Monday, October 3, 2011

ஆபாசப் படங்கள் தான் ஓரினச் சேர்க்கையைத் தூண்டுகின்றனவா?

பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே;
மனித மனங்களில் உள்ள உணர்வுகளிற்கு நாம் கடிவாளம் போட்டு, அவ் உணர்வுகளைக் கட்டி வைக்க நினைக்கின்ற போது ஏற்படுகின்ற விளைவுகள் பற்றி நீங்கள் யாவரும் அறிவீர்கள். எம் உணர்வுகளை அடக்கி வாழப் பழகிக் கொள்ளும் போது, எம்மையறியாமலே நாம் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகின்றோம். மனிதனது உணர்வுகள் இயற்கையின் நியதிக்கமைவாகத் தூண்டப்பட்டாலும், ஒரு சில வேளைகளில் தவறான வழிகளும் மனித உணர்வுகளைத் தூண்டுகின்ற காரணிகளாக மாறி விடுகின்றன. 
பாலியல், ஓரினச் சேர்கை பற்றி என்னுடைய பாலுறவு எனும் சிறுகதையினை மையமாக வைத்துப் பல அன்பு உள்ளங்கள் தனிப்பட்ட முறையிலும், பின்னூட்டப் பெட்டியின் வாயிலாகவும் ஓரினச் சேர்க்கை என்பது எமது பகுதியில் தமிழர் பகுதியில் குறைவு என்றும், ஓரினச் சேர்க்கைக்கு பாலியல் படங்கள் தான் தூண்டுகோளாக விளங்குகின்றன எனவும் கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார்கள். நான் இக் கருத்துக்களிற்கு விளக்கத்தினைக் கொடுக்கும் வகையிலும், பாலியல் படங்கள் எம் சமூகத்தில் அறிமுகமாகுவதற்கு முன்பதாகவே தமிழனின் பாலியல் உணர்வுகள் தூண்டப்பட்டிருக்கின்றன என்பதனை விளக்கும் வகையில் ஒரு சில கருத்துக்களை முன் வைக்கலாம் என்றிருக்கின்றேன்.

இங்கே நான் கலாச்சாரத்தின் சிறப்பிற்குரிய பூமியாகப் பலராலும் பல ஆண்டுகளுக்கு முன்பதாக வர்ணிக்கப்படும் யாழ்ப்பாண மாவட்டத்தினையும், வன்னிப் பகுதியினையும் முன் நிறுத்தி என் கருத்துக்களை உதாரண விளக்கத்தோடு வைக்கின்றேன். ஆபாசப் படங்கள் பாலியல் உணர்வுகளிற்குத் தூண்டுகோலாக அமைந்தாலும், ஓரினச் சேர்க்கையினைத் தூண்டுவது ஆபாசப் படங்கள் எனும் கருத்தினைப் பொய்ப் பிக்கும் வகையில் எம் பிரதேசத்தில் பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 

ஒரு ஆணின் பிறப்புறுப்புக்களில் சுரக்கும் பெண்மை சார்ந்த ஹோர்மோன்களின் தூண்டல் அல்லது பெண்ணின் உடல் உறுப்புக்களில் ஆண்மை சார்ந்த ஹோர்மோன்கள் அதிகளவில் சுரப்பதால் ஏற்படும் விளைவுகள் ஒரு பால் இனக் கவர்ச்சியாக மாற்றம் பெற்று விடுகின்றது. இன்னும் விளக்கமாகக் கூறின் ஒரு ஆண் தன்னை ஒத்த இயல்புடைய சற்றுப் பெண்மைக் குணம் கொண்ட இன்னோர் ஆணை விரும்புவதும்; ஒரு பெண் தன்னை ஒத்த கொஞ்சம் ஆண்மைக் குணம் கொண்ட பெண்ணை விரும்புவதும் ஓரினச் சேர்க்கை எனப்படுகின்றது.

எமது தமிழ்ப் பாரம்பரியத்தில் நடனம் பயிலும் ஆண்களில் சிலர் அபிநயங்களைச் செய்து நாட்டியம் பழகும் போது இயல்பாகவே பெண்மைக்கேயுரிய சாயலினைப் பெற்று விடுகின்றார்கள். இதன் மூலம் நாளடைவில் தமது நண்பர்களின் உறுப்புக்களில் கை வைத்து அவர்களையும் ஓரினச் சேர்க்கைக்குத் தூண்டி தமக்குள் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் வட்டத்தினை உருவாக்கி விடுகின்றார்கள். ஈழத்தில் நான் கண்ட பல ஓரினச் சேர்க்கையாளர்கள் நடனம் பயின்றவர்களாக இருப்பது இக் கூற்றுக்கு மேலும் வலுச் சேர்க்கும் என்பதால் இங்கே சுட்டியுள்ளேன். 

1980ம் ஆண்டின் பிற் பகுதியிலிருந்து, இலங்கையில் நவீன வசதிகள் அறிமுகப்படுத்தப்படும் வரை அல்லது ஆபாசப் படங்கள் இலங்கையிலும், தமிழகத்திலும் குக் கிராமங்களில் அறிமுகமாகாத காலம் வரை ஓரினச் சேர்க்கையாளர்கள் சமூகத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். ஆபாசப் படங்கள் தான் ஓரினச் சேர்க்கையினைத் தூண்டுகின்றன என்பதெல்லாம் சமூகத்தில் நிலவுகின்ற நம்பிக்கைகளேயன்றி, உண்மையான மனித உணர்வின் அடிப்படையில் நோக்குகின்ற போது, ஆபாசப் படம் அறியப்படாத பல இடங்களில் ஓரினச் சேர்க்கையும், கள்ளக் காதல் விடயங்களும் அரங்கேறியிருக்கின்றன. 
இனி என் கருத்துக்களிற்குரிய எடுகோள்கள்:
*1987ம் ஆண்டின் பிற் பகுதியில் யாழ் நகரிற்கு அண்மையாக உள்ள பிரபல மகளிர் பாடசாலை மாணவிகள் ஓரினச் சேர்க்கை செய்யும் நோக்கில் சயன்ஸ் லேப்பில் உள்ள பரிசோதனைக் குழாய்களைப் பெண் உறுப்பினுள் செலுத்தி, ஒரு பாலுறவு செய்ய மேற்கொண்ட சமயத்தில் குழாய் வெடித்ததால், விடயம் வகுப்பாசிரியர் மூலம் விவகாரமாகி, பாதிக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில் உயிரிழந்திருந்தார். இதே போன்ற சம்பவம் பின் நாளில் 2000ம் ஆண்டும் யாழ் நகரில் உள்ள அதே பாடசாலையில் இடம் பெற்று இன்னோர் மாணவியும் மரணமடைந்திருந்ததாகவும், குறித்த சம்பவம் ஈழத்தின் யாழிலுள்ள உதயன் பத்திரிகையில் வெளியாகிப் பரபரப்பினை ஏற்படுத்தியதாகவும் ஒரு சில நண்பர்கள் மூலமாக அறிந்துள்ளேன்.

*யாழ்ப்பாணத்தின் சின்னக் கடை வீதிக்கு சமீபமாக உள்ள மகளிர் பாடசாலையின் ஹாஸ்டல் விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் சிலர் சேர்ந்து அங்கே காலையில் வரும் ஆண் ஊழியர் ஒருவரைப் பலாத்காரம் செய்ததால், இறுதியில் அவர் மரணமாகியதும் யாழில் இவ் விடயம் 1999ம் ஆண்டில் பரபரப்பாக பேசப்பட்டது. 

*நான் வன்னியில் வாழ்ந்த காலப் பகுதியில் பல கள்ளக் காதற் சம்பவங்களைக் கண்ணுற்றிருக்கிறேன். மனைவிக்குத் தெரியாது கணவன் மனைவியின் தங்கையுடன் தொடர்புகளைப் பேணுவதும், கணவனுக்குத் தெரியாது மனைவி தொடர்புகளைப் பேணுவதும், இறுதியில் எங்கோ ஓரிடத்திலிருந்து நெருப்பு பற்றியதும் விடயம் விவாகாரமாகி தெருவிற்கு வெட்டுக் கொத்தில் முடிவடைவதனையும் வன்னீல் வாழ்ந்த பலர் அறிந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

இவை சாதாரண சம்பவங்களே! இச் சம்பவங்கள் நிகழ்ந்த காலப் பகுதியினையும், மேற்படி பிரதேசங்களில் அக் காலத்தில் நிலவியிருந்த கலாச்சார - தொழில் நுட்ப நிலையினையும் உற்று நோக்கினால் ஆபாசப் படங்களின் வருகையின்றி ஓரினச் சேர்க்கையும், பாலியல் உணர்வுகளும் தூண்டப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் பல ஜாமீன் நிர்வாக முறையின் கீழும் பாலியல் விடயங்கள், பாலியல் அத்து மீறல்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இவற்றுக்கெல்லாம் காரணம் ஆபாசப் படங்களா? இல்லையே! மனித உணர்வுகள் தானே! ஆபாசப் படங்கள் பாலியல் கிளர்ச்சியினைச் சமூகத்தில் உருவாக்கினாலும், ஓரினச் சேர்க்கை எனும் விடயமானது மனித மனங்களின் இயல்பான விருப்பு வெறுப்பின் அடிப்படையிலே தோன்றுகின்றது. 

மேற்படி சம்பவங்களை அடிப்படையாக வைத்து நான் உங்களிடம் விட்டுச் செல்லும் வினா, ஆபாசப் படங்கள் தான் ஓரினச் சேர்க்கையினைத் தூண்டுகின்றனவா?  இல்லைத் தானே. மனித மனங்களின் இயல்பான விருப்பு வெறுப்புக்கள் தானே ஓரினச் சேர்க்கையினைத் தீர்மானிக்கின்றன. இக் கூற்றுக்கள் தொடர்பில் உங்களின் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.


பிற் குறிப்பு: என் பதிவுகள் நீளமாக வருவதால், படிப்பதற்கு நேரம் போதவில்லையே எனும் வாசகர்களின் கருத்தினைக் கவனத்திற் கொண்டு, பதிவினை முடிந்த வரை சுருக்கமாக எழுதியுள்ளேன். 
****************************************************************************************************************************************
இன்றைய பதிவர் அறிமுகத்தில் இடம் பிடிக்கப் போகும் பதிவர் வேறு யாரும் இல்லைங்கோ. நான் தானுங்கோ. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? என் வலைப் பதிவின் மேற் பக்கத்தில் உள்ள TABS BAR இனை ஒரு தடவை பாருங்களேன். அங்கே உங்களின் இடது கைப் பக்கமிருந்து இரண்டாவதாக வாசகர் கருத்து என்றோர் விடயம் இருக்கிறதல்லவா. என் படைப்புக்கள் பற்றிய விமர்சனங்களை, என்னிடம் வாசகர்கள் எதிர்பார்க்கும் விடயங்களைக் கருத்துக்களாகப் பகிருமாறு இரண்டு வாரங்களிற்கு முன்பதாக மேற்படி பகுதியினை இணைத்து அப் பகுதியில் சிறியதோர் அறிவித்தலையும் விட்டிருந்தேன். 

உண்மையிலே என் படைப்புகளில் கருத்துத் திணிப்புக்களை ஏற்படுத்த நான் ஒரு போதும் விரும்புவதில்லை. என் வலைப் பதிவினைப் படிக்கும் வாசக உள்ளங்களின் விருப்பத்திற்கு அமைவாக அவர்களின் ரசனைக்கு ஏற்றாற் போல சிறியளவிலாவது என் படைப்புக்கள் இருக்க வேண்டும் எனும் நோக்கில் தான் பதிவுகளை எழுதி வருகின்றேன். "நான் இப்படித் தான் எழுதுவேன்! விரும்பினா வந்து படியுங்க" என்றெல்லாம் வற்புறுத்தி அடம் பிடிக்கும் பழக்கம் இல்லாது வாசகர்களின் ரசனைக்கு சிறிய அளவிலாவது என் இடுகைகள் அமைய வேண்டும் எனும் நோக்கில் தான் என் பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றேன். 

வாசகர் கருத்துக்களை வெளியிடுவதற்கும், வாசகர்களுக்கும் எனக்குமான உறவுப் பாலத்தினைக் கட்டியெழுப்பும் நோக்கிலும் இன்று முதல் புதிதாக ஒரு வலைப் பதிவினை ஆரம்பித்துள்ளேன். அத்தோடு ஈழத்தின் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் பல குறும்படங்கள், திரைப் படங்களைத் தொகுத்து விமர்சனப் பதிவுகளாக்கி ஆவணப்படுத்தும் நோக்கில் இன்னோர் வலைப் பதிவினையும் உருவாக்கியுள்ளேன். 
இவ் இரண்டு வலைப் பதிவுகளிலும் ஓட்டுப் பட்டைகள் ஏதும் காணப்படாது. ஆகவே நீங்கள் அனைவரும் பயப்படாம வந்து போகலாம். இப் புதிய வலைப் பதிவுகள் இரண்டிற்குமான உங்களின் மேலான ஆதரவினை எதிர்பார்த்து, இங்கே தவழ விடுகின்றேன். 
http://video.thamilnattu.com/
****************************************************************************************************************************************

134 Comments:

Mohamed Faaique said...
Best Blogger Tips

இதைப் பற்றி நான் ஒரு கருத்தும் சொல்ல விரும்பல...

Mohamed Faaique said...
Best Blogger Tips

///இதைப் பற்றி நான் ஒரு கருத்தும் சொல்ல விரும்பல...///

அப்போ எதுக்குடா கொமண்ட்ஸ் போட்டே`னு கேப்பீங்க.. உங்க ப்லாக்`ல வடை கிடைக்கிறது அபூர்வம்.. அதுதான்... ஹி..ஹி..

K said...
Best Blogger Tips

வணக்கம் மச்சி! ஓரினசேர்க்கை என்றால் என்ன?

நானும் என் லவ்வரும் ஒரே இனம்! அதாவது தமிழினம்! நாம் ரெண்டு பேரும் ஒண்ணு சேருறது தப்பா?

அப்போ நான் வேறு இனத்து பொம்பளையவா, கல்யாணம் கட்டணும்?

K said...
Best Blogger Tips

மச்சி சாப்பிடுகிறேன்! 10 நிமிஷத்துல வந்து கமெண்டு போடுகிறேன்!

Unknown said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணிஇது கொஞ்சம் ஓவரா இல்ல?

Unknown said...
Best Blogger Tips

விவரமா தான்யா போட்டுருக்க ஒரு விவகாரமான மேட்டர்..

சளி / காய்ச்சல் மாதிரி இது கூட ஒரு வியாதி தான்!!

செங்கோவி said...
Best Blogger Tips

இந்த ஆளு அடுத்த 7 1/2-ஐக் கூட்டிட்டாரு போலிருக்கே..வாங்கப்பா, வந்து நிரூ சொம்பை நெளிங்க.

செங்கோவி said...
Best Blogger Tips

// Powder Star - Dr. ஐடியாமணி said...

அப்போ நான் வேறு இனத்து பொம்பளையவா, கல்யாணம் கட்டணும்? //

ஏன் கூடாது? ஓட்டை வடை மாதிரி(!), நீங்களும் ஒரு ஃப்ரெஞ்சு பாட்டியை கரெக்ட் பண்ணலாமே?

செங்கோவி said...
Best Blogger Tips

ஆபாசப்படம்..ச்சே.ச்செ...பாலியல் படம் பாலுணர்ச்சியைத் தூண்டுது. நீங்க சாதாரண ஆளா இருந்தா, எதிர்பால்கிட்ட போகத் தோணும். ஓரினச் சேர்க்கையாளரா இருந்தா, மணிகிட்ட (அவர் இல்லை) போகத் தோணும். பை செக்சுவலா இருந்தா, ரெண்டுல எது கிடைச்சாலும் ஓகே-ன்னு போகத்தோணும்.

இதுல பாலியல் படம் தான் ஓரினச் சேர்க்கைக்குத் தள்ளும்கிறது தப்பு. நாம ஏற்கனவே எப்படி இருக்கறமோ, அங்கேயே அது தள்ளும்!!

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

மேலும் ஒரு புதிய பிளாக்கா அவ்வ்வ்வ் முடியல....

செங்கோவி said...
Best Blogger Tips

நடக்கட்டும்..அப்புறமா வந்து வேடிக்கை பார்க்கிறேன்.

சுதா SJ said...
Best Blogger Tips

ஒரு அவசியமான மேட்டரை கையில் எடுத்து இருக்கீங்க..... ஐந்னும் விருவாய் எழுதி இருக்கலாம்... இதுக்கு ஆதராவாய் முன்பு நான் ஒரு பதிவு போட்டு வேண்டி கட்டியது உங்களுக்கே தெரியுமே..... ஆபாச சினிமா பார்ப்பதால் தான் ஓரின செயற்கை ஆளர்கள் உருவாகிறார்கள் என்பது எல்லாம் அபத்தத்தின் உச்சம்...... நம்மவர் இன்னும் கொம்ம்பியுட்டர் என்றாலே ஏதோ கில்மா படம் பார்க்கத்தான் அதிக பேர் பயன் படுத்துகிறார்கள் என்று அதிக பேர் நினைப்பவர்கள்.... அவர்கள் இப்படி சொல்வதில் ஆச்சரியம் இல்லை

சுதா SJ said...
Best Blogger Tips

செக்ஸ் என்பது அவரவர் உரிமை.... அதில் வந்து நாட்டாமை பண்ணி மூக்கை நிலைப்பது கண்டனத்துக்கு உரியது....

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

இதைப்பற்றி நான் ஒன்று சொல்லவில்லை...

ஜீன்கள் மற்றும் மனிதனுடைய மனநிலையை பொருத்து இது அமைகிறது...

ஆபாசப்படம் பார்த்துதான் இப்படி ஆகிறவர்கள் மிகவும் குறைந்த அளவில் தான் இருப்பார்கள் இது ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்ள முடியாது..

வெளங்காதவன்™ said...
Best Blogger Tips

//செங்கோவி said...

// Powder Star - Dr. ஐடியாமணி said...

அப்போ நான் வேறு இனத்து பொம்பளையவா, கல்யாணம் கட்டணும்? //

ஏன் கூடாது? ஓட்டை வடை மாதிரி(!), நீங்களும் ஒரு ஃப்ரெஞ்சு பாட்டியை கரெக்ட் பண்ணலாமே?////

வெளக்கவும்.........

#ஹி ஹி ஹி...

வெளங்காதவன்™ said...
Best Blogger Tips

செங்கோவியின் கருத்துதான் எனதும்...

#பாலுணர்வை மட்டுமே தூண்டுவது படங்கள்.....

சுதா SJ said...
Best Blogger Tips

இந்திய பாரம்பரியத்தில் ஓரினச்சேர்க்கை மிக நீண்டகாலமாக இருந்து வருவதுதான். பல லட்சம் தென்னிந்தியர்கள் வழிபடும் சபரிமலை அய்யப்பன் சிவனுக்கும் திருமாலுக்கும் பிறந்தவன் (அது சாத்தியமா என்பது வேறு செய்தி) என்றும், அரவாணை கிருட்டிணன் மணந்தான் என்றும் நமது புராணங்கள் கூறுகின்றன.

எனவே, பாரம்பரியத்தில் இல்லாதது, இயற்கைக்கு முரணானது என்றெல்லாம் பேசுவது வெட்டிவேலை. மேலும் ஓரின சேர்க்கை ஒரு மனநோய் என்பதும் ஆதரமற்ற தவறான கருத்து.

இந்த சிக்கல் குறித்து விரிவாக காண:

"The Right that Dares to Speak its Name"

http://www.tarshi.net/downloads/The_right%20that_Dares_to_Speak_its_Name.pdf

"The Yogyakarta Principles"

http://www.yogyakartaprinciples.org

நிரூபன் said...
Best Blogger Tips

@Mohamed Faaique

இதைப் பற்றி நான் ஒரு கருத்தும் சொல்ல விரும்பல...//

அவ்....நைஸா எஸ் ஆகிட்டீங்க பாஸ்..

settaikkaran said...
Best Blogger Tips

ஆஜர் சகோ! ஆனால்...இது நிறைய அறிவியலும், மனோதத்துவமும் ஏன் ஓரளவு சமூகவியலும் தொடர்புடைய விஷயம். சட்டென்று சரியா தவறா என்று சொல்வது மிகக் கடினம்.

நோ கமெண்ட்ஸ் சகோ! :-)

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

அட்டெண்டென்ஸ்

ம.தி.சுதா said...
Best Blogger Tips

///ஆணின் பிறப்புறுப்புக்களில் சுரக்கும் பெண்மை சார்ந்த ஹோர்மோன்களின் தூண்டல் அல்லது பெண்ணின் உடல் உறுப்புக்களில் ஆண்மை சார்ந்த ஹோர்மோன்கள் அதிகளவில் சுரப்பதால் ஏற்படும் விளைவுகள் ஒரு பால் இனக் கவர்ச்சியாக மாற்றம் பெற்று விடுகின்றது. /////

சரியான விஞ்ஞான விளக்கம் நிரு.. ஓரினப் பால் தூண்டலுக்கு மிக முக்கிய காரணம் இத தானே..

K.s.s.Rajh said...
Best Blogger Tips

////
ஒரு ஆணின் பிறப்புறுப்புக்களில் சுரக்கும் பெண்மை சார்ந்த ஹோர்மோன்களின் தூண்டல் அல்லது பெண்ணின் உடல் உறுப்புக்களில் ஆண்மை சார்ந்த ஹோர்மோன்கள் அதிகளவில் சுரப்பதால் ஏற்படும் விளைவுகள் ஒரு பால் இனக் கவர்ச்சியாக மாற்றம் பெற்று விடுகின்றது. இன்னும் விளக்கமாகக் கூறின் ஒரு ஆண் தன்னை ஒத்த இயல்புடைய சற்றுப் பெண்மைக் குணம் கொண்ட இன்னோர் ஆணை விரும்புவதும்; ஒரு பெண் தன்னை ஒத்த கொஞ்சம் ஆண்மைக் குணம் கொண்ட பெண்ணை விரும்புவதும் ஓரினச் சேர்க்கை எனப்படுகின்றது////

ஓரினச்சேர்க்கைக்கு சரியான விளக்கம் பாஸ்..

ம.தி.சுதா said...
Best Blogger Tips

சிறுகதையும் படித்தேன் அங்கே ஆறிய சோறுதான் சகிடைத்தது அதனால் இங்கே ஆலேசிப்போமா?

செக்ஸ் என்பது மனிதனுக்கு இயற்கையாக கிடைத்தது அதை எல்லாராலும் அடக்குவது கடினம். எமது சமூகத்தில் இருக்கு இல்லை என்றதற்கப்பாமல் மறற கலாச்சார சமூகத்துடன் ஒப்பிடுகையில் எத்தனை வீதம் இருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டுமல்லவா?

எமது கலாச்சாரம் இன்னும் இறுக்கமாகத் தான் இருக்கிறது.

எனக்கு இதை ஒரு பதிவாக இட்டு விவாதிக்க விருப்பமாகவே இருக்கிறது.

K.s.s.Rajh said...
Best Blogger Tips

///எமது தமிழ்ப் பாரம்பரியத்தில் நடனம் பயிலும் ஆண்களில் சிலர் அபிநயங்களைச் செய்து நாட்டியம் பழகும் போது இயல்பாகவே பெண்மைக்கேயுரிய சாயலினைப் பெற்று விடுகின்றார்கள். இதன் மூலம் நாளடைவில் தமது நண்பர்களின் உறுப்புக்களில் கை வைத்து அவர்களையும் ஓரினச் சேர்க்கைக்குத் தூண்டி தமக்குள் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் வட்டத்தினை உருவாக்கி விடுகின்றார்கள். ஈழத்தில் நான் கண்ட பல ஓரினச் சேர்க்கையாளர்கள் நடனம் பயின்றவர்களாக இருப்பது இக் கூற்றுக்கு மேலும் வலுச் சேர்க்கும் என்பதால் இங்கே சுட்டியுள்ளேன்.////

ஆமா பாஸ் நானும் இப்படி பல ஒரினச்சேர்க்கையாளர்களை நம் சமூகத்தில் பார்த்துள்ளேன்

ம.தி.சுதா said...
Best Blogger Tips

ஃஃஃமாணவிகள் ஓரினச் சேர்க்கை செய்யும் நோக்கில் சயன்ஸ் லேப்பில் உள்ள பரிசோதனைக் குழாய்களைப் பெண் உறுப்பினுள் செலுத்தி, ஒரு பாலுறவு செய்ய மேற்கொண்ட சமயத்தில் குழாய் வெடித்ததால்ஃஃஃ

இதை சுய இன்பம் என்றல்லவா அழைப்பார்கள்... (சந்தேகத்தில் தான் கேட்கிறேன் நிரு)

மகேந்திரன் said...
Best Blogger Tips

வணக்கம் சகோ,
இருக்கலாம் சகோ, நீங்க சொன்னது போல ஆபாச படங்களினால் ஓரினச்சேர்க்கை ஒரு சிலருக்கு தூண்டிவிடப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் இது மரபணுக்கள் மற்றும் ஜீன்களின் திருவிளையாடல்கள். ஆபாசப் படம் மட்டுமே என்று தீர்வு கூறிவிட முடியாது..

K.s.s.Rajh said...
Best Blogger Tips

////*1987ம் ஆண்டின் பிற் பகுதியில் யாழ் நகரிற்கு அண்மையாக உள்ள பிரபல மகளிர் பாடசாலை மாணவிகள் ஓரினச் சேர்க்கை செய்யும் நோக்கில் சயன்ஸ் லேப்பில் உள்ள பரிசோதனைக் குழாய்களைப் பெண் உறுப்பினுள் செலுத்தி, ஒரு பாலுறவு செய்ய மேற்கொண்ட சமயத்தில் குழாய் வெடித்ததால், விடயம் வகுப்பாசிரியர் மூலம் விவகாரமாகி, பாதிக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில் உயிரிழந்திருந்தார். இதே போன்ற சம்பவம் பின் நாளில் 2000ம் ஆண்டும் யாழ் நகரில் உள்ள அதே பாடசாலையில் இடம் பெற்று இன்னோர் மாணவியும் மரணமடைந்திருந்ததாகவும், குறித்த சம்பவம் ஈழத்தின் யாழிலுள்ள உதயன் பத்திரிகையில் வெளியாகிப் பரபரப்பினை ஏற்படுத்தியதாகவும் ஒரு சில நண்பர்கள் மூலமாக அறிந்துள்ளேன்////

அட ஓரினச்சேர்க்கை முயற்சியா இந்த சம்பவம் நான் கேள்விப்பட்டுள்ளேன் ஒரு மாணவி சுய இன்பம் காண இப்படி டெஸ்ட் டியூப்பை..உபயோகித்து அது உடைந்தது என்று அப்ப அது வேற சம்பவமோ...என்ன நாசம் இது..

K.s.s.Rajh said...
Best Blogger Tips

அறிமுகப்படுத்திய பதிவருக்கு வாழ்த்துக்கள் ஹி.ஹி.ஹி.ஹி(இது நீங்க கண்டு பிடிச்ச மேசின் கமண்ட் ஹி.ஹி.ஹி.ஹி)

உங்கள் புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் பாஸ்

நிரூபன் said...
Best Blogger Tips

@Mohamed Faaique

அப்போ எதுக்குடா கொமண்ட்ஸ் போட்டே`னு கேப்பீங்க.. உங்க ப்லாக்`ல வடை கிடைக்கிறது அபூர்வம்.. அதுதான்... ஹி..ஹி..//

அடப் பாவி..

இது வேறையா..
இப்படியும் சமாளிக்கலாமா..

அவ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

வணக்கம் மச்சி! ஓரினசேர்க்கை என்றால் என்ன?

நானும் என் லவ்வரும் ஒரே இனம்! அதாவது தமிழினம்! நாம் ரெண்டு பேரும் ஒண்ணு சேருறது தப்பா?

அப்போ நான் வேறு இனத்து பொம்பளையவா, கல்யாணம் கட்டணும்?..//

அடிங் கொய்யாலே..

பதிவினை முழுமையாகப் படிச்சிட்டு வரலாமில்லே..

அதில விளக்கம் கொடுத்திருக்கேனே...

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

மச்சி சாப்பிடுகிறேன்! 10 நிமிஷத்துல வந்து கமெண்டு போடுகிறேன்!//

என்னது இம்புட்டு நேரமாச் சாப்பிடுறியா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜ.ரா.ரமேஷ் பாபு

@Powder Star - Dr. ஐடியாமணிஇது கொஞ்சம் ஓவரா இல்ல?//

அதானே அண்ணே..
கேட்டீங்க பாருங்க கேள்வி...

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜ.ரா.ரமேஷ் பாபு

விவரமா தான்யா போட்டுருக்க ஒரு விவகாரமான மேட்டர்..

சளி / காய்ச்சல் மாதிரி இது கூட ஒரு வியாதி தான்!!//

ஆமாண்ணே..
ஆனால் சிலர் இது என்னவோ படம் பார்ப்பதால் வாற தூண்டல் என்று நம்புறாங்களே...

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

இந்த ஆளு அடுத்த 7 1/2-ஐக் கூட்டிட்டாரு போலிருக்கே..வாங்கப்பா, வந்து நிரூ சொம்பை நெளிங்க.//

இதெல்லாம் ஏழரையா பாஸ்..

அவ்வ்வ்வ்வ்வ்வ்

ஏதோ செம்பை நெளிச்சா உங்ககிட்ட அடைக்கலத்திற்கு ஓடியந்திட மாட்டேனா..

அவ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி
// Powder Star - Dr. ஐடியாமணி said...

அப்போ நான் வேறு இனத்து பொம்பளையவா, கல்யாணம் கட்டணும்? //

ஏன் கூடாது? ஓட்டை வடை மாதிரி(!), நீங்களும் ஒரு ஃப்ரெஞ்சு பாட்டியை கரெக்ட் பண்ணலாமே?//

55 வயது தாத்தா ஐடியா மணியைக் கட்டப் பிரெஞ்சுப் பார்ட்டி ஒத்துக்கனுமே;-)))))))

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

ஆபாசப்படம்..ச்சே.ச்செ...பாலியல் படம் பாலுணர்ச்சியைத் தூண்டுது. நீங்க சாதாரண ஆளா இருந்தா, எதிர்பால்கிட்ட போகத் தோணும். ஓரினச் சேர்க்கையாளரா இருந்தா, மணிகிட்ட (அவர் இல்லை) போகத் தோணும். பை செக்சுவலா இருந்தா, ரெண்டுல எது கிடைச்சாலும் ஓகே-ன்னு போகத்தோணும்.

இதுல பாலியல் படம் தான் ஓரினச் சேர்க்கைக்குத் தள்ளும்கிறது தப்பு. நாம ஏற்கனவே எப்படி இருக்கறமோ, அங்கேயே அது தள்ளும்!!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
ஆமா பாஸ்..

படங்களும் பாலியல் உணர்வைத் தூண்டுகின்றன தான்.

ஆனால் ஓரினச் சேர்க்கைக்கு மூல காரணம் ஆபாசப் படங்கள் என்று சொல்ல முடியாதல்லவா...

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ

மேலும் ஒரு புதிய பிளாக்கா அவ்வ்வ்வ் முடியல....//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
இல்லைன்னே...இது உப ப்ளாக் மாத்திரம் தான்..

எப்போவாச்சும் வருஷம், தீபாவளி அன்னைக்குத் தான் இதில பதிவு வரும்!
ஹே...ஹே...

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

நடக்கட்டும்..அப்புறமா வந்து வேடிக்கை பார்க்கிறேன்.//

அடிங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்

என்னோட புது ப்ளாக் பத்தி ஏதும் சொல்லையே...

K said...
Best Blogger Tips

மச்சி, ஓரினச் சேர்க்கை பற்றிய தகவல்கள் அருமையோ அருமை! ஆபாசப் படத்துக்கும் அதுகும் சம்மந்தமே இல்லை!

மற்றது உன்னோட புதிய ப்ளாக்குக்கு வாழ்த்துக்கள்!

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்

ஒரு அவசியமான மேட்டரை கையில் எடுத்து இருக்கீங்க..... ஐந்னும் விருவாய் எழுதி இருக்கலாம்... இதுக்கு ஆதராவாய் முன்பு நான் ஒரு பதிவு போட்டு வேண்டி கட்டியது உங்களுக்கே தெரியுமே..... ஆபாச சினிமா பார்ப்பதால் தான் ஓரின செயற்கை ஆளர்கள் உருவாகிறார்கள் என்பது எல்லாம் அபத்தத்தின் உச்சம்...... நம்மவர் இன்னும் கொம்ம்பியுட்டர் என்றாலே ஏதோ கில்மா படம் பார்க்கத்தான் அதிக பேர் பயன் படுத்துகிறார்கள் என்று அதிக பேர் நினைப்பவர்கள்.... அவர்கள் இப்படி சொல்வதில் ஆச்சரியம் இல்லை//

ஆமாம் துஸி..நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீங்க.

ஓரினச் சேர்க்கை என்பது அவரவரின் மனதளவில் வருவது என்பதனை அறியாதோராய்ப் பலர் உள்ளார்கள் என்பது வேதனையான விடயம் தான்.

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்

செக்ஸ் என்பது அவரவர் உரிமை.... அதில் வந்து நாட்டாமை பண்ணி மூக்கை நிலைப்பது கண்டனத்துக்கு உரியது....//

ஆமா கரெக்டு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

அது ஓரினச்சேர்க்கையா?

நிரூபன் said...
Best Blogger Tips

@கவிதை வீதி... // சௌந்தர் //

இதைப்பற்றி நான் ஒன்று சொல்லவில்லை...

ஜீன்கள் மற்றும் மனிதனுடைய மனநிலையை பொருத்து இது அமைகிறது...

ஆபாசப்படம் பார்த்துதான் இப்படி ஆகிறவர்கள் மிகவும் குறைந்த அளவில் தான் இருப்பார்கள் இது ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்ள முடியாது..//

நன்றி பாஸ்....

நிரூபன் said...
Best Blogger Tips

@சேட்டைக்காரன்
ஆஜர் சகோ! ஆனால்...இது நிறைய அறிவியலும், மனோதத்துவமும் ஏன் ஓரளவு சமூகவியலும் தொடர்புடைய விஷயம். சட்டென்று சரியா தவறா என்று சொல்வது மிகக் கடினம்.

நோ கமெண்ட்ஸ் சகோ! :-)//

நன்றி பாஸ்...

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

அட்டெண்டென்ஸ்//

நன்றி பாஸ்...

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔

சரியான விஞ்ஞான விளக்கம் நிரு.. ஓரினப் பால் தூண்டலுக்கு மிக முக்கிய காரணம் இத தானே..//

நன்றி மச்சி.....

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh

ஓரினச்சேர்க்கைக்கு சரியான விளக்கம் பாஸ்..//

நன்றி பாஸ்...

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh

ஓரினச்சேர்க்கைக்கு சரியான விளக்கம் பாஸ்..//

நன்றி பாஸ்...

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔

சிறுகதையும் படித்தேன் அங்கே ஆறிய சோறுதான் சகிடைத்தது அதனால் இங்கே ஆலேசிப்போமா?

செக்ஸ் என்பது மனிதனுக்கு இயற்கையாக கிடைத்தது அதை எல்லாராலும் அடக்குவது கடினம். எமது சமூகத்தில் இருக்கு இல்லை என்றதற்கப்பாமல் மறற கலாச்சார சமூகத்துடன் ஒப்பிடுகையில் எத்தனை வீதம் இருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டுமல்லவா?

எமது கலாச்சாரம் இன்னும் இறுக்கமாகத் தான் இருக்கிறது.

எனக்கு இதை ஒரு பதிவாக இட்டு விவாதிக்க விருப்பமாகவே இருக்கிறது.//

எமது கலாச்சாரம் இன்னும் இறுக்கமாக இருக்கிறது ஓக்கே..

ஒரு சில இடங்களில் இவ்வாறான பிறழ்வுகள், கள்ளக் காதல்கள் இருப்பதனை நீங்கள் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்,

இதனைத் தவிர்த்து எம் கலாச்சாரம் இறுக்கமாக இருக்கிறது என்று சொல்ல முடியாதல்லவா.

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔

ஃஃஃமாணவிகள் ஓரினச் சேர்க்கை செய்யும் நோக்கில் சயன்ஸ் லேப்பில் உள்ள பரிசோதனைக் குழாய்களைப் பெண் உறுப்பினுள் செலுத்தி, ஒரு பாலுறவு செய்ய மேற்கொண்ட சமயத்தில் குழாய் வெடித்ததால்ஃஃஃ

இதை சுய இன்பம் என்றல்லவா அழைப்பார்கள்... (சந்தேகத்தில் தான் கேட்கிறேன் நிரு)//

நான் சொல்வது மற்ற விடயத்தை..

குழாயின் இரு முனையினையும் இருவர் யூஸ் பண்ணியதாக தான் வைத்தியர்கள் பேசிக் கொண்டார்கள்.

நீயும் அறிந்திருப்பாய் என்று நினைக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@மகேந்திரன்

இருக்கலாம் சகோ, நீங்க சொன்னது போல ஆபாச படங்களினால் ஓரினச்சேர்க்கை ஒரு சிலருக்கு தூண்டிவிடப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் இது மரபணுக்கள் மற்றும் ஜீன்களின் திருவிளையாடல்கள். ஆபாசப் படம் மட்டுமே என்று தீர்வு கூறிவிட முடியாது..//

நன்றி பாஸ்...

ம.தி.சுதா said...
Best Blogger Tips

50

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh

அறிமுகப்படுத்திய பதிவருக்கு வாழ்த்துக்கள் ஹி.ஹி.ஹி.ஹி(இது நீங்க கண்டு பிடிச்ச மேசின் கமண்ட் ஹி.ஹி.ஹி.ஹி)

உங்கள் புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் பாஸ்//

அடிங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்

எனக்கேவா..

வாழ்த்துக்கள் மச்சி.

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

மச்சி, ஓரினச் சேர்க்கை பற்றிய தகவல்கள் அருமையோ அருமை! ஆபாசப் படத்துக்கும் அதுகும் சம்மந்தமே இல்லை!

மற்றது உன்னோட புதிய ப்ளாக்குக்கு வாழ்த்துக்கள்!//

இப்படியும் கமெண்ட் போடலாமா..

நன்றி மச்சி..

ம.தி.சுதா said...
Best Blogger Tips

////இதனைத் தவிர்த்து எம் கலாச்சாரம் இறுக்கமாக இருக்கிறது என்று சொல்ல முடியாதல்லவா.////

ஒப்பீட்டளவில் தூக்கிப் பிடிக்குமளவுக்கு இல்லைத் தானே..

விபச்சாரமே இல்லை எனச் சொல்லும் அரபிய நாடுகளில் அது நடக்கலியா ஆனால் இப்பவும் பொது அறிவுப் புத்தகம் என்ன சொல்லுது

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி

அது ஓரினச்சேர்க்கையா?//

எதண்ணே...
புரியலையே...

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔

////இதனைத் தவிர்த்து எம் கலாச்சாரம் இறுக்கமாக இருக்கிறது என்று சொல்ல முடியாதல்லவா.////

ஒப்பீட்டளவில் தூக்கிப் பிடிக்குமளவுக்கு இல்லைத் தானே..

விபச்சாரமே இல்லை எனச் சொல்லும் அரபிய நாடுகளில் அது நடக்கலியா ஆனால் இப்பவும் பொது அறிவுப் புத்தகம் என்ன சொல்லுது//

ஆமாம் மச்சி..
நான் உனக்கு நைட்டுக்கு விளக்கம் தாரேன்..

ம.தி.சுதா said...
Best Blogger Tips

ஃஃஃஃஆமாம் மச்சி..
நான் உனக்கு நைட்டுக்கு விளக்கம் தாரேன்..ஃஃஃஃ

யோவ் நீயும் கெட்டுப் போயியாய்யா.. ஹ..ஹ..

கேரளாக்காரன் said...
Best Blogger Tips

Madurai girls hostel iron man(irumbu manithan alla) payyana 4 ponnuga senthu rape panni murder pannittatha kelvi patrukken

தனிமரம் said...
Best Blogger Tips

படங்கள் காரணம் என்பது பொய் இது உணர்வுகள் சம்மந்தப்பட்டது பாஸ்!

தனிமரம் said...
Best Blogger Tips

பாஸ் ஒரு திருத்தம்  நடணம் பயிலும் என்று சொல்லுவது கொஞ்சம் சீண்டுவது போல் இருக்கு பரதம் பயில்வோர் ஒரினச் சேர்க்கையாளர் என்பது போல் இருக்கு அப்படி இல்லையே அவர்கள் சிறப்பாக குடும்பம் நடத்துவோர் பலரை நேரில்
பார்த்திருக்கின்றன் இன்னும் நீண்ட பின்னூட்டத்துடன் பிறகு வாரன்!

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

வணக்கம் தலீவா என்னால் இனி சகயமாக பதிவுலகு பக்கம் வர முடியாது ஆகவே மன்னித்துக்கொள்ளுங்கள் ..(

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

///2000ம் ஆண்டும் யாழ் நகரில் உள்ள அதே பாடசாலையில் இடம் பெற்று இன்னோர் மாணவியும் மரணமடைந்திருந்ததாகவும்,// ம்ம் இந்த சம்பவம் நடந்தது தான் ..ஆனா மாணவி மரணமடைந்தாவா ??? இல்லை என்று தான் நினைக்கிறேன் !!! ஆனால் இது ஓரின செயற்கை இல்லை ..சுய இன்பம் காணும் நோக்கில் தான் ஓரிரு மாணவிகள் இவ்வாறு செய்துகொண்டார்கள்!

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

பதிவர் அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் ஹிஹி நான் ஏற்க்கனவே தனிப்பட்ட ரீதியில் மெயிலில் அந்த கடிதம் சம்மந்தமாக பதிலளித்திருந்தேன்..வாழ்த்துக்கள்

Unknown said...
Best Blogger Tips

ஓரினச் சேர்க்கை பற்றிய தகவல்கள் அருமை பாஸ்

எம்.ஞானசேகரன் said...
Best Blogger Tips

எல்லாக் காலங்களிலும் இந்த மாதிரி உறவுச்சிக்கல்கள் இருந்திருக்கிறது. நிரூபன். சமீபகாலங்களில் தகவல் தொடர்பு சாதனங்களால் அதிகம் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கின்றன. கூடவே இது மனம் சம்பந்தப்பட்ட விஷயம். எல்லாச் செயல்களிலுமே நமக்குச்சரி என்று படுவது அடுத்தவருக்கு தவறாக தோன்றலாம் இல்லையா?!

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

இயற்கையாகவே அது போன்ற நாட்டம் இருந்தாலொழிய,ஆபாசப்படங்கள் ஒரு காரணியாக இருக்க முடியாது.

SURYAJEEVA said...
Best Blogger Tips

பெண்களிடம் ஆணிடம் நெருங்கவும், ஆண் பெண்ணிடம் நெருங்கவும் சிலருக்கு பயம் இருக்கும்.. சமூகம் என்ன நினைக்கும்.. இல்லை அந்த ஆணோ பெண்ணோ தவறாக வெளியில் சொல்லி விடுவாரோ என்று பயம் போன்றவை ஓரின சேர்க்கைக்கு வழி வகுக்கிறது... இதுவே ஆணும் ஆணும் வெளியில் திறந்தாலோ, பெண்ணும் பெண்ணும் தனியே இருந்தாலோ இந்த சமூகம் தவறாக நினைக்கவும் வழி இல்லை... சம்பந்தப்பட்டவர் வெளியில் சொன்னாலும் கவலை இல்லை என்ற மன நிலையே அதற்க்கு காரணம் என்பது என் எண்ணம்..

Anonymous said...
Best Blogger Tips

உருப்படியா எழுதுற நாலு பேர்ல நீங்களும் ஒன்னு...மத்த ரெண்டு பேரு யாருன்னு கேட்க மாட்டீங்கன்னு தெரியும் -:)

யாருக்காகவும் அளவைக் குறைக்காதீர்கள் சகோதரம்....

Anonymous said...
Best Blogger Tips

இது ஒரு சர்ச்சைக்குரிய அறிவியல்/மரபியல் பிரச்னை சகோதரம்....

ஒரு தலை சிறந்த ஆராய்ச்சியாளர் ஓரின சேர்க்கை உள்ளவராயும் நம்மைப்போல் சராசரி மனிதராயும் இருந்தாலே இதற்க்கு விடை கிடைக்கும்...

shanmugavel said...
Best Blogger Tips

//எமது தமிழ்ப் பாரம்பரியத்தில் நடனம் பயிலும் ஆண்களில் சிலர் அபிநயங்களைச் செய்து நாட்டியம் பழகும் போது இயல்பாகவே பெண்மைக்கேயுரிய சாயலினைப் பெற்று விடுகின்றார்கள். இதன் மூலம் நாளடைவில் தமது நண்பர்களின் உறுப்புக்களில் கை வைத்து அவர்களையும் ஓரினச் சேர்க்கைக்குத் தூண்டி தமக்குள் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் வட்டத்தினை உருவாக்கி விடுகின்றார்கள்.//

நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

Anonymous said...
Best Blogger Tips

ஆமா!! நீங்க சொல்றது சரிதான்... இதுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை!!! இது பார்ப்பவர்கள் எல்லாமே அது செய்வதும் இல்லை.. அது செய்பவர்கள் எல்லாருமே இதனால்தான் அது செய்கிறார்கள் என்று சொல்லவும் முடியாது!!! இது வேற டிபார்ட்மென்ட் அது வேற டிபார்ட்மென்ட்....

Anonymous said...
Best Blogger Tips

ஒரு சின்ன கோரிக்கை அண்ணே... ஒரு சில இடங்களில் கொஞ்சம் ஆபாசம் (ரொம்ப இல்ல, கொஞ்சமே கொஞ்சம்)இருக்குற மாதிரி தெரியுது... உதாரணத்துக்கு உங்க ஊர் மாணவிகள் ஆர்வகோளாரால் செய்துகொண்ட விடயங்கள், மற்றும் சில விடயங்களை இன்னும் கொஞ்சம் நாசூக்கா சொல்லி இருக்கலாம்ண்ணே....நம்ம பசங்களுக்கு டீடெய்லா சொல்ல வேண்டியதில்லை சும்மா ஒரு ஹின்ட் கொடுத்தாலே போதும், கப்ன்னு புடிச்சுபாங்க.... நம்ம பிளாக் நாலு பேரு வந்து போற எடம்ண்ணே அதுதான் தாழ்மையான கோரிக்கையா சொன்னோம்!!!

கோகுல் said...
Best Blogger Tips

விவகார மான யாரும் கையிலெடுக்க தயங்கும் விசயத்த சொல்லிஇருக்கீங்க<

F.NIHAZA said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

இந்தக் குசும்புக்கு மட்டும் குறைச்சல் இல்லை மணி sir

F.NIHAZA said...
Best Blogger Tips

உங்கள் கருத்து மிகச்சரியானதே....
மனதளவில் ஏற்படுகின்ற மாற்றங்கள்தான் அவை....

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன் புதிய பிளாக்கிற்கு வாழ்த்துக்கள் அதிலாவது பதிவுகளை இரண்டு மூன்று நாட்கள் விடுங்கள்..

காட்டான் said...
Best Blogger Tips

ஆபாச படங்களுக்கும் ஓரின சேர்க்கைகும் சம்பந்தமில்லை அது ஹோர்மோன் சம்பந்தப்பட்டது யாழ்பாணத்திலும் வன்னியிலும் நடந்ததாக நீங்கள் சொல்லும் விடயங்களில் ஓரினசேர்கையில்லை.. பள்ளி மாணவியின் செயல் ஒரு சுய இன்பமே!!!! 

Mathuran said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்..
நான் நினைக்கிறேன் விவாதம் வேறு திசையில் செல்கிறது என்று. இங்கு ஓரினச்சேர்க்கை சரியா தவறா என்பதல்ல பிரச்சினை. வடக்குகிழக்கில் ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றியதே

Mathuran said...
Best Blogger Tips

அந்த சோதனைக்குழாய் விடயம் ஓரினச்சேர்க்கை அல்ல. அது ஒரு சுய இன்பம். இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. 87 ஆம் ஆண்டு நடந்ததை பற்றி நான் அறியவில்லை. ஆனால் பின்னர் நடந்தது ஒரு சுய இன்ப செயற்பாடே.
அதில் ஒரு பெண் மட்டுமே சம்மந்தப்பட்டிருந்தார்.சுய இன்பத்திற்கும் ஓரினச்சேர்க்கைக்கும் உணர்வு ரீதியிலே வித்தியாசம் உள்ளது. அடுத்த இரு எடுகோள்களும் எதிர்ப்பால் காமம். அது பொதுவானது.

செங்கோவி said...
Best Blogger Tips

இங்க ஒரு கடை நடத்தவே மனுசன் திணறுறான்..இவரு புதுசா 2 கடை ஓப்பன் பண்றாரே...வாழ்த்துகள்.

M.R said...
Best Blogger Tips

புதிதாக ஓபன் செய்யும் தளங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பரே

Yoga.s.FR said...
Best Blogger Tips

என்ன கண்ராவியோ?வேறு ஏதாவது ஆராய்ச்சி பண்ணினால் என்னவாம்?

Yoga.s.FR said...
Best Blogger Tips

செங்கோவி said...

இங்க ஒரு கடை நடத்தவே மனுசன் திணறுறான்..இவரு புதுசா 2 கடை ஓப்பன் பண்றாரே...வாழ்த்துகள்.///
ஏதோ அவரால் முடிந்தது!வாழ்த்துக்கள்!

Riyas said...
Best Blogger Tips

கொஞ்சம் சிக்கலான விடயம்தான்.. இதைப்பற்றி கருத்துச்சொல்லுமளவுக்கு எனக்கு அறிவிருக்கா எனத்தெரியவில்லை,, இருந்தாலும் இன்றைய கால ஆபாசபடங்களும் சூழலும் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கின்றன என்றால் அதில் பிழையில்லை..

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔

////இதனைத் தவிர்த்து எம் கலாச்சாரம் இறுக்கமாக இருக்கிறது என்று சொல்ல முடியாதல்லவா.////

ஒப்பீட்டளவில் தூக்கிப் பிடிக்குமளவுக்கு இல்லைத் தானே..

விபச்சாரமே இல்லை எனச் சொல்லும் அரபிய நாடுகளில் அது நடக்கலியா ஆனால் இப்பவும் பொது அறிவுப் புத்தகம் என்ன சொல்லுது//

மச்சி, நீங்க சொல்லும் கருத்துக்களை மறுக்கவில்லை, ஆனால் அதே நேரம் எமது சமூகத்திலும் வெளித் தெரியாது சில விடயங்கள் இருக்கின்றன என்பதனை நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டு, ஐரோப்பிய நாடுகளை விடு, எம் நாட்டைத் தானே தானே கலாச்சாரத்தின் சின்னம் என்று பலரும் போற்றுகின்றார்கள். இதனால் ஒரு சில இடங்களில் இவ்வாறான நிகழ்வுகள் உள்ளதனை யதார்த்தமாக நாம் எடுத்துக் கொள்ள ஏன் பின் நிற்க வேண்டும்? அல்லது ஏன் மறுக்க வேண்டும்?

ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறான செய்ற்பாடுகள் இருந்தாலும் அவர்கள் அதனை யதார்த்தமாக எடுத்துக் கொள்கின்றார்கள்.

ஆனால் எம் நாட்டில் உள்ள இப்படியான சில குற்றங்களைப் பற்றி நாம் பேசும் போது, மறுத்துரைத்து இவை எல்லாம் எம் நாட்டிற்குப் பொருந்தாது என்று சொல்வது தவறு தானே மச்சி?

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔

ஃஃஃஃஆமாம் மச்சி..
நான் உனக்கு நைட்டுக்கு விளக்கம் தாரேன்..ஃஃஃஃ

யோவ் நீயும் கெட்டுப் போயியாய்யா.. ஹ..ஹ..//

அடிங்............நான் கெட்டுப் போகலை..

வேலை கொஞ்சம் பிசியாக இருந்திச்சு. அதான்...

நைட்டுக்குப் பதில் தாரேன் என்று சொன்னேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )


Madurai girls hostel iron man(irumbu manithan alla) payyana 4 ponnuga senthu rape panni murder pannittatha kelvi patrukken//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்

படங்கள் காரணம் என்பது பொய் இது உணர்வுகள் சம்மந்தப்பட்டது பாஸ்!//

அதனைத் தான் நானும் சொல்கிறேன் பாஸ்..

மிக்க நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்


பாஸ் ஒரு திருத்தம் நடணம் பயிலும் என்று சொல்லுவது கொஞ்சம் சீண்டுவது போல் இருக்கு பரதம் பயில்வோர் ஒரினச் சேர்க்கையாளர் என்பது போல் இருக்கு அப்படி இல்லையே அவர்கள் சிறப்பாக குடும்பம் நடத்துவோர் பலரை நேரில்
பார்த்திருக்கின்றன் இன்னும் நீண்ட பின்னூட்டத்துடன் பிறகு வாரன்!//

நடனம் பயிலும் எல்லோரையும் சொல்லவிலைத் தானே பாஸ்..
சிலர் என்று தானே குறிப்பிட்டிருக்கேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@நிகழ்வுகள்


வணக்கம் தலீவா என்னால் இனி சகயமாக பதிவுலகு பக்கம் வர முடியாது ஆகவே மன்னித்துக்கொள்ளுங்கள் ..(//

ஏன் மச்சி...வேலை பிசியோ..

தகவலுக்கு நன்றி..

நிரூபன் said...
Best Blogger Tips

@நிகழ்வுகள்
ஆனா மாணவி மரணமடைந்தாவா ??? இல்லை என்று தான் நினைக்கிறேன் !!! ஆனால் இது ஓரின செயற்கை இல்லை ..சுய இன்பம் காணும் நோக்கில் தான் ஓரிரு மாணவிகள் இவ்வாறு செய்துகொண்டார்கள்!//

ஒரு மாணவி மரணமடைந்ததாகப் பேப்பரில வந்தது பாஸ்..

சுய இன்பம் என்றால் சுயமாகச் செய்வது, ஆனால் மூன்று நான்கு பெண்கள் சேர்ந்து ஒன்றாகச் செய்வதற்கு வேறு பெயர் தானே பாஸ்..

நிரூபன் said...
Best Blogger Tips

@நிகழ்வுகள்

பதிவர் அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் ஹிஹி நான் ஏற்க்கனவே தனிப்பட்ட ரீதியில் மெயிலில் அந்த கடிதம் சம்மந்தமாக பதிலளித்திருந்தேன்..வாழ்த்துக்கள்//

நன்றி மச்சி.

நிரூபன் said...
Best Blogger Tips

@வைரை சதிஷ்

ஓரினச் சேர்க்கை பற்றிய தகவல்கள் அருமை பாஸ்
//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@கவிப்ரியன்

எல்லாக் காலங்களிலும் இந்த மாதிரி உறவுச்சிக்கல்கள் இருந்திருக்கிறது. நிரூபன். சமீபகாலங்களில் தகவல் தொடர்பு சாதனங்களால் அதிகம் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கின்றன. கூடவே இது மனம் சம்பந்தப்பட்ட விஷயம். எல்லாச் செயல்களிலுமே நமக்குச்சரி என்று படுவது அடுத்தவருக்கு தவறாக தோன்றலாம் இல்லையா?!
/

மனம் சம்பந்தப்பட்ட விடயம் என்பது சரி தான் சகோ.

நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@சென்னை பித்தன்

இயற்கையாகவே அது போன்ற நாட்டம் இருந்தாலொழிய,ஆபாசப்படங்கள் ஒரு காரணியாக இருக்க முடியாது.//

ஆமாம் ஐயா.

நிரூபன் said...
Best Blogger Tips

@suryajeeva
சொன்னாலும் கவலை இல்லை என்ற மன நிலையே அதற்க்கு காரணம் என்பது என் எண்ணம்..//

நன்றி பாஸ்...

நிரூபன் said...
Best Blogger Tips

@ரெவெரி

உருப்படியா எழுதுற நாலு பேர்ல நீங்களும் ஒன்னு...மத்த ரெண்டு பேரு யாருன்னு கேட்க மாட்டீங்கன்னு தெரியும் -:)

யாருக்காகவும் அளவைக் குறைக்காதீர்கள் சகோதரம்....//

ஆகா...அப்படியா சங்கதி.

அப்போ அடுத்த பதிவினை ஒரு நீளளப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

போஸ்ட்டா போட்டிடுவோம்.

உங்களின் புரிந்துணர்விற்கும், கருத்துக்களுக்கும் நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ரெவெரி

இது ஒரு சர்ச்சைக்குரிய அறிவியல்/மரபியல் பிரச்னை சகோதரம்....

ஒரு தலை சிறந்த ஆராய்ச்சியாளர் ஓரின சேர்க்கை உள்ளவராயும் நம்மைப்போல் சராசரி மனிதராயும் இருந்தாலே இதற்க்கு விடை கிடைக்கும்...//

நல்ல கருத்து நண்பா.

நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@மொக்கராசு மாமா

ஆமா!! நீங்க சொல்றது சரிதான்... இதுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை!!! இது பார்ப்பவர்கள் எல்லாமே அது செய்வதும் இல்லை.. அது செய்பவர்கள் எல்லாருமே இதனால்தான் அது செய்கிறார்கள் என்று சொல்லவும் முடியாது!!! இது வேற டிபார்ட்மென்ட் அது வேற டிபார்ட்மென்ட்....//

நன்றி நண்பா..

இயல்பான உணர்வுகள் தான் ஓரினச் சேர்க்கையினைத் தூண்டுகின்றது.

நிரூபன் said...
Best Blogger Tips

@மொக்கராசு மாமா

ஒரு சின்ன கோரிக்கை அண்ணே... ஒரு சில இடங்களில் கொஞ்சம் ஆபாசம் (ரொம்ப இல்ல, கொஞ்சமே கொஞ்சம்)இருக்குற மாதிரி தெரியுது... உதாரணத்துக்கு உங்க ஊர் மாணவிகள் ஆர்வகோளாரால் செய்துகொண்ட விடயங்கள், மற்றும் சில விடயங்களை இன்னும் கொஞ்சம் நாசூக்கா சொல்லி இருக்கலாம்ண்ணே....நம்ம பசங்களுக்கு டீடெய்லா சொல்ல வேண்டியதில்லை சும்மா ஒரு ஹின்ட் கொடுத்தாலே போதும், கப்ன்னு புடிச்சுபாங்க.... நம்ம பிளாக் நாலு பேரு வந்து போற எடம்ண்ணே அதுதான் தாழ்மையான கோரிக்கையா சொன்னோம்!!!//

ரொம்ப நன்றி பாஸ்..
இவ்ளோ டீட்டெயிலாச் சொல்லியும் வெளக்கம் மேல வெளக்காக் கேட்டு குடையுறாங்க பாஸ்..
இனிமேல் இவ்வாறான தவறுகள் இடம் பெறாது நாசூக்காக எழுதுகிறேன் பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கோகுல்

விவகார மான யாரும் கையிலெடுக்க தயங்கும் விசயத்த சொல்லிஇருக்கீங்க<//

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@F.NIHAZA

உங்கள் கருத்து மிகச்சரியானதே....
மனதளவில் ஏற்படுகின்ற மாற்றங்கள்தான் அவை....//

நன்றி சகோதரி.

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்

வணக்கம் நிரூபன் புதிய பிளாக்கிற்கு வாழ்த்துக்கள் அதிலாவது பதிவுகளை இரண்டு மூன்று நாட்கள் விடுங்கள்..
//

நன்றி அண்ணாச்சி.

அதில அடுத்த பதிவு எப்போ வரும் என்பது தெரியாத காரணத்தினால் பதிவுகள் கண்டிப்பாக நிறைய நாளுக்கு இருக்கும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்

ஆபாச படங்களுக்கும் ஓரின சேர்க்கைகும் சம்பந்தமில்லை அது ஹோர்மோன் சம்பந்தப்பட்டது யாழ்பாணத்திலும் வன்னியிலும் நடந்ததாக நீங்கள் சொல்லும் விடயங்களில் ஓரினசேர்கையில்லை.. பள்ளி மாணவியின் செயல் ஒரு சுய இன்பமே!!!! //

அண்ணாச்சி நான் இங்கே மாணவி செய்துள்ளதாக கூறவில்லை.

மாணவிகள் சேர்ந்து செய்யும் போது அது எப்படிச் சுய இன்பமாகும்?

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்

வணக்கம் நிரூபன்..
நான் நினைக்கிறேன் விவாதம் வேறு திசையில் செல்கிறது என்று. இங்கு ஓரினச்சேர்க்கை சரியா தவறா என்பதல்ல பிரச்சினை. வடக்குகிழக்கில் ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றியதே//

மச்சி, நான் பதிவில் சொல்லியிருப்பது. வட கிழக்கிலிருந்து சில உதாரண விளக்கங்களை அடிப்படையாக வைத்தே தவிர, விவாதத்தினை வடக்கு கிழக்கினை மையமாக மைத்து எழுதவில்லை

பொதுவாக ஆபாசப் படங்கள் ஓரினச் சேர்க்கையினைத் தூண்டுகின்றதா இல்லையா என்று தான் எழுதியிருக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்

அந்த சோதனைக்குழாய் விடயம் ஓரினச்சேர்க்கை அல்ல. அது ஒரு சுய இன்பம். இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. 87 ஆம் ஆண்டு நடந்ததை பற்றி நான் அறியவில்லை. ஆனால் பின்னர் நடந்தது ஒரு சுய இன்ப செயற்பாடே.
அதில் ஒரு பெண் மட்டுமே சம்மந்தப்பட்டிருந்தார்.சுய இன்பத்திற்கும் ஓரினச்சேர்க்கைக்கும் உணர்வு ரீதியிலே வித்தியாசம் உள்ளது. அடுத்த இரு எடுகோள்களும் எதிர்ப்பால் காமம். அது பொதுவானது.//

மச்சி,,,,மீண்டும் ஒரு தரம் பதிவினைப் படிக்க முடியுமா?

நான் சொல்லியிருப்பது மாணவி என்று அல்ல..

மாணவிகள்.

மாணவிகள் சேர்ந்து செய்வது எப்படிச் சுய இன்பமாகும்?
மற்றைய விடயம் ஆபாசப் படங்கள் ஓரினச் சேர்க்கையினைத் தூண்டுகின்றதா என்று தான் ஆராய்ந்துள்ளேன். அதனோடு பாலியல் உணர்வுகளைப் படங்கள் தூண்டினாலும்

பாலியல் படங்கள் இல்லாத இடங்களிலும் தகாத உறவு, கள்ளக் காதல் இடம் பெற்றுள்ளது என்பதனை விளக்கத் தான் மூன்றாவதாக நான் காமம் பற்றிய விடயங்களைச் சேர்த்துள்ளேன்,

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

இங்க ஒரு கடை நடத்தவே மனுசன் திணறுறான்..இவரு புதுசா 2 கடை ஓப்பன் பண்றாரே...வாழ்த்துகள்.//

எல்லாம் நீங்க ஆதரவு கொடுப்பீங்க என்ற தைரியம் தான் பாஸ்..

நிரூபன் said...
Best Blogger Tips

@M.R

புதிதாக ஓபன் செய்யும் தளங்களுக்கு வாழ்த்துக்கள் நண்பரே//


நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.s.FR

என்ன கண்ராவியோ?வேறு ஏதாவது ஆராய்ச்சி பண்ணினால் என்னவாம்?//

ஓக்கே ஐயா அடுத்த பதிவில் வேற ஆராய்ச்சி தான் பண்ணுவேன்,

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.s.FR

செங்கோவி said...

இங்க ஒரு கடை நடத்தவே மனுசன் திணறுறான்..இவரு புதுசா 2 கடை ஓப்பன் பண்றாரே...வாழ்த்துகள்.///
ஏதோ அவரால் முடிந்தது!வாழ்த்துக்கள்!//

நன்றி ஐயா.

நிரூபன் said...
Best Blogger Tips

@Riyas

கொஞ்சம் சிக்கலான விடயம்தான்.. இதைப்பற்றி கருத்துச்சொல்லுமளவுக்கு எனக்கு அறிவிருக்கா எனத்தெரியவில்லை,, இருந்தாலும் இன்றைய கால ஆபாசபடங்களும் சூழலும் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கின்றன என்றால் அதில் பிழையில்லை..//

உங்களின் கருத்துக்களுக்கு நன்றி பாஸ்,
ஆனால் ஆபாசப் படங்கள் இல்லாத காலத்திலும் ஓரினச் சேர்க்கை இருந்திருக்கிறதே..

ஓரினச் சேர்க்கை என்பது இயல்பாகவே வரும் உணர்வு என்று சொல்லியிருக்கேனே..

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
Best Blogger Tips

சார், கன்றோவேர்சியல் டாபிக், தைரியமாக பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள். பதிவை அப்போதே படித்து விட்டாலும் வேலைப்பளு காரணமாக கமன்ட் போடவில்லை. அப்புறம் சில மாற்றுக்கருத்துக்கள் இருக்கு, சொல்றேன்னு கோவிச்சுக்க கூடாது ஓகே வா?

1. ஹார்மோன் சம்பந்தப்பட்டு வரும் உங்கள் பந்தி. Transsexualism மற்றும் Homosexuality இரண்டையும் போட்டு குழப்பியுள்ளதாக தெரிகிறது. Transsexualism அல்லது Gender Identification Disorder (GID) ஒரு Sexual orientation அல்ல. அது உடல், மன நிலையில் ஏற்படும் ஒரு மாற்றம். அது வேறு பிரச்சினை, இது வேறு பிரச்சினை. நீங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட விடயம் முழுக்க முழுக்க ஒரு மனிதனது சுய விருப்பத்தின் பேரில் எடுக்கப்படும் தேர்வு. கிழக்கிலும் மேற்கிலும் கலாசார காரணிகள் அடிப்படையில் இதற்கான வரைவிலக்கணம் அல்லது புரிந்துகொள்ளல் பெருமளவில் வேறுபட்டு நிற்கிறது என்பது உண்மை. இது ஆதரிக்கப்பட/அனுமதிக்கப்பட வேண்டியதா அல்லது கண்டிக்கப்படவேண்டியதா என்பதை ஆராய்வது உங்கள் பதிவின் நோக்கம் அல்லாததால் அது பற்றிய கருத்துக்களை நான் இங்கு கூற விரும்பவில்லை.

2. ஆபாசப் படங்களிற்கும் ஓரினச் சேர்க்கைக்கும் உள்ள தொடர்பு: மேலைத்தேய விளக்கத்தில் ஓரினச்செர்கயினை அணுகும் போது இவை இரண்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை. செங்கோவியாரினதும் உங்களதும் கருத்துக்களுடன் நான் ஒத்துப்போகிறேன். ஆனால் கீழைத்தேய புரிந்துகொள்ளளுடன் பார்க்கும் பொது சற்று மாறுபடுகிறேன். கீழைத்தேய புரிந்து கொள்ளல் என்பது நண்பர் suryajeeva கூறியது. இங்கு நடக்கும் ஓரினச்சேர்கை அவைலபிளிட்டி (எதிர்பாலாருடன் உறவு வைத்துக்கொள்வதை விட ஒரே பாலாருடன் வைத்துக்கொள்ள வாய்ப்புக்கள் அதிகம்), ரிஸ்க் பாக்டர் (கருத்தரிப்பு), இம்பக்ட் ரேசியோ (திருமணமாகாத ஆண்-பெண் பாலியல் உறவு சமூகத்தில் மாபெரும் குற்றம், ஆனால் ஓரினச்சேர்கை அவ்வாறு பார்க்கப்படுவதில்லை) என்பவற்றின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. அது ஒருவரது பாலியல் வேட்கையை சுய இன்பம் தவிர்த்து தணித்துக்கொள்ளும் ஒரு முறையாகவே கணிக்கப்படுகிறது. அந்த இடத்தில் ஆபாசப்படங்கள் ஓரினச்செற்கையின் அதிகரிப்பில் நிச்சயம் பங்கு வகிக்கிறது. நேரடி தொடர்புகள் எதுவும் இல்லை ஆயினும் பாலியல் உணர்வினை தூண்டும் படங்கள் அவ உணர்வினை தணிக்க வழிமுறைகளை தேடும் நாட்டத்தை அதிகப்படுத்தும் என்கிற வித்தத்திலேயே தொடர்பு படுகிறது.

இவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். அவற்றிற்கு நானே பொறுப்புதாரி.

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
Best Blogger Tips

அப்புறம், மொக்க மாமாவின் கருத்துக்களுடன் நான் ஒத்துப்போகிறேன், நாசூக்கா சொல்லலாமே, வன்மையான வார்த்தைப் பிரயோகம் தவிர்கமுடியதாகும் நிலையில், அவற்றினை ஒரு பந்தியாக தொகுத்து spoiler போடலாம். மறுபடியும் ஒரு கருத்தாடலை தூண்டும் பதிவினை இட்டதற்கு வாழ்த்துக்கள்.

Mathuran said...
Best Blogger Tips

@நிரூபன்
மச்சி,,,,மீண்டும் ஒரு தரம் பதிவினைப் படிக்க முடியுமா?

நான் சொல்லியிருப்பது மாணவி என்று அல்ல..

மாணவிகள்.///

நிரூபன் நீங்கள் மாணவிகள் என்றே கூறியுள்ளீர்கள். ஆனால் நான் அறிந்தது அதில் சம்மந்தப்பட்டது ஒரு மாணவி என்றே

Unknown said...
Best Blogger Tips

என்னமோ போங்க பாஸ்!

Unknown said...
Best Blogger Tips

இதில் புறக்காரணிகள் தவிர இயல்பாகவே பிறப்பில் ஏற்படும் ஜீன்கள் தான் அதிகம் தாக்கம் செலுத்துகின்றன எனக்கூறுகிறார்கள்! ஆனாலும் திட்டவட்டமாக யாராலும் கூற முடியவில்லை.

ஆபாசப்படங்கள் ஓரினச் சேர்க்கையைத் தூண்டுகின்றனவா? என்றால் அதற்கான பதில் 'தூண்டலாம்'!

ஆனால் உங்கள் தலைப்பு என்ன?

ஆபாசப்படங்கள்தான் ஓரினச் சேர்க்கையைத் தூண்டுகின்றனவா?
என்பதால் அதற்கான பதில் 'நிச்சயமாக இல்லை' என்பதே!

ஆபாசப்படங்கள் தூண்டும் 'அப்பிடி அப்பிடி' இருப்பவங்களை 'அப்பிடி அப்பிடி'த் தூண்டும். அவ்வளவே! :-)

Astrologer sathishkumar Erode said...
Best Blogger Tips

தலைப்பு,மேட்டர் பயமுறுத்துகிறது..கொஞ்சம் நிதானம்

நிரூபன் said...
Best Blogger Tips

@Dr. Butti Paul

சார், கன்றோவேர்சியல் டாபிக், தைரியமாக பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள். பதிவை அப்போதே படித்து விட்டாலும் வேலைப்பளு காரணமாக கமன்ட் போடவில்லை. அப்புறம் சில மாற்றுக்கருத்துக்கள் இருக்கு, சொல்றேன்னு கோவிச்சுக்க கூடாது ஓகே வா?
//

நான் ஏன் சார் கோவிக்கப் போறேன்.

நீங்க சொல்லுங்க சார்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Dr. Butti Paul
1. ஹார்மோன் சம்பந்தப்பட்டு வரும் உங்கள் பந்தி. Transsexualism மற்றும் Homosexuality இரண்டையும் போட்டு குழப்பியுள்ளதாக தெரிகிறது. Transsexualism அல்லது Gender Identification Disorder (GID) ஒரு Sexual orientation அல்ல. அது உடல், மன நிலையில் ஏற்படும் ஒரு மாற்றம். அது வேறு பிரச்சினை, //

//

ஒரு ஆணின் பிறப்புறுப்புக்களில் சுரக்கும் பெண்மை சார்ந்த ஹோர்மோன்களின் தூண்டல் அல்லது பெண்ணின் உடல் உறுப்புக்களில் ஆண்மை சார்ந்த ஹோர்மோன்கள் அதிகளவில் சுரப்பதால் ஏற்படும் விளைவுகள் ஒரு பால் இனக் கவர்ச்சியாக மாற்றம் பெற்று விடுகின்றது. இன்னும் விளக்கமாகக் கூறின் ஒரு ஆண் தன்னை ஒத்த இயல்புடைய சற்றுப் பெண்மைக் குணம் கொண்ட இன்னோர் ஆணை விரும்புவதும்; ஒரு பெண் தன்னை ஒத்த கொஞ்சம் ஆண்மைக் குணம் கொண்ட பெண்ணை விரும்புவதும் ஓரினச் சேர்க்கை எனப்படுகின்றது.
//

பாஸ், ஓரினச் சேர்க்கை என்பது ஒரு ஆணிற்குரிய உணர்வுகள் கைவரப் பெற்ற பெண்ணும், இன்னோர் பெண்ணும் இணைவது என்றெல்லாம் விளக்கம் சொல்லுகிறார்களே? அது தவாறா பாஸ்?

நிரூபன் said...
Best Blogger Tips

@Dr. Butti Paul

அது ஒருவரது பாலியல் வேட்கையை சுய இன்பம் தவிர்த்து தணித்துக்கொள்ளும் ஒரு முறையாகவே கணிக்கப்படுகிறது. அந்த இடத்தில் ஆபாசப்படங்கள் ஓரினச்செற்கையின் அதிகரிப்பில் நிச்சயம் பங்கு வகிக்கிறது. நேரடி தொடர்புகள் எதுவும் இல்லை ஆயினும் பாலியல் உணர்வினை தூண்டும் படங்கள் அவ உணர்வினை தணிக்க வழிமுறைகளை தேடும் நாட்டத்தை அதிகப்படுத்தும் என்கிற வித்தத்திலேயே தொடர்பு படுகிறது. //

பாஸ். ஆனாலும் ஆபாசப் படங்கள் ஓரினச் சேர்க்கையினை அல்லது ஒரீனச் சேர்க்கை மீது நாட்டமில்லாத ஒரு மனிதனுக்கு ஓரினச் சேர்க்கை மீது ஆர்வம் ஏற்படுமளவிற்கு தூண்டவில்லை அல்லவா.

ஆபாசப் படங்கள் மூலம் ஓரினச் சேர்க்கையாளர்கள் உருவாகவில்லை என்பது தான் நான் பதிவின் மையக் கருத்தாக எடுத்துக் கொண்ட விடயம்,

உங்களின் விளக்கமான பின்னூட்டங்களிற்கு நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Dr. Butti Paul

அப்புறம், மொக்க மாமாவின் கருத்துக்களுடன் நான் ஒத்துப்போகிறேன், நாசூக்கா சொல்லலாமே, வன்மையான வார்த்தைப் பிரயோகம் தவிர்கமுடியதாகும் நிலையில், அவற்றினை ஒரு பந்தியாக தொகுத்து spoiler போடலாம். மறுபடியும் ஒரு கருத்தாடலை தூண்டும் பதிவினை இட்டதற்கு வாழ்த்துக்கள்.//

நன்றி பாஸ்,
இனிமேல் கூடிய கவனம் செலுத்துகிறேன்.

ஆனாலும் பாருங்கள், நான் இம்புட்டுத் தெளிவாக விளக்கம் கொடுத்தே, புரிதலற்றவர்களாக மீண்டும் மீண்டும் அதே விடயத்தைச் சில நண்பர்கள் கிளறியிருக்கிறார்கள்.

அடுத்த பதிவில் கண்டிப்பாக கூடிய கவனம் எடுத்து, படிப்போருக்குச் அசௌகரியம் ஏற்படாத வகையில் எழுதுகின்றேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்

@நிரூபன்
மச்சி,,,,மீண்டும் ஒரு தரம் பதிவினைப் படிக்க முடியுமா?

நான் சொல்லியிருப்பது மாணவி என்று அல்ல..

மாணவிகள்.///

நிரூபன் நீங்கள் மாணவிகள் என்றே கூறியுள்ளீர்கள். ஆனால் நான் அறிந்தது அதில் சம்மந்தப்பட்டது ஒரு மாணவி என்றே//

மச்சி, உங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி, நான் கண்டிப்பாக என் நண்பர்களிடம் கேட்டு இவ் விடயத்தினை மேலும் உறுதிப்படுத்துகின்றேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜீ...

என்னமோ போங்க பாஸ்!//

என்ன பாஸ்,

பதிவு பிடிக்கலையா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜீ...

இதில் புறக்காரணிகள் தவிர இயல்பாகவே பிறப்பில் ஏற்படும் ஜீன்கள் தான் அதிகம் தாக்கம் செலுத்துகின்றன எனக்கூறுகிறார்கள்! ஆனாலும் திட்டவட்டமாக யாராலும் கூற முடியவில்லை.

ஆபாசப்படங்கள் ஓரினச் சேர்க்கையைத் தூண்டுகின்றனவா? என்றால் அதற்கான பதில் 'தூண்டலாம்'!

ஆனால் உங்கள் தலைப்பு என்ன?

ஆபாசப்படங்கள்தான் ஓரினச் சேர்க்கையைத் தூண்டுகின்றனவா?
என்பதால் அதற்கான பதில் 'நிச்சயமாக இல்லை' என்பதே!

ஆபாசப்படங்கள் தூண்டும் 'அப்பிடி அப்பிடி' இருப்பவங்களை 'அப்பிடி அப்பிடி'த் தூண்டும். அவ்வளவே! :-)//

நன்றி சகோ,.

நிரூபன் said...
Best Blogger Tips

@’’சோதிடம்’’ சதீஷ்குமார்

தலைப்பு,மேட்டர் பயமுறுத்துகிறது..கொஞ்சம் நிதானம்//

நன்றி பாஸ்.

Kumaran said...
Best Blogger Tips

செங்கோவி அண்ணன் பதிவுக்கு போகமுடியலையே?

Kumaran said...
Best Blogger Tips

செங்கோவி அண்ணன் பதிவுக்கு போகமுடியலையே?

நிரூபன் said...
Best Blogger Tips

@Kumaran

செங்கோவி அண்ணன் பதிவுக்கு போகமுடியலையே?//

http://yalini-france.blogspot.com/2011/10/blog-post_04.html

ஆமா பாஸ்..
அண்ணாச்சி ஒருவர் அது தொடர்பாகப் பதிவெழுதியிருக்கிறார். செங்கோவிசாரை எங்கேயிருந்தாலும் என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்லிச் சொல்லுங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

நான் கூட அவருக்கு மெயில் அனுப்பி பார்த்தேன்.

இன்னும் பதில் வரலை.
அவரை என்னிடம் தொடர்பு கொள்ளச் சொல்லிச் சொல்ல முடியுமா?

Ramya Parasuram said...
Best Blogger Tips

வேறொன்றுமே உங்களுக்குத் தலையிலே இல்லையா? மூளைக்குப் பதிலாகத் தலைக்குள்ளே ஆண்குறியா முளைத்திருக்கிரது நன்பரே? இக்கருதை விடாவிட்டால் அடுத்தநடவடிக்கையின் சட்டபடி இரங்குவோம்

பாலுறவு - பாகம் 02- அவலங்கள் நிறைந்த மலையக மக்களின் வாழ்க்கை முறை!
வரைந்த கோடுகளினூடே வளைந்து நெளியும் காமம்!
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள (நடிகை பூஜாவின்) அந்த சீடி!
அனுமதியின்றி கிளறப்படும் ஆபாசப் பதிவரின் அந்தரங்க விடயங்கள்!
பாலியல் பட நடிகர்களாக பள்ளி மாணவர்கள்- எம் சந்ததியின் எதிர்காலம் எங்கே?

பாலியல் குறைபாடும், இலங்கைத் தமிழர்களும்!
ஆண்களின் பார்வையில் பெண்கள் கவர்ச்சிப் பதுமைகளா இல்லை அழகுப் பொம்மைகளா?

பெண்களைச் சரக்கு என்று அழைக்கலாமா- ஆராய்ச்சிப் பதி...

இடையில் இன்பத் தீ(ப்)பற்ற வைத்து, உயிரில் காதல் தே...

மனைவியின் மானத்தை விற்று மகுடம் வாங்கிய பிரபல எழுத...
ஆபாசத்தோடு முகம் சுளிக்க வைக்கும் அசிங்கமான பதிவு!...
காமப் புணர்தலுக்காய் அரங்கேற்றப்படும் காதல் நாடகம்...
காதல் உடல் சார்ந்த பசியா அல்லது உணர்வு சார்ந்த தேட...


எழுத்துலக விபச்சாரர்களால் மானபங்கப்படுத்தப்படும் த...

நிரூபன் said...
Best Blogger Tips

@Ramya Parasuram

வேறொன்றுமே உங்களுக்குத் தலையிலே இல்லையா? மூளைக்குப் பதிலாகத் தலைக்குள்ளே ஆண்குறியா முளைத்திருக்கிரது நன்பரே? இக்கருதை விடாவிட்டால் அடுத்தநடவடிக்கையின் சட்டபடி இரங்குவோம்//

நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று புரியவில்லை..
இப்படிப் பதிவுகள் எழுதியது தவறா?
உங்கள் சொந்த புரோபைலில் வந்து சொல்லலாமே.

ஏன் இவ்வாறு போலியாக புதிய புரோபைலில் வர வேண்டும்.

மக்களின் பிரச்சினைகள், பாலியல் குறைபாடுகள் தொடர்பாக எழுதுவது தவறா?
என்னமோ சொல்லுறீங்க. ஒன்னுமே புரியலைங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@Ramya Parasuram
வேறொன்றுமே உங்களுக்குத் தலையிலே இல்லையா? மூளைக்குப் பதிலாகத் தலைக்குள்ளே ஆண்குறியா முளைத்திருக்கிரது நன்பரே? இக்கருதை விடாவிட்டால் அடுத்தநடவடிக்கையின் சட்டபடி இரங்குவோம்//

ஏனுங்க, இப்படியான சமூகப் பிரச்சினைகளை எழுதுவதும் தவறா?
இத்தகைய பதிவுகளுக்கு எப்படித் தலைப்பு வைக்கலாம் சொல்லுங்க?
//

காதல் உடல் சார்ந்த பசியா அல்லது உணர்வு சார்ந்த தேட...//

அப்புறம் இந்தப் பதில் என்ன குறை கண்டீங்க.

நுனிப் புல் மேய்ந்து விட்டு, ஏதோ மிரட்டும் தொனியில் பேசுறீங்களே.

பதிவில நான் என்ன சொல்லியிருக்கேன் என்று கொஞ்சம் படிச்சுப் பார்த்திட்டுப் பேசுறது.

J.P Josephine Baba said...
Best Blogger Tips

என் அனுபவத்தில் என் கல்லூரி வாழ்க்கையில் இந்த மாதிரி நோய் உள்ள பெண்களை நேரடியாக கண்டுள்ளேன். இது ஒரு மரபணு மாற்றம் என்பதை விட பெண் குழந்தைகளின் வளர்ப்பு, செக்ஸ் பற்றிய ஆர்வக் கோளாறும் இதில் உள்ளது. நகர்புற கல்லூரியில் கற்ற போது கண்ட கேரளா பெண்களை விட குக்கிராம கல்லூரியில் பயின்ற போது இதற்க்கு அடிமையான பல மாணவிகளை கண்டேன். உரசிலில் வரும் சுகத்தை தளமாக கொண்டு இதை நடத்தி செல்கின்றனர். இதற்க்கு விழிப்புணர்வு, புரிதல் கொடுக்கும் ஆசிரியைகள், என் புள்ள சின்ன புள்ளன்னு நினைக்கும் தாய்மார்களும் கவனிக்க வேண்டும். இதற்க்கு அடிமையான ஒரு மாணவி தன் தங்கையை இந்த நிகழ்வுக்கு அனுமதிப்பது இல்லை. பல திருமண உறவுகள் கூட முறிந்து போக இது காரணமாகின்றது. நாய் போல் மாறி மாறி கடித்து நாய் கடி என்று மருத்துவம் பார்த்த மாணவிகளையும் விடுதியில் கண்டு அரண்டேன்!!!!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails