Thursday, April 14, 2011

தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!

முன் அறிவிப்பு: இப் பதிவு பிடிக்காதவர்கள் தயவு செய்து இதனைப் படிக்க வேண்டாம். ஒரு ஈழத் தமிழனாக இருந்து, மனம் விட்டு மன்னிப்புக் கேட்டாலும் இந்தச் செயல்களை ஆற்றுப்படுத்த முடியாது என்ற காரணத்தினால் நான் எங்கள் இழி நிலைகளைப் பதிவாக்க முனைகின்றேன். ஈழத் தமிழன் எனும் அடையாளத்துடன் இப் பதிவினை எழுதுவதால், தமிழக உள்ளங்களிடமிருந்து எதிர்ப்பலைகள் கிளம்பலாம், ஆனாலும் பதிவில் நான் என் கருத்துக்கள் எதனையும் முன் வைக்காது, எங்கள் மக்களின் அனுபவ ரீதியான கருத்துக்களை மட்டுமே முன் வைக்கவுள்ளேன்!

றவுகளே, இப் பதிவில் வரும் விடயங்கள் உங்களைக் காயப்படுத்தலாம், இவை தமிழக உறவுகள் மத்தியில் பல முரண்பாடுகளை உருவாக்கலாம். ஆனாலும் இப் பதிவில் வரும் விடயங்கள் உங்கள் மன எண்ணங்களைச் சிதைப்பதற்கானவை அல்ல. உங்களுடன் எங்களின் இழிவான குணங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே! ஈழத் தமிழர்களுக்கு இப்படியும் ஒரு குணம் இருக்கிறது என்பதனை அல்லது ஈழத் தமிழர்களின் மறுபக்கத்தைத் தெரிந்து கொள்வதற்காகவே இப் பதிவு.

ழத் தமிழர்கள் எனும் இனம் புவியியலாளர்களின் கூற்றுப் படி, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் குமரிக் கண்டத்தில் ஏற்பட்ட பாரிய சுனாமித் தாக்கத்தின் காரணமாக இலங்கையில் குடியேறியவர்கள் அல்லது இலங்கைக்கு இடம் பெயர்ந்தவர்கள் என்பதனை யாரும் மறுத்துரைக்கவோ இல்லை மறக்கவோ முடியாது. எங்களின் எச்சங்கள், எங்களின் மரபணுக்கள் யாவும் தென் இந்தியாவிலிருந்தே தோற்றம் பெற்றிருந்தன.(இதனை விளக்கமாக ஈழத்தில் சாதியம்- பிடிக்காதவர்கள் தயவு செய்து படிக்க வேண்டாம் எனும் பதிவில் கூறியிருக்கிறேன்

இலங்கையில் வாழுகின்ற தமிழர் எனும் இனத்தினுள் 

*ஈழத்தில் ஆரம்ப காலம் தொட்டு பூர்வீகமாக வாழும் தமிழர்கள்- இந்தியாவிலிருந்து முதன் முதலாக குடியேறியவர்கள்(தற்போது இலங்கையில் வாழும் தமிழர்கள்- வட கிழக்கு பூர்வீகத் தமிழர்கள்)

*மலையகத் தமிழர்கள்: ஆயிரத்து எண்ணூறுகளின் பிற் பகுதியில் இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களால் அழைத்து வரப் பட்டவர்களை மலையக மக்கள் என்று கூறுவார்கள்.  இவர்களே கொழும்புத் தமிழர் எனவும் அழைக்கப்படுகின்றார்கள்.

*தமிழைத் தாய் மொழியாகப் பேசுகின்ற இஸ்லாமியர்களும் உள்ளடங்குவார்கள். 

ங்களின் கடந்த காலங்களை, எங்களுக்கே உரிய தனித்துவமான எச்சங்களை, வேர்களினை, மூதாதையர்களை(முன்னோர்களை) மறந்து விட்டு, இலங்கைத் தமிழர்களில் பெரும் பாலானவர்கள் தாம் ஏதோ வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவர்கள் போலப் பாசாங்கு செய்வது வருந்தத்தக்க விடயமே. ’’தமிழக உறவுகளே, உங்களோடு சொந்தம் கொண்டாடும் போதும், பழகும் போதும், இந்த விடயங்களை மறைத்துப் பழக என் மனது இடம் கொடுக்க மறுக்கிறது.

இன்று கருணாநிதி எங்களைக் காப்பாற்றத் தவறி விட்டார், சோனிய எங்களுக்கு சொர்க்கத்தை திறந்து விட மறுத்து விட்டார் என சோகராகம் பாடும் நாங்கள் கடந்த காலங்களில் தமிழக உறவுகள் மீதான எங்களின் பார்வைகளினை மறத்தல் அல்லது மறந்து வாழ்தல் எவ் வகையில் நியாயமாகும்? 

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தியேழுகளைத்(1987) தொடர்ந்து தான் இலங்கையின் விடயத்தில் இந்தியா துரோகம் இழைக்கத் தொடங்கியது, இந்தியா எங்களைக் காப்பாற்றவில்லையே, மத்திய அரசு எங்களை மதி கெட்டவர்களாக்கி விட்டது என்று பல்லவி பாடும் நாங்கள் இந்தக் காலங்களிற்கு முன்பதாக இழைத்த குற்றங்களைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும்,

*ஆயிரத்து எண்ணூறுகளின் பின்னர்; இந்தியாவிலிருந்து இலங்கையின் மலை நாட்டிற்கு தேயிலைப் பயிர் செய்கைக்காக கொண்டு வரப்பட்ட மக்களை எவ்வாறு எங்களது ஆதிக்கவாதம் செருக்கு குணம் கொண்ட தமிழர்கள் இன்று வரை அழைக்கிறார்கள் தெரியுமா?

‘தோட்டக்காட்டார் அல்லது தோட்டக்காட்டான். 

வ் இடத்தில் ஒரு கணம் நிற்க. இதே இந்தியாவிலிருந்து கையில் அகப்பட்ட பொருள்களோடு வியாபார நோக்கத்திற்காகத் தானே ஈழத்திற்கு எங்கள் மூதாதையர்கள் வந்து குடியேறி, இலங்கைத் தமிழர் எனும் அடையாளத்தை எம்மிடத்தே தந்து விட்டுச் சென்றார்கள்.  ஓ, நாமெல்லோரும் வரலாறுகளை மறந்து எமக்குப் பின்னே வந்த மலையக உறவுகளை எள்ளி நகை செய்கிறோம், கிண்டலடிக்கிறோம். ஏன் எங்கள் ஊர்களுக்கு அவர்கள் வந்தால்  சரி நிகர் சமனாக உரையாட மறுக்கிறோம், எங்கள் ஊர்களிற்கு வரும் மலைய சகோதர்களில் ஒரு சிலரை குறத்தி, குறவன் எனப் பேசிக் கலைக்கிறோம். இது எங்களின் ஆதிக்க வாதமா? இல்லை ஏனையவரை அடிமை செய்யும் குணத்தின் அடையாளங்களா?

*ந்திய மத்திய அரசு தமிழர்கள் விடயத்தில் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தியேழுகளில் தவறிழைத்தது என்பது நிஜம். அது உண்மை, ஆனால் இந்தியா இதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கூறும் நாங்கள் 
காலாதி காலமாக சொல்லும் பழமொழி என்ன தெரியுமா?
‘’வாடைக் காற்றினை நம்பினாலும் வடக்கத்தையானை நம்பக் கூடாது’
(இலங்கைக்கு வட திசையில் எந்த நாட்டவர் இருக்கிறார் என்பதன் அடிப்படையில் இதனைப் பார்த்தால் நிறையப் பொருள் விளங்கும்)
இந்தப் மொழிக் கிண்டலோடு தானே எம்மூர்களிற்கு வரும் சகோதர்களோடு, எங்களின் சுயத்தை மறந்தவர்களாகப் பழகியிருக்கிறோம்.

ம் வம்சத்தினை, எங்களின் வேர்க் கொடிகளை, தொப்புள் கொடியினரை இழிழு படுத்தும் நாங்கள் எப்படி தமிழகமே எங்களைக் காப்பாற்று எனக் கூக்குரலிட முடியும்?

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தியேழாம் ஆண்டினைத் தொடர்ந்து எமக்கிருந்த இந்திய ஆதரவு சந்தர்ப்ப சூழ் நிலைகளால், அதுவும், இந்திய இராணுவம் இலங்கையில் செய்த சதி, இந்திய மத்திய அரசினது நடவடிக்கைகள், இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா முதலியோரது நடவடிக்கைகளால் சீர் குலைந்தது என்பதை இவ் இடத்தில் நிலை நிறுத்தி ஒரு வினாவினை முன் வைக்கிறேன்.

ந்தக் காலம் முதல் இந்திய அரசிடம் பகிரங்கமாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் மன்னிப்புக் கோரும் வரை(2002ம் ஆண்டு வரை) ‘இந்தியாவின் துணையின்றி தனித்தே வெல்லுவோம்’ எனப் பல்லவி பாடிய நாங்கள் வன்னிப் பகுதி மீதான இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்ட பின்னர் இந்தியா இன்றி ஈழத்தில் ஒரு துரும்பினையும் அசைக்க முடியாது எனக் கூறி கெஞ்சி, மன்றாடியது எவ் வகையில் நியாயமாகும்?

லைஞர் தங்களைக் காப்பாற்றவில்லையே, கருணாநிதி தமிழர்களுக்குத் துரோகம் செய்து விட்டார் எனக் கூறும் நாமெல்லோரும்; இருபத்திரண்டு தமிழ் மந்திரிகளைப் பாராளுமன்றம் அனுப்பியவர்கள் தானே? 
அந்த இருபத்திரண்டு பேரில் யாராவது ஒருவராவது மலையகத் தமிழர்களுக்காக மனம் திறது சுய நலமற்றுப் பேசினார்கள் என்று நிரூபிக்க முடியுமா?  ஆனால் ஈழத் தமிழர்களுக்காக இன்று வரை தன்னால் இயன்ற வரை குரல் கொடுக்கும் மனோ கணேசனை யாவரும் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். 

ழ யுத்தம் தொடங்க முன்பதாக மலையக மக்களின் சம்பள உயர்வு கோரிய போராட்டங்கள், தொழிற்சங்கப் போராட்டங்கள், 1977ம் ஆண்டு போராட்டம் முதலிய பல சம்பவங்கள் இடம் பெறுகையில் ஒரே நாட்டினுள் இருந்தும் கை கட்டி வாய் பொத்தி நின்று வேடிக்கை பார்த்து விட்டு, 
வன்னியில் எங்கள் தலைக்கு மேல் அவலம் வந்த வேளையில் மட்டும் எந்த முகத்தைக் கொண்டு ‘கலைஞர் ஐயா காப்பாற்றுங்கோ’ எனக் கேட்க மனம் வந்தது? 

சமாதான காலத்தில் ஈழத்திற்கு தமிழகத்திலிருந்து வியாபார நோக்கோடு  வந்திருந்த (2002ம் ஆண்டின் பின்னர்) ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை முதலிய பல தமிழக ஊர்களைச் சேர்ந்த புடவை வியாபாரிகளை ‘இவர்கள் இந்திய உளவுத் துறையான ‘ராவின்(Raw) உளவாளிகள்’ எனக் கூறி பட்டப் பகலில் வீதியில் வைத்து அடித்து விரட்டிய நாங்கள் எந்த முகத்தினை வைத்துக் கொண்டு ‘தமிழகமே எங்களை மன்னித்து, மோட்சம் அளி’ எனக் கதற முடியும்?

மேற் கூறப்பட்டுள்ள என் மனக் கருத்துக்களோடும், வினாக்களோடும் இந்த விவாத மேடை உங்களுக்காய் விரிகிறது.
இப் பதிவு தொடர்பான உங்களது கருத்துக்களை, விவாதங்களை, எதிர்க் கருத்துக்களை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். 

டிஸ்கி: ஒரே நாட்டினுள் பல் வேறு பிரிவுகளாகப் பிரிந்து, வேற்றுமைகளோடு வாழும் எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய நல்ல செயல் என்ன தெரியுமா? தமிழனுக்கு என்று ஒரு தனி நாடு கிடைக்கவில்லை. அப்படிக் கிடைத்திருந்தால் அந்தத் தனி நாட்டிலிருந்தே பல சிறிய நாடுகள் வேற்றுமையின் காரணமாக சுதந்திரம் வேண்டிப் போராடத் தொடங்கியிருக்கும். பின்னர் குட்டிக் குட்டித் தமிழ்த் தேசங்கள் தோன்றியிருக்கும். யாருடைய நல்ல செயலோ தெரியவில்லை இப்படியான ஒரு நிலமை தோன்றவில்லை.  

‘’தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டு’’ எனச் சொல்லியவர் இந் நேரம் இருந்திருந்தால்.............???
(மிகுதியை நீங்கள் விரும்பியபடி முடித்துக் கொள்ளுங்கள்)

193 Comments:

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

ஈழத்தின் ஈரம்..?

கல்வெட்டு said...
Best Blogger Tips

.

தமிழர் என்ற இனம் இல்லை. எல்லாம் அதன் உட்கூறுகளான சாதி, மத, வர்க்கம் சார்ந்தே உள்ளது. உட்புறப் வேறுபாடுகளை விட்டுவெளியே வர யாரும் விரும்புவதில்லை.

வடக்கத்தியான், மலைக்காட்டான் போன்ற பதங்கள் எல்லாம் பார்ப்பனீயக் கொழுப்பில் இருக்கும் புண்ணாக்கு வெள்ளாளக்கூட்டத்தின் வெளங்காவெட்டித்தனம். :-((((

***

ஈழம் மட்டும் அல்ல உலகமெங்கும் தமிழன் அவன சாதியைத் துறக்கத் தயாரில்லை. அப்புறம் மதம்.

தமிழன் என்ற ஒரே அடையாளத்தில் மட்டும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள எத்தனைபேர் உள்ளார்கள்? சாதியும் மதமும் இடையில் வந்துவிடும்.

எது தேவை என்பதே தெரிந்தே தேர்ந்தெடுப்பவர்களிடம் பேச ஒன்றும் இல்லை.

**
முதலில் காயம் உள்ளது என்பதை ஒத்துக் கொள்ளவேண்டும். பின்னர்தான் அதற்கான மருந்தைத்தேட முடியும்.

புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் அதே வெள்ளாள செருக்குடன் இருக்கும் மக்களை பார்த்தால் , பாவமாகத்தான் இருக்கிறது அவர்களின் அறியாமையை நினைத்து.


நீங்கள் யாரும் பேசாத்துணியாத ஒரு பொருளை பேசத்துணிந்தமைக்கு பாராட்டுகள்.

**
.

Ram said...
Best Blogger Tips

//மனம் விட்டு மன்னிப்புக் கேட்டாலும் இந்தச் செயல்களை ஆற்றுப்படுத்த முடியாது என்ற காரணத்தினால் நான் எங்கள் இழி நிலைகளைப் பதிவாக்க முனைகின்றேன்.//

பாப்போம்..

Unknown said...
Best Blogger Tips

எல்லாம் மதங்களிலும் சிறு சிறு உட்பிரிவுகள் இருப்பது உண்மைதானே. அவர்களுக்குள் முரண்பாடு இருப்பதும் உண்மை தானே. இதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை சகோ.

தமிழக தமிழர்களை பொறுத்தவரை மலையக தமிழர்கள், மற்றவர்கள் என்றெல்லாம் பிரித்து பார்க்க விரும்ப வில்லை.

Ram said...
Best Blogger Tips

//உறவுகளே, இப் பதிவில் வரும் விடயங்கள் உங்களைக் காயப்படுத்தலாம்,//

எவ்வகையில் என்பதை பார்க்கிறேன்..

நிரூபன் said...
Best Blogger Tips

@இராஜராஜேஸ்வரி

தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டு’’ எனச் சொல்லியவர் இந் நேரம் இருந்திருந்தால்.............???
என்ன சொல்லி காயம் ஆற்றமுடியும்?//

ம்.. காயத்தை ஆற்ற முடியாது என்பது மட்டும் உண்மை சகோதரி.
நன்றிகள்.

Ram said...
Best Blogger Tips

//உங்களுடன் எங்களின் இழிவான குணங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே!//

அதென்ன இழிவான குணம்.??

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

ஈழத்தின் ஈரம்..?//

இன்னும் வற்றாமல் இங்கு வாழும் ஆதிக்க வாத உள்ளங்களின் மனதினுள் சேற்று நீர் போல துர் நாற்றம் வீசிக் கொண்டு தான் இருக்கிறது சகோதரா.

Ram said...
Best Blogger Tips

//இலங்கைக்கு இடம் பெயர்ந்தவர்கள் என்பதனை யாரும் மறுத்துரைக்கவோ இல்லை மறக்கவோ முடியாது.//

கண்டிப்பாக..

Unknown said...
Best Blogger Tips

தமிழக தமிழர்களின் தலைவர்கள் முயற்சித்திருந்தால், ஈழத்தில் தமிழ் மக்களின் வாழ்வு இந்த அளவு சீர்குலைந்திருக்காது என்பது தான் உண்மை. இதற்காக நாங்கள் தான் ஈழத்தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.]

நிரூபன் said...
Best Blogger Tips

@கல்வெட்டு


தமிழர் என்ற இனம் இல்லை. எல்லாம் அதன் உட்கூறுகளான சாதி, மத, வர்க்கம் சார்ந்தே உள்ளது. உட்புறப் வேறுபாடுகளை விட்டுவெளியே வர யாரும் விரும்புவதில்லை.

வடக்கத்தியான், மலைக்காட்டான் போன்ற பதங்கள் எல்லாம் பார்ப்பனீயக் கொழுப்பில் இருக்கும் புண்ணாக்கு வெள்ளாளக்கூட்டத்தின் வெளங்காவெட்டித்தனம். :-((((//


இதே விளங்காத அலது அறியாமையுடன் தான் இன்றும் பலர் வாழ்கிறார்கள் என்பதனை நினைக்கையில் வெறுப்பாகத் தான் இருக்கிறது சகோ.

Ram said...
Best Blogger Tips

//இவர்களே கொழும்புத் தமிழர் எனவும் அழைக்கப்படுகின்றார்கள்.//

ஆம் இவர்களில் எனக்கு ஒரு சில தோழர்கள் இருக்கிறார்கள்..

Ram said...
Best Blogger Tips

//இலங்கைத் தமிழர்களில் பெரும் பாலானவர்கள் தாம் ஏதோ வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவர்கள் போலப் பாசாங்கு செய்வது வருந்தத்தக்க விடயமே. //

இலங்கையில மட்டுமா நடக்குது.. எல்லா இடத்திலும் இப்படி தானே பாஸ்..

நிரூபன் said...
Best Blogger Tips

@கல்வெட்டு


ஈழம் மட்டும் அல்ல உலகமெங்கும் தமிழன் அவன சாதியைத் துறக்கத் தயாரில்லை. அப்புறம் மதம்.

தமிழன் என்ற ஒரே அடையாளத்தில் மட்டும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள எத்தனைபேர் உள்ளார்கள்? சாதியும் மதமும் இடையில் வந்துவிடும்.//

தமிழனின் குணாதிசயங்களை விரிவாகச் சொல்லியிருக்கிறீர்கள் சகோதரம். தமிழன் என்ற ஒரே அடையாளத்தை விட, இப்போது ஆங்கில மோகம் அல்லது வேற்று மொழி கலந்த அடையாளத்தை வெளிப்படுத்தத் தான் பலர் முன் நிற்கிறார்கள்.

Ram said...
Best Blogger Tips

//இந்த விடயங்களை மறைத்துப் பழக என் மனது இடம் கொடுக்க மறுக்கிறது.//

எதையும் மறைக்காமல் பழக வேண்டுமானால் இந்த சமுதாயத்தில் முடியாத ஒன்று.. ஏதாவது ஒன்றை நிச்சயம் மறைப்பீர்கள்..

Ram said...
Best Blogger Tips

//தமிழக உறவுகள் மீதான எங்களின் பார்வைகளினை மறத்தல் அல்லது மறந்து வாழ்தல் எவ் வகையில் நியாயமாகும்? //

அப்படி என்னத்தை மறந்து வாழுறீங்க.?

Ram said...
Best Blogger Tips

//இது எங்களின் ஆதிக்க வாதமா? இல்லை ஏனையவரை அடிமை செய்யும் குணத்தின் அடையாளங்களா?//

இல்லை நண்பரே.!! இது வழக்க வழக்கமாக இருக்கும் தமிழரின் அரும் பெரும் பண்பு. இன்னும் இந்தியாவில் மட்டும் அனைத்தும் ஒழிந்துவிட்டதா என்ன.? இந்தியாவில் மட்டுமா.. ஆஸி, அமெரிக்கா, ஆப்ரிக்கா எல்லா இடத்திலும் இதே நிலைமை தான்..

Ram said...
Best Blogger Tips

//இந்தப் மொழிக் கிண்டலோடு தானே எம்மூர்களிற்கு வரும் சகோதர்களோடு, எங்களின் சுயத்தை மறந்தவர்களாகப் பழகியிருக்கிறோம்.//

அனைவரும் இப்படி தான்.. இதெற்கெல்லாம் மன்னிப்பு கேட்க வேண்டுமானால் நீங்கள் வாழ்க்கை பூரா மன்னிப்பு கேக்கணும்.. நானும் வாழ்க்கை பூரா மன்னிப்பு கேக்கணும்..

Ram said...
Best Blogger Tips

//எம் வம்சத்தினை, எங்களின் வேர்க் கொடிகளை, தொப்புள் கொடியினரை இழிழு படுத்தும் நாங்கள் எப்படி தமிழகமே எங்களைக் காப்பாற்று எனக் கூக்குரலிட முடியும்?//

இதில் இழிவு எங்கிருந்து வந்தது.? இது ஒரு சாதாரண ஆதிக்க பேர்வழி தான்.. வேரொன்றும் இல்லை.. சிகப்பு துண்டானுக்கு உங்கள் மேல் உள்ள அதே தான் உங்களுக்கு அவர்கள் மேல்..

பொ.முருகன் said...
Best Blogger Tips

மனக்காயம் ஒரு நாள் ஆறும்.அப்பொழுது நாம் உயிரோடு இருக்கமாட்டோம்,நம் தலைமுறைகள் இதை நினைவுக்கூறும்.

Ram said...
Best Blogger Tips

இந்த விவாதத்தில் நான் கலந்துகொள்ள விரும்பவில்லை.. எனது சகோக்களுக்காக என் நாட்டின் இழிவுகளை சுட்டிக்காட்ட நேரிடும்.. தனியொரு ஈழம் அமையாதது நல்லது என பேசும் நீங்கள் உங்களது சமீபத்திய கவிதையையும் எடுத்து படிக்கலாம்.. நான் கேவலமானவன் என்னை மதிக்காதீர்கள் என நீங்கள் சொல்கிறீர்கள்.. கேவலமானவனாய் இருந்தாலும் நீ என் உடன்பிறப்பாளன்.. கேலிகளும் கிண்டல்களும் எங்கு தான் இல்லை.. எங்கட நாட்டில் அதிக நாட்டு பற்று கொண்ட சர்தார் மக்களை தான் நாங்கள் இழிவுபடுத்தி குறுஞ்செய்திகள் அனுப்புவோம்.. ஆனால் நாளைக்கே தமிழகத்தில் ஏதாவது அசம்பாவிதம் என்றால் சர்தார்களின் கூட்டம் இங்கே நிரம்ப கூடும்.. எங்களுக்குள்ளே இருக்கும் வேற்றுமை உங்களுக்குள்ளேவும் படர்ந்துள்ளது.. நாங்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை நீ புசிக்க மறுப்பது வருத்தமளிக்கிறது.. இப்படி நீ சொல்வதற்கு என் காலுக்கு அடியில் பொசுங்கிவிடலாம்..(நீ போட்ட இடத்தில் நீங்கள் என மாத்திக்கோங்க..)

Prabu Krishna said...
Best Blogger Tips

என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் எல்லா மக்களுக்குள்ளும் பிரிவு உள்ளது.

உணவு உலகம் said...
Best Blogger Tips

காலம் ஒரு நாள் மாறும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கல்வெட்டு

முதலில் காயம் உள்ளது என்பதை ஒத்துக் கொள்ளவேண்டும். பின்னர்தான் அதற்கான மருந்தைத்தேட முடியும்.

புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் அதே வெள்ளாள செருக்குடன் இருக்கும் மக்களை பார்த்தால் , பாவமாகத்தான் இருக்கிறது அவர்களின் அறியாமையை நினைத்து.//

இவர்கள் மாறவே மாட்டார்கள். பல புலம் பெயர் நண்பர்களோடு இணையத்தின் மூலம் உரையாடும் வாய்ப்புக்கள் கிடைத்தது, அவர்கள் சொல்லியது, ஈழத்தை விட புலம் பெயர் தேசங்களில் தான் சாதிப் பாகுபாடுகள் நிறைந்திருக்கின்றன என்று.


//நீங்கள் யாரும் பேசாத்துணியாத ஒரு பொருளை பேசத்துணிந்தமைக்கு பாராட்டுகள்.//

நீங்கள் பராட்டி விட்டுப் போகிறீர்கள். எதிர்ப்பலைகள் என்ன ரூபத்தில் வருமோ தெரியவில்லையே. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நன்றிகள் சகோதரம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@பாரத்... பாரதி...

எல்லாம் மதங்களிலும் சிறு சிறு உட்பிரிவுகள் இருப்பது உண்மைதானே. அவர்களுக்குள் முரண்பாடு இருப்பதும் உண்மை தானே. இதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை சகோ.

தமிழக தமிழர்களை பொறுத்தவரை மலையக தமிழர்கள், மற்றவர்கள் என்றெல்லாம் பிரித்து பார்க்க விரும்ப வில்லை.//

தமிழகத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்களைப் பிரித்துப் பார்க்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் இலங்கையில் உள்ளவர்கள் மலையகத் தமிழர்களைப் பிரித்துப் பார்க்கிறார்களே? ஏன் இந்தப் பேதம் என்பது தான் என்னுடைய கேள்வி.

நிரூபன் said...
Best Blogger Tips

@பாரத்... பாரதி...


தமிழக தமிழர்களின் தலைவர்கள் முயற்சித்திருந்தால், ஈழத்தில் தமிழ் மக்களின் வாழ்வு இந்த அளவு சீர்குலைந்திருக்காது என்பது தான் உண்மை. இதற்காக நாங்கள் தான் ஈழத்தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.//

ஈழத்து தலைவர்கள் முயற்சித்திருந்தால் சகோதரம், எல்லோரும் ஓரணியாய் நின்று இந்தப் பிரச்சினையினை வேரோடு கிள்ளியெறிந்திருக்கலாம். ஆனால் பேதம், முரண்பாடு இவை காரணமாகத் தானே இன்றைய தமிழனின் வாழ்வு நடுத் தெருவில் நிற்கிறது.

Mathuran said...
Best Blogger Tips

//உங்களுடன் எங்களின் இழிவான குணங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே! ஈழத் தமிழர்களுக்கு இப்படியும் ஒரு குணம் இருக்கிறது என்பதனை அல்லது ஈழத் தமிழர்களின் மறுபக்கத்தைத் தெரிந்து கொள்வதற்காகவே இப் பதிவு.//

நீங்கள் இழிவான குணம் என்று குறிப்பிட்டது எதுவென புரியவில்லை நண்பரே!
சாதியம் என்பது ஈழத்தமிழனுக்கு மட்டும் சொந்தமான ஒன்றல்ல.. அது ஒட்டுமொத்த தமிழினத்தின் சாபக்கேடு.... த‌மிழன் உள்ள இடங்களில் எங்குதான் சாதியம் இல்லை சொல்லுங்கள்

Anonymous said...
Best Blogger Tips

நிரூபன் இப்படியான ஒரு பதிவை யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் என சற்றும் நான் எதிர்ப்பார்க்கவில்லை. நிச்சயம் இதனை எழுதியமைக்கு உங்களது தைரியத்தையும், உண்மையான உள்ளத்துக்கும் பாராட்டுக்கள்.

தனி ஈழம் அமையாதது நன்றா தீதா என எனக்குத் தெரியவில்லை, ஆனால் இலங்கையில் வாழும் தமிழர்கள் அதாவது ஈழத்தமிழர்கள் எனப்படும் இனத்தின் ஒற்றுமையின்மையே முள்ளிவாய்க்காலுக்கான காரணம் எனத் தமிழ்நாட்டில் பலர் அறிந்து இருக்க மாட்டார்கள். இதற்கான அடி ஆணிவேர் அனைத்தும் சாதி என்னும் புற்றுநோயால் பீடிக்கப்பட்டவை. முதலில் யாழ்ப்பாணத்தமிழர்கள் எனப்படும் கூட்டம் ஈழத்தமிழர்களின் கிழக்கு மாநிலத் தமிழர்களையும், நீர்கொழும்புத் தமிழர்களையும், மன்னார்த் தமிழர்களையும் கூட தம்மோடு அரவணைத்துக் கொள்வதில்லை. மற்றொன்று ஈழத்தமிழர்கள் ஒரு போதும் மலையகத் தமிழர்களை அரவணைத்துக் கொள்வதில்லை.

நான் எப்போதும் அவர்களிடம் எழுப்பும் ஒரே கேள்வி --- 1947, 1962, 1971 களில் மில்லியன் கணக்கான மலையகத் தமிழர்களை சிங்கள அரசு வெளியேற்றப் படும் போது ஈழத்தமிழ் மக்கள் ஒரு போராட்டத்தையும் நடத்தவில்லை. ஆனால் ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டிலும், மலையகத்திலும் எத்தனைப் போராட்டங்கள் நடந்துள்ளன ....... இந்நன்றியை மறந்தவராய் ஒரு யாழ்ப்பாணத்தவர் இங்கு தமிழ்நாட்டைப் பற்றி இழிவாகவே என்னிடம் பேசினார். நான் ஆங்கிலத்தில் பேசியதால் அவர் என்னை குஜராத்தி என்று நினைத்தார் போலும், பின்னர் நானும் தமிழ்நாட்டவன் என்று தெரிந்ததும் அந்த இடத்தை விட்டு அகன்றார்.

நான் யாழ்ப்பாணத்தவரிடம் கேட்பது எல்லாம் யாழ்ப்பாணத் தமிழர்களை விடவும் தமிழகத் தமிழர்களும், மலையகத் தமிழர்களும் எவ்வகையில் குறைந்தவர்கள் ???

Anonymous said...
Best Blogger Tips

@ பாரத் பாரதி -

//தமிழக தமிழர்களை பொறுத்தவரை மலையக தமிழர்கள், மற்றவர்கள் என்றெல்லாம் பிரித்து பார்க்க விரும்ப வில்லை.//

இதே மனப்பான்மை யாழ்ப்பாணத் தமிழர் பலரிடமும் நாம் எதிர்ப்பார்ப்பது தவறா???

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்


//இந்தப் மொழிக் கிண்டலோடு தானே எம்மூர்களிற்கு வரும் சகோதர்களோடு, எங்களின் சுயத்தை மறந்தவர்களாகப் பழகியிருக்கிறோம்.//

அனைவரும் இப்படி தான்.. இதெற்கெல்லாம் மன்னிப்பு கேட்க வேண்டுமானால் நீங்கள் வாழ்க்கை பூரா மன்னிப்பு கேக்கணும்.. நானும் வாழ்க்கை பூரா மன்னிப்பு கேக்கணும்..//

சகோ, நீங்கள் பூசி மெழுகிறீர்கள் எனும் உண்மை உங்கள் கருத்துக்களின் பின் புறத்தே பொதிந்திருக்கிறது. எதிர்க் கருத்தும் வேண்டாம், ஆதரவான கருத்துக்களும் வேண்டாம் எனும் நிலையில் இருந்து நடு நிலையுடன் பதில் சொல்லியிருக்கிறீர்கள்.

கண்டிப்பா ஒரு நாள் விவாத மேடையிலை மாட்டுவீங்க. அப்ப வைச்சுக்கிறன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்


/இது எங்களின் ஆதிக்க வாதமா? இல்லை ஏனையவரை அடிமை செய்யும் குணத்தின் அடையாளங்களா?//

இல்லை நண்பரே.!! இது வழக்க வழக்கமாக இருக்கும் தமிழரின் அரும் பெரும் பண்பு. இன்னும் இந்தியாவில் மட்டும் அனைத்தும் ஒழிந்துவிட்டதா என்ன.? இந்தியாவில் மட்டுமா.. ஆஸி, அமெரிக்கா, ஆப்ரிக்கா எல்லா இடத்திலும் இதே நிலைமை தான்..//

சகோ எல்லா இடத்திலும் இதே நிலமை தான். ஆனால் எமது நாட்டில் மட்டும் சொந்த இனத்திற்குள்ளே வேறுபாடுகள் இருக்கின்றனவே. அது ஏன்?

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்


//எம் வம்சத்தினை, எங்களின் வேர்க் கொடிகளை, தொப்புள் கொடியினரை இழிழு படுத்தும் நாங்கள் எப்படி தமிழகமே எங்களைக் காப்பாற்று எனக் கூக்குரலிட முடியும்?//

இதில் இழிவு எங்கிருந்து வந்தது.? இது ஒரு சாதாரண ஆதிக்க பேர்வழி தான்.. வேரொன்றும் இல்லை.. சிகப்பு துண்டானுக்கு உங்கள் மேல் உள்ள அதே தான் உங்களுக்கு அவர்கள் மேல்..//

ஆஹா.. ஆஹா.... எம்மவர்கள் ஒரு வித நையாண்டியுடன் பல மலையக நண்பர்களை பார்த்துப் பேசுவார்களே. அப்போ அதுவும் ஆதிக்கமா?

நிரூபன் said...
Best Blogger Tips

@பொ.முருகன்


மனக்காயம் ஒரு நாள் ஆறும்.அப்பொழுது நாம் உயிரோடு இருக்கமாட்டோம்,நம் தலைமுறைகள் இதை நினைவுக்கூறும்.//

இது உலக யதார்த்தம் சகோ, ஆனால் வாழும் வரை இதே குணங்களோடு தானே வாழ்ந்து தொலைய வேண்டியுள்ளது.

Anonymous said...
Best Blogger Tips

//இல்லை நண்பரே.!! இது வழக்க வழக்கமாக இருக்கும் தமிழரின் அரும் பெரும் பண்பு. இன்னும் இந்தியாவில் மட்டும் அனைத்தும் ஒழிந்துவிட்டதா என்ன.? இந்தியாவில் மட்டுமா.. ஆஸி, அமெரிக்கா, ஆப்ரிக்கா எல்லா இடத்திலும் இதே நிலைமை தான்.. //

@ தம்பி கூர்மதியான் - நிச்சயமாக தமிழ்நாட்டில் சாதி அழிந்துவிடவில்லை. ஆனால் நகர்ப்புறங்களில் வாழும் சென்ற/ இன்றையத் தலைமுறைகளில் சாதி பாகுப்பாடு இல்லாமல் போய்விட்டதை நான் பார்க்கின்றேன். நான் ஒரு போதும் பிற நண்பர்களிடம் நீ என்ன சாதி என்று கேட்டதும் இல்லை, அவர்கள் என்னிடம் நீ என்ன சாதி என்று கேட்டதும் இல்லை. அவர்கள் எங்கள் வீட்டிலும், நான் அவர்கள் வீட்டிலும் பலமுறை உணவருந்து உள்ளோம், உறங்கி உள்ளோம் ஒன்றாக சுற்றித் திரிந்துள்ளோம். இன்னும் சொல்லப் போனால் காதல் மணம் புரியும் இன்றைய சென்னை உட்பட நகர்புற வாலிபர்கள் அனைவரும் தமது சாதியில் மணம் புரிவதில்லை. திருமணங்கள் மூலமாகவே சாதிகள் ஒழியும் என்பது எனதுக் கருத்து. மற்றொரு விடயம் யாழ்ப்பாணத் தமிழர்கள் கனடாவில் சாதிப் பார்த்து பாய் பிரண்டு வை என்று தான் பிள்ளைகளிடம் சொல்லி அனுப்புகின்றார்கள். சென்னையிலேயே சாதி குறைந்து வருகின்றது என்றால் கனடா போன்ற பல்லின மக்கள் வாழும் நகரில் எப்படி சாதி குறைந்திருக்க வேண்டும் அல்லவா.. ஆனால் இங்கு தமிழர்கள் மத்தியில் சாதி குறைந்தப்பாடில்லை.

அவர்களின் சொந்த ஊரில் சாதி குறையவில்லை இன்றால் கல்வியறிவை இல்லை, உலக அறிவு இல்லை, பகுத்தறிவு இல்லை என்றுக் கூறிவிடலாம். ஆனால் மேல்நாடுகளில் வாழும் தமிழர்களிடமே சாதி துளியும் குறையவில்லை என்றால், சாதி சங்கங்களும், சாதி ரீதியான கோயில்களும் வைத்து வாழ்கிறார்கள் - வேறு யார் யாழ்ப்பாணத் தமிழர்கள் தான் ..................... !!!

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்

இந்த விவாதத்தில் நான் கலந்துகொள்ள விரும்பவில்லை.. எனது சகோக்களுக்காக என் நாட்டின் இழிவுகளை சுட்டிக்காட்ட நேரிடும்.. தனியொரு ஈழம் அமையாதது நல்லது என பேசும் நீங்கள் உங்களது சமீபத்திய கவிதையையும் எடுத்து படிக்கலாம்..//

சகோ நான் இங்கே சொல்லவருவது, எம்மிடம் இப்படி வேறுபாடுகள் இருக்கும் போது தனிநாடு ஒன்று எமக்கு கிடைக்கப் பெற்றால் இந் நேரம் அதுவும் பல துண்டுகளாக உடைந்திருக்கும் எனும் அர்த்தத்தில் தான்....

Anonymous said...
Best Blogger Tips

யாழ்ப்பாணத்துத் தமிழன் மற்றவர்களைக் கீழ் சாதியாய்ப் பார்த்தது, இன்னும் மலேசியா போன்ற நாடுகளில் பார்த்துக் கொண்டிருப்பது உண்மை.

தமிழகத்துத் தமிழர்களில் உணர்வாளர்கள் பலர் நொந்து, வெந்து நம்மால் ஆவண செய்ய முடிய வில்லையே என்று ஏங்கித் தவிப்பதும் உண்மை.

ஒரு புது உலகத் தமிழ்ப் பரம்பரை பழைய நாகரீகத்துடன் பெருமையாகத் தமிழ் ஈழம் மலரும், மலர வேண்டும், தமிழருக்குத் தனி நாடு வேண்டும் என்பதில் உறுதியோடு இருக்கும் உலகத் தமிழர் இன்னும் ஏராளம் உண்டு என்பதும் உண்மை.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் அடிமைகளாகத் தான் வாழ்கிறார்கள், புது டில்லி, மற்றும் மற்ற இந்தியர் ஈழப் போராட்டத்தை ஆரிய-திராவிட யுத்தமாகத் தான் பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட தமிழர்கள் வெகு குறைவே.

ஆக மொத்தம் இனி உலகத் தமிழர் ஒன்றிணைந்து, நாடே இல்லாமல் அலைந்த யூத இனத்தையும், நாட்டை இழந்தாலும் ஆண்டு தோரும் கூடி உலக அளவில் வலுவுள்ள சமுதாயமாக வாழும் சிந்திகளையும் பார்த்துப் பாடங் கற்றுக் கொள்வோம். உலகிலே தமிழரின் ஏற்றம் தங்கள் சுய நலத்தைக் குறைத்துப் பொது நலத்தைக் காப்பதில்தான் உள்ளது.

இப்போதே உலகில் உள்ள ஒவ்வொரு தமிழ்க் குடும்பமும் ஈழத்தில் உள்ள ஒரு தமிழ்க்குடும்பத்தை இரண்டு ஆண்டுகள் தத்தெடுத்துக் கொள்வோம். நேரடியாக அவர்களுக்கேப் போய்ச் சேருமாறு உதவி செய்யும் அமைப்புக்கள் உள்ளன.

வெறும் பேச்சு போதும். சிறு துளி பெரு வெள்ளமாகட்டும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்


//நான் கேவலமானவன் என்னை மதிக்காதீர்கள் என நீங்கள் சொல்கிறீர்கள்.. கேவலமானவனாய் இருந்தாலும் நீ என் உடன்பிறப்பாளன்.. கேலிகளும் கிண்டல்களும் எங்கு தான் இல்லை.. எங்கட நாட்டில் அதிக நாட்டு பற்று கொண்ட சர்தார் மக்களை தான் நாங்கள் இழிவுபடுத்தி குறுஞ்செய்திகள் அனுப்புவோம்.. ஆனால் நாளைக்கே தமிழகத்தில் ஏதாவது அசம்பாவிதம் என்றால் சர்தார்களின் கூட்டம் இங்கே நிரம்ப கூடும்.. எங்களுக்குள்ளே இருக்கும் வேற்றுமை உங்களுக்குள்ளேவும் படர்ந்துள்ளது.. நாங்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை நீ புசிக்க மறுப்பது வருத்தமளிக்கிறது.. இப்படி நீ சொல்வதற்கு என் காலுக்கு அடியில் பொசுங்கிவிடலாம்..(நீ போட்ட இடத்தில் நீங்கள் என மாத்திக்கோங்க..//

நான் கேலிகள் கிண்டல்களோடு சொல்லிய இன்னொரு விடயத்தைக் கவனிக்கத் தவறி விட்டீர்களே, மலையக மக்கள் மீதான அடக்கு முறைகளுக்கோ, போராட்டங்களுக்கோ ஏன் உள்ளூரில் இருந்த ஈழத் தமிழர்கள் குரல் கொடுக்கவில்லை எனும் விடயத்தினைத் தான் கேட்டிருந்தேன்.. இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்...

நண்பேண்டா.. நீ.. நீங்கள் எல்லாம் சகஜம் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@பலே பிரபு


என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் எல்லா மக்களுக்குள்ளும் பிரிவு உள்ளது.//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@FOOD


காலம் ஒரு நாள் மாறும்.//

அந்த ஒரு நாள் எப்போது என்று தேடித் தேடியே ஏங்கி விட்டோம் சகோதர்களே..

Ram said...
Best Blogger Tips

இந்த இக்பாலும், நிரூவும் சேந்துகிட்டு வராம இருந்தவன வர வைக்கிறாங்கப்பா.. தோ வர்றேன்..

நிரூபன் said...
Best Blogger Tips

@Mathuran


//உங்களுடன் எங்களின் இழிவான குணங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே! ஈழத் தமிழர்களுக்கு இப்படியும் ஒரு குணம் இருக்கிறது என்பதனை அல்லது ஈழத் தமிழர்களின் மறுபக்கத்தைத் தெரிந்து கொள்வதற்காகவே இப் பதிவு.//

நீங்கள் இழிவான குணம் என்று குறிப்பிட்டது எதுவென புரியவில்லை நண்பரே!
சாதியம் என்பது ஈழத்தமிழனுக்கு மட்டும் சொந்தமான ஒன்றல்ல.. அது ஒட்டுமொத்த தமிழினத்தின் சாபக்கேடு.... த‌மிழன் உள்ள இடங்களில் எங்குதான் சாதியம் இல்லை சொல்லுங்கள்//

பதிவினை மேலோட்டமாகப் படித்திருக்கிறீர்கள் என்பது மட்டும் வெளிப்படையாகத் தெரிகிறது. உள்ளார்ந்தமாக கொஞ்சம் இறங்கிப் பார்த்தால் அந்த இழிவான குணம் எது என்பது தெரிய வரும் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்


நிரூபன் இப்படியான ஒரு பதிவை யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் என சற்றும் நான் எதிர்ப்பார்க்கவில்லை. நிச்சயம் இதனை எழுதியமைக்கு உங்களது தைரியத்தையும், உண்மையான உள்ளத்துக்கும் பாராட்டுக்கள்.//

நன்றிகள் சகோ...

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்


தனி ஈழம் அமையாதது நன்றா தீதா என எனக்குத் தெரியவில்லை, ஆனால் இலங்கையில் வாழும் தமிழர்கள் அதாவது ஈழத்தமிழர்கள் எனப்படும் இனத்தின் ஒற்றுமையின்மையே முள்ளிவாய்க்காலுக்கான காரணம் எனத் தமிழ்நாட்டில் பலர் அறிந்து இருக்க மாட்டார்கள். இதற்கான அடி ஆணிவேர் அனைத்தும் சாதி என்னும் புற்றுநோயால் பீடிக்கப்பட்டவை. முதலில் யாழ்ப்பாணத்தமிழர்கள் எனப்படும் கூட்டம் ஈழத்தமிழர்களின் கிழக்கு மாநிலத் தமிழர்களையும், நீர்கொழும்புத் தமிழர்களையும், மன்னார்த் தமிழர்களையும் கூட தம்மோடு அரவணைத்துக் கொள்வதில்லை. மற்றொன்று ஈழத்தமிழர்கள் ஒரு போதும் மலையகத் தமிழர்களை அரவணைத்துக் கொள்வதில்லை.//

சகோ தம்பி கூர்மதி நான் என் கருத்துக்களுக்கு சகோ இக்பால் செல்வன் அவர்களும் வலுச் சேர்த்திருக்கிறார். தனி நாடு அமைந்திருந்தால் உள் நாட்டுப் போர் இடம் பெற்றிருக்கும் என்பதற்கு இவ் விளக்கங்களே போதுமானவை என்று நினைக்கிறேன்.

Ram said...
Best Blogger Tips

@நிரூ://ஆனால் எமது நாட்டில் மட்டும் சொந்த இனத்திற்குள்ளே வேறுபாடுகள் இருக்கின்றனவே. அது ஏன்?//

எங்கு தான் இல்லை வேறுபாடு.. இங்கேயும் குறவன் குறத்தியர் வேறுபாடு உண்டு.. பிறகென்ன உங்கள் கேள்வி..??? ஆங்.. மலைவாழ் மக்களை ஏச்சும் நாங்கள் எப்படி எங்களுக்கான உரிமைகளைஉரிமையோடு கேட்கலாம் என்பது தானே.!!! இன்றும் நாங்கள் கருணாநிதியை ஏசுகிறேன்.. ஜெ., ஏசுகிறேன்.. ஆனால் நான் என்ன யோக்கியனா.? என்னை ஏமாற்றிவிட்டான் என குறை சொல்லும் நான் பலரை ஏமாற்றிக்கொண்டு தானே இருக்கிறேன்..

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

நான் எப்போதும் அவர்களிடம் எழுப்பும் ஒரே கேள்வி --- 1947, 1962, 1971 களில் மில்லியன் கணக்கான மலையகத் தமிழர்களை சிங்கள அரசு வெளியேற்றப் படும் போது ஈழத்தமிழ் மக்கள் ஒரு போராட்டத்தையும் நடத்தவில்லை. ஆனால் ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டிலும், மலையகத்திலும் எத்தனைப் போராட்டங்கள் நடந்துள்ளன ....... இந்நன்றியை மறந்தவராய் ஒரு யாழ்ப்பாணத்தவர் இங்கு தமிழ்நாட்டைப் பற்றி இழிவாகவே என்னிடம் பேசினார். நான் ஆங்கிலத்தில் பேசியதால் அவர் என்னை குஜராத்தி என்று நினைத்தார் போலும், பின்னர் நானும் தமிழ்நாட்டவன் என்று தெரிந்ததும் அந்த இடத்தை விட்டு அகன்றார்.

நான் யாழ்ப்பாணத்தவரிடம் கேட்பது எல்லாம் யாழ்ப்பாணத் தமிழர்களை விடவும் தமிழகத் தமிழர்களும், மலையகத் தமிழர்களும் எவ்வகையில் குறைந்தவர்கள் ???//

சகோ, இதனைத் தான் நானும் பதிவில் கேட்டிருக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

@ பாரத் பாரதி -

//தமிழக தமிழர்களை பொறுத்தவரை மலையக தமிழர்கள், மற்றவர்கள் என்றெல்லாம் பிரித்து பார்க்க விரும்ப வில்லை.//

இதே மனப்பான்மை யாழ்ப்பாணத் தமிழர் பலரிடமும் நாம் எதிர்ப்பார்ப்பது தவறா???//

வெட்கத்தை விட்டுச் சொன்னால் இதே மனப் பான்மை அல்லது இதே பழக்க வழக்கங்கள் யாழ்ப்பாணத் தமிழர்களிடம் இப்போதும் இருக்கிறது.

Ram said...
Best Blogger Tips

//எம்மவர்கள் ஒரு வித நையாண்டியுடன் பல மலையக நண்பர்களை பார்த்துப் பேசுவார்களே. அப்போ அதுவும் ஆதிக்கமா?//

ஆதிக்கம் தான்.. ஆனால் அடங்கிபோக கூடிய ஆதிக்கம்..

கல்வெட்டு said...
Best Blogger Tips

.

இந்தியா என்ற நாட்டில்கூட டம்மிழனுக்கு
தமிழ்நாடு என்ற ஒரு மாநிலம் உள்ளது ஆனால் அதில் வாழும் டம்மிழர்கள் அடுத்தவன் வாயில் பீய ஊத்தியும், தெருக்களுக்கு இடையில் சுவரைக்கட்டிக் கொண்டும்தான் டம்மிழர்களாக இருக்கிறார்கள். என்ன செய்வது?

பார்ப்பனீயச் சுவர் - உத்தப்புரம்
http://kalvetu.blogspot.com/2008/04/blog-post_22.html

நகர்ப்புறங்களில் சாதி இல்லை என்று சொல்பவர்கள் கிண்டு என்ற ஒரு பேப்பரில் வரும் சாதி வாரி மணமகள் மணமகன் விற்பனை விளம்பரங்களை வாரம்தோறும் கண்டுகளிக்கலாம்.

.

Robin said...
Best Blogger Tips

உண்மையை வெளிப்படையாகச் சொன்ன நீங்கள் உண்மையிலேயே உயர்ந்தவர்தான்.

குடுகுடுப்பை said...
Best Blogger Tips

வடக்கத்தியான், மலைக்காட்டான் போன்ற பதங்கள் எல்லாம் பார்ப்பனீயக் கொழுப்பில் இருக்கும் புண்ணாக்கு வெள்ளாளக்கூட்டத்தின் வெளங்காவெட்டித்தனம். :-((((//

கசப்பான உண்மை.

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்


இந்த இக்பாலும், நிரூவும் சேந்துகிட்டு வராம இருந்தவன வர வைக்கிறாங்கப்பா.. தோ வர்றேன்..//

ஒரே நாட்டினுள் பல் வேறு பிரிவுகளாகப் பிரிந்து, வேற்றுமைகளோடு வாழும் எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய நல்ல செயல் என்ன தெரியுமா? தமிழனுக்கு என்று ஒரு தனி நாடு கிடைக்கவில்லை. அப்படிக் கிடைத்திருந்தால் அந்தத் தனி நாட்டிலிருந்தே பல சிறிய நாடுகள் வேற்றுமையின் காரணமாக சுதந்திரம் வேண்டிப் போராடத் தொடங்கியிருக்கும். பின்னர் குட்டிக் குட்டித் தமிழ்த் தேசங்கள் தோன்றியிருக்கும். யாருடைய நல்ல செயலோ தெரியவில்லை இப்படியான ஒரு நிலமை தோன்றவில்லை. //

சகோ கூர் தனி நாடு வேண்டும் என்று எல்லோரும் ஒரு காலத்தில் ஆசைப்பட்டது என்னவோ உண்மை தான். ஆனால் என் கவிதைகளில் நான் தனி நாடு வேண்டிப் பாடியதில்லை.

வலிமை மிகு இனம் ஒன்றால் ஆளுகைக்கு உட்படுத்தும் இனத்தின் துயரத்தினையும், மக்களின் அவலத்தினையும், கடந்த காலப் போரின் வடுக்களையும் தான் பதிவு செய்திருந்தேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

ஆனால் மேல்நாடுகளில் வாழும் தமிழர்களிடமே சாதி துளியும் குறையவில்லை என்றால், சாதி சங்கங்களும், சாதி ரீதியான கோயில்களும் வைத்து வாழ்கிறார்கள் - வேறு யார் யாழ்ப்பாணத் தமிழர்கள் தான் ..................... !!!//

உண்மையான கருத்துக்கள் சகோ.
சகோ, இந்தச் சாதிச் சங்கக் கோயில்கள் பற்றியும் அவற்றின் திருவிழாக்கள் பற்றியும் எனது ஈழத்தில் சாதியம் இரண்டாம் பாகத்தில் குறிப்பிட்டிருந்தேன், நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@Mathuran


//உங்களுடன் எங்களின் இழிவான குணங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே! ஈழத் தமிழர்களுக்கு இப்படியும் ஒரு குணம் இருக்கிறது என்பதனை அல்லது ஈழத் தமிழர்களின் மறுபக்கத்தைத் தெரிந்து கொள்வதற்காகவே இப் பதிவு.//

நீங்கள் இழிவான குணம் என்று குறிப்பிட்டது எதுவென புரியவில்லை நண்பரே!
சாதியம் என்பது ஈழத்தமிழனுக்கு மட்டும் சொந்தமான ஒன்றல்ல.. அது ஒட்டுமொத்த தமிழினத்தின் சாபக்கேடு.... த‌மிழன் உள்ள இடங்களில் எங்குதான் சாதியம் இல்லை சொல்லுங்கள்//

சகோ, நான் இங்கே சாதியத்தைப் பற்றி அலசியிருக்கிறேனா? இல்லை ஈழத்தவர்களின் பார்வையில் ஏனைய மக்கள் எவ்வாறு நோக்கப்படுகிறார்கள் என்பதனை அலசியிருக்கிறேனா, இப்போது குழம்பித் தெளிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

kuyilnetradio said...
Best Blogger Tips

தேம்படு பனையின் திறழ் பழத்து ஒருவிதை வானுற ஓங்கி வளம்பெற வளரினும் ஒருவர்க்கு இருக்க நிழலகாதே
தெண்ணீர் காயத்து சிறுமீன் சினையிலும் நுண்ணியதே ஆயினும் அண்ணல் யானை அணிதேர் புரவி ஆட்பெரும் படையோடு மன்னருக்கு இருக்க நிழலாகுமே
பெரியோரெல்லாம் பெரியரும் அல்லர் சிரியோரெல்லாம் சிறியரும் அல்லர்

Anonymous said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!
நாம பக்கத்திலே இருக்கிற கிராமத்துகாரனையே மதிக்க மாட்டம் இதில பக்கத்து நாட்டுக்காரர் எம்மாத்திரம்.. இது யாழ்ப்பாணத்தான் மட்டுமல்ல, இது தமிழனின் பரம்பரை குணம்... ஏன் சமீபத்திலே தமிழ் நாட்டிலே தஞ்சமடைந்த ஈழ அகதி பெண்ணை தமிழ் நாட்டு போலீசார் கற்பழிக்க முயன்று அப்பெண் தீயிட்டு தற்கொலை செய்திருந்தாளே... நான் அனைவரையும் சொல்ல வரவில்லை. ஐந்து விரலும் ஒரே மாதிரி இல்லையே. சகோதர மனப்பான்மை உள்ள நல்லவர்களும் உள்ளார்கள்

பாருங்கள் நாம் எம்மை விட கீழ் சாதி என்று கருதுபவர்களை எம் கிராமத்தில் வந்து நிலம் வாங்க விடமாட்டோம் ஆனால் இன்று இலட்சக்கணக்கான தமிழர்களை வெள்ளைகாரன் தம் நாட்டிலே அடைக்கலம் கொடுத்துள்ளான். வெள்ளையனை விட எல்லா விதத்திலும் அரை நூற்றாண்டு பின்தங்கியே நாம் இருக்கிறோம் என்பதற்கு எம் குணம் தான் காரணம். எல்லாம் நாம் செய்த பாவம் தான் நமக்க நடக்குது.. அதாவது நியூட்டனின் மூன்றாம் விதி என்று சொல்லலாம்,

Mathuran said...
Best Blogger Tips

//இன்று கருணாநிதி எங்களைக் காப்பாற்றத் தவறி விட்டார், சோனிய எங்களுக்கு சொர்க்கத்தை திறந்து விட மறுத்து விட்டார் என சோகராகம் பாடும் நாங்கள் கடந்த காலங்களில் தமிழக உறவுகள் மீதான எங்களின் பார்வைகளினை மறத்தல் அல்லது மறந்து வாழ்தல் எவ் வகையில் நியாயமாகும்?

கலைஞர் தங்களைக் காப்பாற்றவில்லையே, கருணாநிதி தமிழர்களுக்குத் துரோகம் செய்து விட்டார் எனக் கூறும் நாமெல்லோரும்; இருபத்திரண்டு தமிழ் மந்திரிகளைப் பாராளுமன்றம் அனுப்பியவர்கள் தானே?
அந்த இருபத்திரண்டு பேரில் யாராவது ஒருவராவது மலையகத் தமிழர்களுக்காக மனம் திறது சுய நலமற்றுப் பேசினார்கள் என்று நிரூபிக்க முடியுமா? ஆனால் ஈழத் தமிழர்களுக்காக இன்று வரை தன்னால் இயன்ற வரை குரல் கொடுக்கும் மனோ கணேசனை யாவரும் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.


ஈழ யுத்தம் தொடங்க முன்பதாக மலையக மக்களின் சம்பள உயர்வு கோரிய போராட்டங்கள், தொழிற்சங்கப் போராட்டங்கள், 1977ம் ஆண்டு போராட்டம் முதலிய பல சம்பவங்கள் இடம் பெறுகையில் ஒரே நாட்டினுள் இருந்தும் கை கட்டி வாய் பொத்தி நின்று வேடிக்கை பார்த்து விட்டு,
வன்னியில் எங்கள் தலைக்கு மேல் அவலம் வந்த வேளையில் மட்டும் எந்த முகத்தைக் கொண்டு ‘கலைஞர் ஐயா காப்பாற்றுங்கோ’ எனக் கேட்க மனம் வந்தது? //

நிரூபன் நீங்கள் ஒரு விடயத்தை புரிந்துகொள்ள வேண்டும், மலையகத்தமிழர்கள் யார்? அவர்களும் இலங்கை குடியுரிமை பெற்ற இலங்கையர்க‌ளே. இந்த பதிவு முழுவதும் மலையகத் தமிழர்கள் ஏதோ இந்தியர்கள் போலல்லவா குறிப்பிட்டுள்ளீர்கள்

யாழ்ப்பாணத்தமிழர்கள் மலையகத்தமிழர்களை அப்படித்தானே பார்க்கிறார்கள் என்று நீங்கள் கூறலாம். ஆனால் யாழ்ப்பாணத்தில் எத்தனை சாதியப் பாகுபாடுகள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியும்தானே?
அவ்வாறுதான் யாழ்ப்பாணத்தவர்கள் மலையகத்தமிழர்களையும் பார்க்கிறார்களேயன்றி வேற்றூ நாட்டவரா பார்க்கவில்லையே

Mathuran said...
Best Blogger Tips

அவ்வாறு பார்க்கப்போனால் நாமும் இந்தியர்தானே

nerkuppai thumbi said...
Best Blogger Tips

இலங்கை தமிழர்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை; ஏற்றத் தாழ்வு உண்டு என்று தெரியும் (பெரும்பாலனவர்க்கு தெரியாது). அதன் பரிமாணங்களை இவ்வளவு தெளிவாக யாரும் சொல்லவில்லை.
பல முறை பின்னூட்டங்களில் எழுதி உள்ளேன்: ஈழத் தமிழர்களுக்கு இலங்கையில் உள்ள பிற தமிழர்களிடையே ஆதரவு இல்லாத நிலையில் அவர்கள் இந்தியாவின் தமிழர்களை குறை சொல்வது சரியா? நெடுமாறன்களும், சீமான்களும், வைகோகளும் இது குறித்து தெளிவாக அறிந்து அவர்களுக்குளே ஒற்றுமையை ஏற்படுத்த எந்த வித முயற்சியையும் செய்யவில்லை. ஈழத் தமிழர்கள் என்பதும் இலங்கை தமிழர்கள் என்பதும் ஒன்றல்ல என்று சோ போன்றோர் சொன்னால் நாம் சீரணித் துக்கொள்வது இல்லை.
இரண்டு: அவர்களுக்கு நடுவே உள்ள சாதி வேறுபாடுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இங்கு தான் பார்ப்பனர்கள் கெடுத்தார்கள் என்று ஓயாமல் கத்துகிறோம். குமரிக்காண்டம் இருந்தபோது பார்ப்பனர்கள் இங்கு வரவே இல்லையே; அப்புறம் சாதி எங்கிருந்து வந்தது?
தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்ற உண்மையை ஒத்துக்கொள்வதற்கு பார்ப்பனர்களை இழுக்காதீர்கள்.

Mathuran said...
Best Blogger Tips

//சமாதான காலத்தில் ஈழத்திற்கு தமிழகத்திலிருந்து வியாபார நோக்கோடு வந்திருந்த (2002ம் ஆண்டின் பின்னர்) ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை முதலிய பல தமிழக ஊர்களைச் சேர்ந்த புடவை வியாபாரிகளை ‘இவர்கள் இந்திய உளவுத் துறையான ‘ராவின்(Raw) உளவாளிகள்’ எனக் கூறி பட்டப் பகலில் வீதியில் வைத்து அடித்து விரட்டிய நாங்கள் எந்த முகத்தினை வைத்துக் கொண்டு ‘தமிழகமே எங்களை மன்னித்து, மோட்சம் அளி’ எனக் கதற முடியும்?//


இவ்விடத்தில் உங்களுக்கு அக்காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தெரியவில்லை என்று நினைக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்


@நிரூ://ஆனால் எமது நாட்டில் மட்டும் சொந்த இனத்திற்குள்ளே வேறுபாடுகள் இருக்கின்றனவே. அது ஏன்?//

எங்கு தான் இல்லை வேறுபாடு.. இங்கேயும் குறவன் குறத்தியர் வேறுபாடு உண்டு.. பிறகென்ன உங்கள் கேள்வி..??? ஆங்.. மலைவாழ் மக்களை ஏச்சும் நாங்கள் எப்படி எங்களுக்கான உரிமைகளைஉரிமையோடு கேட்கலாம் என்பது தானே.!!! இன்றும் நாங்கள் கருணாநிதியை ஏசுகிறேன்.. ஜெ., ஏசுகிறேன்.. ஆனால் நான் என்ன யோக்கியனா.? என்னை ஏமாற்றிவிட்டான் என குறை சொல்லும் நான் பலரை ஏமாற்றிக்கொண்டு தானே இருக்கிறேன்..//

சகோ இந்த வேற்றுமைகள் இயல்பான விடயங்கள் என்று விட்டு விடலாம். ஆனால் ஒரே நாட்டிலுன்ள் துன்பங்கள் நடக்கும் போது மட்டும் பேசாது மௌனித்து தம் வேலையினை மட்டும் பார்த்திருப்பது எவ்வகையினைச் சாரும்?

Mathuran said...
Best Blogger Tips

நிரூபன் என் மனதில் தோன்றியதை கூறினேன்.. பிழையிருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்.......

நிரூபன் said...
Best Blogger Tips

@Robin

உண்மையை வெளிப்படையாகச் சொன்ன நீங்கள் உண்மையிலேயே உயர்ந்தவர்தான்.//

இதில் உள் கூத்து ஏதும் இல்லையே சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@kuyilnetradio

தேம்படு பனையின் திறழ் பழத்து ஒருவிதை வானுற ஓங்கி வளம்பெற வளரினும் ஒருவர்க்கு இருக்க நிழலகாதே
தெண்ணீர் காயத்து சிறுமீன் சினையிலும் நுண்ணியதே ஆயினும் அண்ணல் யானை அணிதேர் புரவி ஆட்பெரும் படையோடு மன்னருக்கு இருக்க நிழலாகுமே
பெரியோரெல்லாம் பெரியரும் அல்லர் சிரியோரெல்லாம் சிறியரும் அல்லர்//

சகோ நீங்கள் தொழிலின் அடிப்படையில் மக்கள் பாகுபாடு இருந்தாலும் எல்லோரும் மக்களே, அவர்களில் பெரியவரும் இல்லை, சிறியவரும் இல்லை என்பதனை மட்டும் உதாரணப்படுத்தும் இலக்கியப் பாடலினைப் பகிர்ந்திருக்கிறீர்கள்.

ஆனால் எல்லோரும் மக்களே எனும் நிலை இனி எக்காலத்தில் உருவாகும் என்பது தான் என் கேள்வி?

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.
வணக்கம் நிரூபன்!
நாம பக்கத்திலே இருக்கிற கிராமத்துகாரனையே மதிக்க மாட்டம் இதில பக்கத்து நாட்டுக்காரர் எம்மாத்திரம்.. இது யாழ்ப்பாணத்தான் மட்டுமல்ல, இது தமிழனின் பரம்பரை குணம்... ஏன் சமீபத்திலே தமிழ் நாட்டிலே தஞ்சமடைந்த ஈழ அகதி பெண்ணை தமிழ் நாட்டு போலீசார் கற்பழிக்க முயன்று அப்பெண் தீயிட்டு தற்கொலை செய்திருந்தாளே... நான் அனைவரையும் சொல்ல வரவில்லை. ஐந்து விரலும் ஒரே மாதிரி இல்லையே. சகோதர மனப்பான்மை உள்ள நல்லவர்களும் உள்ளார்கள்

பாருங்கள் நாம் எம்மை விட கீழ் சாதி என்று கருதுபவர்களை எம் கிராமத்தில் வந்து நிலம் வாங்க விடமாட்டோம் ஆனால் இன்று இலட்சக்கணக்கான தமிழர்களை வெள்ளைகாரன் தம் நாட்டிலே அடைக்கலம் கொடுத்துள்ளான். வெள்ளையனை விட எல்லா விதத்திலும் அரை நூற்றாண்டு பின்தங்கியே நாம் இருக்கிறோம் என்பதற்கு எம் குணம் தான் காரணம். எல்லாம் நாம் செய்த பாவம் தான் நமக்க நடக்குது.. அதாவது நியூட்டனின் மூன்றாம் விதி என்று சொல்லலாம்,//


சகோ அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். கடந்த சில நாட்களாக உங்களைக் காணவில்லை.. ஆனாலும் அருமையான காத்திரமான கருத்துக்களோடு வந்திருக்கிறீர்கள் சகோ. நன்றிகள்.

யோகா.எஸ் said...
Best Blogger Tips

செருப்படி!ஆனால் மலை நாட்டுத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க எவருமில்லை,இருக்கவில்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல!தந்தை செல்வா,ஜி.ஜி போன்றவர்கள் அக்காலத்தில் மலையகத் தமிழர்களுக்காகவும் (வாக்குகளுக்காகவேனும்)போராடினார்கள்!மலையகத்தில் தொண்டமான் போன்ற தலைவர்கள் உருவாக ஆரம்பித்த பின்னர் தொய்வு நிலை ஏற்பட்டது உண்மை தான்.இப்போது எல்லாமே"தலைகீழ்"!

நிரூபன் said...
Best Blogger Tips

@Mathuran


நிரூபன் நீங்கள் ஒரு விடயத்தை புரிந்துகொள்ள வேண்டும், மலையகத்தமிழர்கள் யார்? அவர்களும் இலங்கை குடியுரிமை பெற்ற இலங்கையர்க‌ளே. இந்த பதிவு முழுவதும் மலையகத் தமிழர்கள் ஏதோ இந்தியர்கள் போலல்லவா குறிப்பிட்டுள்ளீர்கள்//

ஆஹா.. ஆஹா.......பதிவின் இரண்டாவது பந்தியின் இறுதி வரியில் என்ன சொல்லியிருக்கிறேன் என்பதனைக் கவனிக்கத் தவறி விட்டீர்களே சகோ..

//ஆனாலும் பதிவில் நான் என் கருத்துக்கள் எதனையும் முன் வைக்காது, எங்கள் மக்களின் அனுபவ ரீதியான கருத்துக்களை மட்டுமே முன் வைக்கவுள்ளேன்!///

சகோ இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களின் பிரிவுகளை நான்காவது பந்தியில் சுட்டியுள்ளேன். இந்தப் பதிவில் ஈழத் தமிழர்களின் பார்வையில் என்றாவது ஒரு நாள் மலையகத் தமிழர்களையும் தம் உடன் பிறந்த இலங்கைக் குடியுரிமை பெற்ற தமிழர்களாக நடாத்தினார்களா?????????????????????????????????????????????????????????????????????????????எனும் கேள்வியோடு தான் என் விவாதத்தினை முன் வைத்திருந்தேன். எம்மவர்கள் பார்வையில் மலையகத் தமிழர்களை எவ்வாறு நோக்குவார்கள் என்பதனைச் சொன்னால் நானும் அப்படித் தான் கூறுகிறேன் என்று ஒரு பிழை கண்டு பிடிப்பு வேறு...
இது சீரியஸ் பதிவு சகோ...........................
என்னுள் ஓடுவதும் சுத்தமான யாழ்ப்பாண, வன்னி கலப்பு இரத்தம் தானே.........ஒரு வேளை உங்களுக்கு இது மாறிப் பொருள் விளங்கியிருக்கலாம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Mathuran


யாழ்ப்பாணத்தமிழர்கள் மலையகத்தமிழர்களை அப்படித்தானே பார்க்கிறார்கள் என்று நீங்கள் கூறலாம். ஆனால் யாழ்ப்பாணத்தில் எத்தனை சாதியப் பாகுபாடுகள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியும்தானே?
அவ்வாறுதான் யாழ்ப்பாணத்தவர்கள் மலையகத்தமிழர்களையும் பார்க்கிறார்களேயன்றி வேற்றூ நாட்டவரா பார்க்கவில்லையே//

என் அன்புத் தம்பி, உங்களுக்குப் புரியும் படி சொல்ல நான் இனி சிறுவனாக மாற வேண்டும் போல இருக்கே;-))

சகோதரம்.
யாழ்ப்பாணத்தவரையோ, அல்லது வட கிழக்குத் தமிழர்களையோ அவர்களிடத்தே பொதிந்திருக்கும் மறைக்க முடியாத உண்மையினைக் கூறி விட்டேன் என்பதற்காக நீங்கள் இப்படிப் பூசி மெழுகும் விதமாக சமாளித்து, யாழ்ப்பாணத் தமிழர்கள் தமக்கிருக்கும் சாதி வேறு பாட்டினைப் போலத் தான் மலையகத்தவர்களையும் பார்க்கிறார்கள் என்று கூறுகிறீர்கள்.


அப்போ இந்திய வம்சாவழி மக்களுக்காக எம்மவர்கள் ஏதாவது புடுங்கியிருக்காலாம் தானே? என்ன செய்தார்கள்? இதற்கு உங்கள் பதில் என்ன சகோ.
‘’பீக் குண்டிக் கையைப் பின்னாலை மறைச்சுக் கொண்டு மற்றைய கையாலை சாப்பாடு போட்டாலும் மணம் கண்டிப்பாக தெரியுமாம்’ அது போலத் தான் எம்மவரின் இழிவான செயல்களும்...!

வேற்று நாட்டவராகப் பார்க்கும் பண்பு இன்றும் தமிழர்களிடம் இருக்கிறது. அப்படி இல்லை என்றால் ஏன் அவர்கள் மலையக உறவுகளைப் பார்த்து வடக்குகள், பரம் பரைக் குணத்தை மாற்ற ஏலாது........எனப் பலவாறாகக் பேச வேண்டும்?
இன்னும் நிறையச் சொல்லலாம், எரிமலையினைப் பற்ற வைக்கும் செயற்பாட்டில் நான் ஈடுபடுவதாக யாராவது வீட்டிற்கே வந்திடுவாங்கள்...

நிரூபன் said...
Best Blogger Tips

@Mathuran


அவ்வாறு பார்க்கப்போனால் நாமும் இந்தியர்தானே//

ம்............உங்களைக் கையெடுத்துக் கும்பிடுறேன்.....முடியலை சாமியோ.......
ப்ளீஸ்..ப்ளீஸ் எனக்காக ஒரே ஒரு தடவை இந்தப் பதிவினைப் போய் படித்து விட்டு வருக..
இதையெல்லாம் நான் பதிவிலை சொல்லியிருக்கிறேன் சகோ.....


இது உங்களுக்காக மீண்டும் என் இதே பதிவிலிருந்து.//
ஈழத் தமிழர்கள் எனும் இனம் புவியியலாளர்களின் கூற்றுப் படி, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் குமரிக் கண்டத்தில் ஏற்பட்ட பாரிய சுனாமித் தாக்கத்தின் காரணமாக இலங்கையில் குடியேறியவர்கள் அல்லது இலங்கைக்கு இடம் பெயர்ந்தவர்கள் என்பதனை யாரும் மறுத்துரைக்கவோ இல்லை மறக்கவோ முடியாது. எங்களின் எச்சங்கள், எங்களின் மரபணுக்கள் யாவும் தென் இந்தியாவிலிருந்தே தோற்றம் பெற்றிருந்தன.(இதனை விளக்கமாக ஈழத்தில் சாதியம்- பிடிக்காதவர்கள் தயவு செய்து படிக்க வேண்டாம் எனும் பதிவில் கூறியிருக்கிறேன்)

இலங்கையில் வாழுகின்ற தமிழர் எனும் இனத்தினுள்

*ஈழத்தில் ஆரம்ப காலம் தொட்டு பூர்வீகமாக வாழும் தமிழர்கள்- இந்தியாவிலிருந்து முதன் முதலாக குடியேறியவர்கள்(தற்போது இலங்கையில் வாழும் தமிழர்கள்- வட கிழக்கு பூர்வீகத் தமிழர்கள்)

*மலையகத் தமிழர்கள்: ஆயிரத்து எண்ணூறுகளின் பிற் பகுதியில் இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களால் அழைத்து வரப் பட்டவர்களை மலையக மக்கள் என்று கூறுவார்கள். இவர்களே கொழும்புத் தமிழர் எனவும் அழைக்கப்படுகின்றார்கள்.

*தமிழைத் தாய் மொழியாகப் பேசுகின்ற இஸ்லாமியர்களும் உள்ளடங்குவார்கள். //

நிரூபன் said...
Best Blogger Tips

@nerkuppai thumbi

இலங்கை தமிழர்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை; ஏற்றத் தாழ்வு உண்டு என்று தெரியும் (பெரும்பாலனவர்க்கு தெரியாது). அதன் பரிமாணங்களை இவ்வளவு தெளிவாக யாரும் சொல்லவில்லை.
பல முறை பின்னூட்டங்களில் எழுதி உள்ளேன்: ஈழத் தமிழர்களுக்கு இலங்கையில் உள்ள பிற தமிழர்களிடையே ஆதரவு இல்லாத நிலையில் அவர்கள் இந்தியாவின் தமிழர்களை குறை சொல்வது சரியா? நெடுமாறன்களும், சீமான்களும், வைகோகளும் இது குறித்து தெளிவாக அறிந்து அவர்களுக்குளே ஒற்றுமையை ஏற்படுத்த எந்த வித முயற்சியையும் செய்யவில்லை. ஈழத் தமிழர்கள் என்பதும் இலங்கை தமிழர்கள் என்பதும் ஒன்றல்ல என்று சோ போன்றோர் சொன்னால் நாம் சீரணித் துக்கொள்வது இல்லை.
இரண்டு: அவர்களுக்கு நடுவே உள்ள சாதி வேறுபாடுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இங்கு தான் பார்ப்பனர்கள் கெடுத்தார்கள் என்று ஓயாமல் கத்துகிறோம். குமரிக்காண்டம் இருந்தபோது பார்ப்பனர்கள் இங்கு வரவே இல்லையே; அப்புறம் சாதி எங்கிருந்து வந்தது?
தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்ற உண்மையை ஒத்துக்கொள்வதற்கு பார்ப்பனர்களை இழுக்காதீர்கள்.//

உங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றிகள் சகோ.
நான் இங்கே பார்ப்பனர்களை எல்லாம் இழுத்துப் பேசலையே.....

நிரூபன் said...
Best Blogger Tips

@Mathuran

நிரூபன் என் மனதில் தோன்றியதை கூறினேன்.. பிழையிருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்......//

கருத்துக்களால் கருத்துக்களை வெல்லுவதற்கு மன்னிப்பு எதற்குச் சகோ... என் பதிவுகளில் நான் வாதப் பிரதி வாதங்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறேன். உங்கள் கருத்துக்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கும். ஆதலால் தான் பின்னூட்டப் பெட்டியினைத் திறந்து வைத்துள்ளேன் சகோ.

நன்றிகள் சகோதரம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@யோகா.எஸ்


செருப்படி!ஆனால் மலை நாட்டுத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க எவருமில்லை,இருக்கவில்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல!தந்தை செல்வா,ஜி.ஜி போன்றவர்கள் அக்காலத்தில் மலையகத் தமிழர்களுக்காகவும் (வாக்குகளுக்காகவேனும்)போராடினார்கள்!மலையகத்தில் தொண்டமான் போன்ற தலைவர்கள் உருவாக ஆரம்பித்த பின்னர் தொய்வு நிலை ஏற்பட்டது உண்மை தான்.இப்போது எல்லாமே"தலைகீழ்"!//

வணக்கம் சகோதரம், நலமா? இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இலங்கைத் தமிழர்களுக்காக வாக்குகளையோ அல்லது தம் எதிர்கால நலனையோ கருத்திற் கொண்டு குரல் கொடுத்துவரும் வைகோ,....முதலிய தமிழகத் தலைவர்களைப் போன்று தான் எம்மவர்களான ஜி.ஜி மற்றும் தந்தை செல்வா முதலியோரும்... பிரதி உபகாரத்தை மட்டுமே எதிர்பார்த்துக் குரல் கொடுத்திருந்தார்கள்.

நான் கேட்பது உணர்வு பூர்வமாக யாராவது குரல் கொடுத்திருக்கிறார்களா என்பதனைத் தான் சகோ?

bsatheeshme said...
Best Blogger Tips

உன் நாட்டுக்காரனை எதிர்க்க முடியாமல், அகதியாக ஓடி வந்துவிட்டு ..."ஈழ விடுதலைக்கு இந்தியா உதவி செய்யவில்லை" என்று சொல்லாதே!!!!!!
ஈழ தமிழர் உரிமைக்காக நூறு பேரு சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து பாரு... உலகமே உன்னை திரும்பி பார்க்கும்.....

ஆனந்தி.. said...
Best Blogger Tips

நிரூபன்...இந்த பதிவில் நிறைய தெரிஞ்சுகிட்டேன்...ம்ம்...ஒரே ஒரு விஷயம்...இங்கே தமிழ்நாட்டிலும் சாதி வெறியில் நிறைய அக்கிரமங்கள் நடக்குது....அது ஒரு கசப்பான உண்மை என்றாலும்...இங்கே உத்தபுரத்தில் நடக்கும் சாதி கலவரத்திலோ...இல்லை எங்க தமிழ்நாட்டு மீனவர் விஷயத்திலோ ...எங்கள் வருத்தங்களை கிளர்ச்சிகளாய் உருமாற்றும் இயலாமை எங்களுக்கு கம்மி தான்.....நீங்கள் உங்கள் சார்ந்த நிலைமைகளை தைரியமா பேசுறிங்க...ஒரு வேளை அத்துணை (சாதி) தமிழனும் ஒன்று கூடி இருந்தால் இந்த உயிர் சேதமும் தடுக்கப்பட்டு இருக்கலாம்..உணர்ச்சி வசத்தில் சில தலைவர்கள் எடுத்த முடிவுகளும்...புரட்டி போடப்பட்டு...தெளிவான பல விடைகள் கிடைத்திருக்கலாம்...ம்ம்...உங்கள் திசை...உங்கள் பயணங்கள் எல்லாமே மாற்ற பட்டு இருக்கலாம்...ம்ம்....எனக்கு பிடிச்சது நிருபன் உங்க பதிவு ..மற்றும் உங்கள் எண்ணங்கள்...

Anonymous said...
Best Blogger Tips

யாழ்ப்பாணத் தமிழர்கள் எனப்படுவோர் முதலில் தமது இந்திய வேரினை ஒத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது பிற ஈழத்தமிழர்களான கிழக்கு மாநிலத்தவர், நீர்கொழும்புத் தமிழர், மன்னார்ப் பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள் இவர்கள் அனைவரையும் ஒன்றினைத்து தாம் இலங்கைத் தமிழர் என்று ஒன்றுப்பட வேண்டும்.

மூன்று இந்தியாவில் இருக்கும் தமிழர்களை உதவி வேண்டும் போது மட்டும் உறவுகளே என அழைப்பதையும், உதவிகள் கிட்டிய பின்னரும், அல்லது மறைமுகத்தில் வடக்கார் என இழிவாகப் பேசுவதையும் தவிர்க்க வேண்டும்.

நான்காவது அனைத்து இலங்கைத் தமிழர்களும் மண முறையில் கலந்து விட முயற்சிக்க வேண்டும். ஒரு யாழ்ப்பாணத்தவர் போய் மட்டக்களப்பில் பெண் எடுங்கள். மட்டகளப்பில் இருப்பவர் மலையகத்தில் பெண் எடுங்கள். நாம் தமிழர் என்பதை அரசியலில் மட்டுமில்லாமல் வாழ்வியலில் செய்துக் காட்டுங்கள்.

நிரூபன் சொல்ல முயன்றது இதைத் தான். இந்தியத் தமிழர்களும், தலைவர்களும் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டார்கள் எனக் கூறுவதை விடவும். தமக்குள் இருக்கும் முதலில் அழுக்குகளைத் துடைக்க முன்வாருங்கள். சமூக மாற்றத்துக்கு வித்திடுங்கள். இது நடந்தாலே ஈழத்தமிழரின் உரிமைகளை சிங்களவரிடம் இருந்து பெற்றுக் கொள்ள அது அடித்தளம் அமைக்கும் என்கின்றார்.
இதனை பல ஈழத்தமிழர்களால ஜீரணிக்க முடியாது. பல இந்தியத் தமிழர்களால் புரிந்துக் கொள்ள்வே முடியாது.

நிரூபன் ஈழத்தில் இருந்து இப்படியான புரட்சிக் கர சிந்தனைகள் வரத் தொடங்கி இருப்பது நம்பிக்கைத் தருகின்றது. இன்றில்லாவிட்டாலும், அடுத்த தலைமுறை தழைத்தோங்க உம்மைப் போன்றோரின் எண்ணங்கள் நனவாக வாழ்த்துக்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சதீஷ் குமார்

உன் நாட்டுக்காரனை எதிர்க்க முடியாமல், அகதியாக ஓடி வந்துவிட்டு ..."ஈழ விடுதலைக்கு இந்தியா உதவி செய்யவில்லை" என்று சொல்லாதே!!!!!!
ஈழ தமிழர் உரிமைக்காக நூறு பேரு சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து பாரு... உலகமே உன்னை திரும்பி பார்க்கும்.....//

சகோதரம், ஈழ விடுதலைக்கு இந்தியாவின் பங்களிப்பு பற்றியோ, இல்லை ஈழத் தமிழர்களின் அகதி அந்தஸ்துகள் பற்றியோ நான் இப் பத்வில் ஆரயவில்லை... பதிவினை முழுமையாக படித்த பின்னர் உங்கள் கருத்துக்களைத் தந்தால் அழகாக இருக்கும் சகோ. நன்றிகள் சகோதரம்.

Anonymous said...
Best Blogger Tips

தமிழ்நாட்டில் சாதி ஒழிந்துவிடவில்லை, சாதிகள் இன்னமும் இருக்கின்றன. சாதி சங்கங்களும் இருக்கின்றன. கலப்பு மணங்களும், மனமாற்றமும், சமூக மாற்றமும் தமிழகத்தில் ஜீரோ என்பதில் இருந்து ஒன்றுக்கு வந்துவிட்டது. ஆனால் இலங்கையில் இன்னும் ஜீரோவில் தான் இருக்கின்றது. ஒன்றுக்கு வந்துவிட்டதால் நாம் ஒன்றும் உன்னத நிலையை அடையவில்லை நாம் பத்துக்கு போகும் வரை போராட தலைப்படுவோம். அதற்காக இங்குள்ள தலைவர்கள் கடுமையாக உழைத்துள்ளார்கள். அம்பேத்கார், பெரியார் தொடங்கி பல தலைவர்கள் சமூக விடுதலைக்குப் பாடுபட்டுள்ளார்கள். கலப்பு மணத்தை சட்டமாக சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அந்தஸ்து வாங்கிக் கொடுத்தார்கள். இவ்வளவு செய்தும் நாம் அடுத்தக் கட்டத்துக்கு நகர முடியாமல் இருக்கின்றோம். இன்றளவும் சமூக விடுதலையை ஏற்றுக் கொள்வோர் பலர் தமிழகத்தில் இருக்கத் தான் செய்கிறார்கள். பலரும் இந்நிலையை அடைய முற்படுவார்கள்.

ஆனால் ஈழத்தில் தலைவர்களோ, சமூகப் போராளிகளோ மிகவும் குறைவானவர்கள் என்பதால் அங்கு சமூக மாற்றத்தை ஏற்படுத்த பல இளைஞர்கள் முன்வர வேண்டும். ஈழத்திலும் பெரியாரும், அம்பேத்கார் போன்றோரும் உதிப்பார்கள். அப்படியான ஒரு மாற்றத்தைக் கொண்டு வர அங்குள்ள தமிழர்கள் தயாராக தலைப்படுதல் அவசியம். பார்ப்போம் நிரூபன் போன்றோரின் எழுத்துக்களில் அதற்கான அச்சாணி தெரிகின்றது. சாதியம் தெறித்து ஓடும் காலம் வெகு தொலைவில் இல்லை என நினைக்கிறேன்.

யோகா.எஸ் said...
Best Blogger Tips

நீங்கள் இணையத்தில் உலாவுபவர்.உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.உலகப் பொருளாதாரம் பரந்திருக்கிறதோ இல்லையோ,உலகமெங்கணும் இருபத்தியோராம் நூற்றாண்டில் ஒவ்வொரு நாட்டிலும் நூற்றுக்கும் மேற்பட்ட இனங்கள் கலந்து வாழ்கின்றன!ஓட்டு அரசியல் எங்குமே உண்டு!அதிலும் குழப்பத்தை உருவாக்குவோரே குழப்பத்தை தீர்த்து வைப்பது போல் நாடகமாடுவது கொடுமை!குளிர் காய்வதற்கென்றே அலைகிறார்கள்.இது இலங்கைக்கும் பொருந்தும்.பிரித்து ஆள்வது ஒரு வகை அரசியலே!என்னமோ ஈழத்தமிழர்களில் மட்டும் தான் இந்த சாதி,மத பேதங்கள் என்றில்லை.உலகெங்கிலும் உண்டு!இப்போது கூட பரபரப்பான துடுப்பாட்டப் போட்டியின் பின்னர்,இரண்டாம் இடம் பெற்ற அணியின் வீரர்கள் விலகிய பின்னர்,உங்களுக்குத் தெரியும்:அணித் தலைமைக்கு தகுதி இருந்தும் கூட,"எதனாலோ"வாய்ப்பு பறிக்கப்படுகிறதே?திறமை கை கொடுக்கவில்லையே?இனப்பாகுபாடு,மதப் பாகுபாடு தலை தூக்குகிறதே?இனங்கள் ஒன்று பட்டால் "வியாபாரம்" படுத்து விடுமே?????????????????(2008-புது வருடத்தின் பின்னர் யாருடனும் வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்வதில்லை.மன்னிக்கவும்.உடன் பிறந்தவர்களுடன் கூட)

suvanappiriyan said...
Best Blogger Tips

பல விபரங்களைத் தெரிந்து கொண்டேன். தொடர்ந்து எழுதுங்கள் சகோதரா.....

shanmugavel said...
Best Blogger Tips

ரொம்ப சங்கடமான விஷயம் சகோ என்ன சொல்வது?

தனிமரம் said...
Best Blogger Tips

சங்கடமான விசயத்தை பொதுத்தளத்திற்கு கொண்டு வந்தது பாராட்ட வேண்டிய விசயம்!
யார் யாரை பிழை சொல்வது எல்லாம் கொதிநிலையில் ஏற்பட்ட அரசியல் முடிவின் பரிதாப நிலைக்கு சாதாரனமானவர்கள் பலியாகிவிட்டோம்!

ஹேமா said...
Best Blogger Tips

நிரூபன்...பதிவின் உண்மையை ஒத்துக்கொள்கிறேன் நானும்.ஆனாலும் பாருங்கள் இணையங்களில் எல்லோரும் ஒற்றுமையாய்த்தானே அன்போடு இருக்கிறோம்.

நீங்கள் எழுதிய சாதீயவர்கள்தான் இப்படிப் பேசிக்கொள்வார்கள்.என் அம்மம்மா புக்குடுதீவு வெள்ளாளச்சி என்று தன்னை மார்தட்டிக்கொள்ளும் அழகை வெறுத்திருக்கிறேன்.

என் அப்பாவின் உத்தியோகம் காரணமாக நாங்களும் மலைநாட்டுப் பகுதியில்தான் சிறு வயதில் வாழ்ந்தோம்.என் அப்பாவை என்னையெல்லாம் தோட்டக்காட்டு வாத்தி,தேயிலைக்கட்டைகள் என்றெல்லாம் திட்டுவா.இத்தனைக்கும் தாத்தா தமிழ்நாட்டுத் தமிழன்.
அவருக்கும் திட்டுத்தான் வடக்கத்தையான் எண்டு.
அவ்வளவு சாதி வெறி.உண்மையைச் சொல்ல வெட்கப்பட்டாலும் சில அசிங்கங்களைச் சொல்லியே ஆகவேண்டும் !

Angel said...
Best Blogger Tips

நிறைய விஷயங்கள் அறிந்து கொண்டேன் நிரூபன் .
தொடர்ந்து எழுதுங்கள் .

சுதா SJ said...
Best Blogger Tips

உண்மைதான் நிருபன் அண்ணா,
ஆனாலும் என்ன சொல்வது எண்டு தெரியவில்லை,
எப்போதுமே உண்மைகள் கசக்க தான் செய்யும் ,
ஆனாலும்..... வேண்டாம் ...........................................
நிருபன் அண்ணா,
இப்புடி ஒரு பதிவு இனி வேண்டாமே ....ப்ளீஸ்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நிரு, இதோ பிடியுங்கள் எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களை! இவ்வளவு துணிச்சலாக, அக்கு வேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்துவிட்டீர்கள்!! அவசியம் எழுத வேண்டிய கட்டுரை! அதை அழகுற எழுதிவிட்டீர்கள்! நன்றி நண்பா!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

யாழ்ப்பாணத்தவர்கள் ஒரு போதுமே ஏனைய பகுதி மக்களை மதிப்பதில்லை !! அவ்வளவு ஏன், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களைக் கூட இவர்கள் மதிப்பதில்லை!!

Unknown said...
Best Blogger Tips

இது பற்றி நாம் நிறைய பேசமுடியும். ஈழப்போராட்டத்தில் பங்கெடுத்த மலையக மக்களை பற்றியும் நாம் பேசனும்..

ஆனால் இது அதற்கான நேரமல்ல.. நாம் ஈழத்தை வேன்றெடுத்தே தீருவோம்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

மிக துணிச்சலாக கசப்பான உண்மைகளை நேர்மையாக அலசி இருக்கிறீர்கள், பாராட்டுக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

இலங்கையில் இவ்வளவு உக்கிரமான பிரச்சனைகளுக்குப் பிறகும் தணியாத சாதி உணர்வுகள், வெளிநாடுகளில் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கும் புலம் பெயர் தமிழர்களிடம் மட்டும் குறைந்து விடவா போகிறது?
தமிழ் இயக்கங்கள், சாதி ஒழிப்பை முதன்மைக் குறீக்கோளாகக் கொண்டு தீவிர பிரச்சாரத்தையும், மற்ற முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

@கே.ஆர்.பி.செந்தில்

இது பற்றி நாம் நிறைய பேசமுடியும். ஈழப்போராட்டத்தில் பங்கெடுத்த மலையக மக்களை பற்றியும் நாம் பேசனும்..

ஆனால் இது அதற்கான நேரமல்ல.. நாம் ஈழத்தை வேன்றெடுத்தே தீருவோம்..

ஐயா கே ஆர் பி செந்தில், நல்ல டாக்டர்கள் யாராவது இருந்தால் போய் பாருங்கள்.........!!



" எங்கே செல்லும் இந்தப் பாதை? " ................ மயானத்துக்கு!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

இலங்கையில் இவ்வளவு உக்கிரமான பிரச்சனைகளுக்குப் பிறகும் தணியாத சாதி உணர்வுகள், வெளிநாடுகளில் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கும் புலம் பெயர் தமிழர்களிடம் மட்டும் குறைந்து விடவா போகிறது?
தமிழ் இயக்கங்கள், சாதி ஒழிப்பை முதன்மைக் குறீக்கோளாகக் கொண்டு தீவிர பிரச்சாரத்தையும், மற்ற முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்!

இது நடக்கவே நடக்காது பன்னி! முதலில் தமிழ் இயக்கங்கள் மத்தியில் இருக்கும் சாதி வேறுபாட்டை களைய புதிதாக யாராவது பிறந்து வரவேண்டும்!!!

Anonymous said...
Best Blogger Tips

ஈழ தமிழர்கள் என்ற போர்வைக்குள் செய்த அயோக்கியதனங்களை துணிவோடு தோல் உரித்து காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!
கலஞரை, சோனியா காந்தியை, ஜெயலலிதாவை, தங்கபாலுவை, தூற்றுவதற்க்கு ஈழ தமிழர்களுக்கு எந்த தகுதியும் கிடையாது.

செங்கோவி said...
Best Blogger Tips

முன்பு உள்ள கசப்புகளை, இன அழிப்பின் போதும், நினைத்துக் கொண்டிருக்க முடியாது நண்பரே..அது மனிதம் இல்லையே..தினமலர் போன்ற இதழ்கள் இந்த விஷயத்தை தங்கள் சுயநலத்திற்கு உபயோகப்படித்தப் பார்த்தன..அதையும் மீறித் தான் தமிழகத் தமிழர் போராட்டங்களை நடத்தினர்..உங்கள் பதிவு நம் எல்லோரையும் சுயபரிசோதனை செய்து கொள்ள உதவும்..நல்ல துணிச்சலான பதிவு.நன்றி சகோ!

Anonymous said...
Best Blogger Tips

@கே.ஆர்.பி.செந்தில்
நாம் ஈழத்தை வேன்றெடுத்தே தீருவோம்..!

யாருக்கு வென்றெடுக்க போறிங்க?

ஈழபாரதி said...
Best Blogger Tips

யாழ்பாணத்தான் மட்டும்தான் ஈழத்தமிழனா? மட்டக்களப்பான்,திருகோணமலையான்,மன்னாரான்,புத்தளத்தான்,அம்பாறையான்,முல்லைத்தீவான்,வவுனியாவான்,கிழிநொச்சியான் இவர்கள் ஒருவரும் ஈழத்தமிழன் இல்லையா? ஒட்டு மொத்த ஈழத்தையும் யாழ்பாணத்தானுக்கு குத்தகைக்கு கொடுத்தது யார்? குத்தகைக்கு எடுத்த உங்கள் மனோபாவம் நீங்கள் ஒரு யாழ்பாணத்தான் என்றகாரனமா? சரி யாழ்பாணத்தான் சக யாழ்பாணத்தானை சரி சமனாக மதிக்கிறானா? மற்றவனை மதிப்பதுக்கு, அனைத்து கோயில்களுக்கும் உள்ளே செல்ல அனைத்து யாழ்பாணத்துக்காறனுக்கும் அனுமதி உண்டா?, உதாரணத்துக்கு உங்களை விட குறைந்த ஜாதி யாழ்பாணத்தானிடம், அவன் குடிக்கும் குவளையில் ஒருகுவளை தேனீர் வாங்கி குடிக்க உங்களால்முடியுமா?

வர்கமுரன்பாட்டுக்கும்,இனமுரன்பாட்டுக்கும் வேறுபாடு அறியமுடியாதவாரா நீங்கள், மலத்தை கரைத்து சகமனிதனை குடிக்க வைக்கும் தமிழக மக்களுக்கே ஒரு மானிலம் இருக்கிறது, மலையமக்களை ஏன் என்று கேட்காத, சக யாழ்பாணத்தானையே சமனாக மதியாத யாழ்பானத்தானுக்காக ஒட்டுமொத்த ஈழத்தமிழனும், சிங்கள இனத்திடம் இருந்து பிரிந்து தனிநாடு அமைத்து லட்சலட்சமான மரணங்களின் பின்னரும் நிம்மதிகா இருக்காமல், இருப்பது உங்களுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது, மலையமக்களுக்காக மன்னிப்பு கேட்க வெளிகிட்ட யாழ்பாணத்தானின் மனிதநேயம் விசித்திரமாக இருக்கிறது.

Anonymous said...
Best Blogger Tips

//Anonymous said...
@கே.ஆர்.பி.செந்தில்
நாம் ஈழத்தை வேன்றெடுத்தே தீருவோம்..!

யாருக்கு வென்றெடுக்க போறிங்க?//

இது என்ன கேள்வி? நம்முடைய
ஈழத்தமிழனுக்கு தான், அதான் நம்ம யாழ்ப்பாண தமிழனுக்கு தான், அட அதாம்பா நம்ப வெள்ளாள தமிழனுக்கு தான் ;-)

Anonymous said...
Best Blogger Tips

@Anonymous
கடைசி ஒரு வெள்ளாளன் இருக்கும் வரை ஈழம் என்பது, வெறும் கனவே, ஒட்டு மொத்த வெள்ளாளனும் அழிக்கபடவேண்டியவர்கள், உழைக்கும் வர்கத்துக்கே ஈழம் சொந்தமானது,

Anonymous said...
Best Blogger Tips

நான் ஒரு யாழ்பாணத்தான் அனால் இந்த வெள்ளாள நாய்கள் எங்களை கோயிலுக்குள் விடுவதில்லை, பாபணர்களும் வெள்ளார்களும் மட்டும்தான் உள்ள போகலாம். புலிகள் இருந்த காலத்தில் இதுகள் கொஞ்சம் அடக்கி வாசித்ததுகள் இப்ப அவுத்து போட்டு ஆட்டம் போடுதுகள்.

Anonymous said...
Best Blogger Tips

@?.?.???????? ???? ??? ??????????
யாழ்பாணத்தான் சக யாழ்பானத்தானையே மதிப்பது இல்லை, கேட்டால் நாங்கள் குறைஞ்ச சாதியாம், தொழிலை வச்சு சாதியை பிரிச்சு போட்டு வேள்ளாளான் உசந்த சாதியில் இருக்றன் என்று பீத்திக்கிறான்,புலிகள் இலாத வருங்காலம் இவர்களின் வன் கொடுமை அதிகமாகுமே தவிர இனி குறையா வாய்பே இல்லை. யாழ்பாணமே வெள்ளாளரின் சாதி வெறியால் எரிந்து சாம்பலாக போகிறது, இது சத்தியம்.

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

சகோ!பொங்கி வந்த எண்ணங்களில் சொல்லிகிட்டே வந்தது பின்னூட்டம் நீளமாகி விட்டதால் கூகிளில் இணையவில்லை.மறுபடியும் அதே வார்த்தைகளை கோர்க்கவா முடியும்?

இருந்தும் சாரத்தை சொல்ல முயல்கிறேன்.பின்னுட்டங்களின் எண்ணிக்கைகள் சொல்கிறது ஈழம் என்ற சொல்லின் தாக்கத்தை.வெட்டியும் ஒட்டியும் இருக்கும் என்பதால் முழுவதும் பார்வையிடவில்லை.

இனி எனது கருத்தை அடுத்த பின்னுட்டத்தில் சொல்கிறேன்.

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

தமிழகத்தில் நீங்கள் கூறும் அவலங்கள் இல்லாமலா இருக்கிறது.ஆனால் தமிழகம் என்ற ஒற்றைச் சொல்லில் தன்னை முன் நிறுத்திக்கொள்ளவில்லையா?

தமிழகத்தில் யாரும் உங்கள் உட்பிரிவுகளைப் பற்றி யோசிப்பதில்லை.மலையகத்தமிழனோ,வடகிழக்குத் தமிழனோ,கொழும்புத்தமிழனோ,தமிழ் பேசும் இஸ்லாமியத் தமிழனோ உங்களுக்கான எஙகளது அடையாளம் நீங்கள் பேசும் மொழியின் லாவகத்தில் புரிந்து கொள்ளும் ஈழத்தமிழன் என்ற அடையாளமே.

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

இந்திரா காலம் தொட்டு உங்களின் பிரச்சினைகள் மொழியென்ற அடையாளத்துடன் தமிழகத்திலும்,தனது சுய பாதுகாப்பு என்ற வெளியுறவுக்கொள்கையில் இந்தியாவும் காலடி வைத்தவுடன் உங்களின் உட்பூசல் அடையாளங்கள் கடுகு மாதிரியான தோற்றத்தைப் பெற்று விடுகின்றன.

தமிழகத்தில் திராவிட ஆட்சிகளின் ஊழல் மற்றும் எதிர்வினைகளை இணையத்தில் முன் வைத்தாலும் திராவிட கழகங்கள் சாதியம் குறித்த பார்வையை பின் தள்ளியுள்ளதற்கு பாராட்டவே வேண்டும்.தனது சுயாட்சி என்ற மக்கள் சார்ந்த ஜனநாயகம் உருவாகும் காலத்து ஈழத்திலும் இவைகள் பின் தள்ளப்படும்.நீங்கள் முன்வைப்பவை சமூகம் சார்ந்த பார்வை.

ஈழம் என்ற சொல்லோ இப்போது உலகளாவிய சொல்.

Anonymous said...
Best Blogger Tips

ஆமாய்யா நானும் ஒரு யாழ்பாணத்தான் எங்க தாத்த மீனவரு எங்க அப்பனும் , அம்மாவும் மீன்வித்த காசிலதான் சாப்பிட்டாங்க படிச்சாங்க, எங்க அப்பா மீன் பிடிக்கல உத்தியோகம் பாத்தாரு, நான் மீன் சாப்பிட்டு இருக்கன், பிடிச்சதில்லை, வெள்ளாள பசங்க கூட அவங்க வீட்டுக்கு போனா, வாசலில் வச்சு தனிய ஒரு கப்பில தன்ணி தாறாங்க, ஏன்னா நான் மீன்பிடிக்கிற பயலாம், நான் எங்கய்யா மீன் பிடிச்சன், எங்கப்பனும் பிடிச்சது இல்ல. எங்க தாத்தன் பிடிச்சதுக்காண்டி எனக்கு தனி குவளையா? வருமானத்துக்கு களவு எடுக்கிறதுதான் தப்பு, மீன்பிடிக்கிறது தப்பா? அன்னிக்கு முடியு பன்னினேன் இந்த வெள்ளாள பயலுகளை சாவடிக்கனும் என்று. படிக்கிற பசங்ககிட்ட ஏன்யா பேதமை பாத்து, வன்முறையை தூண்டுறீங்க?

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

உலகில் எதுவும் முழுமையில்லை.நாணயத்தின் இரு பக்கங்கள் மாதிரி வெட்டியும்,ஒட்டியுமான கருத்துக்கள் இருக்கவே செய்யும்.விடுதலைப் புலிகளின் தோற்றம்,வளர்ச்சி,வீழ்ச்சி என்ற மூன்று பாகங்களில் பல அதிகாரங்களை பல கோணங்களில் விமர்சிக்க இயலும்.நீங்கள் சொல்வது கூட ஒரு அதிகாரத்தின் சில வரிகளே:)

1990க்கும் பின்பு ஈழம் குறித்த பார்வை சமூகம் சார்ந்த ஒன்றாக இல்லாமல் இலங்கை,தமிழகம்,இந்தியா,பாகிஸ்தான்,சீனா,அமெரிக்கா,நார்வே இன்னும் மேற்கத்திய நாடுகளின் புவியியல்,அரசியல் சார்ந்த ஒன்றாகிப் போனதால் நீஙக்ள் முன் வைக்கும் கருத்துக்கள் கடுகு மாதிரி சிறுத்துப் போய் விட்டது.

Anonymous said...
Best Blogger Tips

தமிழன் இடத்தில் எங்குதான் சாதி வேற்றுமை இல்லை, இத்தனை ஆயிரம் ஆயிரம் உயிர்களின் இறப்பின் பின்னரும், ஈழம் கிடைக்காதது பெரும் ஆறுதலை தருகிறது, என்று ஒரு ஈழதமிழன் எழுதுவதை பார்க்கும் போது அவனது மன வக்கிரம் எவ்வளவு இழிவான நிலைக்கு போய் விட்டது என்று அறிய முடிகிறது.

VJR said...
Best Blogger Tips

நிரூபன் தமிழ்நாட்டு தமிழர்களும் தமாசானவர்கள்தான். இன்னும் தமிழ்நாட்டின் பல்லாயிரம் கிராமங்களில் கோயிலில் நுழையாமலும், கொத்தடிமைகளாகவும் ..த்தா இன்னும் பல கிராமங்களில் இந்த ஆதிக்க சாதியின் சில தேவிடியாப் பசங்கள் தாழ்த்தப்பட்ட மக்களை மாக்களைவிட கேவலமாகவும் அவர்களின் பெண்டிரை மிக அடிமையாகவும் நடத்தும் முறை இருப்பது கண்கூடு. அதைக் கேட்பதற்கு ஒரு நாதியும் இல்லை.

இவர்கள் வந்துதான் ஈழத்தமிழர்களுக்கு வெளக்கேத்த?

சொந்த தெருவுலயே கடிக்க பயந்த நாயி வேட்டைக்கு போறேன்னுச்சாம்.

தமாசுக்காரனுங்க. ங்கொய்யால மொத தமிழ்நாட்டு தமிழனுங்கள ஒத்துமையா இருக்கப் பண்ணுங்கடே.

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

விடுதலைப் புலிகள் குறித்த விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் ராஜபக்சே குழுவினரின் மனித,இனப்படுகொலைகள் மன்னிக்க முடியாத குற்றம் என்பதை மனித உரிமைக் குழுக்கள் குரல் எழுப்புவதை விட தமிழர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

நமது முன் இருப்பது இரண்டு வழிகள்.

எளிதான வழி...ராஜபக்சே செய்தது சரியென்று நடந்தது நடந்து விட்டது என்று சமாதானமாகிப் போய் விடுவது.

இரண்டாவது...பல விளைவுகள் சாதகமாக,பாதகமாக நிகழும். ஆனால் தமிழனின் போராட்டத்தை வரலாறு பதிவு செய்யும்.இனியொரு ஆயுதப் போராட்டத்துக்கான சூழல்கள்,வலிமை,தலைமையில்லாத சூழலில் அது சாத்தியமில்லாத ஒன்று.ஆனால் வடகிழக்கு,தமிழகம்,புலம்பெயர்ந்தவர்கள் என்ற மூன்று களங்களில் குரல் கொடுக்கவும்,சாத்வீகமாக மக்கள் குரல் ஒட்டிப் போராடும் வாய்ப்பு உள்ளது.

ஈழத்தமிழனுக்கு எது தேவை?

Anonymous said...
Best Blogger Tips

@VJRமாற்றங்கள் முதலில் உன்னுள்ளும் உன்னை சார்ந்தவர்களுள்ளும் ஆரம்பிக்கட்டும்.////ஹிஹிஹி

Anonymous said...
Best Blogger Tips

வெள்ளாள பயலுகள் பெரும்பாலும் செய்யிறது வியசாயம்,இவனுகளிலதான் படிச்ச மேதவிகள் அதிகம் இருக்கானுக, ஒரு வெள்ளாள பயல் காணியில அவர் கீழ்சாதி என்று சொல்லுற வேற ஜனங்க வந்து வேலை செய்வாங்க தின கூலிக்கு, அந்த வெள்ளாள முதலாலிக்கு ஒரு உதவியாளன் கீழ்சாதிபய கந்தன், வெங்காய அறுப்பு நடந்து கிட்டு இருதிச்சு தோட்டத்தில, அதில கந்தனோட பொண்டாட்டியும், வேலைசெய்துகிட்டு இருந்து இருக்கா, அவளை வெங்காயம் கட்டி வக்கிற குடிசைக்கு கூப்பிட்டு, கெடுத்துபுட்டான் அந்த வெள்ளாள பய, அத அவன் புருசன் கந்தனும் கேட்கத நாதி இல்லாம பாத்துகிட்டு இருந்திருக்கான், அந்த சாதி வெறிபிடிச்ச வெள்ளாநாய் மேட்டரு முடிஞ்சு கேட்டானாம், கந்தன் செய்யிறது நல்லா இருக்கா, அய்யா செய்யிறது நல்லா இருக்கா என்று, அந்த பேதை என்ன சொல்லும், வெள்ளால பயல பகைச்சுகிட்டு உசிரு வாழ முடியுமா?, அய்யா செய்யிறதுதான் நல்லா இருந்திச்சு என்று சொல்லிபுட்டு அழுகையோட வெளிய வந்திச்சாம்.

இப்படி ஆயிரம் கதைகள் அந்த யாழ்பாணத்தில உலவுது, வெள்ளால பயலுகளின் சாதி தடிப்பை பறைசாற்ற.

Anonymous said...
Best Blogger Tips

@Anonymous
ஈழம் கிடைக்காதது பெரும் ஆறுதலை தருகிறது, என்று ஒரு ஈழதமிழன் எழுதுவதை பார்க்கும் போது அவனது மன வக்கிரம் எவ்வளவு இழிவான நிலைக்கு போய் விட்டது என்று அறிய முடிகிறது.

ஆயிரக்கணக்கான உயிர்களின் இறப்பின் பின்னரும் ஈழம் கிடைக்கவில்லையே என்று ஆசைபடுவது தான் இழிவான மன வக்கிரம். உயிர்களை அழித்து பணம் சம்பாதிக்கும் வெறி. மற்ற சாதியினரை தாங்கள் மட்டுமே அடக்கியாள வேண்டும் என்ற இழிவான குணம்.

Anonymous said...
Best Blogger Tips

சாதி வெறிபிடித்த வெள்ளானின் சாதி வெறிக்கு, பூரண சுகம் வரும் மருந்தை கொடுக்காத போதும், அந்த சாதி வெறி என்ற நோயை காடுபாட்டில் வைத்து இருக்க கூடிய அளவு, விடுதலைபுலிகளால் தக்க மருந்து, கொடுக்க பட்டு கொண்டு இருந்தது, விடுதலை புலிகள் அழிக்க பட்டமைக்கு இன்னோரன்ன காரணங்கள் இருந்தாலும், யாழ்பானத்தில் இருந்து அதுக்கு ஆதரவாக செயற்பட்டவர்களை பார்தால் அனேகமானவர்கள் வெள்ளாள சாதியை சேர்ந்தவர்கள்தான், அதில் முக்கியமானவன் டக்கிளசு இவன் ஒரு வெள்ளாளன், இங்கு இனையத்திலும் பல வெள்ளரே எதிராக எழுதிகொண்டு இருந்தார்கள், அதற்குள்ளும் தாம் குறைந்த சாதி என்று எழுதிகொண்டு இருந்தவர் ஒருவர் பிடிபட்டு அம்பலமாகி அவர் ஒரு வெள்ளாளார் என்பது நிரூபனமகியது, பல வெள்ளாள பயலுகள் புலிகளை எதிர்க்க சொன்ன காரணமே, தம்மை விட சாதி குறைஞ்ச பிரபாகரன் தலைமை தங்குவாதா? அவரின்கீழ் சாதி கூடிய தாம் இருப்பதா என்பதுதன்.

Anonymous said...
Best Blogger Tips

@Anonymousஈழம் கிடைக்காதது பெரும் ஆறுதலை தருகிறது, என்று ஒரு ஈழதமிழன் எழுதுவதை பார்க்கும் போது அவனது மன வக்கிரம் எவ்வளவு இழிவான நிலைக்கு போய் விட்டது என்று அறிய முடிகிறது.

ஆயிரக்கணக்கான உயிர்களின் இறப்பின் பின்னரும் ஈழம் கிடைக்கவில்லையே என்று ஆசைபடுவது தான் இழிவான மன வக்கிரம். உயிர்களை அழித்து பணம் சம்பாதிக்கும் வெறி. மற்ற சாதியினரை தாங்கள் மட்டுமே அடக்கியாள வேண்டும் என்ற இழிவான குணம்.


இத்தனை உயிர் இழப்பின் பின்னரும் ஈழம் கிடைக்க வேண்டும் என நினைப்பது, விடுதலையின் உணர்வா? அல்லது காசு சம்பாதிக்கவா?
அப்ப சிங்களவனின் கீழ அடங்கி வாழலாமா?

Anonymous said...
Best Blogger Tips

@Anonymousஈழ தமிழர்கள் என்ற போர்வைக்குள் செய்த அயோக்கியதனங்களை துணிவோடு தோல் உரித்து காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!
கலஞரை, சோனியா காந்தியை, ஜெயலலிதாவை, தங்கபாலுவை, தூற்றுவதற்க்கு ஈழ தமிழர்களுக்கு எந்த தகுதியும் கிடையாது.


அதுதானே அவர்கள்தான் தூற்றி, மண்வாரி இறைத்து போட்டு மூடி சமாதிகட்டமுடியும், ஈழதமிழர் சமாதியிலும், சவுண்டு குடுக்க கூடாது மூச்சு முட்டுது என்று.

Anonymous said...
Best Blogger Tips

@Anonymousநாம் ஈழத்தை வேன்றெடுத்தே தீருவோம்..!

யாருக்கு வென்றெடுக்க போறிங்க?

டக்கிளசுக்கும்,கருனாவுக்கும்,பிள்ளையானுக்காகவும், அவையள் ஈழத்தமிழருக்கு செய்த நன்மைக்கு அவையள் அரசு ஆள வேண்டாமோ?

Anonymous said...
Best Blogger Tips

@Anonymousநாம் ஈழத்தை வேன்றெடுத்தே தீருவோம்..!

யாருக்கு வென்றெடுக்க போறிங்க?//

இது என்ன கேள்வி? நம்முடைய
ஈழத்தமிழனுக்கு தான், அதான் நம்ம யாழ்ப்பாண தமிழனுக்கு தான், அட அதாம்பா நம்ப வெள்ளாள தமிழனுக்கு தான் ;-)


அதாம்பா நம்ம டக்கிளசுக்கு

Anonymous said...
Best Blogger Tips

@Anonymous
சாதி குறைஞ்ச பிரபாகரன்

மேதகு தலைவர் பிரபாகரன் அதற்க்காகவே வெள்ளாள சாதி பெண்ணை பலவந்தமாக கடத்தி சென்று திருமணம் செய்து மற்ற சாதிகளை எல்லாம் அடக்கியாளும் வெள்ளாள சாதிகாரராக தன்னை உயர்த்தி கொண்டார். தலைவருக்கு என்ன பைத்தியமா? தனது சாதியிலோ அல்லது மற்ற சாதிகளிலோ திருமணம் செய்வதிற்க்கு. அதே மாதிரி தான் தமிழ்செல்வனும் வெள்ளாள சாதி பெண்ணை திருமணம் செய்து அடக்கியாளும் வெள்ளாள சாதிகாரராக தன்னை உயர்த்தி கொண்டார்.

Anonymous said...
Best Blogger Tips

@????????.VJRமாற்றங்கள் முதலில் உன்னுள்ளும் உன்னை சார்ந்தவர்களுள்ளும் ஆரம்பிக்கட்டும்.////ஹிஹிஹி


ஹிஹிஹி.....உண்மை சுடும் எழுத மட்டும்தான் நாம் செய்வோம்.செய்யிறது ரெம்ப கஸ்டம் அண்ணா.

Anonymous said...
Best Blogger Tips

@Anonymousசாதி குறைஞ்ச பிரபாகரன்

மேதகு தலைவர் பிரபாகரன் அதற்க்காகவே வெள்ளாள சாதி பெண்ணை பலவந்தமாக கடத்தி சென்று திருமணம் செய்து மற்ற சாதிகளை எல்லாம் அடக்கியாளும் வெள்ளாள சாதிகாரராக தன்னை உயர்த்தி கொண்டார். தலைவருக்கு என்ன பைத்தியமா? தனது சாதியிலோ அல்லது மற்ற சாதிகளிலோ திருமணம் செய்வதிற்க்கு. அதே மாதிரி தான் தமிழ்செல்வனும் வெள்ளாள சாதி பெண்ணை திருமணம் செய்து அடக்கியாளும் வெள்ளாள சாதிகாரராக தன்னை உயர்த்தி கொண்டார்.


உயர்சாதி பெண்னை திருமணம் முடித்தால் அவரது பிறப்பால் வந்த சாதி இழிவு போய் விடுமா? தலைகீழா நின்னாலும் இழி சாதி இழி சாதிதான், நம்ம சாதியில ஒரு பொண்னு இழிசாதி பையனை திருமனம் முடிச்சு வந்தால் நாம அந்த பொண்ணையும் சாதி இறக்கித்தான் வைச்சு, துரத்திதான் அடிப்போம், அந்த பொன்னோட வீட்டில இருந்து பொண்ணு எடுக்கவும் மாட்டோம் குடுக்கவும்மாட்டோம், சொந்த சகோதரியாக இருந்தாலும்.

Anonymous said...
Best Blogger Tips

@Anonymousமேதகு தலைவர் பிரபாகரன் அதற்க்காகவே வெள்ளாள சாதி பெண்ணை பலவந்தமாக கடத்தி சென்று திருமணம் செய்து மற்ற சாதிகளை எல்லாம் அடக்கியாளும் வெள்ளாள சாதிகாரராக தன்னை உயர்த்தி கொண்டார். தலைவருக்கு என்ன பைத்தியமா? தனது சாதியிலோ அல்லது மற்ற சாதிகளிலோ திருமணம் செய்வதிற்க்கு. அதே மாதிரி தான் தமிழ்செல்வனும் வெள்ளாள சாதி பெண்ணை திருமணம் செய்து அடக்கியாளும் வெள்ளாள சாதிகாரராக தன்னை உயர்த்தி கொண்டார்.

தமிழ் செல்வன் அண்ணா இயக்கத்தில் இருக்கும் போது விதுசா அக்கவை விரும்பி பொண்ணு கேட்ட போது விதுசா அக்கா சொன்னா,தமிழ் செல்வன் அண்ண ஒரு வண்ணான் உடுப்பு திய்கிர பய, நான் சாதி வெள்ளாளீச்சி நாட்டுக்காக உயிரை விட்டாலும் விடுவேனே ஒழிய என்சாதியை விட்டு கொடுக்க மாட்டேன் என்று கலியான கட்ட மறுத்திடிச்சு, அவளவு பவர் கூடின சாதி வெள்ளாள சாதி, அப்புறம் தமிழ்செல்வன் அண்ணா அவர் சாதரன ஒரு பெண்னைத்தான் கலியான முடிச்சார்.இயக்கம் சாதியை ஒழிக்க துணைபோகுமே ஒழிய கட்டாயபடுத்தி கலியானம் கட்டி வச்சது இல்லை.

Anonymous said...
Best Blogger Tips

@Anonymousநான் ஒரு யாழ்பாணத்தான் அனால் இந்த வெள்ளாள நாய்கள் எங்களை கோயிலுக்குள் விடுவதில்லை, பாபணர்களும் வெள்ளார்களும் மட்டும்தான் உள்ள போகலாம். புலிகள் இருந்த காலத்தில் இதுகள் கொஞ்சம் அடக்கி வாசித்ததுகள் இப்ப அவுத்து போட்டு ஆட்டம் போடுதுகள்.

யோ நானும் யாழ்பாணத்தாந்தான் ஆனால் என்னை கோயிலுக்குள்ல போக வெள்ளாள பயலுகள் அனுமதிக்கிறாங்க, நீ என்னய விட குறஞ்சசாதி போல இருக்கு அய்யோபாவம், ஆனால் வெள்ளால பயக வீட்டுக்கு போனா தனிய ஒரு குவளையில தண்ணீ தாறாங்க அப்ப நானும் குறஞ்ச சாதியா? அய்யோ பாவம், இந்த வெள்ளால பயலுகளை கொல்லாமல் விடக்கூடாது. ok?

நிரூபன் said...
Best Blogger Tips

@குடுகுடுப்பை

வடக்கத்தியான், மலைக்காட்டான் போன்ற பதங்கள் எல்லாம் பார்ப்பனீயக் கொழுப்பில் இருக்கும் புண்ணாக்கு வெள்ளாளக்கூட்டத்தின் வெளங்காவெட்டித்தனம். :-((((//

கசப்பான உண்மை.//

சகோ ஈழத்தில் உள்ள வெள்ளாளரிடம் மட்டுமல்ல, தமிழ் பேசும் அனைத்து தமிழர்களிடமும் இதே பழக்கம் உள்ளது சகோ.

Anonymous said...
Best Blogger Tips

வெள்ளாளனை குறை சொல்லுற குறைஞ்ச சாதி குரங்குகளே, உங்களுக்கு என்ன குளிர் விட்டு போட்டுதா? எப்ப இருந்தாலும் ஊருக்கு வரத்தானே வேணும், அப்ப உங்களை தூக்கி போட்டு மிதிக்கிறன், தினம் ரெண்டு முன்று பேரை துக்கி போட்டு மிதிச்சாத்தான், உஅடம்பில இருக்கிற சோம்பலே போகுது, இங்க அதுக்கு வாய்பே இல்லாம போச்சு ஒரு சின்ன தட்டு தட்டினாலும், உள்ள தூக்கி போட்டுறாங்க, ஊரில புலிக்கு பயந்து இங்க வந்தா, இங்க இவங்கட தொல்லை, இனி யாழ்பாணம் எங்கட கையிலதான், ஊருக்கு வாங்க உங்களை அங்க மீட் பண்ணுறன்.

நிரூபன் said...
Best Blogger Tips

நண்பர்களே, என் பதிவினைச் சரியாகப் படிக்கத் தவறிய நண்பர் ஈழபாரதிக்கு முதலில் பதிலளிக்கலாம என்று எண்ணுகிறேன். ஏனைய நண்பர்களின் பின்னூட்டங்களுக்கு இன்று இரவு பதில்கள் வழங்கவுள்ளேன், வேலைப் பளு, நேரமின்மை முதலிய காரணங்கள் என்னைச் சூழ்ந்து கொண்டிருப்பதால், இன்று இரவு வரை பொறுத்திருங்கள் நண்பர்களே!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஈழபாரதி


யாழ்பாணத்தான் மட்டும்தான் ஈழத்தமிழனா? மட்டக்களப்பான்,திருகோணமலையான்,மன்னாரான்,புத்தளத்தான்,அம்பாறையான்,முல்லைத்தீவான்,வவுனியாவான்,கிழிநொச்சியான் இவர்கள் ஒருவரும் ஈழத்தமிழன் இல்லையா? ஒட்டு மொத்த ஈழத்தையும் யாழ்பாணத்தானுக்கு குத்தகைக்கு கொடுத்தது யார்? குத்தகைக்கு எடுத்த உங்கள் மனோபாவம் நீங்கள் ஒரு யாழ்பாணத்தான் என்றகாரனமா?//


சகோதரனே, என்னுடைய இப் பதிவில் எங்காவது ஒரு இடத்தில் நான் யாழ்ப்பாணத்தானை முதன்மைப் படுத்திக் காட்டியிருக்கிறேனா?
இரண்டாவது விடயம் ஈழத்தின் வரலாற்றினை அல்லது தொன்மையான இலங்கைத் தமிழர் வரலாற்றினை நீங்கள் முழுமையாக அறியவில்லை என்பது புலனாகிறது. யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழர்களே, காலப் போக்கில் ஏனைய வடகிழக்கு தமிழ் பகுதிகளிலும் குடியேறினார்கள் என்பது உங்களுக்கு தெரிந்திருந்தால் இத்தகைய கருத்துக்களை நீங்கள் முன் வைத்திருக்க மாட்டீர்கள்.


பிரதேச வாத அடிப்படையில் கருத்துக்களைக் கூற வரும் சகோதரனே,
இந்தப் பதிவின் எங்காவது ஒரு பகுதியில் யாழ்பாணத்தான் ஈழத்தைக் குத்தகைக்கு எடுத்தது போன்ற ஒரு வசனத்தைக் காட்ட முடியுமா?
என் பார்வையினை ஒரு பரந்து பட்ட நோக்கில் சராசரித் தமிழன் எனும் அடிப்படையில் தான் இப் பதிவினூடாக வெளிப்படுத்தியிருக்கிறேன்,


நான் பதிவில் குறிப்பிட்ட விடயம்,



இவ் இடத்தில் ஒரு கணம் நிற்க. இதே இந்தியாவிலிருந்து கையில் அகப்பட்ட பொருள்களோடு வியாபார நோக்கத்திற்காகத் தானே ஈழத்திற்கு எங்கள் மூதாதையர்கள் வந்து குடியேறி, இலங்கைத் தமிழர் எனும் அடையாளத்தை எம்மிடத்தே தந்து விட்டுச் சென்றார்கள். ஓ, நாமெல்லோரும் வரலாறுகளை மறந்து எமக்குப் பின்னே வந்த மலையக உறவுகளை எள்ளி நகை செய்கிறோம், கிண்டலடிக்கிறோம். ஏன் எங்கள் ஊர்களுக்கு அவர்கள் வந்தால் சரி நிகர் சமனாக உரையாட மறுக்கிறோம், எங்கள் ஊர்களிற்கு வரும் மலைய சகோதர்களில் ஒரு சிலரை குறத்தி, குறவன் எனப் பேசிக் கலைக்கிறோம். இது எங்களின் ஆதிக்க வாதமா? இல்லை ஏனையவரை அடிமை செய்யும் குணத்தின் அடையாளங்களா?

இதில் நான் ஒருமையில் ஒரு விடயத்தினைக் கூறினால் தான் அதனை தனி மனிதர் சார்ந்த பிரதேசத்தை முன்னிறுத்தும் கருத்தாக நீங்கள் எடுக்க முடியும், என் பதிவில் எங்கள் ஊர்களில்...........இது வட கிழக்குத் தமிழர்களையும் கொழும்பில் வாழும் வட கிழக்கைப் பூர்விகமாகக் கொண்ட தமிழர்களையும் குறிக்கும்.
ப்ளீஸ் பதிவோடு தொடர்புடைய கருத்துக்களைக் கொண்டு வாருங்கள். உங்கள் தனிப்பட்ட பிரதேச வாதங்களை வெளிப்படுத்தும் எண்ணங்களை அடிப்படையாகக் கொண்ட கருத்துக்களைத் தவிர்த்து விடுங்கள் சகோதரம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஈழபாரதி


யாழ்பாணத்தான் மட்டும்தான் ஈழத்தமிழனா? மட்டக்களப்பான்,திருகோணமலையான்,மன்னாரான்,புத்தளத்தான்,அம்பாறையான்,முல்லைத்தீவான்,வவுனியாவான்,கிழிநொச்சியான் இவர்கள் ஒருவரும் ஈழத்தமிழன் இல்லையா? ஒட்டு மொத்த ஈழத்தையும் யாழ்பாணத்தானுக்கு குத்தகைக்கு கொடுத்தது யார்? குத்தகைக்கு எடுத்த உங்கள் மனோபாவம் நீங்கள் ஒரு யாழ்பாணத்தான் என்றகாரனமா? சரி யாழ்பாணத்தான் சக யாழ்பாணத்தானை சரி சமனாக மதிக்கிறானா? மற்றவனை மதிப்பதுக்கு, அனைத்து கோயில்களுக்கும் உள்ளே செல்ல அனைத்து யாழ்பாணத்துக்காறனுக்கும் அனுமதி உண்டா?, உதாரணத்துக்கு உங்களை விட குறைந்த ஜாதி யாழ்பாணத்தானிடம், அவன் குடிக்கும் குவளையில் ஒருகுவளை தேனீர் வாங்கி குடிக்க உங்களால்முடியுமா?//

சகோதரம், ஈழம் எனும் பெயர் எப்போது வந்தது வந்தது என்று உங்களுக்குத் தெரியுமா?
சங்க இலக்கியங்களினை அடிப்படையாக வைத்து மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளினடிப்படையில் கிறிஸ்துவிற்கு முற்பட்ட முதலாம் ஆண்டு தொடக்கம் மூன்றாம் ஆண்டு காலம் வரையான காலப் பகுதியாகும். இக் காலப் பகுதிகளில் கூட ஈழம் எனும் நாடு இருந்ததற்குரிய ஆதரங்களை இலக்கியங்கள் கூறுகின்றன.

தமிழக சங்க கால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட இலங்கையின் புராதன, தொன்மையான பெயர் தான் ஈழம். இதுவே பிற் காலத்தில் திரிபடைந்து போராட்ட சூழ் நிலைகளால் தமிழருக்கான தனி நிலமாக தமிழீழம் வேண்டும் என்ற பெயருக்கு காரணமாக அமைந்தது, இது வரலாறு. இதனையும் கொஞ்சம் கவனத்தில் கொண்டு உங்கள் கருத்துக்களை முன் வைத்தால் அவை காத்திரமான கருத்துக்களாக அமையும் சகோதரா.

நீங்கள் கூறுவது போல ஈழத் தமிழன் எனும் அடை மொழியினுள் வட கிழக்குத் தமிழர்கள் மாத்திரம் வர மாட்டார்கள் சகோ, இலங்கையில் வாழுகின்ற தமிழினைத் தாய் மொழியாகப் பேசுகின்ற அனைத்து மக்களும்(இஸ்லாமியர்கள் உட்பட) ஈழம் எனும் சொல்லினுள் வருவார்கள். இது தான் புவியியளார்களின் கூற்றும் கூட..
இவ் இடத்தில் வடக்கு கிழக்கு மக்களை முதன்மைப் படுத்த வேண்டுமாயின் நீங்கள் தமிழீழத்.....தமிழர்கள் என்று கூறியிருக்க வேண்டும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஈழபாரதி


யாழ்பாணத்தான் மட்டும்தான் ஈழத்தமிழனா? மட்டக்களப்பான்,திருகோணமலையான்,மன்னாரான்,புத்தளத்தான்,அம்பாறையான்,முல்லைத்தீவான்,வவுனியாவான்,கிழிநொச்சியான் இவர்கள் ஒருவரும் ஈழத்தமிழன் இல்லையா? ஒட்டு மொத்த ஈழத்தையும் யாழ்பாணத்தானுக்கு குத்தகைக்கு கொடுத்தது யார்? குத்தகைக்கு எடுத்த உங்கள் மனோபாவம் நீங்கள் ஒரு யாழ்பாணத்தான் என்றகாரனமா? சரி யாழ்பாணத்தான் சக யாழ்பாணத்தானை சரி சமனாக மதிக்கிறானா? மற்றவனை மதிப்பதுக்கு, அனைத்து கோயில்களுக்கும் உள்ளே செல்ல அனைத்து யாழ்பாணத்துக்காறனுக்கும் அனுமதி உண்டா?, உதாரணத்துக்கு உங்களை விட குறைந்த ஜாதி யாழ்பாணத்தானிடம், அவன் குடிக்கும் குவளையில் ஒருகுவளை தேனீர் வாங்கி குடிக்க உங்களால்முடியுமா?//


என்னுடைய இப் பதிவில் யாழ்ப்பாணத்தானை நான் இங்கே முதன்மைப்படுத்தியிருக்கிறேனா? நீங்கள் கூறும் கருத்துக்கள் பதிவிற்குச் சற்றும் தொடர்பில்லாது, பிரதேச வாதத்தை, பிரிவினைகளைச் சுட்டி, அவற்றின் அடிப்படையில் வைக்கப்படும் கருத்துக்கள். ஈழத்தில் இடம் பெறும் சாதி வேறுபாடுகள், பிரிவினைகள், பற்றி இரண்டு பதிவுகளைப் போட்டிருந்தேன்.

அதில் ஈழத் தமிழர்களின் முதன்மையானவர்கள் அல்லது முதலில் தமிழகத்திலிருந்து ஈழத்திற்கு வந்த யாழ்ப்பாண அரச இராசதானிகள், யாழ்ப்பாண தொன்மையான மக்களை அடிப்படையாக வைத்து ஆய்வினை மேற் கொண்டுள்ளேன், அதனை நீங்கள் படிக்கவில்லையா. இந்தப் பதிவு தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள் எனும் தலைப்பில் தான் எழுதப்பட்டுள்ளது,

ஈழத் தமிழர்கள் எனும் அடை மொழியினுள் எங்கள் மூதாதையர்கள், முற்போக்கு வாதிகள், கல்விமான்கள், அரசியல் வாதிகளால் உள்ளடக்கப்படாது ‘மலையகத் தமிழர்கள் என்று’ பிரித்தழைக்கப்படும் தமிழ் பேசும் எங்களின் வம்சங்களைப் பற்றியும், எமது பழக்க வழக்கங்களை அடிப்படையாக வைத்தும் தான் எழுதப்பட்டுள்ளது. பதிவு புரியவில்லை என்றால் கோபப்படாது, மீண்டும் ஒரு தடவை பதிவினைப் பொறுமையாகப் படித்துப் பாருங்கள் சகோதரம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஈழபாரதி


யாழ்பாணத்தான் மட்டும்தான் ஈழத்தமிழனா? மட்டக்களப்பான்,திருகோணமலையான்,மன்னாரான்,புத்தளத்தான்,அம்பாறையான்,முல்லைத்தீவான்,வவுனியாவான்,கிழிநொச்சியான் இவர்கள் ஒருவரும் ஈழத்தமிழன் இல்லையா? ஒட்டு மொத்த ஈழத்தையும் யாழ்பாணத்தானுக்கு குத்தகைக்கு கொடுத்தது யார்? குத்தகைக்கு எடுத்த உங்கள் மனோபாவம் நீங்கள் ஒரு யாழ்பாணத்தான் என்றகாரனமா? சரி யாழ்பாணத்தான் சக யாழ்பாணத்தானை சரி சமனாக மதிக்கிறானா? மற்றவனை மதிப்பதுக்கு, அனைத்து கோயில்களுக்கும் உள்ளே செல்ல அனைத்து யாழ்பாணத்துக்காறனுக்கும் அனுமதி உண்டா?, உதாரணத்துக்கு உங்களை விட குறைந்த ஜாதி யாழ்பாணத்தானிடம், அவன் குடிக்கும் குவளையில் ஒருகுவளை தேனீர் வாங்கி குடிக்க உங்களால்முடியுமா?//

உங்கள் கருத்துக்களினூடகா ஒன்று மட்டும் நிச்சயமாக வெளித் தெரிகிறது, நீங்கள் இன்னமும் மாறவில்லை. இந்தக் கணினி யுகத்தில் இணையம் வழியாக ப்ளாக் எழுதத் தொடங்கி, அறிவியலில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் மலைய மக்களின் உணர்வுகளைப் பற்றியும், எங்களின் தவறுகளைப் பற்றியும் சொல்லத் துணியும் போது, ஈழத் தமிழர்களுக்குள் யாழ்ப்பாணத்தானை முதன்மைப்படுத்துகிறேன் எனும் தொடர்பற்ற பொய்யினைக் கூறி, இப் பதிவின் காத்திரத் தன்மையினை குழப்ப முயல்கிறீர்கள். பதிவினை மீண்டும் ஒரு தடவை விரிவாகப் படித்து விட்டு வாருங்கள். விவாதிப்போம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஈழபாரதி


யாழ்பாணத்தான் மட்டும்தான் ஈழத்தமிழனா? மட்டக்களப்பான்,திருகோணமலையான்,மன்னாரான்,புத்தளத்தான்,அம்பாறையான்,முல்லைத்தீவான்,வவுனியாவான்,கிழிநொச்சியான் இவர்கள் ஒருவரும் ஈழத்தமிழன் இல்லையா? ஒட்டு மொத்த ஈழத்தையும் யாழ்பாணத்தானுக்கு குத்தகைக்கு கொடுத்தது யார்? குத்தகைக்கு எடுத்த உங்கள் மனோபாவம் நீங்கள் ஒரு யாழ்பாணத்தான் என்றகாரனமா? சரி யாழ்பாணத்தான் சக யாழ்பாணத்தானை சரி சமனாக மதிக்கிறானா? மற்றவனை மதிப்பதுக்கு, அனைத்து கோயில்களுக்கும் உள்ளே செல்ல அனைத்து யாழ்பாணத்துக்காறனுக்கும் அனுமதி உண்டா?, உதாரணத்துக்கு உங்களை விட குறைந்த ஜாதி யாழ்பாணத்தானிடம், அவன் குடிக்கும் குவளையில் ஒருகுவளை தேனீர் வாங்கி குடிக்க உங்களால்முடியுமா?//


கோயில்களினுள் செல்ல யார் யாருக்கு அனுமதி இருக்கிறது, இல்லை? ஈழத்தில் உள்ள சாதிய வேறூபாடுகள் பற்றியெல்லாம் ஏற்கனவே இரு பதிவுகளில் அலசியிருக்கிறேன். அவை ஈழத்தில் சாதியம் எனும் தலைப்பில் இருக்கின்றன. நேரமிருந்தால் ஒரு தடவை அவற்றினைப் படித்துப் பாருங்கள்.

ஈழத் தமிழர்கள் இன்னமும் மாறவில்லை என்பதற்கு இன்னுமோர் எளிய உதாரணம் சொல்லட்டுமா? எம்மில் உள்ள தவறுகளைச் சுட்டிக் காட்ட முனைந்தால், உடனே நீ அது செய்வியா? உன்னால் இது முடியுமா? எனச் சவால் விட்டு கருத்துக்களை முடக்க நினைப்பது. இதுவும் ஒரு வகையில் ஆதிக்க வாதமே.
என்னால் எல்லாச் எல்லா மனிதர்களுடனும் சகஜமாகப் பழகவும் முடியும். பசிக்கும் வேளையில் உணவு உண்ணவும் முடியும்.

நான் எல்லோரையும் மனிதர்கள் என்ற வட்டத்தினுள் தான் பார்க்கிறேன். உங்களைப் போல சாதி பிரித்து, நீ கூடியவன், நான் குறைந்தவன், நான் உன் வீட்டில் தேநீர் குடிக்க முடியுமா என்றெல்லாம் நான் இதுவரை வினவியதில்லை.

நான் பணி புரியும் அலுவலகத்தில் என்னுடன் பழகும் அனைத்து நண்பர்கள் வீட்டிற்கும் சென்றிருக்கிறேன். உணவருந்தியிருக்கிறேன். ஆனால் சாதி என்ன என்று இது வரை கேட்டறியவில்லை. இந்த விளக்கம் உங்களுக்குப் போதுமாக இருக்கும் என நினைக்கிறேன்.

மேலும் சந்தேகம் இருந்தால் பண்ணையில் அமைந்துள்ள ரெலிகொம் அலுவலகத்திற்கு வந்து நீங்கள் கூறுவது போல் சாதியினை அறிந்து விட்டு, அவர்கள் வீட்டிற்கும் சென்று சாப்பிடச் சொல்லிப் பாருங்கள். கண்டிப்பாகச் சாப்பிடுவேன், கண்டிப்பாக தேநீர் அருந்தி மகிழ்வேன்.

ஈழபாரதி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
நிரூபன் said...
Best Blogger Tips

@ஈழபாரதி

வர்கமுரன்பாட்டுக்கும்,இனமுரன்பாட்டுக்கும் வேறுபாடு அறியமுடியாதவாரா நீங்கள், மலத்தை கரைத்து சகமனிதனை குடிக்க வைக்கும் தமிழக மக்களுக்கே ஒரு மானிலம் இருக்கிறது, மலையமக்களை ஏன் என்று கேட்காத, சக யாழ்பாணத்தானையே சமனாக மதியாத யாழ்பானத்தானுக்காக ஒட்டுமொத்த ஈழத்தமிழனும், சிங்கள இனத்திடம் இருந்து பிரிந்து தனிநாடு அமைத்து லட்சலட்சமான மரணங்களின் பின்னரும் நிம்மதிகா இருக்காமல், இருப்பது உங்களுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது, மலையமக்களுக்காக மன்னிப்பு கேட்க வெளிகிட்ட யாழ்பாணத்தானின் மனிதநேயம் விசித்திரமாக இருக்கிறது.//


சகோ, மலையக மக்களைத் சமனாக மதிக்காத ஈழத் தமிழர்கள் என்று எல்லோரையும் தானே இப் பதிவில் அலசியிருக்கிறேன். இதில் யாழ்ப்பாணத் தமிழர்களை மட்டும் முதன்மைப்படுத்தவில்லையே? நீங்கள் பிரதேசவாத அடிப்படையில் யாழ்ப்பாண மக்கள் தான் மலையகத்தவரைப் புறக்கணிக்கிறார்கள் எனும் தொனிப் பொருளில் கருத்துக்களை முன் வைக்கிறீர்கள். இலங்கையில் வாழும் அனைத்து தமிழ் பேசும் மக்களும் இம் மலையக மக்களைப் புறக்கணித்திருக்கிறார்கள் என்பதனைக் கூறியுள்ளேன். ப்ளீஸ் மீண்டும் ஒரு தடவை படித்துப் பார்த்து விட்டு, உங்கள் கருத்துக்களை முன் வைத்தால், அவை காத்திரமான விவாதத்திற்கு வழி வகுக்கும் சகோ.

பொ.முருகன் said...
Best Blogger Tips

இப்பதிவையும்,அதற்கான பின்னுட்டங்களையும் பார்க்கும் போது ஒன்றுப்புரிகிறது,அங்கே இப்போதையத் தேவை பிரபாகரன்கள் அல்ல,பெரியார்கள்தான்.அங்கே முன்பே ஒரு பெரியார் தோன்றியிருந்தால் பிரபாகரன் முப்பது வருடம் போராடி உயிரை விட நேர்ந்திருக்காது,வருத்தங்களுடன் முடிக்கிறேன்.

ஈழபாரதி said...
Best Blogger Tips

@???????தனி ஈழம் அமையாதது நன்றா தீதா என எனக்குத் தெரியவில்லை, ஆனால் இலங்கையில் வாழும் தமிழர்கள் அதாவது ஈழத்தமிழர்கள் எனப்படும் இனத்தின் ஒற்றுமையின்மையே முள்ளிவாய்க்காலுக்கான காரணம் எனத் தமிழ்நாட்டில் பலர் அறிந்து இருக்க மாட்டார்கள். இதற்கான அடி ஆணிவேர் அனைத்தும் சாதி என்னும் புற்றுநோயால் பீடிக்கப்பட்டவை. முதலில் யாழ்ப்பாணத்தமிழர்கள் எனப்படும் கூட்டம் ஈழத்தமிழர்களின் கிழக்கு மாநிலத் தமிழர்களையும், நீர்கொழும்புத் தமிழர்களையும், மன்னார்த் தமிழர்களையும் கூட தம்மோடு அரவணைத்துக் கொள்வதில்லை. மற்றொன்று ஈழத்தமிழர்கள் ஒரு போதும் மலையகத் தமிழர்களை அரவணைத்துக் கொள்வதில்லை.//

சகோ தம்பி கூர்மதி நான் என் கருத்துக்களுக்கு சகோ இக்பால் செல்வன் அவர்களும் வலுச் சேர்த்திருக்கிறார். தனி நாடு அமைந்திருந்தால் உள் நாட்டுப் போர் இடம் பெற்றிருக்கும் என்பதற்கு இவ் விளக்கங்களே போதுமானவை என்று நினைக்கிறேன்.

நான் எப்போதும் அவர்களிடம் எழுப்பும் ஒரே கேள்வி --- 1947, 1962, 1971 களில் மில்லியன் கணக்கான மலையகத் தமிழர்களை சிங்கள அரசு வெளியேற்றப் படும் போது ஈழத்தமிழ் மக்கள் ஒரு போராட்டத்தையும் நடத்தவில்லை. ஆனால் ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டிலும், மலையகத்திலும் எத்தனைப் போராட்டங்கள் நடந்துள்ளன ....... இந்நன்றியை மறந்தவராய் ஒரு யாழ்ப்பாணத்தவர் இங்கு தமிழ்நாட்டைப் பற்றி இழிவாகவே என்னிடம் பேசினார். நான் ஆங்கிலத்தில் பேசியதால் அவர் என்னை குஜராத்தி என்று நினைத்தார் போலும், பின்னர் நானும் தமிழ்நாட்டவன் என்று தெரிந்ததும் அந்த இடத்தை விட்டு அகன்றார்.

நான் யாழ்ப்பாணத்தவரிடம் கேட்பது எல்லாம் யாழ்ப்பாணத் தமிழர்களை விடவும் தமிழகத் தமிழர்களும், மலையகத் தமிழர்களும் எவ்வகையில் குறைந்தவர்கள் ???//

சகோ, இதனைத் தான் நானும் பதிவில் கேட்டிருக்கிறேன்.

//தமிழக தமிழர்களை பொறுத்தவரை மலையக தமிழர்கள், மற்றவர்கள் என்றெல்லாம் பிரித்து பார்க்க விரும்ப வில்லை.//

இதே மனப்பான்மை யாழ்ப்பாணத் தமிழர் பலரிடமும் நாம் எதிர்ப்பார்ப்பது தவறா???//

வெட்கத்தை விட்டுச் சொன்னால் இதே மனப் பான்மை அல்லது இதே பழக்க வழக்கங்கள் யாழ்ப்பாணத் தமிழர்களிடம் இப்போதும் இருக்கிறது.

நிரூபன் நீங்கள் ஒரு விடயத்தை புரிந்துகொள்ள வேண்டும், மலையகத்தமிழர்கள் யார்? அவர்களும் இலங்கை குடியுரிமை பெற்ற இலங்கையர்க‌ளே. இந்த பதிவு முழுவதும் மலையகத் தமிழர்கள் ஏதோ இந்தியர்கள் போலல்லவா குறிப்பிட்டுள்ளீர்கள்//

ஆஹா.. ஆஹா.......பதிவின் இரண்டாவது பந்தியின் இறுதி வரியில் என்ன சொல்லியிருக்கிறேன் என்பதனைக் கவனிக்கத் தவறி விட்டீர்களே சகோ..

//ஆனாலும் பதிவில் நான் என் கருத்துக்கள் எதனையும் முன் வைக்காது, எங்கள் மக்களின் அனுபவ ரீதியான கருத்துக்களை மட்டுமே முன் வைக்கவுள்ளேன்!///

சகோ இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களின் பிரிவுகளை நான்காவது பந்தியில் சுட்டியுள்ளேன். இந்தப் பதிவில் ஈழத் தமிழர்களின் பார்வையில் என்றாவது ஒரு நாள் மலையகத் தமிழர்களையும் தம் உடன் பிறந்த இலங்கைக் குடியுரிமை பெற்ற தமிழர்களாக நடாத்தினார்களா?????????????????????????????????????????????????????????????????????????????எனும் கேள்வியோடு தான் என் விவாதத்தினை முன் வைத்திருந்தேன். எம்மவர்கள் பார்வையில் மலையகத் தமிழர்களை எவ்வாறு நோக்குவார்கள் என்பதனைச் சொன்னால் நானும் அப்படித் தான் கூறுகிறேன் என்று ஒரு பிழை கண்டு பிடிப்பு வேறு...
இது சீரியஸ் பதிவு சகோ...........................
என்னுள் ஓடுவதும் சுத்தமான யாழ்ப்பாண, வன்னி கலப்பு இரத்தம் தானே.........ஒரு வேளை உங்களுக்கு இது மாறிப் பொருள் விளங்கியிருக்கலாம்.


இவை அனைத்தும் நீங்கள் உடன் பட்ட கருத்துகள்தானே, மலையதமிழர்களை பெரும்பாலும் அவமதிப்பவர்கள் யாழ்பாண தமிழர்தான், யாழ்பாணத்தவர்கள் மற்றய மாவட்டதினரையே மதிப்பது இல்லை, மட்டகளப்பன் ,திருகோணமலையான், வன்னியான் என்றுதான் பேசுவர்கள்,
யாழ்பானத்தனால் அவமதிகபட்ட மலைய மக்களுக்காக ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களும் மன்னிப்பு கேக வேண்டும் என்பது, குத்த்கைக்கு எடுத்த செயல்தானே, நீங்கள் செயடஹ் தவறுக்கு, மற்றவர்களையும் ஏன் கூட்டு சேர்கிறீர்கள், இதற்கான உரிமையை எப்படி நீங்கள் எடுத்தீர்கள், நீங்கள் யாழ்பானத்தான் என்பதாலா?

இரண்டாவது விடயம், ஈழத்தமிழர்கள் வந்தேறு குடிகள் என்பதே பெரும் தவறு, இது ஒரு வரலாற்று திரிபு. ஒன்றுபடட் குமரிகண்டத்தில் தமிழர் பரந்தே வாழ்தனர், இடையில் ஏற்பட்ட கடற்கோளினால் இடையில் கடல் நீர் புகுந்ததால் நிலம் இரண்டு பட்டு பிரிந்தது, அங்கால் இருந்தவர்கள் அங்காலும்,இங்கால் இருந்தவர்கல் இங்காலும் தொடர்ந்து வாழ்ந்தார்கள், இதி எங்கு வந்தது, வந்தேறிகள். பாடல்பெற்ற ஈச்சரங்கள் இருக்கின்ற்ன, புராணகாலத்திலேயே இராவணன் இருந்து இருக்கிறான். மேலும் தொடர்கிறேன்...........

Anonymous said...
Best Blogger Tips

////@Anonymous Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வெள்ளாளனை குறை சொல்லுற குறைஞ்ச சாதி குரங்குகளே, உங்களுக்கு என்ன குளிர் விட்டு போட்டுதா? எப்ப இருந்தாலும் ஊருக்கு வரத்தானே வேணும், அப்ப உங்களை தூக்கி போட்டு மிதிக்கிறன், தினம் ரெண்டு முன்று பேரை துக்கி போட்டு மிதிச்சாத்தான், உஅடம்பில இருக்கிற சோம்பலே போகுது, இங்க அதுக்கு வாய்பே இல்லாம போச்சு ஒரு சின்ன தட்டு தட்டினாலும், உள்ள தூக்கி போட்டுறாங்க, ஊரில புலிக்கு பயந்து இங்க வந்தா, இங்க இவங்கட தொல்லை, இனி யாழ்பாணம் எங்கட கையிலதான், ஊருக்கு வாங்க உங்களை அங்க மீட் பண்ணுறன்./// யாரப்பா அது இடையில புகுந்து காமெடி பண்ணுறது ஹிஹிஹி

Anonymous said...
Best Blogger Tips

@??.???????இப்பதிவையும்,அதற்கான பின்னுட்டங்களையும் பார்க்கும் போது ஒன்றுப்புரிகிறது,அங்கே இப்போதையத் தேவை பிரபாகரன்கள் அல்ல,பெரியார்கள்தான்.அங்கே முன்பே ஒரு பெரியார் தோன்றியிருந்தால் பிரபாகரன் முப்பது வருடம் போராடி உயிரை விட நேர்ந்திருக்காது,வருத்தங்களுடன் முடிக்கிறேன்.

பெரியார் வாழ்ந்த தமிழகத்தில் சக தமிழனுக்கு பீயை கரைத்து குடிக்க சொன்ன நிலமை அங்கு இன்னமும் வரவில்லை சகோதரா.

ஈழபாரதி said...
Best Blogger Tips

@???????சகோ, மலையக மக்களைத் சமனாக மதிக்காத ஈழத் தமிழர்கள் என்று எல்லோரையும் தானே இப் பதிவில் அலசியிருக்கிறேன். இதில் யாழ்ப்பாணத் தமிழர்களை மட்டும் முதன்மைப்படுத்தவில்லையே? நீங்கள் பிரதேசவாத அடிப்படையில் யாழ்ப்பாண மக்கள் தான் மலையகத்தவரைப் புறக்கணிக்கிறார்கள் எனும் தொனிப் பொருளில் கருத்துக்களை முன் வைக்கிறீர்கள். இலங்கையில் வாழும் அனைத்து தமிழ் பேசும் மக்களும் இம் மலையக மக்களைப் புறக்கணித்திருக்கிறார்கள் என்பதனைக் கூறியுள்ளேன். ப்ளீஸ் மீண்டும் ஒரு தடவை படித்துப் பார்த்து விட்டு, உங்கள் கருத்துக்களை முன் வைத்தால், அவை காத்திரமான விவாதத்திற்கு வழி வகுக்கும் சகோ.


மலயக மக்களை மதிக்காத மற்ற மாவட்டகாரரை விரல் விட்டு எண்ணி விட முடியும், ஏன் எனில் இவர்கள் தங்களை யாழ்பாணத்தான் மதிப்பதில்லை என்ற கவலையில் இருப்பவர்கள், ஒதுக்கபடும் ஒரு இனத்துக்குதான் ஒதுக்க படுவதன் வலி புரியும். அதனால் சும்மா ஒப்புக்கு சப்பாக அவர்களையும் இதுக்குள் இழுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் என நீங்கள் அடம்பிடிப்பதை ஏற்றுகொள்ள முடியவில்லை, வேண்டும் என்றால் மன்னிப்பு கேட்க வேண்டிய யாழ்ப்பாணத்தர் என்று தலைப்பை மாற்றி விடுங்கள்.

Namy said...
Best Blogger Tips

For the sake of hit the article wrote by this blogger. First we eliminate the common enemy, then we clean our dirt.

Anonymous said...
Best Blogger Tips

தமிழன் என்னும் பதம் வந்துவிட்டாலே எங்களையும்தான் அது குறிக்கிறது சகோதரர்களை காக்க நாங்களும் தவறியிருக்கிறோம்

Anonymous said...
Best Blogger Tips

தமிழன் என்னும் பதம் வந்துவிட்டாலே எங்களையும்தான் அது குறிக்கிறது சகோதரர்களை காக்க நாங்களும் தவறியிருக்கிறோம்

Anonymous said...
Best Blogger Tips

அருமையான பதிவு..தாமத வருகை .வருந்துகிறேன்

Anonymous said...
Best Blogger Tips

இங்கு கருத்திடும் அனைவருக்கும் ஒரு வேண்டுதல் - நிரூபனின் பதிவின் மைய சாரம்சத்தில் இருந்து பல கருத்துக்கள் விலகிச் செல்வதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக அனாமத்தேயர்கள் இப்படி செய்கிறார்கள்.



இங்கு நிரூபன் கூற விழைவது ஈழத்தமிழர்கள் மலையகத் தமிழர்களை வஞ்சிக்கின்றார்கள்.



மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காக பெரிதாக ஒன்றும் ஈழத்தமிழர்கள் போராடிவிடவில்லை.



ஒரு மில்லியன் மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக இந்தியாவுக்கு சிங்கள அரசு அனுப்பியதில் பெரும் பங்காற்றியவர்கள் ஈழத்தமிழர்கள், அதைத் தடுக்கக்கூட போராடாமல் மௌனம் காத்தவர்கள்.



இன்றளவும் வன்னியில் வாழும் மலையகத்தாரை ஈழத்தமிழர்கள் சேர்த்துக் கொள்வதில்லை



ஆனால் இன்று மட்டும் ஈழத்தமிழர்கள் இந்தியத் தமிழர்கள் உதவி செய்யவில்லை என விசனப்படுகின்றார்கள். இன்றளவும் கூட மலையகத் தமிழர்களையோ, இந்தியாவில் இருக்கும் தமிழர்களையோ இழிவாக பேசும் ஆதிக்க மனோபாவம் ஈழத்தமிழர்களிடம் இருக்கின்றது. ஈழத்தமிழர் அனைவரிடமே இது இருக்கின்றது. அளவு வேண்டுமாயின் அவர்களின் உட்குழுக்களுக்கள் மாறுமே ஒழிய எதோ ஒரு வகையில் இந்திய வெறுப்பு அவர்களிடம் உண்டு. சிங்களவர் இந்தியாவினை வெறுக்கின்றார்கள் என்றால் அதற்கான வரலாற்றுக் காரணங்கள் பல உண்டு - சோழர் கால படையெடுப்புகள் முதல் இந்திய படையெடுப்பு வரை.



ஆனால் ஈழத்தமிழர்கள் இந்தியாவையும், இந்தியத் தமிழர்களையும் வெறுக்கும் மனோபாவத்துக்கு இன்றைய காங்கிரஸ் அரசின் பேடித்தனமோ, இந்திய அமைதிப்படையின் கோழைத்தனமோ காரணம் அல்ல .. அதற்கு முன்னரே இந்த இந்திய வெறுப்பு இருந்து வருகின்றது. இது தவறு தானே என சுட்டிக் காட்டியுள்ளார்.



அதுவும் இது தவறு என சுட்டிக் காட்டிய இளம் ஈழத்தமிழரில் நான் அறிந்து நிரூபனே முதலாம் நபர்.................. !!!

Anonymous said...
Best Blogger Tips

நிரூபன் உங்களுக்கும் ஈபிடிபிகுமான தொடர்பை சொல்லாமலே விட்டுவிட்டீர்களே. கடந்த இரண்டு ஆன்டுகளிலே என்ன செய்கிறீர்கள் என்பதையும் சொல்லி இருகலாமே

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆனந்தி..

நிரூபன்...இந்த பதிவில் நிறைய தெரிஞ்சுகிட்டேன்...ம்ம்...ஒரே ஒரு விஷயம்...இங்கே தமிழ்நாட்டிலும் சாதி வெறியில் நிறைய அக்கிரமங்கள் நடக்குது....அது ஒரு கசப்பான உண்மை என்றாலும்...இங்கே உத்தபுரத்தில் நடக்கும் சாதி கலவரத்திலோ...இல்லை எங்க தமிழ்நாட்டு மீனவர் விஷயத்திலோ ...எங்கள் வருத்தங்களை கிளர்ச்சிகளாய் உருமாற்றும் இயலாமை எங்களுக்கு கம்மி தான்.....நீங்கள் உங்கள் சார்ந்த நிலைமைகளை தைரியமா பேசுறிங்க...ஒரு வேளை அத்துணை (சாதி) தமிழனும் ஒன்று கூடி இருந்தால் இந்த உயிர் சேதமும் தடுக்கப்பட்டு இருக்கலாம்..உணர்ச்சி வசத்தில் சில தலைவர்கள் எடுத்த முடிவுகளும்...புரட்டி போடப்பட்டு...தெளிவான பல விடைகள் கிடைத்திருக்கலாம்...ம்ம்...உங்கள் திசை...உங்கள் பயணங்கள் எல்லாமே மாற்ற பட்டு இருக்கலாம்...ம்ம்....எனக்கு பிடிச்சது நிருபன் உங்க பதிவு ..மற்றும் உங்கள் எண்ணங்கள்...//

உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் சகோதரி, நீங்கள் கூறுவது போல தமிழனுக்குள் இருக்கும் ஒற்றுமையின்மையே இத்தனை உயிரிழப்புக்களுக்கும் காரணமாய் அமைந்துள்ளது, எல்லோரும் ஒருமித்த குடையின் கீழ் இருந்திருந்தால் பல வருடங்களுக்கு முன்னரே பல விடயங்களில் வெற்றி கண்டிருக்கலாம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

யாழ்ப்பாணத் தமிழர்கள் எனப்படுவோர் முதலில் தமது இந்திய வேரினை ஒத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது பிற ஈழத்தமிழர்களான கிழக்கு மாநிலத்தவர், நீர்கொழும்புத் தமிழர், மன்னார்ப் பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள் இவர்கள் அனைவரையும் ஒன்றினைத்து தாம் இலங்கைத் தமிழர் என்று ஒன்றுப்பட வேண்டும்.

மூன்று இந்தியாவில் இருக்கும் தமிழர்களை உதவி வேண்டும் போது மட்டும் உறவுகளே என அழைப்பதையும், உதவிகள் கிட்டிய பின்னரும், அல்லது மறைமுகத்தில் வடக்கார் என இழிவாகப் பேசுவதையும் தவிர்க்க வேண்டும்.

நான்காவது அனைத்து இலங்கைத் தமிழர்களும் மண முறையில் கலந்து விட முயற்சிக்க வேண்டும். ஒரு யாழ்ப்பாணத்தவர் போய் மட்டக்களப்பில் பெண் எடுங்கள். மட்டகளப்பில் இருப்பவர் மலையகத்தில் பெண் எடுங்கள். நாம் தமிழர் என்பதை அரசியலில் மட்டுமில்லாமல் வாழ்வியலில் செய்துக் காட்டுங்கள்.

நிரூபன் சொல்ல முயன்றது இதைத் தான். இந்தியத் தமிழர்களும், தலைவர்களும் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டார்கள் எனக் கூறுவதை விடவும். தமக்குள் இருக்கும் முதலில் அழுக்குகளைத் துடைக்க முன்வாருங்கள். சமூக மாற்றத்துக்கு வித்திடுங்கள். இது நடந்தாலே ஈழத்தமிழரின் உரிமைகளை சிங்களவரிடம் இருந்து பெற்றுக் கொள்ள அது அடித்தளம் அமைக்கும் என்கின்றார்.
இதனை பல ஈழத்தமிழர்களால ஜீரணிக்க முடியாது. பல இந்தியத் தமிழர்களால் புரிந்துக் கொள்ள்வே முடியாது.

நிரூபன் ஈழத்தில் இருந்து இப்படியான புரட்சிக் கர சிந்தனைகள் வரத் தொடங்கி இருப்பது நம்பிக்கைத் தருகின்றது. இன்றில்லாவிட்டாலும், அடுத்த தலைமுறை தழைத்தோங்க உம்மைப் போன்றோரின் எண்ணங்கள் நனவாக வாழ்த்துக்கள்.//

பதிவினை முழுமையாகப் படித்து, அலசி ஆராய்ந்து, நீங்கள் வழங்கியிருக்கும் விமர்சனத்திற்கும், யதார்த்த பூர்வமான கருத்துக்களுக்கும் நன்றிகள் சகோதரா.

நிரூபன் said...
Best Blogger Tips

@யோகா.எஸ்


நீங்கள் இணையத்தில் உலாவுபவர்.உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.உலகப் பொருளாதாரம் பரந்திருக்கிறதோ இல்லையோ,உலகமெங்கணும் இருபத்தியோராம் நூற்றாண்டில் ஒவ்வொரு நாட்டிலும் நூற்றுக்கும் மேற்பட்ட இனங்கள் கலந்து வாழ்கின்றன!ஓட்டு அரசியல் எங்குமே உண்டு!அதிலும் குழப்பத்தை உருவாக்குவோரே குழப்பத்தை தீர்த்து வைப்பது போல் நாடகமாடுவது கொடுமை!குளிர் காய்வதற்கென்றே அலைகிறார்கள்.இது இலங்கைக்கும் பொருந்தும்.பிரித்து ஆள்வது ஒரு வகை அரசியலே!என்னமோ ஈழத்தமிழர்களில் மட்டும் தான் இந்த சாதி,மத பேதங்கள் என்றில்லை.உலகெங்கிலும் உண்டு!இப்போது கூட பரபரப்பான துடுப்பாட்டப் போட்டியின் பின்னர்,இரண்டாம் இடம் பெற்ற அணியின் வீரர்கள் விலகிய பின்னர்,உங்களுக்குத் தெரியும்:அணித் தலைமைக்கு தகுதி இருந்தும் கூட,"எதனாலோ"வாய்ப்பு பறிக்கப்படுகிறதே?திறமை கை கொடுக்கவில்லையே?இனப்பாகுபாடு,மதப் பாகுபாடு தலை தூக்குகிறதே?இனங்கள் ஒன்று பட்டால் "வியாபாரம்" படுத்து விடுமே?????????????????(2008-புது வருடத்தின் பின்னர் யாருடனும் வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்வதில்லை.மன்னிக்கவும்.உடன் பிறந்தவர்களுடன் கூட)//

சகோ உங்கள் கருத்துக்களில் உள்ள யதார்த்த பூர்வத்தை உணர்கிறேன். ஆனால் ஒரு விடயம், ஈழத் தமிழர்கள் தமக்குள் தாமே முரண்பட்டு நின்று, தம் உடன் பிறப்புக்களான மலைய மக்களை வேற்று நாட்டவராகப் புறந்தள்ளிப் பார்த்துக் கொண்டு, எப்படி தங்களின் தொப்புக் கொடி உறவுகள் எனக் கூறும் தமிழ் நாட்டு மக்களிடம் அடைக்கலம் கூற முடியும்?

நிரூபன் said...
Best Blogger Tips

@சுவனப்பிரியன்


பல விபரங்களைத் தெரிந்து கொண்டேன். தொடர்ந்து எழுதுங்கள் சகோதரா.....//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@shanmugavel


ரொம்ப சங்கடமான விஷயம் சகோ என்ன சொல்வது?//

சங்கடத்தைத் தீர்த்து வைக்கும் கருத்துக்களைத் தருவீர்கள் என்று எதிர்பார்த்தேன், ஒரு சில வரிகளோடு முற்றுப் புள்ளி வைத்து விட்டு நகர்ந்து விட்டீர்களே சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

சங்கடமான விசயத்தை பொதுத்தளத்திற்கு கொண்டு வந்தது பாராட்ட வேண்டிய விசயம்!
யார் யாரை பிழை சொல்வது எல்லாம் கொதிநிலையில் ஏற்பட்ட அரசியல் முடிவின் பரிதாப நிலைக்கு சாதாரனமானவர்கள் பலியாகிவிட்டோம்//

நன்றிகள் சகோ, சரி, எங்கள் சட்டையில் உள்ள ஓட்டையினை மறைத்துக் கொண்டு நாங்கள் செய்வது நியாயம் என்பது எவ்வகையில் சரியாகும் சகோ?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா

நிரூபன்...பதிவின் உண்மையை ஒத்துக்கொள்கிறேன் நானும்.ஆனாலும் பாருங்கள் இணையங்களில் எல்லோரும் ஒற்றுமையாய்த்தானே அன்போடு இருக்கிறோம்.//

இந்தக் கருத்துக்களிற்குத் தான் எங்கள் உறவுகள் மேலே உள்ள பின்னூட்டங்களினூடாக வலுச் சேர்த்துக் கொண்டிருகிறார்கள் என்று நினைக்கிறேன். மேலே உள்ள பின்னூட்டங்களைப் பார்த்தீர்களா? இணையங்களில் ஒற்றுமையாக நாங்கள் இருக்கிறோம் என்பதன் உள்ளார்ந்தம் புரியும் என நினைக்கிறேன். ஒரு சிலர் ஈழத் தமிழர்களுக்கும் தமிழக உறவுகளிற்கும் இடையில் மோதல்களை உருவாக்க வேண்டும் எனும் நோக்கில் தமிழக உறவுகளின் எழுத்து நடையில் ஈழத் தமிழர்கள் கருத்துக்களை எழுதினாலும் ஒரு சில வசனங்களே அவர்களின் பூர்வீகத்தை இலகுவாக காட்டிக் கொடுக்கிறதைக் கவனிக்கவில்லையா? இணையங்களில் ஒரு பொதுவான ஆய்வறிக்கையில் கொண்டு வரும் கருத்தினை எம்மவர்கள் என்ன கோணத்தில் பார்க்கிறார்கள்? விவாதிக்கிறார்கள் என்றால் நன்றாகப் புரியும் சகோதரி.


நீங்கள் எழுதிய சாதீயவர்கள்தான் இப்படிப் பேசிக்கொள்வார்கள்.என் அம்மம்மா புக்குடுதீவு வெள்ளாளச்சி என்று தன்னை மார்தட்டிக்கொள்ளும் அழகை வெறுத்திருக்கிறேன்.//

ம்...ம்.....

என் அப்பாவின் உத்தியோகம் காரணமாக நாங்களும் மலைநாட்டுப் பகுதியில்தான் சிறு வயதில் வாழ்ந்தோம்.என் அப்பாவை என்னையெல்லாம் தோட்டக்காட்டு வாத்தி,தேயிலைக்கட்டைகள் என்றெல்லாம் திட்டுவா.இத்தனைக்கும் தாத்தா தமிழ்நாட்டுத் தமிழன்.
அவருக்கும் திட்டுத்தான் வடக்கத்தையான் எண்டு.
அவ்வளவு சாதி வெறி.உண்மையைச் சொல்ல வெட்கப்பட்டாலும் சில அசிங்கங்களைச் சொல்லியே ஆகவேண்டும் !//

அந்த அசிங்களைச் சொல்லப் போகும் போது தான், ஒட்டு மொத்த இனத்தையும் உன் கையில் குத்தகைக்கு கொடுத்தது யார் என்று ஆதிக்க வாதக் கேள்விகளும் வருகின்றன.

நிரூபன் said...
Best Blogger Tips

@angelin

நிறைய விஷயங்கள் அறிந்து கொண்டேன் நிரூபன் .
தொடர்ந்து எழுதுங்கள் .//

நீங்கள் அறியாத பல விடயங்களையும் எங்கள் சகோதர்கள் தந்து கொண்டிருக்கிறார்கள் கவனிக்கவில்லையா;-)))))

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தனின் பக்கங்கள்

உண்மைதான் நிருபன் அண்ணா,
ஆனாலும் என்ன சொல்வது எண்டு தெரியவில்லை,
எப்போதுமே உண்மைகள் கசக்க தான் செய்யும் ,
ஆனாலும்..... வேண்டாம் ...........................................
நிருபன் அண்ணா,
இப்புடி ஒரு பதிவு இனி வேண்டாமே ....ப்ளீஸ்//

சகோ, இவை வரலாற்றில் பதிந்து வைக்கப்ட வேண்டிய விடயங்கள், இனியும் இப்படி ஒரு பதிவு வேண்டாம் என ஒதுங்கி இருக்க முடியாது.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

நிரு, இதோ பிடியுங்கள் எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களை! இவ்வளவு துணிச்சலாக, அக்கு வேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்துவிட்டீர்கள்!! அவசியம் எழுத வேண்டிய கட்டுரை! அதை அழகுற எழுதிவிட்டீர்கள்! நன்றி நண்பா!!//

ஆஹா.. ஏதோ பிளேன் கிஸ்ஸினைக் காற்றில் பறக்க விடுறது மாதிரி, வாழ்த்துக்களை அனுப்புகிறீர்கள், நன்றிகள் சகோ. நீங்கள் வாழ்த்துக்களைச் சொல்லி விட்டுப் போய் விட்டீர்கள். ஆனால் பின்னாடி ஒரு பெட்ரோல் இல்லாமல் நெருப்பு பற்றும் வேலையல்லவா நடந்திருக்கிறது.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


யாழ்ப்பாணத்தவர்கள் ஒரு போதுமே ஏனைய பகுதி மக்களை மதிப்பதில்லை !! அவ்வளவு ஏன், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களைக் கூட இவர்கள் மதிப்பதில்லை!!//

இது யதார்த்தம் சகோ, இந்த உண்மைகளைச் சொல்லும் போது ஒட்டு மொத்த யாழ்ப்பாணத்தின் கருத்துக்களையும் உன் கையில் யார் தந்தது என்று கேள்விகள் பல வருகின்றனவே.

நிரூபன் said...
Best Blogger Tips

@கே.ஆர்.பி.செந்தில்


இது பற்றி நாம் நிறைய பேசமுடியும். ஈழப்போராட்டத்தில் பங்கெடுத்த மலையக மக்களை பற்றியும் நாம் பேசனும்..//

சகோ, நிறையப் பேசலாம் என்று விட்டு, ஒரு சில வசனங்களோடு உங்கள் கருத்துக்களை நிறைவு செய்து விட்டீர்களே,
ஈழப் போராட்டத்தில் பங்கெடுத்த மலையக மக்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே, காரணம் அவர்களது வாழ்க்கைச் சுமையும் அவர்களது வாழ்வியலை நிலை நிறுத்துவதற்கான போராட்டங்களுமே அவர்களது அப்போதைய எண்ணங்களாக இருந்தது. சந்தர்ப்ப சூழ் நிலைகளால் மலையக மக்கள் ஒன்று திரண்டு போராட வந்திருந்தாலும் பிரிவினைகளும், சூழ்ச்சிகளும் கொண்ட எம் தமிழர்கள் அவரகளைத் தம்மோடு அணைத்து போராட்டத்தை முன்னெடுத்திருப்பார்களா என்பது கேள்விக் குறியே!



//ஆனால் இது அதற்கான நேரமல்ல.. நாம் ஈழத்தை வேன்றெடுத்தே தீருவோம்..//

ஈழத்தை வென்றெடுத்தே தீருவோம் எனக் கூறும் நீங்கள், போரினால் பாதிக்கப்பட்ட, இறுதி நேரம் வரை வன்னியில் இருந்த, வன்னியை விட்டு வெளியே போனால் சுடப்பட்டு விடுவோம் என, புலிகளின் மிரட்டல்களுக்கு அஞ்சி அவர்களோடு இருந்த மக்களின் கருத்துக்களை ஒரு தடவை கேட்டறிவதும் நன்றாக இருக்குமே சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி

நன்றிகள் சகோ

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி

இலங்கையில் இவ்வளவு உக்கிரமான பிரச்சனைகளுக்குப் பிறகும் தணியாத சாதி உணர்வுகள், வெளிநாடுகளில் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கும் புலம் பெயர் தமிழர்களிடம் மட்டும் குறைந்து விடவா போகிறது?
தமிழ் இயக்கங்கள், சாதி ஒழிப்பை முதன்மைக் குறீக்கோளாகக் கொண்டு தீவிர பிரச்சாரத்தையும், மற்ற முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்!.//

உங்களுக்குரிய பதிலை ஓட்டவடை அவர்களே சொல்லி விட்டார்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Anonymous

ஈழ தமிழர்கள் என்ற போர்வைக்குள் செய்த அயோக்கியதனங்களை துணிவோடு தோல் உரித்து காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!
கலஞரை, சோனியா காந்தியை, ஜெயலலிதாவை, தங்கபாலுவை, தூற்றுவதற்க்கு ஈழ தமிழர்களுக்கு எந்த தகுதியும் கிடையாது.//

நன்றிகள் நன்றிகள்..

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

முன்பு உள்ள கசப்புகளை, இன அழிப்பின் போதும், நினைத்துக் கொண்டிருக்க முடியாது நண்பரே..அது மனிதம் இல்லையே..தினமலர் போன்ற இதழ்கள் இந்த விஷயத்தை தங்கள் சுயநலத்திற்கு உபயோகப்படித்தப் பார்த்தன..அதையும் மீறித் தான் தமிழகத் தமிழர் போராட்டங்களை நடத்தினர்..உங்கள் பதிவு நம் எல்லோரையும் சுயபரிசோதனை செய்து கொள்ள உதவும்..நல்ல துணிச்சலான பதிவு.நன்றி சகோ!//

சகோ இன அழிப்பின் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதனை ஏற்றுக் கொள்கிறேன். அதே நேரம் ஒரே நாட்டினுள் ஈழப் போராட்டம் தொடங்க முன்பதாக சம்பளவு உயர்வு கோரிய தொழிற் சங்கப் போராட்டங்களை மலையக மக்கள் முன்னெடுக்கையில் பார்த்துக் கொண்டிருந்த தமிழர்களின் தவறினை ஆதரிக்கவா முடியும் சகோ?

உங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஈழபாரதி

யாழ்பாணத்தான் மட்டும்தான் ஈழத்தமிழனா? மட்டக்களப்பான்,திருகோணமலையான்,மன்னாரான்,புத்தளத்தான்,அம்பாறையான்,முல்லைத்தீவான்,வவுனியாவான்,கிழிநொச்சியான் இவர்கள் ஒருவரும் ஈழத்தமிழன் இல்லையா? ஒட்டு மொத்த ஈழத்தையும் யாழ்பாணத்தானுக்கு குத்தகைக்கு கொடுத்தது யார்? குத்தகைக்கு எடுத்த உங்கள் மனோபாவம் நீங்கள் ஒரு யாழ்பாணத்தான் என்றகாரனமா? யாழ்பாணத்தான் மட்டும்தான் ஈழத்தமிழனா? மட்டக்களப்பான்,திருகோணமலையான்,மன்னாரான்,புத்தளத்தான்,அம்பாறையான்,முல்லைத்தீவான்,வவுனியாவான்,கிழிநொச்சியான் இவர்கள் ஒருவரும் ஈழத்தமிழன் இல்லையா? ஒட்டு மொத்த ஈழத்தையும் யாழ்பாணத்தானுக்கு குத்தகைக்கு கொடுத்தது யார்? குத்தகைக்கு எடுத்த உங்கள் மனோபாவம் நீங்கள் ஒரு யாழ்பாணத்தான் என்றகாரனமா? //

சகோதர்களே, ஈழபாரதி எனும் இந்தச் சகோதரனின் இக் கருத்துக்களே போதும், தமிழனுக்குள் ஒற்றுமையில்லை என்பதனையும், ஒரு தமிழன் பொதுவான பார்வையினூடு கருத்துக்களைச் சொல்லும் போது ஏனைய தமிழர்கள் அக் கருத்தினை எப்படி அடக்க முனைகிறார்கள் என்பதற்கும் இந்தச் சகோதரனின் வாக்கியங்களே சான்று பகரும் என்பதில் ஐயமில்லைத் தானே!

இந்தப் பதிவில் ஈழத் தமிழர் விட்ட வரலாற்றுத் தவறுகளை ஆராய்ந்து, தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியவர்கள் ஈழத் தமிழர்கள் எனும் ஒரு ஆய்வு முடிவினை, விளக்கக் கருத்துக்களோடு சொல்ல முனையும் வேளை, எம்மவர்கள் தங்கள் சுய விமர்சனத்தை, சுடும் உண்மைகளைப் பொறுக்க முடியாதவர்களாய் எவ்வாறு பொங்கி எழுகிறார்கள் என்பதற்கு இந்த நண்பனின் கருத்துக்களே சான்றாக அமையுமல்லவா? இந்தக் கருத்துக்களை ஒருவன் யாழ்ப்பாணத்திலிருந்து சொல்லுவதால் அவனை அவன் சார்ந்த பிரதேசத்தோடு நோக்கும் இந்தச் சகோதரனின் உண்மையான எண்ணம் என்ன? இப்படியான கருத்துக்கள் யாழில் இருந்து வெளிவரக் கூடாது, அதனைப் பிரதேசவாதம் எனும் அடையாளத்தினுள் அடக்கி, முடக்கி விட வேண்டும், ஏனைய பிரதேச மக்கள் சொன்னால் தவறில்லை, இது தானே உங்கள் வாதம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஈழபாரதி

வர்கமுரன்பாட்டுக்கும்,இனமுரன்பாட்டுக்கும் வேறுபாடு அறியமுடியாதவாரா நீங்கள், மலத்தை கரைத்து சகமனிதனை குடிக்க வைக்கும் தமிழக மக்களுக்கே ஒரு மானிலம் இருக்கிறது, மலையமக்களை ஏன் என்று கேட்காத, சக யாழ்பாணத்தானையே சமனாக மதியாத யாழ்பானத்தானுக்காக ஒட்டுமொத்த ஈழத்தமிழனும், சிங்கள இனத்திடம் இருந்து பிரிந்து தனிநாடு அமைத்து லட்சலட்சமான மரணங்களின் பின்னரும் நிம்மதிகா இருக்காமல், இருப்பது உங்களுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது, மலையமக்களுக்காக மன்னிப்பு கேட்க வெளிகிட்ட யாழ்பாணத்தானின் மனிதநேயம் விசித்திரமாக இருக்கிறது.//

மலையக மக்களை ஏன் என்று கேட்காதவர்கள் எனும் பட்டியலினுள் முழு ஈழத் தமிழர்களுமே அடங்குவார்கள் சகோ. வரலாறுகளைக் கொஞ்சம் பின் நோக்கிப் பார்த்தால் எல்லாமே நினைவிற்கு வரும்.

ஈழத் தமிழன் தனி நாடு அமைக்கும் போது எத்தகைய குழப்பங்கள் அமையும் என்பதற்கு நீங்கள் கூறும் ‘யாழ்ப்பாணத்தான்..இதனைச் செய்வதோ எனும் ஆதிக்கச் சொல்லே விடையாக இருக்கும் சகோ. ஈழத் தமிழன் தனி நாடு அமைக்காது விட்டதன் நன்மை என நான் கூறியதன் அர்த்தம், பல மரணங்களின் பின்னர், ஒரு தனி நாடு அமையப் பெற்றால், அத் தனி நாட்டினுள்ளும் பதவிப் போட்டிகள், உட் பூசல்கள், நான் பெரிதா, நீ பெரிதா எனும் சண்டைகள் உருவாகி அந் நாடும் இரண்டாகும் தானே சகோ?
இந்தக் கருத்தை நீங்களே ஏற்றுக் கொள்வது போலத் தானே, ஒரு பொதுவான நோக்கில் கருத்தினைச் சொல்லுகையில் என்னை ஒரு ஈழத் தமிழனாக அடையாளப்படுத்தாது ’மன்னிப்புக் கேட்க வெளிக் கிட்ட யாழ்ப்பாணத்தான்’ எனப் பிரதேச வாதம் கலந்த்து பேசுகிறீர்கள்.

எங்கள் அனைவரதும் கடந்த கால தவறினைச் சுட்டிக் காட்டிய நான் பிரதேசவாதியா? என்னை ஒரு தனி மனிதனாக ஈழத் தமிழன் என்று எண்ணாமல் யாழ்ப்பாணத்தான் எனும் அடைப்பிற்குள் கூறும் நீங்கள் பிரதேசவாதியா?

ஒரு கருத்தினைச் சொல்லும் போதே, அதனைப் பிரதேச நலன் சார்ந்து, உங்களைப் போன்றோர் நோக்கும் போது, தனி நாடு கிடைத்தால் எவ்வாறான விளைவுகள் வரும் எனும் கருத்திலும் எந்தத் தவறும் இல்லைத் தானே சகோ?


பதிவிற்கு தொடர்பில்லாத கருத்துக்களிற்கு இனிமேல் பதில்கள் வழங்கப்பட மாட்டாது.

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்

உலகில் எதுவும் முழுமையில்லை.நாணயத்தின் இரு பக்கங்கள் மாதிரி வெட்டியும்,ஒட்டியுமான கருத்துக்கள் இருக்கவே செய்யும்.விடுதலைப் புலிகளின் தோற்றம்,வளர்ச்சி,வீழ்ச்சி என்ற மூன்று பாகங்களில் பல அதிகாரங்களை பல கோணங்களில் விமர்சிக்க இயலும்.நீங்கள் சொல்வது கூட ஒரு அதிகாரத்தின் சில வரிகளே:)

1990க்கும் பின்பு ஈழம் குறித்த பார்வை சமூகம் சார்ந்த ஒன்றாக இல்லாமல் இலங்கை,தமிழகம்,இந்தியா,பாகிஸ்தான்,சீனா,அமெரிக்கா,நார்வே இன்னும் மேற்கத்திய நாடுகளின் புவியியல்,அரசியல் சார்ந்த ஒன்றாகிப் போனதால் நீஙக்ள் முன் வைக்கும் கருத்துக்கள் கடுகு மாதிரி சிறுத்துப் போய் விட்டது.//

சகோ, இந்தப் பதிவில் எவ்வாறான கருத்துக்களை நான் முன் வைத்துள்ளேன் என்பதனை மீண்டும் ஒரு தடவை பதிவினைப் படித்தால் உணர்ந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@Anonymous


வெள்ளாளனை குறை சொல்லுற குறைஞ்ச சாதி குரங்குகளே, உங்களுக்கு என்ன குளிர் விட்டு போட்டுதா? எப்ப இருந்தாலும் ஊருக்கு வரத்தானே வேணும், அப்ப உங்களை தூக்கி போட்டு மிதிக்கிறன், தினம் ரெண்டு முன்று பேரை துக்கி போட்டு மிதிச்சாத்தான், உஅடம்பில இருக்கிற சோம்பலே போகுது, இங்க அதுக்கு வாய்பே இல்லாம போச்சு ஒரு சின்ன தட்டு தட்டினாலும், உள்ள தூக்கி போட்டுறாங்க, ஊரில புலிக்கு பயந்து இங்க வந்தா, இங்க இவங்கட தொல்லை, இனி யாழ்பாணம் எங்கட கையிலதான், ஊருக்கு வாங்க உங்களை அங்க மீட் பண்ணுறன்.//


சகோ ஊரில் இருந்து கொண்டு தானே, நானும் என் கருத்துக்களைச் எழுதுகிறேன், அப்போ எனக்கும் சங்கு தானா?
ஹி....ஹி..

கருத்துக்களைக் கருத்துக்களாக மட்டுமே கவனத்திலெடுங்கள் நண்பர்களே!
இந்தப் பதிவில் ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர் மீது காட்டிய பிரிவினை வாதச் செயற்பாடுகள், தமிழ் நாட்டவர் மீதான வசை பாடல்களைத் தான் பதிவாக்கியுள்ளேன். ஆகவே தயவு செய்து சாதி அடிப்படையிலான கருத்துக்களை எழுதி, விவாதத்தை மாற்ற வேண்டாம் நண்பர்களே!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஈழபாரதி

இவை அனைத்தும் நீங்கள் உடன் பட்ட கருத்துகள்தானே, மலையதமிழர்களை பெரும்பாலும் அவமதிப்பவர்கள் யாழ்பாண தமிழர்தான், யாழ்பாணத்தவர்கள் மற்றய மாவட்டதினரையே மதிப்பது இல்லை, மட்டகளப்பன் ,திருகோணமலையான், வன்னியான் என்றுதான் பேசுவர்கள்,
யாழ்பானத்தனால் அவமதிகபட்ட மலைய மக்களுக்காக ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களும் மன்னிப்பு கேக வேண்டும் என்பது, குத்த்கைக்கு எடுத்த செயல்தானே, நீங்கள் செயடஹ் தவறுக்கு, மற்றவர்களையும் ஏன் கூட்டு சேர்கிறீர்கள், இதற்கான உரிமையை எப்படி நீங்கள் எடுத்தீர்கள், நீங்கள் யாழ்பானத்தான் என்பதாலா?//

சகோ, மீண்டும், மீண்டும் பிரதேசவாத அடிப்படையில் தானே உங்கள் கருத்துக்களைக் கூறுகிறீர்கள். நீங்கள் உங்கள் கருத்துக்களில் இருந்தும் மாறப் போவதில்லை என நினைக்கிறேன். நான் வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை முதலிய பல பகுதிகளில் வாழ்ந்திருக்கிறேன், அங்குள்ள அலுவலகங்களில் பணி புரிந்திருக்கிறேன். அவ்வூர் மக்களும் மலைய மக்கள் மீது பரிவினைக் காட்டாது, பிரிவினைவாதத்தினைத் தான் காட்டினார்கள். புரிகிறாதா? ஒரு தனிப்பட்ட சமூகம் சார்ந்த கருத்தாக இதனை மாற்றி, நீங்கள் ஒட்டு மொத்த இனமும் இழைத்த தவற்றினை மறைத்துக் குளிர் காயப் பார்க்கிறீர்கள்.

இங்கே கூட நீங்கள் செய்த தவறு என்று நீங்கள் விளிப்பதன் மூலம் பிரதேசவாதமே தொனிக்கிறது, நான் பிறந்தது வன்னி. உயர் கல்வி கற்றது யாழ்ப்பாணம், மலையகத்தில் தான் எனது பல்கலைக் கழக பாடத்தை முடித்தேன், நானும் யாழ்ப்பாண மக்களின் வாயால் என்னை வன்னியான் என அழைப்பதை, வன்னியார் காட்டார் என அழைப்பதையும் கேட்டிருக்கிறேன். வருத்தமுற்றிருக்கிறேன். ஈழத்தில் யாழ்ப்பாணத்தாரிடம் இந்த ஆதிக்க வாதம் அதிகமாக இருக்கிறது என்பது உண்மையே, ஆனால் அதே நேரம் இக் குணங்கள் ஏனைய தமிழ் பேசும் வட கிழக்கு தமிழர்களிடமும் இருக்கின்றன என்பதனை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது,

ஒட்டு மொத்த இனத்தையும் குத்தகைக்கு நான் எடுக்கவுமில்லை. ஒரு எழுத்தாளன் எனும் ரீதியில் தமிழர்களாகிய நாங்கள் சொந்த நாட்டினுள்ளே, ஏனைய தமிழ் பேசும் உறவுகளை நடாத்திய முறையினை, அநாகரிகமான செயலினைத் தான் நான் இங்கே பதிவாகச் சுட்டியுள்ளேன். ஈழத் தமிழர்களே..ஓடிப் போய் காலில் விழுந்து மன்னிப்புக் கேளுங்கள் என நான் இங்கே சொல்லவில்லை.

மன்னிப்புக் கேட்க வேண்டியவர்கள் என நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்தே கருத்துக்களைப் பதிவாக்கியுள்ளேன்.

ஒரேயொரு கேள்வி, யாழ்ப்பாணத் தமிழர்கள் மலைய மக்கள் மீதான அடக்கமுறையினக் கண்டும் காணாதது போல வாழ்ந்திருந்தார்கள் எனும் கூற்று ஒரு புறம் இருக்கட்டும், மொனராகலை மாவட்டத்திற்கு அண்மையில்.......மிக மிக அருகாக இருந்த திருகோணமலை, மட்டக்களப்பும் தமிழர்களும், ஏன் வவுனியா தமிழர்களும் இந்த நிலமைகளைப் பார்த்து வாய் மூடித் தானே இருந்தார்கள்?
இப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஒட்டு மொத்த இனமுமே இதனோடு தொடர்புபட்டு நிற்கிறார்கள் என்பது!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஈழபாரதி


இரண்டாவது விடயம், ஈழத்தமிழர்கள் வந்தேறு குடிகள் என்பதே பெரும் தவறு, இது ஒரு வரலாற்று திரிபு. ஒன்றுபடட் குமரிகண்டத்தில் தமிழர் பரந்தே வாழ்தனர், இடையில் ஏற்பட்ட கடற்கோளினால் இடையில் கடல் நீர் புகுந்ததால் நிலம் இரண்டு பட்டு பிரிந்தது, அங்கால் இருந்தவர்கள் அங்காலும்,இங்கால் இருந்தவர்கல் இங்காலும் தொடர்ந்து வாழ்ந்தார்கள், இதி எங்கு வந்தது, வந்தேறிகள். பாடல்பெற்ற ஈச்சரங்கள் இருக்கின்ற்ன, புராணகாலத்திலேயே இராவணன் இருந்து இருக்கிறான். மேலும் தொடர்கிறேன்...........//

தமிழர்களின் புராதன வரலாறே உங்களுக்குச் சரியாகத் தெரியவில்லை என்று நினைக்கிறேன்.
கடற்கோளால் பிளவு பட்ட இடத்தில் மக்கள் என்ன மந்திர வித்தையின் காரணமாகவா இலங்கையினுள் மட்டும் வந்து குடியேறினார்கள்?
நல்ல வேளை ஆதாமும் ஏவாளும் முதன் முதலாக இலங்கையில் தான் தோன்றினார்கள். ஈழத்தில் தான் தோன்றினார்கள் என்று நீங்கள் ஒரு புதுக் கதை கண்டு பிடிக்கவில்லை.
கடற்கோள் துண்டாடிய பின்னர் தான் இந்தியாவிலிருந்து இலங்கையில் தமிழர்கள் குடியேறினார்கள். இதற்கு பல வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களே சான்றாக விளங்குகின்றன சகோதரம்.

ஈழத்தில் தமிழர் அல்லது இலங்கையில் தமிழர் எனும் அடிப்படையிலான தொன்மையான வரலாற்றினை எழுதிய பல அறிஞர்களும், புவியியலாளர்களும் இது நாள் வரைக்கும் இலங்கையில் தமிழர் வாழ்ந்ததற்கான மூலாதாரத்திற்கு அடிப்படையாக இராவணனையோ, அல்லது பாடல் பெற்ற ஈச்சரங்களையோ முன்னுதாரணப்படுத்தியதில்லை.

பாடல் பெற்ற ஈச்சரங்கள்......மன்னார் மாந்தையில் அமைந்துள்ள திருக்கேதீச்சரம் மீதும், திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேச்சரம் மீதும் எத்தனையாம் நூற்றாண்டில் யார் பாடல்களைப் பாடினார்கள் என்பது உங்களுக்குச் சரியாகத் தெரிந்திருந்தால், இலங்கையில் தமிழர் புராதன காலம் தொட்டு வாழ்கிறார்கள் என்பதற்குச் சான்றாக பாடல் பெற்ற தலங்களைக் குறிப்பிடமாட்டீர்கள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஈழபாரதி

இரண்டாவது விடயம், ஈழத்தமிழர்கள் வந்தேறு குடிகள் என்பதே பெரும் தவறு, இது ஒரு வரலாற்று திரிபு. ஒன்றுபடட் குமரிகண்டத்தில் தமிழர் பரந்தே வாழ்தனர், இடையில் ஏற்பட்ட கடற்கோளினால் இடையில் கடல் நீர் புகுந்ததால் நிலம் இரண்டு பட்டு பிரிந்தது, அங்கால் இருந்தவர்கள் அங்காலும்,இங்கால் இருந்தவர்கல் இங்காலும் தொடர்ந்து வாழ்ந்தார்கள், இதி எங்கு வந்தது, வந்தேறிகள். பாடல்பெற்ற ஈச்சரங்கள் இருக்கின்ற்ன, புராணகாலத்திலேயே இராவணன் இருந்து இருக்கிறான். மேலும் தொடர்கிறேன்...........//

இலங்கையில் தமிழர்களின் வரலாற்றுக் காலம்; புராண காலத்திலிருந்தா தொடங்குகிறது சகோதரம்?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆர்.கே.சதீஷ்குமார்


அருமையான பதிவு..தாமத வருகை .வருந்துகிறேன்//

இல்லைச் சகோதரா.. இப்போது தான் பதிவே சூடு பிடித்திருக்கிறது.

நிரூபன் said...
Best Blogger Tips

@Anonymous


நிரூபன் உங்களுக்கும் ஈபிடிபிகுமான தொடர்பை சொல்லாமலே விட்டுவிட்டீர்களே. கடந்த இரண்டு ஆன்டுகளிலே என்ன செய்கிறீர்கள் என்பதையும் சொல்லி இருகலாமே//

ஹி..ஹி....
கடந்த இரண்டு ஆண்டுகளில் வன்னியை விட்டு, முகாமில் இருந்து பின்னர் தற்போது யாழில் இருக்கிறேன். எனக்கும் அவர்களுக்கும் இடையிலான தொடர்பினைக் கட்டுரையின் அடிப்படையில் பார்த்தால். மாமன் மச்சான் முறை, போதுமா?

நிரூபன் said...
Best Blogger Tips

உறவுகளிற்கு ஓர் அறிவித்தல்!

கருத்துச் சுதந்திரத்தினைத் தவறான வழியில் பயன்படுத்தும் ஒரு சில சகோதரர்களின் செயற்பாடுகள் காரணமாகவும், பதிவோடு தொடர்புபடாத கருத்துக்களை வழங்கி, விவாதத்தை, வீண் வாதமாக்கும் ஒரு சில உள்ளங்களின் செயற்பாடுகள் காரணமாகவும் பின்னூட்டப் பெட்டியில் அநாமதேய கருத்துக்கள், பெயரில்லாத கருத்துக்கள் முதலியன தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளன.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நிரு, நான் இப்போது மறுபடியும், உங்களை வாழ்த்தவே வந்தேன் !இத்தனை கமெண்டுகள்! பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது!! வாழ்த்துக்கள் நிரு!



சிலர் பதிவுக்கு சம்மந்தமே இல்லாமல் கமென்ட் போட்டிருக்கிறார்கள்! அவற்றை கணக்கெடுக்காதீர்கள்!!

பொ.முருகன் said...
Best Blogger Tips

இப் பதிவின் மூலம் பெரிய கருத்துயுத்தமே நடந்துகொண்டிருக்கிறது.இங்கே உயர்ஜாதி,பிற்படுதப்பட்ட்வன்,மிகவும் பிற்படுத்தப்பட்டவன்,தாழ்தப்பட்டவன் என்று தான் தமிழன் பிரிந்து கிடக்கிறான்.ஆனால் அங்கே மலையகத்தமிழன்,யாழ்ப்பானதமிழன்,வன்னித்தமிழன், இன்னும் பிற என்று தமிழே பிரிந்து கிடப்பது இப்போது விளங்குகிறது.

Unknown said...
Best Blogger Tips

நண்பா நெஞ்சில பாரம் தான்கியவனுக்குதான் அதோட பாரம் தெரியும் என்பது இந்த பதிவின் பலம்..........அதே நேரத்தில் ஒன்று சொல்லிக்கொள்கிறேன் இது உண்மையா?.........
யாழ்ப்பான தமிழன் என்றுமே தமிழ்நாட்டு தமிழனை மதித்தது கிடையாது.........
எங்கள் தமிழ் பேச்சு மற்றும் எங்கள் மக்கள் மேல் அவர்களுக்கு இருக்கும் ஒரு வித வெறுப்பு!

Anonymous said...
Best Blogger Tips

///விக்கி உலகம் said...

நண்பா நெஞ்சில பாரம் தான்கியவனுக்குதான் அதோட பாரம் தெரியும் என்பது இந்த பதிவின் பலம்..........அதே நேரத்தில் ஒன்று சொல்லிக்கொள்கிறேன் இது உண்மையா?.........
யாழ்ப்பான தமிழன் என்றுமே தமிழ்நாட்டு தமிழனை மதித்தது கிடையாது.........
எங்கள் தமிழ் பேச்சு மற்றும் எங்கள் மக்கள் மேல் அவர்களுக்கு இருக்கும் ஒரு வித வெறுப்பு!///


நண்பரே இந்திரா காந்தி கொல்லப்பட்ட போது கருப்புக்கொடி பறக்க விட்டு தமது இரங்கலை தெரிவித்தவர்கள் யாழ் தமிழர்கள். m g r இறந்த பின் அவருக்கு சிலை வைத்து தாம் அவர் மீது கொண்ட பாசத்தை வெளிக்காட்டியவர்கள் யாழ் தமிழர்கள். எங்கள் நாட்டிலே பல தலைவர்கள் இருந்தும், எங்க ஊரிலே 1980 களிலே அறிஞர் அண்ணாவின் பெயரில் "அண்ணா கலை மன்றம்" என்று கழகம் தொடக்கி கிராமத்துக்கு பல சேவைகள் செய்து வருகின்றனர் நம் ஊர் வாலிபர்கள். இவ்வாறு தமிழ் நாட்டவர் மீது நாம் கொண்ட உறவுக்கு பல உதாரணம் சொல்லலாம். ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு "யாழ்பாணத்து தமிழன்" என்று விளிப்பது தவறு. இது இரு உறவுகளிக்கிடையே மன கசப்புக்களை தான் ஏற்ப்படுத்தும்.

அன்புடன் மலிக்கா said...
Best Blogger Tips

தங்களின் ஆதங்கம் வேதனை வரிகளில். எல்லவற்றிக்கும் முடிவுண்டு அது நல்லதாகவே நடக்கவேண்டுகிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@அருள்

சகோதரம் அருள் அவர்களே, நான் இருக்கும் இடத்தைக் கருத்திற் கொண்டு, உங்கள் கருத்துக்களை வெளியிடுமாறு, மிக மிகத் தாழ்மையான வேண்டிக் கொள்கிறேன், தனிப்பட்ட அரசியல் கருத்துகளையோ, இலங்கை அரசியல் தொடர்பான கருத்துக்களையோ இவ் இடத்தில் தவிர்த்துக் கொள்வது மிகப் பெரிய உதவியாகவும், உங்களால் எனக்கு வழங்கும் ஒத்துழைப்பாகவும், ஆதரவாகவும் இருக்கும்.

சிவகுமாரன் said...
Best Blogger Tips

அதிர்ச்சியூட்டும் பதிவு. இப்படி ஒரு பதிவை ஒரு இலங்கைத் தமிழரிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை. ஆயிரம் இருக்கட்டும். சாதாரண மக்களின் செயல்களும் , ஒரு தேசத்தின் , இனத்தின் தலைவர்களின் ( தலைவர்களாக தம்மைக் காட்டிக் கொள்கிறவர்கள் ) செயல்;களும் ஒருசேர பார்க்கத்தக்கவை அல்ல.
தனிநாடு அமையாதது நல்லது தான் என்று நீங்கள் சொல்வது விரக்தியின் வெளிப்பாடாகவே நான் கருதுகிறேன். .

ம.தி.சுதா said...
Best Blogger Tips

//////‘’தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டு’’/////

அது தெரியாதா நிரூபன்... மற்றவனை எற்றி விட்டுவிட்டு கூத்துப் பார்ப்பது தான் அவன் வேலை..

ம.தி.சுதா said...
Best Blogger Tips

என்னங்க பதிவேதோ சொல்ல வந்த மாதிரி இருக்கு கருத்து ஊட்டங்கள் ஏதோ சொல்லுது... ஒண்ணு மட்டும் சொல்லுறெங்க தமிழன் உருப்படவே மாட்டான்..

ம.தி.சுதா said...
Best Blogger Tips

ஈழம் ஒரு நண்டுப் பெட்டி..

Shama T said...
Best Blogger Tips

நண்பரே! உண்மை உணர்ந்த உங்கள் நெஞ்சுக்கும் அதை உரைத்த உங்கள் பண்பும் வியக்கதக்கவை

நீங்கள் கூறும் அனைத்தும் எல்லா அக்க பக்க நாடுகளிலும் நடப்பவையே(கிட்டதட்ட ப‌ங்காளி சண்டை போல்). லட்சக்கணக்கான உயிர் சேதத்தையும், வருடக்கணக்கில் நிறுத்தாமல் போர் நடப்பதையும் நிறுத்த முடியாத சக பங்காளியாய் தலைகுனிகிறேன்.
(தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டு)

Anonymous said...
Best Blogger Tips

நிரு , நீங்க மன்னிப்பு கேட்க அளவுக்கு நாங்க பெறுமானம் இல்லாதவங்க.

ஒண்ணு மட்டும் புரியவே இல்ல.

இந்திய தமிழர்கள் எத்தன பேருக்கு ஈழம் ங்கறதோட பொருள் விளங்கும் னு உங்களுக்கு தெரியுமா ?
இங்க இருக்க தமிழர் ல "எவென் எக்கேடு கெட்டா எனகென்ன , என் வயிறு நெறஞ்சா சரி, என் வீடு நிம்மதியா இருந்தா சரி " ன்னு நெனைக்கவன் 50 %.
இவன் சரி கெடயாது ,, அவன் நொள்ள , எவன் யோக்கியம் ன்னு சர்வே எடுத்து , வெட்டி வியாக்கானம் பேசுறவன் 10%
சாதி சங்கத்துல உறுப்பினரா இருக்கவன் 10 %
சமர்ப்பயாமி/ அல்லே லுய / அல்லாஹு அக்பர்/ பில்லி சூன்யம் கும்பல் 10%
சச்சின் கு பாரத ரத்னா வேணும் , தோனி பொண்டாட்டிக்கு எலுமிச்ச ஊறுகா புடிக்குமாம், ரஜினி வருவாரா ?, டாக்டர் வருவாரா ? த்ரிஷா வோட பிராண்ட் என்ன ? நயன்தாரா கல்யாணம் எப்போ ? - வகையறா - 10%
"உணர்ச்சிமயமான" உணர்வுள்ளவங்க - 5%
உணர்வுள்ளவங்க 5%.

நீங்க(ஈழ தமிழர்கள் ) இந்திய தமிழர் பத்தி பேசும் போதெல்லாம் எனக்கு இதுதான் தோணும் " இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்புது ..!"
உண்மையிலே 75% இந்திய தமிழர்க்கு நீங்க யாருன்னே தெரியாது. 15% எதுவும் பண்ண மாட்டாங்க. இதான் யதார்த்தம். தயவு செய்து எங்கள என்னிக்குமே எதிர்பாக்காதீங்க, கணக்குலேயே எடுக்காதீங்க.
இங்க கொஞ்ச பேருக்கு மட்டும் தான் உங்க மன்னிப்பு கடிதத்த வாசிக்கிற உரிமையே உண்டு.

அதே மாதிரி ""பொழைக்க போன இடத்துல , தனி ஆட்சி கொடு ,மரியாத கொடு ரெண்டு ஊற கொடுன்னு கேட்டா அவன் என்ன செய்வான் ,, ஒரே போடா போட்டுட்டான்""

"நம்ம பிரதமர போட்டானுங்க, நாம அவிங்கள போட்டும், இதுக்கு எதுக்கு இங்க போராட்டம்"

"தொழில் வளரனும் னா நாட்டுல தீவிரவாதி இருக்ககூடாது ,, இப்போ பாரு ஊரு டூரிசம் ல எப்டி முன்னேறுது, ஒரு வழியா எல்லாம் முடிஞ்சது, நாமளும் சிறீ லங்காக்கு டூர் போலாம் " ன்னு உங்கள பத்தி பேசுற தமிழர் சார்பில் நான் உங்க கிட்ட மன்னிப்பு கேக்குறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சிவகுமாரன்
அதிர்ச்சியூட்டும் பதிவு. இப்படி ஒரு பதிவை ஒரு இலங்கைத் தமிழரிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை. ஆயிரம் இருக்கட்டும். சாதாரண மக்களின் செயல்களும் , ஒரு தேசத்தின் , இனத்தின் தலைவர்களின் ( தலைவர்களாக தம்மைக் காட்டிக் கொள்கிறவர்கள் ) செயல்;களும் ஒருசேர பார்க்கத்தக்கவை அல்ல.
தனிநாடு அமையாதது நல்லது தான் என்று நீங்கள் சொல்வது விரக்தியின் வெளிப்பாடாகவே நான் கருதுகிறேன்//

ஆம் சகோதரா, எமது இனத்திற்குள் நாமே ஒற்றுமையின்றி, வேற்றுமையோடு அடித்துக் கொள்ளும் விரக்தியின் வெளிப்பாடு தான், தனி நாடு அமையாதது நல்லது எனும் என் கருத்தும்.

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔

//////‘’தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டு’’/////

அது தெரியாதா நிரூபன்... மற்றவனை எற்றி விட்டுவிட்டு கூத்துப் பார்ப்பது தான் அவன் வேலை..//

ஆமாம், சகோ, பிள்ளையினையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுவது தானே நம்மவர்களின் வேலை.

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔
என்னங்க பதிவேதோ சொல்ல வந்த மாதிரி இருக்கு கருத்து ஊட்டங்கள் ஏதோ சொல்லுது... ஒண்ணு மட்டும் சொல்லுறெங்க தமிழன் உருப்படவே மாட்டான்..//

ஆமாம் சகோ, பதிவோடு தொடர்புடைய கருத்துக்களை விடுத்து, பதிவுக்குத் தொடர்பில்லாத கருத்துக்களைத் தான் நிறையப் பேர் இங்கே கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இது தானே எங்கள் தமிழர்களின் குணம். இதனை யாராலும் மாற்ற முடியாது தானே.

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔

ஈழம் ஒரு நண்டுப் பெட்டி..//

ஹி....ஹி....

நிரூபன் said...
Best Blogger Tips

@Shama T

நண்பரே! உண்மை உணர்ந்த உங்கள் நெஞ்சுக்கும் அதை உரைத்த உங்கள் பண்பும் வியக்கதக்கவை

நீங்கள் கூறும் அனைத்தும் எல்லா அக்க பக்க நாடுகளிலும் நடப்பவையே(கிட்டதட்ட ப‌ங்காளி சண்டை போல்). லட்சக்கணக்கான உயிர் சேதத்தையும், வருடக்கணக்கில் நிறுத்தாமல் போர் நடப்பதையும் நிறுத்த முடியாத சக பங்காளியாய் தலைகுனிகிறேன்.
(தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டு)//

நன்றிகள் சகோ, உங்களின் உணர்வுகளிற்கு எப்போதும் நாங்கள் கடமைப்பட்டவர்கள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


நிரு, நான் இப்போது மறுபடியும், உங்களை வாழ்த்தவே வந்தேன் !இத்தனை கமெண்டுகள்! பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது!! வாழ்த்துக்கள் நிரு! //

இதற்கெல்லாம் காரணம், நண்பர்கள் அனைவரினதும் ஆதரவு, ஆசிர்வாதமும் தான் சகோ. ஆகவே உங்களுக்கு எனது நன்றிகள். வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் சகோ.


சிலர் பதிவுக்கு சம்மந்தமே இல்லாமல் கமென்ட் போட்டிருக்கிறார்கள்! அவற்றை கணக்கெடுக்காதீர்கள்!!

நிரூபன் said...
Best Blogger Tips

@விக்கி உலகம்

நண்பா நெஞ்சில பாரம் தான்கியவனுக்குதான் அதோட பாரம் தெரியும் என்பது இந்த பதிவின் பலம்..........அதே நேரத்தில் ஒன்று சொல்லிக்கொள்கிறேன் இது உண்மையா?.........
யாழ்ப்பான தமிழன் என்றுமே தமிழ்நாட்டு தமிழனை மதித்தது கிடையாது.........
எங்கள் தமிழ் பேச்சு மற்றும் எங்கள் மக்கள் மேல் அவர்களுக்கு இருக்கும் ஒரு வித வெறுப்பு!//

சகோ, இந்த விடயங்களை எல்லாம் என் பதிவில் விரிவாக விளக்கியுள்ளேனே. கவனிக்கவில்லையா. உங்கள் கேள்விக்கான விளக்கத்தினைச் சகோ கந்தசாமி அழகாகச் சொல்லியிருக்கிறார். நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@அன்புடன் மலிக்கா

தங்களின் ஆதங்கம் வேதனை வரிகளில். எல்லவற்றிக்கும் முடிவுண்டு அது நல்லதாகவே நடக்கவேண்டுகிறேன்//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@நிருபன் சக்கரவர்த்தி

நிரு , நீங்க மன்னிப்பு கேட்க அளவுக்கு நாங்க பெறுமானம் இல்லாதவங்க.//

உங்களின் ஆதங்கத்திற்கும், அருமையான விளக்க பூர்வமான கருத்துக்களுக்கும் நன்றிகள் சகோ.

நாங்கள் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனும் விடயங்களைப் பதிவில் விரிவாகச் சொல்லியிருக்கிறேன் சகோ. எங்கள் மீதுள்ள தவறுகளைச் சுட்டியிருக்கிறேன் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@நிருபன் சக்கரவர்த்தி
அதே மாதிரி ""பொழைக்க போன இடத்துல , தனி ஆட்சி கொடு ,மரியாத கொடு ரெண்டு ஊற கொடுன்னு கேட்டா அவன் என்ன செய்வான் ,, ஒரே போடா போட்டுட்டான்""

"நம்ம பிரதமர போட்டானுங்க, நாம அவிங்கள போட்டும், இதுக்கு எதுக்கு இங்க போராட்டம்"

"தொழில் வளரனும் னா நாட்டுல தீவிரவாதி இருக்ககூடாது ,, இப்போ பாரு ஊரு டூரிசம் ல எப்டி முன்னேறுது, ஒரு வழியா எல்லாம் முடிஞ்சது, நாமளும் சிறீ லங்காக்கு டூர் போலாம் " ன்னு உங்கள பத்தி பேசுற தமிழர் சார்பில் நான் உங்க கிட்ட மன்னிப்பு கேக்குறேன்//

உங்களது வெளிப்படையான கருத்திற்கு மீண்டும் என் நன்றிகள் சகோ, இலங்கையில் உள்ள தமிழர்கள் தான் முதன் முதலில் இலங்கையில் குடியேறியவர்கள். பிழைக்கப் போன இடத்தில் நாடு கேட்பது எனும் விளிப்பானது, ஈழத் தமிழர்கள் பற்றிய சரியான புரிந்துணர்வு தமிழக உறவுகளில் பல பேருக்கு இல்லை என்பதனையே தெளிவாகக் காட்டுகிறது, ஈழத் தமிழர் பற்றிய சரியான புரிதலைத் தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்றால், ஈழத் தமிழர்கள் யார் ? அவர்களின் அடையாளங்கள் என்ன என்பதனை மக்கள் மத்தியில் விளக்க வேண்டும்.

அப்போது தான் ஈழத் தமிழர்கள் பற்றிய பூரண தெளிவு தமிழகத்தில் பல ஆயிரம் மக்களுக்கு ஏற்படும் சகோ.

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@பொ.முருகன்

இப் பதிவின் மூலம் பெரிய கருத்துயுத்தமே நடந்துகொண்டிருக்கிறது.இங்கே உயர்ஜாதி,பிற்படுதப்பட்ட்வன்,மிகவும் பிற்படுத்தப்பட்டவன்,தாழ்தப்பட்டவன் என்று தான் தமிழன் பிரிந்து கிடக்கிறான்.ஆனால் அங்கே மலையகத்தமிழன்,யாழ்ப்பானதமிழன்,வன்னித்தமிழன், இன்னும் பிற என்று தமிழே பிரிந்து கிடப்பது இப்போது விளங்குகிறது//

ஆமாம், சகோ, நான் பதிவில் என்ன சொல்லியிருக்கிறேன் என்பதனைப் புரிந்து கொள்ளாதவர்களாய்ப் பல பேர் பிரதேசவாதக் கருத்துக்களைப் பேசி, பதிவின் நோக்கத்தினை குழப்ப முனைகிறார்கள். இது தானே தமிழனின் இயல்பான குணம்?

திரு.சி.நந்தகோபன்(ஆசிரியர்) said...
Best Blogger Tips

யாரும் பேசாத்துணியாத ஒரு பொருளை பேசத்துணிந்தமைக்கு பாராட்டுகள்.

kirikasan said...
Best Blogger Tips

நண்பரே தங்கள் உண்மையான நோக்கம் என்ன? பொதுவாக ஒரு வாதத்தை கொண்டுவரும் போது அதன் விளைவால் என்ன நேரும் என்பதை சிந்திப்பது புத்திசாலித்தனம்.

இன்று மூன்றுலட்சம் மக்கள் கொலைசெய்யப்ப்ட்டு ஒரு இனம் அழிந்துகொண்டிருக்கும் வேளையில் பேச வேண்டிய பேச்சா இது? எங்கேயோ வானத்தில் இருந்து இப்போதுதான் குதித்தமாதிரி புதிய கண்டுபிடிப்பு கொண்டுவந்திருக்கிறீர்கள்? தங்கள் பேச்சு எவ்வளவு பாதிப்பை உண்டுபண்ணும் என்று தெரிந்தே கூறுவதாகவும் கூறுகிறீர்கள். உங்கள் உள்நோக்கம் யாது?

என்ன பேசுகிறோம் என்பதை விட எந்தசமயத்தில் என்னபேசவேண்டுமென்பதே முக்கியம்?

நீங்கள் கூறுவது போன்ற பிரிவு உணர்வுகள் எல்லா இடங்களிலும் உண்டு. மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் என்ற பிரிவு. வடபகுதிக்கும் வடமராச்சியார், தென்மராட்சியார் அதற்குள் இன்னும் குறிச்சி குறிச்சியாக பிரித்து நான் உயர்வு நீ உயர்வு என்பதெல்லாம் இருந்தது. இப்போது அதை சொல்வதற்கே தமிழன் இல்லாமல் போகும் நிலைமையில் அவசரம் வேண்டியது ஒற்றுமை ஒற்றுமையை கட்டி யெழுப்ப ஏதாவது செய்வீர்களானால் உங்களை கரம் கூப்பி வணங்குவேன்.

செத்துக் குற்றுயிராய் கிடப்பவனிடம் போய் உன்சிந்தனை சரியில்லை நீ திருந்தவேண்டும் என்று விவாதிப்பதைவிட அவனை முதலில் காப்பாற்ற வழிபார்த்துவீட்டு அவன் பிழைத்ததும் அவன் குணத்தைபற்றி வாதிடலாமே! இப்போதுவாதிடுவது அவனை கொன்றுவிடுவதற்குச் சமம்!

நிரூபன் said...
Best Blogger Tips

@kirikasan


நண்பரே தங்கள் உண்மையான நோக்கம் என்ன? பொதுவாக ஒரு வாதத்தை கொண்டுவரும் போது அதன் விளைவால் என்ன நேரும் என்பதை சிந்திப்பது புத்திசாலித்தனம்.

இன்று மூன்றுலட்சம் மக்கள் கொலைசெய்யப்ப்ட்டு ஒரு இனம் அழிந்துகொண்டிருக்கும் வேளையில் பேச வேண்டிய பேச்சா இது? எங்கேயோ வானத்தில் இருந்து இப்போதுதான் குதித்தமாதிரி புதிய கண்டுபிடிப்பு கொண்டுவந்திருக்கிறீர்கள்? தங்கள் பேச்சு எவ்வளவு பாதிப்பை உண்டுபண்ணும் என்று தெரிந்தே கூறுவதாகவும் கூறுகிறீர்கள். உங்கள் உள்நோக்கம் யாது?

என்ன பேசுகிறோம் என்பதை விட எந்தசமயத்தில் என்னபேசவேண்டுமென்பதே முக்கியம்?//

இப்போது எங்கே எந்த நாட்டில் மூன்று இலட்சம் மக்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூற முடியுமா சகோ. பதிவில் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பது உங்களுக்குப் புரியவில்லை சகோ, மீண்டும் ஒரு தரம் பதிவினைப் படித்துப் பாருங்கள்.

தமிழனின் ஒற்றுமையில்லா நிலையினையும், தமிழர்கள் கடந்த காலங்களில் செய்த தவறுகளைத் திருத்தி, ஏனைய இன மக்களோடு ஒன்றாக வாழ வேண்டும் என்பதைத் தான் இப் பதிவில் எழுதியிருக்கிறேன் சகோ.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails