Wednesday, November 2, 2011

வண்டலூர் பையனை ஏமாற்றிய லண்டன் தமில் பெண்!

காலையில் கன்னியை(க்) கண்டான்; அவள் மேல்
காதலை(க்) காளையும் கொண்டான் 
வேளைகள் நெருங்குமென்றிருந்தான்; தினமும் தன்
வேட்கையை தீர்த்திட முயன்றான் 
ஓலையில் எழுதியே கொடுத்தான்; அவள் அதை
ஒருமுறை(க்) கிருதரம் படித்தாள்
வேலையை வெட்கத்தை இழந்தான்; இப்போ அவள்
வெளிநாடென்றுமே பறந்தாள்!

தாடியை(த்) தனயனும் வளர்த்தான்; அவளோ
தமிழினைத் தப்பென்று மறந்தாள்
கோடியாய் பணத்தினை இழந்தான்; அந்த
கோதையைத் தேடியே அலைந்தான்
நாடினை நகரினை மறந்தான்; அந்த
நங்கையின் நினைப்பினால் தவித்தான்
பீடியை விரும்பியே சுவைத்தான்; இப்போ
"பாடியில் கான்சராம்" பயந்தான்!
"வண்டலூர் ஊராம் கவர்மென்ட் தொழிலாம்
"போய்" லண்டனாம் என்றதும் லட்சியம் மறந்தாள்
செண்டுகள் கொடுத்தாள்; சேலையை மறந்தாள்
"சொப்பிங்" போனாள் இதுவே சொர்க்கமாம் என்றாள்
கண்டதும் காளையை கையினால் அணைத்தாள்
கட்டிய கணவனை அக் கன்னியும் பிரிந்தாள்
இன்றைய சில பெண்களின் இழிநிலை இதுவாம்
இதனையும் நீவிர் மாற்றிட நினைப்பீர்!
என்றுமே சொல்வது எவனடா என
எண்ணிடும் முன்னே; நானும் முடிக்கிறேன் இதையாம்!
அரும்பதவுரை/ சொல் விளக்கம்:
வேட்கை: ஆசை/ இச்சை.
ஓலை: கடிதத்தினை குறிக்கும் பழந் தமிழ்ச் சொல்.
பாடி: Body எனும் ஆங்கிலச் சொல்லால் குறிக்கப்படும் மனித உடல்.
கான்சர்: புற்று நோய்.
கவர்மென்ட் தொழில்: அரசாங்க வேலை.
சொப்பிங்: Shopping போதல்/ பொருட்களை கொள்வனவு செய்யச் செல்லுதல்.

பிற் சேர்க்கை: பதிவின் தலைப்பில் வரும் "தமில்" எனும் வார்த்தை நாகரிக மோகத்தில் தமிழை தமிலாக உச்சரிக்கும் நபர்களின் நிலையினை உணர்த்தும் நோக்கோடு சரிவரப் பொருந்தி வரும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. 
பிற் சேர்க்கை: இக் கவிதையின் ஒவ்வோர் பந்தியினூடாகவும் வெவ்வேறு ஒரு நபரின் வெவ்வேறு சம்பவங்கள் உரைக்கப்பட்டுள்ளது.
************************************************************************************************************
இப் பதிவின் ஊடாக நான் உங்கள் அனைவரையும் ஒரு மசாலாத் தளத்திற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன். நீங்கள் அனைவரும் தயாரா?
"அம்பலத்தார் ஐயா" அவர்கள் தன்னுடைய "அம்பலத்தார் பக்கம்" வலைப் பதிவின் ஊடாக பல் சுவைப் பதிவுகள், மசாலாச் சுவைக் கலந்த கதம்பப் பதிவுகள், மற்றும் ஈழத்து அரசியல் நிகழ்வுகளையும் பதிவுகளாக்கி வருகின்றார்.
அம்பலத்தார் ஐயாவின் "அம்பலத்தார் பக்கம்" வலைப் பதிவிற்குச் செல்ல:
*************************************************************************************************************

24 Comments:

ஆகுலன் said...
Best Blogger Tips

அழமான கருத்துள்ள கவிதை...

வாழ்வு முறை மாறிக்கொண்டே செல்கிறது...

ஆகுலன் said...
Best Blogger Tips

அடடா கன நாளைக்கு அப்புறம் சுடு சோறு சாப்பிடுறன்....

'பரிவை' சே.குமார் said...
Best Blogger Tips

கருத்தாழமிக்க அழகான கவிதை.
வாழ்த்துக்கள்.

rajamelaiyur said...
Best Blogger Tips

இது போல விஷயம் எப்படி புடிகிரிங்க ?

சசிகுமார் said...
Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி மச்சி...

SURYAJEEVA said...
Best Blogger Tips

அருமை நண்பரே

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

ம்ம்ம் வெளிநாட்டு வாழ்க்கை இப்பிடித்தான் போகுது...!!!

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

ஆழ்ந்த கருத்துள்ள கவிதை...!!!

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

மச்சி னா அப்பாலிக்க வறேன்..

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

நல்ல கருத்துள்ள கவிதைப் பகிர்வு!

Anonymous said...
Best Blogger Tips

அட வித்தியாசமான முறையில் சொல்லிருக்கீங்க கலக்கலா கவிதை... வாழ்த்துக்கள் பாஸ்

Anonymous said...
Best Blogger Tips

சொல்விளக்கம் சூப்பர் பாஸ்.

Anonymous said...
Best Blogger Tips

http://massalamassala.blogspot.com/

சகோதரர் அம்பலத்தார் அவர்களது வலைப்பூவிற்கு வாழ்த்துக்கள்...

K.s.s.Rajh said...
Best Blogger Tips

பாஸ் இப்படி சம்பவங்கள் பல நடக்கின்றன...அதை கவிதையாக தந்திருப்பது அருமை.....

எனக்கு இந்தக்கவிதையை படிக்கும் போது பல எண்ணங்கள் மனதில் எழுகின்றது...

K.s.s.Rajh said...
Best Blogger Tips

அம்பலத்தாரின் வலைப்பதிவுக்கு வாழ்த்துக்கள்

கவி அழகன் said...
Best Blogger Tips

அச்சடிச்ச மாதிரி சொற்கள் வந்து விழுது
வாழ்த்துக்கள் நிருபன்

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
Best Blogger Tips

வெளிநாடு போய் மனைவியை ஏமாற்றும் ஆண்கள், இப்போ கணவனை ஏமாற்றும் பெண்கள், ஆணுக்கு பெண் சரிநிகர் சமானமென்போம்.

M.R said...
Best Blogger Tips

கருத்துள்ள கவிதை நண்பா நன்றி

Anonymous said...
Best Blogger Tips

புது களம் ..புது நடை...சோக்கா இருக்கு...

செங்கோவி said...
Best Blogger Tips

நிதர்சனமான உண்மை..கவிதையும் அழகு.

காட்டான் said...
Best Blogger Tips

அம்பலத்தார் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்..

Unknown said...
Best Blogger Tips

பீடி குடிச்சா கான்சர் வரும்

லேடி அடிக்கடி ஆளமாத்தினா .....வரும்
கவலையைவிடுங்க

shanmugavel said...
Best Blogger Tips

புதிது புதிதாக முயற்சிகள் செய்கிறீர்கள் சகோ! அரும்பத உரையுடன்! வாழ்த்துக்கள்.

அம்பலத்தார் said...
Best Blogger Tips

மீண்டும் நல்லது ஒரு கருப்பொருளை கையாண்டிருக்கிறீர்கள் நிரூ.ஆண் பெண் என்று பாகுபாடின்றி ஏமாத்துபவர்களும் ஏமாறுபவர்களும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நிரூ " நீங்க எதை வேணுமென்றாலும் சொல்லிட்டே இருங்கோ நாங்க காதிலை வாங்கிக்கமாட்டோம் என்பதுபோலத்தானே எங்க ஜனங்கள் இருக்கிறார்கள். பிரபல பதிவர்களெல்லாம் வலம் வருகிற இடத்தில் என்னையும் மதித்து அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நிரூபன்

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails