை ஒவ்வோர் தடவையும் ஆட்டம் காணச் செய்து பொருளாதார ரீதியில் அமெரிக்காவின் ஸ்திரத் தன்மையினை வீழ்ச்சியடையச் செய்கின்ற சம்பவம் தான் வேலையில்லாப் பிரச்சினையாகும்(Recession). ஒரு திருமணமான ஆண், தன் மனைவியுடனும் ஐந்து வயது மகனுடனும் வாழ்ந்து வரும் போது, தன் வேலையினைப் பொருளதார வீழ்ச்சி காரணமாக இழந்த பின்னர், அவனது வாழ்வில் நிகழும் துயரங்கள் நிறைந்த சம்பவங்களை எம் கண் முன்னே காட்டி நிற்கும் ஒரு கண்ணீர் காவியம் தான் The Pursuit Of Happyness எனும் பெயரில் 2006ம் ஆண்டு வெளியான திரைப்படமாகும். 

பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் எனும் வாக்கிற்கமைவாக இத் திரைப்படத்தின் கதா நாயகன் கிரிஸ் (Chris) அவர்களுடன் மனைவியாக வாழ்ந்து வரும் லின்டா வறுமையின் பிடியில் கணவன் சிக்கி, வேலையேதுமின்றி வீட்டில் உட்கார்ந்திருக்கும் போது; அவருடன் வாழ விருப்பமின்றி தன் குழந்தையினையும் கை விட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறிச் நியூயோர்க் சென்று வாழ ஆரம்பிப்பதும், தன் மகனுடன், வறுமையின் பிடியில் சிக்கி தன் வாழ்க்கையினை நகர்த்த முடியாது திண்டாடும் கிரிஸ் அவர்கள் தான் குடியிருந்த வீட்டினை விட்டு விலகி, இறுதியில் வாடகை ஓட்டலில் குடியிருந்து அங்கும் பணங் கொடுக்க மனமின்றி தவிப்போடு தனக்கான இருப்பிடத்தினைத் தேடிச் செல்லுவதும் எம் மனதில் கவலையினை வர வைக்கும் யதார்த்தம் நிறைந்த காட்சிகளாகும். 

கொஞ்சம் உணர்வு பூர்வமாக இப் படத்தினை நீங்கள் ஒன்றித்துப் பார்க்கும் போது; ஒரு கட்டத்தில் இருப்பிடம் ஏதுமின்றி தன் கையில் இருக்கும் நோயாளிகளின் குருதி அமுக்கத்தினைப் பரிசோதிக்கும் இயந்திரத்தினை டைம் மெசின் (காலக் கடிகாரம்) எனத் தன் மகன் கிறிஸ்தோபருக்குப் பொய் சொல்லி, அவனைத் தூங்க வைப்பதற்காக புகையிரத நிலைய மலசல கூடத்தினைத் தெரிவு செய்யும் காட்சிகளும் என்ன வாழ்க்கை இது என்கின்ற வெறுப்பு நிறைந்த உணர்வினை எம் மனதில் கண்டிப்பாக வரவைக்கும் என்பதில் ஐயமில்லை. இந்தக் காட்சிகளைப் பார்க்கும் போது Oh! Shit! What the hell! IS that Life? என எனக்குள் நானே எண்ணிக் கொண்டேன்.

தொழிலேதுமின்றித் திண்டாடும் நாயகனின் கையில் எஞ்சியிருக்கும் ஒரே ஒரு சிறியளவிலான மூலதனம் தான் மருத்துவத் தேவைக்கு பயன்படுத்தும் விற்பனை இயந்திரமாகும். மருத்துவர்கள் பயன்படுத்தும் இயந்திரத்தினை ஒவ்வோர் வைத்தியசாலைக்கும் சென்று மருத்துவர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். மருத்துவருக்கு அவ் இயந்திரம் பிடித்திருந்து அவர் வாங்கினால் பணம் கிடைக்கும். இல்லையேல் அடுத்த மருத்துவமனையினை நாட வேண்டும். இந்த மெசினை கொண்டு செல்லும் ஒவ்வோர் வேளையும் ஒவ்வோர் இடங்களில் தவற விட்டு விட்டு பின்னர் கவலை தோய்ந்த முகத்தோடு ஓடிச் சென்று அம் மிசினைத் தேடுவதனூடாக இப் படத்தின் கதா நாயகன் வில் சிமித் அவர்களின் உணர்வு பூர்வமான நடிப்பு மனதில் பதிந்து விடுகின்றது. 
மனைவியின்றி வறுமையின் பிடியில், தன் சிறு குழந்தையின் ஆசைகளை - ஆவலினை - விருப்பங்களை நிறைவேற்ற முடியாதவராகவும், தன் வாழ்க்கையினை மேம்படுத்த முடியாதவராகவும் திண்டாடும் கிரிஸ் அவர்களது வாழ்வினை முன்னேற்றுவதற்கு இருக்கின்ற இறுதி அஸ்திரம் தான் தன்னம்பிக்கை! அந்தத் தன்னம்பிக்கையினைக் கொண்டு நாயகன் கிரிஸ் அவர்கள் வாழ்க்கையில் எவ்வாறு முன்னேறினார்? அவரைச் சூழ்ந்துள்ள கடன் தொல்லைகள் யாவும் தீரும் வண்ணம் எவ்வாறு செயற்பட்டார்? ஆகிய வினாக்களுக்கான விடைகளை நீங்கள் இத் திரைப்படத்தினைப் பார்ப்பதனூடாக நீங்கள் அறிந்து கொள்ள முடியும். உதவுவோர் யாருமின்றி, இருப்பதற்கு வீடும் இன்றி அநாதைகள் - வீடற்றோர் தங்கும் காப்பகத்தினை நாடிச் சென்று வரிசையில் நின்று அங்கும் இருப்பிடம் கிடைக்காது தேவாலயம் நோக்கி நாயகன் தன் மகனைத் தூக்கி கொண்டு செல்லும் காட்சிகளும் உங்கள் மனங்களை கலங்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை! 

அதுவும், தன் பிள்ளையினைத் தூக்கிக் கொண்டு போய், ஆண்டவன் சன்னிதானத்தில் மண்டியிட்டு வேண்டுகின்ற காட்சியிருக்கிறதே! அப்பாடா! எவ்வளவு உணர்வு பூர்வமாகப் படமாக்கியிருக்கிறார்கள். காமெடி கலந்த ஆக்சன் படங்களில் எம்மையெல்லாம் சிரிப்பூட்டித் தன் திறமையால் கட்டிப் போட்ட வில் சிமித் (Will Smith) அவர்கள் இத் திரைப்படத்தின் கதா நாயகனாக கிரிஸ் என்ற பாத்திரமேற்று நடித்திருக்கிறார். வில் சிமித் அவர்களின் மகன் Jaden Christopher Syre Smith அவர்கள் இப் படத்தில் வில்சிமித்தின் மகனாக நடித்திருக்கிறார். வில் சிமித்தின் மகன் Jaden Smith அவர்கள் நடித்த முதலாவது திரைப்படமும் இதுவாகும். வில் சிமித்தின் மனைவியாக நடிகை Thandie Newton அவர்கள் இப் படத்தில் லின்டா எனும் கதா பாத்திரமேற்று நடித்திருக்கிறார்.

நடிகை Thandie அவர்களுக்கு இத் திரைப் படத்தில் காட்சிகள் குறைவு என்பதால் வில் சிமித் அவர்களும், அவரது மகனும் உணர்வு பூர்வமான காட்சிகளினூடாக எம் கண்களைக் கலங்கச் செய்கிறார்கள். உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இத் திரைப்படத்தினை Columbia Pictures நிறுவனத்தினர் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள். 2006ம் ஆண்டு திரைக்கு வந்து பாக்ஸ் ஆப்பிசில் அண்ணளவாக $308,000,000 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாக ஈட்டியிருக்கிறது இப் படம். Andrea Guerra அவர்களின் மென்மையான இசை இப் படத்திற்கு எம் உணர்வுகளை உருக்கும் வண்ணம் மெரு கூட்டியிருக்கிறது. எம் மன உணர்வுகளை உருக்கும் இப் படத்தினை Gabriele Muccino அவர்கள் இயக்கியிருக்கின்றார். 

Steven Conrad அவர்கள் இப் படத்திற்கான வசன எழுத்துருவாக்கத்தில் பங்களிப்புச் செய்திருக்கிறார். வில் சிமித் அவர்களின் மேற்பார்வையில் உருவான இப் படத்திற்கான ஒளிப் பதிவினை Phedon Papamicheal அவர்கள் சிறப்புறச் செய்திருக்கிறார். படத்தில் குறைகள் என்று சொல்லுமளவிற்கு எவற்றையுமே அவதானிக்க முடியவில்லை. உணர்வுகளைத் உசுப்புகின்ற மென்மையான மெலடி ரகப் பாடல்கள் காட்சிகளின் பின்னணியில் வந்து எம் காதில் சோக இராகம் இசைத்துச் செல்கின்றது. $55 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இப் படத்தினை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனாலும் வருமானமாக ஆறு மடங்கினை ஈட்டியிருக்கின்றார்கள். குடும்பத்துடன் நீங்கள் அனைவரும் இப் படத்தினைக் கண்டு களிக்கலாம். 

 பிற் சேர்க்கை: இப் படத்தின் தலைப்பே உங்களுக்கு நிறைய அர்த்தங்களைச் சொல்லி நிற்கும் என்று நினைக்கிறேன்.
The Pursuit Of Happyness: நம்பிக்கை எனும் ஆயுதத்தை மாத்திரம் மனதில் வைத்து வாழ்வில் எதிர் நீச்சல் போடும் ஒரு குடும்பஸ்தனின் அவல நிலையினை விளக்கும் காவியம்!
முக்கிய குறிப்பு: வலைப் பதிவர் கானா வரோ அவர்கள் ஈழத்தில் தமிழ் மக்களின் வரலாற்றுப் பாதையில் மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்கிய - விளங்கும் சங்கிலி மன்னைப் பற்றிய வரலாற்றுத் தொடர் ஒன்றினை அவரது வலைப் பதிவில் எழுதி வருகின்றார். ஆர்வமுள்ளோர் இவ் இணைப்பினூடாகச் சென்று படித்து மகிழலாம்!

39 Comments:

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

ஓஹோ, நான்தான் முதலா மச்சி, இரு படிச்சிட்டு வறேன்..

செங்கோவி said...
Best Blogger Tips

நிரூ முதல்முறையாக நான் பார்த்த ஒரு படம் பற்றி எழுதியிருக்கார்..அருமையான படம்...அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

செங்கோவி said...
Best Blogger Tips

//அதுவும், தன் பிள்ளையினைத் தூக்கிக் கொண்டு போய், ஆண்டவன் சன்னிதானத்தில் மண்டியிட்டு வேண்டுகின்ற காட்சியிருக்கிறதே! அப்பாடா! எவ்வளவு உணர்வு பூர்வமாகப் படமாக்கியிருக்கிறார்கள்.//

ஆமாம், கலங்க வைக்கும் காட்சி தான்...அதே போன்று ரயில்வே ஸ்டேசன் பாத்ரூமில் தங்கும் காட்சியும் கண்கலங்க வைக்கும்..

Unknown said...
Best Blogger Tips

உண்மையில் மனதை கனக்க வைத்த திரைப்படம்..

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

//புகையிரத நிலைய மலசல கூடத்தினைத் தெரிவு// இது என்னன்னு புரியலையே?

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

// மருத்துவர்கள் பயன்படுத்தும் இயந்திரத்தினை ஒவ்வோர் வைத்தியசாலைக்கும் சென்று மருத்துவர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். மருத்துவருக்கு அவ் இயந்திரம் பிடித்திருந்து அவர் வாங்கினால் பணம் கிடைக்கும். இல்லையேல் அடுத்த மருத்துவமனையினை நாட வேண்டும்.// மெடிக்கல் ரெப் மாதிரியா பாஸ்..

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

// அந்தத் தன்னம்பிக்கையினைக் கொண்டு நாயகன் கிரிஸ் அவர்கள் வாழ்க்கையில் எவ்வாறு முன்னேறினார்? அவரைச் சூழ்ந்துள்ள கடன் தொல்லைகள் யாவும் தீரும் வண்ணம் எவ்வாறு செயற்பட்டார்? ஆகிய வினாக்களுக்கான விடைகளை நீங்கள் இத் திரைப்படத்தினைப் பார்ப்பதனூடாக நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.// அப்போ வாழ்க்கையில ஜெயிக்கிறாரா?

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

//வில் சிமித் // ன்ன ஜாக்கிசான் படத்துல காமெடி பண்ணுவாரே அவரா?

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

இத் திரைப் படத்தினைப் பார்த்து மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள்:// லிங்க் - க்கு நன்றி..

Thava said...
Best Blogger Tips

சிறப்பான பதிவு சார்.அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன்.நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!

//புகையிரத நிலைய மலசல கூடத்தினைத் தெரிவு// இது என்னன்னு புரியலையே?
//

Railway station Public Toilet மச்சி

F.NIHAZA said...
Best Blogger Tips

ரொம்பவும் நன்றி பகிர்வுக்கு....

Unknown said...
Best Blogger Tips

VERY NICE MOVIE!!

K.s.s.Rajh said...
Best Blogger Tips

நான் இன்னும் இந்தப்படம் பார்கவில்லை பார்த்திட்டா போச்சி

Angel said...
Best Blogger Tips

//இப் படத்தின் தலைப்பே உங்களுக்கு நிறைய அர்த்தங்களைச் சொல்லி நிற்கும் என்று நினைக்கிறேன்.//


உங்க விமர்சனமே படம் பாக்க தூண்டுகிறது .அருமையான விமர்சனம் .

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
சென்னை பித்தன் said...
Best Blogger Tips

நன்றி நிரூ.லிங்கில் போய்ப் பார்க்கிறேன்.

shanmugavel said...
Best Blogger Tips

உணர்வுப்பூர்வமான விமர்சனம் சகோ! சிறிது நேரம் கழித்து பார்க்க வேண்டும்.ஆவலைத்தூண்டுகிறது.

Anonymous said...
Best Blogger Tips

நெகிழ்வான விமர்சனம், கூடிய சீக்கிரம் al விஜயின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வரும்போது பார்குறதா இல்ல இப்பவே ஆங்கில படத்த பார்குறதா? டவுட்டு?

Anonymous said...
Best Blogger Tips

/////நிரூபன் said...
Best Blogger Tips [Reply To This Comment]

@!* வேடந்தாங்கல் - கருன் *!

//புகையிரத நிலைய மலசல கூடத்தினைத் தெரிவு// இது என்னன்னு புரியலையே?
//

Railway station Public Toilet மச்சி
////

செம காமெடி மச்சி...

ஹேமா said...
Best Blogger Tips

திரும்பவும் நல்லதொரு படமென்று நினைக்கிறேன்.நன்றி நிரூ !

Anonymous said...
Best Blogger Tips

நான் மிகவும் ரசித்த படம்...உண்மைக்கதை...வில் ஸ்மித்...மற்றும் மகன் நடிப்பு பிரமாதம்...உங்கள் விமர்சனமும் கலக்கல்...

பலரையும் கண்கலங்க வைத்த ஒன்று....

குழந்தைகள் தின வாழ்த்துகள்...

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!
அருமையான விமர்சனம் மூலம் படத்தை பார்க்க தூண்டுகிறீர்கள்..

வாழ்த்துக்கள்..

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

நல்ல படம், நல்ல விமர்சனம். பெரும்பாலும் வில் ஸ்மித்தின் படங்கள் பார்க்கப் பிடிக்கும் எமக்கு. ஆனா இது பார்க்கவில்லை.

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

//அமெரிக்கா எனப்படுவது ////////முதாளித்துவ நாடு//////////

ஆஆஆஆஆஆஆ ரீச்சர் ஓடிவாங்கோ.... எங்கிட்டயேவா?:))) லேட்டா வந்தாலும் கண்டு பிடிச்சிட்டமில்ல:)))))))))

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

//அமெரிக்கா எனப்படுவது ////////முதாளித்துவ நாடு//////////

ஆஆஆஆஆஆஆ ரீச்சர் ஓடிவாங்கோ.... எங்கிட்டயேவா?:))) லேட்டா வந்தாலும் கண்டு பிடிச்சிட்டமில்ல:)))))))))
//

மிக்க நன்றி அக்கா,
இப்போ ஒரு தடவை Page Refresh பண்ணி அந்த வரியை மட்டும் பார்க்கிறது!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கவி அழகன் said...
Best Blogger Tips

Supperb

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

//மிக்க நன்றி அக்கா,
இப்போ ஒரு தடவை Page Refresh பண்ணி அந்த வரியை மட்டும் பார்க்கிறது!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், புரூவ் ரீடராக இருந்ததுக்கு செக்கை கெதியா அனுப்பி வையுங்கோ(கடவுளே இது வேற செக்:)).... நன்றி எல்லாம் வாணாம்:)))... அதுவும் பவுண்டிலதான் வேணும்...:)))))....

Angel said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

angelin said...

This post has been removed by the author.
November 15, 2011 2:21 AM
////////////

karrrrrrrrrrrrrrrrrr * karrrrrrrrrrrrrrrrrrr:))))))))))

Angel said...
Best Blogger Tips

நிரூபன் நம்ம தம்பி அதனால் தான் பிழை சொல்ல கூட மனம் வரல .க்கிக் க்கிக் கிகி :)))))))))):))))))))))

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

angelin said...

நிரூபன் நம்ம தம்பி அதனால் தான் பிழை சொல்ல கூட மனம் வரல .க்கிக் க்கிக் கிகி :)))))))))):))))))))))///

ஹையோ ஹையோ..... நிரூபன் கொஞ்ச நாளாகவே குளிர்ந்துபோய் இருக்கிறார்:)))), இப்போ இதைப் பார்த்தால் இன்னும் என்ன ஆகப்போகுதோ?:))))

ஆகுலன் said...
Best Blogger Tips

அண்ணே அருமையான விமர்சனம்.. நன்றி......

KANA VARO said...
Best Blogger Tips

சங்கிலியனை இணைப்பு கொடுத்ததுக்கு நன்றி சகோ! ஆனாலும் என்ன.. விஜய் பத்தி எழுதினால் 3000பேர் வருவாங்க, நம்மாளை பத்தி எழுதினால் 300பேர் வருவாங்க.. ஹீ ஹீ அரசியல்ல இதெல்லாம் சகாயம் பாஸ்..

உணவு உலகம் said...
Best Blogger Tips

அருமையான விமரிசனமும், அத்திரைப்படத்தைக் காண லிங்கும் வித்யாசமான பகிர்வு.

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

சகோ. அருமையான விமர்சனமும், அதன் வசூல் வரலாற்றையும், அது கூடவே படத்தின் லிங்க்கும் கொடுத்து அசத்தி விட்டீர்கள். அருமை சகோ..

மாய உலகம் said...
Best Blogger Tips

இந்த படத்தை கதைக்காவும், வில்ஸ்மித் நடிப்புக்காகவும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்... இதில் அவரது மகனும் முதல் படத்துலயே நடிப்பில அசத்தியிருப்பார்... நல்ல படத்தை தேர்ந்தெடுத்து நல்ல விதமாக விமர்சித்த உங்களுக்கு மனம் கனிந்த நன்றி பாஸ்... பிளஸ் வாழ்த்துக்கள்...

மாய உலகம் said...
Best Blogger Tips

இந்த படத்தில் Will smithன் நடிப்பும், நடிப்பு சூப்பரா இருக்கும்.. அவர் மகன் ஜாடன் ஸ்மித்தும் முதல் படத்திலயே மிக அழகாக நடித்திருப்பார்... அருமையான தொரு கதைக்கொண்ட படம்... வில்ஸ்மித்தின் கேரக்டரை பார்க்கும்பொழுது நாம் வறுமையில் வாடும்போது கூட எப்படி வாழ்க்கையில் விடாமல் முயற்சித்து அப்போதைய நிலைமையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை அவரது நடிப்பு நமக்கு தூண்டுகோலாக இருக்கும்... அந்த வறுமையிலும் அவர் ஆக்டிவாக செயல்ப்டும் விதம்... நாமளும் அது போல் தான் இருக்க வேண்டும் என்ற ஒரு தூண்டுதலை ஏற்படுத்துகிறார் வில்ஸ்மித்.... அருமையானதொரு படத்தை எடுத்து அசத்தலான விசயங்களுடன் விமர்சனம் தந்தமைக்கு மிக்க நன்றி நண்பா.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails