Saturday, August 6, 2011

சூல் தன்னில் சீழ் கட்டிச் செத்த கருவொன்றின் கண்ணீர் கதை!

மௌனித்துப் போகும்
ஒவ்வோர் வார்த்தைகளுக்கும்
மாற்று வழியாக
உணர்ச்சியெனும் நிரூபனின் நாற்றிலிருந்து காப்பி செய்கிறேன்
பெரு வெள்ளம்
ஊடக மொழி பெயர்ப்பு
செய்கிறது,


இப் பதிவினை வழமை போல நிரூபனின் நாற்றிலிருந்து காப்பி செய்துள்ளேன்.

என் தாயின்
கருவறையில்
குளிர் காய்ந்து,
அவளின்
தொப்புள் கொடி வழியே நிரூபனின் நாற்றிலிருந்து காப்பி செய்கிறேன்
வெளியேறும் சுவாசம்
ஊடே புத்துணர்வு பெற்று;
எனைச் சுமப்பவளின்
நிறை மாத
பருத்த வயிற்றில்
மெல்லிதாய் அசைவுறும்
என் உஷ்ணம் நிறைந்த
உடலசைவைவில்
சுகத்தை(க்) கொடுத்து
என் உணர்வுகளை வெளிப்படுத்த
வழிகள் ஏதுமின்றி- மண்ணுலகில்
ஆயுத முனையில்
அடக்கி வைக்கப்பட்டிருக்கும்
ஊடகவியலாளனின்
உணர்வினைப் போல
பேச்சற்றிருந்தேன்,
இப் பதிவினை வழமை போல நிரூபனின் நாற்றிலிருந்து காப்பி செய்துள்ளேன்.
பசிக்கையில் பிடிக்கா விட்டால்
வாந்தியெடுக்க வைத்து,
அதிகமாய் உள்ளெடுக்கையில்நிரூபனின் நாற்றிலிருந்து காப்பி செய்கிறேன்
அவளின் உடல் உறுப்புக்கள் மூலம்
கழிவாக வெளியேற்றி
எப்போதிந்த உலகத்தை
காணுவேன் எனும் சிந்தனை
ஏதுமின்றி,
கருவறையின் சுகத்தில்
காலம் பூராவும்
இருந்தால்
கவலையேதுமில்லையே,
எனும் நிலையில்
கனிந்திருந்தேன்!
இப் பதிவினை வழமை போல நிரூபனின் நாற்றிலிருந்து காப்பி செய்துள்ளேன்.
வேண்டாப் பிள்ளை என நிரூபனின் நாற்றிலிருந்து காப்பி செய்கிறேன்
எனை(ச்)
சுமப்பவள்
பேசக் கேட்டேன்,
தவறுதலாய்
வயிற்றில்
தங்கியதாய்
கடிந்து கொண்டார்கள்,
இப் பதிவினை வழமை போல நிரூபனின் நாற்றிலிருந்து காப்பி செய்துள்ளேன்.
காதல் எனும் ஓரங்க
நாடகத்தில்
தடுப்பேதுமின்றி நிரூபனின் நாற்றிலிருந்து காப்பி செய்கிறேன்
வயிற்றில்
தரித்த மகவாம் நான்,
ஆணுறை தன்னில்
என் மூச்சை ஏந்தி
அநாதரவாய் குப்பையில் போட்டிருப்பின்
தெப்பமாய் மிதந்திருப்பேன்- ஆனால்
குற்றுயிராய் எனைக் கொல்ல
இரக்கமற்ற ஓர் திட்டம்,
இப் பதிவினை வழமை போல நிரூபனின் நாற்றிலிருந்து காப்பி செய்துள்ளேன்.
சாமப் பொழுதுகளில்
காமப் பசியெடுக்க
சருகுப் பற்றைகளையும்
பூங்காவின் மர நிழலினையும்
மறைவாக்கி
அற்ப சுகம் வேண்டிய நிரூபனின் நாற்றிலிருந்து காப்பி செய்கிறேன்
அழுக்கு மனங்களால்
என் உதயம் நிகழ்ந்தது,
இப் பதிவினை வழமை போல நிரூபனின் நாற்றிலிருந்து காப்பி செய்துள்ளேன்.
ஆண்மை திணித்து
எனை சுமப்பவளின்
உடலில் நிரூபனின் நாற்றிலிருந்து காப்பி செய்கிறேன்
தடைகள் ஏதுமின்றி
புகுந்த சொட்டு நீரின்
வீரியமாக நான் இன்று,
இப் பதிவினை வழமை போல நிரூபனின் நாற்றிலிருந்து காப்பி செய்துள்ளேன்.
லைசென்ஸ் எனும்
திருமணப் பத்திரமின்றி
சைலன்ஸாக நடந்த
சந்தர்ப்ப நாடகத்தின்
விளைவாய்நிரூபனின் நாற்றிலிருந்து காப்பி செய்கிறேன்
உருக் கொண்ட
நான்கு மாதங்களில்
கருச் சிதைவு
நிகழ்த்தி
விடுதலை பெற
துடிக்கிறது இரு உள்ளம்,
இப் பதிவினை வழமை போல நிரூபனின் நாற்றிலிருந்து காப்பி செய்துள்ளேன்.
சுருக்கு கயிற்றினை
பெண் உறுப்பின் வழியாக
திணிக்கப் போகிறார்களாம்,
கொஞ்சம் காசு கொடுத்து- உள்ளே
விசும்பும் என் அசைவை நிறுத்திட
சட்டவிரோத கருவழிப்பு
மையங்கள்
இன்று சந்திகள் தோறும்,
இப் பதிவினை வழமை போல நிரூபனின் நாற்றிலிருந்து காப்பி செய்துள்ளேன்.
எனைப் போலப் பலர்
நாளை பிறக்க முன்னே நிரூபனின் நாற்றிலிருந்து காப்பி செய்கிறேன்
கருவில் சிதைக்கப்படலாம்- இல்லை
பிறந்த பின்
தெருவில் அநாதரவாய்
வீச நேரிடலாம்,
ஏன் இந்த
ஈனச் செயல் இளையோரே?
 இப் பதிவினை வழமை போல நிரூபனின் நாற்றிலிருந்து காப்பி செய்துள்ளேன்.
ஒரு முறை உள் வாங்க முன்
உங்கள் நிலை தனை உணருங்கள்-
விடுதலை பெற்று
பூமியில் தவழ்ந்திட
நினைத்திடும் நிரூபனின் நாற்றிலிருந்து காப்பி செய்கிறேன்
எங்கள் மீது
உங்கள் உயிரணு திணித்து
விபரீதம் செய்வதை நிறுத்துங்கள்!

பிற்சேர்க்கை: இது ஒரு வசன கவிதை. 
இக் கவிதையின் பாடு பொருட்களாக, சிசுக் கொலை, சட்டவிரோத கருவழிப்பு, ஆணுறை பற்றிய விழிப்புணர்வு, பிறந்த பின் அநாதரவாய் குப்பைத் தொட்டிகளில் எறியப்படும் குழந்தைகளின் நிலை முதலயிவற்றினை உள்ளடக்கியிருக்கிறேன். 
இப் பதிவினை வழமை போல நிரூபனின் நாற்றிலிருந்து காப்பி செய்துள்ளேன்.

126 Comments:

காட்டான் said...
Best Blogger Tips

குழ போட்டாச்சு வாரன்யா வாசித்துட்டு...!

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்

குழ போட்டாச்சு வாரன்யா வாசித்துட்டு...!//

ஓக்கே, வாங்கோ, வாங்கோ,

காட்டான் said...
Best Blogger Tips

நாலுபேர் கருத்து சொன்னா பிறகு நான் வந்திருந்தா எனக்கு வசதியா போயிருக்கும் இவங்கெல்லாம் சொன்னத வைச்சு கருத்து போட்டிருக்கலாம்..!!? இனி ஒண்டும் செய்ய முடியாது சொந்தக் கருத்த எழுத வேண்டியதுதான்..

என்னைப் பொருத்த மட்டில்  இப்பிடி பிறந்து அனாதையாய் குப்பை தொட்டியில் போடுவதை விட கரு கலைப்பதேமேல்.. அதை விட மேல்.. ஆணுறை பாவிப்பதே.. இதையும் விட மேல் இப்பிடியான சந்தர்பங்கள் வராதவாறு பார்த்துக்கொள்வதே.....!!!!!!? 

இன்னுமொன்றைச்சொல்கிறேன் காட்டானுக்கு ஆச்சி கல்யாணம் செய்து வைத்ததைப்போல் பிள்ளைகளை குறிப்பிட்ட வயது வந்தவுடன் கல்யாணம் செய்து வைப்பதே...!!!? ஆமாயா 24வயசில காட்டான் கட்டீட்டான்யா.. வகுதெரிச்சல் படாத மாப்பிள...!!!???!

காட்டான் said...
Best Blogger Tips

மாப்பிள நான் போட்ட குழய சாப்பிட ஒரு குறும்பாடு வருமய்யா அதகட்டி வைய்யய்யா அதுக்குதான் குறும்பாடு வந்து போனாப்பிறகு காட்டான் வாரது...

Sivakumar said...
Best Blogger Tips

நெகிழ வைக்கும் பதிவு நிரூபா.

//சைலன்ஸாக//

சைலன்டாக?

காட்டான் said...
Best Blogger Tips

பாரப்பு இண்டைக்கு காட்டான் தனித்தவில்... ஹா..ஹா.. ஹா இனி யார் வந்தடிச்சாலும் பரவாயில்ல.... ஹா ஹா ஹா

உணவு உலகம் said...
Best Blogger Tips

உணர்ச்சிகளின் வடிகால்கள்,
உதறித்தள்ளிய உயிர் வடிவங்கள்.
எச்சரிக்கை உணர்விருந்தால்,
எடுத்தெறியத் தேவையில்லை.

கார்த்தி said...
Best Blogger Tips

ஓ அப்பிடியா போகுது சங்கதி?

Mathuran said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்
சமூக அக்கறையுள்ள ஒரு கவிதை
தனியாக ஒரு விடயத்தை மட்டுமல்லாது சிசுக்கொலை, தகாத முறையற்ற உறவுகளின் பின்விளைவு, பூமியில் கால் வைக்கும் முன்னரான சிசுவின் உணர்வுகள்,போன்றவற்றை தாங்கி வந்திருப்பது சிறப்பு

செங்கோவி said...
Best Blogger Tips

வாலிப வேகத்தில் செய்யும் தவறுக்கு தன்னைப் பழியாக்காமல், தன் வயிற்றில் வளரும் சிசுவைப் பலியாக்கும் மனது கொடூரமானது தான்..

செங்கோவி said...
Best Blogger Tips

உலகத்தில் புனிதமானது தாய்மை என்பர்..ஆனாலும் சில தாய்கள், பேய்களெனும் கசப்பான உண்மையைச் சொல்கிறது உங்கள் கவிதை..

Mathuran said...
Best Blogger Tips

இடையில் “மண்ணுலகில்
ஆயுத முனையில்
அடக்கி வைக்கப்பட்டிருக்கும்
ஊடகவியலாளனின்
உணர்வினைப் போல” என்ற உவமையினூடே கவிதையின் கருப்பொருளை குழப்பாமல் கருத்து சுதந்திரத்திற்கெதிரான அடக்குமுறையையும் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.. சிறப்பான கவிதை

Mathuran said...
Best Blogger Tips

செங்கோவி சொன்னதுபோல சில பெண்கள் தாய்மையையே களங்கப்படுத்திவிட்டார்கள்

Mathuran said...
Best Blogger Tips

தாங்கள் செய்யும் தவறுக்கு ஏதும் அறியா பச்சிளம் பாலகர்களை பழிவாங்கும் சமூகத்தின் தோலுரிக்கும் கவிதை..

பாராட்டுக்கள் நிரூபன்

K.s.s.Rajh said...
Best Blogger Tips

//காதல் எனும் ஓரங்க
நாடகத்தில்
தடுப்பேதுமின்றி
வயிற்றில்
தரித்த மகவாம் நான்,
ஆணுறை தன்னில்
என் மூச்சை ஏந்தி
அநாதரவாய் குப்பையில் போட்டிருப்பின்
தெப்பமாய் மிதந்திருப்பேன்- ஆனால்
குற்றுயிராய் எனைக் கொல்ல
இரக்கமற்ற ஓர் திட்டம்,//

தத்ரூபமான வரிகள்.மிகவும் அற்புதமான கவிதை

Anonymous said...
Best Blogger Tips

வணக்கம் பாஸ் ;-)

Anonymous said...
Best Blogger Tips

////மௌனித்துப் போகும்
ஒவ்வோர் வார்த்தைகளுக்கும்
மாற்று வழியாக
உணர்ச்சியெனும்
பெரு வெள்ளம்
ஊடக மொழி பெயர்ப்பு
செய்கிறது,/// ஆரம்ப வரிகளே உயிரோட்டம்....

Anonymous said...
Best Blogger Tips

////மண்ணுலகில்
ஆயுத முனையில்
அடக்கி வைக்கப்பட்டிருக்கும்
ஊடகவியலாளனின்
உணர்வினைப் போல
பேச்சற்றிருந்தேன்,// என்னே ஒரு உவமை...

Anonymous said...
Best Blogger Tips

////எப்போதிந்த உலகத்தை
காணுவேன் எனும் சிந்தனை
ஏதுமின்றி,
கருவறையின் சுகத்தில்
காலம் பூராவும்
இருந்தால்
கவலையேதுமில்லையே,
எனும் நிலையில்
கனிந்திருந்தேன்!/// மனுஷன் கவலைகள் அற்று ,பாதுகாப்பாய் இருக்கிற காலம் அந்த பத்து மாசம் மட்டும் தானே!!

Anonymous said...
Best Blogger Tips

///எனைப் போலப் பலர்
நாளை பிறக்க முன்னே
கருவில் சிதைக்கப்படலாம்- இல்லை
பிறந்த பின்
தெருவில் அநாதரவாய்
வீச நேரிடலாம்// இரண்டும் கொடுமை ((

Anonymous said...
Best Blogger Tips

///விடுதலை பெற்று
பூமியில் தவழ்ந்திட
நினைத்திடும்
எங்கள் மீது
உங்கள் உயிரணு திணித்து
விபரீதம் செய்வதை நிறுத்துங்கள்!//// ஒரு சிசுவின் நிலையில் இருந்து அதன் ஏக்கங்களாக எழுதப்பட்ட கவிதை,

என்ன செய்ய இதுவும் கடந்து போகும் என்று சொல்லிவிட்டு இருப்பதை தவிர ..

Yoga.s.FR said...
Best Blogger Tips

மண்ணுலகில்
ஆயுத முனையில்
அடக்கி வைக்கப்பட்டிருக்கும்
ஊடகவியலாளனின்
உணர்வினைப் போல
பேச்சற்றிருந்தேன்.////யதார்த்தம்!

Yoga.s.FR said...
Best Blogger Tips

காட்டான் said...

மாப்பிள நான் போட்ட குழய சாப்பிட ஒரு குறும்பாடு வருமய்யா அதகட்டி வைய்யய்யா அதுக்குதான் குறும்பாடு வந்து போனாப்பிறகு காட்டான் வாரது...////):):):):):);

Prabu Krishna said...
Best Blogger Tips

வரும் முன் காப்போம்னு தெளிவா சொல்லி இருக்கீங்க பாஸ்.....

உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரி.

Yoga.s.FR said...
Best Blogger Tips

கொஞ்சம் பிந்திப் போச்சுது போல கிடக்கு. கோவணக்காரர் வேளைக்கே வந்து குழை போட்டுட்டுப் போட்டார் போல?அவரும் பாவம் ரெண்டு குமருகளோட?!என்ன செய்வார்?பொடியள் அரியண்டம் குடுப்பங்கள்.லீவு நாளிலை பொடியளும் பாவம் தான?

Yoga.s.FR said...
Best Blogger Tips

காட்டான் said...

நாலுபேர் கருத்து சொன்னா பிறகு நான் வந்திருந்தா எனக்கு வசதியா போயிருக்கும் இவங்கெல்லாம் சொன்னத வைச்சு கருத்து போட்டிருக்கலாம்..!!? இனி ஒண்டும் செய்ய முடியாது சொந்தக் கருத்த எழுத வேண்டியதுதான்..///மாட்னாரு காட்டான்!

Yoga.s.FR said...
Best Blogger Tips

காட்டான் said...

பாரப்பு இண்டைக்கு காட்டான் தனித்தவில்... ஹா!..ஹா!.. ஹா! இனி யார் வந்தடிச்சாலும் பரவாயில்ல.... ஹா!ஹா!ஹா!/////வந்துட்டனே??????????????????

காட்டான் said...
Best Blogger Tips

ஐய்யா குறும்பாடு நான் இப்ப வேலையில நின்னுதாய்யா எழுதுறன் வீட்டில இந்த வேலைய செய்ய காட்டான்கள் விடமாட்டாங்கையா... இண்டைக்குதான்யா கடைசி நாள் இனி பத்து நாளைக்கு லீவையா லீவு...

காட்டான் said...
Best Blogger Tips

காட்டான் வடலீக்க ஒதுங்கிறதெண்டாலும் மீற்றர் விழுந்து கொண்டுதானய்யா இருக்கும்.... 

Yoga.s.FR said...
Best Blogger Tips

"சூல் தன்னில் சீழ் கட்டிச் செத்த கரு"வாழ்த்துக்கள் நிரூபன்!வாழ் நாள் கவிஞன் ஒருவரைப் பெற்றிருக்கிறது உலகத் தமிழ் சமுதாயம்!உங்கள் கவிதைகள் என்றென்றும் நிலைத்து வாழும்!

Yoga.s.FR said...
Best Blogger Tips

காட்டான் said...

காட்டான் வடலீக்க ஒதுங்கிறதெண்டாலும் மீற்றர் விழுந்து கொண்டுதானய்யா இருக்கும்.... ////அது தெரிஞ்ச விசயம் தான?

காட்டான் said...
Best Blogger Tips

அடையான் பறிக்காதவரை ஐபோன் இருக்கும் வரை... குழ போடுவோமையா...??
முதலாலி வக்கேசன்ல போட்டாரையா...!!!

Yoga.s.FR said...
Best Blogger Tips

ஆணுறை தன்னில்
என் மூச்சை ஏந்தி
அநாதரவாய் குப்பையில் போட்டிருப்பின்
தெப்பமாய் மிதந்திருப்பேன்!///நச்!!!

Yoga.s.FR said...
Best Blogger Tips

அடையான் பறிக்காதவரை ஐபோன் இருக்கும் வரை..////அதை வீட்ட போகேக்க,வேலைக்கு வரேக்க "அங்க" வக்கிறது தான?(சோ காட்டாமல்)

காட்டான் said...
Best Blogger Tips

என்னையா நிரூபன் இப்பிடி சொல்லுறார்:-

அன்பின்கிற்கினிய உறவுகளே, உங்களின் காத்திரமான கருத்துக்களைப் பின்னூட்டமாகப் பகிர்ந்து என் எழுத்துக்கள் மேம்பட உதவுகள்.

நாங்க போடுற பின்னூட்டம் இவற்ற எழுத்த எப்படி மேம்பட உதவுமையா..!??
இல்ல தெரியாமதான்யா கேட்கிறேன்யா..!!!!???

Yoga.s.FR said...
Best Blogger Tips

முதலாளி வக்கன்ஸ்(vacance) போனால்,உங்களை நம்பித் தான் விட்டுப் போயிருப்பார்.கடையைக் கவனிப்பதில் கவனம் இருக்க வேண்டும்.குழ எப்ப வேணுமெண்டாலும் போடலாம்!

Yoga.s.FR said...
Best Blogger Tips

BONNE VACANCE,Kaddaan!Reposer vous bien,avec vos enfants!

காட்டான் said...
Best Blogger Tips

merci beaucoup அண்ணாத்த..

காட்டான் said...
Best Blogger Tips

கட முதலாலியே நாங்கதான்னு இஞ்ச வாரவங்க நினைக்கிறாங்கையா..!!? முதலாலிய கொஞ்சமா வெருட்டி வைச்சிருக்கோமையா...!!!!?????)))))

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

தாய்மை பெண்ணின் மறுபிறவி.... பிறந்த குழந்தை முகத்தை பார்த்தவுடன் அவள் வழியெல்லாம் பறந்து போய் விடுமே...

ஹேமா said...
Best Blogger Tips

கவிதை வாசித்து நிறைய நேரமாகியும் என்ன சொல்லவென்றே தெரியாமல் திகைச்சுப்போய் இருக்கிறேன் நிரூ.தாய்மைக்கே சவால்விட்டு அநியாயம் செய்பவர்கள் இவர்கள்.ஆனால் தவறான தாய்மையோ,வறுமையான தாய்மையோ எல்லாராலும் குழந்தையைக் கொல்ல மனம் வராது.யாராவது விதிவிலக்கான தாய்மை மட்டுமே !

கவி அழகன் said...
Best Blogger Tips

சமுகத்தின் சீழ் துடைக்க வந்த சிறந்த கவிதை .
ஒரு கலைஞ்சனுக்கு தன் சமுகம் மீதான அக்கறை யாஸ்தி என்பதை நிருபித்து விட்டீர்கள்
சமுகத்திற்கு ஒரு அடி அதில் இருந்து தப்ப என்ன வழி என்றும் இந்த கவிதை பாடி நிக்கிறது
ஊடகவியலா்ளனின் உள்ளக்கிடக்கையும் அதற்குள் இழையோடியது அருமை

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

மனதை நெகிழ வைக்கும் பதிவு நிரு..


நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

முந்தி வந்த விந்துவை விதையாக்கி கவிதை படைத்துள்ளீர்கள் .
அற்புதம்.

கூடல் பாலா said...
Best Blogger Tips

\\\மண்ணுலகில்
ஆயுத முனையில்
அடக்கி வைக்கப்பட்டிருக்கும்
ஊடகவியலாளனின்
உணர்வினைப் போல
பேச்சற்றிருந்தேன்,\\\
மிக சிறந்த ஒப்புமை ...சிறந்த வசன கவிதை மாப்ள !

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
Best Blogger Tips

ஸலாம் சகோ.நிரூபன்,

சமூக அவலங்களை எதிர்த்து அதிரடியாக எழுதியுள்ளீர்கள்..!
கவிதை வரிகளில் ஆதங்கம் நன்கு வெளிப்படுகின்றது. எழுதி பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்.

அடுத்து...


தங்களுக்கு"நிரூபன்-சித்ரா-ஆஷிக்:-3பேரும் வசம்ம்மா மாட்டிக்கிட்டாங்க..!" ---இதில்
ஓர் அழைப்பு விடுத்துள்ளேன்..!

பதிவுலக சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, உங்களை அழைத்துள்ளேன்.
தாங்களும் எழுதப்படாத அந்த வரைமுறைகளை பின்பற்றி என் அழைப்பை ஏற்று பதிவை தொடருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் சகோ.

shanmugavel said...
Best Blogger Tips

அருமையான கவிதை நிரூபன்.வாழ்த்துக்கள்.

M.R said...
Best Blogger Tips

அவசரப்படும் அறிவீளிகளின் செயலால்

அறியா சிசு படும் கொடுமை வேதனை

இல்லை ஓர் பிள்ளை என்று
ஏங்குவோர் பலரிருக்க
நீயும் வந்து "இவர்கள் "
வயிற்றில் ஏன் உதித்தாய்

செல்ல சிசுவே ?

M.R said...
Best Blogger Tips

நிருபன் நண்பருக்கு

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Yoga.s.FR said...
Best Blogger Tips

இண்டைக்கு நண்பர்கள் தினமாம்!நண்பர்களாக இருப்போர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Yoga.s.FR said...
Best Blogger Tips

தங்களுக்கு"நிரூபன்-சித்ரா-ஆஷிக்:-3பேரும் வசம்ம்மா மாட்டிக்கிட்டாங்க..!" ---இதில்
ஓர் அழைப்பு விடுத்துள்ளேன்..!

பதிவுலக சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, உங்களை அழைத்துள்ளேன்.
தாங்களும் எழுதப்படாத அந்த வரைமுறைகளை பின்பற்றி என் அழைப்பை ஏற்று பதிவை தொடருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் சகோ.////உங்கள் தளத்தில் இதற்கான பதிலை நிரூபன் அளித்திருக்கிறார்!

Yoga.s.FR said...
Best Blogger Tips

காட்டான் said...

என்னையா நிரூபன் இப்பிடி சொல்லுறார்:-

அன்பின்கிற்கினிய உறவுகளே, உங்களின் காத்திரமான கருத்துக்களைப் பின்னூட்டமாகப் பகிர்ந்து என் எழுத்துக்கள் மேம்பட உதவுகள்.

நாங்க போடுற பின்னூட்டம் இவற்ற எழுத்த எப்படி மேம்பட உதவுமையா..!??
இல்ல தெரியாமதான்யா கேட்கிறேன்யா..!!!!???/////கற்றது கை மண்ணளவு,கல்லாதது உலகளவில்லையா?அதனைச் சொல்லுகிறார்!எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருப்பதில்லையே?"அடக்கம்" ஐயா,அடக்கம்!!!

Yoga.s.FR said...
Best Blogger Tips

மைந்தனைக் காணோம்!கண்டு பிடித்துக் கொடுப்போருக்கு,Lyca mobile சிம் காட் இலவசம்!!!

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
மகேந்திரன் said...
Best Blogger Tips

///சாமப் பொழுதுகளில்
காமப் பசியெடுக்க
சருகுப் பற்றைகளையும்
பூங்காவின் மர நிழலினையும்
மறைவாக்கி
அற்ப சுகம் வேண்டிய
அழுக்கு மனங்களால்
என் உதயம் நிகழ்ந்தது////


காமப் பசியால் தீமை செய்திடும்
அற்பப் பதர்களை துண்டு துண்டாக்கிப் போடும்
அரிவாள் கவிதை.
என் மனமுவந்த கைத்தட்டல்கள் சகோ....
உணர்ச்சி மிகுந்த கவிதை.

Rathnavel Natarajan said...
Best Blogger Tips

நல்ல கவிதை.

Yazhini said...
Best Blogger Tips

நிரூபன் வடித்த கவிதை பார்க்க வந்தால், என் மனது சோகத்தில் ஆழ்ந்து விட்டது!

ஒரு சிசுவின் குமுறலை அழகாக வெளியிட்டுள்ள நிரூபனுக்கு என் வாழ்த்துக்கள் !! நன்றி ...

Unknown said...
Best Blogger Tips

சகோ! வசனகவிதை என வடித்தாலும்
படிப்போரின் நெஞ்சை விசனமிக
வைத்தீர்!
நீர் சகலகலா வல்லவர்
என்பதை தங்களின் மாறு பட்ட பதிவு
கள் எடுத்துக் காட்டுகின்றன.
மேலும் மேலும் உங்கள்
திறமை வளர வாழ்த்துக்கள்.

புலவர் சா இராமாநுசம்

Rabbani said...
Best Blogger Tips

மனதை நெகிழ வைக்கும் கவிதை !!
வெளியிட்டுள்ள நிரூபனுக்கு வாழ்த்துக்கள்

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்

நாலுபேர் கருத்து சொன்னா பிறகு நான் வந்திருந்தா எனக்கு வசதியா போயிருக்கும் இவங்கெல்லாம் சொன்னத வைச்சு கருத்து போட்டிருக்கலாம்..!!? இனி ஒண்டும் செய்ய முடியாது சொந்தக் கருத்த எழுத வேண்டியதுதான்..//

அவ்...சைட் கப்பில் யாரையோ கடிக்கிறீங்களே.

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்
இன்னுமொன்றைச்சொல்கிறேன் காட்டானுக்கு ஆச்சி கல்யாணம் செய்து வைத்ததைப்போல் பிள்ளைகளை குறிப்பிட்ட வயது வந்தவுடன் கல்யாணம் செய்து வைப்பதே...!!!? ஆமாயா 24வயசில காட்டான் கட்டீட்டான்யா.. வகுதெரிச்சல் படாத மாப்பிள...!!!???//

நீங்கள் சொல்வதும் சரி தான், ஆனால் பிள்ளைக்கு ஆசை வந்திட்டுதென்று 16 வயசில் கலியாணம் செய்து வைக்கலாமோ?
ஹி.....ஹி...
இப்ப 18ன் வயசிற்கும் குறைவான ஆட்கள் தானே இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்
மாப்பிள நான் போட்ட குழய சாப்பிட ஒரு குறும்பாடு வருமய்யா அதகட்டி வைய்யய்யா அதுக்குதான் குறும்பாடு வந்து போனாப்பிறகு காட்டான் வாரது..//

குறும்பாடு என்று யாரை சொல்லுறீங்க பாஸ்?

நிரூபன் said...
Best Blogger Tips

@! சிவகுமார் !

நெகிழ வைக்கும் பதிவு நிரூபா.

//சைலன்ஸாக//

சைலன்டாக?//

நன்றி சகோதரம்,
சைலன்ற் என்பதைத் தான் அப்படி எழுதினான்,
தாங்கள் சுட்டுவது போலவும் பொருள் கொள்ளலாம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்
பாரப்பு இண்டைக்கு காட்டான் தனித்தவில்... ஹா..ஹா.. ஹா இனி யார் வந்தடிச்சாலும் பரவாயில்ல.... ஹா ஹா ஹ//

எங்கே தனித் தீவில் இருக்கிறீங்க?
யார் கூட இருக்கிறீங்க.
யோகா ஐயாவிடம் சொல்லி, வீட்டிற்கு ஒரு போன் போட்டு உங்கட அவாவிடம் சொல்லச் சொல்லவே?

நிரூபன் said...
Best Blogger Tips

@FOOD
உணர்ச்சிகளின் வடிகால்கள்,
உதறித்தள்ளிய உயிர் வடிவங்கள்.
எச்சரிக்கை உணர்விருந்தால்,
எடுத்தெறியத் தேவையில்லை.//

ஆமாம் ஆப்பிசர், வருமுன் காத்திருந்தால் இப்படி நிகழ்ந்திருக்காதல்லவா.
இன்றைய கால கட்டத்தில் எத்தனை பேர் இப்பூடிச் சிந்திக்கிறாங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@கார்த்தி

ஓ அப்பிடியா போகுது சங்கதி?//

ஆமாம் பாஸ்....அப்படித் தான் போகுது சங்கதி, எங்கே எஸ் ஆகுறீங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்

வணக்கம் நிரூபன்
சமூக அக்கறையுள்ள ஒரு கவிதை
தனியாக ஒரு விடயத்தை மட்டுமல்லாது சிசுக்கொலை, தகாத முறையற்ற உறவுகளின் பின்விளைவு, பூமியில் கால் வைக்கும் முன்னரான சிசுவின் உணர்வுகள்,போன்றவற்றை தாங்கி வந்திருப்பது சிறப்பு//

வணக்கம் மதுரன்,
தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

வாலிப வேகத்தில் செய்யும் தவறுக்கு தன்னைப் பழியாக்காமல், தன் வயிற்றில் வளரும் சிசுவைப் பலியாக்கும் மனது கொடூரமானது தான்..//

என்ன சொல்ல பாஸ்,. இப்படியான பலர் எம் சமூகத்தில் இன்று நடமாடுகிறார்கள்.
தம் சுகத்திற்காக சிறு உயிரை அல்லவா அழிக்கிறார்கள். இதற்குப் பல போலிக் கருக்கலைப்பு நிலையங்களும் துணையிருப்பது தான் வேதனை பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

உலகத்தில் புனிதமானது தாய்மை என்பர்..ஆனாலும் சில தாய்கள், பேய்களெனும் கசப்பான உண்மையைச் சொல்கிறது உங்கள் கவிதை..//

தங்களின் விளக்கமான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரம்,.

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்
ஆயுத முனையில்
அடக்கி வைக்கப்பட்டிருக்கும்
ஊடகவியலாளனின்
உணர்வினைப் போல” என்ற உவமையினூடே கவிதையின் கருப்பொருளை குழப்பாமல் கருத்து சுதந்திரத்திற்கெதிரான அடக்குமுறையையும் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.. சிறப்பான கவிதை//

அவ்...அவ்...
இதனை மட்டும் குறிப்பிட்டு விளக்கம் கொடுக்கிறீங்களே.
எங்களின் வாய்களிற்குள்ளும் பஞ்சு திணிக்க எத்தனை பேர் பின்னால் அலைகிறார்களோ தெரியலை பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Kss.Rajh

தத்ரூபமான வரிகள்.மிகவும் அற்புதமான கவிதை//

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

வணக்கம் பாஸ் ;-)//

வணக்கம் பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.
ஒரு சிசுவின் நிலையில் இருந்து அதன் ஏக்கங்களாக எழுதப்பட்ட கவிதை,

என்ன செய்ய இதுவும் கடந்து போகும் என்று சொல்லிவிட்டு இருப்பதை தவிர//

ம்...தங்களின் புரிந்துணர்விற்கும், கருத்துக்களுக்கும் நன்றி பெரிய பாஸ்.

Unknown said...
Best Blogger Tips

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.s.FR
மாப்பிள நான் போட்ட குழய சாப்பிட ஒரு குறும்பாடு வருமய்யா அதகட்டி வைய்யய்யா அதுக்குதான் குறும்பாடு வந்து போனாப்பிறகு காட்டான் வாரது...////):):):):):);//

யாரந்த குறும்பாடு என்று சொல்லாமில்லே;-)))

Unknown said...
Best Blogger Tips

வசன கவிதையில் நீங்க தான் பாஸ் டாப்

நிரூபன் said...
Best Blogger Tips

@பலே பிரபு
வரும் முன் காப்போம்னு தெளிவா சொல்லி இருக்கீங்க பாஸ்.....

உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரி.//

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ரியாஸ் அஹமது

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//

வாங்கோ பாஸ், உங்களுக்கும் என் உளம் நிறைந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ரியாஸ் அஹமது

வசன கவிதையில் நீங்க தான் பாஸ் டாப்//

அப்படியெல்லாம் இல்லை பாஸ்.

என்னை விட எத்தனையோ பேர் நன்றாக எழுதுகிறார்கள்.
நான் வெறும் டம்மி பீஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.s.FR

கொஞ்சம் பிந்திப் போச்சுது போல கிடக்கு. கோவணக்காரர் வேளைக்கே வந்து குழை போட்டுட்டுப் போட்டார் போல?அவரும் பாவம் ரெண்டு குமருகளோட?!என்ன செய்வார்?பொடியள் அரியண்டம் குடுப்பங்கள்.லீவு நாளிலை பொடியளும் பாவம் தான?//

அவ்...அவ்...காட்டான் அண்ணாச்சிக்கு குட்டி காட்டாங்கள் தான் இருக்கென்று கேள்விப்பட்டேன்,
இது என்ன குமருகள் என்று ஒரு இழுவை.
அவ்...அவ்...

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்
ஐய்யா குறும்பாடு நான் இப்ப வேலையில நின்னுதாய்யா எழுதுறன் வீட்டில இந்த வேலைய செய்ய காட்டான்கள் விடமாட்டாங்கையா... இண்டைக்குதான்யா கடைசி நாள் இனி பத்து நாளைக்கு லீவையா லீவு...//

இப்பத் தானே விஷயம் விளங்கிச்சு,
குறும்பாடு என்று யோகா ஐயாவையா இவ்ளோ நேரமாச் சொல்லிக் கொண்டிருந்தனீங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்
இண்டைக்குதான்யா கடைசி நாள் இனி பத்து நாளைக்கு லீவையா லீவு...//

ஐரோப்பாவில் இருக்கிற எல்லோரும் லீவெடுத்து, ஊரிலை இருக்கிற எங்களுக்கு வெளிநாட்டு ஆசையைத் தூண்டுறீங்களே,
இது நியாயமா?

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்

காட்டான் வடலீக்க ஒதுங்கிறதெண்டாலும் மீற்றர் விழுந்து கொண்டுதானய்யா இருக்கும்.... //

அவ்...ஏன் வடலீக்கையே இப்பவும் ஒதுங்கிறனீங்க.
அப்ப கைவசம் எப்பவும் ஒரு சோடாப் போத்தல் இருக்குமென்று நினைக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.s.FR

"சூல் தன்னில் சீழ் கட்டிச் செத்த கரு"வாழ்த்துக்கள் நிரூபன்!வாழ் நாள் கவிஞன் ஒருவரைப் பெற்றிருக்கிறது உலகத் தமிழ் சமுதாயம்!உங்கள் கவிதைகள் என்றென்றும் நிலைத்து வாழும்!//

ஐயா, தங்கள் வாயால் இப்படி ஒரு வார்த்தையா.
என்னிடம் ஒரு கவிஞனுக்குரிய தகுதி எல்லாம் இருக்கா என்று எனக்குச் சந்தேகம்.
தங்களின் வாழ்த்துக்களை மனதார ஏற்றுக் கொள்கிறேன்.
நான் இன்னும் வளர வேண்டிய தூரம் அதிகமிருக்கிறது ஐயா.
மிக்க நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்
அடையான் பறிக்காதவரை ஐபோன் இருக்கும் வரை... குழ போடுவோமையா...??
முதலாலி வக்கேசன்ல போட்டாரையா...!!!//

வேலையிலிருந்து தத்துவமெல்லாம் சொல்லுறீங்களே,
அருமை அருமை..
தொடர்ந்தும் ஐபோனில் எழுதுங்கோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.s.FR
அடையான் பறிக்காதவரை ஐபோன் இருக்கும் வரை..////அதை வீட்ட போகேக்க,வேலைக்கு வரேக்க "அங்க" வக்கிறது தான?(சோ காட்டாமல்)//

ஆள் இந்த வயசிலை யாராச்சும் பெட்டையள் பார்பாளுங்க என்று நினைக்கிறார் போல இருக்கே ஐயா.,

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்
என்னையா நிரூபன் இப்பிடி சொல்லுறார்:-

அன்பின்கிற்கினிய உறவுகளே, உங்களின் காத்திரமான கருத்துக்களைப் பின்னூட்டமாகப் பகிர்ந்து என் எழுத்துக்கள் மேம்பட உதவுகள்.

நாங்க போடுற பின்னூட்டம் இவற்ற எழுத்த எப்படி மேம்பட உதவுமையா..!??
இல்ல தெரியாமதான்யா கேட்கிறேன்யா..!!!!???//

அவ்....என் பதிவில் உள்ள குறை நிறைகளைச் சுட்டிக் காட்டினால் தானே, கொஞ்சம் திருத்தமாக எழுத முடியும்.
அதான் அப்படிச் சொன்னேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.s.FR

முதலாளி வக்கன்ஸ்(vacance) போனால்,உங்களை நம்பித் தான் விட்டுப் போயிருப்பார்.கடையைக் கவனிப்பதில் கவனம் இருக்க வேண்டும்.குழ எப்ப வேணுமெண்டாலும் போடலாம்!//

இது செம நச்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.s.FR

BONNE VACANCE,Kaddaan!Reposer vous bien,avec vos enfants!//

என்னய்யா சொல்லுறீங்க.
போனானேன் வக்கேசன், காட்டான் முதலாலி,
போஸ் அவனே, பொஸ் என்பானே.
இப்படித் தானே சொல்லுறீங்க
இன்னோர் மொழியினைக் கேலி பண்ணுவது அழகல்ல.
ஆனாலும் சும்மா ஒரு காமெடியா எடுங்கோ.
ப்ளீஸ் நோ Angry.

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்

merci beaucoup அண்ணாத்த..//

மெர்சி என்றால் நன்றி என்று தெரியும்,
ஓட்டவடை கூட ரெலிபோனில் பேசும் போது அடிக்கடி சொல்லுவான்.
ஆனால் பின்னுக்கு வாற சொல்லான-beaucoup...என்பதற்கான அர்த்தம்..
பேய்க்கப் என்பது தானே;-)))))))))))

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்
கட முதலாலியே நாங்கதான்னு இஞ்ச வாரவங்க நினைக்கிறாங்கையா..!!? முதலாலிய கொஞ்சமா வெருட்டி வைச்சிருக்கோமையா...!!!!?????)))))//

அவ்..அவ்...
பப்ளிக்கில் விளம்பரம் கொடுக்கிறார் காட்டான்.
யோகா ஐயா கொஞ்சம் ஆளைக் கவனிச்சு வையுங்கோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி - Prakash
தாய்மை பெண்ணின் மறுபிறவி.... பிறந்த குழந்தை முகத்தை பார்த்தவுடன் அவள் வழியெல்லாம் பறந்து போய் விடுமே..//

குழந்தை பிறக்க முதலே அழிக்கிறார்களே.
அதன் பிறகு எப்படி ஐயா முகத்தினைப் பார்க்க முடியும்(((((;

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா

கவிதை வாசித்து நிறைய நேரமாகியும் என்ன சொல்லவென்றே தெரியாமல் திகைச்சுப்போய் இருக்கிறேன் நிரூ.தாய்மைக்கே சவால்விட்டு அநியாயம் செய்பவர்கள் இவர்கள்.ஆனால் தவறான தாய்மையோ,வறுமையான தாய்மையோ எல்லாராலும் குழந்தையைக் கொல்ல மனம் வராது.யாராவது விதிவிலக்கான தாய்மை மட்டுமே !//

ஆமாம் அக்காச்சி, திருமணத்திற்கு முன்னர் கள்ளத் தொடர்பு மூலமாகக் குழந்தை பெறுவோர் தான் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
நீங்கள் சொல்வது போல விதிவிலக்கானவர்கள் மட்டுமே,

நிரூபன் said...
Best Blogger Tips

@கவி அழகன்

சமுகத்தின் சீழ் துடைக்க வந்த சிறந்த கவிதை .
ஒரு கலைஞ்சனுக்கு தன் சமுகம் மீதான அக்கறை யாஸ்தி என்பதை நிருபித்து விட்டீர்கள்
சமுகத்திற்கு ஒரு அடி அதில் இருந்து தப்ப என்ன வழி என்றும் இந்த கவிதை பாடி நிக்கிறது
ஊடகவியலா்ளனின் உள்ளக்கிடக்கையும் அதற்குள் இழையோடியது அருமை//

தங்களின் பின்னூட்டத்திற்கும், விமர்சனக் கருத்துக்களுக்கும் நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!
மனதை நெகிழ வைக்கும் பதிவு நிரு..


நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..//

உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ.
உங்களின் கருத்துக்களுக்கு நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@உலக சினிமா ரசிகன்
முந்தி வந்த விந்துவை விதையாக்கி கவிதை படைத்துள்ளீர்கள் .
அற்புதம்.//

தங்களின் புரிந்துணர்விற்கு, கருத்துக்களுக்கும் நன்றி அண்ணாச்சி.

நிரூபன் said...
Best Blogger Tips

@koodal bala
மிக சிறந்த ஒப்புமை ...சிறந்த வசன கவிதை மாப்ள !//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'

ஸலாம் சகோ.நிரூபன்,

சமூக அவலங்களை எதிர்த்து அதிரடியாக எழுதியுள்ளீர்கள்..!
கவிதை வரிகளில் ஆதங்கம் நன்கு வெளிப்படுகின்றது. எழுதி பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்.//

வாங்கோ சகோ, தங்களின் புரிதலுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'

அடுத்து...


தங்களுக்கு"நிரூபன்-சித்ரா-ஆஷிக்:-3பேரும் வசம்ம்மா மாட்டிக்கிட்டாங்க..!" ---இதில்
ஓர் அழைப்பு விடுத்துள்ளேன்..!

பதிவுலக சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, உங்களை அழைத்துள்ளேன்.
தாங்களும் எழுதப்படாத அந்த வரைமுறைகளை பின்பற்றி என் அழைப்பை ஏற்று பதிவை தொடருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் சகோ.//


இது முத்தான மூன்று விடயங்களை, வெவ்வேறு தலைப்பின் கீழ் எழுத எனக்கு விடுக்கப்பட்டுள்ள இரண்டாவது அழைப்பு இது.
வெகு விரைவில் எழுதுகிறேன்.
உங்களுக்கு முன்னர், இராஜகோபாலன் அண்ணாச்சியும் இப்படி ஓர் அழைப்பு விடுத்திருந்தார்.
நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக எழுதுகிறேன்.
தங்களின் புரிந்துணர்விற்கும் அன்பிற்கும் நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@shanmugavel

அருமையான கவிதை நிரூபன்.வாழ்த்துக்கள்.//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@M.R
அவசரப்படும் அறிவீளிகளின் செயலால்

அறியா சிசு படும் கொடுமை வேதனை

இல்லை ஓர் பிள்ளை என்று
ஏங்குவோர் பலரிருக்க
நீயும் வந்து "இவர்கள் "
வயிற்றில் ஏன் உதித்தாய்

செல்ல சிசுவே ?//

இப்படி அவசரப்படுவோருக்கு, ஒரு சிறிய விழிப்புணர்வாக இந்தக் கவிதை இருக்கட்டுமே என்று தான் எழுதியுள்ளேன்.
தங்களின் புரிதலுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோதரம்,

நிரூபன் said...
Best Blogger Tips

@M.R

நிருபன் நண்பருக்கு

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//

உங்களுக்கும் என் மனம் நிறைந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.s.FR

இண்டைக்கு நண்பர்கள் தினமாம்!நண்பர்களாக இருப்போர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//

ஆமாம் ஐயா. உங்களுக்கும் என் இதயபூர்வமான நண்பர்கள் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.s.FR

காட்டான் said...

என்னையா நிரூபன் இப்பிடி சொல்லுறார்:-

அன்பின்கிற்கினிய உறவுகளே, உங்களின் காத்திரமான கருத்துக்களைப் பின்னூட்டமாகப் பகிர்ந்து என் எழுத்துக்கள் மேம்பட உதவுகள்.

நாங்க போடுற பின்னூட்டம் இவற்ற எழுத்த எப்படி மேம்பட உதவுமையா..!??
இல்ல தெரியாமதான்யா கேட்கிறேன்யா..!!!!???/////கற்றது கை மண்ணளவு,கல்லாதது உலகளவில்லையா?அதனைச் சொல்லுகிறார்!எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருப்பதில்லையே?"அடக்கம்" ஐயா,அடக்கம்!!!//

என் மனதில் நான் நினைத்த விடயத்தைப் பதிலாகச் சொல்லிய உங்களுக்கு ஒரு சல்யூட் ஐயா.

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.s.FR

மைந்தனைக் காணோம்!கண்டு பிடித்துக் கொடுப்போருக்கு,Lyca mobile சிம் காட் இலவசம்!!!//

இன்னைக்கு சண்டே தானே, சனி And ஞாயிறு தினங்களில் ஆள் ஒரு குடையோடு கடற்கரைக்குச் செல்வதாகவும், மீதி நேரங்களில் பேஸ்புக்கில் உட்கார்ந்திருப்பதாகவும் அறிந்தேன், பேஸ்புக்கில் பெரும்பாலான நேரம் இருக்கிறான் என்பது நான் என் பேஸ்புக்கை ஓப்பின் பண்ணும் போது அறிந்து கொண்ட விடயம்.
குடையோடு தனியாகச் செல்கிறாரா- இல்லை வேறு நண்பர்களோடு செல்கிறாரா என்பது தெரியவில்லை.

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.s.FR

மைந்தனைக் காணோம்!கண்டு பிடித்துக் கொடுப்போருக்கு,Lyca mobile சிம் காட் இலவசம்!!!//

ஏன் லைக்கா லைக்கா சிம் உங்கள் நாட்டில் இலவசமாத் தாராங்களோ;-)))

நிரூபன் said...
Best Blogger Tips

@இராஜராஜேஸ்வரி
விதிவிலக்கான தாய்மை..பகிர்வு.

இனிய நண்பர் தின வாழ்த்துக்கள்.//

உங்களின் கருத்துக்களுக்கு நன்றி அம்மா.
உங்களுக்கும் என் உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,

நிரூபன் said...
Best Blogger Tips

@மகேந்திரன்
காமப் பசியால் தீமை செய்திடும்
அற்பப் பதர்களை துண்டு துண்டாக்கிப் போடும்
அரிவாள் கவிதை.
என் மனமுவந்த கைத்தட்டல்கள் சகோ....
உணர்ச்சி மிகுந்த கவிதை.//

உங்களின் பாராட்டுதலுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி அண்ணாச்சி.

நிரூபன் said...
Best Blogger Tips

@யாழினி

நிரூபன் வடித்த கவிதை பார்க்க வந்தால், என் மனது சோகத்தில் ஆழ்ந்து விட்டது!

ஒரு சிசுவின் குமுறலை அழகாக வெளியிட்டுள்ள நிரூபனுக்கு என் வாழ்த்துக்கள் !! நன்றி ...//

தங்களின் கருத்துக்களுக்கும், புரிதலுக்கும் நன்றி சகோதரி.
எம் சமுதாயத்தில் பரவும் ஒரு அழுக்கினைக் கவிதையாக்கினேன். இந்த நிலை மாற வேண்டும் என்பது தான் என் ஆவல்.

J.P Josephine Baba said...
Best Blogger Tips

ஒரு நிமிட சுகத்திற்க்கு என ஒரு வாழ்க்கை முழுதும் துன்புறும் மனித ஜென்மங்கள் அழகாக ஆழமான கருத்துக்களுடன் சொல்லியுள்ளீர்கள்!

நிரூபன் said...
Best Blogger Tips

@புலவர் சா இராமாநுசம்

சகோ! வசனகவிதை என வடித்தாலும்
படிப்போரின் நெஞ்சை விசனமிக
வைத்தீர்!
நீர் சகலகலா வல்லவர்
என்பதை தங்களின் மாறு பட்ட பதிவு
கள் எடுத்துக் காட்டுகின்றன.
மேலும் மேலும் உங்கள்
திறமை வளர வாழ்த்துக்கள்.//

ஐயா...நான் சகலகலா வல்லவன் இல்லை ஐயா,
உங்களின் கவித் திறமை, புலமைக்கு முன்னே நான் சிறு நாற்று ஐயா.
தங்கள் அன்பிற்கும், கருத்துக்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

தங்களின் மேலான

நிரூபன் said...
Best Blogger Tips

@bat
மனதை நெகிழ வைக்கும் கவிதை !!
வெளியிட்டுள்ள நிரூபனுக்கு வாழ்த்துக்கள்//

வாருங்கள் நண்பரே, தங்களின் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@J.P Josephine Baba

ஒரு நிமிட சுகத்திற்க்கு என ஒரு வாழ்க்கை முழுதும் துன்புறும் மனித ஜென்மங்கள் அழகாக ஆழமான கருத்துக்களுடன் சொல்லியுள்ளீர்கள்!//

தங்களின் புரிந்துணர்விற்கும், கருத்துக்களுக்கும் நன்றி சகோதரி.

நிரூபன் said...
Best Blogger Tips

என்னுடைய இப் பதிவிற்கு தற்போது வரை தமிழ் மணத்தில் ஓட்டுப் போட்ட, அன்பு உள்ளங்களின் விபரங்கள் இதோ,

pannikkuttir gokul304 madrasminnal raasalingam venkattan Balaganesan sengoviblog Mathuran007 nekalvukal@gmail.com NANDUnorandu rabbani hemmaa ksvel nirupans aavuraan rathnavel.natarajan@gmail.com

இவர்களில் இப் பதிவிற்கு- இக் கவிதைக்கு காரணம் ஏதுமின்றி மைனஸ் ஓட்டுப் போட்ட அன்பர், வெண்காட்டான் - Venkattan எனும் கணக்கில் போட்டிருக்கிறார்.
மைனஸ் ஓட்டுப் போடும் போது, அதற்கான காரணத்தினைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லிப் போட்டால், பதிவில் திருத்தங்களை மேற்கொள்ளச் சிறப்பாக இருக்குமல்லவா.
சட்டவிரோத கருக்கலைப்பு, திருமணத்திற்கு முன்னர் பாதுகாப்பற்ற உறவின் மூலம் கர்ப்பமாகிக் குழந்தை பெறுதலை மேற்படி நபர் அங்கீகரிக்கிறார் என்றே இவரது மைனஸ் ஓட்டினை அடிப்படையாக வைத்துக் கருத வேண்டியுள்ளது.
நன்றிகள் சகோதரம்.

Anonymous said...
Best Blogger Tips

என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

சுதா SJ said...
Best Blogger Tips

நெத்தியடி கவிதை பாஸ்
பாவப்பட்ட அந்த ஜீவன்களின்
சார்பாக ஒலிக்கும் உங்கள் குரலுக்கு
என் ஆதரவு எப்பவும் உண்டு பாஸ்

Yoga.s.FR said...
Best Blogger Tips

நிரூபன் said...

@Yoga.s.FR

BONNE VACANCE,Kaddaan!Reposer vous bien,avec vos enfants!//

என்னய்யா சொல்லுறீங்க.
போனானேன் வக்கேசன், காட்டான் முதலாலி,
போஸ் அவனே, பொஸ் என்பானே.
இப்படித் தானே சொல்லுறீங்க
இன்னோர் மொழியினைக் கேலி பண்ணுவது அழகல்ல.
ஆனாலும் சும்மா ஒரு காமெடியா எடுங்கோ.
ப்ளீஸ் நோ Angry.////No angry!நான் சொன்னதன் பொருள்:விடுமுறையை பிள்ளைகளுடன் சந்தோஷமாக கொண்டாடுங்கள்,ஓய்வெடுங்கள் என்று.அதற்குக் காட்டான்,மிகவும் நன்றி என்று சொன்னார்!அவ்வளவு தான்!இங்கே,எல்லோருமே பொதுவாக விடுமுறையில் செல்வதை வாழ்த்துவார்கள்.சிலருக்குக் கிட்டாது!அவரவர் நிதி நிலையைப் பொறுத்தது.தவிரவும் சிறுவர்,சிறுமியரை வசதியற்றோர் நகரசபைகள் மூலம் வேறு இடங்களுக்கு அனுப்புவார்கள்.குறிப்பாக,முதியவர்கள்,குழந்தையற்றவர்கள் இலவசமாக தங்கள் வீடுகளுக்கு அழைத்து வைத்துக் கொள்ளும் பழக்கம் உண்டு!அதனால் விடுமுறை இங்கே விரும்பப்படும் நிகழ்வாகி விட்டது!

Yoga.s.FR said...
Best Blogger Tips

நிரூபன் said...

@காட்டான்

merci beaucoup அண்ணாத்த..//

மெர்சி என்றால் நன்றி என்று தெரியும்,
ஓட்டவடை கூட ரெலிபோனில் பேசும் போது அடிக்கடி சொல்லுவான்.
ஆனால் பின்னுக்கு வாற சொல்லான-beaucoup...என்பதற்கான அர்த்தம்..
பேய்க்கப் என்பது தானே;-)))))))))))////அடிங்.......!அது,மெர்சி பொக்கு!அப்படியென்றால்,மெர்சி-நன்றி!பொக்கு-மிகவும்/மிக்க/அதிகம் என்று பொருள்படும்!many thanks!

KANA VARO said...
Best Blogger Tips

பிந்திய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் பாஸ்.

Mahan.Thamesh said...
Best Blogger Tips

இப்போதெல்லாம் வரும் செய்திகள் மிக வேதனையை தருகிறது . தகாத உறவு , கருக்கலைப்பு , துக்கிவீசப்படும் சிசுக்கள் என மோசமான நிலையில் போகிறது; ஏன் இந்த அவல நிலை இவர்களுக்கு ஏன் இந்த காமபசி .
சமூக அவலங்களுக்கா அருமையான கவிதை .

Mahan.Thamesh said...
Best Blogger Tips

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் , காலையில் பதிவினை படித்து கொண்டே வேலைக்கு போனேன்; மிக குழம்பிய நிலையிலே;
இப்போதெல்லாம் நான் கொஞ்சம் வேலையில பிஸி அதால காலம் தாமதித்து தான் வருவேன்; ஆனா வருவம்ல்லா ...

நிரூபன் said...
Best Blogger Tips

@கோகுல் said....
எனைப் போலப் பலர் நாளை பிறக்க முன்னே கருவில் சிதைக்கப்படலாம்- இல்லை பிறந்த பின் தெருவில் அநாதரவாய் வீச நேரிடலாம்,
ஏன் இந்த ஈனச் செயல் இளையோரே?//

இது போன்ற ஈனச்செயல் புரிவோருக்கு சவுக்கடி. சிந்திக்க வேண்டிய பகிர்வு

Yoga.s.FR said...
Best Blogger Tips

நிரூபன் said... Best Blogger Tips [Reply To This Comment]

@Yoga.s.FR

மைந்தனைக் காணோம்!கண்டு பிடித்துக் கொடுப்போருக்கு,Lyca mobile சிம் காட் இலவசம்!!!//

ஏன் லைக்கா லைக்கா சிம் உங்கள் நாட்டில் இலவசமாத் தாராங்களோ;-)))§§§§§§ஓமோம்,இஞ்ச குட்டி யாழ்ப்பாணமெண்டு சொல்லுற லா சப்பல் பகுதியில கூவிக்,கூவி குடுத்தாங்கள்!நான் வாங்கேல்ல!(அதைப் பாவிக்க கைத் தொலைபேசி வேணுமே?)

Yoga.s.FR said...
Best Blogger Tips

124!!!!!!

Yoga.s.FR said...
Best Blogger Tips

Hundred twenty five!!!!!!!!!!!!!!

Yoga.s.FR said...
Best Blogger Tips

நிரூபன் said... Best Blogger Tips [Reply To This Comment]

@Yoga.s.FR

மைந்தனைக் காணோம்!கண்டு பிடித்துக் கொடுப்போருக்கு,Lyca mobile சிம் காட் இலவசம்!!!//

இன்னைக்கு சண்டே தானே, சனி And ஞாயிறு தினங்களில் ஆள் ஒரு குடையோடு கடற்கரைக்குச் செல்வதாகவும், மீதி நேரங்களில் பேஸ்புக்கில் உட்கார்ந்திருப்பதாகவும் அறிந்தேன், பேஸ்புக்கில் பெரும்பாலான நேரம் இருக்கிறான் என்பது நான் என் பேஸ்புக்கை ஓப்பின் பண்ணும் போது அறிந்து கொண்ட விடயம்.
குடையோடு தனியாகச் செல்கிறாரா- இல்லை வேறு "நண்பர்"களோடு செல்கிறாரா என்பது தெரியவில்லை.////ஏதோ "மிதக்காத" வரை நிம்மதி!!!!!!!!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails