Tuesday, November 22, 2011

ஆணாத்திக்கத்தால் அடக்கப்படும் பெண்கள்! பெண்ணாதிக்கத்தால் கண்ணீர் விடும் ஆண்கள்!

எமது சமூகத்தில் குடும்பத் தலைவர் என்கின்ற பாரிய பொறுப்பினைக் காலாதி காலமாக ஆண்கள் தான் சுமந்து வருகின்றார்கள். ஒரு குடும்பமானது சிறப்புற தன் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமெனில் ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானமாய்த் தம் பங்களிப்பினை வழங்க வேண்டும். தமிழ்ச் சமூகத்தில் பழமை வாதிகளால் விதைக்கப்பட்ட இல்லத்தரசி என்பவள் வீட்டினுள்ளே இருக்க வேண்டும் எனும் மூட நம்பிக்கையும், கணவனை மாத்திரம் நம்பித் தங்கி வாழ்பவளாக மனைவி வாழ வேண்டும் என்கின்ற பழமைக் கோட்பாடுகளும் இன்றைய 21ம் நூற்றாண்டில் மெது மெதுவாக சிதைந்து போகின்றன.
இன்றைய தினம் உங்கள் நாற்று வலைப் பதிவு ஆணாதிக்கத்தினையும், பெண்ணாதிக்கத்தினையும் எம் சமூகத்திலிருந்து அகற்ற என்ன வழி எனும் கருத்துக்களை உள்ளடக்கிய விவாத மேடைப் பதிவினைத் தாங்கி உங்களை நாடி வருகின்றது. இல்லத்தரசி ஓர் ஆண் மகனில் தங்கி வாழ்வதனை நாம் ஒரு நல்ல விடயமாக எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு நான் எழுதுவதற்கான காரணம், எல்லா ஊர்களிலும் அல்ல. இன்றைய நவீன யுகத்தில் பல இடங்களில் பெண் வேலைக்குப் போய்ச் சுயமாக உழைக்கின்ற நிலமையினை அடைந்திருந்தாலும்,ஆணின் அன்பிற்கு கட்டுப்பட்டு ஆணிற்கு கீழ் பெண் தங்கி வாழ்கின்ற நிலமை தான் எம் ஊர்களில் அதிகமாக இடம் பெறுகின்றது.

இல்லத்தரசியானவள் ஆணில் தங்கி வாழ்வதனால் அவள் அடிமை போன்று இருக்கலாம் எனும் கருத்தினை நாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அதிகளவான குடும்பங்களில் ஆணின் ஊதியத்தை நம்பிப் பெண் வாழ்வதால் ஆண் சொல்லும் எல்லா விடயங்களுக்கும் தலையாட்டிப் பொம்மை போலப் பெண்கள் வாழ வேண்டும் எனும் இழிவான கொள்கையினை எம் சமூகம் கடைப்பிடிக்கின்றது. எப்போதாவது ஒரு நாள் பெண் கூறும் கருத்துக்களில், அர்த்தங்களும், சரியான விடயங்களும் பொதிந்திருக்கின்றன என்று இந் நிலையில் உள்ள ஆண்கள் சிந்தித்து விட்டுக் கொடுத்து நடந்திருப்பார்களா என்றால் இதற்கான பதில் இல்லை என்பதாகும்.

ஆண் விரும்பிய போது தன் உடலை அர்ப்பணிப்பவளாகவும், ஆண் நினைக்கின்ற போது அவனது விந்தணுவின் மூலம் உருவாகும் குழந்தையினைப் பத்து மாதங்கள் சுமந்து அதன் பின்னரும் ஆண் வேலைக்குச் சென்றவுடன் தன் இடுப்பிலும், தோளிலும் தன் சிசுவைச் சுமந்து செல்கின்ற நிலையினைத் தான் எம் தமிழர்கள் காலங் காலமாக ஒரு பெண்ணுக்கு வழங்குகின்றார்கள். ஆனால் வெளிநாடுகளில் அப்படி அல்ல. நிற்க, இவ் இடத்தில் ஒரு கேள்வி! பத்து மாதம் பெண்கள் வயிற்றினுள் சுமந்த குழந்தையினை ஆண்கள் நினைத்தால் இடுப்பில் சுமக்க முடியாதா? எத்தனை ஆண்கள் இதற்குத் தயாராக இருக்கிறார்கள்? 
தமிழர்கள் வாழும் ஊரில் ஆண்கள் குழந்தையினைக் காவிச் சென்றால் பார்வையாளராக உள்ளோர் எள்ளி நகைப்பார்கள் என்று நீங்கள் இங்கே ஒரு கருத்தினைக் கூறலாம். ஆனால் வெளிநாடுகளில் பெண்கள் வயிற்றில் சுமந்து பெற்ற குழந்தையினை அக் குழந்தை தவழ்ந்து நடை பயின்று நடக்கத் தொடங்கும் வரை ஆண்கள் தானே சுமக்கின்றார்கள்.அடடா, ஆண்களின் பொருளாதாரத்தில் தங்கியிருப்பதால் தான் இந்த நிலையா? ஆணுக்கும் தன் மகவு (குழந்தை) மீது பாசம் இல்லையா? இத்தகைய வழமையான நிலையினை மாற்றி ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்று ஆண்கள் தம் பிள்ளையினை ஓய்வாக இருக்கும் நேரங்களில் பரமாரிக்க முடியாதா? 

பெண்கள் வயிற்றில் சுமந்த குழந்தையினை ஆண்கள் இடுப்பில் சுமந்தோ அல்லது வண்டிலில் தள்ளிச் செல்வதற்கு ஏற்றவாறு எம் சமூகத்தினைத் தயார்படுத்த வேண்டுமெனில் எந்த மாதிரியான திட்டங்களை முன் வைக்க முடியும்? ஆணின் அன்பிற்கு கட்டுப்பட்டு வாழ்வதால், ஆணின் சம்பளத்தில் தங்கியிருப்பதால் பெண் தான் சமையல் செய்ய வேண்டும். ஆண் வேலை முடிந்து வீடு வந்ததும் பரிமாற வேண்டும் எனும் நிலமையினை நாம் கொஞ்சம் மாற்றியமைக்க முடியாதா? ஆண்களும் பெண்களும் சரி நிகர் சமனாய் தமக்குப் பிடித்த உணவுகளைத் தெரிவு செய்வது முதல், சமைத்துப் பரிமாறுவது வரை மாற்றங்களை எம் சமூகத்தில் ஏற்படுத்த முடியாதா?

உணவு, சமையல், குழந்தை பெறுதல், ஆடைகளைத் தோய்த்தல்/ துவைத்தல், மற்றும் இதர வீட்டு வேலைகளைச் செய்வதற்கு ஒரு சம்பளம் வழங்காத அன்பினால் மாத்திரம் கட்டுண்ட இதயமாகப் பெண்கள் இருப்பதனை அல்லது எம் சமூகத்தில் பெண்கள் நடாத்தப்படுவதனை நாம் மாற்ற முடியாதா? அப்படி முடியும் எனில் அதற்கான வழிகள் என்ன? ஆண்கள் குடும்பத்தில் வீரப் புருஷர்களாக இருப்பதும் மனைவியை அன்பினால் கட்டுப்படுத்தி அன்பெனும் உணர்வை இங்கே போலி ஆடையாக அணிவித்து அவளை அடிமை போல மறைமுகமாக நடாத்தும் நிலையினைத் தானே நாம் தமிழ் சமூகத்தில் நாகரிகப் பெயர் சூட்டித் தங்கி வாழுதல் என அழைக்கின்றோம்? இந் நிலையினை மாற்ற முடியாதா?

அடுத்த விடயம் பெண்ணாதிக்கம் அல்லது ஆண்களின் உணர்வுகள் புறக்கனிக்கப்படல்: இன்று பெண்கள் அதிகம் படித்தவர்களாக இருப்பதால் பெண்ணாதிக்கம் எனும் மறைமுகப் பெயரினால் சுட்டப்படும் அடக்குமுறையும் ஆணாதிக்கம் போன்று சில குடும்பங்களில் திணிக்கப்படுகின்றது. பெண் சுயமாக உழைக்கும் குடும்பங்களில் பலர் முகங் கொடுக்கின்ற விரும்பத்தகாத பிரச்சினை தான் பெண்ணாதிக்கம்.இக் குடும்பங்களில் ஆணும் பெண்ணும் சரி நிகர் சமனமாய் இருந்தாலும், பெண் சில வேளைகளில் தன் அன்பின் மூலம் அடக்கு முறையினை அல்லது ஆதிக்கம் எனும் அஸ்திரத்தினைப் பிரயோகிக்க முனைகின்றாள். இது ஆண்கள் பலருக்குப் பிடிக்காத ஒரு விடயமாகும்.

ஆணாதிக்கம் போன்று பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் குடும்பங்களில் ஆண்கள் தம் சுய கௌரவத்தின் அடிப்படையில் பெண்களுக்கு அடி பணிந்து வாழ்வதனையோ அடங்கிப் போவதனையோ விரும்பமாட்டார்கள். இத்தகைய நிலமை உருவாகும் போது தான் விவாகரத்து எனும் விடயம் இக் குடும்பங்களில் தன் வேலையினைக் காட்டத் தொடங்குகின்றது. ஆணும் பெண்ணும் தம் உணர்வுகளைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில்; "இவள் ஒரு ஆதிக்கவாதி! அடங்காப் பிடாரி! இவளுடன் நான் வாழ முடியாது"; என்று கூறி ஆணும் பெண்ணும் நீதி மன்றத்தினை நாடி விவாகரத்துப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்கின்றார்கள்.
இத்தகைய நிலமைகளுக்கான தீர்வாக நாம் எத்தகைய வழிகளை சமூகத்தில் உள்ளோருக்கு அறிவுரைகளாக கூற முடியும்? பெண்ணாதிக்கம், ஆணாதிக்கம்; என அன்பென்ற உணர்ச்சியினைப் போலி ஆடையாக்கி எம் சமூகத்தில் இடம் பெறும் அடக்கு முறைகளை, அடிமை நிலையினை இல்லாதொழிக்க, ஏதாவது வழிகள் இருக்கின்றனவா? அல்லது பண்டைத் தமிழ் மரபின் படி இந்த நவீன யுகத்திலும் டீவி சீரியலைப் பார்த்துக் கண்ணீர் விட்ட படி வீட்டினுள்ளே அடங்கிக் கிடந்து ஆண்களுக்குச் சேவகம் புரிந்து அடிமையாக வாழ்ந்து மடிவது தான் பெண்களின் வரமா? இந்த இழி நிலையினை மாற்ற நாம் அனைவரும் என்ன செய்யப் போகின்றோம்? 

மேற்படி வினாக்களோடு நாற்று வலைப் பதிவின் விவாத மேடை உங்களை நாடி வருகின்றது. காத்திரமான உங்கள் கருத்துக்களால் இந்த விவாத மேடையினையும் ஓர் கருத்துச் சமற் களமாக மாற்றுங்கள்! 

பிற் சேர்க்கை: நாற்று வலைப் பதிவில் விவாத மேடைக்கு நடுவராக அடியேன் தான் இருந்து இது வரை காலமும் கருத்துச் சமர்களிற்கான தீர்ப்புக்களை வழங்கி வந்தேன். பரீட்சார்த்தமாக கடந்த மாதம் இடம் பெற்ற பதிவர்கள் நடுவர்களாகச் சிறப்பிக்கும் விவாத மேடையில் பதிவர் காட்டான் மாம்ஸ்; மற்றும் பின்னூட்டப் புயல் யோகா ஐயா அவர்கள் நடுவர்களாக கலந்து சிறப்பித்திருந்தார்கள். 

அதனைத் தொடர்ந்து இம் முறை; "ரேவா கவிதைகள்" வலைப் பூவை எழுதி வரும் சகோதரி "ரேவா" அவர்களும், "நண்பர்கள்" வலைப் பூவை எழுதிக் கொண்டிருக்கும் சகோதரன் "கே.எஸ்.எஸ் ராஜ்" அவர்களும் இந்த விவாத மேடையின் சிறப்பு நடுவர்களாக கலந்து சிறப்பிக்கின்றார்கள். உங்களின் காத்திரமான கருத்துக்களோடு இந்த விவாத மேடை சிறப்புற அமைய நீங்களும் களமிறங்கலாம் அல்லவா!

240 Comments:

«Oldest   ‹Older   1 – 200 of 240   Newer›   Newest»
Robin said...
Best Blogger Tips

//ஆண்களுக்குச் சேவகம் புரிந்து// தவறு. ஆண்களுக்கு அல்ல குடும்பத்திற்கு சேவகம் புரிகிறாள். இதைப் போல ஆணும் குடும்பத்திற்காக உழைக்கிறான்.

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

aaaaaaaaaaaaaaaa மீ செகண்டூஊஊஊஊ:)

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

என்னது பெண்களால் கண்ணீர் விடும் ஆண்களோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்:))))

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

என்னாது இது விவாத மேடையா?... தெரியாமல் உள்ளே வந்திட்டேனே... இங்கே பப்பி கிடைக்குமா தப்பி ஓட?:))))...

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

நடுவர்களாக அமர்ந்திருக்கும் இருவருக்கும் வாழ்த்துக்கள்... அவர்களுக்கு களைக்காமல் இருக்க, அப்பப்ப சோடா, மங்கோ யூஸ், ஹொட் சொக்கலேட்.... எல்லாம் வாங்கிக்கொண்டு வருகிறேன்..:)))

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்! வணக்கம் ராசுக்குட்டி வணக்கம் ரேவா..

என்னது அதிரா இங்க நிக்கிறாங்களா? ஐயோ நான் பிறகு வாரேன்யா.. ஏன்னா இந்த சுட்டி பெண்னிடம் வாய கொடுத்து மாட்டிடுவன்.. ஹி ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

அன்பும் போதிய விட்டுகொடுத்தலும் இருந்தாலே வாழ்க்கையின் சந்தோஷத்தை இருவரும் அனுபவிக்கலாம்...!!!

காட்டான் said...
Best Blogger Tips

சரி முழுக்க நனைஞ்சாச்சு இனி முக்காடு எதுக்கு?

நான் இலங்கை செல்லும்போது எனது மகனை என்னுடைய தோளில் சுமந்திருப்பதை சுட்டிக்காட்டி ஏண்டா மனிசி பிள்லைய பார்க்க மாட்டாளா? என்றுதான் உறவினர்கள் கேட்டார்கள்.. இங்கேயும் பிள்ளை வளர்ப்பில் ஆணுக்கு சம்பந்தமே இல்லை என்பதை போல்தான் நம்மவர்கள் நடக்கின்றார்கள்.. வீட்டு வேலைகளை ஆணும் சரி சமமாக பகிர்ந்து செய்தால் அவ்னை நாங்கள் ஏதோ பொண்டாட்டிக்கு பயந்தவன்ன்னு கூறி கேலி செய்கிறோம்.. அட நான் என்ர பிள்ளைகளின் பிள்ளை பேறு கூட பாத்திருக்கேன். இன்னும் நாங்கள் திருந்த இருக்கின்றது..!!

காட்டான் said...
Best Blogger Tips

சகோதரிகளோடு கூட பிறக்கும் ஆண்கள் பெண்களை அவர்கள் கஷ்டங்களை ஓரளவு புரிந்து கொள்கிறார்கள்.... அதற்காக மற்றவர்கள் புரிந்து கொள்ளாதவர்கள் என்று கூறவில்லை..!! சகோதரிகளோடு பிறந்த அதிகமானவர்களுக்கு பெண் களின் கஷ்டம் மற்றவர்களை விட கூட தெரியும்..!!

செட்டப் செல்லப்பா said...
Best Blogger Tips

ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம்.......????

KANA VARO said...
Best Blogger Tips

நிரூவின் வலை வாழ்க்கையில் அதிகூடிய பதிவுகளை எழுதப்போகும் மாதம் இது இப்பவே 34..

காட்டான் said...
Best Blogger Tips

சில இடங்களில் ஒரே இடத்தில் ஆணும் பெண்ணும் வேலை செய்வார்கள்.. வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தால் ஆண் சோபாவில் போய் இருந்து அடியே மங்களம் எனக்கு ஒரு காப்பி கொண்டு வா என்பார்.. இப்பிடியானவங்களை பார்க்கும்போது ஏன் இவங்களுக்கு ”மங்களம்” பாடக்கூடாதுன்னு யோசித்திருக்கிறேன்..!!

காட்டான் said...
Best Blogger Tips

KANA VARO said...
நிரூவின் வலை வாழ்க்கையில் அதிகூடிய பதிவுகளை எழுதப்போகும் மாதம் இது இப்பவே 34..

November 22, 2011 4:51 PM

ஆமா அருக்கென்ன விதானையாரின் பொட்டை கொண்டுவந்த சீதன காச வைச்சே வாழ்கைய ஓட்டுறார்.. 34 என்ன 304 பதிவுகூட எழுதுவார்..!!

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

நான் இங்கினதான் நிற்கிறேன்... காட்டான் அண்ணன் பயப்படாதீங்க... நான் இன்னும் யோசிச்சு முடிக்கேல்லை என்ன எழுதுவதென்று:))

செட்டப் செல்லப்பா said...
Best Blogger Tips

///தமிழர்கள் வாழும் ஊரில் ஆண்கள் குழந்தையினைக் காவிச் சென்றால் பார்வையாளராக உள்ளோர் எள்ளி நகைப்பார்கள் என்று நீங்கள் இங்கே ஒரு கருத்தினைக் கூறலாம்./////

ஹஹஹஹா......... 1950-ல இருக்க வேண்டிய ஆளுய்யா நீரு......

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

//காட்டான் said...

KANA VARO said...
நிரூவின் வலை வாழ்க்கையில் அதிகூடிய பதிவுகளை எழுதப்போகும் மாதம் இது இப்பவே 34..

November 22, 2011 4:51 PM

ஆமா அருக்கென்ன விதானையாரின் பொட்டை கொண்டுவந்த சீதன காச வைச்சே வாழ்கைய ஓட்டுறார்.. 34 என்ன 304 பதிவுகூட எழுதுவார்..!///

haa..haa...haa... அப்போ நிரூபனும் சீதனம் வாங்குறாரோ? அவ்வ்வ்வ்... ஆணாதிக்கம் இங்கயே ஆரம்பமாகுதே:))))

செட்டப் செல்லப்பா said...
Best Blogger Tips

////பெண்கள் வயிற்றில் சுமந்த குழந்தையினை ஆண்கள் இடுப்பில் சுமந்தோ அல்லது வண்டிலில் தள்ளிச் செல்வதற்கு ஏற்றவாறு எம் சமூகத்தினைத் தயார்படுத்த வேண்டுமெனில் எந்த மாதிரியான திட்டங்களை முன் வைக்க முடியும்?///////

லூசாய்யா நீ.....?

செட்டப் செல்லப்பா said...
Best Blogger Tips

//////பெண் சில வேளைகளில் தன் அன்பின் மூலம் அடக்கு முறையினை அல்லது ஆதிக்கம் எனும் அஸ்திரத்தினைப் பிரயோகிக்க முனைகின்றாள். //////


அன்பின் மூலம் அடக்குமுறை? என்னதான் சொல்ல வர்ரீங்க?

காட்டான் said...
Best Blogger Tips

athira said...
நான் இங்கினதான் நிற்கிறேன்... காட்டான் அண்ணன் பயப்படாதீங்க... நான் இன்னும் யோசிச்சு முடிக்கேல்லை என்ன எழுதுவதென்று:))

November 22, 2011 5:02 PM
ஆஹா தங்கச்சி இஞ்சயா நிக்கிறாங்க.. சரி வாம்மா ஒரு கதை சொல்லுறன்.. பிரான்சில எனக்கு தெரிஞ்ச பையன் ஒருத்தனுக்கு இந்த நாட்டு பிரசை ஆவனும்ன்னு ரெம்ப நாளா ஆசை.. அது சம்பந்தமா ஒரு டெஸ்சுக்கு போனாரம்மா அங்க அவங்க கேட்ட முத கேள்வி வீட்டில பிள்ளை குட்டியள யார் பாக்கிறதுன்னு.. ஹி ஹி நம்மாளு சும்மா இருக்காம தன்ர ஆணாதிக்கத்த காட்டி இருக்காரு அந்த பொம்பள ஆபீசரிடம்.. ஹி ஹி என்னன்னா?? ஐய்யய்யோ நான் அந்த வேலை எல்லாம் பாக்கமாட்டன் என்ர மனிசிதான் பிள்ளைகளை பார்ப்பான்னு சொல்லி இருக்கார்... அட அந்த பெண் இரண்டாவது தடவையா மிஸ்டர் x உங்களுக்கு கேள்வி விளங்கள பொல வீட்டு வேலைகளுக்கு உங்க மனிசிக்கு உதவி செய்வீங்களா? என்று கேட்டிருக்கிறார் அப்பவாவது சுதாகரிச்சிருக்கலாம் நம்மாள்.. ஆணாதிக்கம் விடுமா? நம்மாளு அதுக்கும் இல்லை வீட்டு வேலைகூட பொண்டாட்டி செய்யாட்டி எதுக்கு பொண்டாட்டின்னு கேட்டிருக்க்கார்... ஹி ஹி முடிவு உங்களுக்கு தெரியும்தானே? பெத்த தாய் செத்த வீட்டுக்குகூட போகல நம்ம மிஸ்டர் x...!!????

செட்டப் செல்லப்பா said...
Best Blogger Tips

/////
பிற் சேர்க்கை: நாற்று வலைப் பதிவில் விவாத மேடைக்கு நடுவராக அடியேன் தான் இருந்து இது வரை காலமும் கருத்துச் சமர்களிற்கான தீர்ப்புக்களை வழங்கி வந்தேன். ///////

நீங்க எந்த காலேஜ்ல லா படிச்சீங்க சார்? இல்ல தீர்ப்பெல்லாம் சொல்லி இருக்கீங்களே அதான் கேட்டேன். இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா?

காட்டான் said...
Best Blogger Tips

செட்டப் செல்லப்பா said...
///தமிழர்கள் வாழும் ஊரில் ஆண்கள் குழந்தையினைக் காவிச் சென்றால் பார்வையாளராக உள்ளோர் எள்ளி நகைப்பார்கள் என்று நீங்கள் இங்கே ஒரு கருத்தினைக் கூறலாம்./////

ஹஹஹஹா......... 1950-ல இருக்க வேண்டிய ஆளுய்யா நீரு......

செட்டப்பு என்னையா உன்ர வீட்ட “சும்மா” வைசிட்டு இங்கின வந்து”அறப்படிக்கிராய்”.. ஹி ஹி!!

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

ஆணாதிக்கம் என்பது ஒரு காலத்தில் அதிகம் இருந்ததுதான்... ஆனால் இப்போ நம்மவர்கள் இலங்கையை விட்டு வெளியேறி உலகமெல்லாம் பரந்து வாழ்வதனால்...

பல பல நாட்டுப் பழக்கவழக்கங்களையும் பார்த்து, பழகி நிறையவே மாறிவிட்டார்கள்.

அதிலும் இப்போ வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில்... சரிக்குச் சரி, வீட்டுத் தேவைக்காக மனைவியும் உழைக்கிறா, அதேபோல் வீட்டு வேலைகள், குழந்தைகள் பராமரிப்பில் கணவனும் பங்கெடுக்கிறார்....

ஆனால் நன்றாகப் போகும் குடும்பங்களுக்குள்... அவர்களின் முந்தைய தலைமுறையான பெற்றோர் வந்து தங்கிப் போகும் பட்சத்தில்... சில இடங்களில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல குழப்பி விட்டுவிடுகிறார்கள், இதனால் பிரச்சனைகள் சில இடங்களில் கடுகு.. பெரிதாகி... பூதாகாரமாகிறது.

தந்தை சொல்கிறார்... நான் ஒரு ரீ கப் கூட கழுவியதில்லை, நீ கிச்சினில் பாத்திரம் கழுவுகிறாயே... என இப்படி ஆரம்பித்து வைக்கின்றனர் ஆதிக்கத்தை.

சில ஆண்கள், பெண்கள் அவற்றைப் பொருட்படுத்தாமல் தூசிபோல தட்டிவிட்டுச் சென்றுவிடுவர், சிலருக்கு அது மனதை அரிக்கத் தொடங்கி விடுகிறது.

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

// நம்மாளு அதுக்கும் இல்லை வீட்டு வேலைகூட பொண்டாட்டி செய்யாட்டி எதுக்கு பொண்டாட்டின்னு கேட்டிருக்க்கார்... ஹி ஹி முடிவு உங்களுக்கு தெரியும்தானே? பெத்த தாய் செத்த வீட்டுக்குகூட போகல நம்ம மிஸ்டர் x...!!????//

ஹா..ஹா..ஹா... இங்குள்ள வெள்ளையருக்குப் பிடிக்காது, தம் தம் வேலையைத் தாமேதான் செய்ய வேண்டும் என சொல்வார்கள்.

ஒரு தடவை என் கணவரோடு வேலை செய்யும், ஒரு இங்கத்தைய டாக்டர் கேட்டாவாம் என் கணவரை.. ஷேட் நன்றாக அயன் பண்ணியிருக்கே யார் அயன் பண்ணுவது நீங்கதானே என... இவருக்கு இங்கத்தைய நாட்டு நடப்பெல்லாம் தெரிந்தமையால் உடனே நான் தான் என்றிட்டார்...

அவ சொன்னாவாம் அதுதானே பார்த்தேன் அப்படித்தான் உங்கட வேலையை நீங்கதான் செய்யவேணும் என்று....

உஸ் ... எப்படியெல்லாம் பொய் சொல்லித் தப்பவேண்டிக்கிடக்கென்றார்:).

செட்டப் செல்லப்பா said...
Best Blogger Tips

///////காட்டான்said...
செட்டப் செல்லப்பா said...
///தமிழர்கள் வாழும் ஊரில் ஆண்கள் குழந்தையினைக் காவிச் சென்றால் பார்வையாளராக உள்ளோர் எள்ளி நகைப்பார்கள் என்று நீங்கள் இங்கே ஒரு கருத்தினைக் கூறலாம்./////

ஹஹஹஹா......... 1950-ல இருக்க வேண்டிய ஆளுய்யா நீரு......

செட்டப்பு என்னையா உன்ர வீட்ட “சும்மா” வைசிட்டு இங்கின வந்து”அறப்படிக்கிராய்”.. ஹி ஹி!!
/////////

என்ன பொங்கல் கொஞ்சம் ஓவரா தெரியுதே? அங்க தட்டுனா இங்க பொங்குது, என்ன சமாச்சாரம்?

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

ஆனா... சில இடங்களில்.. மிகக் குறைவான இடங்களில் என்ன நடக்கிறதென்றால்.... மனைவி பாவமே என, கணவன் அதிகம் சுகந்திரம் கொடுத்து... அதிக பொறுப்பை தான் எடுத்து அனைத்து வேலைகளையும் செய்து பழக்கிவிட....

மனைவிமார் அத்து மீறி, ஊர் சுற்றி, பின்னர் அதை கணவனால் அடக்க முடியாதளவுக்குப் போய், கோயில்மாடுமாதிரி தலை ஆட்டிக்கொண்டு இருக்கிறார்கள், அத்து மீறினால் விவாகரத்துக் கேட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பிரச்சனை....

செட்டப் செல்லப்பா said...
Best Blogger Tips

//////அதனைத் தொடர்ந்து இம் முறை; "ரேவா கவிதைகள்" வலைப் பூவை எழுதி வரும் சகோதரி "ரேவா" அவர்களும், "நண்பர்கள்" வலைப் பூவை எழுதிக் கொண்டிருக்கும் சகோதரன் "கே.எஸ்.எஸ் ராஜ்" அவர்களும் இந்த விவாத மேடையின் சிறப்பு நடுவர்களாக கலந்து சிறப்பிக்கின்றார்கள்.////

இதெல்லாம் ஒரு பதிவு, இதுக்கு ஒரு விவாவதம், ரெண்டு நடுவர்கள். எல்லாம் அந்த கூகிள்காரனை சொல்லனும்.

பகீர்பாண்டி said...
Best Blogger Tips

ஹி

பகீர்பாண்டி said...
Best Blogger Tips

ஆள் ஆளுக்குன்னு ஒவ்வொருவரும் நடுவர்ன்னு சொம்ப தூக்குரான்களே . என்ன எழவு பதிவுடா சாமி இது ..

Anonymous said...
Best Blogger Tips

கணவனை மாத்திரம் நம்பித் தங்கி வாழ்பவளாக மனைவி வாழ வேண்டும் என்கின்ற பழமைக் கோட்பாடுகளும் இன்றைய 21ம் நூற்றாண்டில் மெது மெதுவாக சிதைந்து போகின்றன./// சரியாக சொன்னீங்க தாத்தா... மாற்றம் ஒன்றே மாறாத ஒன்று எண்டு சொல்வார்களே ..அது போல எல்லாம் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாறி தானே ஆகனும்... மேல்நாடுகளில பெண்கள் பஸ்சில் இருந்து ஏரோப்பிளேன் வரை ஓட்டுகிற நிலை வந்தாச்சு ..ஆனா நம்ம நாட்டில முழுமையாக அந்த நிலை வர இன்னும் காலம் எடுக்கலாம்.

Anonymous said...
Best Blogger Tips

///தமிழர்கள் வாழும் ஊரில் ஆண்கள் குழந்தையினைக் காவிச் சென்றால் பார்வையாளராக உள்ளோர் எள்ளி நகைப்பார்கள் என்று நீங்கள் இங்கே ஒரு கருத்தினைக் கூறலாம்./// இப்பிடி வேற இருக்குதா ???? )

சசிகுமார் said...
Best Blogger Tips

ரைட்டு....

செட்டப் செல்லப்பா said...
Best Blogger Tips

அண்ணா நமக்கு இதெல்லாம் சரிவராது, வழக்கம் போல நல்ல காத்திரமான காம பதிவு ஒன்னு போடுங்க ஹிட்சாவது எகிறும்.

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

எமது இலங்கைக் குடும்பம் ஒன்று, மிகவும் வறிய கொட்டில் வீட்டில் தாயோடு மட்டும் வசித்து வந்த ஒரு பெண்ணை எதுவும் இல்லாமல் மணம் முடித்தார், வெளிநாட்டில் இருக்கும் ஒரு பிஸ்னஸ்காரர்(நம்நாட்டவர்தான்).

வெளி நாட்டுக்குக் கூட்டி வந்ததும், அவர் மிகவும் குடும்பப் பொறுப்பு மிக்கவர். மனைவியின் சொல்லுக்கு ஒத்துப் போபவர்...

மனைவிக்காக நல்ல கார் வாங்கிக்கொடுத்து, நல்ல வீடு வசதி....

மனைவி தன் தாயையும் கூப்பிட்டு எடுத்துக் கொண்டா....

தாய் வீட்டைக் கவனிப்பா... மனைவி ஊர் சுத்த தொடங்கிட்டா... நம்மவரோடு நட்புக்கொள்வதில்லை... மரியாதை இல்லையாம்... அதனால் நட்பு எல்லாம் வெள்ளையர்களோடுதான்....

கணவன் எல்லாத்துக்கும் விட்டுப் பிடித்தார்... வெள்ளையர்கள் மட்டுமே நட்பெனில், அவர்கள் தம் முறையைத்தானே சொல்லிக்கொடுப்பார்கள்... அதுதான் நடந்தது....

தினம் ரைம் டேபிள் போட்டு... சுவிமிங், ஜிம்... ஈவிங் பார்ட்டி இப்படி போக வெளிக்கிட்டு...

இப்போ என்னவென்றால் கிழமையில் ஒருநாள் டே ஓவ் வேண்டுமாம் மனைவிக்கு....

அதனால் ஒருநாள் முழுப்பொறுப்பையும் கணவன் பார்க்க வேண்டுமாம்... மனைவி... நைட் பப் க்குப் போய் 12, 1 மணிக்குத்தான் வீட்டுக்கு வாறாவாம்.... தப்பாக ஏதுமில்லை, எல்லாம் பாஷன் எனத்தான் நடக்கிறது.

கணவன் நித்திரைகொள்ளாமல் விழித்திருந்து, அவ வீட்டுக்கு வந்ததும் ரீ ஊத்திக் கொடுக்கிறாராம்....

இதை நேர்ல் ஒருதடவை பார்த்த, அந்தக் கணவனின் அண்ணாவே சொன்னார்.... பாவம் தம்பி நல்லவன், அவனுக்கு இப்போ வெள்ளம் தலைக்குமேலே போன நிலைமைபோல இருக்கு.... வாய் திறந்தால் மனைவி விவாகரத்தும் கேட்டுவிடலாம் எனப் பயந்தோ என்னவோ... கொண்டிழுக்கிறார் என.

ஆனா நல்ல ஒற்றுமையாகத்தான் இழுபடுகிறது குடும்பம் வெளிப்பார்வைக்கு... ஆனா உள்ளே என்ன என்ன பிரச்சனைகளோ ஆண்டவனுக்கே வெளிச்சம்....

Anonymous said...
Best Blogger Tips

/////ஆணின் சம்பளத்தில் தங்கியிருப்பதால் பெண் தான் சமையல் செய்ய வேண்டும். ஆண் வேலை முடிந்து வீடு வந்ததும் பரிமாற வேண்டும் எனும் நிலமையினை நாம் கொஞ்சம் மாற்றியமைக்க முடியாதா?// ஆண் தன் குடும்பத்துக்காக வேலைக்கு செல்லும் போது, வீட்டில் இருக்கும் அவன் மனைவி சமைப்பதிலும் ,களைப்புடன் வரும் கணவனுக்கு பரிமாறுவதிலும் தப்பேதும் தெரியவில்லை எனக்கு...

Anonymous said...
Best Blogger Tips

////ஆணும் பெண்ணும் தம் உணர்வுகளைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில்; "இவள் ஒரு ஆதிக்கவாதி! அடங்காப் பிடாரி! இவளுடன் நான் வாழ முடியாது"; என்று கூறி ஆணும் பெண்ணும் நீதி மன்றத்தினை நாடி விவாகரத்துப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்கின்றார்கள்./// புரிந்துணர்வு இல்லாத இடத்தில் குடும்ப வாழ்க்கை என்பது யாரை திருப்திப்படுத்த ..பிரிவது தானே சரி!

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

காட்டான் said...

சில இடங்களில் ஒரே இடத்தில் ஆணும் பெண்ணும் வேலை செய்வார்கள்.. வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தால் ஆண் சோபாவில் போய் இருந்து அடியே மங்களம் எனக்கு ஒரு காப்பி கொண்டு வா என்பார்.. இப்பிடியானவங்களை பார்க்கும்போது ஏன் இவங்களுக்கு ”மங்களம்” பாடக்கூடாதுன்னு யோசித்திருக்கிறேன்..!///

100 வீதம் உண்மையே... இப்படிச் சிலதை நேரில் பார்த்து எனக்கும் கெட்ட கோபம் வந்திருக்கிறது.... அடுத்தவர்களை நாம் என்ன பண்ண முடியும்.....

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

மாப்ளே, தலைப்பு வைக்க ரொம்ப யோசிக்கறிங்க போல....


நம்ம தளத்தில்:
ஷேர் ஆட்டோவும், ஹெல்மெட்டும்

காட்டான் said...
Best Blogger Tips

சரி செல்லப்பா பகீர் பண்டியோட சேர்ந்து கும்முங்கோயா”கும்மிதானே” டெடரரா பண்ணுங்கோயா!! ரெம்ப சந்தோசம்..

Anonymous said...
Best Blogger Tips

///செட்டப் செல்லப்பா said...

//////பெண் சில வேளைகளில் தன் அன்பின் மூலம் அடக்கு முறையினை அல்லது ஆதிக்கம் எனும் அஸ்திரத்தினைப் பிரயோகிக்க முனைகின்றாள். //////


அன்பின் மூலம் அடக்குமுறை? என்னதான் சொல்ல வர்ரீங்க?////

அன்புத்தொல்லை/ அன்பை காட்டி தாம் நினைத்த காரியத்தை சாதித்தல் எண்டு சொல்லுவார்களே அது தானுங்க இது ...

பகீர்பாண்டி said...
Best Blogger Tips

இனி ஒருத்தன் வந்து ..

இன்று என் கிச்சனில் இட்லியும் சாம்பாரும்ன்னு வந்து போடுவான் ...

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

எந்த விஷயமாயினும் அவரவரும் தாமே உணர்ந்து திருந்தவேண்டும், அல்லது இப்படியான.. பதிவுகளைப் பார்த்தாவது திருந்த வேண்டும்... தம் தம் கடமையை ஒவ்வொருவரும் ஒழுங்காகச் செய்தாலே போதும் பிரச்சனை வராது.

கணவன் கார் ஓட்டி வந்திருந்தால் பக்கத்தில் மனைவி, ரெஸ்ட் எடுத்துக்கொண்டு வந்திருந்தால், மனைவி நினைக்க வேண்டும் அவர் காரோடிய களைப்பில் இருப்பார் நான் தான் ரீ ஊத்த வேண்டும் என... அந்நேரம்... நானும்தானே கூட வந்தேன், எனக்கும் களைப்பாக இருக்கெனச் சொல்லிச் சண்டைப்பிடிக்கலாமோ..

நாம் 100 வீதம் விட்டுக்கொடுப்பின்.. அவர்கள் 200 வீதம் விட்டுக்கொடுப்பார்கள்....

அன்பைக் கொடுத்தால்தான் அன்பை வாங்கலாம்....

Anonymous said...
Best Blogger Tips

////செட்டப் செல்லப்பா said...

அண்ணா நமக்கு இதெல்லாம் சரிவராது, வழக்கம் போல நல்ல காத்திரமான காம பதிவு ஒன்னு போடுங்க ஹிட்சாவது எகிறும்./// அவரா நீங்க ????

திண்டுக்கல் தனபாலன் said...
Best Blogger Tips

வணக்கம் நண்பரே! தங்களின் தளத்தைப் பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

நிரூபன்... வெளில வாங்க... செட்டப்செல்லப்பாவாம்... அவரைப் பிடிச்சு உள்ளே வையுங்க... ஒழுங்கா ஒரு பதிவு போட முடியாமல்.... அங்கின இங்கின.. ஓடுறார்:)))..

கடவுளே படிச்சதும் கிழிச்சிடுங்க நான் போட்டுப் பேந்து வாறேன்... மீ எஸ்ஸ்ஸ்ஸ்:)))

காட்டான் said...
Best Blogger Tips

பண்டி இல்லங்க பாண்டி ஹி ஹி நீங்க பூனை மாதிரிங்க!! நாங்க புலின்னு சொல்லுவன்னு எதிர் பாக்கிறீங்க.. ஹா ஹா ரெம்ப தமாசு.. முதல்ல உங்க வழமையான எழுத்து நடைய மாத்துங்கோ அப்பதான் கண்டு பிடிக்க கொஞ்சம் லேட் ஆகும்.. ஆனா கண்டு பிடிக்கலாம்.. ஹி ஹி கோவணத்த கட்டியிருக்கான்னு உருவ பாக்காதீங்கோ.. நம்மட்ட கொக்கு ”தடியும்” இருக்குங்கோ!!!! ஹி ஹி பன்னிதான் கூட்டத்தோட வரும்ன்னு சங்கர் படத்தில வரும் உண்மையா?

காட்டான் said...
Best Blogger Tips

இந்த முறையாவது ”அரியண்டம்” பிடிச்ச மதங்கள இலுக்காம வாங்கோ...!!மோதுவோம்..

செட்டப் செல்லப்பா said...
Best Blogger Tips

//////கந்தசாமி. said...

///செட்டப் செல்லப்பா said...

//////பெண் சில வேளைகளில் தன் அன்பின் மூலம் அடக்கு முறையினை அல்லது ஆதிக்கம் எனும் அஸ்திரத்தினைப் பிரயோகிக்க முனைகின்றாள். //////


அன்பின் மூலம் அடக்குமுறை? என்னதான் சொல்ல வர்ரீங்க?////

அன்புத்தொல்லை/ அன்பை காட்டி தாம் நினைத்த காரியத்தை சாதித்தல் எண்டு சொல்லுவார்களே அது தானுங்க இது .../////

சரியான பாய்ண்ட். இதை ப்ளாக்மெயில்னும் சொல்லலாம்.

செட்டப் செல்லப்பா said...
Best Blogger Tips

/////கந்தசாமி. said...

////செட்டப் செல்லப்பா said...

அண்ணா நமக்கு இதெல்லாம் சரிவராது, வழக்கம் போல நல்ல காத்திரமான காம பதிவு ஒன்னு போடுங்க ஹிட்சாவது எகிறும்./// அவரா நீங்க ????////////

எவரு? உங்க பதிவுகள்ல வந்து ஒருத்தன் கொஞ்சம் காத்திரமா எதிர் கருத்து சொல்ல முடியாதுல்ல? குழுவா வந்து ஓவர் ஆக்சன் பண்றீங்களே?

செட்டப் செல்லப்பா said...
Best Blogger Tips

////athira said...

நிரூபன்... வெளில வாங்க... செட்டப்செல்லப்பாவாம்... அவரைப் பிடிச்சு உள்ளே வையுங்க... ஒழுங்கா ஒரு பதிவு போட முடியாமல்.... அங்கின இங்கின.. ஓடுறார்:)))..////

ஆமா ஆமா இங்கேதான் எதிர்கருத்து, மைனஸ் ஓட்டு போட்டா போலீஸ்ல புடிச்சு கொடுப்பாங்களே. இப்போ இதுக்கே என் ஐபி நம்பர், ரேசன் கார்ட் நம்பர், செல் நம்பர் எல்லாம் தேடிட்டு இருப்பீங்களே?

Anonymous said...
Best Blogger Tips

செட்டப் செல்லப்பா said...

/////கந்தசாமி. said...

////செட்டப் செல்லப்பா said...

அண்ணா நமக்கு இதெல்லாம் சரிவராது, வழக்கம் போல நல்ல காத்திரமான காம பதிவு ஒன்னு போடுங்க ஹிட்சாவது எகிறும்./// அவரா நீங்க ????////////

எவரு? உங்க பதிவுகள்ல வந்து ஒருத்தன் கொஞ்சம் காத்திரமா எதிர் கருத்து சொல்ல முடியாதுல்ல? குழுவா வந்து ஓவர் ஆக்சன் பண்றீங்களே?//// ஓ நீங்க சொன்னது காத்திரமான கருத்துக்களா ! அடச்சே இது கூட புரியாம போச்சே எனக்கு...)

Anonymous said...
Best Blogger Tips

///செட்டப் செல்லப்பா said...எவரு? உங்க பதிவுகள்ல வந்து ஒருத்தன் கொஞ்சம் காத்திரமா எதிர் கருத்து சொல்ல முடியாதுல்ல? குழுவா வந்து ஓவர் ஆக்சன் பண்றீங்களே?// //

இல்ல அண்ணே காம பதிவு தேடுறதா சொல்லிருந்திங்களே அது தான் தளம் மாறி வந்துட்டின்களோ எண்டு நெனச்சேன்... )

முற்றும் அறிந்த அதிரா said...
Best Blogger Tips

//செட்டப் செல்லப்பா said...

////athira said...

நிரூபன்... வெளில வாங்க... செட்டப்செல்லப்பாவாம்... அவரைப் பிடிச்சு உள்ளே வையுங்க... ஒழுங்கா ஒரு பதிவு போட முடியாமல்.... அங்கின இங்கின.. ஓடுறார்:)))..////

ஆமா ஆமா இங்கேதான் எதிர்கருத்து, மைனஸ் ஓட்டு போட்டா போலீஸ்ல புடிச்சு கொடுப்பாங்களே. இப்போ இதுக்கே என் ஐபி நம்பர், ரேசன் கார்ட் நம்பர், செல் நம்பர் எல்லாம் தேடிட்டு இருப்பீங்களே//

ஹையோ நான் பகிடியாகத்தான் சொன்னேனே தவிர தப்பாக ஏதும் சொல்லவில்லை.... கோபித்திடாதீங்க நான் ஓடிடுறேன்... கடவுளே மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))

Anonymous said...
Best Blogger Tips

////செட்டப் செல்லப்பா said...

////athira said...

நிரூபன்... வெளில வாங்க... செட்டப்செல்லப்பாவாம்... அவரைப் பிடிச்சு உள்ளே வையுங்க... ஒழுங்கா ஒரு பதிவு போட முடியாமல்.... அங்கின இங்கின.. ஓடுறார்:)))..////

ஆமா ஆமா இங்கேதான் எதிர்கருத்து, மைனஸ் ஓட்டு போட்டா போலீஸ்ல புடிச்சு கொடுப்பாங்களே. இப்போ இதுக்கே என் ஐபி நம்பர், ரேசன் கார்ட் நம்பர், செல் நம்பர் எல்லாம் தேடிட்டு இருப்பீங்களே?//// இதுக்கு முன்னால இந்த வாய்ஸ எங்கயோ கேட்ட போல இருக்கே ஹிஹி...)

இப்ப தானே செம்பு நெளிபட்டனுக எல்லாம் அடையாளத்த மாத்தி வாறானுகளாம்..))

செட்டப் செல்லப்பா said...
Best Blogger Tips

////காட்டான் said...

சரி செல்லப்பா பகீர் பண்டியோட சேர்ந்து கும்முங்கோயா”கும்மிதானே” டெடரரா பண்ணுங்கோயா!! ரெம்ப சந்தோசம்../////

காட்டான் சார் இது என்னது? ஏதோ நக்கல் பண்ற மாதிரி இருக்கு, கொஞ்சம் புரியும்படியா சொன்னா நானும் சிரிப்பேனே?

செட்டப் செல்லப்பா said...
Best Blogger Tips

///////கந்தசாமி. said...

செட்டப் செல்லப்பா said...

/////கந்தசாமி. said...

////செட்டப் செல்லப்பா said...

அண்ணா நமக்கு இதெல்லாம் சரிவராது, வழக்கம் போல நல்ல காத்திரமான காம பதிவு ஒன்னு போடுங்க ஹிட்சாவது எகிறும்./// அவரா நீங்க ????////////

எவரு? உங்க பதிவுகள்ல வந்து ஒருத்தன் கொஞ்சம் காத்திரமா எதிர் கருத்து சொல்ல முடியாதுல்ல? குழுவா வந்து ஓவர் ஆக்சன் பண்றீங்களே?//// ஓ நீங்க சொன்னது காத்திரமான கருத்துக்களா ! அடச்சே இது கூட புரியாம போச்சே எனக்கு...)//////


ஆமா இங்க பதிவுல காத்திரமான கருத்துகளா மட்டும்தானே போடுறாங்க?

Anonymous said...
Best Blogger Tips

/////செட்டப் செல்லப்பா said...

ஆமா ஆமா இங்கேதான் எதிர்கருத்து, மைனஸ் ஓட்டு போட்டா போலீஸ்ல புடிச்சு கொடுப்பாங்களே. இப்போ இதுக்கே என் ஐபி நம்பர், ரேசன் கார்ட் நம்பர், செல் நம்பர் எல்லாம் தேடிட்டு இருப்பீங்களே?////

இந்த தளத்தில முன்னர் நான் போட்ட எதிர் கருத்தளுக்கள் நீங்க படிச்சதில்லையா??? வேணுமெண்டால் சொல்லுங்கோ லிங் எடுத்து தாரன் ...

செட்டப் செல்லப்பா said...
Best Blogger Tips

//////கந்தசாமி. said...

///செட்டப் செல்லப்பா said...எவரு? உங்க பதிவுகள்ல வந்து ஒருத்தன் கொஞ்சம் காத்திரமா எதிர் கருத்து சொல்ல முடியாதுல்ல? குழுவா வந்து ஓவர் ஆக்சன் பண்றீங்களே?// //

இல்ல அண்ணே காம பதிவு தேடுறதா சொல்லிருந்திங்களே அது தான் தளம் மாறி வந்துட்டின்களோ எண்டு நெனச்சேன்... )///////

அட போனவாரம்தானே இதே தளத்துல ஒரு நல்ல காத்திரமான காம பதிவு ஒன்னு படிச்சேன், அதுக்குள்ள திருந்திட்டா எப்படி?

Anonymous said...
Best Blogger Tips

/////செட்டப் செல்லப்பா said...
ஆமா இங்க பதிவுல காத்திரமான கருத்துகளா மட்டும்தானே போடுறாங்க?// அட என்னங்க நீங்க 'காத்திரமான கருத்துக்கள் போட்டேன்' எண்டு சொல்லிப்போட்டு இப்புடி பிளேட்ட மாத்துரிங்களே )

செட்டப் செல்லப்பா said...
Best Blogger Tips

//////கந்தசாமி. said...

/////செட்டப் செல்லப்பா said...

ஆமா ஆமா இங்கேதான் எதிர்கருத்து, மைனஸ் ஓட்டு போட்டா போலீஸ்ல புடிச்சு கொடுப்பாங்களே. இப்போ இதுக்கே என் ஐபி நம்பர், ரேசன் கார்ட் நம்பர், செல் நம்பர் எல்லாம் தேடிட்டு இருப்பீங்களே?////

இந்த தளத்தில முன்னர் நான் போட்ட எதிர் கருத்தளுக்கள் நீங்க படிச்சதில்லையா??? வேணுமெண்டால் சொல்லுங்கோ லிங் எடுத்து தாரன் .../////////

அப்படியின்னா காட்டான் எதற்கு சம்பந்தமே இல்லாம பொங்குறாரு? நான் சொன்னது தப்பா இருந்தா சொல்லுங்க, மூடிட்டு போய்ட்டே இருக்கேன்.

காட்டான் said...
Best Blogger Tips

////காட்டான் said...

சரி செல்லப்பா பகீர் பண்டியோட சேர்ந்து கும்முங்கோயா”கும்மிதானே” டெடரரா பண்ணுங்கோயா!! ரெம்ப சந்தோசம்../////

காட்டான் சார் இது என்னது? ஏதோ நக்கல் பண்ற மாதிரி இருக்கு, கொஞ்சம் புரியும்படியா சொன்னா நானும் சிரிப்பேனே?

நான் எழுதினது உங்களுக்கு புரியும் எனக்கு அத மொழி பெயர்த்து தருவீங்கன்னு பாக்கிறேன் “சார்” ஹா ஹா ஹா!!

Anonymous said...
Best Blogger Tips

//////செட்டப் செல்லப்பா said... அட போனவாரம்தானே இதே தளத்துல ஒரு நல்ல காத்திரமான காம பதிவு ஒன்னு படிச்சேன், அதுக்குள்ள திருந்திட்டா எப்படி?/// லிங் கொடுங்க பார்ப்பம் ...?

செட்டப் செல்லப்பா said...
Best Blogger Tips

//////கந்தசாமி. said...

/////செட்டப் செல்லப்பா said...
ஆமா இங்க பதிவுல காத்திரமான கருத்துகளா மட்டும்தானே போடுறாங்க?// அட என்னங்க நீங்க 'காத்திரமான கருத்துக்கள் போட்டேன்' எண்டு சொல்லிப்போட்டு இப்புடி பிளேட்ட மாத்துரிங்களே )////////

காத்திரமானன்னா என்ன அர்த்தம்னு ஒருவேள நான் தப்பா புரிஞ்சிட்டேனோ?

செட்டப் செல்லப்பா said...
Best Blogger Tips

//////காட்டான் said...

////காட்டான் said...

சரி செல்லப்பா பகீர் பண்டியோட சேர்ந்து கும்முங்கோயா”கும்மிதானே” டெடரரா பண்ணுங்கோயா!! ரெம்ப சந்தோசம்../////

காட்டான் சார் இது என்னது? ஏதோ நக்கல் பண்ற மாதிரி இருக்கு, கொஞ்சம் புரியும்படியா சொன்னா நானும் சிரிப்பேனே?

நான் எழுதினது உங்களுக்கு புரியும் எனக்கு அத மொழி பெயர்த்து தருவீங்கன்னு பாக்கிறேன் “சார்” ஹா ஹா ஹா!!/////

நீங்க சிரிக்கிறத பார்த்தா உங்களை சார்னு சொன்னது தப்போன்னு நினைக்கிறேன். எதுக்கும் ஒரு நல்ல இடத்தில காத்திரமா வைத்தியம் பாத்துன்ங்குங்கோண்ணா.

Anonymous said...
Best Blogger Tips

/////செட்டப் செல்லப்பா said...அட போனவாரம்தானே இதே தளத்துல ஒரு நல்ல காத்திரமான காம பதிவு ஒன்னு படிச்சேன், அதுக்குள்ள திருந்திட்டா எப்படி?/// சில பேர் இருக்காங்க பாஸ் தண்ணி அடிச்சிட்டு வந்து பதிவ வாசிப்பங்கள் ...அப்பிடி பட்டவங்களுக்கு புராண பதிவு கூட காம பதிவா தான் இருக்கும்..அந்த நெனப்பில தான் கமெண்ட்டும் பண்ணுவாங்க .....

ஆனா நீங்க அந்த ரகம் இல்லை சார் )))

காட்டான் said...
Best Blogger Tips

வாங்கோ செல்லப்பா! உங்களோட எந்த கருத்தையும் நான் பகிர தயார்.. ஆனா உங்க தலைவரைப்போல மதத்த இழுக்காம வாங்கோ!!

செட்டப் செல்லப்பா said...
Best Blogger Tips

////காட்டான் said...

வாங்கோ செல்லப்பா! உங்களோட எந்த கருத்தையும் நான் பகிர தயார்.. ஆனா உங்க தலைவரைப்போல மதத்த இழுக்காம வாங்கோ!!//////

மறுபடியும் சம்பந்தமில்லாம பேசுறீங்க, என்ன குழப்பம் இத்து?

Anonymous said...
Best Blogger Tips

///செட்டப் செல்லப்பா said...



காத்திரமானன்னா என்ன அர்த்தம்னு ஒருவேள நான் தப்பா புரிஞ்சிட்டேனோ?/// நீங்க இங்க வந்து காம பதிவு தேடுறப்போவே நெனைச்சேன் சார் ...ஹிஹி

காட்டான் said...
Best Blogger Tips

அட நாந்தான் காட்டான் எழுத்து பிழை விடுறன்.. ஹி ஹி நீங்க ஏன் “ந்”க்கு பதிலா “த்” போடுறீங்க..?

காட்டான் said...
Best Blogger Tips

ஹா ஹா பூனை வெளிய வந்துட்டு.. வாங்கோ வாங்கோ இம்சை அரசன்..!!

இம்சைஅரசன் பாபு.. said...
Best Blogger Tips

ஹி ..ஹி .. போங்க சார் நீங்க பெரிய பதிவர்கள் .நமக்கு எதுக்கு வேண்டாதா வேலை ..
நீங்க அடிச்சு தூள கிளப்புங்க ..பை பை .கமெண்ட்ஸ் போட பயமா இருக்கு சார் அதான் டாட்

காட்டான் said...
Best Blogger Tips

இது ஒரு விவாதம் உங்களுக்கு விருப்பமில்லைன்னா விடுங்கோ.. தேவை இல்லாம உங்க பிரச்சனைய இஞ்ச கொண்டு வராதீங்கோ!!

Anonymous said...
Best Blogger Tips

நிரூபன் பாஸ் குழப்பத்தை ஏற்ப்படுத்தவேண்டும் என்று வந்தவர்களுக்கு அவர்கள் பாணியில் பதில் கொடுக்கப்பட்டது. இது பதிவின் நோக்கத்தை திசை திருப்பலாம் ..வேண்டுமென்றால் மேலே உள்ள தேவையில்லாத பின்னூட்டங்களை நீக்கிவிடுங்கள்..

காட்டான் said...
Best Blogger Tips

d...
ஹி ..ஹி .. போங்க சார் நீங்க பெரிய பதிவர்கள் .நமக்கு எதுக்கு வேண்டாதா வேலை ..
நீங்க அடிச்சு தூள கிளப்புங்க ..பை பை .கமெண்ட்ஸ் போட பயமா இருக்கு சார் அதான் டாட்

November 22, 2011 6:41 PM
அட என்னையும் பதிவர்ன்னு ஒத்துக்கொண்டதுக்கு நன்றீங்க.. வெளிய சொல்லாதீங்க சிரிச்சிடுவாங்க..!!

காட்டான் said...
Best Blogger Tips

இம்சைஅரசன் பாபு.. said...
ஹி ..ஹி .. போங்க சார் நீங்க பெரிய பதிவர்கள் .நமக்கு எதுக்கு வேண்டாதா வேலை ..
நீங்க அடிச்சு தூள கிளப்புங்க ..பை பை .கமெண்ட்ஸ் போட பயமா இருக்கு சார் அதான் டாட்

ஹி ஹி அடிக்கடி வந்தா சந்தேகப்படமாட்டம் நீங்க ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா வந்தா யோசிக்கோனும்.. ஆடி ஆமாவாசை தெரியுமாய்யா.. ”அப்பன் இல்லதவன்” பிடிக்கிற விரதம்

Anonymous said...
Best Blogger Tips

என்னது பெண்ணாதிக்கமா?

என்னம்மா கூப்பிட்டாயா...இந்தோ ஓடி வர்றேன்...

இம்சைஅரசன் பாபு.. said...
Best Blogger Tips

தெரியும் சார் அது எல்லாம் தெரியாம இருக்குமா? ஹா .ஹா பெரிய பதிவர் . நிருபன் சார் கூட போன்ல பேசி இருக்கேன் கேட்டுகொங்க சார்

Mathuran said...
Best Blogger Tips

யோவ் செட்டப்பு செல்லப்பா....
இந்த பதிவில என்ன பிழை பிடிச்சிட்ட இப்பிடி முறுக்கிற.

அப்பிடியே பிழை பிடிச்சிருந்தாலும் அத நேர்மையா சொல்லவேண்டியதுதானே.

தைரியமா வாறதுக்கே வக்கில்ல பிறகு எதுக்கு கருத்து எதிர்க்கருத்த பற்றி கவலைப்படுகிறாய்

Mathuran said...
Best Blogger Tips

செல்லப்பா குட்டி... முதல்ல ஒழுங்கா ஒரு பதிவ போட பழகுங்க.. அதுக்கப்புறம் அடுத்தவனில பிழை பிடிக்கலாம்

-/விஓஇசட்(VOZ) said...
Best Blogger Tips

சரோஜாதேவி புக்ல இருக்கிற கன்டென்ட் எல்லாம் இங்கே இருக்கும் வந்து பார்த்தா, இது என்ன புதுசா இருக்கு?

-/விஓஇசட்(VOZ) said...
Best Blogger Tips

//மதுரன் said...

யோவ் செட்டப்பு செல்லப்பா....
இந்த பதிவில என்ன பிழை பிடிச்சிட்ட இப்பிடி முறுக்கிற.

அப்பிடியே பிழை பிடிச்சிருந்தாலும் அத நேர்மையா சொல்லவேண்டியதுதானே.

தைரியமா வாறதுக்கே வக்கில்ல பிறகு எதுக்கு கருத்து எதிர்க்கருத்த பற்றி கவலைப்படுகிறாய்//

அண்ணே நீங்களே சொல்லுங்கோ இதிலே என்ன இருக்குன்னு? நேக்கு ஒண்ணும் தெரியல..

-/விஓஇசட்(VOZ) said...
Best Blogger Tips

//மதுரன் said...

யோவ் செட்டப்பு செல்லப்பா....
இந்த பதிவில என்ன பிழை பிடிச்சிட்ட இப்பிடி முறுக்கிற.

அப்பிடியே பிழை பிடிச்சிருந்தாலும் அத நேர்மையா சொல்லவேண்டியதுதானே.

தைரியமா வாறதுக்கே வக்கில்ல பிறகு எதுக்கு கருத்து எதிர்க்கருத்த பற்றி கவலைப்படுகிறாய்//

அண்ணே இதிலே என்ன கருத்து இருக்குன்னு சொல்லுங்கோ? நேக்கு ஒண்ணும் தெரியல..

சுதா SJ said...
Best Blogger Tips

என்னய்யா நடக்குது இங்கே

Mathuran said...
Best Blogger Tips

//-/விஓஇசட் //

ம்கும்... வந்திட்டான்யா மூன்றாவது புறொபைல்ல...

முகத்த மூடிக்கொண்டு வந்தாலும் தைரியமா ஒருத்தனா நில்லுங்கடா
எதுக்கு 3 புரொபைல்

rajamelaiyur said...
Best Blogger Tips

நல்ல பதிவு
அன்புடன்
ராஜா

நெருப்பு நரியுடன்(FIREBOX) சில விளையாட்டுகள்.

K said...
Best Blogger Tips

வணக்கம் நண்பர்ஸ்! இங்கு என்ன பிரச்சனை?

சுதா SJ said...
Best Blogger Tips

செட்டப் செல்லப்பா said...
////பெண்கள் வயிற்றில் சுமந்த குழந்தையினை ஆண்கள் இடுப்பில் சுமந்தோ அல்லது வண்டிலில் தள்ளிச் செல்வதற்கு ஏற்றவாறு எம் சமூகத்தினைத் தயார்படுத்த வேண்டுமெனில் எந்த மாதிரியான திட்டங்களை முன் வைக்க முடியும்?///////

லூசாய்யா நீ.....?////

லூசுக்குத்தான் பாகிரவனை எல்லாம் லூசா தெரியுமாமாம்...
அது இதா ?? ப்ளீஸ் யாராவது விளக்குங்கோ

Mathuran said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

மணியண்ணை.. இங்க யாரோ ஒரு கோழைப்பயல் செட்டப் செல்லப்பா, பகீர் பாண்டி, விஓஇசட், என்ற மூன்று புறொபைல்ல வந்து சேட்டை விடுகிறார்

சுதா SJ said...
Best Blogger Tips

செட்டப் செல்லப்பா said...
/////
பிற் சேர்க்கை: நாற்று வலைப் பதிவில் விவாத மேடைக்கு நடுவராக அடியேன் தான் இருந்து இது வரை காலமும் கருத்துச் சமர்களிற்கான தீர்ப்புக்களை வழங்கி வந்தேன். ///////

நீங்க எந்த காலேஜ்ல லா படிச்சீங்க சார்? இல்ல தீர்ப்பெல்லாம் சொல்லி இருக்கீங்களே அதான் கேட்டேன். இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா?<<<<<<<<<<<<<<<<<<<<

ஏன் சார் படிச்சவன் மட்டும்தான் தீர்ப்பு சொல்லலாமா??
இப்போ நாட்டில் படிச்சவன் மட்டும்தான் தீர்ப்பு சொல்லீட்டு இருக்கானா???
இதை கூட தெரியாத நீங்க எங்க படிச்சீங்க ??? டவுட்டு

Mathuran said...
Best Blogger Tips

சரி விடுங்கப்பா நாய் குரைக்குதெண்டு நாமளும் சேர்ந்து குரைக்க முடியுமா

Mathuran said...
Best Blogger Tips

சரி விடுங்கப்பா நாய் குரைக்குதெண்டு நாமளும் சேர்ந்து குரைக்க முடியுமா

சுதா SJ said...
Best Blogger Tips

-/விஓஇசட் said...
சரோஜாதேவி புக்ல இருக்கிற கன்டென்ட் எல்லாம் இங்கே இருக்கும் வந்து பார்த்தா, இது என்ன புதுசா இருக்கு?<<<<<<<<<<<<<<<<<<


அண்ணே அண்ணே
சரோஜாதேவி புக் ல என்னண்ணே சொல்லி இருக்கு...
அங்கேயும் பெண் ஆண் விவாதமா சொல்லி தாரங்க??? அவ்வவ்

நீங்க சரோஜாதேவி புக் படிச்சு அதில் மெடல் வாங்கின ஆள் போல இருக்கே அவ்வவ்

K said...
Best Blogger Tips

நான் தான் புரட்சிக்காரன் அப்டீன்னு சில பேர் நம்புறமாதிரி, இந்த செட்டப் செல்லப்பாவும் நான் தான்னு சொல்லி யாராவது பதிவு போடுங்களேன்! இண்ட்ரெஸ்டிங்கா இருக்கும்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

K said...
Best Blogger Tips

எமது சமூகத்தில் குடும்பத் தலைவர் என்கின்ற பாரிய பொறுப்பினைக் காலாதி காலமாக ஆண்கள் தான் சுமந்து வருகின்றார்கள்.//////

சுமக்கிறார்கள் என்பதை விடவும், வலிந்து இழுத்து தங்கள் தலையில் போடுகிறார்கள் என்று சொல்லலாம் மச்சி! ஏன் பாதிப் பொறுப்பை பெண்களிடம் கொடுக்கிறது?

K.s.s.Rajh said...
Best Blogger Tips

அன்புக்கு மதிப்புக்கு உரிய நண்பர்கள் அனைவருக்கு வணக்கம் இங்கே தனிமனித தாக்குதல்களை நிறுத்தி சொல்லப்பட்டு இருக்கும் விடயம் பற்றி ஆரோக்கியமான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் விதாமேடை என்பது சண்டை பிடிக்கும் இடம் இல்லை இங்கே சொல்லப்பட்டு இருக்கும் விடயம் பற்றி தரமான விமர்சனங்களால் கருத்துக்களால் மோதவேண்டும் அதைவிட்டு விட்டு பதிவை எழுதியவரையோ இல்லை ஏனையவர்களையோ சாடுவதை தவிர்கவும்

K said...
Best Blogger Tips

தமிழ்ச் சமூகத்தில் பழமை வாதிகளால் விதைக்கப்பட்ட இல்லத்தரசி என்பவள் வீட்டினுள்ளே இருக்க வேண்டும் எனும் மூட நம்பிக்கையும், கணவனை மாத்திரம் நம்பித் தங்கி வாழ்பவளாக மனைவி வாழ வேண்டும் என்கின்ற பழமைக் கோட்பாடுகளும் இன்றைய 21ம் நூற்றாண்டில் மெது மெதுவாக சிதைந்து போகின்றன.//////

எங்க மச்சி சிதையுது? இங்கு வெளீநாட்டிலும் அதனை, இடைவிடாமல் கடைபிடிக்கிறார்கள்! சொன்னால் வெட்ககேடு! சொல்லாட்டி மானக் கேடு!!

செட்டப் செல்லப்பா said...
Best Blogger Tips

///காட்டான்said...
d...
ஹி ..ஹி .. போங்க சார் நீங்க பெரிய பதிவர்கள் .நமக்கு எதுக்கு வேண்டாதா வேலை ..
நீங்க அடிச்சு தூள கிளப்புங்க ..பை பை .கமெண்ட்ஸ் போட பயமா இருக்கு சார் அதான் டாட்

November 22, 2011 6:41 PM
அட என்னையும் பதிவர்ன்னு ஒத்துக்கொண்டதுக்கு நன்றீங்க.. வெளிய சொல்லாதீங்க சிரிச்சிடுவாங்க..!!
//////

பார்த்தீங்களா இத வெச்சிட்டு என்னைய குழப்பி அடிச்சீட்டீங்களே?

Unknown said...
Best Blogger Tips

பெண்குரல் ஒலிக்குது நிரூபன் வடிவிலே :)
வாழ்க வளமுடன் அண்ணே!!
தாய்க்குலங்கள் நன்றிக்கடன் பட்டவர்கள்!!
சீக்கிரமா அண்ணனுக்கு ஒரு நல்ல பொண்ணா ரெடி பண்ணுங்கப்பா
(விதானையார் பொண்ணுங்க மட்டும் வேணாம்)

செட்டப் செல்லப்பா said...
Best Blogger Tips

/////K.s.s.Rajh said...
அன்புக்கு மதிப்புக்கு உரிய நண்பர்கள் அனைவருக்கு வணக்கம் இங்கே தனிமனித தாக்குதல்களை நிறுத்தி சொல்லப்பட்டு இருக்கும் விடயம் பற்றி ஆரோக்கியமான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் விதாமேடை என்பது சண்டை பிடிக்கும் இடம் இல்லை இங்கே சொல்லப்பட்டு இருக்கும் விடயம் பற்றி தரமான விமர்சனங்களால் கருத்துக்களால் மோதவேண்டும் அதைவிட்டு விட்டு பதிவை எழுதியவரையோ இல்லை ஏனையவர்களையோ சாடுவதை தவிர்கவும்
////////

இந்த மாதிரி காத்திரமான பதிவுகள்ல வம்பிழுத்தா என்னைய மாதிரி புது ஆட்கள் பிரபலமாகிடலாம்னு சொன்னாங்களே? (ஆகிட்டேன் தானே?)

செட்டப் செல்லப்பா said...
Best Blogger Tips

/////Powder Star - Dr. ஐடியாமணிsaid...
நான் தான் புரட்சிக்காரன் அப்டீன்னு சில பேர் நம்புறமாதிரி, இந்த செட்டப் செல்லப்பாவும் நான் தான்னு சொல்லி யாராவது பதிவு போடுங்களேன்! இண்ட்ரெஸ்டிங்கா இருக்கும்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
/////

பௌடர் சார், ஆரம்பத்லயே இப்படி சொல்லிட்டா பிறகு நான் எப்படி வளருவேன்?

K.s.s.Rajh said...
Best Blogger Tips

////
athira said...
நடுவர்களாக அமர்ந்திருக்கும் இருவருக்கும் வாழ்த்துக்கள்... அவர்களுக்கு களைக்காமல் இருக்க, அப்பப்ப சோடா, மங்கோ யூஸ், ஹொட் சொக்கலேட்.... எல்லாம் வாங்கிக்கொண்டு வருகிறேன்..:)////

ஆமா மேடம் சீக்கிரமாக எடுத்திட்டு வாங்க ...............

செட்டப் செல்லப்பா said...
Best Blogger Tips

/////மதுரன்said...
@Powder Star - Dr. ஐடியாமணி

மணியண்ணை.. இங்க யாரோ ஒரு கோழைப்பயல் செட்டப் செல்லப்பா, பகீர் பாண்டி, விஓஇசட், என்ற மூன்று புறொபைல்ல வந்து சேட்டை விடுகிறார்
///////


ஓட்டவடை நாராயணன், ஐடியாமணி, புதிய புரட்சிகாரன், புதிய பிரெஞ்சுகாரன் போதுமா? பௌடர் ஸார் கெளம்புங்கோ உங்க அந்த இரண்டு ஐடியும் கொண்டுவாங்கோ.

K said...
Best Blogger Tips

மச்சி, நிரூ, “ சில பெரியவர்களின்” கருத்துப்படி, பெண்களுக்கு ஓவரா சுதந்திரம் கொடுக்கக் கூடாதாம்! அவர்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள்ல வைச்சிருக்கோணுமாம்! இல்லாவிட்டால், அடங்க மாட்டினமாம்!

இந்த “ அடங்கமாட்டினமாம்” என்பதற்குள் பல விதமான அர்த்தங்கள் இருக்கு!

மேலும், எனது அண்ணாவின் திருமணம் நடந்த போது, சில ஊர் “ பெரியவர்கள்” அண்னாவிடம் சொன்னதை அருகில் இருந்து கேட்டேன்!

“ தம்பி, கண்டபடி மனிசியை நீளக் கயிற்றில விடாதே! பிறகு குடும்பம், குடும்பமா இருக்காது”

இப்படி அந்த “ பெரியவர்கள்” அறிவுரை சொல்லிவிட்டுப் போன பின்னர், நான் அண்ணாவுடன் சண்டை போட்டேன்! அந்த “ பெரியவர்களின்” பேச்சைக் கேட்டால், நீ உருப்பட மாட்டாய்! ஒழுங்கா அண்ணிக்கு சுதந்திரம் கொடு என்று சொன்னேன்! அண்ணி ஒரு ஆசிரியர்! அண்ணா போஸ்ட் ஆஃபீசில் வேலை!

இருவரும் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள்! “ பெரிசுகளின்” பேச்சைக் கேட்காததால்!

அது சரி ஏன் இந்த “ பெரிசுகள்” இப்படி இருக்கினம்? இளைய சமூகத்தை நிம்மதியாகவே இருக்க விட மாட்டார்களா??

K.s.s.Rajh said...
Best Blogger Tips

////
செட்டப் செல்லப்பா said...
/////
பிற் சேர்க்கை: நாற்று வலைப் பதிவில் விவாத மேடைக்கு நடுவராக அடியேன் தான் இருந்து இது வரை காலமும் கருத்துச் சமர்களிற்கான தீர்ப்புக்களை வழங்கி வந்தேன். ///////

நீங்க எந்த காலேஜ்ல லா படிச்சீங்க சார்? இல்ல தீர்ப்பெல்லாம் சொல்லி இருக்கீங்களே அதான் கேட்டேன். இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா/////

அண்ணே செல்லப்பா அண்ணே ஏன்னே உங்களுக்கு இந்தனை லொள்ளு இதற்கு முன் நீங்கள் நாற்ரில் விவாதமேடை எதையும் படிக்கவில்லையா?

செட்டப் செல்லப்பா said...
Best Blogger Tips

//////K.s.s.Rajh said...
////
செட்டப் செல்லப்பா said...
/////
பிற் சேர்க்கை: நாற்று வலைப் பதிவில் விவாத மேடைக்கு நடுவராக அடியேன் தான் இருந்து இது வரை காலமும் கருத்துச் சமர்களிற்கான தீர்ப்புக்களை வழங்கி வந்தேன். ///////

நீங்க எந்த காலேஜ்ல லா படிச்சீங்க சார்? இல்ல தீர்ப்பெல்லாம் சொல்லி இருக்கீங்களே அதான் கேட்டேன். இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா/////

அண்ணே செல்லப்பா அண்ணே ஏன்னே உங்களுக்கு இந்தனை லொள்ளு இதற்கு முன் நீங்கள் நாற்ரில் விவாதமேடை எதையும் படிக்கவில்லையா?
////////

ராஜ் சார், இப்பத்தாண் எல்லாம் படிச்சிக்கிட்டு வாரென், அதுக்குள்ள கொஞ்சம் கோவம் வந்திட்டு, அதான்!

K said...
Best Blogger Tips

@செட்டப் செல்லப்பா

/////Powder Star - Dr. ஐடியாமணிsaid...
நான் தான் புரட்சிக்காரன் அப்டீன்னு சில பேர் நம்புறமாதிரி, இந்த செட்டப் செல்லப்பாவும் நான் தான்னு சொல்லி யாராவது பதிவு போடுங்களேன்! இண்ட்ரெஸ்டிங்கா இருக்கும்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
/////

பௌடர் சார், ஆரம்பத்லயே இப்படி சொல்லிட்டா பிறகு நான் எப்படி வளருவேன்? ////

அண்ணே, செல்லப்பா அண்ணே ( ஆமா, அண்ணனா தம்பியா? )

இப்ப யார் புது ஐடியில வந்து, ஏனைய நண்பர்களுடன் சண்டை போட்டாலும், அது நான் தான் என்று நம்புறதுதான் ஃபேஷன்!

நீங்கள்கூட புதிய புரட்சிக்காரன் நான் தான் என்று சொல்லீட்டீங்க!

இப்ப சொல்லுறன், செட்டப் செல்லப்பாவாகிய நீங்கள் வேறு யாருமில்லை! ஹி ஹி ஹி அதுவும் நான் தான்!

K.s.s.Rajh said...
Best Blogger Tips

////
athira said...
ஆனா நல்ல ஒற்றுமையாகத்தான் இழுபடுகிறது குடும்பம் வெளிப்பார்வைக்கு... ஆனா உள்ளே என்ன என்ன பிரச்சனைகளோ ஆண்டவனுக்கே வெளிச்சம்....////

நல்ல ஒரு கருத்து மேடம்

K said...
Best Blogger Tips

@செட்டப் செல்லப்பா

/////மதுரன்said...
@Powder Star - Dr. ஐடியாமணி

மணியண்ணை.. இங்க யாரோ ஒரு கோழைப்பயல் செட்டப் செல்லப்பா, பகீர் பாண்டி, விஓஇசட், என்ற மூன்று புறொபைல்ல வந்து சேட்டை விடுகிறார்
///////


ஓட்டவடை நாராயணன், ஐடியாமணி, புதிய புரட்சிகாரன், புதிய பிரெஞ்சுகாரன் போதுமா? பௌடர் ஸார் கெளம்புங்கோ உங்க அந்த இரண்டு ஐடியும் கொண்டுவாங்கோ.//////

செல்லப்பா அண்ணே, இதைவிட இன்னும் இரண்டு ஐடி இருக்கு! அது என்ன காசா பணமா? கூகுள்காரன் ஃப்ரீயாத்தானே உட்றான்!

அதான், 7, 8 வைச்சிருக்கேன்! ஃப்ரீயா கெடைச்சா நான் பிச்சைக்காரியையும்........ அதாவது பிச்சைக்காரி அப்டீகற பேரிலையும் ஐ டி வைச்சிருப்பேன்னு சொல்ல வந்தேன்!

செட்டப் செல்லப்பா said...
Best Blogger Tips

ஆமா எல்லாம் கேட்டுக்கோங்கோ நாந்தான் புதிய புரட்சிக்காரன், நாந்தான் ஐடியாமணி எல்லாமே. நாங்க இப்படித்தான் செத்து செத்து வெள்ளாடுவோம்.

செட்டப் செல்லப்பா said...
Best Blogger Tips

சரிங்க, உங்க முக்கியமான விவாத களம் வீணாகுது நான் கெளம்பறேன், பிறகு வாரென் நல்லா பொழுதை போக்கலாம்

Unknown said...
Best Blogger Tips

அன்பின் நண்பர்களுக்கு வணக்கம்... விவாதத்திற்கு தேவையான கருத்துக்களை முன் வைத்தால் வசதியாய் இருக்கும்...

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@
செட்டப் செல்லப்பா said...
/////K.s.s.Rajh said...
அன்புக்கு மதிப்புக்கு உரிய நண்பர்கள் அனைவருக்கு வணக்கம் இங்கே தனிமனித தாக்குதல்களை நிறுத்தி சொல்லப்பட்டு இருக்கும் விடயம் பற்றி ஆரோக்கியமான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் விதாமேடை என்பது சண்டை பிடிக்கும் இடம் இல்லை இங்கே சொல்லப்பட்டு இருக்கும் விடயம் பற்றி தரமான விமர்சனங்களால் கருத்துக்களால் மோதவேண்டும் அதைவிட்டு விட்டு பதிவை எழுதியவரையோ இல்லை ஏனையவர்களையோ சாடுவதை தவிர்கவும்
////////

இந்த மாதிரி காத்திரமான பதிவுகள்ல வம்பிழுத்தா என்னைய மாதிரி புது ஆட்கள் பிரபலமாகிடலாம்னு சொன்னாங்களே? (ஆகிட்டேன் தானே?////

நல்லாத்தான்யா பதிவுலகை புரிஞ்சு வைச்சு இருகீங்க ஆனால் கொஞ்சம் தனிப்பட்ட ரீதியில் யாரையும் விதாண்டாவாதம் செய்யாமல் பதிவில் சொல்லப்பட்ட விடயத்தை விவாதித்தால் நிச்சயம் நீங்கள் பேசப்படுவீர்கள் ....

K said...
Best Blogger Tips

@செட்டப் செல்லப்பா

சரிங்க, உங்க முக்கியமான விவாத களம் வீணாகுது நான் கெளம்பறேன், பிறகு வாரென் நல்லா பொழுதை போக்கலாம் /////

ஓகே செல்லப்பா, நானும் இந்த விவாதத்தில், சில கருத்துக்கள் சொல்லணும்! எனக்கு உங்ககூட பேசணும் போல இருக்கு! சரி சரி பிறகு வேறெங்காவது சந்திப்போம்!

அப்புறம் செல்லப்பா, எனக்கு நல்ல மூக்கும் முழியுமா ஒண்ண செட்டப் பண்ணிவையுங்க! அட்வான்ஸ் தரணுமா?

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@
Powder Star - Dr. ஐடியாமணி said...////

புதுசு புதுசா யார்வந்தாலும் உலகம் உங்களைத்தான் சந்தேகப்படுது...ஹி.ஹி.ஹி.ஹி...
பாவம்யா மச்சான் சார்

K said...
Best Blogger Tips

@ரேவா

அன்பின் நண்பர்களுக்கு வணக்கம்... விவாதத்திற்கு தேவையான கருத்துக்களை முன் வைத்தால் வசதியாய் இருக்கும்.../////

ஸாரி, ரேவா! புது நண்பரோட பேசிக்கிட்டு இருந்ததால, பேச்சு வேறபக்கம் திரும்பிடிச்சு! இப்ப பாயிண்டுக்கு வர்ரேன்!

ரேவா said...
Best Blogger Tips

Powder Star - Dr. ஐடியாமணி said...

@ரேவா

அன்பின் நண்பர்களுக்கு வணக்கம்... விவாதத்திற்கு தேவையான கருத்துக்களை முன் வைத்தால் வசதியாய் இருக்கும்.../////

ஸாரி, ரேவா! புது நண்பரோட பேசிக்கிட்டு இருந்ததால, பேச்சு வேறபக்கம் திரும்பிடிச்சு! இப்ப பாயிண்டுக்கு வர்ரேன்!


புரிந்துணர்வுக்கு நன்றி நண்பா :)

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@
செட்டப் செல்லப்பா said...
சரிங்க, உங்க முக்கியமான விவாத களம் வீணாகுது நான் கெளம்பறேன், பிறகு வாரென் நல்லா பொழுதை போக்கலாம்////

செல்லப்பா கொஞ்ச நேரம் பல கருத்துக்களை சொன்னதுக்கு நன்றிகள்

பதிவுலகில் கொஞ்சம் நட்புடன் செயற்படுவது அவசியம் தனிமனித தாக்குதல்கள் வேண்டாம்...உங்கள் முதல் வரவுக்கு நன்றிகள்

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@
ரேவா said...
அன்பின் நண்பர்களுக்கு வணக்கம்... விவாதத்திற்கு தேவையான கருத்துக்களை முன் வைத்தால் வசதியாய் இருக்கும்..////

வாங்க சகோ எங்க நான் மட்டும் சிக்கிட்டேனோ என்று நினைச்சேன் நல்லகாலம் வந்திட்டீங்க ஹி.ஹி.ஹி.ஹி

K said...
Best Blogger Tips

@K.s.s.Rajh

@
Powder Star - Dr. ஐடியாமணி said...////

புதுசு புதுசா யார்வந்தாலும் உலகம் உங்களைத்தான் சந்தேகப்படுது...ஹி.ஹி.ஹி.ஹி...
பாவம்யா மச்சான் சார் /////

மச்சான் சார், எனக்கு இது இப்போது பழகிவிட்டது! ஒரு விதத்தில் ஜாலியாகவும் இருக்கு! இன்னும் எவர் எவரெல்லாம் புதுஷா வரப்போறாங்களோ? அவர்களுக்கும் எனது பெயர் சூட்டப்படுமோ?

மச்சான் சார், இப்பவெல்லாம் பலவிதமான குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுத்து பழகிவிட்டது!

01. மனைவியையும் பிள்ளையையும் கைவிட்டேன்!

02. ஒளிச்சிருந்து ஃபோட்டோ எடுத்தேன்!

இப்படி பல சுவாரசியமான குற்றச்சாட்டுக்கள்! ஹி ஹி ஹி ஹி “ என் மீதான குற்றச்சாட்டுக்கள்” என்று ஒரு தொடர் பதிவே போடலாம்! பல வாரங்களுக்கு!!

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@
-/விஓஇசட் said...
சரோஜாதேவி புக்ல இருக்கிற கன்டென்ட் எல்லாம் இங்கே இருக்கும் வந்து பார்த்தா, இது என்ன புதுசா இருக்கு////

அண்ணன் நல்ல சரோஜா தேவி புக் படிப்பீங்க போல அதான் அந்த நினைப்பிலேயே என்நேரமும் சுத்துறீங்க.....

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@
athira said...
ஆணாதிக்கம் என்பது ஒரு காலத்தில் அதிகம் இருந்ததுதான்... ஆனால் இப்போ நம்மவர்கள் இலங்கையை விட்டு வெளியேறி உலகமெல்லாம் பரந்து வாழ்வதனால்...

பல பல நாட்டுப் பழக்கவழக்கங்களையும் பார்த்து, பழகி நிறையவே மாறிவிட்டார்கள்.

அதிலும் இப்போ வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில்... சரிக்குச் சரி, வீட்டுத் தேவைக்காக மனைவியும் உழைக்கிறா, அதேபோல் வீட்டு வேலைகள், குழந்தைகள் பராமரிப்பில் கணவனும் பங்கெடுக்கிறார்....

ஆனால் நன்றாகப் போகும் குடும்பங்களுக்குள்... அவர்களின் முந்தைய தலைமுறையான பெற்றோர் வந்து தங்கிப் போகும் பட்சத்தில்... சில இடங்களில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல குழப்பி விட்டுவிடுகிறார்கள், இதனால் பிரச்சனைகள் சில இடங்களில் கடுகு.. பெரிதாகி... பூதாகாரமாகிறது.

தந்தை சொல்கிறார்... நான் ஒரு ரீ கப் கூட கழுவியதில்லை, நீ கிச்சினில் பாத்திரம் கழுவுகிறாயே... என இப்படி ஆரம்பித்து வைக்கின்றனர் ஆதிக்கத்தை.

சில ஆண்கள், பெண்கள் அவற்றைப் பொருட்படுத்தாமல் தூசிபோல தட்டிவிட்டுச் சென்றுவிடுவர், சிலருக்கு அது மனதை அரிக்கத் தொடங்கி விடுகிறன்/////

இது ஒரு சிறப்பான கருத்து மேடம் விவாத மேடையின் தீர்ப்பில் இது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி said..

மச்சான் சார், எனக்கு இது இப்போது பழகிவிட்டது! ஒரு விதத்தில் ஜாலியாகவும் இருக்கு! இன்னும் எவர் எவரெல்லாம் புதுஷா வரப்போறாங்களோ? அவர்களுக்கும் எனது பெயர் சூட்டப்படுமோ?

மச்சான் சார், இப்பவெல்லாம் பலவிதமான குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுத்து பழகிவிட்டது!

01. மனைவியையும் பிள்ளையையும் கைவிட்டேன்!

02. ஒளிச்சிருந்து ஃபோட்டோ எடுத்தேன்!

இப்படி பல சுவாரசியமான குற்றச்சாட்டுக்கள்! ஹி ஹி ஹி ஹி “ என் மீதான குற்றச்சாட்டுக்கள்” என்று ஒரு தொடர் பதிவே போடலாம்! பல வாரங்களுக்கு!////காய்த மரம் கல்லடி படும் என்பார்களே இதுதான் அது போல

K said...
Best Blogger Tips

மச்சி, நிரூ, + நடுவர்களே! பெண்களை அடக்கி ஒடுக்குவது, அல்லது அவர்களின் உரிமையைப் பறிப்பது என்பது எமது நாடுகளில் இப்போதைக்கு இல்லாமல் போகுமா? என்று அஞ்சுகிறேன்!

காரணம், இங்கு வெளிநாடுகளில் கூட இன்னும் பல திருந்தாத, மாற்றியோசிக்காத பலர் இருக்கிறார்கள்!

பொதுவாக, குறிப்பிட்ட ஒரு சூழலில் நீண்டகாலம் வாழும் ஒரு சமூகம் அவ்வளவு சீக்கிரம் மாறாது! ஆனால், பல சமுகத்தவர்கள் வாழும் ஒரு தேசத்தில்தான், மாற்றங்கள் நடந்தாக வேண்டும்! அப்படிப்பார்த்தால், இங்கு வெளிநாடுகளில் தான் முதலில் மாற்றங்கள் தொடங்க வேண்டும்!

ஆனால் இங்கு அப்படி இல்லையே! இங்கும் பல பிற்போக்கு வாதிகள் இருக்கிறார்கள்! என்ன செய்ய?

ரேவா said...
Best Blogger Tips

K.s.s.Rajh said...

@
ரேவா said...
அன்பின் நண்பர்களுக்கு வணக்கம்... விவாதத்திற்கு தேவையான கருத்துக்களை முன் வைத்தால் வசதியாய் இருக்கும்..////

வாங்க சகோ எங்க நான் மட்டும் சிக்கிட்டேனோ என்று நினைச்சேன் நல்லகாலம் வந்திட்டீங்க ஹி.ஹி.ஹி.ஹி

vanakkam sako....etharththama vivatham epdi poyedu irukkunu pakkavanthen paatha nammala sikka vatchutaan niruban he he he....

ரேவா said...
Best Blogger Tips

தமிழ்ச் சமூகத்தில் பழமை வாதிகளால் விதைக்கப்பட்ட இல்லத்தரசி என்பவள் வீட்டினுள்ளே இருக்க வேண்டும் எனும் மூட நம்பிக்கையும், கணவனை மாத்திரம் நம்பித் தங்கி வாழ்பவளாக மனைவி வாழ வேண்டும் என்கின்ற பழமைக் கோட்பாடுகளும் இன்றைய 21ம் நூற்றாண்டில் மெது மெதுவாக சிதைந்து போகின்றன.

நிரூபன் 21ம் நூற்றாண்டில் ஆணுக்கு பெண் அடிபணித்து வாழ்கிற கோட்பாடு மெது மெதுவாய் சிதைந்து வருகின்றது என்பது உண்மையே...இதில் புரிந்துணர்வுடன் பெண்ணின் உணர்வுகளை புரிந்து உரிமைகளை சரியாய் பகிர்கின்ற ஆடவர் கொஞ்சமே...பெண்கள் பொருளாதார ரீதியாகவும், வேலை வாய்ப்பிலும் இன்ன பிற எல்லா விசயங்களயும் முன்னேறி வருகிறாள் இதில் தனக்கான உரிமையை தானே பெறத் துணிந்ததின் விளைவும் ஆண் ஆதிக்கம் குறைந்து போய்கொண்டு இருப்பதற்கான காரணமாய் இருக்கும் என்று நினைக்கிறேன்...

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@கந்தசாமி. said...
மாற்றம் ஒன்றே மாறாத ஒன்று எண்டு சொல்வார்களே ..அது போல எல்லாம் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாறி தானே ஆகனும்... மேல்நாடுகளில பெண்கள் பஸ்சில் இருந்து ஏரோப்பிளேன் வரை ஓட்டுகிற நிலை வந்தாச்சு ..ஆனா நம்ம நாட்டில முழுமையாக அந்த நிலை வர இன்னும் காலம் எடுக்கலாம்////

இந்த நிலை நிச்சயம் மாறவேண்டும் கந்து.....கண்டிப்பாக மாறும் என்று நம்புவோம்

shanmugavel said...
Best Blogger Tips

ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கம் என்பதாக ஆண் ,பெண் என்று இரண்டு பக்கத்தையும் காட்டியிருக்கிறீர்கள்.இப்போது நேரமில்லை.பொறுமையாக கருத்துக்களை படிக்கிறேன்.

K said...
Best Blogger Tips

நேற்று, விஸா மாற்றப் போன இடத்தில் எனக்கு முன்னால், ஒரு தமிழ் தம்பதி கியூவில் நின்றார்கள்!

அதில் அந்த ஆண், ஜீன்ஸ் போட்டு, ஃபுல் ஓவர் போன்ற குளிரைத்தாங்கும் உடைகளும் போட்டிருந்தார்!

ஆனால், அந்த அக்கா சாரி தான் உடுத்திருந்தார்! நேற்று காலை பாரிஸில் குளிர் எப்படி இருந்தது என்பதை ஏனைய நண்பர்களிடம் கேட்டால் சொல்வார்கள்!

அப்படியொரு குளிரில் சாரி உடுத்து, எமது கலாச்சாரத்தை கட்டிக்காக்கிறார் அந்தப் பெண்! ஹி ஹி ஹி ஆம்பளை மட்டும் ஜீன்ஸ் அணிந்து, குளிருக்கு சிகரெட் வேறு பிடிக்கிறார்!

ஹி ஹி ஹி ஹி அருகில் ஒரு அடையானும் அடைச்சியும் இருவரும் ஜீன்ஸ்தான் அணிந்திருந்தார்கள்! இருவருமே சிகரெட் பிடித்தார்கள்!

வெளிநாடுகளில் மனைவியை ஜீன்ஸ் போட அனுமதிக்காத பல அறிவாளிகள் இருக்கிறார்கள்!

இங்கு கூட நிலைமை இப்படி இருக்க, அங்கு எப்படி மாற்றம் வரும்???????????

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ said...
அன்பும் போதிய விட்டுகொடுத்தலும் இருந்தாலே வாழ்க்கையின் சந்தோஷத்தை இருவரும் அனுபவிக்கலாம்...!!/////

சரியாகச்சொன்னீங்க அண்னே அன்பும் விட்டுக்கொடுத்தலும் தான் வாழ்கையில் சந்தோசத்திற்கான அடிப்படை

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@
Powder Star - Dr. ஐடியாமணி said...
நேற்று, விஸா மாற்றப் போன இடத்தில் எனக்கு முன்னால், ஒரு தமிழ் தம்பதி கியூவில் நின்றார்கள்!

அதில் அந்த ஆண், ஜீன்ஸ் போட்டு, ஃபுல் ஓவர் போன்ற குளிரைத்தாங்கும் உடைகளும் போட்டிருந்தார்!

ஆனால், அந்த அக்கா சாரி தான் உடுத்திருந்தார்! நேற்று காலை பாரிஸில் குளிர் எப்படி இருந்தது என்பதை ஏனைய நண்பர்களிடம் கேட்டால் சொல்வார்கள்!

அப்படியொரு குளிரில் சாரி உடுத்து, எமது கலாச்சாரத்தை கட்டிக்காக்கிறார் அந்தப் பெண்! ஹி ஹி ஹி ஆம்பளை மட்டும் ஜீன்ஸ் அணிந்து, குளிருக்கு சிகரெட் வேறு பிடிக்கிறார்!

ஹி ஹி ஹி ஹி அருகில் ஒரு அடையானும் அடைச்சியும் இருவரும் ஜீன்ஸ்தான் அணிந்திருந்தார்கள்! இருவருமே சிகரெட் பிடித்தார்கள்!

வெளிநாடுகளில் மனைவியை ஜீன்ஸ் போட அனுமதிக்காத பல அறிவாளிகள் இருக்கிறார்கள்!

இங்கு கூட நிலைமை இப்படி இருக்க, அங்கு எப்படி மாற்றம் வரும்??????????////

மச்சன் சார் சிகரட் பிடிக்க அனுமதிக்காவிட்டாலும் ஜீன்ஸ் போட அவர் அனுமதிக்கலாம் அவர் பழமைவாதி போல

ஆனால் ஓரு பெண் ஜீன்சில்,சுடிதார் போன்றவற்றில் இருப்பதைவிட சேலையில் இருக்கும் போது மிகவும் கவர்சியாக தெரிவாள்..எனவே ஜீன்ஸ்,சுடிதார் போட அனுமதிப்பதில் தவறு இல்லை ஆனால் நம்ம பழமைவாதிகள் அது நாகரிக வளர்சி என்று கதை பேசும் ஆணாதிக்கவாதிகள் ஜீன்ஸ் போட்டால் ஏதோ அந்தப்பெண் பாரிய தவறு செய்ததை போல பேசும்(கதைக்கும்)பல பழமைவாதிகளை நான் சமூகத்தில் பார்த்திருக்கின்றேன்....இவர்கள் மாறவேண்டும் மச்சான் சார்

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@
Powder Star - Dr. ஐடியாமணி said...
மச்சி, நிரூ, + நடுவர்களே! பெண்களை அடக்கி ஒடுக்குவது, அல்லது அவர்களின் உரிமையைப் பறிப்பது என்பது எமது நாடுகளில் இப்போதைக்கு இல்லாமல் போகுமா? என்று அஞ்சுகிறேன்!

காரணம், இங்கு வெளிநாடுகளில் கூட இன்னும் பல திருந்தாத, மாற்றியோசிக்காத பலர் இருக்கிறார்கள்!

பொதுவாக, குறிப்பிட்ட ஒரு சூழலில் நீண்டகாலம் வாழும் ஒரு சமூகம் அவ்வளவு சீக்கிரம் மாறாது! ஆனால், பல சமுகத்தவர்கள் வாழும் ஒரு தேசத்தில்தான், மாற்றங்கள் நடந்தாக வேண்டும்! அப்படிப்பார்த்தால், இங்கு வெளிநாடுகளில் தான் முதலில் மாற்றங்கள் தொடங்க வேண்டும்!

ஆனால் இங்கு அப்படி இல்லையே! இங்கும் பல பிற்போக்கு வாதிகள் இருக்கிறார்கள்! என்ன செய்ய////

எல்லோறும் மாத்தி யோசிக்கவேண்டும் ,பெண்களும் மனிதர்கள் தான் அவர்களின் உணர்வுகளையும் மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும் பழமைவாதிகளே இதை கவனிக்கவும் நல்ல ஒரு கருத்து மச்சான் சார்

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@athira said...
// நம்மாளு அதுக்கும் இல்லை வீட்டு வேலைகூட பொண்டாட்டி செய்யாட்டி எதுக்கு பொண்டாட்டின்னு கேட்டிருக்க்கார்... ஹி ஹி முடிவு உங்களுக்கு தெரியும்தானே? பெத்த தாய் செத்த வீட்டுக்குகூட போகல நம்ம மிஸ்டர் x...!!????//

ஹா..ஹா..ஹா... இங்குள்ள வெள்ளையருக்குப் பிடிக்காது, தம் தம் வேலையைத் தாமேதான் செய்ய வேண்டும் என சொல்வார்கள்.

ஒரு தடவை என் கணவரோடு வேலை செய்யும், ஒரு இங்கத்தைய டாக்டர் கேட்டாவாம் என் கணவரை.. ஷேட் நன்றாக அயன் பண்ணியிருக்கே யார் அயன் பண்ணுவது நீங்கதானே என... இவருக்கு இங்கத்தைய நாட்டு நடப்பெல்லாம் தெரிந்தமையால் உடனே நான் தான் என்றிட்டார்...

அவ சொன்னாவாம் அதுதானே பார்த்தேன் அப்படித்தான் உங்கட வேலையை நீங்கதான் செய்யவேணும் என்று....

உஸ் ... எப்படியெல்லாம் பொய் சொல்லித் தப்பவேண்டிக்கிடக்கென்றார்:)////

ஹா.ஹா.ஹா.ஹா.........

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@
@
athira said...
எமது இலங்கைக் குடும்பம் ஒன்று, மிகவும் வறிய கொட்டில் வீட்டில் தாயோடு மட்டும் வசித்து வந்த ஒரு பெண்ணை எதுவும் இல்லாமல் மணம் முடித்தார், வெளிநாட்டில் இருக்கும் ஒரு பிஸ்னஸ்காரர்(நம்நாட்டவர்தான்).

வெளி நாட்டுக்குக் கூட்டி வந்ததும், அவர் மிகவும் குடும்பப் பொறுப்பு மிக்கவர். மனைவியின் சொல்லுக்கு ஒத்துப் போபவர்...

மனைவிக்காக நல்ல கார் வாங்கிக்கொடுத்து, நல்ல வீடு வசதி....

மனைவி தன் தாயையும் கூப்பிட்டு எடுத்துக் கொண்டா....

தாய் வீட்டைக் கவனிப்பா... மனைவி ஊர் சுத்த தொடங்கிட்டா... நம்மவரோடு நட்புக்கொள்வதில்லை... மரியாதை இல்லையாம்... அதனால் நட்பு எல்லாம் வெள்ளையர்களோடுதான்....

கணவன் எல்லாத்துக்கும் விட்டுப் பிடித்தார்... வெள்ளையர்கள் மட்டுமே நட்பெனில், அவர்கள் தம் முறையைத்தானே சொல்லிக்கொடுப்பார்கள்... அதுதான் நடந்தது....

தினம் ரைம் டேபிள் போட்டு... சுவிமிங், ஜிம்... ஈவிங் பார்ட்டி இப்படி போக வெளிக்கிட்டு...

இப்போ என்னவென்றால் கிழமையில் ஒருநாள் டே ஓவ் வேண்டுமாம் மனைவிக்கு....

அதனால் ஒருநாள் முழுப்பொறுப்பையும் கணவன் பார்க்க வேண்டுமாம்... மனைவி... நைட் பப் க்குப் போய் 12, 1 மணிக்குத்தான் வீட்டுக்கு வாறாவாம்.... தப்பாக ஏதுமில்லை, எல்லாம் பாஷன் எனத்தான் நடக்கிறது.

கணவன் நித்திரைகொள்ளாமல் விழித்திருந்து, அவ வீட்டுக்கு வந்ததும் ரீ ஊத்திக் கொடுக்கிறாராம்....

இதை நேர்ல் ஒருதடவை பார்த்த, அந்தக் கணவனின் அண்ணாவே சொன்னார்.... பாவம் தம்பி நல்லவன், அவனுக்கு இப்போ வெள்ளம் தலைக்குமேலே போன நிலைமைபோல இருக்கு.... வாய் திறந்தால் மனைவி விவாகரத்தும் கேட்டுவிடலாம் எனப் பயந்தோ என்னவோ... கொண்டிழுக்கிறார் என/////

இப்படி அப்பாவி ஆண்களும் இருக்கின்றார்கள் மேடம்.நல்ல கருத்து

இதுவரை விவாதமேடையில் வந்துள்ள ஒரே ஒரு கருத்து அப்பாவி ஆண்கள் பற்றி

K.s.s.Rajh said...
Best Blogger Tips

இங்கே கருத்திடும் ஆண்கள் ஓருவர் கூட அப்பாவி ஆண்கள் நிலை பற்றி பேசவில்லை பெண்ணாதிக்கம் என்ற ஒருவிடயமும் விவாதத்தில் இருக்கு ஒரு வேளை இவங்கள் பெண்ணாதிக்கத்தில் இருக்காங்களோ ஹி.ஹி.ஹி.ஹி..

பிரெஞ்சுக்காரன் said...
Best Blogger Tips

நிரூ, நான் தெரியாமல் தான் கேட்கிறேன்! ஒருவர் வந்து நல்ல விதமா கருத்துப்போட்டால், அவருக்கு நன்றி சொல்கிறோம்! நட்பு பாராட்டுகிறோம்!

ஆனால், கொஞ்சம் எதிர்கருத்து சொன்னால், உடனே ஐ அட்ரெஸ், வீட்டு விலாசம் வரை கண்டுபிடித்து வெளியிடுவேன் என்று மிரட்டுகிறோம்!

இங்கு செல்லப்பாவின் கருத்துக்கள்தான் எமக்கு முக்கியமே தவிர, அந்த செல்லப்பா யாரு? அவரோட வீட்டு விலாசம் என்ன? அவரு கல்யாணம் பண்ணவரா? இதெல்லாம் நமக்குத் தேவையே இல்லை!

ஒருத்தர் எம்மோடு கருத்துக்களால் முரண்படுகிறார் என்றால், அவரது கருத்துக்கு எமது பதிலடியைக் கொடுப்பதுதான் முறையே தவிர, அவரது சொந்த பேர் என்ன? முகவரி என்ன என்பதைக் கண்டு பிடிப்பது மிகவும் கோழைத்தனம்!

இங்கு செல்லப்பாவின் கருத்துக்களுக்கு நீ பதில் சொல்லிவிட்டு பேசாமல் இருந்திருக்கமால்! எதற்காக ஊரைக்கூட்டி, ஒப்பாரி வைக்கிறாய்?

மச்சி, உன்னிடம் மாற்றுக் கருத்தை நான் நேரடியாக சொல்வேன்! என்னிடமும் நீ நேரடியாகவே சொல்வாய்! எமக்குள் கருத்து முரண்பாட்டால் நட்பை முறிக்கும் சின்னப்பிள்ளைத்தனம் கிடையாது!

ஆனால், எல்லோரும் அப்படி இல்லை! சிலரிடம் போய் எதிர்கருத்து சொன்னால், உடனே மூஞ்சையை நீட்டிக்கொண்டு திரிவார்கள்! அப்படியானவர்களிடம் போலி ப்ரோபைலில்தான் கமெண்டு போட வேண்டும்!

சில பிரபல பதிவர்கள் அவ்வப்போது, போலி பேரில் களம் இறங்குவதற்கு காரணமே, எங்கே நேரடியாகச் சொன்னால், நட்பு முறிந்துவிடுமோ என்கிற பயம்தான்!

இதில், செல்லப்பாவின் கருத்து உனது பதிலை சொல்வதை விட்டுவிட்டு, இம்சை அரசனை அவமதித்ததை வன்மையாக கண்டிக்கிறேன்!

மச்சி, செல்லப்பாவின் கமெண்டுகளுக்கு எதிர்கருத்து சொல்ல உனக்கு தில் இல்லையா? அல்லது முதுகெலும்பு இல்லையா?

பிரெஞ்சுக்காரன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh

இங்கே கருத்திடும் ஆண்கள் ஓருவர் கூட அப்பாவி ஆண்கள் நிலை பற்றி பேசவில்லை பெண்ணாதிக்கம் என்ற ஒருவிடயமும் விவாதத்தில் இருக்கு ஒரு வேளை இவங்கள் பெண்ணாதிக்கத்தில் இருக்காங்களோ ஹி.ஹி.ஹி.ஹி.. //////

மச்சான் சார், பெண்கள் சில சமயங்களின் மௌனமாக இருப்பார்கள் பாருங்கள்! அதைவிட மிகப் பெரிய பெண்ணாதிக்கம் வேறு எதுவும் இல்லை!

ஹி ஹி ஹி ஹி அனுபவமா? என்று கேட்டால், ஆம் என்பதுதான் பதில்!

மச்சன் சார், நீங்கள் இந்த மௌனத்தின் வலியை அனுபவித்திருக்கிறீர்களா?

நிரூபன் said...
Best Blogger Tips

@Robin

//ஆண்களுக்குச் சேவகம் புரிந்து// தவறு. ஆண்களுக்கு அல்ல குடும்பத்திற்கு சேவகம் புரிகிறாள். இதைப் போல ஆணும் குடும்பத்திற்காக உழைக்கிறான்.
//

வணக்கம் ரொபின் அண்ணா,
குடும்பத்திற்கு ஓக்கே,
ஆனாலும் பெரும்பாலான பெண்களை ஆண்கள் வீட்டு வேலைக்காரி போலத் தானே நடத்துகிறார்கள்.

ரேவா said...
Best Blogger Tips

சகோதர உறவுகள் மன்னிக்கவும் எங்கள் பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, அதாலே விவாதத்தில் பங்கெடுக்க காலதாமதம்....

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

என்னது பெண்களால் கண்ணீர் விடும் ஆண்களோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்:))))
//

ஆண்களுக்கும் கண்ணீர் விடும் உணர்வு இருக்கும்,
ஆனால் வெளியே காண்பிப்பதில்லை.

சில ஆண்கள் மனதிற்குள் வெம்பி வெம்பி அழுவார்களாம், ஆனால் வெளியே சொல்லிக்க மாட்டார்களாம்.

ஹே...ஹே...

நிரூபன் said...
Best Blogger Tips

@செட்டப் செல்லப்பா


ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம்.......????
//

ஹே..ஹே..
அண்னே என்ன ப்ராப்ளம்?
எதுவா இருந்தாலும் நாம பேசித் தீர்த்துக்கலாம் அல்லவா.

நிரூபன் said...
Best Blogger Tips

@KANA VARO

நிரூவின் வலை வாழ்க்கையில் அதிகூடிய பதிவுகளை எழுதப்போகும் மாதம் இது இப்பவே 34..
//
பாஸ், என்ன லொக் புக் கையில வைச்சிருக்கிறீங்களா?
நோட் பண்ணிக் கொண்டு திரியுறீங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்
/KANA VARO said...
நிரூவின் வலை வாழ்க்கையில் அதிகூடிய பதிவுகளை எழுதப்போகும் மாதம் இது இப்பவே 34..

November 22, 2011 4:51 PM

ஆமா அருக்கென்ன விதானையாரின் பொட்டை கொண்டுவந்த சீதன காச வைச்சே வாழ்கைய ஓட்டுறார்.. 34 என்ன 304 பதிவுகூட எழுதுவார்..!!//

ஆமா இங்கே என்ன நடக்குது?
விதானையாரின் பொட்டைய மறக்கவும் விட மாட்டீங்க போல இருக்கே.

ரேவா said...
Best Blogger Tips

Powder Star - Dr. ஐடியாமணி said...

மச்சி, நிரூ, + நடுவர்களே! பெண்களை அடக்கி ஒடுக்குவது, அல்லது அவர்களின் உரிமையைப் பறிப்பது என்பது எமது நாடுகளில் இப்போதைக்கு இல்லாமல் போகுமா? என்று அஞ்சுகிறேன்!

காரணம், இங்கு வெளிநாடுகளில் கூட இன்னும் பல திருந்தாத, மாற்றியோசிக்காத பலர் இருக்கிறார்கள்!

பொதுவாக, குறிப்பிட்ட ஒரு சூழலில் நீண்டகாலம் வாழும் ஒரு சமூகம் அவ்வளவு சீக்கிரம் மாறாது! ஆனால், பல சமுகத்தவர்கள் வாழும் ஒரு தேசத்தில்தான், மாற்றங்கள் நடந்தாக வேண்டும்! அப்படிப்பார்த்தால், இங்கு வெளிநாடுகளில் தான் முதலில் மாற்றங்கள் தொடங்க வேண்டும்!

ஆனால் இங்கு அப்படி இல்லையே! இங்கும் பல பிற்போக்கு வாதிகள் இருக்கிறார்கள்! என்ன செய்ய?


சரியாய் சொன்னாய் நண்பா காலம் காலமாய் ஆண் என்றால் இப்படித்தான் பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் பிறப்பில் இருந்தே இன்னும் சொல்லப்போனால் நம் குடும்ப வளர்ப்பில் இருந்தே வேர் ஊன்றிப் போன ஒன்று தான் இதை மாற்றுவது கொஞ்சம் கடினம் தான் உன் கருத்தை ஏற்கிறேன்...அப்பறம் மணி மாற்றம் முதலில் நம்மில் இருந்து வரவேண்டும்.... அப்போது தான் அது ஆரோக்கியமான விடயமாய் இருக்கும்...இதில் வெளிநாடுகளில் தான் மாற்றம் வேண்டும் என்பது எனக்கு என்னமோ ஏற்புடையதாய் தெரியவில்லை நண்பா...(மன்னிக்கவும் விவாதத்திற்காய் மட்டும் நண்பா )

நிரூபன் said...
Best Blogger Tips

@செட்டப் செல்லப்பா

//தமிழர்கள் வாழும் ஊரில் ஆண்கள் குழந்தையினைக் காவிச் சென்றால் பார்வையாளராக உள்ளோர் எள்ளி நகைப்பார்கள் என்று நீங்கள் இங்கே ஒரு கருத்தினைக் கூறலாம்./////

ஹஹஹஹா......... 1950-ல இருக்க வேண்டிய ஆளுய்யா நீரு......
//

அண்ணே, உண்மையைத் தானே பதிவில சொல்லியிருக்கேன்.
ஏன் 1950 இல ஆண்கள் குழந்தையினைச் சுமந்திருக்காங்களா?

ரேவா said...
Best Blogger Tips

நிரூபன் விவாததிற்கு தேவையான மறுமொழிகளுக்கு பதில் அளிக்கலாமே, தேவையற்ற வாதங்கள் எதற்கு....

நிரூபன் said...
Best Blogger Tips

@செட்டப் செல்லப்பா
////பெண்கள் வயிற்றில் சுமந்த குழந்தையினை ஆண்கள் இடுப்பில் சுமந்தோ அல்லது வண்டிலில் தள்ளிச் செல்வதற்கு ஏற்றவாறு எம் சமூகத்தினைத் தயார்படுத்த வேண்டுமெனில் எந்த மாதிரியான திட்டங்களை முன் வைக்க முடியும்?///////

லூசாய்யா நீ.....?//

அண்ணே கீழ்ப் பாக்கத்திலயும், கோயம்புத்தூரிலையும் ஒன்னாத் தானே நாம இருந்தோம்,
நீங்க தானே திருநெல்வேலிக்கு ஓடிப் போயிட்டீங்க

ஹே...ஹே...

அண்ணே ஒரு லூசு எழுதியிருக்கிறது இன்னொரு லூசுக்குத் தானே புரியும்!
அப்போ நீங்க முழு லூசு!
நான் அரை லூசா;-))))

ஹி...ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@செட்டப் செல்லப்பா

//////பெண் சில வேளைகளில் தன் அன்பின் மூலம் அடக்கு முறையினை அல்லது ஆதிக்கம் எனும் அஸ்திரத்தினைப் பிரயோகிக்க முனைகின்றாள். //////


அன்பின் மூலம் அடக்குமுறை? என்னதான் சொல்ல வர்ரீங்க?
//

ஹே...ஹே...

அண்ணே அன்பு செலுத்துவது போல அன்பாக நடந்து,
அடக்கு முறையினையும் பிரயோகிப்பது

பிரெஞ்சுக்காரன் said...
Best Blogger Tips

நிரூ, புரட்சிக்காரன் என்பவர், இன்னொரு பதிவரின் பதிவிலே காணப்படும் எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காடி பதிவு போட்டிருந்தார்!

உண்மையாகவே அந்த கவிதைப் பதிவரின் பதிவுகள் + பின்னூட்டங்களில் எழுத்துப் பிழைகள் இருந்தன!

ஆனால், கவிதைப் பதிவர் எழுத்துப் பிழைகளைத் திருத்த முயற்சிகளை மேற்கொள்ளாமல், அந்தப் புரட்சிக்காரன் யார் என்பதை தேடித்திரிவதிலே தனது நேரத்தை செலவிட்டார்! புரட்சிக்காரனின் முகத்திரையைக் கிழிக்கப் போவதாகச் சொன்னார்!

கடைசியில் என்ன நடந்தது? சம்மந்தமே இல்லாமல், இன்னொரு பதிவர் மீது சேற்றை வாரி இறைத்தார்!

ஆனால், புரட்சிக்காரன் யார் என்பதை இதுவரை கண்டுபிடிக்கவே இல்லை!

எழுத்துப் பிழை விடுகிறீர்கள் என்று ஒருவர் சுட்டிக்காட்டினால், திருத்திக்கிட்டு போய்க்கிட்டே இருப்பியா?அதைவிட்டுட்டு, அவரு யாரு? என்ன பண்ணுறாரு? இதெல்லாம் எதுக்கு?

மேலும், இங்கும் அப்படித்தான், செல்லப்பா என்ன சொன்னாரு? இதுதான் எமக்கு முக்கியம்! அவரது கமெண்டுக்கு பதில் கமெண்டு போடுவதுதான் நாகரிகம்!

உதாரணமாக, என்னை “ பேய் பேக்ஸ்” என்ற பெயரில் ஒருவர் தொடர்ந்து தாக்கிவருகிறார்! அவரு என்ன சொல்கிறார் என்பதுதான் எனக்கு முக்கியமே தவிர,அவரு யாரு? எங்க இருக்காரு? மத்யானம் என்ன சாப்பிட்டாரு? என்ன பிராண்ட்ல அண்டவேர் போடுறாரு? இதெல்லாம் நமக்குத் தேவையா?

செட்டப் செல்லப்பா said...
Best Blogger Tips

என்ன மிஸ்டர் நிரூபன், மறுபடியும் ஐப்பி நம்பர், முகவரினு கிளம்பிட்டேளே? உங்களுக்கெல்லாம் விமர்சனத்தை எதிர்கொள்ளும் திராணியே இல்லையா?
இப்போ என் ஐபி நம்பரை கண்டு பிடியுங்களேன்? (கமெண்டை வைத்து ஐப்பி நம்பரை கண்டுபிடிப்பது எப்படிண்டு எங்களுக்கும் தெரியும், குத்து மதிப்பா கமெண்டு போடும் நேரத்தை வெச்சிட்டு ஒரு ஐபி நம்பரை காட்டி அலம்பல் பண்ணக்கூடாது)
நானும் அந்த இம்சை அரசன் பாபுவும் ஒரே ஆளுன்னு நிரூபிங்க பார்க்கலாம்.

செட்டப் செல்லப்பா said...
Best Blogger Tips

நான் இப்போ மூனு முறை F5 அமுக்கி உங்க தளத்தை ரிஃப்ரெஷ் செய்யறேன், என் ஐப்பிய கண்டுபுடிச்சுக்குங்கோ மிஸ்டர் நிரூபன்!

பிரெஞ்சுக்காரன் said...
Best Blogger Tips

@நிரூபன்

@செட்டப் செல்லப்பா

//////பெண் சில வேளைகளில் தன் அன்பின் மூலம் அடக்கு முறையினை அல்லது ஆதிக்கம் எனும் அஸ்திரத்தினைப் பிரயோகிக்க முனைகின்றாள். //////


அன்பின் மூலம் அடக்குமுறை? என்னதான் சொல்ல வர்ரீங்க?
//

ஹே...ஹே...

அண்ணே அன்பு செலுத்துவது போல அன்பாக நடந்து,
அடக்கு முறையினையும் பிரயோகிப்பது /////

மச்சி நிரூ, இது பிள்ளைக்கழகு! அவருடைய கமெண்டுக்கு நீ பதில் போடுகிறாய் பாரு! இது ஓகே!

அதைவிட்டுட்டு, ஐ பி, டெலிஃபோன் நம்பர் இதெல்லாம் கொஞ்சம் ஓவர்!

ஹேமா said...
Best Blogger Tips

நிரூ...என்ன பெண்ணாதிக்கம் ஆணாதிக்கம்.குடும்பத்தில் மனஆதிக்கம் சரியாக ஒற்றுமையாக இருந்தால் யாரும் ஏதும் கதைக்கமுடியாது.என் வீட்டில் அப்பா அம்மாவிடம் நான் கண்டது.அப்பா சொல்லுவார்.ஏன் அடுத்தவீட்டை நான் பார்க்க.என் வீடு,என் மனைவி,என் பிள்ளைகள்.அவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்பார் !

ரேவா said...
Best Blogger Tips

சரி இப்போ பெண் ஆதிக்கம் பற்றி சொல்வதானால், பெண்களுக்கான சுதந்திரம், பெண்ணை ஆளுமை கைகளுக்கு அடிபணியும் விஷயத்தை கட்டிப் போட்டு உள்ளது என்றே சொல்லலாம்...ஆனாலும் சில பெண்களால் குடும்பத்தில் ஆதிக்க சூழல் அதிகமாகும் போது பிரச்சனைகளும், பிரிவினைகளும் வரத்தான் செய்கின்றன...பழக்கப்பட்ட ஒரு ஆணின் சூழலில் இருந்து, ஆணும் பெண்ணும் சரி நிகர் தான் என்ற எண்ணத்தை, அதற்க்கான விதையை இந்த பெண் ஆதிக்கத்தின் மூலம் ஒரு ஆரோக்கியத் தளத்திற்கு எடுத்துச் செல்லலாம் என்று நினைக்கிறன்...அதற்காக பெண் ஆதிக்கம் சரி என்று சொல்லவில்லை...பெண் ஆதிக்கத்தால் தன் வாழ்வை தொலைத்த பல நண்பர்களை நானும் அறிவேன்....என்னைப் பொறுத்தவரை ஆளுமைகள் ஆட்சி செய்தால் அன்பென்பது குறைந்து போகும் அது ஆண்ணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி...

ரேவா said...
Best Blogger Tips

சகோ ஹேமா வோட கருத்தை நானும் வழிமொழிகின்றேன் :)

நிரூபன் said...
Best Blogger Tips

@செட்டப் செல்லப்பா

என்ன மிஸ்டர் நிரூபன், மறுபடியும் ஐப்பி நம்பர், முகவரினு கிளம்பிட்டேளே? உங்களுக்கெல்லாம் விமர்சனத்தை எதிர்கொள்ளும் திராணியே இல்லையா?
இப்போ என் ஐபி நம்பரை கண்டு பிடியுங்களேன்? (கமெண்டை வைத்து ஐப்பி நம்பரை கண்டுபிடிப்பது எப்படிண்டு எங்களுக்கும் தெரியும், குத்து மதிப்பா கமெண்டு போடும் நேரத்தை வெச்சிட்டு ஒரு ஐபி நம்பரை காட்டி அலம்பல் பண்ணக்கூடாது)
நானும் அந்த இம்சை அரசன் பாபுவும் ஒரே ஆளுன்னு நிரூபிங்க பார்க்கலாம்.
//

அண்ணே,
உங்க பிரச்சினை என்னவென்று சொல்லுங்களேன்?

இது விமர்சனமா?

விவாத மேடை பற்றிப் புரிந்துணர்வேதுமின்றி சும்மா புலம்பிட்டு பொறீங்களே?
விமர்சனமா?
நமக்கெல்லாம் விமர்சனத்தை எதிர் கொள்ளுற திராணி இருக்கு பாஸ்,
ஆனால் உங்கள மாதிரி பதிவோடு தொடர்பில்லாது பேசுவதைத் தான் எதிர் கொள்கிற திராணி இல்லை.

தில் இருந்தா நான் கொடுக்கிற லிங்கிற்கு வர முடியுமா?

Mathuran said...
Best Blogger Tips

//மச்சி, நேரடியாக பேசுவதும், மறைமுகமாக பேசுவதும் அவரவர் இஸ்டம்! அவர் என்ன கருத்துக்கள் சொன்னார் என்பதுதான் முக்கியமே தவிர, அவர் யார் என்பதோ? என்ன குலம்? கோத்திரம்? இதெல்லாம் முக்கியமில்லை//

அண்ணே.. ஒரு கருத்து சொல்லும் விடயத்தை விட அது எங்கிருந்து வருகிறது என்பதுதான் முக்கியம்.கொலைகாரன் ஒருவன் புண்ணியத்தை பற்றி பேசலாமா? காமவெறியன் ஒருவன் பெண்களின் புனிதம் பற்றி பேசலாமா? மகிந்தா ஒற்றுமை பற்றியோ, இன அழிப்பு பற்றியோ பேசலாமா? அது போலத்தான் தன்னை மறைத்துக்கொண்டு கருத்து சொல்பவனுடைய கருத்தும். சில இடங்களை பொறுத்த வரை தன்னை மறைத்து கருத்து சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இங்கே??????????

நிரூபன் said...
Best Blogger Tips

அண்ணே ஆளு யாருன்னு கரெக்டா கண்டு பிடிச்சிருக்கோம்.
இப்போ பேஸ்புக் மூலமா மெசேஜ் அனுப்பி அதில லிங்கையும், உங்க செட்டப் புரோபைலையும் இன்னொருவரிடம் கொடுத்து சென்னையில் வைச்சு கமெண்ட் போடுறீங்க!
இது ஓவரா இல்லே!

போங்கண்ணே! போய் பொழப்ப பாருங்க!

Mathuran said...
Best Blogger Tips

நிரூபன் மன்னிச்சிருங்க..
நீங்க கஷ்டப்பட்டு பதிவ எழுதினா நாங்க அந்த நோக்கத்த விட்டு கொஞ்சம் விலகிட்டம்.
இப்ப விடயத்துக்கு வாறன்

செட்டப் செல்லப்பா said...
Best Blogger Tips

மிஸ்டர் நிரூபன், நான் நேரடியா விமர்சனம் பண்ணி இருக்கேன், (கொஞ்சம் நகைச்சுவையாவும்?) ஆனால் உங்கட ஆள் காட்டான் தான் முதலில் அநாகரிகமா ஆரம்பிச்சார்.

கீழ அதை போட்டிருக்கேன் பாருங்கோ.

/////காட்டான் said...

செட்டப் செல்லப்பா said...
///தமிழர்கள் வாழும் ஊரில் ஆண்கள் குழந்தையினைக் காவிச் சென்றால் பார்வையாளராக உள்ளோர் எள்ளி நகைப்பார்கள் என்று நீங்கள் இங்கே ஒரு கருத்தினைக் கூறலாம்./////

ஹஹஹஹா......... 1950-ல இருக்க வேண்டிய ஆளுய்யா நீரு......

செட்டப்பு என்னையா உன்ர வீட்ட “சும்மா” வைசிட்டு இங்கின வந்து”அறப்படிக்கிராய்”.. ஹி ஹி!!//////


இதுக்கு என்ன அர்த்தம்? உங்கள் ப்லாகில் விமர்சனம் வைத்தால் இப்படித்தான் ஆள் வெச்சு அடிப்பீங்களா? (இந்த ஐப்பி இலக்கம், ரெலிபோன் இலக்கம் பீலாவெல்லாம் என்கிட்ட வேண்டாம்)

நிரூபன் said...
Best Blogger Tips

@செட்டப் செல்லப்பா

பிற் சேர்க்கை: நாற்று வலைப் பதிவில் விவாத மேடைக்கு நடுவராக அடியேன் தான் இருந்து இது வரை காலமும் கருத்துச் சமர்களிற்கான தீர்ப்புக்களை வழங்கி வந்தேன். ///////

நீங்க எந்த காலேஜ்ல லா படிச்சீங்க சார்? இல்ல தீர்ப்பெல்லாம் சொல்லி இருக்கீங்களே அதான் கேட்டேன். இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா?
//

அண்ணே ஒங்களுக்கு சிலோன் தெரியுமா?
உங்க நாட்டுக்கு பக்கத்து நாடு,
அங்கே உள்ள பெரதெனியா காலேஜ்ஜில படிச்சேன் சார்.

செட்டப் செல்லப்பா said...
Best Blogger Tips

///////மதுரன் said...

//மச்சி, நேரடியாக பேசுவதும், மறைமுகமாக பேசுவதும் அவரவர் இஸ்டம்! அவர் என்ன கருத்துக்கள் சொன்னார் என்பதுதான் முக்கியமே தவிர, அவர் யார் என்பதோ? என்ன குலம்? கோத்திரம்? இதெல்லாம் முக்கியமில்லை//

அண்ணே.. ஒரு கருத்து சொல்லும் விடயத்தை விட அது எங்கிருந்து வருகிறது என்பதுதான் முக்கியம்.கொலைகாரன் ஒருவன் புண்ணியத்தை பற்றி பேசலாமா? காமவெறியன் ஒருவன் பெண்களின் புனிதம் பற்றி பேசலாமா? மகிந்தா ஒற்றுமை பற்றியோ, இன அழிப்பு பற்றியோ பேசலாமா? அது போலத்தான் தன்னை மறைத்துக்கொண்டு கருத்து சொல்பவனுடைய கருத்தும். சில இடங்களை பொறுத்த வரை தன்னை மறைத்து கருத்து சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இங்கே??????????/////////

ஆனா ஆபாச பதிவு எழுதி வரும் நிரூபன் இப்படியெல்லாம் எழுதினா ஏத்துப்பீங்க? (வெட்கமில்லாம நிரூபன் எங்கே ஆபாச பதிவு எழுதினார்னு லிங் கேட்காதிங்கோ)

Mathuran said...
Best Blogger Tips

@செட்டப் செல்லப்பாசெட்டப் செல்லப்பா said...

////பெண்கள் வயிற்றில் சுமந்த குழந்தையினை ஆண்கள் இடுப்பில் சுமந்தோ அல்லது வண்டிலில் தள்ளிச் செல்வதற்கு ஏற்றவாறு எம் சமூகத்தினைத் தயார்படுத்த வேண்டுமெனில் எந்த மாதிரியான திட்டங்களை முன் வைக்க முடியும்?///////

லூசாய்யா நீ.....?///

மிஸ்டர் செல்லப்பா இது காட்டான் கமெண்ட்ஸ் போடுறதுக்கு குதல் நீங்க போட்ட கமெண்ட். இது நாகரீகமாகவா இருக்கு

நிரூபன் said...
Best Blogger Tips

அன்புள்ள செட்டப் அண்ணே,
இனி என்ன பண்றது,
உங்களுக்கும் எனக்கும் தான் வாய்க்கால் தகராறு இல்லையே.
நான் வேலை முடிஞ்சு கொஞ்சம் முன்னாடி தான் வந்தேன்.

காட்டான் அண்ணர் உங்க போலி புரோபைலைப் பார்த்திட்டு ஆத்திரத்தில உளறிட்டார்.

நான் பாட்டுக்கு கஷ்டப்பட்டு விவாதம் எழுதிட்டு, ப்ளாக்கில இணைச்சிட்டு, ரெண்டு பேரை நடுவராப் போட்டிருக்கேன்.

ஸோ....நமக்குள்ள எதுவா இருந்தாலும் என் பேஸ்புக் இருக்கு,
ப்ளாக்கில என் மெயில் ஐடி இருக்கு
ஸோ அங்க வாங்க பேசிக்குவோம்.
இப்ப நல்ல பிள்ளையா கிளம்பிறீங்களா!
விவாதத்தில் எதிர்க் கருத்துக்கள், மாற்றுக் கருத்துக்கள் இருந்தா சொல்லுங்க!
வரவேற்கிறேன்.

கருத்துக்களை எதிர்க்கிற பழக்கம் என்கிட்ட இல்லேன்று ஒங்களுக்குத் தெரியுமில்லே.

ஸோ மாற்றுக் கருத்துக்களை விவாதத்தோடு தொடர்புபடுத்தி வையுங்க.

இல்லேன்னா பார்வையாளர்களா ஆன்லைனில் இருப்போருக்கு இடையூறு பண்ணாம கிளம்பிடூங்க..

இங்கே உங்களை அவமதித்த செயலுக்காக அடியேனையும், காட்டான் அண்ணரையும் மன்னியுங்கள்!

போய் தூங்குங்க! குட் நைட்!

செட்டப் செல்லப்பா said...
Best Blogger Tips

///////மதுரன் said...

@செட்டப் செல்லப்பாசெட்டப் செல்லப்பா said...

////பெண்கள் வயிற்றில் சுமந்த குழந்தையினை ஆண்கள் இடுப்பில் சுமந்தோ அல்லது வண்டிலில் தள்ளிச் செல்வதற்கு ஏற்றவாறு எம் சமூகத்தினைத் தயார்படுத்த வேண்டுமெனில் எந்த மாதிரியான திட்டங்களை முன் வைக்க முடியும்?///////

லூசாய்யா நீ.....?///

மிஸ்டர் செல்லப்பா இது காட்டான் கமெண்ட்ஸ் போடுறதுக்கு குதல் நீங்க போட்ட கமெண்ட். இது நாகரீகமாகவா இருக்கு//////

மிஸ்டர் மதுரன் சும்மா நடிக்காதீங்க, லூசாப்பா நீ அப்படின்னு ஒரு நகைச்சுவை வசனம் இருக்கு, அதைத்தான் இங்க பயன்படுத்தி இருக்கேன், அதுக்கும் காட்டான் போட்டிருக்க வசனமும் ஒரே மாதிரியா? அவசரமில்லை கொஞ்சம் இனோரு முறை படிச்சுட்டு சொல்லுங்களேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

செட்டப் அண்ணே,
அட மறுபடியும் மொதல்ல இருந்தா.
அண்ணே ஆபாச பதிவா?
அது எங்கே இருக்கண்ணே?

அப்படி ஒன்று நான் எழுதி ஒரு ஆறு மாசம் ஆயிட்டு!

பேசாம கெளம்பிறீங்களா

செட்டப் செல்லப்பா said...
Best Blogger Tips

தேங்ஸ் நிரூபன், என்ட கமெண்டுகளை அழித்து விடவும், நான் ப்ராப்லம் ஆகிட்டுன்னு ஏற்கனவே கிளம்பிட்டேன், பிறகு தான் வந்தேன். இப்போ போறென், கமெண்ட்டுகளை அழிச்சிடுங்க. நமக்குள்ள பிரச்சனை வேண்டாம்.

நிரூபன் said...
Best Blogger Tips

செட்டப்பு, ஒரு மனுசன் பகிரங்கமா அறிவித்து திருந்தி இருக்க விடமாட்டியா?

போன மாசம்,அதுக்கு மொத மாசம்,

இப்போ ஒரு ஐஞ்சு மாசத்துக்கு முன்னாடி எங்கேயாச்சும் ஆபாசப் பதிவு வந்திருக்கா! போய்யா! போய் தூக்கத்தை கலைச்சிட்டு வாய்யா!

பிரெஞ்சுக்காரன் said...
Best Blogger Tips

@நிரூபன்

செட்டப்பு, ஒரு மனுசன் பகிரங்கமா அறிவித்து திருந்தி இருக்க விடமாட்டியா?

போன மாசம்,அதுக்கு மொத மாசம்,

இப்போ ஒரு ஐஞ்சு மாசத்துக்கு முன்னாடி எங்கேயாச்சும் ஆபாசப் பதிவு வந்திருக்கா! போய்யா! போய் தூக்கத்தை கலைச்சிட்டு வாய்யா! //////

மச்சி நிரூ, நீ இப்பவெல்லாம் கில்மா பதிவுகள் போடுவதே இல்லை! இதற்கு என்னுடைய கண்டனங்கள்! சீக்கிரம் ஒரு கில்மா போடு! இருபாலாரும் ரசிப்பர்!

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

aaaaaaaaaaaaaaaa மீ செகண்டூஊஊஊஊ:)
//

அதில என சந்தேகம்!
வருக வருக!

Mathuran said...
Best Blogger Tips

@செட்டப் செல்லப்பாமிஸ்டர் மதுரன் சும்மா நடிக்காதீங்க, லூசாப்பா நீ அப்படின்னு ஒரு நகைச்சுவை வசனம் இருக்கு, அதைத்தான் இங்க பயன்படுத்தி இருக்கேன், அதுக்கும் காட்டான் போட்டிருக்க வசனமும் ஒரே மாதிரியா? அவசரமில்லை கொஞ்சம் இனோரு முறை படிச்சுட்டு சொல்லுங்களேன். //

ஹே ஹே.. அண்ணே ஒரு வசனம் காமெடியா அல்லது சீரியஸா என்று அந்த வசனம் பாவிக்கப்படும் இடத்தை பொறுத்துத்தான் தீர்மாணிக்கலாம். நீங்க ஒரு காமெடி பதிவில அந்த வசனத்த பாவிச்சிருந்தா அது நகைச்சுவை என்று ஏற்றுக்கொள்ளலாம். ஒரு சீரியஸ் பதிவில சீரியஸா கமெண்ட் போடும்போது அந்த வசனத்த பாவிச்சா என்ன அர்த்தம்.

மற்றது காட்டாண்ட பதிவுகளையும் கமெண்ட்ஸையும் பாருங்க. உண்மையிலேயே அவர்தான் நகைச்சுவையாக கமெண்ட் போட்டிருந்தார்.

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

என்னது பெண்களால் கண்ணீர் விடும் ஆண்களோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்:))))
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

என்னாது இது விவாத மேடையா?... தெரியாமல் உள்ளே வந்திட்டேனே... இங்கே பப்பி கிடைக்குமா தப்பி ஓட?:))))...
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பப்பி இருக்கு, ஆனால் இப்போ பப்பியும், பூசாரும் நண்பர்களாகிட்டாங்களே...

நிரூபன் said...
Best Blogger Tips

@athira
நடுவர்களாக அமர்ந்திருக்கும் இருவருக்கும் வாழ்த்துக்கள்... அவர்களுக்கு களைக்காமல் இருக்க, அப்பப்ப சோடா, மங்கோ யூஸ், ஹொட் சொக்கலேட்.... எல்லாம் வாங்கிக்கொண்டு வருகிறேன்..:)))//

அக்கா அப்ப பதிவு எழுதின ஆளுக்கு லண்டன் KFC கிடையாதா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்

வணக்கம் நிரூபன்! வணக்கம் ராசுக்குட்டி வணக்கம் ரேவா..

என்னது அதிரா இங்க நிக்கிறாங்களா? ஐயோ நான் பிறகு வாரேன்யா.. ஏன்னா இந்த சுட்டி பெண்னிடம் வாய கொடுத்து மாட்டிடுவன்.. ஹி ஹி ஹி
//

வணக்கம் மாம்ஸ்.

மாமோய் நீங்க அப்படிச் சொல்லலாமா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ

அன்பும் போதிய விட்டுகொடுத்தலும் இருந்தாலே வாழ்க்கையின் சந்தோஷத்தை இருவரும் அனுபவிக்கலாம்...!!!
//

அண்ணே இப்படி ஒத்த வரியில சொல்லிட்டு எஸ் ஆகலாமா?


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்
சரி முழுக்க நனைஞ்சாச்சு இனி முக்காடு எதுக்கு?

நான் இலங்கை செல்லும்போது எனது மகனை என்னுடைய தோளில் சுமந்திருப்பதை சுட்டிக்காட்டி ஏண்டா மனிசி பிள்லைய பார்க்க மாட்டாளா? என்றுதான் உறவினர்கள் கேட்டார்கள்.. இங்கேயும் பிள்ளை வளர்ப்பில் ஆணுக்கு சம்பந்தமே இல்லை என்பதை போல்தான் நம்மவர்கள் நடக்கின்றார்கள்.. வீட்டு வேலைகளை ஆணும் சரி சமமாக பகிர்ந்து செய்தால் அவ்னை நாங்கள் ஏதோ பொண்டாட்டிக்கு பயந்தவன்ன்னு கூறி கேலி செய்கிறோம்.. அட நான் என்ர பிள்ளைகளின் பிள்ளை பேறு கூட பாத்திருக்கேன். இன்னும் நாங்கள் திருந்த இருக்கின்றது..!! //

இது கருத்து,
எமது சமூகம் மாற்றமடைய வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கிறேன்.
மனைவிக்கு உதவி செய்யும் ஆண்களை கேலி செய்யும் எம் சமூகத்தின் நிலையினையும் உணர்கிறேன்.

ஆனால் இந்த நிலமைகளையெல்லாம் எப்படி மாற்றலாம்?
அதை நீங்க சொல்லவில்லையே?

பிரெஞ்சுக்காரன் said...
Best Blogger Tips

@மதுரன்

//மச்சி, நேரடியாக பேசுவதும், மறைமுகமாக பேசுவதும் அவரவர் இஸ்டம்! அவர் என்ன கருத்துக்கள் சொன்னார் என்பதுதான் முக்கியமே தவிர, அவர் யார் என்பதோ? என்ன குலம்? கோத்திரம்? இதெல்லாம் முக்கியமில்லை//

அண்ணே.. ஒரு கருத்து சொல்லும் விடயத்தை விட அது எங்கிருந்து வருகிறது என்பதுதான் முக்கியம்.கொலைகாரன் ஒருவன் புண்ணியத்தை பற்றி பேசலாமா? காமவெறியன் ஒருவன் பெண்களின் புனிதம் பற்றி பேசலாமா? மகிந்தா ஒற்றுமை பற்றியோ, இன அழிப்பு பற்றியோ பேசலாமா? அது போலத்தான் தன்னை மறைத்துக்கொண்டு கருத்து சொல்பவனுடைய கருத்தும். சில இடங்களை பொறுத்த வரை தன்னை மறைத்து கருத்து சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இங்கே?????????? /////

மது, இங்கே, செட்டப் செல்லப்பா போட்ட கமெண்டுகள், இந்த விவாதத்துக்குப் புறம்பானவை என்று கருதினால், அவருக்கு தக்க பதிலைக் கொடுப்பதுதான் முறை!

“ தோ பாருங்க செட்டப்பு! நீங்க சம்மந்தே இல்லாமல் கமெண்டு போடுறீங்க! இந்தப் பதிவோட நோக்கைத்தையே மாத்திடுறீங்க! தயவு பண்ணி, நிறுத்திடுங்க”

இப்படி ஒரு பதில் சொல்ல முடியாதா?

எதுக்கு ஐ பி அட்ரெஸ் கண்டு புடிக்கிறது? வேறொரு பதிவர்தான் இவர் அப்டீன்னு பகிரங்கமா சொல்லி, பிரச்சனையைப் பெருஷாக்கணும்?????

K.s.s.Rajh said...
Best Blogger Tips

பிரெஞ்சுக்காரன் said...
@K.s.s.Rajh

இங்கே கருத்திடும் ஆண்கள் ஓருவர் கூட அப்பாவி ஆண்கள் நிலை பற்றி பேசவில்லை பெண்ணாதிக்கம் என்ற ஒருவிடயமும் விவாதத்தில் இருக்கு ஒரு வேளை இவங்கள் பெண்ணாதிக்கத்தில் இருக்காங்களோ ஹி.ஹி.ஹி.ஹி.. //////

மச்சான் சார், பெண்கள் சில சமயங்களின் மௌனமாக இருப்பார்கள் பாருங்கள்! அதைவிட மிகப் பெரிய பெண்ணாதிக்கம் வேறு எதுவும் இல்லை!

ஹி ஹி ஹி ஹி அனுபவமா? என்று கேட்டால், ஆம் என்பதுதான் பதில்!

மச்சன் சார், நீங்கள் இந்த மௌனத்தின் வலியை அனுபவித்திருக்கிறீர்களா////

ஹி.ஹி.ஹி.ஹி ஆமா பாஸ் பெண்களின் மெளனத்தை விட கொடுமையான ஆயுதம் எதுவும் இல்லை அது ஒரு இன்பமான வேதனை அது மிகப்பெரிய பெண்ணாதிக்கம் நான் பேஜ்சுலராக இருந்தாலும் எனக்கும் இப்படி ஒரு அனுபவம் இருக்கு ஹி.ஹி.ஹி.ஹி.....

Anonymous said...
Best Blogger Tips

இந்த பதிவுஅ இருக்குற ஆண் பெண் ஆணாதிக்கம் சமத்துவம் பற்றி எல்லாம் பேசுமளவுக்கு எனக்கு வயசும் அனுபவமும் இல்ல அண்ணே... ஆனா இது ஒரு முக்கியமான பதிவு...

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

ஆணாதிக்கம் என்பது ஒரு காலத்தில் அதிகம் இருந்ததுதான்... ஆனால் இப்போ நம்மவர்கள் இலங்கையை விட்டு வெளியேறி உலகமெல்லாம் பரந்து வாழ்வதனால்...

பல பல நாட்டுப் பழக்கவழக்கங்களையும் பார்த்து, பழகி நிறையவே மாறிவிட்டார்கள்.

அதிலும் இப்போ வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில்... சரிக்குச் சரி, வீட்டுத் தேவைக்காக மனைவியும் உழைக்கிறா, அதேபோல் வீட்டு வேலைகள், குழந்தைகள் பராமரிப்பில் கணவனும் பங்கெடுக்கிறார்....
//

அதிரா அக்கா, ஆணும் பெண்ணும் உழைப்பது சரி நிகர் சமானமாய் வாழ்வது பிரித்தானியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு ஓக்கே!

ஆனால் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் பிரெஞ்சு, டொச்சு, ஸ்பானிஷ், டச்சு தெரியாத காரணத்தினால் பல ஆண்கள் மனைவியை வீட்டினுள் அல்லவா பூட்டி வைத்திருக்கிறார்கள் ஐ மீன் மனைவியை வீட்டினுள் விட்டு விட்டு அல்லவா வேலைக்குச் செல்கின்றார்கள்.

காட்டான் said...
Best Blogger Tips

மீண்டும் வணக்கம் செல்லப்பா!!

நீங்க குழப்பவேணுன்னே வந்திட்டு இப்படி பந்த என்னுடைய பக்கத்துக்கு தரக்கூடாது.. நான் சொன்னதா நீங்க சொல்வது இதைத்தான் என்றால்.. அதற்கு “அரும்பொருள் விலக்கம் இதுதான்யா நான் ஈழத்து பேச்சுத் தமிழில்தான் கொமொன்ஸ் பொடுவது அதிகம்..


செட்டப்பு என்னையா உன்ர வீட்ட “சும்மா” வைசிட்டு இங்கின வந்து”அறப்படிக்கிராய்”.. ஹி ஹி!!////// இப்படி என்றால் என்னை செட்டப்பு சொல்லப்பா உங்கள் வீட்டில் ஒன்றும் செய்யாது இங்கு வந்து பேசிக்கொண்டு அல்லது கதைத்துக்கொண்டு இருக்கிறீங்கள் என்பதே..!!! ஹி ஹி

ரேவா said...
Best Blogger Tips

நிரூபன் said...
@காட்டான்
இது கருத்து,
எமது சமூகம் மாற்றமடைய வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கிறேன்.
மனைவிக்கு உதவி செய்யும் ஆண்களை கேலி செய்யும் எம் சமூகத்தின் நிலையினையும் உணர்கிறேன்.

ஆனால் இந்த நிலமைகளையெல்லாம் எப்படி மாற்றலாம்?
அதை நீங்க சொல்லவில்லையே?

நிரூபன் நிலைமைகள் மாற, பேசுபவர்கள் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள், இது என் குடும்பம் இது என் மனைவி, இவர்களுக்காக ஒரு மனைவியின் சுமையை நான் சுமக்கிறேன், என்ற எண்ணம் அடைவர் இடத்தில் வரவேண்டும்...... சுகமாய் வாழ்ந்து பழகியவர்கள் அப்படி பேசிக் கொண்டுதான் இருப்பார்கள் நிரூபன்..

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

ஆனால் நன்றாகப் போகும் குடும்பங்களுக்குள்... அவர்களின் முந்தைய தலைமுறையான பெற்றோர் வந்து தங்கிப் போகும் பட்சத்தில்... சில இடங்களில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல குழப்பி விட்டுவிடுகிறார்கள், இதனால் பிரச்சனைகள் சில இடங்களில் கடுகு.. பெரிதாகி... பூதாகாரமாகிறது.

தந்தை சொல்கிறார்... நான் ஒரு ரீ கப் கூட கழுவியதில்லை, நீ கிச்சினில் பாத்திரம் கழுவுகிறாயே... என இப்படி ஆரம்பித்து வைக்கின்றனர் ஆதிக்கத்தை.

சில ஆண்கள், பெண்கள் அவற்றைப் பொருட்படுத்தாமல் தூசிபோல தட்டிவிட்டுச் சென்றுவிடுவர், சிலருக்கு அது மனதை அரிக்கத் தொடங்கி விடுகிறது.
//


அக்கா இந்தக் கருத்துப் புலத்தில் வாழும் உறவுகளுக்கு ஓக்கே.

அப்படீன்னா இலங்கை இந்தியாவில் வாழும் ஆண்கள் எப்போது மாறப் போகிறார்கள்?
அவர்களிடத்தே மாற்றத்தினைக் கொண்டு வர நாம் என்ன செய்ய வேண்டும்?

நிரூபன் said...
Best Blogger Tips

@செட்டப் செல்லப்பா

இதெல்லாம் ஒரு பதிவு, இதுக்கு ஒரு விவாவதம், ரெண்டு நடுவர்கள். எல்லாம் அந்த கூகிள்காரனை சொல்லனும்.
//

ஏதோ நம்மால முடிஞ்சதண்ணே..
எழுதியிருக்கேன் படிங்க.

Mathuran said...
Best Blogger Tips

//மது, இங்கே, செட்டப் செல்லப்பா போட்ட கமெண்டுகள், இந்த விவாதத்துக்குப் புறம்பானவை என்று கருதினால், அவருக்கு தக்க பதிலைக் கொடுப்பதுதான் முறை!

“ தோ பாருங்க செட்டப்பு! நீங்க சம்மந்தே இல்லாமல் கமெண்டு போடுறீங்க! இந்தப் பதிவோட நோக்கைத்தையே மாத்திடுறீங்க! தயவு பண்ணி, நிறுத்திடுங்க”

இப்படி ஒரு பதில் சொல்ல முடியாதா?

எதுக்கு ஐ பி அட்ரெஸ் கண்டு புடிக்கிறது? வேறொரு பதிவர்தான் இவர் அப்டீன்னு பகிரங்கமா சொல்லி, பிரச்சனையைப் பெருஷாக்கணும்????? //

அண்ணே. சொல்லி கேட்கிற ஆட்கள் என்றா ஏன் போலி புறொபைல்ல வாறாங்கள். எப்ப ஒருத்தன் தன்னை மறைத்து கருத்திட முயற்சிக்கிறானா அப்பவே அவன் எதற்கும் துணிந்தவன் ஆகிறான். அப்படிப்பட்டவர்களிடம் போய் “அண்ணே இது சரி இது பிழை” என்று வாதாடலாமா

நிரூபன் said...
Best Blogger Tips

@பகீர்பாண்டி

ஹி
//

ஹே...ஹே..
ஹா...ஹோ ஹோ...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
வவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
லொள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்

நிரூபன் said...
Best Blogger Tips

@பகீர்பாண்டி

ஆள் ஆளுக்குன்னு ஒவ்வொருவரும் நடுவர்ன்னு சொம்ப தூக்குரான்களே . என்ன எழவு பதிவுடா சாமி இது ..
//

அண்ணே, புரியலையா பதிவு,
இல்லே வழி மாறி வந்திட்டீங்களா/
எதுக்கும் இன்னோர் தடவை படிச்சுப் பாருங்க
ஹே...ஹே...

பிரெஞ்சுக்காரன் said...
Best Blogger Tips

@மதுரன்

அண்ணே. சொல்லி கேட்கிற ஆட்கள் என்றா ஏன் போலி புறொபைல்ல வாறாங்கள். எப்ப ஒருத்தன் தன்னை மறைத்து கருத்திட முயற்சிக்கிறானா அப்பவே அவன் எதற்கும் துணிந்தவன் ஆகிறான். அப்படிப்பட்டவர்களிடம் போய் “அண்ணே இது சரி இது பிழை” என்று வாதாடலாமா //////

இப்ப ஐ பி யைக் கண்டுபுடிச்சு, இன்னொரு பதிவரை குற்றம் சாடியதன் மூலம் நிரூபன் என்னத்தை சாதித்தார்?

காட்டான் said...
Best Blogger Tips

செட்டப் செல்லப்பா said...
தேங்ஸ் நிரூபன், என்ட கமெண்டுகளை அழித்து விடவும், நான் ப்ராப்லம் ஆகிட்டுன்னு ஏற்கனவே கிளம்பிட்டேன், பிறகு தான் வந்தேன். இப்போ போறென், கமெண்ட்டுகளை அழிச்சிடுங்க. நமக்குள்ள பிரச்சனை வேண்டாம்.

November 22, 2011 9:36 PM
என்னால்தான் பிரச்சனைன்னா என்னுடைய கொமொன்ஸயும் அழிச்சுவுடுங்கோ.. நமக்குள்ள பிரச்சனை எதுக்கு? ஆனா பதிவ பற்றி நான் போட்ட கொமொன்ஸ நீக்காதே நிருபா.. கஷ்டப்பட்டு எழுத்து கூட்டி எழுதினது..!! ஹி ஹி

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.
சரியாக சொன்னீங்க தாத்தா... மாற்றம் ஒன்றே மாறாத ஒன்று எண்டு சொல்வார்களே ..அது போல எல்லாம் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாறி தானே ஆகனும்... மேல்நாடுகளில பெண்கள் பஸ்சில் இருந்து ஏரோப்பிளேன் வரை ஓட்டுகிற நிலை வந்தாச்சு ..ஆனா நம்ம நாட்டில முழுமையாக அந்த நிலை வர இன்னும் காலம் எடுக்கலாம். //


என்னதூஊஊஊஊஊஊஊஊஉ

தாத்துவாஆஆஆஆஆஆஆஆஅ


உண்மை தான் பெரியப்பா,
ஆனால் இந்த மாற்றங்களை நாம் எப்படி எம் சமூகத்தினுள் கொண்டு வர முடியும்?


அதுக்கு ஏதாச்சும் வழி சொல்லுங்களேன்!

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

///தமிழர்கள் வாழும் ஊரில் ஆண்கள் குழந்தையினைக் காவிச் சென்றால் பார்வையாளராக உள்ளோர் எள்ளி நகைப்பார்கள் என்று நீங்கள் இங்கே ஒரு கருத்தினைக் கூறலாம்./// இப்பிடி வேற இருக்குதா ???? )
//

ஆமா பாஸ்.

Mathuran said...
Best Blogger Tips

@பிரெஞ்சுக்காரன்இப்ப ஐ பி யைக் கண்டுபுடிச்சு, இன்னொரு பதிவரை குற்றம் சாடியதன் மூலம் நிரூபன் என்னத்தை சாதித்தார்?//

அதனால்தான் அவர் பின்வாங்கிவிட்டார் என்று நினைக்கிறேன். இனி விவாதம் ஆரோக்கியமான முறையில் தொடரும்

நிரூபன் said...
Best Blogger Tips

@செட்டப் செல்லப்பா

அண்ணா நமக்கு இதெல்லாம் சரிவராது, வழக்கம் போல நல்ல காத்திரமான காம பதிவு ஒன்னு போடுங்க ஹிட்சாவது எகிறும்.
//

அந்தப் பதிவெல்லாம் எழுதி இப்போ ஒரு ஏழு மாசம் ஆச்சு பாஸ்..

ஹி...ஹி..

ரொம்ப நன்றிங்க நினைப்பூட்டினதுக்கு!

K.s.s.Rajh said...
Best Blogger Tips

இங்கே என்ன நடக்கின்றது வழமையான விவாத மேடையில் இருந்து விலகிச்செல்கின்றது விவாதம். ஏன் இந்த வாய்கா தகராறு இதுகளை விட்டு விட்டு விவாதமேடையின் கருத்தை முன்நிறுத்தி விவாதிக்குமாறு இந்த விவாதமேடையின் நடுவர் என்ற முறையில் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.....

கடந்த சில விவாத மேடையில் நான்,கந்து,மச்சான் சார்,காட்டான் மாமா, ஆகிய நால்வறும் கடைசிவரை விதாத்தித்தாலும் அதை சிறப்பான ஒரு விவாத களமாக மாற்றினோம்...

ஆனால் இன்று நிறைய நண்பர்கள் விவாத மேடையில் பங்கெடுத்திருந்தாலும் ஏன் இந்த வாய்க்கா தகராறு நீங்கள் எல்லோறும் விவாத மேடையில் சொல்லப்பட்ட விடயத்தை முன் நிறுத்தி விவாதித்தால் நாற்றின் விவாத மேடை வரலாற்றில் சிறப்பான ஒரு விவாத மேடையாக இது மாறும் பல ஆரோக்கியமான விடயங்கள் சமூக பிரச்சனைகள் அலசப்படும் அனைவரும் ஓத்துழைப்பு நல்குக நண்பர்களே

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

எமது இலங்கைக் குடும்பம் ஒன்று, மிகவும் வறிய கொட்டில் வீட்டில் தாயோடு மட்டும் வசித்து வந்த ஒரு பெண்ணை எதுவும் இல்லாமல் மணம் முடித்தார், வெளிநாட்டில் இருக்கும் ஒரு பிஸ்னஸ்காரர்(நம்நாட்டவர்தான்).

வெளி நாட்டுக்குக் கூட்டி வந்ததும், அவர் மிகவும் குடும்பப் பொறுப்பு மிக்கவர். மனைவியின் சொல்லுக்கு ஒத்துப் போபவர்...
//


ஹே...ஹே..

அவருக்கு இனிமேல் சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்ற பாட்டுத் தான் பொருத்தமா இருக்கும் என நினைகிகிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.
ஆண் தன் குடும்பத்துக்காக வேலைக்கு செல்லும் போது, வீட்டில் இருக்கும் அவன் மனைவி சமைப்பதிலும் ,களைப்புடன் வரும் கணவனுக்கு பரிமாறுவதிலும் தப்பேதும் தெரியவில்லை எனக்கு...//

பெரியப்பா ஆண் வீட்டில் மனைவியை ஏன் இருத்தி வைத்து அழகு பார்க்கனும்?
மனைவியையும் வேலைக்கு அனுப்பலாம் அல்லவா?
பார்த்தீங்களா இது கூட தப்பில்லை என்று சொல்லுறீங்க.

அப்படீன்னா இப்படி மனைவி கையால உட்கார்ந்த இடத்தில இருந்து உணவு வாங்கி உண்ட கணவன்மாரில் எத்தனை பேர் மனைவி நோயுற்றுப் படுத்திருக்கும் போது பார்த்திருக்கிறாங்க?
ஹே...ஹே...

ரேவா said...
Best Blogger Tips

K.s.s.Rajh said...

இங்கே என்ன நடக்கின்றது வழமையான விவாத மேடையில் இருந்து விலகிச்செல்கின்றது விவாதம். ஏன் இந்த வாய்கா தகராறு இதுகளை விட்டு விட்டு விவாதமேடையின் கருத்தை முன்நிறுத்தி விவாதிக்குமாறு இந்த விவாதமேடையின் நடுவர் என்ற முறையில் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.....

கடந்த சில விவாத மேடையில் நான்,கந்து,மச்சான் சார்,காட்டான் மாமா, ஆகிய நால்வறும் கடைசிவரை விதாத்தித்தாலும் அதை சிறப்பான ஒரு விவாத களமாக மாற்றினோம்...

ஆனால் இன்று நிறைய நண்பர்கள் விவாத மேடையில் பங்கெடுத்திருந்தாலும் ஏன் இந்த வாய்க்கா தகராறு நீங்கள் எல்லோறும் விவாத மேடையில் சொல்லப்பட்ட விடயத்தை முன் நிறுத்தி விவாதித்தால் நாற்றின் விவாத மேடை வரலாற்றில் சிறப்பான ஒரு விவாத மேடையாக இது மாறும் பல ஆரோக்கியமான விடயங்கள் சமூக பிரச்சனைகள் அலசப்படும் அனைவரும் ஓத்துழைப்பு நல்குக நண்பர்களே


அதத் தான் நானும் அப்போது இருந்து சொல்லிட்டு இருக்கேன் சகோ...நீ சட்டு புட்டுன்னு தீர்ப்ப சொல்லு

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.
புரிந்துணர்வு இல்லாத இடத்தில் குடும்ப வாழ்க்கை என்பது யாரை திருப்திப்படுத்த ..பிரிவது தானே சரி!//

பிரிவது ஓக்கே, ஆனால் அந்தப் பிரிவிற்கான காரணத்தினை அறிய வேண்டும் அல்லவா?

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.
புரிந்துணர்வு இல்லாத இடத்தில் குடும்ப வாழ்க்கை என்பது யாரை திருப்திப்படுத்த ..பிரிவது தானே சரி!//

பெண்ணின் நடத்தையினால் தான் பிரிய வேண்டிய நிலமை ஏற்படுகின்றதெனில் ஆண் அதனை நிவர்த்தி செய்ய ஏதும் உளவியல் வழிகளை, கவுன்சிலிங், சைக்காலஜிஸ்டினை நாடலாம் அல்லவா?

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி பிரகாஷ்

மாப்ளே, தலைப்பு வைக்க ரொம்ப யோசிக்கறிங்க போல....
//

ஆமா மச்சி, தலைப்பில கேள்வியை வைச்சிட்டா பதிவினை முழுமையாகப் படிக்காது சிலர் அது சரி தான் அப்படீன்னு சொல்லிட்டு ஓடுறாங்களே!
அதான் அப்படி வைத்தேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சசிகுமார்

ரைட்டு....
//

நன்றி பாஸ்.

«Oldest ‹Older   1 – 200 of 240   Newer› Newest»

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails